பந்தார் விரன்மடவாள் பாகமா நாகம்பூண் டேறதேறி அந்தா ரரவணிந்த வம்மா னிடம்போலும் அந்தண் சாரல் வந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழிலில் வண்டுபாடச் செந்தேன் றெளியொளிரத் தேமாங் கனியுதிர்க்குந் திருநணாவே.
|
1
|
நாட்டம் பொலிந்திலங்கு நெற்றியினான் மற்றொருகை வீணையேந்தி ஈட்டுந் துயரறுக்கு மெம்மா னிடம்போலும் இலைசூழ்கானில் ஓட்டந் தருமருவி வீழும் விசைகாட்ட முந்தூழோசைச் சேட்டார் மணிக ளணியுந் திரைசேர்க்குந் திருநணாவே.
|
2
|
நன்றாங் கிசைமொழிந்து நன்னுதலாள் பாகமாய் ஞாலமேத்த மின்றாங்கு செஞ்சடையெம் விகிர்தர்க் கிடம்போலும் விரைசூழ்வெற்பில் குன்றோங்கி வன்றிரைகண் மோத மயிலாலுஞ் சாரற்செவ்வி சென்றோங்கி வானவர்க ளேத்தி யடிபணியுந் திருநணாவே.
|
3
|
கையின் மழுவேந்திக் காலிற் சிலம்பணிந்து கரித்தோல்கொண்டு மெய்யின் முழுதணிந்த விகிர்தர்க்கிடம்போலு மிடைந்துவானோர் ஐய வரனே பெருமா னருளென்றென் றாதரிக்கச் செய்ய கமலம் பொழிதே னளித்தியலுந் திருநணாவே.
|
4
|
முத்தேர் நகையா ளிடமாகத் தம்மார்பில் வெண்ணூல்பூண்டு தொத்தேர் மலர்சடையில் வைத்தா ரிடம்போலுஞ் சோலைசூழ்ந்த அத்தே னளியுண் களியா லிசைமுரல ஆலத்தும்பி தெத்தே யெனமுரலக் கேட்டார் வினைகெடுக்குந் திருநணாவே.
|
5
|
Go to top |
வில்லார் வரையாக மாநாக நாணாக வேடங்கொண்டு புல்லார் புரமூன் றெரித்தார்க் கிடம்போலும் புலியுமானும் அல்லாத சாதிகளு மங்கழன்மேற் கைகூப்ப அடியார்கூடிச் செல்லா வருநெறிக்கே செல்ல வருள்புரியுந் திருநணாவே.
|
6
|
கானார் களிற்றுரிவை மேன்மூடி யாடரவொன் றரைமேற்சாத்தி ஊனார் தலையோட்டி லூணுகந்தான் றானுகந்த கோயிலெங்கும் நானா விதத்தால் விரதிகணன் னாமமே யேத்திவாழ்த்தத் தேனார் மலர்கொண்டடியா ரடிவணங்குந் திருநணாவே.
|
7
|
மன்னீ ரிலங்கையர்தங் கோமான் வலிதொலைய விரலாலூன்றி முந்நீர்க் கடனஞ்சை யுண்டார்க் கிடம்போலு முனைசேர்சீயம் அன்னீர் மைகுன்றி யழலால் விழிகுறைய வழியுமுன்றிற் செந்நீர் பரப்பச் சிறந்து கரியொளிக்குந் திருநணாவே.
|
8
|
மையார் மணிமிடறன் மங்கையோர் பங்குடையான் மனைகடோறும் கையார் பலியேற்ற கள்வ னிடம்போலுங் கழல்கணேடிப் பொய்யா மறையானும் பூமிய ளந்தானும் போற்றமன்னிச் செய்யா ரெரியா முருவ முறவணங்குந் திருநணாவே.
|
9
|
ஆடை யொழித்தங் கமணே திரிந்துண்பார் அல்லல்பேசி மூடும் உருவ முகந்தா ருரையகற்று மூர்த்திகோயில் ஓடு நதிசேரு நித்திலமு மொய்த்தகிலுங் கரையிற்சாரச் சேடர் சிறந்தேத்தத் தோன்றி யொளிபெருகுந் திருநணாவே.
|
10
|
Go to top |
கல்வித் தகத்தாற் றிரைசூழ் கடற்காழிக் கவுணிசீரார் நல்வித் தகத்தா லினிதுணரு ஞானசம் பந்தனெண்ணும் சொல்வித் தகத்தா லிறைவன் றிருநணா வேத்துபாடல் வல்வித் தகத்தான் மொழிவார் பழியிலரிம் மண்ணின்மேலே.
|
11
|