சீர்மன்னு செல்வக் குடிமல்கு
சிறப்பின் ஓங்கும்
கார்மன்னு சென்னிக் கதிர்மாமணி மாட வைப்பு
நார்மன்னு சிந்தைப் பலநற்றுறை
மாந்தர் போற்றும்
பார்மன்னு தொன்மைப் புகழ்பூண்டது
பாண்டி நாடு.
|
1
|
சாயுந் தளிர்வல்லி மருங்குல்
நெடுந்த டங்கண்
வேயும் படுதோளியர் பண்படும்
இன்சொற் செய்ய
வாயும் படும்நீள்கரை மண்பொரும்
தண்பொ ருந்தம்
பாயுங் கடலும்படும் நீர்மை
பணித்த முத்தம்.
|
2
|
மொய்வைத்த வண்டின் செறிசூழல்
முரன்ற சந்தின்
மைவைத்த சோலை மலையந்தர
வந்த மந்த
மெய்வைத்த காலும் தரும்ஞாலம்
அளந்த மேன்மைத்
தெய்வத்தமி ழுந்தருஞ் செவ்வி
மணஞ்செய் ஈரம்.
|
3
|
சூழுமிதழ்ப் பங்கய மாகஅத்
தோட்டின் மேலாள்
தாழ்வின்றி யென்றுந் தனிவாழ்வதத்
தையல் ஒப்பார்
யாழின் மொழியிற் குழலின்னிசை
யுஞ்சு ரும்பும்
வாழும் நகரம் மதுராபுரி
என்ப தாகும்.
|
4
|
சால்பாய மும்மைத் தமிழ்தங்கிய
அங்கண் மூதூர்
நூல்பா யிடத்தும் உளநோன்றலை
மேதி பாயப்
பால்பாய் முலைதோய் மதுப்பங்கயம்
பாய எங்கும்
சேல்பாய் தடத்தும் உளசெய்யுள்மிக் கேறு சங்கம்.
|
5
|
| Go to top |
மந்தாநிலம் வந்தசை பந்தரின்
மாட முன்றில்
பந்தாடிய மங்கையர் பங்கயச்
செங்கை தாங்கும்
சந்தார்முலை மேலன தாழ்குழை
வாள்மு கப்பொற்
செந்தாமரை மேலன நித்திலம்
சேர்ந்த கோவை.
|
6
|
மும்மைப் புவனங்களின் மிக்கதன்
றேஅம் மூதூர்
மெய்ம்மைப் பொருளாந் தமிழ்நூலின்
விளங்கு வாய்மைச்
செம்மைப் பொருளுந் தருவார்திரு
வால வாயில்
எம்மைப் பவந்தீர்ப் பவர்சங்கம்
இருந்த தென்றால்.
|
7
|
அப்பொற் பதிவாழ் வணிகர்குலத்
தான்ற தொன்மைச்
செப்பத் தகுசீர்க் குடிசெய்தவம்
செய்ய வந்தார்
எப்பற் றினையும்அறுத் தேறுகைத்
தேறு வார்தாள்
மெய்ப்பற் றெனப்பற்றி விடாத
விருப்பின் மிக்கார்.
|
8
|
நாளும் பெருங்கா தல்நயப்புறும்
வேட்கை யாலே
கேளுந் துணையும் முதற்கேடில் பதங்க ளெல்லாம்
ஆளும் பெருமான் அடித்தாமரை
அல்ல தில்லார்
மூளும் பெருகன் பெனும்மூர்த்தியார்
மூர்த்தி யார்தாம்.
|
9
|
அந்திப் பிறைசெஞ் சடைமேல்அணி
ஆல வாயில்
எந்தைக் கணிசந் தனக்காப்பிடை
என்றும் முட்டா
அந்தச் செயலி னிலைநின்றடி
யாரு வப்பச்
சிந்தைக் கினிதாய திருப்பணி செய்யும் நாளில்.
|
10
|
| Go to top |
கானக் கடிசூழ் வடுகக்கரு
நாடர் காவன்
மானப் படைமன்னன் வலிந்து
நிலங்கொள் வானாய்
யானைக் குதிரைக் கருவிப்படை
வீரர் திண்தேர்
சேனைக் கடலும் கொடுதென்றிசை
நோக்கி வந்தான்.
|
11
|
வந்துற்ற பெரும்படை மண்புதை
யப்ப ரப்பிச்
சந்தப் பொதியில்தமிழ் நாடுடை
மன்னன் வீரம்
சிந்தச் செருவென்று தன்னாணை
செலுத்து மாற்றால்
கந்தப் பொழில்சூழ் மதுராபுரி
காவல் கொண்டான்.
