மருளவா மனத்த னாகி மயங்கினேன் மதியி லாதேன் இருளவா வறுக்கு மெந்தை யிணையடி நீழலெ ன்னும் அருளவாப் பெறுத லின்றி யஞ்சிநா னலமந் தேற்குப் பொருளவாத் தந்த வாறே போதுபோய்ப் புலர்ந்த தன்றே.
|
1
|
மெய்ம்மையா முழவைச் செய்து விருப்பெனும் வித்தை வித்திப் பொய்ம்மையாங் களையை வாங்கிப் பொறையெனு நீரைப் பாய்ச்சித் தம்மையு நோக்கிக் கண்டு தகவெனும் வேலி யிட்டுச் செம்மையு ணிற்ப ராகிற் சிவகதி விளையு மன்றே.
|
2
|
எம்பிரா னென்ற தேகொண் டென்னுளே புகுந்து நின்றிங் கெம்பிரா னாட்ட வாடி யென்னுளே யுழிதர் வேனை எம்பிரா னென்னைப் பின்னைத் தன்னுளே கரக்கு மென்றால் எம்பிரா னென்னி னல்லா லென்செய்கே னேழை யேனே.
|
3
|
காயமே கோயி லாகக் கடிமன மடிமை யாக வாய்மையே தூய்மை யாக மனமணி யிலிங்க மாக நேயமே நெய்யும் பாலா நிறையநீ ரமைய வாட்டிப் பூசனை யீச னார்க்குப் போற்றவிக் காட்டி னோமே.
|
4
|
வஞ்சகப் புலைய னேனை வழியறத் தொண்டிற் பூட்டி அஞ்சலென் றாண்டு கொண்டா யதுவுநின் பெருமை யன்றே நெஞ்சகங் கனிய மாட்டே னின்னையுள் வைக்க மாட்டேன் நஞ்சிடங் கொண்ட கண்டா வென்னென நன்மை தானே.
|
5
|
Go to top |
நாயினுங் கடைப்பட் டேனை நன்னெறி காட்டி யாண்டாய் ஆயிர மரவ மார்த்த வமுதனே யமுத மொத்து நீயுமென் நெஞ்சி னுள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க நோயவை சாரு மாகி னோக்கிநீ யருள்செய் வாயே.
|
6
|
விள்ளத்தா னொன்று மாட்டேன் விருப்பெனும் வேட்கை யாலே வள்ளத்தேன் போல நுன்னை வாய்மடுத் துண்டி டாமே உள்ளத்தே நிற்றி யேனு முயிர்ப்புளே வருதி யேனும் கள்ளத்தே நிற்றி யம்மா வெங்ஙனங் காணு மாறே.
|
7
|
ஆசைவன் பாச மெய்தி யங்குற்றே னிங்குற் றேனாய் ஊசலாட் டுண்டு வாளா வுழந்துநா னுழி தராமே தேசனே தேச மூர்த்தீ திருமறைக் காடு மேய ஈசனே யுன்றன் பாத மேத்துமா றருளெம் மானே.
|
8
|
நிறைவிலே னேச மில்லே னினைவிலேன் வினையின் பாச மறைவிலே புறப்பட் டேறும் வகையெனக் கருளெ னெம்மான் சிறையிலேன் செய்வ தென்னே திருவடி பரவி யேத்தக் குறைவிலேன் குற்றந் தீராய் கொன்றைசேர் சடையி னானே.
|
9
|
நடுவிலாக் காலன் வந்து நணுகும்போ தறிய வொண்ணா அடுவன வஞ்சு பூத மவைதமக் காற்ற லாகேன் படுவன பலவுங் குற்றம் பாங்கிலா மனிதர் வாழ்க்கை கெடுவதிப் பிறவி சீசீ கிளரொளிச் சடையி னீரே.
|
10
|
Go to top |