தொற்பத விசுவன் தைசதன் பிராஞ்ஞன் நற்பத விராட்டன் பொன் கற்பன் அவ் வியாகிருதன் பிற்பதச் சொல்இத யன் பிர சாபதியன் பொற் புவிச் சாந்தன் பொருந்தபி மானியே.
|
1
|
நவமாம் அவத்தை நனவாதி பற்றின் பவமாம் மலம் குணம் பற்றற்றுப் பற்றாத் தவமான சத்திய ஞானப் பொதுவில் துவம் ஆர் துரியம் சொரூபம் தாமே.
|
2
|
சிவமான சிந்தையில் சீவன் சிதையப் பவமான மும்மலம் பாறிப் பறிய நவமான அந்தத்தின் நற்சிவ போதம் தவமாம் அவையாகித் தானல்ல வாகுமே.
|
3
|
முன்சொன்ன ஒன்பானின் முன்னுறு தத்துவம் தன்சொல்லின் எண்ணத் தகாஒன்பான் வேறுள பின்சொல்ல லாகும்இவ் வீரொன்பான் பேர்த்திட்டுத் தன் செய்த ஆண்டவன் தான்சிறந் தானே.
|
4
|
உகந்தன ஒன்பதும் ஐந்தும் உலகம் பகர்ந்த பிரான் என்னும் பண்பினை நாடி அகைந்தெம்பி ரான்என்பன் அல்லும் பகலும் இகந்தன வல்வினை ஈடறுத் தானே.
|
5
|
Go to top |
நலம்பல காலம் தொகுத்தன நீளம் குலம்பல வண்ணம் குறிப்பொடு கூடும் பலம்பல பன்னிரு காலம் நினையும் நிலம்பல ஆறில்நன் னீர்மையன் தானே.
|
6
|
ஆதி பராபரம் ஆகும் பராபரை சோதி பரம் உயிர் சொல்லும்நல் தத்துவம் ஓதும் கலை மாயை ஓரிரண்(டு) ஓர்முத்தி நீதியாம் பேதம்ஒன் பானுடன் ஆதியே.
|
7
|
தேறாத சிந்தை தெளியத் தெளிவித்து வேறாம் நரகம் சுவர்க்கமும் மேதினி ஆறாப் பிறப்பும் உயிர்க்கரு ளால்வைத்தான் வேறாத் தெளியார் வினை உயிர் பெற்றதே.
|
8
|
ஒன்பான் அவத்தையுள் ஒன்பான் அபிமானி நன்பாற் பயிலும் நவதத்துவம் ஆதி ஒன்பானில் நிற்பதோர் முத்துரி யத்துறச் செம்பாற் சிவம் ஆதல் சித்தாந்த சித்தியே.
33, |
9
|