திருந்திய சீர்ச்செந்தா மரைத் தடத்துச் சென் றோர் இருந் தண் இளமேதி பாயப் பொருந்திய
|
1
|
புள் இரியப் பொங்கு கயல்வெருவப் பூங்குவளைக் கள் இரியச் செங்கழுநீர் கால்சிதையத் துள்ளிக்
|
2
|
குருகிரியக் கூன்இறவம் பாயக் கெளிறு முருகுவிரி பொய்மையின்கண் மூழ்க வெருவுற்றக்
|
3
|
கோட்டகத்துப் பாய்வாளை கண்டலவன் கூசிப் போய்த் தோட்டகத்த செந்நெல் துறைஅடையச் சேட்டகத்த
|
4
|
காவி முகம்மலரக் கார்நீலம் கண்படுப்ப ஆவிக்கண் நெய்தல் அலமர மேவிய
|
5
|
Go to top |
அன்னம் துயில்இழப்ப அம்சிறைசேர் வண்டினங்கள் துன்னும் துணைஇழப்பச் சூழ் கிடங்கின் மன்னிய
|
6
|
வள்ளை நகைகாட்ட வண்குமுதல் வாய்காட்ட தெள்ளுபுனற் பங்கயங்கள் தேன்காட்ட மெள்ள
|
7
|
நிலவு மலணையினின்றிழிந்த சங்கம் இலகுகதிர் நித்திலங்கள் ஈன உலவிய
|
8
|
மல்லைப் பழனத்து வார்பிரசம் மீதழிய ஒல்லை வரம்பிடறி ஓடிப்போய்ப் புல்லிய
|
9
|
பாசடைய செந்நெற் படர் ஒளியால் பல்கதிரோன் தேசடைய ஓங்கும் செறுவுகளும் மாசில்நீர்
|
10
|
Go to top |
நித்திலத்திற் சாயும் நிகழ்மரக தத் தோலும் தொத்தொளி செம்பொன் தொழிற்பரிய மொய்த்த
|
11
|
பவளத்தின் செவ்வியும் பாங்கணைய ஓங்கித் திவளக் கொடிமருங்கிற் சேர்த்தித் துவளாமைப்
|
12
|
பட்டாடை கொண்டுடுத்துப் பைந்தோ டிலங்குகுழை இட்டமைந்த கண்ணார் இளங்கமுகும் விட்டொளிசேர்
|
13
|
கண்கள் அழல் சிதறிக் காய்சினத்த வாய்மதத்துத் தண்டலையின் நீழல் தறிஅணைந்து கொண்ட
|
14
|
கொலைபுரியா நீர்மையவாய்க் கொம்புவளைத் தேந்தி மலையும் மரவடிவும் கொண்டாங் கிலை நெருங்கு
|
15
|
Go to top |
சூதத் திரளும் கொகுகனிக ளான்நிவந்த மேதகுசீர்த் தெங்கின் வியன்பொழிலும் போதுற்
|
16
|
றினம் ஒருங்கு செவ்வியவாய் இன்தேன் ததும்பும் கனி நெருங்கு திண்கதலிக் காடும் நனிவிளங்கு
|
17
|
நாற்றத்தால் எண்டிசையும் வந்து நலம் சிறப்ப ஊற்று மடுத்த உயர்பலவும் மாற்றமரு
|
18
|
மஞ்சள் எழில்வனமும் மாதுளையின் வார்பொழிலும் இஞ்சி இளங்காவின் ஈட்டமும் எஞ்சாத
|
19
|
கூந்தற் கமுகும் குளிர்பாட லத் தெழிலும் வாய்ந்தசீர்ச் சண்பகத்தின் வண்காடும் ஏந்தெழில்ஆர்
|
20
|
Go to top |
மாதவியும் புன்னையும் மன்நும் மலர்க்குரவும் கேதையும் எங்கும் கெழீஇப் போதின்
|
21
|
இளந்தென்றல் வந்தசைப்ப எண்டிசையும் வாசம் வளந்துன்று வார்பொழிலின் மாடே கிளர்ந்தெங்கும்
|
22
|
ஆலை ஒலியும் அரிவார் குரல்ஒலியும் சோலைக் கிளிமிழற்றும் சொல்லொலியும் ஆலும்
|
23
|
அறுபதங்கள் ஆர்ப்பொலியும் ஆன்றபொலி வெய்தி உறுதிரைநீர் வேலை ஒலிப்ப வெறிகமழும்
|
24
|