|
12
|
வல்லாண் மையின்வண் டமிழ்நாடு
வளம்ப டுத்து
நில்லா நிலையொன்றிய இன்மையின் நீண்ட மேரு
வில்லான் அடிமைத் திறமேவிய
நீற்றின் சார்பு
செல்லா தருகந்தர் திறத்தினில்
சிந்தை தாழ்ந்தான்.
|
13
|
தாழுஞ் சமண்கையர் தவத்தைமெய்
யென்று சார்ந்து
வீழுங் கொடியோன் அதுவன்றியும்
வெய்ய முன்னைச்
சூழும் வினையால் அரவஞ்சுடர்த்
திங்க ளோடும்
வாழுஞ் சடையா னடியாரையும்
வன்மை செய்வான்.
|
14
|
செக்கர்ச் சடையார் விடையார்திரு
வால வாயுள்
முக்கட் பரனார் திருத்தொண்டரை
மூர்த்தி யாரை
மைக்கற் புரைநெஞ் சுடைவஞ்சகன்
வெஞ்ச மண்பேர்
எக்கர்க் குடனாக இகழ்ந்தன
செய்ய எண்ணி.
|
15
|
| Go to top |
அந்தம் இலவாம் மிறைசெய்யவும்
அன்ப னார்தாம்
முந்தைம் முறைமைப் பணிமுட்டலர்
செய்து வந்தார்
தந்தம் பெருமைக் களவாகிய
சார்பில் நிற்கும்
எந்தம் பெருமக் களையாவர்
தடுக்க வல்லார்.
|
16
|
எள்ளுஞ்செயல் வன்மைகள் எல்லையில்
லாத செய்யத்
தள்ளுஞ்செய லில்லவர் சந்தனக்
காப்புத் தேடிக்
கொள்ளுந்துறை யும்அடைத் தான்கொடுங்
கோன்மை செய்வான்
தெள்ளும்புனல் வேணியர்க் கன்பரும்
சிந்தை நொந்து.
|
17
|
புன்மைச் செயல்வல் அமண்குண்டரிற் போது போக்கும்
வன்மைக் கொடும்பா தகன்மாய்ந்திட
வாய்மை வேத
நன்மைத் திருநீற் றுயர்நன்னெறி
தாங்கு மேன்மைத்
தன்மைப் புவிமன் னரைச்சார்வதென்
றென்று சார்வார்.
|
18
|
காய்வுற்ற செற்றங்கொடு கண்டகன்
காப்ப வுஞ்சென்
றாய்வுற்ற கொட்பிற் பகலெல்லை
அடங்க நாடி
ஏய்வுற்ற நற்சந் தனமெங்கும்
பெறாது சிந்தை
சாய்வுற்றிட வந்தனர் தம்பிரான் கோயில் தன்னில்.
|
19
|
நட்டம்புரி வார்அணி நற்றிரு மெய்ப்பூச் சின்று
முட்டும்பரி சாயினுந் தேய்க்குங்கை
முட்டா தென்று
வட்டந்திகழ் பாறையின் வைத்து முழங்கை தேய்த்தார்
கட்டும்புறந் தோல்நரம் பென்பு
கரைந்து தேய.
|
20
|
| Go to top |
கல்லின்புறந் தேய்த்த முழங்கை
கலுழ்ந்து சோரி
செல்லும்பரப் பெங்கணும் என்பு
திறந்து மூளை
புல்லும்படி கண்டு பொறுத்திலர் தம்பி ரானார்
அல்லின்கண் எழுந்த துவந்தருள்
செய்த வாக்கு.
|
21
|
அன்பின்துணி வால்இது செய்திடல் ஐய உன்பால்
வன்புன்கண் விளைத்தவன் கொண்டமண்
எல்லாங் கொண்டு
முன்பின்னல் புகுந்தன முற்றவும்
நீத்துக் காத்துப்
பின்புன்பணி செய்துநம் பேருல
கெய்து கென்ன.
|
22
|
இவ்வண்ணம் எழுந்தது கேட்டெழுந்
தஞ்சி முன்பு
செய்வண்ணம் ஒழிந்திடத் தேய்ந்தபுண்
ஊறு தீர்ந்து
கைவண்ணம் நிரம்பின வாசமெல் லாங்க லந்து
மொய்வண்ண விளங்கொளி எய்தினர் மூர்த்தி யார்தாம்.
|
23
|
அந்நாள்இர வின்கண் அமண்புகல்
சார்ந்து வாழும்
மன்னாகிய போர்வடு கக்கரு நாடர் மன்னன்
தன்னாளும் முடிந்தது சங்கரன் சார்பி லோர்க்கு
மின்னாமென நீடிய மெய்ந்நிலை
யாமை வெல்ல.
