கொம்பிரிய வண்டுலவு கொன்றைபுரி நூலொடுகு லாவித் தம்பரிசி னோடுசுடு நீறுதட வந்திடப மேறிக் கம்பரிய செம்பொனெடு மாடமதில் கல்வரைவி லாக அம்பெரிய வெய்தபெரு மானுறைவ தவளிவண லூரே.
|
1
|
ஓமையன கள்ளியன வாகையன கூகைமுர லோசை ஈமமெரி சூழ்சுடலை வாசமுது காடுநட மாடித் தூய்மையுடை யக்கொடர வம்விரவி மிக்கொளிது லங்க ஆமையொடு பூணுமடி கள்ளுறைவ தவளிவண லூரே.
|
2
|
நீறுடைய மார்பிலிம வான்மகளொர் பாகநிலை செய்து கூறுடைய வேடமொடு கூடியழ காயதொரு கோலம் ஏறுடைய ரேனுமிடு காடிரவி னின்றுநட மாடும் ஆறுடைய வார்சடையி னானுறைவ தவளிவண லூரே.
|
3
|
பிணியுமிலர் கேடுமிலர் தோற்றமில ரென்றுலகு பேணிப் பணியுமடி யார்களன பாவமற வின்னருள்ப யந்து துணியுடைய தோலுமுடை கோவணமு நாகமுட றொங்க அணியுமழ காகவுடை யானுறைவ தவளிவண லூரே.
|
4
|
குழலின்வரி வண்டுமுரன் மெல்லியன பொன்மலர்கள் கொண்டு கழலின்மிசை யிண்டைபுனை வார்கடவு ளென்றமரர் கூடித் தொழலும்வழி பாடுமுடை யார்துயரு நோயுமிலராவர் அழலுமழு வேந்துகையி னானுறைவ தவளிவண லூரே.
|
5
|
Go to top |
துஞ்சலில ராயமரர் நின்றுதொழு தேத்தவருள் செய்து நஞ்சுமிட றுண்டுகரி தாயவெளி தாகியொரு நம்பன் மஞ்சுறநி மிர்ந்துமைந டுங்கவக லத்தொடுவ ளாவி அஞ்சமத வேழவுரி யானுறைவ தவளிவண லூரே.
|
6
|
கூடரவ மொந்தைகுழல் யாழ்முழவி னோடுமிசை செய்யப் பீடரவ மாகுபட ரம்புசெய்து பேரிடப மோடும் காடரவ மாகுகனல் கொண்டிரவில் நின்றுநட மாடி ஆடரவ மார்த்தபெரு மானுறைவ தவளிவண லூரே.
|
7
|
ஒருவரையு மேல்வலிகொ டேனெனவெ ழுந்தவிற லோனிப் பெருவரையின் மேலொர்பெரு மானுமுளனோ வெனவெ குண்ட கருவரையு மாழ்கடலு மன்னதிறல் கைகளுடை யோனை அருவரையி லூன்றியடர்த் தானுறைவ தவளிவண லூரே.
|
8
|
பொறிவரிய நாகமுயர் பொங்கணைய ணைந்தபுக ழோனும் வெறிவரிய வண்டறைய விண்டமலர் மேல்விழுமி யோனும் செறிவரிய தோற்றமொடு வாற்றன்மிக நின்றுசிறி தேயும் அறிவரிய னாயபெரு மானுறைவ தவளிவண லூரே.
|
9
|
கழியருகு பள்ளியிட மாகவடு மீன்கள்கவர் வாரும் வழியருகு சாரவெயி னின்றடிசி லுள்கிவரு வாரும் பழியருகி னாரொழிக பான்மையொடு நின்றுதொழு தேத்தும் அழியருவி தோய்ந்தபெரு மானுறைவ தவளிவண லூரே.
|
10
|
Go to top |
ஆனமொழி யானதிற லோர்பரவு மவளிவண லூர்மேல் போனமொழி நன்மொழி களாயபுகழ் தோணிபுர வூரன் ஞானமொழி மாலைபல நாடுபுகழ் ஞானசம் பந்தன் தேனமொழி மாலைபுகழ் வார்துயர்க டீயதிலர் தாமே.
|
11
|