சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

12.280   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்


+ Show Meaning   Add audio link Add Audio

வேதநெறி தழைத் தோங்க
மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம்ப ரைபொலியப்
புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித்
திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு
திருத்தொண்டு பரவுவாம்.
1

சென்னிவளர் மதியணிந்த
சிலம்பணிசே வடியார்தம்
மன்னியசை வத்துறையின்
வழிவந்த குடிவளவர்
பொன்னிவளந் தருநாடு
பொலிவெய்த நிலவியதால்
கன்னிமதில் மருங்குமுகில்
நெருங்குகழு மலமூதூர்.
2

அப்பதிதான் அந்தணர்தம்
கிடைகள்அரு மறைமுறையே
செப்பும்ஒலி வளர்பூகச்
செழுஞ்சோலை புறஞ்சூழ
ஒப்பில்நகர் ஓங்குதலால்
உகக்கடைநாள் அன்றியே
எப்பொழுதுங் கடல்மேலே
மிதப்பதென இசைந்துளதால்.
3

அரிஅயனே முதல்அமரர்
அடங்கஎழும் வெள்ளங்கள்
விரிசுடர்மா மணிப்பதணம்
மீதெறிந்த திரைவரைகள்
புரிசைமுதல் புறஞ்சூழ்வ
பொங்கோதம் கடைநாளில்
விரிஅரவ மந்தரஞ்சூழ்
வடம்போல வயங்குமால்.
4

வளம்பயிலும் புறம்பணைப்பால்
வாசப்பா சடைமிடைந்த
தளம்பொலியும் புனற்செந்தா
மரைச்செவ்வித் தடமலரால்
களம்பயில்நீர்க் கடன்மலர்வ
தொருபரிதி யெனக்கருதி
இளம்பரிதி பலமலர்ந்தாற்
போல்பஉள இலஞ்சிபல.
5
Go to top

உளங்கொள்மறை வேதியர்தம்
ஓமதூ மத்திரவும்
கிளர்ந்ததிரு நீற்றொளியில்
கெழுமியநண் பகலுமலர்ந்
தளந்தறியாப் பல்லூழி
யாற்றுதலால் அகலிடத்து
விளங்கியஅம் மூதூர்க்கு
வேறிரவும் பகலும்மிகை.
6

பரந்தவிளை வயற்செய்ய
பங்கயமாம் பொங்கெரியில்
வரம்பில்வளர் தேமாவின்
கனிகிழிந்த மதுநறுநெய்
நிரந்தரம்நீள் இலைக்கடையால்
ஒழுகுதலால் நெடிதவ்வூர்
மரங்களும்ஆ குதிவேட்கும்
தகையவென மணந்துளதால்.
7

வேலையழற் கதிர்படிந்த
வியன்கங்குல் வெண்மதியம்
சோலைதொறும் நுழைந்துபுறப்
படும்பொழுது துதைந்தமலர்ப்
பாலணைந்து மதுத்தோய்ந்து
தாதளைந்து பயின்றந்தி
மாலையெழுஞ் செவ்வொளிய
மதியம்போல் வதியுமால்.
8

காமர்திருப் பதியதன்கண்
வேதியர்போற் கடிகமழும்
தாமரையும் புல்லிதழும்
தயங்கியநூ லுந்தாங்கித்
தூமருநுண் துகளணிந்து
துளிவருகண் ணீர்ததும்பித்
தேமருமென் சுரும்பிசையால்
செழுஞ்சாமம் பாடுமால்.
9

புனைவார்பொற் குழையசையப்
பூந்தானை பின்போக்கி
வினைவாய்ந்த தழல்வேதி
மெழுக்குறவெண் சுதையொழுக்கும்
கனைவான முகிற்கூந்தல்
கதிர்செய்வட மீன்கற்பின்
மனைவாழ்க்கைக் குலமகளிர்
வளம்பொலிவ மாடங்கள்.
10
Go to top

வேள்விபுரி சடங்கதனை
விளையாட்டுப் பண்ணைதொறும்
பூழியுற வகுத்தமைத்துப்
பொன்புனைகிண் கிணியொலிப்ப
ஆழிமணிச் சிறுதேரூர்ந்து
அவ்விரதப் பொடியாடும்
வாழிவளர் மறைச்சிறார்
நெருங்கியுள மணிமறுகு.
11

விடுசுடர்நீள் மணிமறுகின்
வெண்சுதைமா ளிகைமேகம்
தொடுகுடுமி நாசிதொறும்
தொடுத்தகொடி சூழ்கங்குல்
உடுஎனும்நாண் மலர்அலர
உறுபகலிற் பலநிறத்தால்
நெடுவிசும்பு தளிர்ப்பதென
நெருங்கியுள மருங்கெல்லாம்.
12

மடையெங்கும் மணிக்குப்பை
வயலெங்கும் கயல்வெள்ளம்
புடையெங்கும் மலர்ப்பிறங்கல்
புறமெங்கும் மகப்பொலிவு
கிடையெங்கும் கலைச்சூழல்
கிளர்வெங்கும் முரலளிகள்
இடையெங்கும் முனிவர்குழாம்
எயிலெங்கும் பயிலெழிலி.
13

பிரமபுரம் வேணுபுரம்
புகலிபெரு வெங்குருநீர்ப்
பொருவில்திருத் தோணிபுரம்
பூந்தராய் சிரபுரமுன்
வருபுறவஞ் சண்பைநகர்
வளர்காழி கொச்சைவயம்
பரவுதிருக் கழுமலமாம்
பன்னிரண்டு திருப்பெயர்த்தால்.
14

அப்பதியின் அந்தணர்தங்
குடிமுதல்வர் ஆசில்மறை
கைப்படுத்த சீலத்துக்
கவுணியர்கோத் திரம்விளங்கச்
செப்புநெறி வழிவந்தார்
சிவபாத விருதயர்என்று
இப்புவிவா ழத்தவஞ்செய்
இயல்பினார் உளரானார்.
15
Go to top

மற்றவர்தந் திருமனையார்
வாய்ந்தமறை மரபின்வரு
பெற்றியினார் எவ்வுலகும்
பெறற்கரிய பெருமையினார்
பொற்புடைய பகவதியார்
எனப்போற்றும் பெயருடையார்
கற்புமேம் படுசிறப்பால்
கணவனார் கருத்தமைந்தார்.
16

மரபிரண்டும் சைவநெறி
வழிவந்த கேண்மையினார்
அரவணிந்த சடைமுடியார்
அடியலால் அறியாது
பரவுதிரு நீற்றன்பு
பாலிக்குந் தன்மையராய்
விரவுமறை மனைவாழ்க்கை
வியப்பெய்த மேவுநாள்.
17

மேதினிமேற் சமண்கையர்
சாக்கியர்தம் பொய்ம்மிகுத்தே
ஆதியரு மறைவழக்கம்
அருகிஅர னடியார்பால்
பூதிசா தனவிளக்கம்
போற்றல்பெறா தொழியக்கண்
டேதமில்சீர்ச் சிவபாத
இருதயர்தாம் இடருழந்தார்.
18

மனையறத்தில் இன்பமுறு
மகப்பெறுவான் விரும்புவார்
அனையநிலை தலைநின்றே
ஆடியசே வடிக்கமலம்
நினைவுறமுன் பரசமயம்
நிராகரித்து நீறாக்கும்
புனைமணிப்பூண் காதலனைப்
பெறப்போற்றுந் தவம்புரிந்தார்.
19

பெருத்தெழும்அன் பாற்பெரிய
நாச்சியா ருடன்புகலித்
திருத்தோணி வீற்றிருந்தார்
சேவடிக்கீழ் வழிபட்டுக்
கருத்துமுடிந் திடப்பரவும்
காதலியார் மணிவயிற்றில்
உருத்தெரிய வரும்பெரும்பே
றுலகுய்ய உளதாக.
20
Go to top

ஆளுடையா ளுடன்தோணி
அமர்ந்தபிரான் அருள்போற்றி
மூளுமகிழ்ச் சியில்தங்கள்
முதன்மறைநூல் முறைச்சடங்கு
நாளுடைய ஈரைந்து
திங்களினும் நலஞ்சிறப்பக்
கேளிருடன் செயல்புரிந்து
பெரிதின்பங் கிளர்வுறுநாள்.
21

அருக்கன்முதற் கோளனைத்தும்
அழகியஉச் சங்களிலே
பெருக்கவலி யுடன்நிற்கப்
பேணியநல் லோரையெழத்
திருக்கிளரும் ஆதிரைநாள்
திசைவிளங்கப் பரசமயத்
தருக்கொழியச் சைவமுதல்
வைதிகமுந் தழைத்தோங்க.
22

தொண்டர்மனங் களிசிறப்பத்
தூயதிரு நீற்றுநெறி
எண்டிசையுந் தனிநடப்ப
ஏழுலகுங் களிதூங்க
அண்டர்குலம் அதிசயிப்ப
அந்தணர்ஆ குதிபெருக
வண்டமிழ்செய் தவம்நிரம்ப
மாதவத்தோர் செயல்வாய்ப்ப.
23

திசையனைத்தின் பெருமையெலாம்
தென்றிசையே வென்றேற
மிசையுலகும் பிறவுலகும்
மேதினியே தனிவெல்ல
அசைவில்செழுந் தமிழ்வழக்கே
அயல்வழக்கின் துறைவெல்ல
இசைமுழுதும் மெய்யறிவும்
இடங்கொள்ளும் நிலைபெருக.
24

தாளுடைய படைப்பென்னுந்
தொழில்தன்மை தலைமைபெற
நாளுடைய நிகழ்காலம்
எதிர்கால நவைநீங்க
வாளுடைய மணிவீதி
வளர்காழிப் பதிவாழ
ஆளுடைய திருத்தோணி
அமர்ந்தபிரான் அருள்பெருக.
25
Go to top

அவம்பெருக்கும் புல்லறிவின்
அமண்முதலாம் பரசமயப்
பவம்பெருக்கும் புரைநெறிகள்
பாழ்படநல் லூழிதொறும்
தவம்பெருக்குஞ் சண்பையிலே
தாவில்சரா சரங்கள்எலாம்
சிவம்பெருக்கும் பிள்ளையார்
திருஅவதா ரஞ்செய்தார்.
26

அப்பொழுது பொற்புறு திருக்கழு மலத்தோர்
எப்பெயரி னோரும்அயல் எய்தும்இடை யின்றி
மெய்ப்படு மயிர்ப்புளகம் மேவியறி யாமே
ஒப்பில்களி கூர்வதொர் உவப்புற உரைப்பார்.
27

சிவனருள் எனப்பெருகு சித்தமகிழ் தன்மை
இவண்இது நமக்குவர எய்தியதென் என்பார்
கவுணியர் குலத்திலொரு காதலன் உதித்தான்
அவன்வரு நிமித்தம்இது என்றதி சயித்தார்.
28

பூமுகை அவிழ்ந்துமணம் மேவுபொழில் எங்கும்
தேமருவு தாதொடு துதைந்ததிசை யெல்லாம்
தூமருவு சோதிவிரி யத்துகள் அடக்கி
மாமலய மாருதமும் வந்தசையு மன்றே.
29

மேலையிமை யோர்களும் விருப்பொடு கரப்பில்
சோலைமலர் போலமலர் மாமழை சொரிந்தே
ஞாலமிசை வந்துவளர் காழிநகர் மேவும்
சீலமறை யோர்களுடன் ஓமவினை செய்தார்.
30
Go to top

பூதகண நாதர்புவி வாழஅருள் செய்த
நாதனரு ளின்பெருமை கண்டுநலம் உய்ப்பார்
ஓதுமறை யோர்பிறி துரைத்திடினும் ஓவா
வேதமொழி யால்ஒளி விளங்கியெழு மெங்கும்.
31

பயன்தருவ பஃறருவும் வல்லிகளும் மல்கித்
தயங்குபுன லுந்தெளிவு தண்மையுடன் நண்ணும்
வயங்கொளி விசும்புமலி னங்கழியு மாறா
நயம்புரிவ புள்ளொலிகள் நல்லதிசை யெல்லாம்.
32

அங்கண்விழ விற்பெருகு சண்பையகல் மூதூர்ச்
சங்கபட கங்கருவி தாரைமுத லான
எங்கணும் இயற்றுபவர் இன்றியும் இயம்பும்
மங்கல முழக்கொலி மலிந்தமறு கெல்லாம்.
33

இரும்புவனம் இத்தகைமை எய்தஅவர் தம்மைத்
தருங்குல மறைத்தலைவர் தம்பவன முன்றில்
பெருங்களி வியப்பொடு பிரான்அருளி னாலே
அருந்திரு மகப்பெற வணைந்தஅணி செய்வார்.
34

காதல்புரி சிந்தைமகி ழக்களி சிறப்பார்
மீதணியும் நெய்யணி விழாவொடு திளைப்பார்
சூதநிகழ் மங்கல வினைத்துழனி பொங்கச்
சாதக முறைப்பல சடங்குவினை செய்வார்.
35
Go to top

மாமறை விழுக்குல மடந்தையர்கள் தம்மில்
தாமுறு மகிழ்ச்சியொடு சாயல்மயி லென்னத்
தூமணி விளக்கொடு சுடர்க்குழைகள் மின்னக்
காமர்திரு மாளிகை கவின்பொலிவு செய்வார்.
36

சுண்ணமொடு தண்மலர் துதைந்ததுகள் வீசி
உண்ணிறை விருப்பினுடன் ஓகையுரை செய்வார்
வெண்முளைய பாலிகைகள் வேதிதொறும் வைப்பார்
புண்ணிய நறும்புனல்கொள் பொற்குடம் நிரைப்பார் .

37

செம்பொன்முத லானபல தானவினை செய்வார்
நம்பர்அடி யார்அமுது செய்யநலம் உய்ப்பார்
வம்பலர் நறுந்தொடையல் வண்டொடு தொடுப்பார்
நிம்பமுத லானகடி நீடுவினை செய்வார்.
38

ஐயவி யுடன்பல அமைத்தபுகை யாலும்
நெய்யகில் நறுங்குறை நிறைத்தபுகை யாலும்
வெய்யதழல் ஆகுதி விழுப்புகையி னாலும்
தெய்வமணம் நாறவரு செய்தொழில் விளைப்பார்.
39

ஆயபல செய்தொழில்கள் அன்றுமுதல் விண்ணோர்
நாயகன் அருட்பெருமை கூறுநலம் எய்தத்
தூயதிரு மாமறை தொடர்ந்தநடை நூலின்
மேயவிதி ஐயிரு தினத்தினும் விளைத்தார்.
40
Go to top

நாமகர ணத்தழகு நாள்பெற நிறுத்திச்
சேமவுத யப்பரிதி யில்திகழ் பிரானைத்
தாமரை மிசைத்தனி முதற்குழவி யென்னத்
தூமணி நிரைத்தணிசெய் தொட்டில்அமர் வித்தார்.
41

பெருமலை பயந்தகொடி பேணுமுலை யின்பால்
அருமறை குழைத்தமுது செய்தருளு வாரைத்
தரும் இறைவி யார்பரமர் தாள்பரவும் அன்பே
திருமுலை சுரந்தமுது செய்தருளு வித்தார்.
42

ஆறுலவு செய்யசடை ஐயர்அரு ளாலே
பேறுலகி னுக்கென வரும்பெரி யவர்க்கு
வேறுபல காப்புமிகை என்றவை விரும்பார்
நீறுதிரு நெற்றியில் நிறுத்திநிறை வித்தார்.
43

தாயர்திரு மடித்தலத்தும்
தயங்குமணித் தவிசினிலும்
தூயசுடர்த் தொட்டிலினும்
தூங்குமலர்ச் சயனத்தும்
சேயபொருள் திருமறையும்
தீந்தமிழும் சிறக்கவரு
நாயகனைத் தாலாட்டு
நலம்பலபா ராட்டினார்.
44

வருமுறைமைப் பருவத்தின்
வளர்புகலிப் பிள்ளையார்
அருமறைகள் தலையெடுப்ப
ஆண்டதிரு முடியெடுத்துப்
பெருமழுவர் தொண்டல்லால்
பிறிதிசையோம் என்பார்போல்
திருமுகமண் டலமசையச்
செங்கீரை யாடினார்.
45
Go to top

நாமறியோம் பரசமயம்
உலகிலெதிர் நாடாது
போமகல என்றங்கை
தட்டுவதும் புனிதன்பால்
காமருதா ளம்பெறுதற்
கொத்துவதுங் காட்டுவபோல்
தாமரைச்செங் கைகளினால்
சப்பாணி கொட்டினார்.
46

விதிதவறு படும்வேற்றுச்
சமயங்க ளிடைவிழுந்து
கதிதவழ இருவிசும்பு
நிறைந்தகடி வார்கங்கை
நதிதவழுஞ் சடைமுடியார்
ஞானம்அளித் திடவுரியார்
மதிதவழ்மா ளிகைமுன்றில்
மருங்குதவழ்ந் தருளினார்.
47

சூழவரும் பெருஞ்சுற்றத்
தோகையரும் தாதியரும்
காழியர்தஞ் சீராட்டே
கவுணியர்கற் பகமேஎன்
றேழிசையும் பலகலையும்
எவ்வுலகும் தனித்தனியே
வாழவரும் அவர்தம்மை
வருகவரு கெனவழைப்ப.
48

திருநகையால் அழைத்தவர்தம் செழுமுகங்கள் மலர்வித்தும்
வருமகிழ்வு தலைசிறப்ப மற்றவர்மேற் செலவுகைத்தும்
உருகிமனங் கரைந்தலைய உடன்அணைந்து தழுவியும்முன்
பெருகியஇன் புறஅளித்தார் பெரும்புகலிப் பிள்ளையார்

49

வளர்பருவ முறையாண்டு
வருவதன்முன் மலர்வரிவண்
டுளர்கருமென் சுருட்குஞ்சி
உடனலையச் செந்நின்று
கிளர்ஒலிகிண் கிணியெடுப்பக்
கீழ்மைநெறிச் சமயங்கள்
தளர்நடையிட் டறத்தாமும்
தளர்நடையிட் டருளினார்.
50
Go to top

தாதியர்தங் கைப்பற்றித்
தளர்நடையின் அசைவொழிந்து
சோதியணி மணிச்சதங்கை
தொடுத்தவடம் புடைசூழ்ந்த
பாதமலர் நிலம்பொருந்தப்
பருவமுறை ஆண்டொன்றின்
மீதணைய நடந்தருளி
விளையாடத் தொடங்கினார்.
51

சிறுமணித்தேர் தொடர்ந்துருட்டிச்
செழுமணற்சிற் றில்கள்இழைக்கும்
நறுநுதற்பே தையர்மருங்கு
நடந்தோடி அடர்ந்தழித்தும்
குறுவியர்ப்புத் துளியரும்பக்
கொழும்பொடியா டியகோல
மறுகிடைப்பே ரொளிபரப்ப
வந்துவளர்ந் தருளினார்.
52

