![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
https://www.youtube.com/watch?v=eLvO4-nL_ZU https://www.youtube.com/watch?v=eLvO4-nL_ZU Add audio link
4.002
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருவதிகை வீரட்டானம் - காந்தாரம் லதாங்கி நவரோசு கனநப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி
பிறகு சமணர்கள் ஒன்றுகூடி மன்னனிடம் சென்று நம் சமயச் சார்பில் பெற்ற சாதகத்தால் இவன் சாவாது பிழைத்திருக்கின்றான், இனி விடம் ஊட்டுவதே தரத்தக்க தண்டனை என்று கூறினர். அரசனும் இசைந்தனன். கொலை பாதகத்திற்கும் அஞ்சாத அக்கொடி யோர் விடங்கலந்த பாற்சோற்றைத் திருநாவுக்கரசர்க்கு அளித்து உண்ணும்படிச் செய்தனர். எம்பிரான் அடியார்க்கு நஞ்சும் அமுதாம் என்றுகூறி அதை உண்டு எவ்விதத் தீங்கும் அடையாமல் விளங்கினார் அடிகள். திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகாலவிடம் சிவபெரு மானுக்கு அமுதமாக ஆயிற்று. அவனடியார்க்கு நஞ்சு அமுதாயிற்று. நஞ்சும் இவனுக்கு அமுதாயிற்று. இவன் பிழைப்பானாகில் இனி, நமக்கு இறுதி வருவது உறுதி என்றெண்ணி முன்போல் அரசன் பாற் சென்று நம் சமயத்திற் கற்ற மந்திர வலிமையால் உயிர் பிழைத் தான், அவன் இறவாதிருந்தால் எங்கள் உயிரும் நும் அரசாட்சியும் அழிவது திண்ணம், என்று கூறினர். மத யானையை விடுத்து இடறச் செய்வதே தண்டனை என்று தீர்மானிக்கப்பெற்றது. குன்றுபோல் விளங்கிய மதயானை கூடத்தை விட்டுப் புறப்பட்டது. பயங்கரமான அந்த யானை திருநாவுக்கரசரை இன்று காலால் இடறிச் சிதறிவிடும் என்றே எல்லோரும் எண்ணினர். திருநாவுக்கரசர் சுண்ணவெண் சந்தனச்சாந்தும் என்று தொடங்கித் திருப்பதிகம்பாடி யானையுரித்த பிரான் கழல்போற்றியிருந்தார். மதயானை மும்முறை வலம்வந்து வீழ்ந்து வணங்கித் தன்னை ஏவிய பாகரையும் சமணரையும் மிதித்துக் கொன்று சென்றது.
அபாயகரமான விஷங்கள், விஷ உணவு இவற்றின் இருந்து தப்பிக்க
சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும்
வண்ண உரிவை யுடையும் வளரும் பவள நிறமும்
அண்ண லரண்முர ணேறும் அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.
1
பூண்டதொர் கேழ லெயிறும் பொன்றிக ழாமை புரள
நீண்டதிண் டோள்வலஞ் சூழ்ந்து நிலாக்கதிர் போல வெண்ணூலும்
காண்டகு புள்ளின் சிறகுங் கலந்த கட்டங்கக் கொடியும்
ஈண்டு கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.
2
ஒத்த வடத்திள நாக முருத்திர பட்ட மிரண்டும்
முத்து வடக்கண் டிகையு முளைத்தெழு மூவிலை வேலும்
சித்த வடமு மதிகைச் சேணுயர் வீரட்டஞ் சூழ்ந்து
தத்துங் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.
3
மடமான் மறிபொற் கலையு மழுப்பாம் பொருகையில் வீணை
குடமால் வரையதிண் டோளுங் குனிசிலைக் கூத்தின் பயில்வும்
இடமால் தழுவிய பாக மிருநில னேற்ற சுவடும்
தடமார் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.
4
பலபல காமத்த ராகிப் பதைத்தெழு வார்மனத் துள்ளே
கலமலக் கிட்டுத் திரியுங் கணபதி யென்னுங் களிறும்
வலமேந் திரண்டு சுடரும் வான்கயி லாய மலையும்
நலமார் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.
5
Go to top
கரந்தன கொள்ளி விளக்குங் கறங்கு துடியின் முழக்கும்
பரந்த பதினெண் கணமும் பயின்றறி யாதன பாட்டும்
அரங்கிடை நூலறி வாள ரறியப் படாததொர் கூத்தும்
நிரந்த கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.
