![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
https://www.youtube.com/watch?v=xOSrrpCR2YY Add audio link
4.089
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருநெய்த்தானம் - திருவிருத்தம் அருள்தரு வாலாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு நெய்யாடியப்பர் திருவடிகள் போற்றி
பாரிடஞ் சாடிய பல்லுயிர் வானம ரர்க்கருளிக்
காரடைந் தகடல் வாயுமிழ் நஞ்சமு தாகவுண்டான்
ஊரடைந் திவ்வுல கிற்பலி கொள்வது நாமறியோம்
நீரடைந் தகரை நின்றநெய்த் தானத் திருந்தவனே.
1
தேய்ந்திலங் குஞ்சிறு வெண்மதி யாய்நின் றிருச்சடைமேல்
பாய்ந்த கங்கைப் புனல்பன் முகமாகிப் பரந்தொலிப்ப
ஆய்ந்திலங் கும்மழு வேலுடை யாயடி யேற்குரைநீ
ஏந்திள மங்கையு நீயும்நெய்த் தானத் திருந்ததுவே.
2
கொன்றடைந் தாடிக் குமைத்திடுங் கூற்றமொன் னார்மதின்மேல்
சென்றடைந் தாடிப் பொருததுந் தேசமெல் லாமறியும்
குன்றடைந் தாடுங் குளிர்பொழிற் காவிரி யின்கரைமேல்
சென்றடைந் தார்வினை தீர்க்கும்நெய்த் தானத் திருந்தவனே.
3
கொட்டு முழவர வத்தொடு கோலம் பலவணிந்து
நட்டம் பலபயின் றாடுவர் நாக மரைக்கசைத்துச்
சிட்டர் திரிபுரந் தீயெழச் செற்ற சிலையுடையான்
இட்ட முமையொடு நின்றநெய்த் தானத் திருந்தவனே.
4
கொய்ம்மலர்க் கொன்றை துழாய்வன்னி மத்தமுங் கூவிளமும்
மெய்ம்மலர் வேய்ந்த விரிசடைக் கற்றைவிண் ணோர்பெருமான்
மைம்மலர் நீல நிறங்கருங் கண்ணியோர் பான்மகிழ்ந்தான்
நின்மல னாட னிலயநெய்த் தானத் திருந்தவனே.
5
Go to top
பூந்தார் நறுங்கொன்றை மாலையை வாங்கிச் சடைக்கணிந்து
கூர்ந்தார் விடையினை யேறிப்பல் பூதப் படைநடுவே
போந்தார் புறவிசை பாடவு மாடவுங் கேட்டருளிச்
சேர்ந்தா ருமையவ ளோடுநெய்த் தானத் திருந்தவனே.
6
பற்றின பாம்பன் படுத்த புலியுரித் தோலுடையன்
முற்றின மூன்று மதில்களை மூட்டி யெரித்தறுத்தான்
சுற்றிய பூதப் படையினன் சூல மழுவொருமான்
செற்றுநந் தீவினை தீர்க்குநெய்த் தானத் திருந்தவனே.
7
விரித்த சடையினன் விண்ணவர் கோன்விட முண்டகண்டன்
உரித்த கரியுரி மூடியொன் னார்மதின் மூன்றுடனே
எரித்த சிலையின னீடழி யாதென்னை யாண்டுகொண்ட
தரித்த வுமையவ ளோடுநெய்த் தானத் திருந்தவனே.
8
தூங்கான் றுளங்கான் துழாய்கொன்றை துன்னிய செஞ்சடைமேல்
வாங்கா மதியமும் வாளர வுங்கங்கை தான்புனைந்தான்
தேங்கார் திரிபுரந் தீயெழ வெய்து தியக்கறுத்து
நீங்கா னுமையவ ளோடுநெய்த் தானத் திருந்தவனே.
9
ஊட்டிநின் றான்பொரு வானில மும்மதி றீயம்பினால்
மாட்டிநின் றானன்றி னார்வெந்து வீழவும் வானவர்க்குக்
காட்டிநின் றான்கத மாக்கங்கை பாயவொர் வார்சடையை
நீட்டிநின் றான்றிரு நின்றநெய்த் தானத் திருந்தவனே.
10
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருநெய்த்தானம்
1.015
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மை ஆடிய கண்டன், மலை
Tune - நட்டபாடை
(திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
4.037
திருநாவுக்கரசர்
தேவாரம்
காலனை வீழச் செற்ற கழல்
Tune - திருநேரிசை
(திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
4.089
திருநாவுக்கரசர்
தேவாரம்
பார் இடம் சாடிய பல்
Tune - திருவிருத்தம்
(திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
5.034
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொல்லியான், குளிர் தூங்கு குற்றாலத்தான்,
Tune - திருக்குறுந்தொகை
(திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
6.041
திருநாவுக்கரசர்
தேவாரம்
வகை எலாம் உடையாயும் நீயே
Tune - திருத்தாண்டகம்
(திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
6.042
திருநாவுக்கரசர்
தேவாரம்
மெய்த்தானத்து அகம்படியுள் ஐவர் நின்று
Tune - திருத்தாண்டகம்
(திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000