மங்கையோ டுடனாகி
வளர்தோணி வீற்றிருந்த
திங்கள்சேர் சடையார்தம்
திருவருட்குச் செய்தவத்தின்
அங்குரம்போல் வளர்ந்தருளி
அருமறையோ டுலகுய்ய
எங்கள்பிரான் ஈராண்டின்
மேல்ஓராண் டெய்துதலும்.
53

நாவாண்ட பலகலையும்
நாமகளும் நலஞ்சிறப்பப்
பூவாண்ட திருமகளும்
புண்ணியமும் பொலிவெய்தச்
சேவாண்ட கொடியவர்தம்
சிரபுரத்துச் சிறுவருக்கு
மூவாண்டில் உலகுய்ய
நிகழ்ந்ததனை மொழிகின்றேன்.
54

பண்டுதிரு வடிமறவாப்
பான்மையோர் தமைப்பரமர்
மண்டுதவ மறைக்குலத்தோர்
வழிபாட்டின் அளித்தருளத்
தொண்டின்நிலை தரவருவார்
தொடர்ந்தபிரி வுணர்வொருகால்
கொண்டெழலும் வெருக்கொண்டாற்
போல்அழுவார் குறிப்பயலாய்.
55
Go to top

மேதகைய இந்நாளில்
வேறொருநாள் வேதவிதி
நீதிமுறைச் சடங்குநெறி
முடிப்பதற்கு நீராடத்
தாதையார் போம்பொழுது
தம்பெருமான் அருள்கூடச்
சோதிமணி மனைமுன்றில்
தொடர்ந்தழுது பின்சென்றார்.
56

பின்சென்ற பிள்ளையார்
தமைநோக்கிப் பெருந்தவத்தோர்
முன்செல்கை தனையொழிந்து
முனிவார்போல் விலக்குதலும்
மின்செய்பொலங் கிண்கிணிக்கால்
கொட்டியவர் மீளாமை
உன்செய்கை இதுவாகில்
போதுஎன்றுஅங் குடன்சென்றார்.
57

கடையுகத்தில் தனிவெள்ளம்
பலவிரிக்குங் கருப்பம்போல்
இடையறாப் பெருந்தீர்த்தம்
எவற்றினுக்கும் பிறப்பிடமாய்
விடையுயர்த்தார் திருத்தோணிப்
பற்றுவிடா மேன்மையதாம்
தடமதனில் துறையணைந்தார்
தருமத்தின் தலைநின்றார்.
58

பிள்ளையார் தமைக்கரையில்
வைத்துத்தாம் பிரிவஞ்சித்
தெள்ளுநீர்ப் புகமாட்டார்
தேவியொடுந் திருத்தோணி
வள்ளலார் இருந்தாரை
எதிர்வணங்கி மணிவாவி
உள்ளிழிந்து புனல்புக்கார்
உலகுய்ய மகப்பெற்றார்.
59

நீராடித் தருப்பித்து
நியமங்கள் பலசெய்வார்
சீராடும் திருமகனார்
காண்பதன்முன் செய்ததற்பின்
ஆராத விருப்பினால்
அகமருடம் படியநீர்
பேராது மூழ்கினார்
பெருங்காவல் பெற்றாராய்.
60
Go to top

மறைமுனிவர் மூழ்குதலும்
மற்றவர்தம் மைக்காணா
திறைதரியார் எனும்நிலைமை
தலைக்கீடா ஈசர்கழல்
முறைபுரிந்த முன்னுணர்வு
மூளஅழத் தொடங்கினார்
நிறைபுனல்வா விக்கரையில்
நின்றருளும் பிள்ளையார்.
61

கண்மலர்கள் நீர்ததும்பக்
கைம்மலர்க ளாற்பிசைந்து
வண்ணமலர்ச் செங்கனிவாய்
மணியதரம் புடைதுடிப்ப
எண்ணில்மறை ஒலிபெருக
எவ்வுயிரும் குதூகலிப்பப்
புண்ணியக்கன் றனையவர்தாம்
பொருமிஅழு தருளினார்.
62

மெய்ம்மேற்கண் துளிபனிப்ப
வேறெங்கும் பார்த்தழுவார்
தம்மேலைச் சார்புணர்ந்தோ
சாரும்பிள் ளைமைதானோ
செம்மேனி வெண்ணீற்றார்
திருத்தோணிச் சிகரம்பார்த்து
அம்மேஅப் பாஎன்றென்று
அழைத்தருளி அழுதருள.
63

அந்நிலையில் திருத்தோணி
வீற்றிருந்தார் அருள்நோக்கால்
முன்நிலைமைத் திருத்தொண்டு
முன்னியவர்க் கருள்புரிவான்
பொன்மலைவல் லியுந்தாமும்
பொருவிடைமே லெழுந்தருளிச்
சென்னியிளம் பிறைதிகழச்
செழும்பொய்கை மருங்கணைந்தார்.
64

திருமறைநூல் வேதியர்க்கும்
தேவியர்க்கும் தாங்கொடுத்த
பெருகுவரம் நினைந்தோதான்
தம்பெருமைக் கழல்பேணும்
ஒருநெறியில் வருஞானங்
கொடுப்பதனுக் குடனிருந்த
அருமறையா ளுடையவளை
அளித்தருள அருள்செய்வார்.
65
Go to top

அழுகின்ற பிள்ளையார்
தமைநோக்கி அருட்கருணை
எழுகின்ற திருவுள்ளத்
திறையவர்தாம் எவ்வுலகும்
தொழுகின்ற மலைக்கொடியைப்
பார்த்தருளித் துணைமுலைகள்
பொழிகின்ற பாலடிசில்
பொன்வள்ளத் தூட்டென்ன.
66

ஆரணமும் உலகேழும்
ஈன்றருளி அனைத்தினுக்கும்
காரணமாய் வளம்பெருகு
கருணைதிரு வடிவான
சீரணங்கு சிவபெருமான்
அருளுதலும் சென்றணைந்து
வாரிணங்கு திருமுலைப்பால்
வள்ளத்துக் கறந்தருளி.
67

எண்ணரிய சிவஞானத்
தின்னமுதம் குழைத்தருளி
உண்ணடிசில் எனவூட்ட
உமையம்மை எதிர்நோக்கும்
கண்மலர்நீர் துடைத்தருளிக்
கையிற்பொற் கிண்ணமளித்
தண்ணலைஅங் கழுகைதீர்த்
தங்கணனார் அருள்புரிந்தார்.
68

யாவருக்குந் தந்தைதாய்
எனுமிவர்இப் படியளித்தார்
ஆவதனா லாளுடைய
பிள்ளையா ராய்அகில
தேவருக்கும் முனிவருக்குந்
தெரிவரிய பொருளாகும்
தாவில்தனிச் சிவஞான
சம்பந்த ராயினார்.
69

சிவனடியே சிந்திக்குந்
திருப்பெருகு சிவஞானம்
பவமதனை யறமாற்றும்
பாங்கினில்ஓங் கியஞானம்
உவமையிலாக் கலைஞானம்
உணர்வரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர்
தாம்உணர்ந்தார் அந்நிலையில்.
70
Go to top

எப்பொருளும் ஆக்குவான்
ஈசநே எனுமுணர்வும்
அப்பொருள்தான் ஆளுடையார்
அடியார்கள் எனுமறிவும்
இப்படியா லிதுவன்றித்
தம்மிசைவு கொண்டியலும்
துப்புரவில் லார்துணிவு
துகளாகச் சூழந்தெழுந்தார்.
71

சீர்மறையோர் சிவபாத
இருதயரும் சிறுபொழுதில்
நீர்மருவித் தாஞ்செய்யும்
நியமங்கள் முடித்தேறிப்
பேருணர்விற் பொலிகின்ற
பிள்ளையார் தமைநோக்கி
யார்அளித்த பாலடிசில்
உண்டதுநீ எனவெகுளா.
72

எச்சில்மயங் கிடவுனக்கீ
திட்டாரைக் காட்டென்று
கைச்சிறியது ஒருமாறு
கொண்டோச்சக் காலெடுத்தே
அச்சிறிய பெருந்தகையார்
ஆனந்தக் கண்துளிபெய்
துச்சியின் மேல் எடுத்தருளும்
ஒருதிருக்கை விரற்சுட்டி.
73

விண்ணிறைந்த பெருகொளியால்
விளங்குமழ விடைமேலே
பண்ணிறைந்த அருமறைகள்
பணிந்தேத்தப் பாவையுடன்
எண்ணிறைந்த கருணையினால்
நின்றாரை எதிர்காட்டி
உண்ணிறைந்து பொழிந்தெழுந்த
உயர்ஞானத் திருமொழியால்.
74

எல்லையிலா மறைமுதல்மெய்
யுடன்எடுத்த எழுதுமறை
மல்லல்நெடுந் தமிழாலிம்
மாநிலத்தோர்க் குரைசிறப்பப்
பல்லுயிருங் களிகூரத்
தம்பாடல் பரமர்பால்
செல்லுமுறை பெறுவதற்குத்
திருச்செவியைச் சிறப்பித்து.
75
Go to top

செம்மைபெற எடுத்ததிருத்
தோடுடைய செவியன்எனும்
மெய்ம்மைமொழித் திருப்பதிகம்
பிரமபுரம் மேவினார்
தம்மையடை யாளங்க
ளுடன்சாற்றித் தாதையார்க்
கெம்மையிது செய்தபிரான்
இவனன்றே எனவிசைத்தார்.
76

மண்ணுலகில் வாழ்வார்கள்
பிழைத்தாலும் வந்தடையின்
கண்ணுதலான் பெருங்கருணை
கைக்கொள்ளும் எனக்காட்ட
எண்ணமிலா வல்லரக்கன்
எடுத்துமுறிந் திசைபாட
அண்ணலவற் கருள்புரிந்த
ஆக்கப்பா டருள்செய்தார்.
77

தொழுவார்க்கே அருளுவது
சிவபெருமான் எனத்தொழார்
வழுவான மனத்தாலே
மாலாய மாலயனும்
இழிவாகுங் கருவிலங்கும்
பறவையுமாய் எய்தாமை
விழுவார்கள் அஞ்செழுத்தும்
துதித்துய்ந்த படிவிரித்தார்.
78

வேதகா ரணராய
வெண்பிறைசேர் செய்யசடை
நாதன்நெறி அறிந்துய்யார்
தம்மிலே நலங்கொள்ளும்
போதமிலாச் சமண்கையர்
புத்தர்வழி பழியாக்கும்
ஏதமே யெனமொழிந்தார்
எங்கள்பிரான் சம்பந்தர்.
79

திருப்பதிகம் நிறைவித்துத்
திருக்கடைக்காப் புச்சாத்தி
இருக்குமொழிப் பிள்ளையார்
எதிர்தொழுது நின்றருள
அருட்கருணைத் திருவாள
னார்அருள்கண் டமரரெலாம்
பெருக்கவிசும் பினிலார்த்துப்
பிரசமலர் மழைபொழிந்தார்.
80
Go to top

வந்தெழும்மங் கலமான
வானதுந் துபிமுழக்கும்
கந்தருவர் கின்னரர்கள்
கானவொலிக் கடல்முழக்கும்
இந்திரனே முதல்தேவர்
எடுத்தேத்தும் இசைமுழக்கும்
அந்தமில்பல் கணநாதர்
அரஎனுமோ சையின்அடங்க.
81

மறைகள் கிளர்ந்தொலி வளர
முழங்கிட வானோர்தம்
நிறைமுடி உந்திய நிறைமணி
சிந்திட நீள்வானத்
துறையென வந்துல கடைய
நிறைந்திட ஓவாமெய்ப்
பொறைபெரு குந்தவ முனிவர்
எனுங்கடல் புடைசூழ.
82

அணைவுற வந்தெழும் அறிவு
தொடங்கின அடியார்பால்
இணையில் பவங்கிளர் கடல்கள்
இகந்திட இருதாளின்
புணையருள் அங்கணர் பொருவிடை
தங்கிய புணர்பாகத்
துணையொ டணைந்தனர் சுருதி
தொடர்ந்த பெருந்தோணி.
83

அண்ணல் அணைந்தமை கண்டு
தொடர்ந்தெழும் அன்பாலே
மண்மிசை நின்ற மறைச்சிறு
போதகம் அன்னாரும்
கண்வழி சென்ற கருத்து
விடாது கலந்தேகப்
புண்ணியர் நண்ணிய பூமலி
கோயிலின் உட்புக்கார்.
84

ஈறில் பெருந்தவம் முன்செய்து
தாதை யெனப்பெற்றார்
மாறு விழுந்த மலர்க்கை
குவித்து மகிழ்ந்தாடி
வேறு விளைந்த வெருட்சி
வியப்பு விருப்போடும்
கூறும் அருந்தமி ழின்பொரு
ளான குறிப்போர்வார்.
85
Go to top

தாணு வினைத்தனி கண்டு
தொடர்ந்தவர் தம்மைப்போல்
காணுதல் பெற்றில ரேனும்
நிகழ்ந்தன கண்டுள்ளார்
தோணி புரத்திறை தன்னரு
ளாதல் துணிந்தார்வம்
பேணு மனத்தொடு முன்புகு
காதலர் பின்சென்றார்.
86

அப்பொழுது அங்கண் அணைந்தது
கண்டவர் அல்லாதார்
முப்புரி நூன்மறை யோர்கள்
உரோம முகிழ்ப்பெய்தி
இப்படி யொப்பதொர் அற்புதம்
எங்குள தென்றென்றே
துப்புறழ் வேணியர் கோயிலின்
வாயில் புறஞ்சூழ.
87

பொங்கொளி மால்விடை மீது
புகுந்தணி பொற்றோணி
தங்கி இருந்த பெருந்திரு
வாழ்வு தலைப்பட்டே
இங்கெனை யாளுடை யானுமை
யோடும் இருந்தான்என்
றங்கெதிர் நின்று புகன்றனர்
ஞானத் தமுதுண்டார்.
88

இன்னிசை ஏழும் இசைந்த
செழுந்தமிழ் ஈசற்கே
சொன்முறை பாடு தொழும்பருள்
பெற்ற தொடக்கோடும்
பன்மறை வேதியர் காண
விருப்பொடு பால்நாறும்
பொன்மணி வாயினர் கோயிலின்
நின்று புறப்பட்டார்.
89

பேணிய அற்புத நீடருள்
பெற்ற பிரான்முன்னே
நீணிலை யில்திகழ் கோபுர
வாயிலின் நேரெய்தி
வாணில வில்திகழ் வேணியர்
தொண்டர்கள் வாழ்வெய்துந்
தோணி புரத்தவர் தாமெதிர்
கொண்டு துதிக்கின்றார்.
90
Go to top

காழியர் தவமே கவுணியர்
தனமே கலைஞானத்
தாழிய கடலே அதனிடை
யமுதே அடியார்முன்
வாழிய வந்திம் மண்மிசை
வானோர் தனிநாதன்
ஏழிசை மொழியாள் தன்திரு
வருள்பெற் றனையென்பார்.
91

மறைவளர் திருவே வைதிக
நிலையே வளர்ஞானப்
பொறையணி முகிலே புகலியர்
புகலே பொருபொன்னித்
துறைபெறு மணியே சுருதியின்
ஒளியே வெளியேவந்
திறையவன் உமையா ளுடன்அருள்
தரஎய் தினையென்பார்.
92

புண்ணிய முதலே புனைமணி
அரைஞா ணொடுபோதும்
கண்ணிறை கதிரே கலைவளர்
மதியே கவின்மேவும்
பண்ணியல் கதியே பருவம
தொருமூ வருடத்தே
எண்ணிய பொருளாய் நின்றவர்
அருள்பெற் றனையென்பார்.
93

என்றினைய பலகூறி இருக்குமொழி
அந்தணரும் ஏனை யோரும்
நின்றுதுதி செய்தவர்தாள் நீள்முடிக்கண்
மேல்ஏந்தி நிரந்த போது
சென்றணைந்த தாதையார் சிவபாத
இருதயர்தாம் தெய்வ ஞானக்
கன்றினைமுன் புக்கெடுத்துப் பியலின்மேற்
கொண்டுகளி கூர்ந்து செல்ல.
94

மாமறையோர் குழாத்தினுடன் மல்குதிருத்
தொண்டர்குழாம் மருங்கு சூழ்ந்து
தாமறுவை உத்தரியந் தனிவிசும்பில்
எறிந்தார்க்குந் தன்மை யாலே
பூமறுகு சிவானந்தப் பெருக்காறு
போத அதன்மீது பொங்கும்
காமர்நுரைக் குமிழியெழுந் திழிவனபோல்
95
Go to top

நீடுதிருக் கழுமலத்து நிலத்தேவர்
மாளிகைமேல் நெருங்கி அங்கண்
மாடுநிறை மடவார்கள் மங்கலமாம்
மொழிகளால் வாழ்த்தி வாசத்
தோடுமலி நறுமலருஞ் சுண்ணமும்வெண்
பொரியினொடுந் தூவி நிற்பார்
கோடுபயில் குலவரைமேல் மின்குலங்கள்
புடைபெயருங் கொள்கைத் தாக.
96

மங்கலதூ ரியந்துவைப்பார் மறைச்சாமம்
பாடுவார் மருங்கு வேதிப்
பொங்குமணி விளக்கெடுத்துப் பூரணகும்
பமும்நிரைப்பார் போற்றி செய்வார்
அங்கவர்கள் மனத்தெழுந்த அதிசயமும்
பெருவிருப்பும் அன்பும் பொங்கத்
தங்குதிரு மலிவீதிச் சண்பைநகர்
வலஞ்செய்து சாருங் காலை.
97

தந்திருமா ளிகையின்கண் எழுந்தருளிப்
புகும்பொழுது சங்க நாதம்
அந்தரதுந் துபிமுதலா அளவில்பெரு
கொலிதழைப்ப அணைந்து புக்கார்
சுந்தரப்பொற் றோணிமிசை இருந்தபிரான்
உடன்அமர்ந்த துணைவி யாகும்
பைந்தொடியாள் திருமுலையின் பாலறா
மதுரமொழிப் பவள வாயார்.
98

தூமணிமா ளிகையின்கண் அமர்ந்தருளி
அன்றிரவு தொல்லை நாத
மாமறைகள் திரண்டபெருந் திருத்தோணி
மன்னிவீற் றிருந்தார் செய்ய
காமருசே வடிக்கமலங் கருத்திலுற
இடையறாக் காதல் கொண்டு
நாமநெடுங் கதிர்உதிப்ப நண்ணினார்
திருத்தோணி நம்பர் கோயில்.
99