நந்தா வனத்தியல்பும் நற்றவத் தோர் சார்விடமும் அந்தமில் சீரார் அழகினால் முந்திப்
|
25
|
Go to top |
புகழ்வாரும் தன்மையதாய்ப் பூதலத்துள் ஓங்கி நிகழ்கிடங்கும் சூழ்கிடப்ப நேரே திகழ
|
26
|
முளைநிரைத்து மூரிச் சிறைவகுத்து மொய்த்த புளகத்தின் பாம்புரிசூழ் போகி வளர
|
27
|
இரும்பதணம் சேர இருத்தி எழில் நாஞ்சில் மருங்கணைய அட்டாலை யிட்டுப் பொருந்தியசீர்த்
|
28
|
தோமரமும் தொல்லைப் பொறிவீசி யந்திரமும் காமரமும் ஏப்புழையும் கைகலந்து மீ மருவும்
|
29
|
வெங்கதிரோன் தேர்விலங்க மிக் குயர்ந்த மேருப் போன்று அங்கனகத் திஞ்சி அணிபெற்றுப் பொங்கிகொளிசேர்
|
30
|
Go to top |
மாளிகையும் மன்னியசீர் மண்டபமும் ஒண்தலத்த சூளிகையும் துற்றெழுந்த தெற்றிகளும் வாளொளிய
|
31
|
நாடக சாலையும் நன்பொற் கபோதகம் சேர் பீடமைத்த மாடத்தின் பெற்றியும் கேடில்
|
32
|
உருவு பெறவகுத்த அம்பலமும்ஓங்கு தெருவும் வகுத்தசெய் குன்றும் மருவினிய
|
33
|
சித்திரக் காவும் செழும் பொழிலும் வாவிகளும் நித்திலஞ்சேர் நீடு நிலைக்களமும் எத்திசையும்
|
34
|
துன்னி எழில்சிறப்பச் சோதி மலர்மடந்தை மன்னி மகிழ்ந்துறையும் வாய்மைத்தாய்ப் பொன்னும்
|
35
|
Go to top |
மரகதமும் நித்திலமும் மாமணியும் பேணி இரவலருக் கெப்போதும் ஈந்து கரவாது
|
36
|
கற்பகமும் காருமெனக் கற்றவர்க்கும் நற்றவர்க்கும் தப்பாக் கொடைவளர்க்கும் சாயாத செப்பத்தால்
|
37
|
பொய்மை கடிந்து புகழ்புரிந்து பூதலத்து மெய்ம்மை தலைசிறந்து மேதக்கும் உண்மை
|
38
|
மறைபயில்வார் மன்னும் வியாகரணக் கேள்வித் துறைபயில்வார் தொன்னூல் பயில்வார் முறைமையால்
|
39
|
ஆகமங்கள் கேட்பார் அருங்கலைநூல் ஆதரித்துப் போகம் ஒடுங்காப் பொருள்துய்ப்பார் சோகமின்றி
|
40
|
Go to top |
நீதி நிலையுணர்வார் நீள் நிலத்துள் ஐம்புலனும் காதல் விடுதவங்கள் காமுறு வார் ஆதி
|
41
|
அருங்கலைநூல் ஓதுவார் ஆதரித்து வென்றிக் கருங்கலிநீங் கக்கனல்வ குப்பார் ஒருங்கிருந்து
|
42
|
காமநூல் கேட்பார் கலைஞானங் காதலிப்பார் ஒமநூல் ஒதுவார்க் குத்தரிப்பார் பூமன்னும்
|
43
|
நான்முகனே அன்னசீர் நானூற் றுவர்மறையோர் தாம்மன்னி வாவும் தகைமைத்தாய் நாமன்னும்
|
44
|
ஆரணங்கும் மற்றை அருந்ததியும் போல்மடவார் ஏரணங்கு மாடத் தினிதிருந்து சீரணங்கு
|
45
|
Go to top |
வீணை பயிற்றுவார் யாழ்பயில்வார் மேவியசீர்ப் பாணம் பயில்வார் பயன்உறுவார் பேணியசீர்ப்
|
46
|
பூவைக்குப் பாட்டுரைப்பார் பொற்கிளிக்குச் சொற் பயில்வார் பாவைக்குப் பொன்புனைந்து பண்புறுவா ராய் எங்கும்
|
47
|