|
24
|
இவ்வா றுலகத்தின் இறப்ப
உயர்ந்த நல்லோர்
மெய்வா ழுலகத்து விரைந்தணை
வார்க ளேபோல்
அவ்வா றரனார் அடியாரை
அலைத்த தீயோன்
வெவ்வாய் நிரயத் திடைவீழ
விரைந்து வீந்தான்.
|
25
|
| Go to top |
முழுதும் பழுதே புரிமூர்க்கன்
உலந்த போதின்
எழுதுங் கொடிபோல் பவருட்பட
ஏங்கு சுற்றம்
முழுதும் புலர்வுற் றதுமற்றவன்
அன்ன மாலைப்
பொழுதும் புலர்வுற் றதுசெங்கதிர்
மீது போத.
|
26
|
அவ்வேளையில் அங்கண் அமைச்சர்கள்
கூடித் தங்கள்
கைவேறுகொள் ஈம வருங்கடன்
காலை முற்றி
வைவேலவன் தன்குல மைந்தரும்
இன்மை யாலே
செய்வேறு வினைத்திறஞ் சிந்தனை
செய்து தேர்வார்.
|
27
|
தாழுஞ் செயலின் றொருமன்னவன் தாங்க வேண்டும்
கூழுங் குடியும் முதலாயின
கொள்கைத் தேனும்
சூழும் படைமன் னவன்தோளிணைக்
காவ லின்றி
வாழுந் தகைத்தன் றிந்தவையகம்
என்று சொன்னார்.
|
28
|
பன்முறை உயிர்கள் எல்லாம் பாலித்து
ஞாலங் காப்பான்
தன்னெடுங் குடைக்கீழ்த் தத்தம் நெறிகளில்
சரித்து வாழும்
மன்னரை யின்றி வைகும் மண்ணுல கெண்ணுங் காலை
இன்னுயி ரின்றி வாழும் யாக்கையை
ஒக்கும் என்பார்.
|
29
|
இவ்வகை பலவும் எண்ணி
இங்கினி அரசர் இல்லை
செய்வகை யிதுவே யென்று
தெளிபவர் சிறப்பின் மிக்க
மைவரை யனைய வேழங்
கண்கட்டி விட்டால் மற்றக்
கைவரை கைக்கொண் டார்மண்
காவல்கைக் கொள்வார் என்று.
|
30
|
| Go to top |
செம்மாண்வினை யர்ச்சனை நூன்முறை
செய்து தோளால்
இம்மாநிலம் ஏந்தஒர் ஏந்தலை
யேந்து கென்று
பெய்ம்மாமுகில் போன்மதம் பாய்பெரு கோடை நெற்றிக்
கைம்மாவை நறுந்துகில் கொண்டுகண்
கட்டி விட்டார்.
|
31
|
கண்கட்டி விடுங்களி யானைஅக்
காவல் மூதூர்
மண்கொட்புற வீதி மருங்கு திரிந்து போகித்
திண்பொற்றட மாமதில் சூழ்திரு
வால வாயின்
விண்பிற்பட வோங்கிய கோபுரம்
முன்பு மேவி.
|
32
|
நீங்கும்இர வின்கண் நிகழ்ந்தது
கண்ட தொண்டர்
ஈங்கெம்பெரு மான்அரு ளாம்எனில்
இந்த வையம்
தாங்குஞ்செயல் பூண்பன்என் றுள்ளம் தளர்வு நீங்கிப்
பூங்கொன்றை மிலைந்தவர் கோயிற் புறத்தின் நிற்ப.
|
33
|
வேழத் தரசங்கண் விரைந்து
நடந்து சென்று
வாழ்வுற் றுலகஞ்செய் தவத்தினின்
வள்ள லாரைச்
சூழ்பொற் சுடர்மாமணி மாநிலந்
தோய முன்பு
தாழ்வுற் றெடுத்துப் பிடர்மீது
தரித்த தன்றே.
|
34
|
மாதங்கம் எருத்தினில் வைத்தவர்
தம்மைக் காணா
ஏதங்கெட எண்ணிய திண்மை
அமைச்ச ரெல்லாம்
பாதங்களின் மீது பணிந்தெழுந்
தார்கள் அப்போ
தோதங்கிளர் வேலையை ஒத்தொலி
மிக்க தவ்வூர்.
|
35
|
| Go to top |
சங்கங்கள் முரன்றன தாரைகள்
பேரி யோடும்
எங்கெங்கும் இயம்பின பல்லியம்
எல்லை யில்ல
அங்கங்கு மலிந்தன வாழ்த்தொலி
அம்பொற் கொம்பின்
பங்கன்அரு ளால்உல காள்பவர்
பாங்கர் எங்கும்.
|
36
|
வெங்கட்களிற் றின்மிசை நின்றும்
இழிச்சி வேரித்
தொங்கற்சுடர் மாலைகள் சூழ்முடி
சூடு சாலை
அங்கட்கொடு புக்கரி யாசனத்
தேற்றி ஒற்றைத்
திங்கட்குடைக் கீழ்உரி மைச்செயல்
சூழ்ந்து செய்வார்.