காதலுடன் அணைந்துதிருக் கழுமலத்துக்
கலந்துவீற் றிருந்த தங்கள்
தாதையா ரையும்வெளியே தாங்கரிய
மெய்ஞ்ஞானந் தம்பால் வந்து
போதமுலை சுரந்தளித்த புண்ணியத்தா
யாரையும்முன் வணங்கிப் போற்றி
மேதகைய அருள்பெற்றுத் திருக்கோலக்
காஇறைஞ்ச விருப்பிற் சென்றார்.
100
Go to top

பெருக்குஓலிட் டலைபிறங்கும் காவிரிநீர்
பிரசமலர் தரளம் சிந்த
வரிக்கோல வண்டாட மாதரார்
குடைந்தாடும் மணிநீர் வாவித்
திருக்கோலக் காவெய்தித் தேவர்பிரான்
கோயில்வலஞ் செய்து முன்னின்
றிருக்கோலிட் டறிவரிய திருப்பாதம்
ஏத்துவதற் கெடுத்துக் கொள்வார்.
101

மெய்ந்நிறைந்த செம்பொருளாம் வேதத்தின்
விழுப்பொருளை வேணிமீது
பைந்நிறைந்த அரவுடனே பசுங்குழவித்
திங்கள்பரித் தருளு வானை
மைந்நிறைந்த மிடற்றானை மடையில்வா
ளைகள்பாய என்னும் வாக்கால்
கைந்நிறைந்த ஒத்துஅறுத்துக் கலைப்பதிகம்
கவுணியர்கோன் பாடுங் காலை.
102

கையதனால் ஒத்தறுத்துப் பாடுதலும்
கண்டருளிக் கருணை கூர்ந்த
செய்யசடை வானவர்தம் அஞ்செழுத்தும்
எழுதியநற் செம்பொற் றாளம்
ஐயரவர் திருவருளால் எடுத்தபா
டலுக்கிசைந்த அளவால் ஒத்த
வையமெலாம் உய்யவரு மறைச்சிறுவர்
கைத்தலத்து வந்த தன்றே.
103

காழிவரும் பெருந்தகையார் கையில்வருந்
திருத்தாளக் கருவி கண்டு
வாழியதந் திருமுடிமேற் கொண்டருளி
மனங்களிப்ப மதுர வாயில்
ஏழிசையுந் தழைத்தோங்க இன்னிசைவண்
தமிழ்ப்பதிகம் எய்தப் பாடித்
தாழுமணிக் குழையார்முன் தக்கதிருக்
கடைக்காப்புச் சாத்தி நின்றார்.
104

உம்பருல கதிசயிப்ப ஓங்கியநா
தத்தளவின் உண்மை நோக்கித்
தும்புருநா ரதர்முதலாம் சுருதியிசைத்
துறையுள்ளோர் துதித்து மண்மேல்
வம்பலர்மா மழைபொழிந்தார் மறைவாழ
வந்தருளும் மதலை யாரும்
தம்பெருமான் அருள்போற்றி மீண்டருளிச்
சண்பைநகர் சாரச் செல்வார்.
105
Go to top

செங்கமல மலர்க்கரத்துத் திருத்தாளத்
துடன்நடந்து செல்லும் போது
தங்கள்குலத் தாதையார் தரியாது
தோளின்மேல் தரித்துக் கொள்ள
அங்கவர்தந் தோளி ன்மிசை எழுந்தருளி
அணைந்தார்சூழ்ந் தமர ரேத்தும்
திங்களணி மணிமாடத் திருத்தோணி
புரத்தோணிச் சிகரக் கோயில்.
106

திருப்பெருகு பெருங்கோயில் சூழவலங்
கொண்டருளித் திருமுன் நின்றே
அருட்பெருகு திருப்பதிகம் எட்டொருகட்
டளையாக்கி அவற்று ளொன்று
விருப்புறுபொற் றிருத்தோணி வீற்றிருந்தார்
தமைப்பாட மேவுகாதல்
பொருத்தமுற அருள்பெற்றுப் போற்றியெடுத்
தருளினார் பூவார் கொன்றை.
107

எடுத்ததிருப் பதிகத்தின் இசைதிருத்தா
ளத்தினால் இசைய வொத்தி
அடுத்தநடை பெறப்பாடி ஆர்வமுற
வணங்கிப்போந் தலைநீர்ப் பொன்னி
மடுத்தவயற் பூந்தரா யவர்வாழ
மழவிளங்கோ லத்துக் காட்சி
கொடுத்தருளி வைகினார் குறைவிலா
நிறைஞானக் கொண்ட லார்தாம்.
108

அந்நிலையில் ஆளுடைய பிள்ளையார்
தமைமுன்னம் அளித்த தாயார்
முன்னுதிக்க முயன்றதவத் திருநன்னி
பள்ளிமுதன் மறையோர் எல்லாம்
மன்னுபெரு மகிழ்ச்சியுடன் மங்கலதூ
ரியந்துவைப்ப மறைகள் ஓதிக்
கன்னிமதிற் சண்பைநகர் வந்தணைந்து
கவுணியர்கோன் கழலில் தாழ்ந்தார்.
109

மங்கலமாம் மெய்ஞ்ஞானம் மண்களிப்பப்
பெற்றபெரு வார்த்தை யாலே
எங்கணும்நீள் பதிமருங்கில் இருபிறப்பா
ளரும்அல்லா ஏனை யோரும்
பொங்குதிருத் தொண்டர்களும் அதிசயித்துக்
குழாங்கொண்டு புகலி யார்தம்
சிங்கஇள வேற்றின்பால் வந்தணைந்து
கழல்பணியுஞ் சிறப்பின் மிக்கார்.
110
Go to top

வந்ததிருத் தொண்டர்கட்கும் மல்குசெழு
மறையவர்க்கும் மற்று ளோர்க்கும்
சிந்தைமகிழ் வுறமலர்ந்து திருவமுது
முதலான சிறப்பின் செய்கை
தந்தம்அள வினில்விரும்புந் தகைமையினால்
கடனாற்றுஞ் சண்பை மூதூர்
எந்தைபிரான் சிவலோகம் எனவிளங்கி
எவ்வுலகும் ஏத்து நாளில்.
111

செழுந்தரளப் பொன்னிசூழ் திருநன்னி
பள்ளியுள்ளோர் தொழுது திங்கள்
கொழுந்தணியுஞ் சடையாரை யெங்கள்பதி
யினிற்கும்பிட் டருள அங்கே
எழுந்தருள வேண்டும்என இசைந்தருளித்
தோணிவீற் றிருந்தார் பாதம்
தொழுந்தகைமை யாலிறைஞ்சி அருள்பெற்றுப்
பிறபதியும் தொழமுன் செல்வார்.
112

தாதவிழ்செந் தாமரையின் அகவிதழ்போல்
சீறடிகள் தரையின்மீது
போதுவதும் பிறரொருவர் பொறுப்பதுவும்
பொறாஅன்பு புரிந்த சிந்தை
மாதவஞ்செய் தாதையார் வந்தெடுத்துத்
தோளின்மேல் வைத்துக் கொள்ள
நாதர்கழல் தம்முடிமேற் கொண்டகருத்
துடன்போந்தார் ஞான முண்டார்.
113

தேனலருங் கொன்றையினார் திருநன்னி
பள்ளியினைச் சாரச் செல்வார்
வானணையும் மலர்ச்சோலை தோன்றுவதெப்
பதியென்ன மகிழ்ச்சி யெய்திப்
பானல்வயல் திருநன்னி பள்ளியெனத்
தாதையார் பணிப்பக் கேட்டு
ஞானபோ னகர்தொழுது நற்றமிழ்ச்சொல்
தொடைமாலை நவில லுற்றார்.
114

காரைகள் கூகை முல்லை
எனநிகழ் கலைசேர் வாய்மைச்
சீரியற் பதிகம் பாடித்
திருக்கடைக் காப்புத் தன்னில்
நாரியோர் பாகர் வைகும்
நனிபள்ளி உள்கு வார்தம்
பேரிடர் கெடுதற் காணை
நமதெனும் பெருமை வைத்தார்.
115
Go to top

ஆதியார் கோயில் வாயில்
அணைந்துபுக் கன்பு கூர
நீதியாற் பணிந்து போற்றி
நீடிய அருள்முன் பெற்றுப்
போதுவார் தம்மைச் சூழ்ந்து
பூசுரர் குழாங்கள் போற்றும்
காதல்கண் டங்க மர்ந்தார்
கவுணியர் தலைவ னார்தாம்.
116

அம்பிகை அளித்த ஞானம்
அகிலமும் உய்ய வுண்ட
நம்பெருந் தகையார் தம்மை
எதிர்கொண்டு நண்ண வேண்டி
உம்பரும் வணங்கு மெய்ம்மை
உயர்தவத் தொண்ட ரோடு
தம்பெரு விருப்பால் வந்தார்
தலைசைஅந் தணர்க ளெல்லாம்.
117

காவணம் எங்கும் இட்டுக்
கமுகொடு கதலி நாட்டிப்
பூவணத் தாமந் தூக்கிப்
பூரண கும்ப மேந்தி
ஆவண வீதி எல்லாம்
அலங்கரித் தண்ண லாரை
மாவண மலர்மென் சோலை
வளம்பதி கொண்டு புக்கார்.
118

திருமறை யோர்கள் சூழ்ந்து
சிந்தையின் மகிழ்ச்சி பொங்கப்
பெருமறை ஓசை மல்கப்
பெருந்திருக் கோயில் எய்தி
அருமறைப் பொருளா னாரைப்
பணிந்தணி நற்சங் கத்தில்
தருமுறை நெறியக் கோயில்
சார்ந்தமை அருளிச் செய்தார்.
119

கறையணி கண்டர் கோயில்
காதலால் பணிந்து பாடி
மறையவர் போற்ற வந்து
திருவலம் புரத்து மன்னும்
இறைவரைத் தொழுது பாடும்
கொடியுடை ஏத்திப் போந்து
நிறைபுனல் திருச்சாய்க் காடு
தொழுதற்கு நினைந்து செல்வார்.
120
Go to top

பன்னகப் பூணி னாரைப்
பல்லவ னீச்ச ரத்துச்
சென்னியால் வணங்கி ஏத்தித்
திருந்திசைப் பதிகம் பாடிப்
பொன்னிசூழ் புகாரில்நீடு
புனிதர்தம் திருச்சாய்க் காட்டு
மன்னுசீர்த்தொண்ட ரெல்லாம்
மகிழ்ந்தெதிர் கொள்ளப் புக்கார்.
121

வானள வுயர்ந்த வாயில்
உள்வலங் கொண்டு புக்குத்
தேனலர் கொன்றை யார்தம்
திருமுன்பு சென்று தாழ்ந்து
மானிடந் திரித்தார் தம்மைப்
போற்றுவார் மண்பு கார்என்
றூனெலாம் உருக ஏத்தி
உச்சிமேற் குவித்தார் செங்கை.
122

சீரினில் திகழ்ந்த பாடல்
திருக்கடைக் காப்புப் போற்றிப்
பாரினில் பொலிந்த தொண்டர்
போற்றிடப் பயில்வார் பின்னும்
ஏரிசைப் பதிகம் பாடி
ஏத்திப்போந் திறைவர் வெண்கா
டாருமெய்க் காத லோடும்
பணிவதற் கணைந்தா ரன்றே.
123

பொன்னிதழ்க் கொன்றை வன்னி
புனலிள மதியம்நீடு
சென்னியர் திருவெண் காட்டுத்
திருத்தொண்டர் எதிரே சென்றங்
கின்னதன் மையர்க ளானார்
எனவொணா மகிழ்ச்சி பொங்க
மன்னுசீர்ச் சண்பை யாளும்
மன்னரைக் கொண்டு புக்கார்.
124

முத்தமிழ் விரகர் தாமும்
முதல்வர்கோ புரத்து முன்னர்ச்
சித்தநீ டுவகை யோடும்
சென்றுதாழ்ந் தெழுந்து புக்குப்
பத்தராம் அடியார் சூழப்
பரமர்கோ யிலைச்சூழ் வந்து
நித்தனார் தம்முன் பெய்தி
நிலமுறத் தொழுது வீழ்ந்தார்.
125
Go to top

மெய்ப்பொரு ளாயி னாரை
வெண்காடு மேவி னாரைச்
செப்பரும் பதிக மாலை
கண்காட்டு நுதன்முன் சேர்த்தி
முப்புரம் செற்றார் பாதம்
சேரும்முக் குளமும் பாடி
ஒப்பரும் ஞானம் உண்டார்
உளமகிழந் தேத்தி வாழ்ந்தார்.
126

அருமையாற் புறம்பு போந்து
வணங்கிஅங் கமரும் நாளில்
திருமுல்லை வாயில் எய்திச்
செழுந்தமிழ் மாலை சாத்தி
மருவிய பதிகள் மற்றும்
வணங்குவார் மறையோர் ஏத்தத்
தருமலி புகலி வந்து
ஞானசம் பந்தர் சார்ந்தார்.
127

தோணிவீற் றிருந்தார் தம்மைத்
தொழுதுமுன் நின்று தூய
ஆணியாம் பதிகம் பாடி
அருட்பெரு வாழ்வு கூரச்
சேணுயர் மாட மோங்குந்
திருப்பதி அதனிற் செய்ய
வேணியார் தம்மை நாளும்
போற்றிய விருப்பின் மிக்கார்.
128

வைகுமந் நாளிற் கீழ்பால்
மயேந்திரப் பள்ளி வாசம்
செய்பொழில் குருகா வூரும்
திருமுல்லை வாயில் உள்ளிட்
டெய்திய பதிக ளெல்லாம்
இன்புற இறைஞ்சி ஏத்தித்
தையலாள் பாகர் தம்மைப்
பாடினார் தமிழ்ச்சொல் மாலை.
129

அவ்வகை மருங்கு சூழ்ந்த
பதிகளில் அரனார் பொற்றாள்
மெய்வகை ஞானம் உண்ட
வேதியர் விரவிப் போற்றி
உய்வகை மண்ணு ளோருக்கு
உதவிய பதிகம் பாடி
எவ்வகை யோரும் ஏத்த
இறைவரை ஏத்து நாளில்.
130
Go to top

திருநீல கண்டத்துப்
பெரும்பாணர் தெள்ளமுதின்
வருநீர்மை இசைப்பாட்டு
மதங்கசூ ளாமணியார்
ஒருநீர்மையுடன் உடைய
பிள்ளையார் கழல்வணங்கத்
தருநீர்மை யாழ்கொண்டு
சண்பையிலே வந்தணைந்தார்.
131

பெரும்பாணர் வரவறிந்து
பிள்ளையார் எதிர்கொள்ளச்
சுரும்பார்செங் கமலமலர்த்
துணைப்பாதந் தொழுதெழுந்து
விரும்பார்வத் தொடும்ஏத்தி
மெய்ம்மொழிக ளால்துதித்து
வரும்பான்மை தருவாழ்வு
வந்தெய்த மகிழ்சிறந்தார்.
132

அளவிலா மகிழ்ச்சியினார்
தமைநோக்கி ஐயர்நீர்
உளமகிழ இங்கணைந்த
உறுதியுடை யோமென்றே
இளநிலா நகைமுகிழ்ப்ப
இசைத்தவரை உடன்கொண்டு
களநிலவு நஞ்சணிந்தார்
பாலணையுங் கவுணியனார்.
133

கோயிலினிற் புறமுன்றிற்
கொடுபுக்குக் கும்பிடுவித்
தேயுமிசை யாழ்உங்கள்
இறைவருக்கிங் கியற்றும்என
ஆயபுகழ்ப் பிள்ளையார்
அருள்பெற்ற அதற்கிறைஞ்சி
மேயதொடைத் தந்திரியாழ்
வீக்கிஇசை விரிக்கின்றார்.
134

தானநிலைக் கோல்வடித்துப்
படிமுறைமைத் தகுதியினால்
ஆனஇசை ஆராய்வுற்
றங்கணர்தம் பாணியினை
மானமுறைப் பாடினியா
ருடன்பாடி வாசிக்க
ஞானபோ னகர்மகிழ்ந்தார்
நான்மறையோர் அதிசயத்தார்.
135
Go to top

யாழிலெழும் ஓசையுடன்
இருவர்மிடற் றிசையொன்றி
வாழிதிருத் தோணியுளார்
மருங்கணையும் மாட்சியினைத்
தாழுமிரு சிறைப்பறவை
படிந்ததனி விசும்பிடைநின்
றேழிசை நூற் கந்தருவர்
விஞ்சையரும் எடுத்திசைத்தார்.
136

எண்ணருஞ்சீர்த் திருத்தோணி
எம்பெருமான் கழல்பரவிப்
பண்ணமையா ழிசைகூடப்
பெரும்பாணர் பாடியபின்
கண்ணுதலார் அருளினால்
காழியர்கோன் கொடுபோந்து
நண்ணிஉறை யிடஞ்சமைத்து
நல்விருந்து சிறந்தளிப்ப.
137

பிள்ளையார் அருள்பெற்ற
பெரும்பாணர் பிறையணிந்த
வெள்ளநீர்ச் சடையாரை
அவர்மொழிந்த மெய்ப்பதிகம்
உள்ளபடி கேட்டலுமே
யுருகுபெரு மகிழ்ச்சியராய்த்
தெள்ளமிர்தம் அருந்தினர்போற்
சிந்தைகளிப் புறத்தொழுதார்.
138

காழியார் தவப்பயனாம்
கவுணியர்தம் தோன்றலார்
ஆழிவிட முண்டவர்தம்
அடிபோற்றும் பதிகஇசை
யாழின்முறை மையின்இட்டே
எவ்வுயிரு மகிழ்வித்தார்
ஏழிசையும் பணிகொண்ட
நீலகண்ட யாழ்ப்பாணர்.
139

சிறியமறைக் களிறளித்த
திருப்பதிக இசையாழின்
நெறியிலிடும் பெரும்பாணர்
பின்னுநீர் அருள்செய்யும்
அறிவரிய திருப்பதிக
இசையாழில் இட்டடியேன்
பிறிவின்றிச் சேவிக்கப்
பெறவேண்டும் எனத்தொழுதார்.
140
Go to top

மற்றதற்குப் பிள்ளையார்
மனமகிழ்வுற் றிசைந்தருளப்
பெற்றவர்தாம் தம்பிரான்
அருளிதுவே யெனப்பேணிச்
சொற்றமிழ்மா லையின்இசைகள்
சுருதியாழ் முறைதொடுத்தே
அற்றைநாட் போலென்றும்
அகலாநண் புடன்அமர்ந்தார்.
141

சிரபுரத்தில் அமர்ந்தருளுந்
திருஞான சம்பந்தர்
பரவுதிருத் தில்லைநடம்
பயில்வாரைப் பணிந்தேத்த
விரவியெழும் பெருங்காதல்
வெள்ளத்தை உள்ளத்தில்
தரஇசையுங் குறிப்பறியத்
தவமுனிவர்க்கு அருள்செய்தார்.
142