மங்கையர்கள் கூட்டமும் மன்னு சிறார்குழுவும் பொங்குலகம் எல்லாம் பொலிவடையத் தங்கிய
|
48
|
வேத ஒலியும் விழாவொலியும் மெல்லியலார் கீத ஒலியும் கிளர்ந்தோங்கும் மாதரார்
|
49
|
பாவை ஒலியும் பறைஒலியும் பல்சனங்கள் மேவும் ஒலியும் வியன்நகரங் காவலர்கள்
|
50
|
Go to top |
பம்பைத் துடிஒலியும் பவ்வப் படைஒலியும் கம்பக் களிற்றொலியும் கைகலந்து நம்பிய
|
51
|
கார்முழுக்கம் மற்றைக் கடல்முழுக்கம் போற்கலந்த சீர் முழக்கம் எங்கும் செவிடுபடப் பார்விளங்கு
|
52
|
செல்வம் நிறைந்த ஊர் சீரில் திகழ்ந்தஊர் மல்கு மலர்மடந்தை மன்னும் ஊர் சொல்லினிய
|
53
|
ஞாலத்து மிக்கஊர் நானூற் றுவர்களூர் வேலொத்த கண்ணார் விளங்கும் ஊர் ஆலித்து
|
54
|
மன்னிருகால் வேளை வளர்வெள்ளத் தும்பரொடும் பன்னிருகால் நீரில் மிதந்தஊர் மன்னும்
|
55
|
Go to top |
பிரமன்ஊர் வேணுபுரம் பேரொலிநீர் சண்பை அரன்மன்னு தண்காழி அம்பொற் சிரபுரம்
|
56
|
பூந்தராய் கொச்சைவயம் வெங்குருப் பொங்குபுனல் வாய்ந்தநல் தோணிபுரம் மறையோர் ஏய்ந்த
|
57
|
புகலி கழுமலம் பூம்புறவம் என்றிப் பகர்கின்ற பண்புற்ற தாகித் திகழ்கின்ற
|
58
|
மல்லைச் செழுநகரம் மன்னவும் வல்லமணர் ஒல்லைக் கழுவில் உலக்கவும் எல்லையிலா
|
59
|
மாதவத்தோர் வாழவும் வையகத்தோர் உய்யவும் மேதக்க வானோர் வியப்பவும் ஆதியாம்
|
60
|
Go to top |
வென்றிக் கலிகெடவும் வேதத் தொலிமிகவும் ஒன்றிச் சிவனடியார் ஒங்கவும் துன்றிய
|
61
|
பன்னு தமிழ்ப்பதினா றாயிர நற்பனுவல் மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும் முன்னிய
|
62
|
சிந்தனையால் சீரார் கவுணியர்க்கோர் சேய்என்ன வந்தங் கவதரித்த வள்ளலை அந்தமில் சீர்
|
63
|
ஞானச் சுடர்விளக்கை நற்றவத்தோர் கற்பகத்தை மான மறைஅவற்றின் வான்பொருளை - ஆனசீர்த்
|
64
|
தத்துவனை நித்தனைச் சைவத் தவர்அரசை வித்தகத்தால் ஓங்கு விடலையை முத்தமிழின்
|
65
|
Go to top |
செஞ்சொற் பொருள்பயந்த சிங்கத்தைத் தெவ்வருயிர் அஞ்சத் திகழ்ந்த அடலுருமை எஞ்சாமை
|
66
|
ஆதிச் சிவனருளால் அம்பொன்செய் வட்டிலில் கோதில் அமிர்தநுகர் குஞ்சரத்தைத் தீதறுசீர்க்
|
67
|
காலத் தொகுதியும் நான்மறையின் காரணமும் மூலப் பொருளும் முழுதுணர்ந்த சீலத்
|
68
|
திருஞான சம்பந்தன் என்றுலகம் சேர்ந்த ஒரு நாமத் தால்உயர்ந்த கோவை வருபெரு நீர்ப்
|
69
|
பொன்னிவள நாடனைப் பூம்புகலி நாயகனை மன்னர் தொழுதிறைஞ்சும் மாமணியை முன்னே
|
70
|
Go to top |
நிலவு முருகற்கும் நீலநக் கற்கும் தொலைவில் புகழ்ச்சிறுத்தொண் டற்கும் குலவிய
|
71
|
