புல்கு பொன்னிறம் புரிசடை நெடுமுடிப் போழிள மதிசூடிப் பில்கு தேனுடை நறுமலர்க் கொன்றையும் பிணையல்செய் தவர்மேய மல்கு தண்டுறை யரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம் அல்லு நண்பக லுந்தொழு மடியவர்க் கருவினை யடையாவே.
|
1
|
அரவ மாட்டுவ ரந்துகில் புலியதள் அங்கையி லனலேந்தி இரவு மாடுவ ரிவையிவர் சரிதைகள் இசைவன பலபூதம் மரவந்தோய்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம் பரவி யும்பணிந் தேத்தவல் லாரவர் பயன்றலைப் படுவாரே.
|
2
|
குணங்கள் கூறியுங் குற்றங்கள் பரவியுங் குரைகழ லடிசேரக் கணங்கள் பாடவுங் கண்டவர் பரவவுங் கருத்தறிந் தவர்மேய மணங்கொள் பூம்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம் வணங்கு முள்ளமோ டணையவல் லார்களை வல்வினை யடையாவே.
|
3
|
எங்கு மேதுமோர் பிணியிலர் கேடிலர் இழைவளர் நறுங்கொன்றை தங்கு தொங்கலுந் தாமமுங் கண்ணியுந் தாமகிழ்ந் தவர்மேய மங்குல் தோய்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம் கங்கு லும்பக லுந்தொழு மடியவர் காதன்மை யுடையாரே.
|
4
|
நெதிய மென்னுள போகமற் றென்னுள நிலமிசை நலமாய கதிய மென்னுள வானவ ரென்னுளர் கருதிய பொருள்கூடில் மதியந் தோய்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம் புதிய பூவொடு சாந்தமும் புகையுங்கொண் டேத்துதல் புரிந்தோர்க்கே.
|
5
|
Go to top |
கண்ணு லாவிய கதிரொளி முடிமிசைக் கனல்விடு சுடர்நாகம் தெண்ணி லாவொடு திலதமு நகுதலை திகழவைத் தவர்மேய மண்ணு லாம்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம் உண்ணி லாநினைப் புடையவ ரியாவரிவ் வுலகினி லுயர்வாரே.
|
6
|
தூசு தானரைத் தோலுடைக் கண்ணியஞ் சுடர்விடு நறுங்கொன்றை பூசு வெண்பொடிப் பூசுவ தன்றியும் புகழ்புரிந் தவர்மேய மாசு லாம்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம் பேசு நீர்மையரி யாவரிவ் வுலகினிற் பெருமையைப் பெறுவாரே.
|
7
|
பவ்வ மார்கட லிலங்கையர் கோன்றனைப் பருவரைக் கீழூன்றி எவ்வந் தீரவன் றிமையவர்க் கருள்செய்த விறையவ னுறைகோயில் மவ்வந் தோய்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம் கவ்வை யாற்றொழு மடியவர் மேல்வினை கனலிடைச் செதிளன்றே.
|
8
|
உய்யுங் காரண முண்டென்று கருதுமி னொளிகிளர் மலரோனும் பைகொள் பாம்பணைப் பள்ளிகொ ளண்ணலும் பரவநின் றவர்மேய மையுலாம்பொழி லரிசின் வடகரை வருபுனன் மாகாளம் கையி னாற்றொழு தவலமும் பிணியுந்தங் கவலையுங் களைவாரே.
|
9
|
பிண்டி பாலரு மண்டைகொ டேரரும் பீலிகொண் டுழல்வாரும் கண்ட நூலருங் கடுந்தொழி லாளாருங் கழறநின் றவர்மேய வண்டு லாம்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம் பண்டு நாஞ்செய்த பாவங்கள் பற்றறப் பரவுதல் செய்வோமே.
|
10
|
Go to top |
மாறு தன்னொடு மண்மிசை யில்லது வருபுனன் மாகாளத் தீறு மாதியு மாகிய சோதியை யேறமர் பெருமானை நாறு பூம்பொழிற் காழியுண் ஞானசம் பந்தன தமிழ்மாலை கூறு வாரையுங் கேட்கவல் லாரையுங் குற்றங்கள் குறுகாவே.
|
11
|