அரவம் அரைக்கசைத்த அண்ணல் சடைபோல் விரவி எழுந்தெங்கும் மின்னி அரவினங்கள் அச்சங்கொண் டோடி அணைய அடைவுற்றே கைச்சங்கம் போல்முழங்குங் கார்.
|
1
|
மையார் மணிமிடறு போற்கருகி மற்றவன்தன் கையார் சிலை விலகிக் காட்டிற்றே ஐவாய் அழலரவம் பூண்டான் அவிர்சடைபோல் மின்னிக் கழலரவம் காண்புற்ற கார்.
|
2
|
ஆலமர் கண்டத் தரன்தன் மணிமிடறும் கோலக் குழற்சடையும் கொல்லேறும் போல்வ இருண்டொன்று மின்தோன்றி அம்பொன்றவ் வானம் கருண்டொன்று கூடுதலின் கார்.
|
3
|
இருள்கொண்ட கண்டத் திறைவன்தன் சென்னிக் குருள்கொண்ட செஞ்சடைபோல் மின்னிச் சுருள்கொண்டு பாம்பினங்கள் அஞ்சிப் படம்ஒடுங்க ஆர்த்ததே காம்பினங்கள் தோள்ஈயக் கார்.
|
4
|
கோடரவங் கோடல் அரும்பக் குருமணிகான் றாடரவம் எல்லாம் அளையடைய நீடரவப் பொற்பகலம் பூண்டான் புரிசடைபோல் மின்னிற்றே கற்பகலம் காண்புற்ற கார்.
|
5
|
Go to top |
பாரும் பனிவிசும்பும் பாசுபதன் பல்சடையும் ஆரும் இருள்கீண்டு மின்விலகி ஊரும் அரவம் செலஅஞ்சும் அஞ்சொலார் காண்பார் கரவிந்தம் என்பார்அக் கார்.
|
6
|
செழுந்தழல் வண்ணன் செஞ்சடைபோல் மின்னி அழுந்தி அலர்போல் உயர எழுந்தெங்கும் ஆவிசோர் நெஞ்சினரை அன்பளக்க உற்றதே காவிசேர் கண்ணாய்அக் கார்.
|
7
|
காந்தள் மலரக் கமழ்கொன்றை பொன்சொரியப் பூந்தளவம் ஆரப் புகுந்தின்றே ஏந்தொளிசேர் அண்டம்போல் மீதிருண்ட ஆதியான் ஆய்மணிசேர் கண்டம்போல் மீதிருண்ட கார்.
|
8
|