தோழமையாய்த் தொல்லைப் பிறப்பறுத்த சுந்தரனை மாழைஒண்கண் மாதர் மதனனைச் சூழொளிய
|
72
|
கோதைவேல் தென்னன்றன் கூடற் குலநகரில் வாதில் அமணர் வலிதொலையக் காதலால்
|
73
|
புண்கெழுவு செம்புனல்ஆ றோடப் பொரு தவரை வண்கழுவில் வைத்த மறையோனை ஒண்கெழுவு
|
74
|
ஞாலத் தினர்அறிய மன்னுநனி பள்ளியது பாலை தனைநெய்த லாக்கியும் காலத்து
|
75
|
Go to top |
நீரெதிர்ந்து சென்று நெருப்பிற் குளிர்படைத்தும் பாரெதிர்ந்த பலவிடங்கள் தீர்த்தும் முன் நேரெழுந்த
|
76
|
யாழை முரித்தும் இருங்கதவம் தான் அடைத்தும் சூழ்புனலில் ஓடத் தொழில்புரிந்தும் தாழ்பொழில்சூழ்
|
77
|
கொங்கிற் பனிநோய் பரிசனத்தைத் தீர்ப்பித்தும் துங்கப் புரிசை தொகுமிழலை அங்கதனில்
|
78
|
நித்தன் செழுங்காசு கொண்டுநிகழ் நெல்வாயில் முத்தின் சிவிகை முதல் கொண்டு அத்தகுசீர்
|
79
|
மாயிரு ஞாலத்து மன்ஆ வடுதுறைபுக் காயிரஞ் செம்பொ னதுகொண்டும் ஆய்வரிய
|
80
|
Go to top |
மாண்புதிகழ் எம்பெருமான் மன்னுதிரு ஓத்தூரில் ஆண்பனைகள் பெண்பனைக ளாக்கியும் பாண்பரிசில்
|
81
|
கைப்பாணி ஒத்திக்கா ழிக்கோலக் காவிற்பொற் சப்பாணி கொண்டும் தராதலத்துள் எப்பொழுதும்
|
82
|
நீக்கரிய இன்பத் திராகமிருக் குக்குறள் நோக்கரிய பாசுரம் பல் பத்தோடு மாக்கரிய
|
83
|
யாழ்மூரி சக்கரமாற் றீரடி முக்காலும் பாழிமையால் பாரகத்தோர் தாம்உய்ய ஊழி
|
84
|
உரைப்பமரும் பல்புகழால் ஓங்கஉமை கோனைத் திருப்பதிகம் பாடவல்ல சேயை விருப்போடு
|
85
|
Go to top |
நண்ணு புகழ்மறையோர் நாற்பத்தெண் ணாயிரவர் எண்ணின் முனிவரர் ஈட்டத்துப் பண்அமரும்
|
86
|
ஒலக்கத் துள்இருப்ப ஒண்கோயில் வாயிலின்கண் கோலக் கடைகுறுகிக் கும்பிட் டாங் காலும்
|
87
|
புகலி வளநகருட் பூசுரர் புக் காங் கிகல்இல் புகழ்பரவி ஏத்திப் புகலிசேர்
|
88
|
வீதி எழுந்தருள வேண்டும் என விண்ணப்பம் ஆதரத்தால் செய்ய அவர்க்கருளி நீதியால்
|
89
|
கேதகையும் சண்பகமும் நேர்கிடத்திக் கீழ்த்தாழ்ந்த மாதவியின் போதை மருங்கணைத்துக் கோதில்
|
90
|
Go to top |
இருவேலி தன்னை இடையிருத்தி ஈண்டு மருவோடு மல்லிகையை வைத் தாங் கருகே
|
91
|
கருமுகையைக் கைகலக்க வைத்துக் கழுநீர்ப் பெருகு பிளவிடையே பெய்து முருகியலும்
|
92
|
புன்னாகந் தன்னைப் புணர இருவாச்சி தன் அயலே முல்லை தலை எடுப்ப மன்னிய
|
93
|
வண் செருந்தி வாய்நெகிழ்ப்ப மௌவல் அலர் படைப்பத் தண் குருந்தம் மாடே தலை இறக்க ஒண்கமலத்
|
94
|
தாதடுத்த கண்ணியால் தண்நறுங் குஞ்சிமேற் போதடுத்த கோலம் புனைவித்துக் காதில்
|
95
|
Go to top |
கனவயிர குண்டலங்கள் சேர்த்திக் கழுத்தில் இனமணியின் ஆரம் இலகப் புனை கனகத்
