உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும் துதிக்கும் நிருதி வருணன் நல் வாயு மதிக்கும் குபேரன் வடதிசை ஈசன் நிதித்தெண் டிசையும் நிறைந்திநின் றாரே.
|
1
|
ஒருங்கிய பூவும்ஓர் எட்டித ழாகும் மருங்கியல் மாயா புரியத னுள்ளே சுருங்கிய தண்டின் சுழுனையி னூடே ஒருங்கிய சோதியை ஓர்ந்தெழும் உய்ந்தே.
|
2
|
மொட்டலர் தாமரை மூன்றுள மூன்றினும் விட்டலர் கின்றனன் சோதி விரியிதழ் எட்டல ருள்ளேர் பிரண்டல ருள்ளுறில் பட்டலர் கின்றதோர் பண்டம் கனாவே
|
3
|
ஆறே அருவி அகம் குளம் ஒன்றுண்டு நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும் கூறே குவிமுலைக் கொம்பனை யாளொடும் வேறே யிருக்கும் விழுப்பொருள் தானே.
|
4
|
திகையெட்டும் தேர்எட்டும் தேவதை யெட்டும் அகையெட்டு மாய்நின்ற ஆதிப் பிரானை வகையெட்டும் நான்கும்மற் றாங்கே நிறைந்து முகையெட்டி னுள்நின் றுதிக்கின்ற வாறே.
|
5
|
Go to top |
ஏழும் சகலம் இயம்பும் கடந்தெட்டில் வாழும் பரம்ஒன்(று) அதுகடந் தொன்பதில் ஊழி பராபரம் ஊங்கியை பத்தினில் தாழ்வு அது ஆன தனித்தன்மை தானே.
|
6
|
பல்லூழி பண்பிற் பகலோன் இறையவன் நல்லூழி ஐந்தினுள் ளேநின்ற ஊழிகள் செல்லூழி அண்டத்துச் சென்றவண் ஊழியுள் அவ்வூழி உச்சியுள் ஒன்றின் பகவனே.
|
7
|
புரியும் உலகினைப் பூண்டஎட் டானை திரியும் களிற்றொடு தேவர் குழாமும் எரியும் மழையும் இயங்கும் வளியும் பரியும்ஆ காசத்தில் பற்றது தானே.
|
8
|
ஊறும் அருவி உயர்வரை உச்சிமேல் ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப் பூவன்றிச் சூடான் புரிசடை யோனே.
|
9
|
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும் வொன்றும் இருந்து விகிர்தனை நாடுவர் சென்றும் இருந்தும் திருவுடை யோரே.
32, |
10
|
Go to top |