![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
https://sivaya.org/audio/2.106 Enna Punniyam.mp3 https://www.youtube.com/watch?v=cMWzX_dVUv0 Add audio link
2.106
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருவலஞ்சுழி - நட்டராகம் நடபைரவி பந்துவாராளி கனகவசந்தம் ராகத்தில் திருமுறை அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு சித்தீசநாதர் திருவடிகள் போற்றி
என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே யிருங்கடல் வையத்து
முன்ன நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னி யாதரித் தேத்தியும் பாடியும் வழிபடு மதனாலே.
1
விண்டொ ழிந்தன நம்முடை வல்வினை விரிகடல் வருநஞ்சம்
உண்டி றைஞ்சுவா னவர்தமைத் தாங்கிய விறைவனை யுலகத்தில்
வண்டு வாழ்குழன் மங்கையொர் பங்கனை வலஞ்சுழி யிடமாகக்
கொண்ட நாதன்மெய்த் தொழில்புரி தொண்டரோ டினிதிருந் தமையாலே.
2
திருந்த லார்புரந் தீயெழச் செறுவன விறலின்கண் அடியாரைப்
பரிந்து காப்பன பத்தியில் வருவன மத்தமாம் பிணிநோய்க்கு
மருந்து மாவன மந்திர மாவன வலஞ்சுழி யிடமாக
இருந்த நாயக னிமையவ ரேத்திய விணையடித் தலந்தானே.
3
கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர் அறத்திற முனிவர்க்கன்
றிறைவ ராலிடை நீழலி லிருந்துகந் தினிதருள் பெருமானார்
மறைக ளோதுவர் வருபுனல் வலஞ்சுழி யிடமகிழ்ந் தருங்கானத்
தறைக ழல்சிலம் பார்க்கநின் றாடிய வற்புத மறியோமே.
4
மண்ணர் நீரர்விண் காற்றின ராற்றலா மெரியுரு வொருபாகம்
பெண்ண ராணெனத் தெரிவரும் வடிவினர் பெருங்கடற் பவளம்போல்
வண்ண ராகிலும் வலஞ்சுழி பிரிகிலார் பரிபவர் மனம்புக்க
எண்ண ராகிலு மெனைப்பல வியம்புவ ரிணையடி தொழுவாரே.
5
Go to top
ஒருவ ராலுவ மிப்பதை யரியதோர் மேனியர் மடமாதர்
இருவ ராதரிப் பார்பல பூதமும் பேய்களு மடையாளம்
அருவ ராததோர் வெண்டலை கைப்பிடித் தகந்தொறும் பலிக்கென்று
வருவ ரேலவர் வலஞ்சுழி யடிகளே வரிவளை கவர்ந்தாரே.
6
குன்றி யூர்குட மூக்கிடம் வலம்புரங் குலவிய நெய்த்தானம்
என்றிவ் வூர்களி லோமென்று மியம்புவ ரிமையவர் பணிகேட்பார்
அன்றி யூர்தமக் குள்ளன வறிகிலோம் வலஞ்சுழி யரனார்பால்
சென்ற வூர்தனிற் றலைப்பட லாமென்று சேயிழை தளர்வாமே.
7
குயிலி னேர்மொழிக் கொடியிடை வெருவுறக் குலவரைப் பரப்பாய
கயிலை யைப்பிடித் தெடுத்தவன் கதிர்முடி தோளிரு பதுமூன்றி
மயிலி னேரன சாயலோ டமர்ந்தவன் வலஞ்சுழி யெம்மானைப்
பயில வல்லவர் பரகதி காண்பவர் அல்லவர் காணாரே.
8
அழல தோம்பிய வலர்மிசை யண்ணலு மரவணைத் துயின்றானும்
கழலுஞ் சென்னியுங் காண்பரி தாயவர் மாண்பமர் தடக்கையில்
மழலை வீணையர் மகிழ்திரு வலஞ்சுழி வலங்கொடு பாதத்தால்
சுழலு மாந்தர்கள் தொல்வினை யதனொடு துன்பங்கள் களைவாரே.
9
அறிவி லாதவன் சமணர்கள் சாக்கியர் தவம்புரிந் தவஞ்செய்வார்
நெறிய லாதன கூறுவர் மற்றவை தேறன்மின் மாறாநீர்
மறியு லாந்திரைக் காவிரி வலஞ்சுழி மருவிய பெருமானைப்
பிறிவி லாதவர் பெறுகதி பேசிடி லளவறுப் பொண்ணாதே.
10
Go to top
மாதொர் கூறனை வலஞ்சுழி மருவிய மருந்தினை வயற்காழி
நாதன் வேதியன் ஞானசம் பந்தன்வாய் நவிற்றிய தமிழ்மாலை
ஆத ரித்திசை கற்றுவல் லார்சொலக் கேட்டுகந் தவர்தம்மை
வாதி யாவினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம்வந் தடையாவே.
11
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருவலஞ்சுழி
2.002
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விண்டு எலாம் மலர விரை
Tune - இந்தளம்
(திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)
2.106
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே!
Tune - நட்டராகம்
(திருவலஞ்சுழி சித்தீசநாதர் பெரியநாயகியம்மை)
3.106
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பள்ளம் அது ஆய படர்
Tune - பழம்பஞ்சுரம்
(திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)
5.066
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓதம் ஆர் கடலின் விடம்
Tune - திருக்குறுந்தொகை
(திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)
6.072
திருநாவுக்கரசர்
தேவாரம்
அலை ஆர் புனல் கங்கை
Tune - திருத்தாண்டகம்
(திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)
11.011
நக்கீரதேவ நாயனார்
திருவலஞ்சுழி மும்மணிக்கோவை
திருவலஞ்சுழி மும்மணிக்கோவை
Tune -
(திருவலஞ்சுழி )
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000