மாலினை மாலுற நின்றான் மலைமக டன்னுடைய பாலனைப் பான்மதி சூடியைப் பண்புண ரார்மதின்மேல் போலனைப் போர்விடை யேறியைப் பூந்துருத் திம்மகிழும் ஆலனை யாதிபு ராணனை நாமடி போற்றுவதே.
|
1
|
மறியுடை யான்மழு வாளினன் மாமலை மங்கையொர்பால் குறியுடை யான்குண மொன்றறிந் தாரில்லை கூறிலவன் பொறியுடை வாளர வத்தவன் பூந்துருத் திய்யுறையும் அறிவுடை யாதிபு ராணனை நாமடி போற்றுவதே.
|
2
|
மறுத்தவர் மும்மதின் மாயவொர் வெஞ்சிலை கோத்தொரம்பால் அறுத்தனை யாலதன் கீழனை யால்விட முண்டதனைப் பொறுத்தனைப் பூதப் படையனைப் பூந்துருத் திய்யுறையும் நிறத்தனை நீல மிடற்றனை யானடி போற்றுவதே.
|
3
|
உருவினை யூழி முதல்வனை யோதி நிறைந்து நின்ற திருவினைத் தேசம் படைத்தனைச் சென்றடைந் தேனுடைய பொருவினை யெல்லாந் துரந்தனைப் பூந்துருத் திய்யுறையும் கருவினைக் கண்மூன் றுடையனை யானடி போற்றுவதே.
|
4
|
தக்கன்றன் வேள்வி தகர்த்தவன் சார மதுவன்றுகோள் மிக்கன மும்மதில் வீயவொர் வெஞ்சிலை கோத்தொரம்பால் புக்கனன் பொன்றிகழ்ந் தன்னதோர் பூந்துருத் திய்யுறையும் நக்கனை நங்கள்பி ரான்றனை நானடி போற்றுவதே.
|
5
|
Go to top |
அருகடை மாலையுந் தானுடை யானழ காலமைந்த உருவுடை மங்கையுந் தன்னொரு பாலுல காயுநின்றான் பொருபடை வேலினன் வில்லினன் பூந்துருத் திய்யுறையும் திருவுடைத் தேச மதியனை யானடி போற்றுவதே.
|
6
|
மன்றியுந் நின்ற மதிலரை மாய வகைகெடுக்கக் கன்றியுந் நின்று கடுஞ்சிலை வாங்கிக் கனலம்பினால் பொன்றியும் போகப் புரட்டினன் பூந்துருத் திய்யுறையும் அன்றியும் செய்தபி ரான்றனை யானடி போற்றுவதே.
|
7
|
மின்னிறம் மிக்க விடையுமை நங்கையொர் பான்மகிழ்ந்தான் என்னிற மென்றம ரர்பெரியா ரின்னந் தாமறியார் பொன்னிற மிக்க சடையவன் பூந்துருத் திய்யுறையும் என்னிற வெந்தைபி ரான்றனை யானடி போற்றுவதே.
|
8
|
அந்தியை நல்ல மதியினை யார்க்கு மறிவரிய செந்தியை வாட்டுஞ்செம் பொன்னினைச் சென்றடைந் தேனுடைய புந்தியைப் புக்க வறிவினைப் பூந்துருத் திய்யுறையும் நந்தியை நங்கள்பி ரான்றனை நானடி போற்றுவதே.
|
9
|
பைக்கையும் பாந்தி விழிக்கையும் பாம்பு சடையிடையே வைக்கையும் வானிழி கங்கையு மங்கை நடுக்குறவே மொய்க்கை யரக்கனை யூன்றினன் பூந்துருத் திய்யுறையும் மிக்கநல் வேத விகிர்தனை நானடி போற்றுவதே.
|
10
|
Go to top |