பிள்ளையார் அருள்செய்யப்
பெருந்தவத்தாற் பெற்றெடுத்த
வள்ளலார் தாமும்உடன்
செல்வதற்கு மனங்களிப்ப
வெள்ளிமால் வரையென்னத்
திருத்தோணி வீற்றிருந்த
புள்ளிமா னுரியாரைத்
தொழுதருளாற் புறப்பட்டார்.
143

தாவில்யாழ்ப் பாணரொடும்
தாதையார் தம்மோடும்
மேவியசீ ரடியார்கள்
புடைவரவெங் குருவேந்தர்
பூவின்மே லயன்போற்றும்
புகலியினைக் கடந்துபோய்த்
தேவர்கள்தம் பெருந்தேவர்
திருத்தில்லை வழிச்செல்வார்.
144

நள்ளி ருட்கண்நின் றாடுவார்
உறைபதி நடுவுகண் டனபோற்றி
முள்ளு டைப்புற வெள்ளிதழ்க்
கேதகை முகிழ்விரி மணஞ்சூழப்
புள்ளு டைத்தடம் பழனமும்
படுகரும் புடைகழிந் திடப்போந்து
கொள்ளி டத்திரு நதிக்கரை
அணைந்தனர் கவுணியர் குலதீபர்.
145
Go to top

வண்டி ரைத்தெழு செழுமலர்ப்
பிறங்கலும் மணியும் ஆரமும்உந்தித்
தண்ட லைப்பல வளத்தொடும்
வருபுனல் தாழ்ந்துசே வடிதாழத்
தெண்டி ரைக்கடற்பவளமும்
பணிலமும் செழுமணித் திரள்முத்தும்
கொண்டு இரட்டிவந்து ஓதமங்கு
எதிர்கொளக் கொள்ளிடங் கடந்தேறி.
146

பல்கு தொண்டர்தங் குழாத்தொடும்
உடன்வரும் பயில்மறை யவர்சூழச்
செல்க திப்பயன் காண்பவர்
போல்களி சிந்தைகூர் தரக்கண்டு
மல்கு தேவரே முதலனைத்
துயிர்களும் வணங்கவேண் டினவெல்லாம்
நல்கு தில்லைசூழ் திருவெல்லை
பணிந்தனர் ஞானஆ ரமுதுண்டார்.
147

செங்கண் ஏற்றவர் தில்லையே
நோக்கிஇத் திருந்துல கினிற்கெல்லாம்
மங்க லந்தரு மழவிளம்
போதகம் வரும்இரு மருங்கெங்கும்
தங்கு புள்ளொலி வாழ்த்துரை
எடுத்துமுன் தாமரை மதுவாசப்
பொங்கு செம்முகை கரங்குவித்
தலர்முகங் காட்டின புனற்பொய்கை.
148

கலவ மென்மயில் இனங்களித்
தழைத்திடக் கடிமணக் குளிர்கால்வந்
துலவி முன்பணிந் தெதிர்கொளச்
கிளர்ந்தெழுந் துடன்வருஞ் சுரும்பார்ப்ப
இலகு செந்தளிர் ஒளிநிறந்
திகழ்தர இருகுழை புடையாட
மலர்மு கம்பொலிந் தசையமென்
கொம்பர்நின் றாடுவ மலர்ச்சோலை.
149

இழைத்த டங்கொங்கை இமயமா
மலைக்கொடி இன்னமு தெனஞானம்
குழைத்த ளித்திட அமுதுசெய்
தருளிய குருளையார் வரக்கண்டு
மழைத்த மந்தமா ருதத்தினால்
நறுமலர் வண்ணநுண் துகள்தூவித்
தழைத்த பொங்கெழில் முகஞ்செய்து
வணங்கின தடம்பணை வயற்சாலி.
150
Go to top

ஞாலம் உய்ந்திட ஞானமுண்
டவர்எழுந் தருளும்அந் நலங்கண்டு
சேல லம்புதண் புனல்தடம்
படிந்தணை சீதமா ருதம்வீசச்
சால வும்பல கண்பெறும்
பயன்பெறுந் தன்மையிற் களிகூர்வ
போல சைந்திரு புடைமிடைந்
தாடின புறம்பணை நறும்பூகம்.
151

பவந்த விர்ப்பவர் தில்லைசூழ்
எல்லையில் மறையவர் பயில்வேள்விச்
சிவந்த ரும்பய னுடையஆ
குதிகளின் செழும்புகைப் பரப்பாலே
தவந்த ழைப்பவந் தருளிய
பிள்ளையார் தாமணை வுறமுன்னே
நிவந்த நீலநுண் துகில்விதா
னித்தது போன்றது நெடுவானம்.
152

கரும்பு செந்நெல்பைங் கமுகொடு
கலந்துயர் கழனியம் பணைநீங்கி
அரும்பு மென்மலர் தளிர்பல
மூலமென் றனைத்தின் ஆகரமான
மருங்கில் நந்தன வனம்பணிந்
தணைந்தனர் மாடமா ளிகையோங்கி
நெருங்கு தில்லைசூழ் நெடுமதில்
தென்திரு வாயில் நேரணித்தாக.
153

பொங்கு கொங்கையிற் கறந்தமெய்ஞ்
ஞானமாம் போனகம் பொற்குன்ற
மங்கை செங்கையா லூட்டவுண்
டருளிய மதலையார் வந்தார்என்
றங்கண்வாழ் பெருந்திருத் தில்லை
அந்தண ரன்பர்களுடன் ஈண்டி
எங்கும்மங்கல அணிமிக அலங்கரித்
தெதிர் கொள அணைவார்கள்.
154

வேத நாதமும் மங்கல
முழக்கமும் விசும்பிடை நிறைந்தோங்கச்
சீத வாசநீர் நிறைகுடந்
தீபங்கள் திசையெலாம் நிறைந்தாரச்
சோதி மாமணி வாயிலின் புறஞ்சென்று
சோபன வாக்கமுஞ் சொல்லிக்
கோதி லாதவர் ஞானசம்
பந்தரை எதிர்கொண்டு கொடுபுக்கார்.
155
Go to top

செல்வம் மல்கிய தில்லைமூ
தூரினில் தென்றிசைத் திருவாயில்
எல்லை நீங்கியுள் புகுந்திரு
மருங்குநின் றெடுக்கும்ஏத் தொலிசூழ
மல்லல் ஆவண மறுகிடைக்
கழிந்துபோய் மறையவர் நிறைவாழ்க்கைத்
தொல்லை மாளிகை நிறைத்திரு
வீதியைத் தொழுதணைந் தனர்தூயோர்.
156

மலர்ந்த பேரொளி குளிர்தரச்
சிவமணங் கமழ்ந்துவான் துகள்மாறிச்
சிலம்ப லம்புசே வடியவர்
பயில்வுறுஞ் செம்மையால் திருத்தொண்டு
கலந்த அன்பர்தஞ் சிந்தையில்
திகழ்திரு வீதிகண் களிசெய்யப்
புலங்கொள் மைந்தனார் எழுநிலைக்
கோபுரம் பணிந்தெழுந் தனர்போற்றி.
157

நீடு நீள்நிலைக் கோபுரத்
துள்புக்கு நிலவிய திருமுன்றில்
மாடு செம்பொனின் மாளிகை
வலங்கொண்டு வானுற வளர்திங்கள்
சூடு கின்றபே ரம்பலம்
தொழுதுபோந் தருமறை தொடர்ந்தேத்த
ஆடு கின்றவர் முன்புற
அணைந்தனர் அணிகிளர் மணிவாயில்.
158

நந்தி யெம்பிரான் முதற்கண
நாதர்கள் நலங்கொள்பன் முறைகூட
அந்த மில்லவர் அணுகிமுன்
தொழுதிரு அணுக்கனாந் திருவாயில்
சிந்தை யார்வமும் பெருகிடச்
சென்னியிற் சிறியசெங் கையேற
உய்ந்து வாழ்திரு நயனங்கள்
களிகொள்ள உருகுமன் பொடுபுக்கார்.
159

அண்ண லார்தமக் களித்தமெய்ஞ்
ஞானமே யானஅம் பலமுந்தம்
உண்ணி றைந்தஞா னத்தெழும்
ஆனந்த வொருபெருந் திருக்கூத்தும்
கண்ணில் முன்புறக் கண்டுகும்
பிட்டெழுங் களிப்பொடுங் கடற்காழிப்
புண்ணி யக்கொழுந் தனையவர்
போற்றுவார் புனிதரா டியபொற்பு.
160
Go to top

உணர்வின் நேர்பெற வருஞ்சிவ
போகத்தை ஒழிவின்றி உருவின்கண்
அணையும் ஐம்பொறி அளவினும்
எளிவர அருளினை எனப்போற்றி
இணையில் வண்பெருங் கருணையே
ஏத்திமுன் எடுத்தசொற் பதிகத்திற்
புணரு மின்னிசை பாடினர்
ஆடினர் பொழிந்தனர் விழிமாரி.
161

ஊழி முதல்வர்க்
குரிமைத் தொழிற்சிறப்பால்
வாழிதிருத் தில்லைவாழ்
அந்தணரை முன்வைத்தே
ஏழிசையும் ஓங்க
எடுத்தார் எமையாளும்
காழியர்தங் காவலனார்
கற்றாங் கெரியோம்பி.
162

பண்ணார் பதிகத்
திருக்கடைக்காப் புப்பரவி
உண்ணாடும் என்பும்
உயிருங் கரைந்துருக்கும்
விண்ணா யகன்கூத்து
வெட்டவெளி யேதிளைத்துக்
கண்ணா ரமுதுண்டார்
காலம் பெறஅழுதார்.
163

முன்மால் அயன்அறியா
மூர்த்தியார் முன்னின்று
சொன்மாலை யாற்காலம்
எல்லாந் துதித்திறைஞ்சிப்
பன்மா மறைவெள்ளம்
சூழ்ந்து பரவுகின்ற
பொன்மா ளிகையைவலங்
கொண்டு புறம்போந்தார்.
164

செல்வத் திருமுன்றில்
தாழ்ந்தெழுந்து தேவர்குழாம்
மல்குந் திருவாயில்
வந்திறைஞ்சி மாதவங்கள்
நல்குந் திருவீதி
நான்குந் தொழுதங்கண்
அல்குந் திறம்அஞ்சு
வார்சண்பை ஆண்டகையார்.
165
Go to top

செய்ய சடையார்
திருவேட் களஞ்சென்று
கைதொழுது சொற்பதிகம்
பாடிக் கழுமலக்கோன்
வைகி அருளுமிடம்
அங்காக மன்றாடும்
ஐயன் திருக்கூத்துக்
கும்பிட் டணைவுறுநாள்.
166

கைம்மான் மறியார்
கழிப்பாலை யுள்ளணைந்து
மெய்ம்மாலைச் சொற்பதிகம்
பாடிவிரைக் கொன்றைச்
செம்மாலை வேணித்
திருவுச்சி மேவியுறை
அம்மானைக் கும்பிட்
டருந்தமிழும் பாடினார்.
167

பாடும் பதிகஇசை
யாழ்ப்பாண ரும்பயிற்றி
நாடுஞ் சிறப்பெய்த
நாளும்நடம் போற்றுவார்
நீடுந் திருத்தில்லை
அந்தணர்கள் நீள்மன்றுள்
ஆடுங் கழற்கணுக்க
ராம்பே றதிசயிப்பார்.
168

ஆங்கவர்தஞ் சீலத்
தளவின் மையும்நினைந்தே
ஓங்கியெழுங் காதல்
ஒழியாத உள்ளத்தார்
தேங்கமழுஞ் சோலைத்
திருவேட் களங்கடந்து
பூங்கிடங்கு சூழ்புலியூர்ப்
புக்கணையும் போழ்தின்கண்.
169

அண்டத் திறைவர்
அருளால் அணிதில்லை
முண்டத் திருநீற்று
மூவா யிரவர்களும்
தொண்டத் தகைமைக்
கணநாத ராய்தோன்றக்
கண்டஅப் பரிசுபெரும்
பாணர்க்கும் காட்டினார்.
170
Go to top

செல்வம் பிரிவறியாத்
தில்லைவாழ் அந்தணரும்
எல்லையில்சீர்ச் சண்பை
இளவே றெழுந்தருளி
ஒல்லை இறைஞ்சாமுன்
தாமும் உடனிறைஞ்சி
மல்லல் அணிவீதி
மருங்கணைய வந்தார்கள்.
171

பொங்கி யெழுங்காதல்
புலனாகப் பூசுரர்தம்
சிங்கம் அனையார்
திருமுடியின் மேற்குவித்த
பங்கயத்தின் செவ்வி
பழித்து வனப்போங்கும்
செங்கை யொடுஞ்சென்று
திருவாயி லுட்புக்கார்.
172

ஒன்றிய சிந்தை
உருக உயர்மேருக்
குன்றனைய பேரம்
பலமருங்கு கும்பிட்டு
மன்றுள் நிறைந்தாடும்
மாணிக்கக் கூத்தர்எதிர்
சென்றணைந்து தாழ்ந்தார்
திருக்களிற் றுப்படிக்கீழ்.
173

ஆடி னாய்நறு நெய்யொடு
பால்தயிர் என்றெடுத் தார்வத்தால்
பாடி னார்பின்னும் அப்பதி
கத்தினிற் பரவிய பாட்டொன்றில்
நீடு வாழ்தில்லை நான்மறை
யோர்தமைக் கண்டஅந் நிலையெல்லாம்
கூடு மாறுகோத்து அவர்தொழு
தேத்துசிற் றம்பலம் எனக்கூறி.
174

இன்ன தன்மையில் இன்னிசைப்
பதிகமும் திருக்கடைக் காப்பேற்றி
மன்னும் ஆனந்த வெள்ளத்தில்
திளைத்தெதிர் வந்துமுன் நின்றாடும்
பின்னு வார்சடைக் கூத்தர்பே
ரருள்பெறப் பிரியாத விடைபெற்றுப்
பொன்னின் அம்பலஞ் சூழ்ந்துதாழ்ந்
தெழுந்துபோந் தணைந்தனர் புறமுன்றில்.
175
Go to top

அப்பு றத்திடை வணங்கிஅங்
கருளுடன் அணிமணித் திருவாயில்
பொற்பு றத்தொழு தெழுந்துடன்
போதரப் போற்றிய புகழ்ப்பாணர்
நற்ப தந்தொழு தடியனேன்
பதிமுதல்நதி நிவாக் கரை மேய
ஒப்பில் தானங்கள் பணிந்திட
வேண்டும்என் றுரைசெய அதுநேர்வார்.
176

பொங்கு தெண்திரைப் புனிதநீர்
நிவாக்கரைக் குடதிசை மிசைப்போந்து
தங்கு தந்தையா ருடன்பரி
சனங்களும் தவமுனி வருஞ்செல்லச்
செங்கை யாழ்திரு நீலகண்
டப்பெரும் பாணனா ருடன்சேர
மங்கை யார்புகழ் மதங்கசூ
ளாமணி யார்உடன் வரவந்தார்.
177

இருந்த டங்களும் பழனமும்
கடந்துபோய் எருக்கத்தம் புலியூரின்
மருங்கு சென்றுற நீலகண்
டப்பெரும் பாணனார் வணங்கிக்கார்
நெருங்கு சோலைசூழ் இப்பதி
அடியனேன் பதியென நெடிதின்புற்
றருங்க லைச்சிறு மழஇளங்
களிறனார் அங்கணைந் தருள்செய்வார்.
178

ஐயர் நீரவ தரித்திட
இப்பதி அளவில்மா தவமுன்பு
செய்த வாறெனச் சிறப்புரைத்
தருளிஅச் செழும்பதி இடங்கொண்ட
மைகொள் கண்டர்தங் கோயிலி
னுட்புக்கு வலங்கொண்டு வணங்கிப்பார்
உய்ய வந்தவர் செழுந்தமிழ்ப்
பதிகம்அங் கிசையுடன் உரைசெய்தார்.
179

அங்கு நின்றெழுந் தருளிமற்
றவருடன் அம்பொன்மா மலைவல்லி
பங்கர் தாமினி துறையுநற்
பதிபல பரிவொடும் பணிந்தேத்தித்
துங்க வண்டமிழ்த் தொடைமலர்
பாடிப்போய்த் தொல்லைவெங் குருவேந்தர்
செங்க ணேற்றவர் திருமுது
குன்றினைத் தொழுதுசென் றணைகின்றார்.
180
Go to top

மொய்கொள் மாமணி கொழித்துமுத்
தாறுசூழ் முதுகுன்றை அடைவோம்என்று
எய்து சொன்மலர் மாலைவண்
பதிகத்தை இசையொடும் புனைந்தேத்திச்
செய்த வத்திரு முனிவருந்
தேவருந் திசையெலாம் நெருங்கப்புக்
கையர் சேவடி பணியுமப்
பொருப்பினில் ஆதர வுடன்சென்றார்.
181

வான நாயகர் திருமுது
குன்றினை வழிபட வலங்கொள்வார்
தூந றுந்தமிழ்ச் சொல்லிருக்
குக்குறட் டுணைமலர் மொழிந்தேத்தி
ஞான போனகர் நம்பர்தங்
கோயிலை நண்ணியங் குள்புக்குத்
தேன லம்புதண் கொன்றையார்
சேவடி திளைத்தஅன் பொடுதாழ்ந்தார்.
182

தாழ்ந்தெ ழுந்துமுன் முரசதிர்ந்
தெழும்எனுந் தண்டமிழ்த் தொடைசாத்தி
வாழ்ந்து போந்தங்கண் வளம்பதி
அதனிடை வைகுவார் மணிவெற்புச்
சூழ்ந்த தண்புனல் சுலவுமுத்
தாற்றொடு தொடுத்தசொல் தொடைமாலை
வீழ்ந்த காதலாற் பலமுறை
விளம்பியே மேவினார் சிலநாள்கள்.
183

ஆங்கு நாதரைப் பணிந்துபெண்
ணாகடம் அணைந்தரு மறையோசை
ஓங்கு தூங்கானை மாடத்துள்
அமர்கின்ற வொருதனிப் பரஞ்சோதிப்
பாங்க ணைந்துமுன் வலங்கொண்டு
பணிவுற்றுப் பரவுசொல் தமிழ்மாலை
தீங்கு நீங்குவீர் தொழுமின்கள்
எனும்இசைப் பதிகமும் தெரிவித்தார்.
184

கருவ ரைப்பிற் புகாதவர் கைதொழும்
ஒருவ ரைத்தொழு துள்ள முவந்துபோய்ப்
பெருவ ரத்தினிற் பெற்றவர் தம்முடன்
திருவ ரத்துறை சேர்தும்என் றேகுவார்.
185
Go to top

