சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.007   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) - இந்தளம் லதாங்கி மாயாமாளவகெளளை கீதப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு வாசமலர்க்குழன்மாதம்மை உடனுறை அருள்மிகு அயிராவதேசுவரர் திருவடிகள் போற்றி
https://www.youtube.com/watch?v=Eb7udOvYFvI   Add audio link Add Audio
மத்த யானை யேறி மன்னர்
சூழ வருவீர்காள்
செத்த போதில் ஆரு மில்லை
சிந்தையுள் வைம்மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா
வம்மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள்பாடி
யென்ப தடைவோமே.


1


தோற்ற முண்டேல் மரண முண்டு
துயர மனைவாழ்க்கை
மாற்ற முண்டேல் வஞ்ச முண்டு
நெஞ்ச மனத்தீரே
நீற்றர் ஏற்றர் நீல கண்டர்
நிறைபுனல் நீள்சடைமேல்
ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி
யென்ப தடைவோமே.


2


செடிகொள் ஆக்கை சென்று சென்று
தேய்ந்தொல்லை வீழாமுன்
வடிகொள் கண்ணார் வஞ்ச னையுட்
பட்டு மயங்காதே
கொடிகொ ளேற்றர் வெள்ளை நீற்றர்
கோவண ஆடையுடை
அடிகள் கோயில் எதிர்கொள் பாடி
யென்ப தடைவோமே.


3


வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர்
வஞ்ச மனத்தீரே
யாவ ராலு மிகழப் பட்டிங்
கல்லலில் வீழாதே
மூவ ராயும் இருவ ராயும்
முதல்வன் அவனேயாம்
தேவர் கோயில் எதிர்கொள் பாடி
யென்ப தடைவோமே.


4


அரித்து நம்மேல் ஐவர் வந்திங்
காறலைப்பான் பொருட்டால்
சிரித்த பல்வாய் வெண்டலை போய்
ஊர்ப்புறஞ் சேராமுன்
வரிக்கொ டுத்தி வாள ரக்கர்
வஞ்சமதில் மூன்றும்
எரித்த வில்லி எதிர்கொள் பாடி
யென்ப தடைவோமே.


5


Go to top
பொய்யர் கண்டீர் வாழ்க்கை யாளர்
பொத்தடைப் பான்பொருட்டால்
மையல் கொண்டீர் எம்மொ டாடி
நீரும் மனத்தீரே
நைய வேண்டா இம்மை யேத்த
அம்மை நமக்கருளும்
ஐயர் கோயில் எதிர்கொள் பாடி
யென்ப தடைவோமே.


6


கூச னீக்கிக் குற்றம் நீக்கிச்
செற்ற மனம்நீக்கி
வாச மல்கு குழலி னார்கள்
வஞ்ச மனைவாழ்க்கை
ஆசை நீக்கி அன்பு சேர்த்தி
என்பணிந் தேறேறும்
ஈசர் கோயில் எதிர்கொள் பாடி
யென்ப தடைவோமே.


7


இன்ப முண்டேல் துன்ப முண்டு
ஏழை மனைவாழ்க்கை
முன்பு சொன்னால் மோழை மையாம்
முட்டை மனத்தீரே
அன்ப ரல்லால் அணிகொள் கொன்றை
யடிகளடி சேரார்
என்பர் கோயில் எதிர்கொள் பாடி
யென்ப தடைவோமே.


8


தந்தை யாருந் தவ்வை யாரு
மெட்டனைச் சார்வாகார்
வந்து நம்மோ டுள்ள ளாவி
வான நெறிகாட்டும்
சிந்தை யீரே னெஞ்சி னீரே
திகழ்மதி யஞ்சூடும்
எந்தை கோயில் எதிர்கொள் பாடி
யென்ப தடைவோமே.


9


குருதி சோர ஆனையின் தோல்
கொண்ட குழற்சடையன்
மருது கீறி ஊடு போன
மாலய னும்அறியாச்
சுருதி யார்க்குஞ் சொல்ல வொண்ணாச்
சோதியெம் மாதியான்
கருது கோயில் எதிர்கொள் பாடி
யென்ப தடைவோமே.


10


Go to top
முத்து நீற்றுப் பவள மேனிச்
செஞ்சடை யானுறையும்
பத்தர் பந்தத் தெதிர்கொள் பாடிப்
பரமனை யேபணியச்
சித்தம் வைத்த தொண்டர் தொண்டன்
சடைய னவன்சிறுவன்
பத்தன் ஊரன் பாடல் வல்லார்
பாதம் பணிவாரே.


11



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி)
2.016   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று
Tune - இந்தளம்   (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) மணவாளநாயகர் யாழ்மொழியம்மை)
5.087   திருநாவுக்கரசர்   தேவாரம்   பட்டம் நெற்றியர்; பாய் புலித்தோலினர்;
Tune - திருக்குறுந்தொகை   (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) மணவாளநாயகர் யாழ்மொழியம்மை)
7.007   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மத்தயானை ஏறி, மன்னர் சூழ
Tune - இந்தளம்   (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) அயிராவதேசுவரர் வாசமலர்க்குழன்மாதம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 7.007