சீவ துரியத்துத் தொம்பதம் சீவனார் பாவு பரதுரி யத்தினில் தற்பதம் மேவு சிவதுரி யத்(து)அசி மெய்ப்பதம் ஓவி விடும்தத் துவமசி உண்மையே.
|
1
|
ஆறா றகன்ற அணுத்தொம் பதம் சுத்தம் ஈறான தற்பதம் எய்துப சாந்தத்துப் பேறா கியசீவன் நீங்கிப்பிர சாதத்து வீறான தொந்தத் தசிதத்வ மசியே.
|
2
|
துவம்தத்தசியே தொந்தத் தசியும் அவைமன்னா அந்நு வயத்(து) ஏகம்ஆன தவவுறு தத்வ மசிவேதாந் தத்துச் சிவமாம் அதுவும்சித் தாந்தவே தாந்தமே.
|
3
|
துரியம் அடங்கிய சொல்லறும் பாழை அரிய பரம்என்பர் ஆகார்இ தன்றென்னார் உரிய பரம்பர மாம் ஒன் றுதிக்கும் அருநிலம் என்பதை யார்அறி வாரே.
|
4
|
தொம்பம் தத்பதம் சொல்லும் அசிபதம் நம்பிய முத்துரி யத்தும்மேல் நாட ஏ யும்பத மும்பத மாகும் `உயுர்பரம் செம்பொறா ளான சிவம்`என லாமே.
|
5
|
Go to top |
வைத்த துரிய மதில்சொரூ பானந்தத்(து) உய்த்த பிரணவ மாம்உப தேசத்தை மெய்த்த இதயந்து விட்டிடும் மெய்யுணர் வைத்த படியே அடைந்துநின் றானே.
|
6
|
நனவாதி ஐந்தையும் நாதாதி வைத்துப் பினமாம் மலத்தினைப் பின்வைத்துப் பின்சுத்தத் தனதாம் சிவகதி சத்தாதி சாந்தி மனவாச கங்கெட்ட மன்னனை நாடே.
|
7
|
பூரணி யாவது புறம்பொன் றிலாமையால் பேர்அணி யாதது பேச்சொன் றிலாமையால் ஓர்அணை யாதது ஒன்றும் இலாமையால் காரணம் இன்றியே காட்டும் தகைமைத்தே.
|
8
|
`நீஅது ஆனாய்` எனநின்ற பேரூரை ஆய்`அது ஆனேன்` என்னச் சமைந்(து) அறச் சேய சிவமாக்கும் சீர்நந்தி பேரரு ளாய்அது வாய்அனந் தானந்தி யாமே.
|
9
|
உயிர்பரம் ஆக உயர்பர சீவன் அரிய பரம்ஆக அச்சிவம் வேதத் திரயிலும் சீராம் பராபரன் என்ன உரிய உரையற்ற ஓம்மயம் ஆமே.
|
10
|
Go to top |
வாய்நாசி யேபுரு மத்தகம் உச்சியில் ஆய்நாசி உச்சி முதலவை யாய்நிற்கும்`` தாய்நாடி யாதிவாக் காதி கலாதிகள் சேய்நா டொளியாச் சிவகதி ஐந்துமே.
|
11
|
அறிவறி யாமை இரண்டும் அகற்றிச் செறிவறி வாய்எங்கும் நின்ற சிவனைப் பிறிவறி யாத பிரான்` என்று பேணார் குறியறி யாதவர் கொள்ளறி யாரே.
|
12
|
அறிவார் அறிவன அப்பும் அனலும் அறிவார் அறிவன அப்பும் கலப்பும் அறிவான் இருந்தங் கறிவிக்கி னல்லால் அறிவான் அறிந்த அறிவறி யோமே.
|
13
|
அடிதொழ முன்னின் றமரர்கள் அத்தன் முடிதொழ ஈசனும் முன்னின் றருளிப் படிதொழ நீபண்டு பாவித்த எல்லாம் கடிதெழக் காண்என்னும் கண்ணுத லானே.
|
14
|
நின்மல மேனி நிமலன் பிறப்பிலி என்னுளம் வந்(து) `இவன் என் அடியான்` என்று பொன்வளர் மேனி புகழ்கின்ற வானவன் நின்மலன் ஆகென்று நீக்கவல் லானே.
|
15
|
Go to top |
துறந்துபுக் குள்ளொளி சோதியைக் கண்டு பறந்தஎன் உள்ளம் பணிந்து கிடந்தே மறந்தறி யாஎன்னை வானவர் கோனும் இறந்து பிறவாமல் ஈங்குவைத் தானே.
|
16
|
மெய்வாய்கண் மூக்குச் செவியெனும் மெய்தோற்றத்(து) ஐவாய அந்தக் கரணம் அகிலமும் எவ்வாய் உயிரும் இறைஆட்ட ஆடலால் கைவாய் இலாநிறை எங்கும்மெய் கண்டதே.
37, |
17
|