|
96
|
தொத்தடுத்த பூஞ்சுரிகைச் சோதிசேர் தாளிம்பம் வைத்து மணிக்கண் டிகைபூண்டு முத்தடுத்த
|
97
|
கேயூரம் தோள்மேல் கிடத்திக் கிளர்பொன்னின் வாய்மை பெறுநூல் வலம்திகழ ஏயும்
|
98
|
தமனியத்தின் தாழ்வடமும் தண்தரளக் கோப்பும் சிமய வரை மார்பிற் சேர்த்தி அமைவுற்ற
|
99
|
வெண்ணீற்றின் ஒண்களபம் மட்டித்து மேவுதொழில் ஒண்ணூற் கலிங்கம் உடல்புனைந்து திண் நோக்கில்
|
100
|
Go to top |
காற்றுருமோ குன்றோ கடலோ அடல்உருமோ கூற்றுருவோ என்னக் கொதித்தெழுந்து சீற்றத்
|
101
|
தழல்விழித்து நின்றெதிர்ந்து தாலவட்டம் வீசிப் புழைத் தடக்கை கொண்டெறிந்து பொங்கி மழை மதத்தால்
|
102
|
பூத்த கடதடத்துப் போகம் மிகபொலிந்த காத்திரத்த தாகிக் கலித்தெங்கும் கோத்த
|
103
|
கொடு நிகளம் போக்கி நிமிர் கொண்டெழுந்து கோபித் திடுவண்டை இட்டுக் கலித்து முடுகி
|
104
|
நெடுநிலத்தைத் தான்உழக்கி நின்று நிகற் நீத் திடிபெயரத் தாளத் திலுப்பி அடுசினத்தால்
|
105
|
Go to top |
கன்ற முகம் பருகிக் கையெடுத் தாராய்ந்து வென்றி மருப்புருவ வெய்துயிர்த் தொன்றிய
|
106
|
கூடம் அரண்அழித்துக் கோபுரங்க ளைக்குத்தி நீடு பொழிலை நிகர் அழித் தோடிப்
|
107
|
பணப்பா கரைப் பரிந்து குத்திப் பறித்த நிணப்பாகை நீள்விசும்பில் வீசி அணைப்பரிய
|
108
|
ஓடைக் கருங்களிற்றை ஒண்பரிக் காரர்கள்தாம் மாடணையக் கொண்டு வருதலுமே கூடி
|
109
|
நயந்து குரல்கொடுத்து நட்பளித்துச் சென்று வியந்தணுகி வேட்டம் தணித் தாங் குயர்ந்த
|
110
|
Go to top |
உடல்தூய வாசிதனைப் பற்றிமேல் கொண் டாங் கடற்கூடற் சந்தி அணுகி அடுத்த
|
111
|
பயிர்பலவும் பேசிப் படுபுரசை நீக்கி அயர்வு கெடஅணைத்த தட்டி உயர்வுதரு
|
112
|
தண்டுபே ரோசையின்கண் தாள்கோத்துச் சீர்சிறுத் தொண்டர் பிறகணையத் தோன்றுதலும் எண்டிசையும்
|
113
|
பல்சனமும் மாவும் படையும் புடைகிளர ஒல்லொலியால் ஓங்கு கடல் கிளர மல்லற்
|
114
|
பரித்தூரம் கொட்டப் படுபணிலம் ஆர்ப்பக் கருத்தோ டிசைகவிஞர் பாட விரித்த
|
115
|
Go to top |
குடைபலவும் சாமரையும் தொங்கல்களும் கூடிப் புடைபரந்து பொக்கம் படைப்பக் கடைபடு
|
116
|
வீதி அணுகுதலும் மெல்வளையார் உள்மகிழ்ந்து காதல் பெருகிக் கலந்தெங்கும் சோதிசேர்
|
117
|
ஆடரங்கின் மேலும் அணிமா ளிகைகளிலும் சேடரங்கு நீள்மறுகும் தெற்றியிலும் பீடுடைய
|
118
|
பேரிளம்பெண் ஈறாகப் பேதை முதலாக வாரிளங் கொங்கை மடநல்லார் சீர்விளங்கப்
|
119
|
பேணும் சிலம்பும் பிறங்கொளிசேர் ஆரமும் பூணும் புலம்பப் புறப்பட்டுச் சேண் மறுகில்
