சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.025   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) - நட்டராகம் நடபைரவி பந்துவாராளி கனகவசந்தம் ராகத்தில் திருமுறை அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு பழமலைநாதர் திருவடிகள் போற்றி
தில்லைருந்து புறப்பட்டுத் திருக்கருப்பறியலூர், மண்ணிப்படிக்கரை, வாழ்கொளிப்புத்தூர், கானாட்டுமுள்ளூர், எதிர்கொள்பாடி வேள்விக்குடி முதலிய தலங்களை யிறைஞ்சித் திருப்பதிகங்கள் பாடித் திருவாரூரை யடைந்து பூங்கோயிற் பெருமானைத் தொழுது பரவையாருடன் இனிதிருந்தார். இங்ஙனம் வைகும் நாளில் ஒருநாள் பரவையாரை நோக்கி, முதுகுன்றப் பெருமான் நமக்குத் தந்த பொன்னை மணிமுத்தாற்றில் புகவிட்டோம். அப்பொன்னை இந்நகரத் திருக்குளத்தில் எடுத்து வருவோம் வருக என அழைத்தார். பரவையாரும் வியப்பெய்தி உடன் சென்றார். நம்பியாரூரர் பெருமானை வணங்கிக் கோயிலை வலம் வந்து கோயிலின் மேல்பால் உள்ள திருக்குளத்தின் வடகீழ்க் கரையில் பரவையாரை நிற்கச் செய்து, தாம் இறங்கிப் பொன்னைத் தேடினார். சுந்தரர்தம் செந்தமிழ்ப் பதிகம் கேட்கும் விருப்பினால் இறைவன் பொன்னை விரைவில் தோன்றாதவாறு செய்தருளினார். இந்நிலையில் பரவையார் ஆற்றலிட்டுக் குளத்தில் தேடும் நிலையை எண்ணி நகைத்துரைத்தார். அது கேட்ட சுந்தரர் முதுகுன்றமர்ந்த பெருமானே பரவை நகைத்துரையாதவாறு முன்னுரைத்தபடி செம் பொன்னைத் தந்தரளுக எனப் பொன்செய்த மேனியினீர் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். திருப்பதிகத்தின் எட்டாவது திருப்பாடலளவும் பொன் கிடைத்திலது, ஒன்பதாந் திருப்பாடலைப் பாடிய அளவில் பொன்திரள் சுந்தரர் கைக்குள் கிடைத்தது.
கைக்கு கிடைத்த பொருள் கை ந்ழுவிப் போனால் மீண்டும் கிடைக்க ஓத வேண்டிய பதிகம்‌
https://www.youtube.com/watch?v=J0kKlrUj_Pk   Add audio link Add Audio
பொன்செய்த மேனியினீர் புலித்
தோலை அரைக்கசைத்தீர்
முன்செய்த மூவெயிலும் மெரித்
தீர்முது குன்றமர்ந்தீர்
மின்செய்த நுண்ணிடையாள் பர
வையிவள் தன்முகப்பே
என்செய்த வாறடிகேள் அடி
யேன்இட் டளங்கெடவே.


1


உம்பரும் வானவரும் முட
னேநிற்க வேயெனக்குச்
செம்பொனைத் தந்தருளித் திக
ழும்முது குன்றமர்ந்தீர்
வம்பம ருங்குழலாள் பர
வையிவள் வாடுகின்றாள்
எம்பெரு மான்அருளீர் அடி
யேன்இட் டளங்கெடவே.


2


பத்தா பத்தர்களுக் கருள்
செய்யும் பரம்பரனே
முத்தா முக்கணனே முது
குன்ற மமர்ந்தவனே
மைத்தா ருந்தடங்கண் பர
வையிவள் வாடாமே
அத்தா தந்தருளாய் அடி
யேன்இட் டளங்கெடவே.


3


மங்கையொர் கூறமர்ந்தீர் மறை
நான்கும் விரித்துகந்தீர்
திங்கள் சடைக்கணிந்தீர் திக
ழும்முது குன்றமர்ந்தீர்
கொங்கைநல் லாள்பரவை குணங்
கொண்டிருந் தாள்முகப்பே
அங்கண னேயருளாய் அடி
யேன்இட் டளங்கெடவே.


4


மையா ரும்மிடற்றாய் மரு
வார்புர மூன்றெரித்த
செய்யார் மேனியனே திக
ழும்முது குன்றமர்ந்தாய்
பையா ரும்மரவே ரல்கு
லாளிவள் வாடுகின்றாள்
ஐயா தந்தருளாய் அடி
யேன்இட் டளங்கெடவே.


5


Go to top
நெடியான் நான்முகனும் மிர
வியொடும் இந்திரனும்
முடியால் வந்திறைஞ்ச முது
குன்றம் அமர்ந்தவனே
படியா ரும்மியலாள் பர
வையிவள் தன்முகப்பே
யடிகேள் தந்தருளீர் அடி
யேன்இட் டளங்கெடவே.


6


கொந்தண வும்பொழில்சூழ் குளிர்
மாமதில் மாளிகைமேல்
வந்தண வும்மதிசேர் சடை
மாமுது குன்றுடையாய்
பந்தண வும்விரலாள் பர
வையிவள் தன்முகப்பே
அந்தண னேயருளாய் அடி
யேன்இட் டளங்கெடவே.


7


பரசா ருங்கரவா பதி
னெண்கண முஞ்சூழ
முரசார் வந்ததிர முது
குன்ற மமர்ந்தவனே
விரைசே ருங்குழலாள் பர
வையிவள் தன்முகப்பே
அரசே தந்தருளாய் அடி
யேன்இட் டளங்கெடவே.


8


ஏத்தா திருந்தறியேன் இமை
யோர்தனி நாயகனே
மூத்தாய் உலகுக்கெல்லா முது
குன்ற மமர்ந்தவனே
பூத்தா ருங்குழலாள் பர
வையிவள் தன்முகப்பே
கூத்தா தந்தருளாய் கொடி
யேன்இட் டளங்கெடவே.


9


பிறையா ருஞ்சடையெம் பெரு
மானரு ளாயென்று
முறையால் வந்தமரர் வணங்
கும்முது குன்றர்தம்மை
மறையார் தங்குரிசில் வயல்
நாவலா ரூரன்சொன்ன
இறையார் பாடல்வல்லார்க் கெளி
தாஞ்சிவ லோகமதே.


10


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
1.012   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மத்தா வரை நிறுவி, கடல்
Tune - நட்டபாடை   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
1.053   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை
Tune - பழந்தக்கராகம்   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
1.093   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நின்று மலர் தூவி, இன்று
Tune - குறிஞ்சி   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
1.131   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும்,
Tune - மேகராகக்குறிஞ்சி   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
2.064   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்!
Tune - காந்தாரம்   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
3.034   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வண்ண மா மலர் கொடு
Tune - கொல்லி   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
3.099   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   முரசு அதிர்ந்து எழுதரு முது
Tune - சாதாரி   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
6.068   திருநாவுக்கரசர்   தேவாரம்   கருமணியை, கனகத்தின் குன்று ஒப்பானை,
Tune - திருத்தாண்டகம்   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
7.025   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை
Tune - நட்டராகம்   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
7.043   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   நஞ்சி, இடை இன்று நாளை
Tune - கொல்லிக்கௌவாணம்   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 7.025