சீரி னார்மணி யும்மகில் சந்துஞ் செறிவரை வாரி நீர்வரு பொன்னி வடமங் கலக்குடி நீரின் மாமுனி வன்னெடுங் கைகொடு நீர்தனைப் பூரித் தாட்டியர்ச் சிக்க விருந்த புராணனே.
|
1
|
பணங்கொ ளாடர வல்குனல் லார்பயின் றேத்தவே மணங்கொண் மாமயி லாலும் பொழின்மங் கலக்குடி இணங்கி லாமறை யோரிமை யோர்தொழு தேத்திட அணங்கி னோடிருந் தானடி யேசர ணாகுமே.
|
2
|
கருங்கை யானையி னீருரி போர்த்திடு கள்வனார் மருங்கெ லாமண மார்பொழில் சூழ்மங் கலக்குடி அரும்பு சேர்மலர்க் கொன்றையி னானடி யன்பொடு விரும்பி யேத்தவல் லார்வினை யாயின வீடுமே.
|
3
|
பறையி னோடொலி பாடலு மாடலும் பாரிடம் மறையி னோடியன் மல்கிடு வார்மங் கலக்குடிக் குறைவி லாநிறை வேகுண மில்குண மேயென்று முறையி னால்வணங் கும்மவர் முன்னெறி காண்பரே.
|
4
|
ஆனி லங்கிள ரைந்தும விர்முடி யாடியோர் மானி லங்கையி னான்மண மார்மங் கலக்குடி ஊனில் வெண்டலைக் கையுடை யானுயர் பாதமே ஞான மாகநின் றேத்தவல் லார்வினை நாசமே.
|
5
|
Go to top |
தேனு மாயமு தாகிநின் றான்றெளி சிந்தையுள் வானு மாய்மதி சூடவல் லான்மங் கலக்குடி கோனை நாடொறு மேத்திக் குணங்கொடு கூறுவார் ஊன மானவை போயறு முய்யும் வகையதே.
|
6
|
வேள்ப டுத்திடு கண்ணினன் மேருவில் லாகவே வாள ரக்கர் புரமெரித் தான்மங் கலக்குடி ஆளு மாதிப் பிரானடி கள்ளடைந் தேத்தவே கோளு நாளவை போயறுங் குற்றமில் லார்களே.
|
7
|
பொலியு மால்வரை புக்கெடுத் தான்புகழ்ந் தேத்திட வலியும் வாளொடு நாள்கொடுத் தான்மங் கலக்குடிப் புலியி னாடையி னானடி யேத்திடும் புண்ணியர் மலியும் வானுல கம்புக வல்லவர் காண்மினே.
|
8
|
ஞால முன்படைத் தானளிர் மாமலர் மேலயன் மாலுங் காணவொ ணாவெரி யான்மங் கலக்குடி ஏல வார்குழ லாளொரு பாக மிடங்கொடு கோல மாகிநின் றான்குணங் கூறுங் குணமதே.
|
9
|
மெய்யின் மாசினர் மேனி விரிதுவ ராடையர் பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர்மங் கலக்குடிச் செய்ய மேனிச் செழும்புனற் கங்கை செறிசடை ஐயன் சேவடி யேத்தவல் லார்க்கழ காகுமே.
|
10
|
Go to top |
மந்த மாம்பொழில் சூழ்மங் கலக்குடி மன்னிய எந்தை யையெழி லார்பொழிற் காழியர் காவலன் சிந்தை செய்தடி சேர்த்திடு ஞானசம் பந்தன்சொல் முந்தி யேத்தவல் லாரிமை யோர்முத லாவரே.
|
11
|