ஒளிரிளம்பிறை சென்னிமேல் உடையர்கோவண வாடையர் குளிரிளம்மழை தவழ்பொழிற் கோலநீர்மல்கு காவிரி நளிரிளம்புனல் வார்துறை நங்கைகங்கையை நண்ணினார் மிளிரிளம்பொறி யரவினார் மேயதுவிள நகரதே.
|
1
|
அக்கரவ்வணி கலனென அதனொடார்த்ததொ ராமைபூண் டுக்கவர்சுடு நீறணிந் தொளிமல்குபுனற் காவிரிப் புக்கவர்துயர் கெடுகெனப் பூசுவெண்பொடி மேவிய மிக்கவர்வழி பாடுசெய் விளநகரவர் மேயதே.
|
2
|
வாளிசேரடங் கார்மதி தொலையநூறிய வம்பின்வேய்த் தோளிபாகம் அமர்ந்தவர் உயர்ந்ததொல்கட னஞ்சுடன் காளமல்கிய கண்டத்தர் கதிர்விரிசுடர் முடியினர் மீளியேறுகந் தேறினார் மேயதுவிள நகரதே.
|
3
|
கால்விளங்கெரி கழலினார் கையிலங்கிய வேலினார் நூல்விளங்கிய மார்பினார் நோயிலார்பிறப் பும்மிலார் மால்விளங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார் மேல்விளங்குவெண் பிறையினார் மேயதுவிள நகரதே.
|
4
|
பன்னினார்மறை பாடினார் பாயசீர்ப்பழங் காவிரித் துன்னுதண்டுறை முன்னினார் தூநெறிபெறு வாரெனச் சென்னிதிங்களைப் பொங்கராக் கங்கையோடுடன் சேர்த்தினார் மின்னுபொன்புரி நூலினார் மேயதுவிள நகரதே.
|
5
|
Go to top |
தேவரும்மம ரர்களுந் திசைகண்மேலுள தெய்வமும் யாவரும்மறி யாததோ ரமைதியாற்றழ லுருவினார் மூவரும்மவ ரென்னவும் முதல்வரும்மிவ ரென்னவும் மேவரும்பொரு ளாயினார் மேயதுவிள நகரதே.
|
6
|
சொற்றருமறை பாடினார் சுடர்விடுஞ்சடை முடியினார் கற்றருவடங் கையினார் காவிரித்துறை காட்டினார் மற்றருதிர டோளினார் மாசில்வெண்பொடிப் பூசினார் விற்றருமணி மிடறினார் மேயதுவிள நகரதே.
|
7
|
படர்தருஞ்சடை முடியினார் பைங்கழலடி பரவுவார் அடர்தரும்பிணி கெடுகென அருளுவார்அர வரையினார் விடர்தரும்மணி மிடறினார் மின்னுபொன்புரி நூலினார் மிடறரும்படை மழுவினார் மேயதுவிள நகரதே.
|
8
|
கையிலங்கிய வேலினார் தோலினார்கரி காலினார் பையிலங்கர வல்குலாள் பாகமாகிய பரமனார் மையிலங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார் மெய்யிலங்குவெண் ணீற்றினார் மேயதுவிள நகரதே.
|
9
|
உள்ளதன்றனைக் காண்பன்கீ ழென்றமாமணி வண்ணனும் உள்ளதன்றனைக் காண்பன்மே லென்றமாமலர் அண்ணலும் உள்ளதன்றனைக் கண்டிலார் ஒளியார் தருஞ்சடை முடியின்மேல் உள்ளதன்றனைக் கண்டிலா வொளியார் விளநகர் மேயதே.
|
10
|
Go to top |
மென்சிறைவண் டியாழ்முரல் விளநகர்த்துறை மேவிய நன்பிறைநுத லண்ணலைச் சண்பைஞானசம் பந்தன்சீர் இன்புறுதமி ழாற்சொன்ன ஏத்துவார்வினை நீங்கிப்போய்த் துன்புறுதுய ரம்மிலர் தூநெறிபெறு வார்களே.
|
11
|