முன்னைநான் மறையவை முறைமுறை குறையொடும் தன்னதாள் தொழுதெழ நின்றவன் றன்னிடம் மன்னுமா காவிரி வந்தடி வருடநல் செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே.
|
1
|
மகரமா டுங்கொடி மன்மத வேடனை நிகரலா காநெருப் பெழவிழித் தானிடம் பகரவா ணித்திலம் பன்மக ரத்தொடும் சிகரமா ளிகைதொகுந் தென்குடித் திட்டையே.
|
2
|
கருவினா லன்றியே கருவெலா மாயவன் உருவினா லன்றியே யுருவுசெய் தானிடம் பருவநாள் விழவொடும் பாடலோ டாடலும் திருவினான் மிகுபுகழ்த் தென்குடித் திட்டையே.
|
3
|
உண்ணிலா வாவியா யோங்குதன் றன்மையை விண்ணிலா ரறிகிலா வேதவே தாந்தனூர் எண்ணிலா ரெழின்மணிக் கனகமா ளிகையிளந் தெண்ணிலா விரிதருந் தென்குடித் திட்டையே.
|
4
|
வருந்திவா னோர்கள்வந் தடையமா நஞ்சுதான் அருந்தியா ரமுதவர்க் கருள்செய்தா னமருமூர் செருந்திபூ மாதவிப் பந்தர்வண் செண்பகம் திருந்துநீள் வளர்பொழில் தென்குடித் திட்டையே.
|
5
|
Go to top |
ஊறினா ரோசையுள் ஒன்றினா ரொன்றிமால் கூறினா ரமர்தருங் குமரவேள் தாதையூர் ஆறினார் பொய்யகத் தையுணர் வெய்திமெய் தேறினார் வழிபடுந் தென்குடித் திட்டையே.
|
6
|
கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள் வானலைக் குந்தவத் தேவுவைத் தானிடம் தானலைத் தெள்ளமூர் தாமரைத் தண்டுறை தேனலைக் கும்வயல் தென்குடித் திட்டையே.
|
7
|
மாலொடும் பொருதிறல் வாளரக் கன்னெரிந் தோலிடும் படிவிர லொன்றுவைத் தானிடம் காலொடுங் கனகமூக் குடன்வரக் கயல்வரால் சேலொடும் பாய்வயல் தென்குடித்திட்டையே.
|
8
|
நாரணன் றன்னொடு நான்முகன் றானுமாய்க் காரணன் னடிமுடி காணவொண் ணானிடம் ஆரணங் கொண்டுபூ சுரர்கள்வந் தடிதொழச் சீரணங் கும்புகழ்த் தென்குடித் திட்டையே.
|
9
|
குண்டிகைக் கையுடைக் குண்டரும் புத்தரும் பண்டுரைத் தேயிடும் பற்றுவிட் டீர்தொழும் வண்டிரைக் கும்பொழிற் றண்டலைக் கொண்டலார் தெண்டிரைத் தண்புனல் தென்குடித் திட்டையே.
|
10
|
Go to top |
தேனலார் சோலைசூழ் தென்குடித் திட்டையைக் கானலார் கடிபொழில் சூழ்தருங் காழியுள் ஞானமார் ஞானசம் பந்தன செந்தமிழ் பானலார் மொழிவலார்க் கில்லையாம் பாவமே.
|
11
|