சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.089   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருநெய்த்தானம் - திருவிருத்தம் அருள்தரு வாலாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு நெய்யாடியப்பர் திருவடிகள் போற்றி
https://www.youtube.com/watch?v=xOSrrpCR2YY   Add audio link Add Audio
பாரிடஞ் சாடிய பல்லுயிர் வானம ரர்க்கருளிக்
காரடைந் தகடல் வாயுமிழ் நஞ்சமு தாகவுண்டான்
ஊரடைந் திவ்வுல கிற்பலி கொள்வது நாமறியோம்
நீரடைந் தகரை நின்றநெய்த் தானத் திருந்தவனே. 


1


தேய்ந்திலங் குஞ்சிறு வெண்மதி யாய்நின் றிருச்சடைமேல்
பாய்ந்த கங்கைப் புனல்பன் முகமாகிப் பரந்தொலிப்ப
ஆய்ந்திலங் கும்மழு வேலுடை யாயடி யேற்குரைநீ
ஏந்திள மங்கையு நீயும்நெய்த் தானத் திருந்ததுவே. 


2


கொன்றடைந் தாடிக் குமைத்திடுங் கூற்றமொன் னார்மதின்மேல்
சென்றடைந் தாடிப் பொருததுந் தேசமெல் லாமறியும்
குன்றடைந் தாடுங் குளிர்பொழிற் காவிரி யின்கரைமேல்
சென்றடைந் தார்வினை தீர்க்கும்நெய்த் தானத் திருந்தவனே. 


3


கொட்டு முழவர வத்தொடு கோலம் பலவணிந்து
நட்டம் பலபயின் றாடுவர் நாக மரைக்கசைத்துச்
சிட்டர் திரிபுரந் தீயெழச் செற்ற சிலையுடையான்
இட்ட முமையொடு நின்றநெய்த் தானத் திருந்தவனே.


4


கொய்ம்மலர்க் கொன்றை துழாய்வன்னி மத்தமுங் கூவிளமும்
மெய்ம்மலர் வேய்ந்த விரிசடைக் கற்றைவிண் ணோர்பெருமான்
மைம்மலர் நீல நிறங்கருங் கண்ணியோர்  பான்மகிழ்ந்தான்
நின்மல னாட னிலயநெய்த் தானத் திருந்தவனே. 


5


Go to top
பூந்தார் நறுங்கொன்றை மாலையை வாங்கிச் சடைக்கணிந்து
கூர்ந்தார் விடையினை யேறிப்பல் பூதப் படைநடுவே
போந்தார் புறவிசை பாடவு மாடவுங் கேட்டருளிச்
சேர்ந்தா ருமையவ ளோடுநெய்த் தானத் திருந்தவனே. 


6


பற்றின பாம்பன் படுத்த புலியுரித் தோலுடையன்
முற்றின மூன்று மதில்களை மூட்டி யெரித்தறுத்தான்
சுற்றிய பூதப் படையினன் சூல மழுவொருமான்
செற்றுநந் தீவினை தீர்க்குநெய்த் தானத் திருந்தவனே. 


7


விரித்த சடையினன் விண்ணவர் கோன்விட முண்டகண்டன்
உரித்த கரியுரி மூடியொன் னார்மதின் மூன்றுடனே
எரித்த சிலையின னீடழி யாதென்னை யாண்டுகொண்ட
தரித்த வுமையவ ளோடுநெய்த் தானத் திருந்தவனே. 


8


தூங்கான் றுளங்கான் துழாய்கொன்றை துன்னிய செஞ்சடைமேல்
வாங்கா மதியமும் வாளர வுங்கங்கை  தான்புனைந்தான்
தேங்கார் திரிபுரந் தீயெழ வெய்து தியக்கறுத்து
நீங்கா னுமையவ ளோடுநெய்த் தானத் திருந்தவனே.


9


ஊட்டிநின் றான்பொரு வானில மும்மதி றீயம்பினால்
மாட்டிநின் றானன்றி னார்வெந்து வீழவும் வானவர்க்குக்
காட்டிநின் றான்கத மாக்கங்கை பாயவொர் வார்சடையை
நீட்டிநின் றான்றிரு நின்றநெய்த் தானத் திருந்தவனே. 


10


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருநெய்த்தானம்
1.015   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மை ஆடிய கண்டன், மலை
Tune - நட்டபாடை   (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
4.037   திருநாவுக்கரசர்   தேவாரம்   காலனை வீழச் செற்ற கழல்
Tune - திருநேரிசை   (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
4.089   திருநாவுக்கரசர்   தேவாரம்   பார் இடம் சாடிய பல்
Tune - திருவிருத்தம்   (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
5.034   திருநாவுக்கரசர்   தேவாரம்   கொல்லியான், குளிர் தூங்கு குற்றாலத்தான்,
Tune - திருக்குறுந்தொகை   (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
6.041   திருநாவுக்கரசர்   தேவாரம்   வகை எலாம் உடையாயும் நீயே
Tune - திருத்தாண்டகம்   (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
6.042   திருநாவுக்கரசர்   தேவாரம்   மெய்த்தானத்து அகம்படியுள் ஐவர் நின்று
Tune - திருத்தாண்டகம்   (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 4.089