அற்ற துரைக்கில் அருளுப தேசங்கள் குற்றம் அறுத்தபொன் போலக் கனலிடை அற்றற வைத்திறை மாற்றற ஆற்றிடில் செற்றம் அறுத்த செழுஞ்சுடர் ஆகுமே.
|
1
|
எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டே எல்லாம் அறிந்தும் இலாபம்அங்கில்லை எல்லாம் அறியும் அறினை `நான்` என்னில் எல்லாம் அறிந்த இறையென லாமே.
|
2
|
தானே உலகின் தலைவன் எனத்தகும் தானே உலகுக்கோர் தத்துவ மாய்நிற்கும் வானே பொழிமழை மாமறை கூர்ந்திடும் ஊனே உருகிய உள்ளம்ஒன் றாகுமே.
|
3
|
அருள்பெற்ற காரணம் என்கொல் அமரில் இருளற்ற சிந்தை இறைவனை நாடி மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப் பொருளுற்ற சேவடி போற்றுவர் தாமே.
|
4
|
மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்றன்னைப் பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை உய்கலந்(து) ஊழித் தலைவனுமாய் நிற்கும் மெய்கலந் தின்பம் விளைத்திடும் மெய்யர்க்கே.
|
5
|
Go to top |
மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்மிகப் பொய்கலந் தாருட் புகுதா ஒருவனைக் கைகலந் தாவி எழும்பொழு தண்ணலைக் கைகலந் தார்க்கே கருத்துற லாமே.
|
6
|
எய்திய காலத்(து) இருபொழு தும்சிவன் மெய்செயின் மேலை விதிஅது வாய்நிற்கும் பொய்யும் புலனும் புகல்என்றும் நீக்கிடில் ஐயனும் அவ்வழி ஆகிநின்றானே.
|
7
|
எய்துவ(து) எய்தா தொழிவ(து) இதுஅருள் உய்ய அருள்செய்தான் உத்தமன் நந்தி பொய்செய் புலன்நெறி ஒன்பதும் தாழ்க்கொளின் மெய்யென் புரவியை மேற்கொள்ள லாமே.
|
8
|
கைகலந்தானைக் கருந்தினுள் நந்தியை மெய்கலந் தான்றன்னை வேத முதல்வனைப் பொய்கலந் தார்முன் புகுதானைப் புனிதப் பொய்யொழிந்த தார்க்கே புகலிட மாமே.
|
9
|
மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியைக் கைத்தாள் கொண்டாரும் திறந்தறி வாரில்லைப் பொய்த்தாள் இடும்பையைப் பொய்யற நீவிட்டங்(கு) அத்தாள் திறக்கில் அரும்பேற தாமே.
|
10
|
Go to top |
உய்யும் வகையால் உணர்வினால் ஏத்துமின் மெய்யன் அரன்நெறி மேல்உண்டு திண்ணெனப் பொய்யொன்று மின்றிப் புறம்பொலி வார்நடு ஐயனும் அங்கே அம்ர்ந்துநின் றானே.
|
11
|
வம்பு பழுத்த மலர்ப்பழம் ஒன்றுண்டு தன்பாற் பறவை புகந்துணத் தான்ஒட்டா(து) அம்புகொண்(டு) எய்திட்(டு) அகலத் துரந்திடில் செம்பொற் சிவகதி சென்றெய்த லாகுமே
|
12
|
மயக்கிய ஐம்புலப் பாசம் அறுத்துத் துயக்கறுத் தானைத் தொடர்மின் தொடர்ந்தால் தியக்கம் செய்யாதே சிவன்எம் பெருமான் உயப்போ கெனமனம் ஒன்றுவித் தானே.
|
13
|
மனமது தானே நினையவல் லாருக்(கு) இனம்எனக் கூறும் இருங்காயம் ஏவல் தனிவினில் நாதன்பால் தக்கன செய்யில் புனிதன் செயலாகும் போதப் புவிக்கே.
39, |
14
|