முந்தை நாள்கள் ஒரோவொரு கால்முது
தந்தை யார்பியல் மேலிருப் பார்தவிர்ந்
தந்த ணாளர் அவரரு கேசெலச்
சிந்தை செய்விருப் போடுமுன் சென்றனர்.
186

ஆதி யார்தம் அரத்துறை நோக் கியே
காத லால்அணை வார்கடி தேகிடத்
தாதை யாரும் பரிவுறச் சம்பந்தர்
பாத தாமரை நொந்தன பைப்பய.
187

மறைய னைத்தும் ஒருவடி வாமென
நிறைம திப்பிள்ளை நீள்நிலஞ் சேர்ந்தெனத்
துறைய லைக்கங்கை சூடும் அரத்துறை
இறைவ ரைத்தொழு வான்விரைந் தேகினார்.
188

பாச மற்றில ராயினும் பார்மிசை
ஆசை சங்கரற் காயின தன்மையால்
தேசு மிக்க திருவுரு வானவர்
ஈச னைத்தொழு தேதொழு தேகினார்.
189

இந்த மாநிலத் தின்இருள் நீங்கிட
வந்த வைதிக மாமணி யானவர்
சிந்தை ஆரமு தாகிய செஞ்சடைத்
தந்தை யார்கழல் தாழ்ந்தெழுந்து ஏகினார்.
190
Go to top

மாறன் பாடி யெனும்பதி வந்துற
ஆறு செல்வருத் தத்தின் அசைவினால்
வேறு செல்பவர் வெய்துறப் பிள்ளையார்
ஏறு மஞ்செழுத் தோதிஅங் கெய்திட.
191

உய்ய வந்தசம் பந்த ருடன்வந்தார்க்
கெய்து வெம்மை இளைப்பஞ்சி னான்போலக்
கைக ளாயிரம் வாங்கிக் கரந்துபோய்
வெய்ய வன்சென்று மேல்கடல் வீழ்ந்தனன்.
192

அற்றை நாள்இர வப்பதி யின்னிடைச்
சுற்று நீடிய தொண்டர்கள் போற்றிடப்
பெற்ற மூர்ந்த பிரான்கழல் பேணுவார்
வெற்றி மாதவத் தோருடன் மேவினார்.
193

இந்நி லைக்கண் எழில்வளர் பூந்தராய்
மன்ன னார்தம் வழிவருத் தத்தினை
அன்ன மாடுந் துறைநீர் அரத்துறைச்
சென்னி யாற்றர் திருவுளஞ் செய்தனர்.
194

ஏறுதற்குச் சிவிகை இடக்குடை
கூறி ஊதக் குலவுபொற் சின்னங்கள்
மாறில் முத்தின் படியினால் மன்னிய
நீறு வந்த நிமலர் அருளுவார்.
195
Go to top

நீடு வாழ்பதி யாகும்நெல் வாயிலின்
மாட மாமனை தோறும் மறையோர்க்குக்
கூடு கங்குற் கனவிற் குலமறை
தேடு சேவடி தோன்றமுன் சென்றுபின்.
196

ஞான சம்பந்தன் நம்பால் அணைகின்றான்
மான முத்தின் சிவிகை மணிக்குடை
ஆன சின்னம்நம் பாற்கொண் டருங்கலைக்
கோன வன்பா லணைந்து கொடும்என.
197

அந்த ணாளர் உரைத்தஅப் போழ்தினில்
வந்து கூடி மகிழ்ந்தற் புதமுறுஞ்
சிந்தை யோடும் செழுநீர் அரத்துறை
இந்து சேகரர் கோயில்வந் தெய்தினர்.
198

ஆங்கு மற்ற அருளடி யாருடன்
ஓங்கு கோயிலுள் ளார்க்கும்உண் டாயிட
ஈங்கி தென்ன அதிசயம் என்பவர்
தாங்கள் அம்மறை யோர்கள்முன் சாற்றினார்.
199

சால மிக்க வியப்புறு தன்மையின்
பால ராதலும் பள்ளி யெழுச்சியின்
காலம் எய்திடக் காதல் வழிப்படுஞ்
சீலம் மிக்கார் திருக்காப்பு நீக்கினார்.
200
Go to top

திங்கள் நீர்மைச் செழுந்திரள் முத்தினால்
துங்க வெண்குடை தூய சிவிகையும்
பொங்க வூதும் பொருவருஞ் சின்னமும்
அங்கண் நாதர் அருளினாற் கண்டனர்.
201

கண்ட பின்னவர் கைதலை மேற்குவித்
தெண்டி சைக்கும் விளக்கிவை யாம்எனத்
தொண்ட ரோடும் மறையவர் சூழ்ந்தெழுந்
தண்டர் நாடும் அறிவுற ஆர்த்தனர்.
202

சங்கு துந்துபி தாரைபே ரிம்முதல்
பொங்கு பல்லிய நாதம் பொலிந்தெழ
அங்க ணன்அரு ளால்அவை கொண்டுடன்
பொங்கு காதல் எதிர்கொளப் போதுவார்.
203

மாசில் வாய்மைநெல் வாயில் மறையவர்
ஆசில் சீர்ச்சண்பை ஆண்டகை யார்க்கெதிர்
தேசு டைச்சிவி கைமுத லாயின
ஈசர் இன்னரு ளால்தாங்கி ஏகினார்.
204

இத்த லைஇவர் இன்னணம் ஏகினார்
அத்த லைச்சண்பை நாதர்க்கும் அவ்விரா
முத்த நற்சிவி கைமுத லாயின
உய்த்த ளிக்கும் படிமுன் உணர்த்துவார்.
205
Go to top

அள்ளல் நீர்வயல் சூழும் அரத்துறை
வள்ள லார்நாம் மகிழ்ந்தளிக் கும்மவை
கொள்ள லாகும்கொண் டுய்த்தல் செய் வாய்என
உள்ள வாறருள் செய்ய வுணர்ந்தபின்.
206

சண்பை யாளியார் தாங்கண்ட மெய்யருள்
பண்பு தந்தையார் தம்முடன் பாங்கமர்
தொண்ட ருக்கருள் செய்து தொழாமுனம்
விண்பு லப்பட வீங்கிருள் நீங்கலும்.
207

மாலை யாமம் புலர்வுறும் வைகறை
வேலை செய்வினை முற்றிவெண் ணீறணி
கோல மேனிய ராய்க்கைம் மலர்குவித்
தேல அஞ்செழுத் தோதி எழுந்தனர்.
208

போத ஞானப் புகலிப் புனிதரைச்
சீத முத்தின் சிவிகைமே லேற்றிடக்
காதல் செய்பவன் போலக் கருங்கடல்
மீது தேரின்வந் தெய்தினன் வெய்யவன்.
209

ஆய போழ்தின் அரவெனும் ஆர்ப்புடன்
தூய முத்தின் சிவிகை சுடர்க்குடை
மேய சின்னங்கள் கொண்டுமெய் யன்பரோ
டேய அந்தணர் தாமெதிர் தோன்றினார்.
210
Go to top

வந்து தோன்றிய அந்தணர் மாதவர்
கந்த வார்பொழில் காழிநன் னாடர்முன்
அந்த மில்சீர் அரத்துறை ஆதியார்
தந்த பேரருள் தாங்குவீர் என்றனர்.
211

என்று தங்களுக் கீச ரருள்செய்த
தொன்றும் அங்கொழி யாமை உரைத்துமுன்
நின்று போற்றித் தொழுதிட நேர்ந்தது
மன்று ளார்அருள் என்று வணங்கினார்.
212

மெய்ம்மை போற்றி விடாத விருப்பினால்
தம்மை யுன்னும் பரிசுதந் தாள்பவர்
செம்மை நித்தில யானச் சிறப்பருள்
எம்மை யாளுவப் பானின் றளித்ததே.
213

எந்தை ஈசன் எனஎடுத்து இவ்வருள்
வந்த வாறுமற்று இவ்வண மோஎன்று
சிந்தை செய்யும் திருப்பதி கத்துஇசை
புந்தி யாரப் புகன்றெதிர் போற்றுவார்.
214

பொடிய ணிந்த புராணன் அரத்துறை
அடிகள் தம்மரு ளேயிது வாமெனப்
படியி லாதசொல் மாலைகள் பாடியே
நெடிது போற்றிப் பதிகம் நிரப்பினார்.
215
Go to top

சோதி முத்தின் சிவிகைசூழ் வந்துபார்
மீது தாழ்ந்துவெண் ணீற்றொளி போற்றிநின்
றாதி யார்அரு ளாதலின் அஞ்செழுத்
தோதி யேறினார் உய்ய வுலகெலாம்.
216

தொண்டர் ஆர்த்தனர் சுருதிகள்
ஆர்த்தன தொல்லை
அண்டர் ஆர்த்தனர் அகிலமும்
ஆர்ப்புடன் எய்தக்
கொண்டல் ஆர்த்தன முழவமும்
ஆர்த்தன குழுமி
வண்ட றாப்பொலி மலர்மழை
ஆர்த்தது வானம்.
217

வளையும் ஆர்த்தன வயிர்களும்
ஆர்த்தன மறையின்
கிளையும் ஆர்த்தன திளைஞரும்
ஆர்த்தனர் கெழுவும்
களைகண் ஆர்த்ததொர் கருணையின்
ஆர்கவின் முத்தின்
விளையு மாக்கதிர் வெண்குடை
ஆர்த்தது மிசையே.
218

பல்கு வெண்கதிர்ப் பத்திசேர்
நித்திலச் சிவிகைப்
புல்கு நீற்றொளி யுடன்பொலி
புகலிகா வலனார்
அல்கு வெள்வளை அலைத்தெழு
மணிநிரைத் தரங்கம்
மல்கு பாற்கடல் வளர்மதி
உதித்தென வந்தார்.
219

நீடுதொண்டர்கள் மறையவர்
ஏனையோர் நெருங்கி
மாடு கொண்டெழு மகிழ்ச்சியின்
மலர்க்கைமேல் குவித்தே
ஆடு கின்றனர் அயர்ந்தனர்
அளவில் ஆனந்தம்
கூடு கின்றகண் பொழிபுனல்
வெள்ளத்தில் குளித்தார்.
220
Go to top

செய்ய பொன்புனை வெண்தர
ளத்தணி சிறக்கச்
சைவ மாமறைத் தலைவர்பால்
பெறுந்தனிக் காளம்
வையம் ஏழுடன் மறைகளும்
நிறைதவத் தோரும்
உய்ய ஞானசம் பந்தன்வந்
தான்என ஊத.
221

சுற்று மாமறைச் சுருதியின்
பெருகொலி நடுவே
தெற்றி னார்புர மெரித்தவர்
தருதிருச் சின்னம்
முற்று மானவன் ஞானமே
முலைசுரந் தூட்டப்
பெற்ற பாலறா வாயன்வந்
தான்எனப் பிடிக்க.
222

புணர்ந்த மெய்த்தவக் குழாத்தொடும்
போதுவார் முன்னே
இணைந்த நித்திலத் திலங்கொளி
நலங்கிளர் தாரை
அணைந்த மாமறை முதற்கலை
அகிலமும் ஓதா
துணர்ந்த முத்தமிழ் விரகன்வந்
தானென ஊத.
223

தெருளும் மெய்க்கலை விளங்கவும்
பாருளோர் சிந்தை
இருளும் நீங்கவும் எழுதுசொன்
மறையளிப் பவர்தாம்
பொருளும் ஞானமும் போகமும்
போற்றியென் பாருக்
கருளும் அங்கணர் திருவரத்
துறையைவந் தணைந்தார்.
224

வந்து கோபுர மணிநெடு
வாயில்சேய்த் தாகச்
சந்த நித்திலச் சிவிகைநின்
றிழிந்துதாழ்ந் தெழுந்து
சிந்தை ஆர்வமும் மகிழ்ச்சியும்
பொங்கிமுன் செல்ல
அந்தி நாண்மதி அணிந்தவர்
கோயிலுள் அடைந்தார்.
225
Go to top

மன்னுகோயிலை வலங்கொண்டு
திருமுன்பு வந்து
சென்னி யிற்கரங் குவித்துவீழ்ந்
தன்பொடு திளைப்பார்
என்னை யும்பொரு ளாகஇன்
னருள்புரிந் தருளும்
பொன்ன டித்தலத் தாமரை
போற்றி என் றெழுந்தார்.
226

சூடி னார்கர கமலங்கள்
சொரிந்திழி கண்ணீர்
ஆடி னார்திரு மேனியில்
அரத்துறை விரும்பி
நீடி னார்திரு அருட்பெருங்
கருணையே நிகழப்
பாடி னார்திருப் பதிகம்ஏ
ழிசையொடும் பயில.
227

இசைவி ளங்கிட இயல்பினில்
பாடிநின் றேத்தி
மிசைவி ளங்குநீர் வேணியார்
அருளினால் மீண்டு
திசைவி ளங்கிடத் திருவருள்
பெற்றவர் சிலநாள்
அசைவில் சீர்த்தொண்டர் தம்முடன்
அப்பதி அமர்ந்தார்.
228

தேவர் தம்பிரான் திருவரத்
துறையினில் இறைஞ்சி
மேவு நாள்களில் விமலனார்
நெல்வெண்ணெய் முதலாத்
தாவில் அன்பர்கள் தம்முடன்
தொழுதுபின் சண்பைக்
காவ லார்அருள் பெற்றுடன்
கலந்துமீண் டணைந்தார்.
229

விளங்கு வேணுபு ரத்திருத்
தோணிவீற் றிருந்த
களங்கொள் கண்டர்தங்
காதலி யாருடன்கூட
உளங்கொ ளப்புகுந் துணர்வினில்
வெளிப்பட உருகி
வளங்கொள் பூம்புனற் புகலிமேற்
செலமனம் வைத்தார்.
230
Go to top

அண்ண லார்திரு வரத்துறை
அடிகளை வணங்கி
நண்ணு பேரரு ளால்விடை
கொண்டுபோய் நடங்கொண்
டுண்ணி றைந்தபூங் கழலினை
உச்சிமேற் கொண்டே
வெண்ணி லாமலர் நித்திலச்
சிவிகைமேற் கொண்டார்.
231

சிவிகை முத்தினிற் பெருகொளி
திசையெலாம் விளக்கக்
கவிகை வெண்மதிக் குளிரொளி
கதிர்செய்வான் கலப்பக்
குவிகை மேற்கொண்டு மறையவர்
குணலையிட் டாடப்
புவிகைம் மாறின்றிப் போற்றவந்
தருளினார் போந்தார்.
232

மறைமு ழங்கின தழங்கின
வண்தமிழ் வயிரின்
குறைந ரன்றன முரன்றன
வளைக்குலங் காளம்
முறையி யம்பின இயம்பல
ஒலித்தன முரசப்
பொறை கறங்கின பிறங்கின
போற்றிசை அரவம்.
233

உடைய பிள்ளையார் வருமெல்லை
யுள்ளஅப் பதியோர்
புடையி ரண்டினுங் கொடியொடு
பூந்துகில் விதானம்
நடைசெய் காவணம் தோரணம்
பூகநற் கதலி
மிடையு மாலைகள் நிறைகுடம்
விளக்கொடு நிரைத்தார்.
234

அனைய செய்கையால் எதிர்கொளும்
பதிகளா னவற்றின்
வினைத ரும்பவந் தீர்ப்பவர்
கோயில்கள் மேவிப்
புனையும் வண்டமிழ் மொழிந்தடி
பணிந்துபோந் தணைந்தார்
பனைநெ டுங்கைமா வுரித்தவர்
மகிழ்பெரும் பழுவூர்.
235
Go to top

அங்கணைந் திளம்பிறை அணிந்த சென்னியார்
பொங்கெழிற் கோபுரந் தொழுது புக்கபின்
துங்கநீள் விமானத்தைச் சூழ்ந்து வந்துமுன்
பங்கயச் சேவடி பணிந்து பாடுவார்.
236

மண்ணினிற் பொலிகுல மலையர் தாந்தொழு
தெண்ணில்சீர்ப் பணிகள்செய் தேத்துந் தன்மையில்
நண்ணிய வகைசிறப் பித்து நாதரைப்
பண்ணினில் திகழ்திருப் பதிகம் பாடினார்.
237

பாவின திசைவழி பாடி அங்ககன்
றியாவருந் தொழுதுட னேத்த எய்தினார்
மூவுல குய்யநஞ் சுண்ட மூர்த்தியார்
மேவிய பெருந்திரு விசய மங்கையில்.
238

அந்தணர் விசயமங் கையினில் அங்கணர்
தந்தனி ஆலயஞ் சூழ்ந்து தாழ்ந்துமுன்
வந்தனை செய்துகோ தனத்தை மன்னிய
செந்தமிழ் மாலையிற் சிறப்பித் தேத்தினார்.
239

விசயமங் கையினிடம் அகன்று மெய்யர்தாள்
அசைவில்வை காவினில் அணைந்து பாடிப்போந்
திசைவளர் ஞானசம் பந்தர் எய்தினார்
திசையுடை ஆடையர் திருப்பு றம்பயம்.
240
Go to top

புறம்பயத் திறைவரை வணங்கிப் போற்றிசெய்
திறம்புரி நீர்மையிற் பதிகச் செந்தமிழ்
நிறம்பயி லிசையுடன் பாடி நீடிய
அறந்தரு கொள்கையார் அமர்ந்து மேவினார்.
241

அத்திருப் பதிபணிந் தகன்று போய்அனல்
கைத்தலத் தவர்பதி பிறவுங் கைதொழு
முத்தமிழ் விரகராம் முதல்வர் நண்ணினார்
செய்த்தலைப் பணிலமுத்து ஈனுஞ் சேய்ஞலூர்.
242

திருமலி புகலிமன் சேரச் சேய்ஞலூர்
அருமறை யவர்பதி அலங்க ரித்துமுன்
பெருமறை யொடுமுழ வொலிபி றங்கவே
வருமுறை எதிர்கொள வந்து முந்தினார்.
243

ஞானசம் பந்தரும் நாய னார்சடைத்
தூநறுந் தொடையல்முன் சூட்டும் பிள்ளையார்
பான்மையில் வரும்பதி என்று நித்தில
யானமுன் இழிந்தெதிர் இறைஞ்சி எய்தினார்.
244

மாமறை யாளர்வண் புகலிப் பிள்ளையார்
தாம்எழுந் தருளிடத் தங்கள் பிள்ளையார்
காமரும் பதியில்வந் தருளக் கண்டன
ராமகிழ் வுடன்பணிந் தாடி ஆர்த்தனர்.
245
Go to top

களித்தனர் புண்ணியக் கரக வாசநீர்
தெளித்தனர் பொரிகளும் மலருஞ் சிந்தினர்
துளித்தனர் கண்மழை சுருதி யாயிரம்
அளித்தவர் கோயிலுள் அவர்முன் பெய்தினார்.
246