|
37
|
மன்னுந் திசைவேதியில் மங்கல
ஆகு திக்கண்
துன்னுஞ் சுடர்வன்னி வளர்த்துத்
துதைந்த நூல்சூழ்
பொன்னின் கலசங்கள் குடங்கள்
பூரித்த தூநீர்
உன்னும் செயல்மந் திரயோகர்
நிறுத்தி னார்கள்.
|
38
|
வந்துற்றெழு மங்கல மாந்தர்கள்
தம்மை நோக்கிச்
சிந்தைச்சிவ மேதெளி யுந்திரு
மூர்த்தி யார்தாம்
முந்தைச்செய லாம்அமண் போய்முதற்
சைவ மோங்கில்
இந்தப்புவி தாங்கிஇவ் வின்னர
சாள்வ னென்றார்.
|
39
|
அவ்வாறு மொழிந்தது கேட்ட
அமைச்ச ரோடு
மெய்வாழ்தரு நூலறி வின்மிகு
மாந்தர் தாமும்
எவ்வாறருள் செய்தனை மற்றவை
யன்றி யாவர்
செய்வார் பெரியோய் எனச்சேவடி
தாழ்ந்து செப்ப.
|
40
|
| Go to top |
வையம் முறைசெய் குவனாகில்
வயங்கு நீறே
செய்யும் அபிடே கமுமாக
செழுங்க லன்கள்
ஐயன் அடையா ளமுமாக
அணிந்து தாங்கும்
மொய்புன் சடைமா முடியேமுடி
யாவ தென்றார்.
|
41
|
என்றிவ்வுரை கேட்டலும் எல்லையில் கல்வி யோரும்
வன்திண்மதி நூல்வளர் வாய்மை
அமைச்சர் தாமும்
நன்றிங்கருள் தானென நற்றவ
வேந்தர் சிந்தை
ஒன்றும்அர சாள்உரி மைச்செய
லான உய்த்தார்.
|
42
|
மாடெங்கும் நெருங்கிய மங்கல
ஓசை மல்கச்
சூடுஞ்சடை மௌலி யணிந்தவர்
தொல்லை ஏனம்
தேடுங்கழ லார்திரு வாலவாய்
சென்று தாழ்ந்து
நீடுங்களிற் றின்மிசை நீள்மறு
கூடு போந்தார்.
|
43
|
மின்னும்மணி மாளிகை வாயிலின் வேழ மீது
தன்னின்றும் இழிந்து தயங்கொளி
மண்ட பத்திற்
பொன்னின்அரி மெல்லணைச் சாமரைக்
காமர் பூங்கால்
மன்னுங்குடை நீழல் இருந்தனர்
வையந் தாங்கி.
|
44
|
குலவுந்துறை நீதி யமைச்சர்
குறிப்பின் வைகக்
கலகஞ்செய் அமண்செய லாயின
கட்டு நீங்கி
நிலவுந்திரு நீற்று நெறித்துறை
நீடு வாழ
உலகெங்கும் நிரம்பிய சைவம்
உயர்ந்து மன்ன.
|
45
|
| Go to top |
நுதலின்கண் விழித்தவர் வாய்மை
நுணங்கு நூலின்
பதமெங்கும் நிறைந்து விளங்கப்
பவங்கள் மாற
உதவுந்திரு நீறுயர் கண்டிகை
கொண்ட வேணி
முதன்மும்மையி னால்உல காண்டனர்
மூர்த்தி யார்தாம்.
|
46
|
ஏலங்கமழ் கோதையர் தந்திறம்
என்றும் நீங்குஞ்
சீலங்கொடு வெம்புலன் தெவ்வுடன்
வென்று நீக்கி
ஞாலந்தனி நேமி நடாத்தி
நலங்கொள் ஊழிக்
காலம்உயிர் கட்கிட ரான கடிந்து காத்து.
|
47
|
பாதம்பர மன்னவர் சூழ்ந்து
பணிந்து போற்ற
ஏதம்பிணி யாவகை இவ்வுல
காண்டு தொண்டின்
பேதம்புரி யாஅருட் பேரர
சாளப் பெற்று
நாதன்கழற் சேவடி நண்ணினர்
அண்ண லாரே.
|
48
|
அகல்பாறையின் வைத்து முழங்கையை
அன்று தேய்த்த
இகலார்களிற் றன்பரை யேத்தி
முருக னாராம்
முகில்சூழ்நறுஞ் சோலையின் மொய்யொளி மாட வீதிப்
புகலூர்வரும் அந்தணர் தந்திறம்
போற்ற லுற்றாம்.
|
49
|