சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.042   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருத்துருத்தி - திருநேரிசை:கொல்லி அருள்தரு முகிழாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு வேதேசுவரர் திருவடிகள் போற்றி
https://www.youtube.com/watch?v=k69FBvKLoqk   Add audio link Add Audio
பொருத்திய குரம்பை தன்னைப் பொருளெனக் கருத வேண்டா
இருத்தியெப் பொழுதும் நெஞ்சு ளிறைவனை யேத்து மின்கள்
ஒருத்தியைப் பாகம் வைத்தங் கொருத்தியைச் சடையுள் வைத்த
துருத்தியஞ் சுடரி னானைத் தொண்டனேன் கண்ட வாறே.


1


சவைதனைச் செய்து வாழ்வான் சலத்துளே யழுந்து கின்ற
இவையொரு பொருளு மல்ல விறைவனை யேத்து மின்னோ
அவைபுர மூன்று மெய்து மடியவர்க் கருளிச் செய்த
சுவையினைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.


2


உன்னியெப் போதும் நெஞ்சு ளொருவனை யேத்து மின்னோ
கன்னியை யொருபால் வைத்துக் கங்கையைச் சடையுள் வைத்துப்
பொன்னியி னடுவு தன்னுட் பூம்புனல் பொலிந்து தோன்றும்
துன்னிய துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.


3


ஊன்றலை வலிய னாகி யுலகத்து ளுயிர்கட் கெல்லாம்
தான்றலைப் பட்டு நின்று சார்கன லகத்து வீழ
வான்றலைத் தேவர் கூடி வானவர்க் கிறைவா வென்னும்
தோன்றலைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.


4


உடறனைத் கழிக்க லுற்ற வுலகத்து ளுயிர்கட் கெல்லாம்
இடர்தனைக் கழிய வேண்டி லிறைவனை யேத்து மின்னோ
கடறனி னஞ்ச முண்டு காண்பரி தாகி நின்ற
சுடர்தனைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.


5


Go to top
அள்ளலைக் கடக்க வேண்டி லரனையே நினைமி னீர்கள்
பொள்ளலிக் காயந் தன்னுட் புண்டரீ கத்தி ருந்த
வள்ளலை வான வர்க்குங் காண்பரி தாகி நின்ற
துள்ளலைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.


6


பாதியி லுமையா டன்னைப் பாகமா வைத்த பண்பன்
வேதிய னென்று சொல்லி விண்ணவர் விரும்பி யேத்தச்
சாதியாஞ் சதுர்மு கனுஞ் சக்கரத் தானுங் காணாச்
சோதியைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.


7


சாமனை வாழ்க்கை யான சலத்துளே யழுந்த வேண்டா
தூமநல் லகிலுங் காட்டித் தொழுதடி வணங்கு மின்னோ
சோமனைச் சடையுள் வைத்துத் தொன்னெறி பலவுங் காட்டும்
தூமனத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.


8


குண்டரே சமணர் புத்தர் குறியறி யாது நின்று
கண்டதே கருது வார்கள் கருத்தெண்ணா தொழிமி னீர்கள்
விண்டவர் புரங்க ளெய்து விண்ணவர்க் கருள்கள் செய்த
தொண்டர்க டுணையி னானைத் துருத்திநான் கண்ட வாறே.


9


பிண்டத்தைக் கழிக்க வேண்டிற் பிரானையே பிதற்று மின்கள்
அண்டத்தைக் கழிய நீண்ட வடலரக் கன்ற னாண்மை
கண்டொத்துக் கால்வி ரலா லூன்றிமீண் டருளிச் செய்த
துண்டத்துத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.


10


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருத்துருத்தி
2.098   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வரைத்தலைப் பசும் பொனோடு அருங்
Tune - நட்டராகம்   (திருத்துருத்தி வேதேசுவரர் முகிழாம்பிகையம்மை)
4.042   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொருத்திய குரம்பை தன்னைப் பொருள்
Tune - திருநேரிசை:கொல்லி   (திருத்துருத்தி வேதேசுவரர் முகிழாம்பிகையம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 4.042