வெங்குரு வேந்தரும் விளங்கு கோயிலைப்
பொங்கிய விருப்பினால் புடைவ லங்கொடு
செங்கைகள் சென்னிமேற் குவித்துச் சென்றுபுக்
கங்கணர் முன்புற அணைந்து தாழ்ந்தனர்.
247

வேதியர் சேய்ஞலூர் விமலர் தங்கழல்
காதலிற் பணிந்தவர் கருணை போற்றுவார்
தாதைதாள் தடிந்தசண் டீசப் பிள்ளையார்
பாதகப் பயன்பெறும் பரிசு பாடினார்.
248

இன்னிசை வண்டமிழ் பாடி ஏத்தியே
நன்னெடும் பதியுளோர் நயக்க வைகிய
பின்னர்வெண் பிறையணி வேணிப் பிஞ்ஞகர்
மன்னிய திருப்பனந் தாள்வ ணங்கினார்.
249

ஆங்கணி சொல்மலர் மாலை சாத்திஅப்
பாங்குபந் தணைநலூர் பணிந்து பாடிப்போய்த்
தீங்குதீர் மாமறைச் செம்மை அந்தணர்
ஓங்கும்ஓ மாம்புலி யூர்வந் துற்றனர்.
250
Go to top

மற்றநற் பதிவட தளியின் மேவிய
அற்புதர் அடிபணிந் தலர்ந்த செந்தமிழ்ச்
சொற்றொடை பாடிஅங் ககன்று சூழ்மதில்
பொற்பதி வாழ்கொளி புத்தூர் புக்கனர்.
251

சீர்வளர் கோயிலை அணைந்து தேமலர்க்
கார்வளர் கண்டர்தாள் பணிந்து காண்பவர்
பார்புகழ் பதிகங்கள் பாடி நீடுவார்
வார்புகழ்க் கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர்.
252

நம்பரை நலந்திகழ் நாரை யூரினில்
கும்பிடும் விருப்பொடு குறுகிக் கூடிய
வம்பலர் செந்தமிழ் மாலை பாடிநின்
றெம்பிரான் கவுணியர் தலைவர் ஏத்தினார்.
253

அப்பதி பணிந்தருந் தமிழ்பு னைந்துதம்
மெய்ப்படு விருப்பொடு மேவு நாள்அரன்
பொற்பதி பலவுமுன் பணிந்து போந்தனர்
பைப்பணி யவர்கருப் பறிய லூரினில்.
254

பரமர்தந் திருக்கருப் பறிய லூரினைச்
சிரபுரச் சிறுவர்கை தொழுது செந்தமிழ்
உரையிசை பாடிஅம் மருங்கி னுள்ளவாம்
சுரர்தொழும் பதிகளுந் தொழுது பாடினார்.
255
Go to top

மண்ணுலகு செய்ததவப் பயனா யுள்ள
வள்ளலார் அப்பதிகள் வணங்கி ஏகி
எண்ணில்முர சிரங்கியெழப் பணிலம் ஆர்ப்ப
இலங்கியகா ளம்சின்னம் எங்கும்ஊதக்
கண்வளர்மென் கரும்புமிடை கதிர்செஞ் சாலி
கதலிகமு குடன்ஓங்குங் கழனி நாட்டுத்
தெண்ணிலவு சூடியதம் பெருமான் வைகுந்
திருப்பிரம புரஞ்சாரச் செல்லும் போது.
256

பிள்ளையார் எழுந்தருளக் கேட்ட செல்வப்
பிரமபுரத் தருமறையோர் பெருகு காதல்
உள்ளமகிழ் சிறந்தோங்கத் தோணி மேவும்
உமைபாகர் கழல்வணங்கி உவகை கூர
வெள்ளமறை ஒலிபெருகு மறுகு தோறும்
மிடைமகர தோரணங்கள் கதலி பூகம்
தெள்ளுபுனல் நிறைகுடங்கள் தீப தூபம்
செழுங்கொடிகள் நிறைத்தெதிர்கொள் சிறப்பிற் செல்வார்.
257

ஆரணங்கள் மதுரவொலி எழுந்து பொங்க
அரசிலையுந் தருப்பையும்பெய் தணிந்த வாசப்
பூரணகும் பங்கள்நிறை கரகம்ஏந்திப்
புதுமலரும் நறுந்துகளும் பொரியுந் தூவி
வாரணங்கு முலைஉமையாள் குழைத்த செம்பொன்
வள்ளத்தில் அமுதுண்ட வள்ள லாரைச்
சீரணங்கு மணிமுத்தின் சிவிகை மீது
செழுந்தரளக் குடைநிழற் கீழ்ச்சென்று கண்டார்.
258

கண்டபொழு தேகைகள் தலைமேற் கொண்டு
கண்களிப்ப மனங்களிப்பக் காதல் பொங்கித்
தொண்டர்களும் மறையவரும் சென்று சூழ்ந்து
சொல்லிறந்த மகிழ்ச்சியினால் துதித்த ஓசை
எண்திசையும் நிறைவித்தார் ஆடை வீசி
இருவிசும்பின் வெளிதூர்த்தார் ஏறு சீர்த்தி
வண்டமிழ்நா யகரும்இழிந் தெதிரே சென்று
வணங்கியவ ருடன்கூடி மகிழ்ந்து புக்கார்.
259

திங்களணி மணிமாடம் மிடைந்தவீதி
சென்றணைந்து தெய்வமறைக் கற்பின் மாதர்
மங்கலவாழ்த் திசையிரண்டு மருங்கும் மல்க
வானவர்நா யகர்கோயில் மருங்கு சார்ந்து
துங்கநிலைக் கோபுரத்தை இறைஞ்சிப் புக்குச்
சூழ்ந்துதிருத் தோணிமிசை மேவி னார்கள்
தங்கள்திரு முன்புதாழ்ந் தெழுந்து நின்று
தமிழ்வேதம் பாடினார் தாளம் பெற்றார்.
260
Go to top

பரவுதிருப் பதிகஇசை பாடி நீடும்
பரங்கருணைத் திருவருளின் பரிசு போற்றி
விரவுமலர்க் கண்பனிப்பக் கைகள் கூப்பி
வீழ்ந்தெழுந்து புறம்போந்து வேத வாய்மைச்
சிரபுரத்துப் பிள்ளையார் செல்லும் போது
திருநீல கண்டயாழ்ப் பாணர் பின்னே
வரஅவரை வளம்பெருகு மனையிற் போக
அருள்செய்து தந்திருமா ளிகையின் வந்தார்.
261

மறையவர்கள் அடிபோற்றத் தந்தை யாரும்
மருங்கணைய மாளிகையில்அணையும் போதில்
நிறைகுடமும் மணிவிளக்கும் முதலா யுள்ள
நீதிமறைக் குலமகளிர் நெருங்கி யேந்த
இறைவர்திரு நீற்றுக்காப் பேந்தி முன்சென்
றீன்றதா யார்சாத்தி இறைஞ்சி ஏத்த
முறைமையவர்க் கருள்செய்து மடத்தில் புக்கார்
முதல்வர்பால் மணிமுத்தின் சிவிகை பெற்றார்.
262

செல்வநெடு மாளிகையில் அமர்ந்து நாளுந்
திருத்தோணி மிசையாரைச் சென்று தாழ்ந்து
மல்குதிருப் பதிகங்கள் பலவும் பாடி
மனமகிழ்ந்து போற்றிசைத்து வைகு நாளில்
ஒல்லைமுறை உபநயனப் பருவ மெய்த
உலகிறந்த சிவஞானம் உணரப் பெற்றார்
தொல்லைமறை விதிச்சடங்கு மறையோர் செய்யத்
தோலொடுநூல் தாங்கினார் சுரர்கள் போற்ற.
263

ஒருபிறப்பும் எய்தாமை உடையார் தம்மை
உலகியல்பின் உபநயன முறைமை யாகும்
இருபிறப்பின் நிலைமையினைச் சடங்கு காட்டி
எய்துவிக்கும் மறைமுனிவ ரெதிரே நின்று
வருதிறத்தின் மறைநான்குந் தந்தோம் என்று
மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால்
பொருவிறப்ப ஓதினார் புகலி வந்த
புண்ணியனார் எண்ணிறந்த புனித வேதம்.
264

சுருதியா யிரம்ஓதி அங்க மான
தொல்கலைகள் எடுத்தியம்புந் தோன்ற லாரைப்
பரிதிஆ யிரகோடி விரிந்தால் என்னப்
பரஞ்சோதி அருள்பெற்ற பான்மை மேன்மை
கருதிஆ தரவோடும் வியப்புற் றேத்துங்
கலைமறையோர் கவுணியனார் தம்மைக் கண்முன்
வருதியா னப்பொருள்என் றிறைஞ்சித் தாமுன்
வல்லமறை கேட்டையந் தீர்ந்து வாழ்ந்தார்.
265
Go to top

மந்திரங்க ளானவெலாம் அருளிச் செய்து
மற்றவற்றின் வைதிகநூற் சடங்கின் வந்த
சிந்தைமயக் குறும்ஐயந் தெளிய எல்லாஞ்
செழுமறையோர்க் கருளியவர் தெருளும் ஆற்றால்
முந்தைமுதன் மந்திரங்கள் எல்லாந் தோன்றும்
முதலாகும் முதல்வனார் எழுத்தஞ் சென்பார்
அந்தியினுள் மந்திரம் அஞ்செழுத்து மேயென்
றஞ்செழுத்தின் திருப்பதிகம் அருளிச் செய்தார்.
266

அத்தகைமை பிள்ளையார் அருளிச் செய்ய
அந்தணர்கள் அருள்தலைமேற் கொண்டு தாழ்ந்து
சித்தமகிழ் வொடுசிறப்பத் தாமும் தெய்வத்
திருத்தோணி அமர்ந்தாரைச் சென்று தாழ்ந்து
மெய்த்தஇசைப் பதிகங்கள் கொண்டு போற்றி
விரைமலர்த்தாள் மனங்கொண்டு மீண்டுபோந்து
பத்தருடன் இனிதமரும் பண்பு கூடப்
பரமர்தாள் பணிந்தேத்திப் பயிலும் நாளில்.
267

பந்தணை மெல்விர லாளும்
பரமரும் பாய்விடை மீது
வந்துபொன் வள்ளத் தளித்த
வரம்பில்ஞா னத்தமு துண்ட
செந்தமிழ் ஞானசம் பந்தர்
திறங்கேட்டி றைஞ்சுதற் காக
அந்தணர் பூந்தராய் தன்னில்
அணைந்தனர் நாவுக் கரையர்.
268

வாக்கின் பெருவிறல் மன்னர்
வந்தணைந் தாரெனக் கேட்டுப்
பூக்கமழ் வாசத் தடஞ்சூழ்
புகலிப் பெருந்தகை யாரும்
ஆக்கிய நல்வினைப் பேறென்
றன்பர் குழாத்தொடும் எய்தி
ஏற்கும் பெருவிருப் போடும்
எதிர்கொள எய்தும் பொழுதில்.
269

சிந்தை இடையறா அன்பும்
திருமேனி தன்னில் அசைவும்
கந்தை மிகையாம் கருத்தும்
கையுழ வாரப் படையும்
வந்திழி கண்ணீர் மழையும்
வடிவிற் பொலிதிரு நீறும்
அந்தமி லாத்திரு வேடத்
தரசும் எதிர்வந் தணைய.
270
Go to top

கண்ட கவுணியக் கன்றும்
கருத்திற் பரவுமெய்க் காதல்
தொண்டர் திருவேடம் நேரே
தோன்றிய தென்று தொழுதே
அண்டரும் போற்ற அணைந்தங்
கரசும் எதிர்வந் திறைஞ்ச
மண்டிய ஆர்வம் பெருக
மதுர மொழியருள் செய்தார்.
271

பேரிசை நாவுக் கரசைப்
பிள்ளையார் கொண்டுடன் போந்து
போர்விடை யார்திருத் தோணிப்
பொற்கோயி லுள்புகும் போதில்
ஆர்வம் பெருக அணையும்
அவருடன் கும்பிட் டருளால்
சீர்வளர் தொண்ட ரைக்கொண்டு
திருமா ளிகையினில் சேர்ந்தார்.
272

அணையுந் திருந்தொண்டர் தம்மோ
டாண்ட அரசுக்கும் அன்பால்
இணையில் திருவமு தாக்கி
இயல்பால் அமுதுசெய் வித்துப்
புணரும் பெருகன்பு நண்பும்
பொங்கிய காதலில் கும்பிட்
273

அந்நாள் சிலநாள்கள் செல்ல
அருள்திரு நாவுக் கரசர்
மின்னார் சடையண்ணல் எங்கும்
மேவிடங் கும்பிட வேண்டிப்
பொன்மார்பின் முந்நூல் புனைந்த
புகலிப் பிரானிசை வோடும்
பின்னாக வெய்த விறைஞ்சிப்
பிரியாத நண்பொடும் போந்தார்.
274

வாக்கின் தனிமன்னர் ஏக
மாறாத் திருவுளத் தோடும்
பூக்கமழ் பண்ணைகள் சூழ்ந்த
புகலியில் மீண்டும் புகுந்து
தேக்கிய மாமறை வெள்ளத்
திருத்தோணி வீற்றிருந் தாரைத்
தூக்கின் தமிழ்மாலை பாடித்
தொழுதங் குறைகின்ற நாளில்.
275
Go to top

செந்தமிழ் மாலை விகற்பச்
செய்யுட்க ளான்மொழி மாற்றும்
வந்தசொற் சீர்மா லைமாற்று
வழிமொழி எல்லா மடக்குச்
சந்த இயமகம் ஏகபாதம்
தமிழிருக்குக் குறள் சாத்தி
எந்தைக் கெழுகூற் றிருக்கை
ஈரடி ஈரடி வைப்பு.
276

நாலடி மேல்வைப்பு மேன்மை
நடையின் முடுகும் இராகம்
சால்பினிற் சக்கரம் ஆதி
விகற்பங்கள் சாற்றும் பதிக
மூலஇலக்கிய மாக எல்லாப்
பொருள் களும் முற்ற
ஞாலத் துயர்காழி யாரைப்
பாடினார் ஞானசம் பந்தர்.
277

இன்னிசை பாடின எல்லாம்
யாழ்ப்பெரும் பாணனார் தாமும்
மன்னும் இசைவடி வான
மதங்கசூ ளாமணி யாரும்
பன்னிய ஏழிசை பற்றிப்
பாடப் பதிகங்கள் பாடிப்
பொன்னின் திருத்தா ளம்பெற்றார்
புகலியிற் போற்றி யிருந்தார்.
278

அங்கண் அமர்கின்ற நாளில்
அருந்தமிழ்நா டெத்தி னுள்ளும்
திங்கட் சடையண்ண லார்தம்
திருப்பதி யாவையுங் கும்பிட்
டெங்குந் தமிழ்மா லைபாடி
ஏத்திஇங் கெய்துவன் என்று
தங்குலத் தாதையா ரோடுந்
தவமுனி வர்க்கருள் செய்தார்.
279

பெருகு விருப்புடன் நோக்கிப்
பெற்ற குலத்தாதை யாரும்
அருமையால் உம்மைப் பயந்த
அதனாற் பிரிந்துறை வாற்றேன்
இருமைக்கும் இன்ப மளிக்கும்
யாகமும் யான்செய வேண்டும்
ஒருமையால் இன்னஞ் சிலநாள்
உடன்எய் துவேன்என் றுரைத்தார்.
280
Go to top

ஆண்டகை யாரும் இசைந்தங்
கம்பொற் றிருத்தோணி மேவும்
நீண்ட சடையார் அடிக்கீழ்ப்
பணிவுற்று நீடருள் பெற்றே
ஈண்டு புகழ்த்தாதை யார்பின்
எய்திட யாழ்ப்பாண ரோடும்
காண்தகு காழி தொழுது
காதலி னால்புறம் போந்தார்.
281

அத்திரு மூதூரின் உள்ளார்
அமர்ந்துடன் போதுவார் போத
மெய்த்தவர் அந்தணர் நீங்கா
விடைகொண்டு மீள்வார்கள் மீள
முத்தின் சிவிகைமேல் கொண்டு
மொய்யொளித் தாமம் நிரைத்த
நித்தில வெண்குடை மீது
நிறைமதி போல நிழற்ற.
282

சின்னந் தனிக்காளந் தாரை
சிரபுரத் தாண்டகை வந்தார்
என்னுந் தகைமை விளங்க
ஏற்ற திருப்பெயர் சாற்ற
முன்எம் மருங்கும் நிரந்த
முரசுடைப் பல்லிய மார்ப்ப
மன்னுந் திருத்தொண்ட ரானார்
வந்தெதிர் கொண்டு வணங்க.
283

சங்க நாதங்கள் ஒலிப்பத்
தழங்குபொற் கோடு முழங்க
மங்கல வாழ்த்துரை எங்கும்
மல்க மறைமுன் இயம்பத்
திங்களும் பாம்பும் அணிந்தார்
திருப்பதி எங்கும்முன் சென்று
பொங்கிய காதலிற் போற்றப்
புகலிக் கவுணியர் போந்தார்.
284

திருமறைச் சண்பைய ராளி
சிவனார் திருக்கண்ணார் கோயில்
பெருவிருப் பாலணைந் தேத்திப்
பிஞ்ஞகர் கோயில் பிறவும்
உருகிய அன்பால் இறைஞ்சி
உயர்தமிழ் மாலை கொண் டேத்தி
வருபுனற் பொன்னி வடபால்
குடதிசை நோக்கி வருவார்.
285
Go to top

போற்றிய காதல் பெருகப்
புள்ளிருக் குந்திரு வேளூர்
நாற்றடந் தோளுடை மூன்று
நயனப்பிரான் கோயில் நண்ணி
ஏற்றஅன் பெய்தவ ணங்கி
இருவர்புள் வேந்தர் இறைஞ்சி
ஆற்றிய பூசனை சாற்றி
அஞ்சொற் பதிக மணிந்தார்.
286

நீடு திருநின்றி யூரின்
நிமலர்தம் நீள்கழல் ஏத்திக்
கூடிய காதலில் போற்றிக்
கும்பிட்டு வண்டமிழ் கூறி
நாடுசீர் நீடூர் வணங்கி
நம்பர்திருப் புன்கூர் நண்ணி
ஆடிய பாதம் இறைஞ்சி
அருந்தமிழ் பாடிஅ மர்ந்தார்.
287

அங்குநின் றேகிஅப் பாங்கில்
அரனார் மகிழ்கோயி லான
எங்கணுஞ் சென்று பணிந்தே
ஏத்தி இமவான் மடந்தை
பங்கர் உறைபழ மண்ணிப்
படிக்கரைக் கோயில் வணங்கித்
தங்கு தமிழ்மாலை சாத்தித்
திருக்குறுக் கைப்பதி சார்ந்தார்.
288

