ஓதின் மயிர்க்கால் தொறும்அமு தூறிய பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம் ஆதி சொரூபங்கள் மூன்றகன் றப்பாலை வேதம தோதும் சொரூபிதன் மேன்மையே.
|
1
|
உணர்வும் அவனே உயிரும் அவனே புணர்வும் அவனே புலவி அவனே இணரும் அவன் தன்னை எண்ணலும் ஆகான் துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.
|
2
|
துன்னிநின் றான்தன்னை உன்னிமுன் னாஇரு முன்னி யவர்தம் குறையை முடித்திடும் மன்னிய கேள்வி மறையவன் மாதவன் சென்னியுள் நின்றதோர் தேற்றத்த னாமே.
|
3
|
மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும் தன்னுற்ற சோதித் தலைவன் இணையிலி பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும் என்னுற் றறிவானான் என்விழித் தானே.
|
4
|
சத்திய ஞானத் தனிப்பொருள் ஆனந்தம் சித்தத்தில் நில்லாச் சிவானந்தப் பேரொளி சுத்தப் பிரம துரியம் துரியத்துள் உய்த்தல் துரியத் துறுபே ரொளியே.
|
5
|
Go to top |
பரனல்லன் நீடும் பராபரன் அல்லன் உரனல்லன் மீதுணர் ஒண்சுடர் அல்லன் தரனல்லன் தான்அவை யாய்அல்ல ஆகும் அரனல்லன் ஆனந்தத் தப்புறத் தானே.
|
6
|
முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன் பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா சத்தியுள் நின்(று) ஓர்க்கும் தத்துவம் கூடலால் சுத்தி அகன்றோர் சுகானந்த போதரே.
|
7
|
துரிய அதீதமும் சொல்லறும் பாழாம் அரிய துரியம் அதீதம் புரியில் விரியும் குவியும் விள் ளாமிளி ரும்தன் உருவும் திரியும் உரைப்பதெவ் வாறே.
23, |
8
|