பிறையுட் கிடந்த முயலை எறிவான் அறைமணி வாட்கொண் டவர்தமைப் போலக் கறைமணி கண்டனைக் காண்குற மாட்டார் `நிறையறி வோம்` என்பர் நெஞ்சிலர் தாமே.
|
1
|
கருந்தாட் கருடன் விசும்பூ டிறப்பக் கருந்தாழ் கயத்தில் கரும்பாம்பு நீங்கப் பெருந்தன்மை பேசுதி ஒழி நெஞ்சே அருந்தா அலைகடல் ஆறுசென் றாறே.
|
2
|
கருதலர் மாளக் கருவாயில் நின்றே பொருதலைச் செய்வது புல்லறி வாண்மை மருவலர் செய்கின்ற மாதவம் ஒத்தால் தருவலர் வேட்ட தனிஉம்பர் ஆமே.
|
3
|
பிணங்கவும் வேண்டா பெருநிலம் முற்றும் இணங்கிஎம் ஈசனே ஈசன்என் றுன்னிக் கணம்பதி னெட்டும் கழலடி காண வணங்கெழும் நாடிஅங்(கு) அன்புறல் ஆமே.
|
4
|
என்னிலும் என்உயி ராய இறைவனை பொன்னிலும் மாமணி யாய புனிதனை மின்னிய வெவ்வுயி ராய விகிர்தனை உன்னில் உம் உன்னும் உறும்வகை யாலே.
|
5
|
Go to top |
நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை ஒன்றும் பொருள்கள் உரைப்பவ ராகிலும் வென்றைம் புலனும் விரைந்து பிணக்கறுத்(து) ஒன்றா உணரும் ஒருவனும் ஆமே.
|
6
|
நுண்ணறி வாய் உல காய் உல கேழுக்கும் எண்ணறி வாய்நின்ற எந்தை பிரான்றன்னைப் பண்ணறி வாளனைப் பாவித்த மாந்தரை விண்ணறி வாளர் விரும்புகின் றாரே.
|
7
|
விண்ணவராலும் அறிவரி யான்றன்னைக் கண்ணற உள்ளே கருதிடில் காலையே எண்ணுற வாகும் முப் போதும் இயற்றிநீர் பண்ணிடில் தன்மை பராபர னாகுமே.
|
8
|
ஒன்றாய் உலகுடன் ஏழும் பரந்தவன் பின்றான் அருள்செய்த பேரரு ளாளவன் கன்றா மனத்தார்தம் கல்வியுள் நல்லவன் பொன்றாத போது புனைபுக ழானே.
|
9
|
போற்றி என்றேன் எந்தை பொன்னான சேவடி ஏற்றியே யென்றும் எறிமணி தான்அகம் காற்றின் விளக்கது காயம் மயக்குறல் மாற்றலும் கேட்டது மன்றுகண் டேனே.
|
10
|
Go to top |
நேடிக்கொண் டென்னுள்ளே நேர்தரு நந்தியை ஊடுபுக் காரும் உணர்ந்தறி வார் இல்லை கூடுபுக் கேறலுற் றேன் அவன் கோலம் கண் மூடிக்கண்டேன் உல கேழும்கண் டேனே
|
11
|
ஆன புகழும் அமைந்ததோர் ஞானமும் தேனும் உடைய சிறுவரை ஒன்றுகண்(டு) ஊனம்ஒன் றின்றி உணர்தல்செய் வார்கட்கு வானகம் செய்யும் மறவனும் ஆமே
|
12
|
மாமதி ஆம்மதியாய் நின்ற மாதவர் தூமதி யாகும் சுடர்பர மானந்தம் தாமதி யாகச் சகம்உணச் சாந்திபுக்(கு) ஆம்மலம் அற்றார் அமைதிபெற் றாரே.
|
13
|
பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட்(டு) இதமுற்ற பாச இருளைத் துரந்து மதம்அற்(று) `எனதியான்` மாற்றிவிட் டாங்கே திதம்உற் றவர்கள் சிவசித்தர் தாமே
|
14
|
சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன் சுத்தாசுத் தத்துதுடன் தோய்ந்தும்தோ யாதவர் முத்தர முத்திக்கும் மூலத்தர் மூலத்துச் சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே.
31, |
15
|
Go to top |