திருக்குறுக் கைப்பதி மன்னித்
திருவீரட் டானத் தமர்ந்த
பொருப்புவில் லாளரை ஏத்திப்
போந்தன்னி யூர்சென்று போற்றிப்
பருக்கை வரையுரித் தார்தம்
பந்தணை நல்லூர் பணிந்து
விருப்புடன் பாடல் இசைத்தார்
வேதம் தமிழால் விரித்தார்.
289

அப்பதி போற்றி அகல்வார்
அரனார் திருமணஞ்சேரி
செப்பருஞ் சீர்த்தொண்ட ரோடும்
சென்று தொழுதிசை பாடி
எப்பொரு ளுந்தரும் ஈசர்
எதிர்கொள்பா டிப்பதி எய்தி
ஒப்பில் பதிகங்கள் பாடி
ஓங்குவேள் விக்குடி யுற்றார்.
290
Go to top

செழுந்திரு வேள்விக் குடியில்
திகழ்மண வாளநற் கோலம்
பொழிந்த புனற்பொன்னி மேவும்
புனிதத் துருத்தி இரவில்
தழும்பிய தன்மையும் கூடத்
தண்டமிழ் மாலையிற் பாடிக்
கொழுந்துவெண் திங்கள் அணிந்தார்
கோடி காவிற்சென் றடைந்தார்.
291

திருக்கோடி காவில் அமர்ந்த
தேவர் சிகாமணி தன்னை
எருக்கோ டிதழியும் பாம்பும்
இசைந்தணிந் தானைவெள் ளேனப்
பருக்கோடு அணிந்த பிரானைப்
பணிந்துசொல் மாலைகள் பாடிக்
கருக்கோடி நீப்பார்கள் சேரும்
கஞ்சனூர் கைதொழச் சென்றார்.
292

கஞ்சனூ ராண்டதங் கோவைக்
கண்ணுற் றிறைஞ்சிமுன் போந்து
மஞ்சணை மாமதில் சூழும்
மாந்துறை வந்து வணங்கி
அஞ்சொல் தமிழ்மாலை சாத்தி
அங்ககன் றன்பர்முன் னாகச்
செஞ்சடை வேதியர் மன்னும்
திருமங் கலக்குடி சேர்ந்தார்.
293

வெங்கண் விடைமேல் வருவார்
வியலூர் அடிகளைப் போற்றித்
தங்கிய இன்னிசை கூடுந்
தமிழ்ப்பதி கத்தொடை சாத்தி
அங்க ணமர்வார்தம் முன்னே
அருள்வே டங்காட்டத் தொழுது
செங்கண்மா லுக்கரி யார்தந்
திருந்துதே வன்குடி சேர்ந்தார்.
294

திருந்துதே வன்குடி மன்னும்
சிவபெரு மான்கோயில் எய்திப்
பொருந்திய காதலிற் புக்குப்
போற்றி வணங்கிப் புரிவார்
மருந்தொடு மந்திர மாகி
மற்றும் இவர்வேட மாம்என்
றருந்தமிழ் மாலை புனைந்தார்
அளவில்ஞா னத்தமு துண்டார்.
295
Go to top

மொய்திகழ் சோலையம் மூதூர்
முன்னகன் றந்நெறி செல்வார்
செய்தரு சாலிக ரும்பு
தெங்குபைம் பூகத்தி டைபோய்
மைதிகழ் கண்டர்தங் கோயில்
மருங்குள்ள எல்லாம் வணங்கி
எய்தினர் ஞானசம் பந்தர்
இன்னம்பர் ஈசர்தம் கோயில்.
296

இன்னம்பர் மன்னும்பி ரானை
இறைஞ்சி இடைமடக் கான
பன்னுந்த மிழ்த்தொடை மாலைப்
பாடல்பு னைந்து பரவிப்
பொன்னங்க ழலிணை போற்றிப்
புறம்போந்த ணைந்து புகுந்தார்
மன்னுந்த டங்கரைப் பொன்னி
வடகுரங் காடு துறையில்.
297

வடகுரங் காடு துறையில்
வாலியார் தாம்வழி பட்ட
அடைவுந் திருப்பதி கத்தில்
அறியச் சிறப்பித் தருளிப்
புடைகொண் டிறைஞ்சினர் போந்து
புறத்துள்ள தானங்கள் போற்றி
படைகொண்ட மூவிலை வேலார்
பழனத் திருப்பதி சார்ந்தார்.
298

பழனத்து மேவிய முக்கண்
பரமேட்டி யார்பயில் கோயில்
உடைபுக் கிறைஞ்சிநின் றேத்தி
உருகிய சிந்தைய ராகி
விழைசொற் பதிகம் விளம்பி
விருப்புடன் மேவி யகல்வார்
அழனக்க பங்கய வாவி
ஐயாறு சென்றடை கின்றார்.
299

மாடநிரை மணிவீதித் திருவையாற்
றினில்வாழு மல்கு தொண்டர்
நாடுய்யப் புகலிவரு ஞானபோ
னகர்வந்து நண்ணி னாரென்
றாடலொடு பாடலறா அணிமூதூர்
அடையஅலங் காரஞ் செய்து
நீடுமனக் களிப்பினொடும் எதிர்கொள்ள
நித்திலயா னத்து நீங்கி.
300
Go to top

வந்தணைந்து திருத்தொண்டர் மருங்குவர
மானேந்து கையர் தம்பால்
நந்திதிரு வருள்பெற்ற நன்னகரை
முன்னிறைஞ்சி நண்ணும் போதில்
ஐந்துபுலன் நிலைகலங்கும்இடத்தஞ்சல்
என்பார்தம் ஐயா றென்று
புந்திநிறை செந்தமிழின் சந்தஇசை
போற்றிசைத்தார் புகலி வேந்தர்.
301

மணிவீதி இடங்கடந்து மாலயனுக்
கரியபிரான் மன்னுங் கோயில்
அணிநீடு கோபுரத்தை அணைந்திறைஞ்சி
உள்ளெய்தி அளவில் காதல்
தணியாத கருத்தினொடும் தம்பெருமான்
கோயில்வலங் கொண்டு தாழ்ந்து
பணிசூடும் அவர்முன்பு பணிந்துவீழ்ந்
தெழுந்தன்பாற் பரவு கின்றார்.
302

கோடல்கோங் கங்குளிர்கூ விளம்என்னுந்
திருப்பதிகக் குலவு மாலை
நீடுபெருந் திருக்கூத்து நிறைந்ததிரு
வுள்ளத்து நிலைமை தோன்ற
ஆடுமா றதுவல்லான் ஐயாற்றெம்
ஐயனே என்று நின்று
பாடினார் ஆடினார் பண்பினொடும்
கண்பொழிநீர் பரந்து பாய.
303

பலமுறையும் பணிந்தெழுந்து புறம்போந்து
பரவுதிருத் தொண்ட ரோடு
நிலவுதிருப் பதியதன் கண்நிகழுநாள்
நிகரிலா நெடுநீர்க் கங்கை
அலையுமதி முடியார்தம் பெரும்புலியூர்
முதலான அணைந்து போற்றிக்
குலவுதமிழ்த் தொடைபுனைந்து மீண்டணைந்து
பெருகார்வங் கூரு நாளில்.
304

குடதிசைமேற் போவதற்குக் கும்பிட்டங்
கருள்பெற்றுக் குறிப்பி னோடும்
படருநெறி மேலணைவார் பரமர்திரு
நெய்த்தானப் பதியில் நண்ணி
அடையுமனம் உறவணங்கி அருந்தமிழ்மா
லைகள்பாடி அங்கு நின்றும்
புடைவளர்மென் கரும்பினொடு பூகமிடை
மழபாடி போற்றச் சென்றார்.
305
Go to top

செங்கைமான் மறியார்தந் திருமழபா
டிப்புறத்துச் சேரச் செல்வார்
அங்கையார் அழலென்னுந் திருப்பதிகம்
எடுத்தருளி அணைந்த போழ்தில்
மங்கைவாழ் பாகத்தார் மழபாடி
தலையினால் வணங்கு வார்கள்
பொங்குமா தவமுடையார் எனத்தொழுது
போற்றிசைத்தே கோயில் புக்கார்.
306

மழபாடி வயிரமணித் தூணமர்ந்து
மகிழ்கோயில் வலங்கொண் டெய்திச்
செழுவாச மலர்க்கமலச் சேவடிக்கீழ்ச்
சென்றுதாழ்ந் தெழுந்து நின்று
தொழுதாடிப் பாடிநறுஞ் சொல்மாலைத்
தொடையணிந்து துதித்துப் போந்தே
ஒழியாத நேசமுடன் உடையவரைக்
கும்பிட்டங் குறைந்தார் சின்னாள்.
307

அதன்மருங்கு கடந்தருளால் திருக்கானூர்
பணிந்தேத்தி ஆன்ற சைவ
முதன்மறையோர் அன்பிலா லந்துறையின்
முன்னவனைத் தொழுது போற்றிப்
பதநிறைசெந் தமிழ்பாடிச் சடைமுடியார்
பலபதியும் பணிந்து பாடி
மதகரட வரையுரித்தார் வடகரைமாந்
துறையணைந்தார் மணிநூல் மார்பர்.
308

சென்றுதிரு மாந்துறையில் திகழ்ந்துறையும்
திருநதிவாழ் சென்னி யார்தம்
முன்றில்பணிந் தணிநெடுமா ளிகைவலஞ்செய்
துள்புக்கு முன்பு தாழ்ந்து
துன்றுகதிர்ப் பரிதிமதி மருத்துக்கள்
தொழுதுவழி பாடு செய்ய
நின்றநிலை சிறப்பித்து நிறைதமிழின்
சொல்மாலை நிகழப் பாடி.
309

அங்கணகன் றம்மருங்கில் அங்கணர்தம்
பதிபிறவும் அணைந்து போற்றிச்
செங்கமலப் பொதியவிழச் சேல்பாயும்
வயல்மதுவால் சேறு மாறாப்
பொங்கொலிநீர் மழநாட்டுப் பொன்னிவட
கரைமிசைப் போய்ப் புகலி வேந்தர்
நங்கள்பிரான் திருப்பாச்சி லாச்சிரா
மம்பணிய நண்ணும் போதில்.
310
Go to top

அந்நகரிற் கொல்லிமழ வன்பயந்த
அரும்பெறல்ஆர் அமுத மென்சொல்
கன்னிஇள மடப்பிணையாங் காமருகோ
மளக்கொழுந்தின் கதிர்செய் மேனி
மன்னுபெரும் பிணியாகும் முயலகன்வந்
தணைவுறமெய் வருத்த மெய்தித்
தன்னுடைய பெருஞ்சுற்றம் புலம்பெய்தத்
தானும்மனந் தளர்வு கொள்வான்.
311

மற்றுவே றொருபரிசால் தவிராமை
மறிவளரும் கையார் பாதம்
பற்றியே வருங்குலத்துப் பான்மையினான்
ஆதலினாற் பரிவு தீரப்
பொற்றொடியைக் கொடுவந்து போர்க்கோலச்
சேவகராய்ப் புரங்கள் மூன்றும்
செற்றவர்தங் கோயிலினுள் கொடுபுகுந்து
திருமுன்பே இட்டு வைத்தான்.
312

அவ்வளவில் ஆளுடைய பிள்ளையார்
எழுந்தருளி அணுக வெய்தச்
செவ்வியமெய்ஞ்ஞானமுணர் திருஞான
சம்பந்தன் வந்தான் என்றே
எவ்வுலகுந் துயர்நீங்கப் பணிமாறுந்
தனிக்காளத் தெழுந்த வோசை
வெவ்வுயிர்க்கும் அவன்கேளா மெல்லியலை
விட்டெதிரே விரைந்து செல்வான்.
313

மாநகரம் அலங்கரிமின் மகரதோ
ரணம்நாட்டும் மணிநீர் வாசத்
தூநறும்பூ ரணகும்பம் சோதிமணி
விளக்கினொடு தூபம் ஏந்தும்
ஏனையணி பிறவுமெலாம் எழில்பெருக
இயற்றும்என ஏவித் தானும்
வானவர்நா யகர்மகனார் வருமுன்பு
தொழுதணைந்தான் மழவர் கோமான்.
314

பிள்ளையார் எழுந்தருளப் பெற்றேனென்
றானந்தம் பெருகு காதல்
வெள்ளநீர் கண்பொழியத் திருமுத்தின்
சிவிகை யின்முன் வீழ்ந்தபோது
வள்ளலார் எழுகவென மலர்வித்த
திருவாக்கால் மலர்க்கை சென்னி
கொள்ளமகிழ்ந் துடன்சென்று குலப்பதியின்
மணிவீதி கொண்டு புக்கான்.
315
Go to top

மங்கலதூ ரியம்முழங்கு மணிவீதி
கடந்துமதிச் சடையார் கோயிற்
பொங்குசுடர்க் கோபுரத்துக் கணித்தாகப்
புனைமுத்தின் சிவிகை நின்றும்
அங்கண்இழிந் தருளுமுறை இழிந்தருளி
அணிவாயில் பணிந்து புக்குத்
தங்கள்பிரான் கோயில்வலங் கொண்டுதிரு
முன்வணங்கச் சாருங் காலை.
316

கன்னியிளங் கொடியுணர்வு கழிந்துநிலன்
சேர்ந்ததனைக் கண்டு நோக்கி
என்இதுவென் றருள்செய்ய மழவன்தான்
எதிர்இறைஞ்சி அடியேன் பெற்ற
பொன்இவளை முயலகனாம் பொருவிலரும்
பிணிபொருந்தப் புனிதர் கோயில்
முன்னணையக் கொணர்வித்தேன் இதுபுகுந்த
317

அணிகிளர் தாரவன் சொன்னமாற்றம்
அருளொடுங் கேட்டுஅந் நிலையின்நின்றே
பணிவளர் செஞ்சடைப் பாச்சின்மேய
பரம்பொரு ளாயினா ரைப்பணிந்து
மணிவளர் கண்டரோ மங்கையைவாட
மயல்செய்வ தோஇவர் மாண்பதென்று
தணிவில் பிணிதவிர்க் கும்பதிகத்
தண்டமிழ் பாடினார் சண்பைநாதர்.
318

பன்னு தமிழ்மறை யாம்பதிகம்
பாடித் திருக்கடைக் காப்புச்சாத்தி
மன்னுங் கவுணியர் போற்றிநிற்க
மழவன் பயந்த மழலைமென்சொல்
கன்னி யுறுபிணி விட்டுநீங்கக்
கதுமெனப் பார்மிசை நின்றெழுந்து
பொன்னின் கொடியென ஒல்கிவந்து
பொருவலித் தாதை புடையணைந்தாள்.
319

வன்பிணி நீங்கு மகளைக்கண்ட
மழவன் பெருகு மகிழ்ச்சிபொங்கத்
தன்தனிப் பாவையும் தானுங்கூடச்
சண்பையர் காவலர் தாளில்வீழ
நின்ற அருமறைப் பிள்ளையாரும்
நீரணி வேணி நிமலர்பாதம்
ஒன்றிய சிந்தை யுடன்பணிந்தார்
உம்பர்பிரான் திருத் தொண்டர்ஆர்த்தார்.
320
Go to top

நீடு திருவாச் சிராமம்மன்னும்
நேரிழை பாகத்தர் தாள்வணங்கிக்
கூடும் அருளுடன் அங்கமர்ந்து
கும்பிடும் கொள்கைமேற் கொண்டுபோந்தே
ஆடல் பயின்றார் பதிபிறவும்
அணைந்து பணிந்தடி போற்றியேகிச்
சேடர்கள் வாழுந் திருப்பைஞ்ஞீலிச்
சிவபெருமானை இறைஞ்சச் சென்றார்.
321

பண்பயில் வண்டினம் பாடுஞ்சோலைப்
பைஞ்ஞீலி வாணர் கழல்பணிந்து
மண்பர வுந்தமிழ் மாலைபாடி
வைகி வணங்கி மகிழ்ந்து போந்து
திண்பெருந் தெய்வக் கயிலையில்வாழ்
சிவனார் பதிபல சென்றிறைஞ்சிச்
சண்பை வளந்தரு நாடர்வந்து
தடந்திரு ஈங்கோய் மலையைச்சார்ந்தார்.
322

செங்கட் குறவரைத் தேவர்போற்றுந்
திகழ்திரு ஈங்கோய் மலையின்மேவுங்
கங்கைச் சடையார் கழல்பணிந்து
கலந்த இசைப்பதி கம்புனைந்து
பொங்கர்ப் பொழில்சூழ் மலையும்மற்றும்
புறத்துள்ள தானங்க ளெல்லாம்போற்றிக்
கொங்கிற் குடபுலஞ் சென்றணைந்தார்
கோதின் மெய்ஞ் ஞானக் கொழுந்தனையார்.
323

அண்டர்பிரான் ஆலயங்கள்
அம்மருங்குள் ளனபணிந்து
தெண்டிரைநீர்த் தடம்பொன்னித்
தென்கரையாங் கொங்கினிடை
வண்டலையும் புனற்சடையார்
மகிழ்விடங்கள் தொழுதணைந்தார்
கொண்டல்பயில் நெடும்புரிசைக்
கொடிமாடச் செங்குன்றூர்.
324

அந்நகரில் வாழ்வாரும்
அடியவரும் மனமகிழ்ந்து
பன்னெடுந்தோ ரணமுதலாப்
பயிலணிகள் பலஅமைத்து
முன்னுறவந் தெதிர்கொண்டு
பணிந்தேத்தி மொய்கரங்கள்
சென்னியுறக் கொண்டணைந்தார்
சினவிடையார் செழுங்கோயில்.
325
Go to top

தம்பெருமான் கோயிலினுள்
எழுந்தருளித் தமிழ்விரகர்
நம்பரவர் திருமுன்பு
தாழ்ந்தெழுந்து நலஞ்சிறக்க
இம்பரும்உம் பருமேத்த
இன்னிசைவண் டமிழ்பாடிக்
கும்பிடும்ஆ தரவுடன்அக்
கோநகரில் இனிதமர்ந்தார்.
326

அப்பாலைக் குடபுலத்தில்
ஆறணிந்தார்அமர்கோயில்
எப்பாலுஞ் சென்றேத்தித்
திருநணா வினைஇறைஞ்சிப்
பைப்பாந்தள் புனைந்தவரைப்
பரவிப்பண் டமர்கின்ற
வைப்பான செங்குன்றூர்
வந்தணைந்து வைகினார்.
327

