சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.076   திருநாவுக்கரசர்   தேவாரம்

பொது -தனித் திருநேரிசை - திருநேரிசை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
https://www.youtube.com/watch?v=bz7ls6HtjmQ  https://www.youtube.com/watch?v=tFKw3jGkwP8   Add audio link Add Audio
மருளவா மனத்த னாகி மயங்கினேன் மதியி லாதேன்
இருளவா வறுக்கு மெந்தை யிணையடி நீழலெ ன்னும்
அருளவாப் பெறுத லின்றி யஞ்சிநா னலமந் தேற்குப்
பொருளவாத் தந்த வாறே போதுபோய்ப் புலர்ந்த தன்றே.


1


மெய்ம்மையா முழவைச் செய்து விருப்பெனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாங் களையை வாங்கிப் பொறையெனு நீரைப் பாய்ச்சித்
தம்மையு நோக்கிக் கண்டு தகவெனும் வேலி யிட்டுச்
செம்மையு ணிற்ப ராகிற் சிவகதி விளையு மன்றே. 


2


எம்பிரா னென்ற தேகொண் டென்னுளே புகுந்து நின்றிங்
கெம்பிரா னாட்ட வாடி யென்னுளே யுழிதர் வேனை
எம்பிரா னென்னைப் பின்னைத் தன்னுளே கரக்கு மென்றால்
எம்பிரா னென்னி னல்லா லென்செய்கே னேழை யேனே. 


3


காயமே கோயி லாகக் கடிமன மடிமை யாக
வாய்மையே தூய்மை யாக மனமணி யிலிங்க மாக
நேயமே நெய்யும் பாலா நிறையநீ ரமைய வாட்டிப்
பூசனை யீச னார்க்குப் போற்றவிக் காட்டி னோமே. 


4


வஞ்சகப் புலைய னேனை வழியறத் தொண்டிற் பூட்டி
அஞ்சலென் றாண்டு கொண்டா யதுவுநின் பெருமை யன்றே
நெஞ்சகங் கனிய மாட்டே னின்னையுள் வைக்க மாட்டேன்
நஞ்சிடங் கொண்ட கண்டா வென்னென நன்மை தானே.


5


Go to top
நாயினுங் கடைப்பட் டேனை நன்னெறி காட்டி யாண்டாய்
ஆயிர மரவ மார்த்த வமுதனே யமுத மொத்து
நீயுமென் நெஞ்சி னுள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க
நோயவை சாரு மாகி னோக்கிநீ யருள்செய் வாயே. 


6


விள்ளத்தா னொன்று மாட்டேன் விருப்பெனும் வேட்கை யாலே
வள்ளத்தேன் போல நுன்னை வாய்மடுத் துண்டி டாமே
உள்ளத்தே நிற்றி யேனு முயிர்ப்புளே வருதி யேனும்
கள்ளத்தே நிற்றி யம்மா வெங்ஙனங் காணு மாறே.


7


ஆசைவன் பாச மெய்தி யங்குற்றே னிங்குற் றேனாய்
ஊசலாட் டுண்டு வாளா வுழந்துநா னுழி தராமே
தேசனே தேச மூர்த்தீ திருமறைக் காடு மேய
ஈசனே யுன்றன் பாத மேத்துமா றருளெம் மானே. 


8


நிறைவிலே னேச மில்லே னினைவிலேன் வினையின் பாச
மறைவிலே புறப்பட் டேறும் வகையெனக் கருளெ னெம்மான்
சிறையிலேன் செய்வ தென்னே திருவடி பரவி யேத்தக்
குறைவிலேன் குற்றந் தீராய் கொன்றைசேர் சடையி னானே. 


9


நடுவிலாக் காலன் வந்து நணுகும்போ தறிய வொண்ணா
அடுவன வஞ்சு பூத மவைதமக் காற்ற லாகேன்
படுவன பலவுங் குற்றம் பாங்கிலா மனிதர் வாழ்க்கை
கெடுவதிப் பிறவி சீசீ கிளரொளிச் சடையி னீரே. 


10


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: பொது -தனித் திருநேரிசை
4.075   திருநாவுக்கரசர்   தேவாரம்   தொண்டனேன் பட்டது என்னே! தூய
Tune - கொல்லி   (பொது -தனித் திருநேரிசை )
4.076   திருநாவுக்கரசர்   தேவாரம்   மருள் அவா மனத்தன் ஆகி
Tune - திருநேரிசை   (பொது -தனித் திருநேரிசை )
4.077   திருநாவுக்கரசர்   தேவாரம்   கடும்பகல் நட்டம் ஆடி, கையில்
Tune - திருநேரிசை   (பொது -தனித் திருநேரிசை )

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 4.076