|
120
|
Go to top |
காண்டகைய வென்றிக் கருவரைமேல் வெண்மதிபோல் ஈண்டு குடையின் எழில்நிழற் கீழ்க் காண்டலுமே
|
121
|
கைதொழுவார் நின்று கலைசரிவார் மால் கொண்டு மெய்தளர்வார் வெள்வளைகள் போய் வீழ்வார் வெய்துயிர்த்துப்
|
122
|
பூம்பயலை கொள்வார் புணர்முலைகள் பொன்பயப்பார் காம்பனைய மென்தோள் கவின்கழிவார் தாம் பயந்து
|
123
|
வென்றிவேற் சேய் என்ன வேனில் வேள் கோ என்ன அன் றென்ன ஆம் என்ன ஐயுற்றுச் சென்றணுகிக்
|
124
|
காழிக் குலமதலை என்றுதம் கைசோர்ந்து வாழி வளைசரிய நின்றயர்வார் பாழிமையால்
|
125
|
Go to top |
உள்ளம் நிலைதளர்ந்த ஒண்ணுதலார் வெல்களிற்றை மெள்ள நட என்று வேண்டுவார் கள்ளலங்கல்
|
126
|
தாராமை யன்றியும் தையல்நல் லார்முகத்தைப் பாராமை சாலப் பயன் என்பார் நேராக
|
127
|
என்னையே நோக்கினான் ஏந்திழையீர் இப்பொழுது நன்மை நமக்குண் டெனநயப்பார் கைம்மையால்
|
128
|
ஒண்கலையும் நாணும் உடைத்துகிலும் தோற்றவர்கள் வண்கமலத் தார்வலிந்து கோடும் எனப் பண்பின்
|
129
|
வடிக்கண் மலர்வாளி வார்புருவ வில்மேல் தொடுத் ததரத் தொண்டை துடிப்பப் பொடித்தமுலைக்
|
130
|
Go to top |
காசைக் கருங்குழலார் காதற் கவுணியன்பால் பூசற் கமைந்து புறப்படுவார் வாசச்
|
131
|
செழுமலர்த்தார் இன்றெனக்கு நல்காதே சீரார் கழுமலத்தார் கோவே கழல்கள் தொழுவார்கள்
|
132
|
அங்கோல வளையிழக்கப் போவது நின்னுடைய செங்கோன்மையோ என்று செப்புவார் நங்கையீர்
|
133
|
இன்றிவன் நலகுமே எண்பெருங் குன்றத்தின் அன்றமணர் கூட்டத்தை ஆசழித்துப் பொன்ற
|
134
|
உரைகெழுவு செந்தமிழ்ப்பா ஒன்றினால் வென்றி நிரை கழுமேல் உய்த்தானை நேர்ந்து விரைமலர்த்தார்
|
135
|
Go to top |
பெற்றிடலாம் என்றிருந்த நம்மினும் பேதையர்கள் மற்றுளரோ என்று வகுத்துரைப்பார் மற்றிவனே
|
136
|
பெண் இரக்கம் அன்றே பிறைநுதலீர் மாசுணத்தின் நண்ணு கடுவித்தால் நாட்சென்று விண்ணுற்ற
|
137
|
ஆரூயிரை மீட் டன்று றவளை அணிமருகல் ஊரறிய வைத்த தென உரைப்பார் பேரிடரால்
|
138
|
ஏசுவார் தாம் உற்ற ஏசறவைத் தோழியர் முன் பேசுவார் நின்று தம் பீடழிவார் ஆசையால்
|
139
|
நைவார் நலன்அழிவார் நாணோடு பூண் இழப்பார் மெய்வாடு வார் வெகுள்வார் வெய்துயிர்ப்பார் தையலார்
|
140
|
Go to top |
பூந்துகிலைப் பூமாலை என்றணிவார் பூவினைமுன் சாந்தம் என மெய்யில் தைவருவார் வாய்ந்த
|
141
|
கிளி என்று பாவைக்குச் சொற்பயில்வார் பந்தை ஒளிமே கலை என் றுடுப்பார் அளிமேவு
|
142
|
பூங்குழலார் மையலாய்க் கைதொழமுன் போதந்தான் ஒங்கொலிசேர் வீதி உலா.
|
143
|