சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.100   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருக்கோவலூர் வீரட்டம் - நட்டராகம் நடபைரவி பந்துவாராளி கனகவசந்தம் ராகத்தில் திருமுறை அருள்தரு சிவானந்தவல்லியம்மை உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி
https://www.youtube.com/watch?v=DR1a1S4558c   Add audio link Add Audio
படைகொள்கூற்றம் வந்துமெய்ப் பாசம்விட்ட போதின்கண்
இடைகொள்வா ரெமக்கிலை யெழுகபோது நெஞ்சமே
குடைகொள்வேந்தன் மூதாதை குழகன்கோவ லூர்தனுள்
விடையதேறுங் கொடியினான் வீரட்டானஞ் சேர்துமே.


1


கரவலாளர் தம்மனைக் கடைகடோறுங் கானிமிர்த்
திரவலாழி நெஞ்சமே யினியதெய்த வேண்டில்நீ
குரவமேறி வண்டினங் குழலொடியாழ்செய் கோவலூர்
விரவிநாறு கொன்றையான் வீரட்டானஞ் சேர்துமே.


2


உள்ளத்தீரே போதுமின் னுறுதியாவ தறிதிரேல்
அள்ளற்சேற்றிற் காலிட்டிங் கவலத்துள் ளழுந்தாதே
கொள்ளப்பாடு கீதத்தான் குழகன்கோவ லூர்தனுள்
வெள்ளந்தாங்கு சடையினான் வீரட்டானஞ் சேர்துமே.


3


கனைகொளிருமல் சூலைநோய் கம்பதாளி குன்மமும்
இனையபலவு மூப்பினோ டெய்திவந்து நலியாமுன்
பனைகளுலவு பைம்பொழிற் பழனஞ்சூழ்ந்த கோவலூர்
வினையைவென்ற வேடத்தான் வீரட்டானஞ் சேர்துமே.


4


உளங்கொள்போக முய்த்திடா ருடம்பிழந்த போதின்கண்
துளங்கிநின்று நாடொறுந் துயரலாழி நெஞ்சமே
வளங்கொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர்
விளங்குகோவ ணத்தினான் வீரட்டானஞ் சேர்துமே.


5


Go to top
கேடுமூப்புச் சாக்காடு கெழுமிவந்து நாடொறும்
ஆடுபோல நரைகளா யாக்கைபோக்க தன்றியும்
கூடிநின்று பைம்பொழிற் குழகன்கோவ லூர்தனுள்
வீடுகாட்டு நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே.


6


உரையும்பாட்டுந் தளர்வெய்தி யுடம்புமூத்த போதின்கண்
நரையுந்திரையுங் கண்டெள்கி நகுவர் நமர்க ளாதலால்
வரைகொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர்
விரைகொள்சீர்வெண் ணீற்றினான் வீரட்டானஞ் சேர்துமே.


7


ஏதமிக்க மூப்பினோ டிருமலீளை யென்றிவை
ஊதலாக்கை யோம்புவீ ருறுதியாவ தறிதிரேல்
போதில்வண்டு பண்செயும் பூந்தண்கோவலூர்தனுள்
வேதமோது நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே.


8


ஆறுபட்ட புன்சடை அழகனாயி ழைக்கொரு
கூறுபட்ட மேனியான் குழகன்கோவ லூர்தனுள்
நீறுபட்ட கோலத்தான் நீலகண்ட னிருவர்க்கும்
வேறுபட்ட சிந்தையான் வீரட்டானஞ் சேர்துமே.


9


குறிகொளாழி நெஞ்சமே கூறைதுவரிட் டார்களும்
அறிவிலாத வமணர்சொல் லவத்தமாவ தறிதிரேல்
பொறிகொள்வண்டு பண்செயும் பூந்தண்கோவ லூர்தனுள்
வெறிகொள்கங்கை தாங்கினான் வீரட்டானஞ் சேர்துமே.


10


Go to top
கழியொடுலவு கானல்சூழ் காழிஞான சம்பந்தன்
பழிகள்தீரச் சொன்னசொற் பாவநாச மாதலால்
அழிவிலீர்கொண் டேத்துமின் அந்தண்கோவ லூர்தனுள்
விழிகொள்பூதப் படையினான் வீரட்டானஞ் சேர்துமே.


11



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கோவலூர் வீரட்டம்
2.100   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   படை கொள் கூற்றம் வந்து,
Tune - நட்டராகம்   (திருக்கோவலூர் வீரட்டம் வீரட்டானேசுவரர் சிவானந்தவல்லியம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 2.100