6
கொலைவரி வேங்கை யதளுங் குவவோ டிலங்குபொற் றோடும்
விலைபெறு சங்கக் குழையும் விலையில் கபாலக் கலனும்
மலைமகள் கைக்கொண்ட மார்பும் மணியார்ந் திலங்கு மிடறும்
உலவு கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.
7
ஆடல் புரிந்த நிலையும் அரையி லசைத்த அரவும்
பாடல் பயின்றபல் பூதம் பல்லா யிரங்கொள் கருவி
நாடற் கரியதொர் கூத்தும் நன்குயர் வீரட்டஞ் சூழ்ந்து
ஓடுங் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.
8
சூழு மரவத் துகிலுந் துகில்கிழி கோவணக் கீளும்
யாழின் மொழியவ ளஞ்ச அஞ்சா தருவரை போன்ற
வேழ முரித்த நிலையும் விரிபொழில் வீரட்டஞ் சூழ்ந்து
தாழுங் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.
9
நரம்பெழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை
உரங்களெல் லாங்கொண் டெடுத்தா னொன்பது மொன்று மலற
வரங்கள் கொடுத்தருள் செய்வான் வளர்பொழில் வீரட்டஞ் சூழ்ந்து
நிரம்பு கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.
10
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருவதிகை வீரட்டானம்
1.046
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குண்டைக் குறள் பூதம் குழும,
Tune - தக்கராகம்
(திருவதிகை வீரட்டானம் அதிகைநாதர் (எ) வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.001
திருநாவுக்கரசர்
தேவாரம்
கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்-
கொடுமைபல
Tune - கொல்லி
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.002
திருநாவுக்கரசர்
தேவாரம்
சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த்
Tune - காந்தாரம்
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.010
திருநாவுக்கரசர்
தேவாரம்
முளைக்கதிர் இளம் பிறை மூழ்க,
Tune - காந்தாரம்
(திருவதிகை வீரட்டானம் )
4.024
திருநாவுக்கரசர்
தேவாரம்
இரும்பு கொப்பளித்த யானை ஈர்
Tune - கொப்பளித்ததிருநேரிசை
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.025
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெண் நிலா மதியம் தன்னை
Tune - திருநேரிசை
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.026
திருநாவுக்கரசர்
தேவாரம்
நம்பனே! எங்கள் கோவே! நாதனே!
Tune - திருநேரிசை
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
மடக்கினார்; புலியின்தோலை; மா மணி
Tune - திருநேரிசை
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
முன்பு எலாம் இளைய காலம்
Tune - திருநேரிசை
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.104
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாசு இல் ஒள்வாள் போல்
Tune - திருவிருத்தம்
(திருவதிகை வீரட்டானம் காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
5.053
திருநாவுக்கரசர்
தேவாரம்
கோணல் மா மதி சூடி,
Tune - திருக்குறுந்தொகை
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
5.054
திருநாவுக்கரசர்
தேவாரம்
எட்டு நாள்மலர் கொண்டு, அவன்
Tune - திருக்குறுந்தொகை
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
6.003
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெறி விரவு கூவிளநல்-தொங்கலானை, வீரட்டத்தானை,
Tune - ஏழைத்திருத்தாண்டகம்
(திருவதிகை வீரட்டானம் )
6.004
திருநாவுக்கரசர்
தேவாரம்
சந்திரனை மா கங்கைத் திரையால்
Tune - அடையாளத்திருத்தாண்டகம்
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
6.005
திருநாவுக்கரசர்
தேவாரம்
எல்லாம் சிவன் என்ன நின்றாய்,
Tune - போற்றித்திருத்தாண்டகம்
(திருவதிகை வீரட்டானம் )
6.006
திருநாவுக்கரசர்
தேவாரம்
அரவு அணையான் சிந்தித்து அரற்றும்(ம்)
Tune - குறிஞ்சி
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
6.007
திருநாவுக்கரசர்
தேவாரம்
செல்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
Tune - காப்புத்திருத்தாண்டகம்
(திருவதிகை வீரட்டானம் )
7.038
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
தம்மானை அறியாத சாதியார் உளரே?
Tune - கொல்லிக்கௌவாணம்
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000