ஆங்குடைய பிள்ளையார்
அமர்ந்துறையும் நாளின்கண்
தூங்குதுளி முகிற்குலங்கள்
சுரந்துபெய லொழிகாலை
வீங்கொலிநீர் வைப்பெல்லாம்
வெயில்பெறா விருப்புவரப்
பாங்கர்வரை யுங்குளிரும்
பனிப்பருவ மெய்தியதால்.
328

அளிக்குலங்கள் சுளித்தகல
அரவிந்தம் முகம்புலரப்
பளிக்குமணி மரகதவல்
லியிற்கோத்த பான்மையெனத்
துளித்தலைமெல் லறுகுபனி
தொடுத்தசையச் சூழ்பனியால்
குளிர்க்குடைந்து வெண்படாம்
போர்த்தனைய குன்றுகளும்.
329

மொய்பனிகூர் குளிர்வாடை
முழுதுலவும் பொழுதேயாய்க்
கொய்தளிர்மென் சோலைகளும்
குலைந்தசையக் குளிர்க்கொதுங்கி
வெய்யவனும் கரநிமிர்க்க
மாட்டான்போல் விசும்பினிடை
ஐதுவெயில் விரிப்பதுவும்
அடங்குவது மாகுமால்.
330
Go to top

நீடியஅப்பதிகளெலாம்
நிரைமாடத் திறைகள்தொறும்
பேடையுடன் பவளக்கால்
புறவொடுங்கப் பித்திகையின்
தோடலர்மென் குழன்மடவார்
துணைக்கலச மென்முலையுள்
ஆடவர்தம் பணைத்தோளும்
மணிமார்பும் அடங்குவன.
331

அரிசனமும் குங்குமமும்
அரைத்தமைப்பார் அயலெல்லாம்
பரியஅகிற் குறைபிளந்து
புகைப்பார்கள் பாங்கெல்லாம்
எரியுமிழ்பேழ் வாய்த்தோணி
இரும்பீர்ப்பார் இடையெல்லாம்
விரிமலர்மென் புறவணிந்த
மீப்புலத்து வைப்பெல்லாம்.
332

அந்நாளில் கொடிமாடச்
செங்குன்றூர் அமர்ந்திருந்த
மெய்ஞ்ஞானப் பிள்ளையா
ருடன்மேவும் பரிசனங்கள்
பன்னாளும் அந்நாட்டில்
பயின்றதனால் பனித்தகுளிர்
முன்னான பிணிவந்து
மூள்வதுபோல் முடுகுதலும்.
333

அந்நிலைமை ஆளுடைய
பிள்ளையார்க் கவர்களெலாம்
முன்னறிவித் திறைஞ்சுதலும்
முதல்வனார் அருள்தொழுதே
இந்நிலத்தின் இயல்பெனினும்
நமக்கெய்தப் பெறாஎன்று
சென்னிமதி யணிந்தாரைத்
திருப்பதிகம் பாடுவார்.
334

அவ்வினைக் கிவ்வினை
என்றெடுத் தையர்அமுதுசெய்த
வெவ்விடம் முன்தடுத்
தெம்மிடர் நீக்கிய வெற்றியினால்
எவ்விடத்தும்அடி யார்இடர்
காப்பது கண்டமென்றே
செய்வினை தீண்டா திருநீல
கண்டம் எனச்செப்பினார்.
335
Go to top

ஆய குறிப்பினில் ஆணை
நிகழ அருளிச்செய்து
தூய பதிகத் திருக்கடைக்
காப்புத் தொடுத்தணிய
மேயஅப் பொற்பதி வாழ்பவர்க்
கேயன்றி மேவும்அந்நாள்
தீய பனிப்பிணி அந்நாடு
அடங்கவும் தீர்ந்ததன்றே.
336

அப்பதி யின்கண் அமர்ந்து
சிலநாளில் அங்ககன்று
துப்புறழ் வேணியர் தானம்
பலவும் தொழுதருளி
முப்புரி நூலுடன் தோலணி
மார்பர் முனிவரொடும்
செப்பருஞ் சீர்த்திருப் பாண்டிக்
கொடுமுடி சென்றணைந்தார்.
337

பருவம் அறாப்பொன்னிப் பாண்டிக்
கொடுமுடி யார்தம்பாதம்
மருவி வணங்கி வளத்தமிழ்
மாலை மகிழ்ந்துசாத்தி
விரிசுடர் மாளிகை வெஞ்சமாக்
கூடல் விடையவர்தம்
பொருவில்தா னம்பலபோற்றிக்
குணதிசைப் போதுகின்றார்.
338

செல்வக் கருவூர்த் திருவா
னிலைக்கோயில் சென்றிறைஞ்சி
நல்லிசை வண்தமிழ்ச் சொற்றொடை
பாடிஅந் நாடகன்று
மல்கிய மாணிக்க வெற்பு
முதலா வணங்கிவந்து
பல்கு திரைப்பொன்னித் தென்கரைத்
தானம் பலபணிவார்.
339

பன்னெடுங் குன்றும் படர்நெடுங்
கானும் பலபதியும்
அந்நிலைத் தானங்க ளாயின
எல்லாம் அமர்ந்திறைஞ்சி
மன்னு புகலியில் வைதிக
வாய்மை மறையவனார்
பொன்னியல் வேணிப் புனிதர்
பராய்த்துறை யுட்புகுந்தார்.
340
Go to top

நீடும் பராய்த்துறை நெற்றித்
தனிக்கண்ணர் கோயில்நண்ணிக்
கூடுங் கருத்தொடு கும்பிட்டுக்
கோதில் தமிழ்ச்சொல்மாலை
பாடுங் கவுணியர் கண்பனி
மாரி பரந்திழியச்
சூடுங் கரதலத் தஞ்சலி கோலித்
தொழுது நின்றார்.
341

தொழுது புறம்பணைந் தங்குநின்
றேகிச் சுரர்பணிவுற்
றெழுதிரு வாலந் துறைதிருச்
செந்துறை யேமுதலா
வழுவில் கோயில்கள் சென்று
வணங்கி மகிழ்ந்தணைவார்
செழுமலர்ச் சோலைத் திருக்கற்
குடிமலை சேரவந்தார்.
342

கற்குடி மாமலை மேலெழுந்த
கனகக் கொழுந்தினைக் கால்வளையப்
பொற்றிரள் மேருச் சிலைவளைத்த
போர்விடை யாளியைப் போற்றிசைத்து
நற்றமிழ் மாலை புனைந்தருளி
ஞானசம் பந்தர் புலங்கள்ஐ ந்தும்
செற்றவர் மூக்கீச் சரம்பணிந்து
திருச்சிராப் பள்ளிச் சிலம்பணைந்தார்.
343

செம்மணி வாரி அருவிதூங்கும்
சிராப்பள்ளி மேய செழுஞ்சுடரைக்
கைம்மலை ஈருரி போர்வை சாத்தும்
கண்ணுத லாரைக் கழல்பணிந்து
மெய்ம்மகிழ் வெய்தி உளங்குளிர
விளங்கிய சொற்றமிழ் மாலைவேய்ந்து
மைம்மலர் கண்டர்தம் ஆனைக்காவை
வணங்கும் விருப்பொடு வந்தணைந்தார்.
344

விண்ணவர் போற்றிசெய் ஆனைக்காவில்
வெண்ணாவல் மேவிய மெய்ப்பொருளை
நண்ணி யிறைஞ்சிமுன் வீழ்ந்தெழுந்து
நாற்கோட்டு நாகம் பணிந்ததுவும்
அண்ணல்கோச் செங்க ணரசன்செய்த
அடிமையும் அஞ்சொல் தொடையில்வைத்துப்
பண்ணுறு செந்தமிழ் மாலைபாடிப்
பரவிநின் றேத்தினர் பான்மையினால்.
345
Go to top

நாரணன் நான்முகன் காணாவுண்மை
வெண்ணாவல் உண்மை மயேந்திரமும்
சீரணி நீடு திருக்கயிலை
செல்வத் திருவாரூர் மேயபண்பும்
ஆரணத் துட்பொரு ளாயினாரை
ஆனைக்கா வின்கட் புகழ்ந்துபாடி
ஏரணியும் பொழில் சூழ்ந்தசண்பை
ஏந்தலார் எல்லையில் இன்பமுற்றார்.
346

கைதொழு தேத்திப் புறத்தணைந்து
காமர் பதியதன் கட்சிலநாள்
வைகி வணங்கி மகிழ்ந்தணைவார்
மன்னுந் தவத்துறை வானவர்தாள்
எய்தி இறைஞ்சி எழுந்துநின்றே
இன்தமிழ் மாலைகொண் டேத்திப்போந்து
வைதிக மாமணி அம்மருங்கு
மற்றுள்ள தானம் வழுத்திச் செல்வார்.
347

ஏறுயர்த் தார்திருப் பாற்றுறையும்
எறும்பியூர் மாமலை யேமுதலா
வேறுபதி கள்பல வும்போற்றி
விரவுந் திருத்தொண்டர் வந்துசூழ
ஈறில்புகழ்ச் சண்பை ஆளியார்தாம்
எண்திசை யோரும் தொழுதிறைஞ்ச
நீறணிசெம் பவளப் பொருப்பில்
நெடுங்கள மாநகர் சென்றுசேர்ந்தார்.
348

நெடுங்களத் தாதியை அன்பால்நின்பால்
நெஞ்சம் செலாவகை நேர்விலக்கும்
இடும்பைகள் தீர்த்தருள் செய்வாய்என்னும்
இன்னிசை மாலைகொண் டேத்தியேகி
அடும்பணிச் செஞ்சடை யார்பதிகள்
அணைந்து பணிந்து நியமம்போற்றிக்
கடுங்கை வரையுரித் தார்மகிழ்ந்த
காட்டுப்பள் ளிப்பதி கைதொழுவார்.
349

சென்று திகழ்திருக் காட்டுப்பள்ளிச்
செஞ்சடை நம்பர்தங் கோயில்எய்தி
முன்றில் வலங்கொண் டிறைஞ்சிவீழ்ந்து
மொய்கழற் சேவடி கைதொழுவார்
கன்றணை ஆவின் கருத்துவாய்ப்பக்
கண்ணுத லாரைமுன் போற்றிசெய்து
மன்றுள்நின் றாடல் மனத்துள்வைப்பார்
வாருமன் னும்முலை பாடிவாழ்ந்தார்.
350
Go to top

அங்கப் பதிநின் றெழுந்தருளி
அணிதிரு வாலம் பொழில்வணங்கிப்
பொங்கு புனற்பொன்னிப் பூந்துருத்திப்
பொய்யிலி யாரைப் பணிந்துபோற்றி
எங்கும் நிகழ்திருத் தொண்டர்குழாம்
எதிர்கொள்ள எப்பதி யும்தொழுது
செங்கயல் பாய்வயல் ஓடைசூழ்ந்த
திருக்கண்டி யூர்தொழச் சென்றணைந்தார்.
351

கண்டியூர் வீரட்டர் கோயிவெய்திக்
கலந்தடி யாருடன் காதல்பொங்கக்
கொண்ட விருப்புடன் தாழ்ந்திறைஞ்சிக்
குலவு மகிழ்ச்சியின் கொள்கையினால்
தொண்டர் குழாத்தினை நோக்கிநின்று
தொடுத்த இசைத்தமிழ் மாலைதன்னில்
அண்டர் பிரான்தன் அருளின்வண்ணம்
அடியார் பெருமையிற் கேட்டருளி.
352

வினவி எடுத்த திருப்பதிகம்
மேவு திருக்கடைக் காப்புத்தன்னில்
அனைய நினைவரி யோன்செயலை
அடியாரைக் கேட்டு மகிழ்ந்ததன்மை
புனைவுறு பாடலில் போற்றிசெய்து
போந்து புகலிக் கவுணியனார்
துனைபுனற் பொன்னித் திரைவலங்கொள்
சோற்றுத் துறைதொழச் சென்றடைவார்.
353

அப்பர்சோற் றுத்துறை சென்றடை வோம்என்
றொப்பில் வண்டமிழ் மாலை ஒருமையால்
செப்பி யேசென்று சேர்ந்தனர் சேர்விலார்
முப்புரம் செற்ற முன்னவர் கோயில்முன்.
354

தொல்லை நீள்திருச் சோற்றுத் துறையுறை
செல்வர் கோயில் வலங்கொண்டு தேவர்கள்
அல்லல் தீர்க்கநஞ் சுண்ட பிரானடி
எல்லை யில்அன்பு கூர இறைஞ்சினார்.
355
Go to top

இறைஞ்சி ஏத்தி எழுந்துநின் றின்னிசை
நிறைந்த செந்தமிழ் பாடி நிலாவிஅங்
குறைந்து வந்தடி யாருட னெய்தினார்
சிறந்த சீர்த்திரு வேதி குடியினில்.
356

வேத வேதியர் வேதி குடியினில்
நாதர் கோயில் அணைந்து நலந்திகழ்
பாத பங்கயம் போற்றிப் பணிந்தெழுந்
தோதி னார்தமிழ் வேதத்தின் ஓங்கிசை.
357

எழுது மாமறை யாம்பதி கத்திசை
முழுதும் பாடி முதல்வரைப் போற்றிமுன்
தொழுது போந்துவந் தெய்தினார் சோலைசூழ்
பழுதில் சீர்த்திரு வெண்ணிப் பதியினில்.
358

வெண்ணி மேய விடையவர் கோயிலை
நண்ணி நாடிய காதலில் நாள்மதிக்
கண்ணி யார்தங் கழலிணை போற்றியே
பண்ணில் நீடும் பதிகமும் பாடினார்.
359

பாடி நின்று பரவிப் பணிந்துபோய்
ஆடும் அங்கணர் கோயில்அங் குள்ளன
மாடு சென்று வணங்கி மகிழ்ந்தனர்
நீடு சண்பை நிறைபுகழ் வேதியர்.
360
Go to top

மொய்தருஞ் சோலைசூழ் முளரிமுள் ளடவிபோய்
மெய்தரும் பரிவிலான் வேள்வியைப் பாழ்படச்
செய்தசங் கரர்திருச் சக்கரப் பள்ளிமுன்
பெய்தவந் தருளினார் இயலிசைத் தலைவனார்.
361

சக்கரப் பள்ளியார் தந்தனிக் கோயிலுள்
புக்கருத் தியினுடன் புனைமலர்த் தாள்பணிந்
தக்கரைப் பரமர்பால் அன்புறும் பரிவுகூர்
மிக்கசொல் தமிழினால் வேதமும் பாடினார்.
362

தலைவர்தம் சக்கரப் பள்ளிதன் னிடையகன்
றலைபுனற் பணைகளின் அருகுபோய் அருமறைப்
புலனுறும் சிந்தையார் புள்ளமங் கைப்பதி
குலவும் ஆலந்துறைக் கோயிலைக் குறுகினார்.
363

மன்னும்அக் கோயில்சேர் மான்மறிக் கையர்தம்
பொன்னடித் தலம்உறப் புரிவொடுந் தொழுதெழுந்
தின்னிசைத் தமிழ்புனைந் திறைவர்சே லூருடன்
பன்னுபா லைத்துறைப் பதிபணிந் தேகினார்.
364

காவின்மேல் முகிலெழுங் கமழ்நறும் புறவுபோய்
வாவிநீ டலவன்வாழ் பெடையுடன் மலர்நறும்
பூவின்மேல் விழைவுறும் புகலியார் தலைவனார்
சேவின்மேல் அண்ணலார் திருநலூர் நண்ணினார்.
365
Go to top

மன்றலங் கழனிசூழ் திருநலூர் மறைவலோர்
துன்றுமங் கலவினைத் துழனியால் எதிர்கொளப்
பொன்தயங் கொளிமணிச் சிவிகையிற் பொலிவுறச்
சென்றணைந் தருளினார் சிரபுரச் செம்மலார்.
366

நித்திலச் சிவிகைமேல் நின்றிழிந் தருளியே
மொய்த்தஅந் தணர்குழாம் முன்செலப் பின்செலும்
பத்தரும் பரிசனங் களுமுடன் பரவவே
அத்தர்தங் கோபுரந் தொழுதணைந் தருளினார்.
367

வெள்ளிமால் வரையைநேர் விரிசுடர்க் கோயிலைப்
பிள்ளையார் வலம்வரும் பொழுதினில் பெருகுசீர்
வெள்ளஆ னந்தமெய் பொழியமே லேறிநீர்
துள்ளுவார் சடையரைத் தொழுதுமுன் பரவுவார்.
368

பரவுசொற் பதிகமுன் பாடினார் பரிவுதான்
வரவயர்த் துருகுநேர் மனனுடன் புறம்அணைந்
தரவுடைச் சடையர்பே ரருள்பெறும் பெருமையால்
விரவும்அப் பதியமர்ந் தருளியே மேவினார்.
369

அன்ன தன்மையில் அப்பதி
யினில் அமர்ந் தருளி
மின்னு செஞ்சடை விமலர்தாள்
விருப்பொடு வணங்கிப்
பன்னும் இன்னிசைப் பதிகமும்
பலமுறை பாடி
நன்னெ டுங்குல நான்மறை
யவர்தொழ நயந்தார்.
370
Go to top

நீடும் அப்பதி நீங்குவார்
நிகழ்திரு நல்லூர்
ஆடுவார் திரு அருள்பெற
அகன்றுபோந் தங்கண்
மாடு முள்ளன வணங்கியே
பரவிவந் தணைந்தார்
தேடும் மால்அயற் கரியவர்
திருக்கரு காவூர்.
371

வந்து பந்தர்மா தவிமணங்
கமழ்கரு காவூர்ச்
சந்த மாமறை தந்தவர்
கழலிணை தாழ்ந்தே
அந்த மில்லவர் வண்ணம்ஆர்
அழல்வண்ணம் என்று
சிந்தை இன்புறப் பாடினார்
செழுந்தமிழ்ப் பதிகம்.
372

பதிக இன்னிசை பாடிப்போய்ப்
பிறபதி பலவும்
நதிய ணிந்தவர் கோயில்கள்
நண்ணியே வணங்கி
373

மன்னும் அப்பதி வானவர்
போற்றவும் மகிழ்ந்த
தன்மை யார்பயில் கோயிலுள்
தம்பரி சுடையார்
என்னும் நாமமும் நிகழ்ந்திட
ஏத்திமுன் இறைஞ்சிப்
பன்னு சீர்ப்பதி பலவும்அப்
பாற்சென்று பணிவார்.
374

பழுதில் சீர்த்திருப் பரிதிநன்
375
Go to top

பொங்கு காதலிற் போற்றிஅங்
கருளுடன் போந்து
பங்க யத்தடம் பணைப்பதி
பலவுமுன் பணிந்தே
எங்கும் அன்பர்கள் ஏத்தொலி
எடுக்கவந் தணைந்தார்
அங்க ணர்க்கிட மாகிய
பழம்பதி ஆவூர்.
376

பணியும் அப்பதிப் பசுபதீச்
சரத்தினி திருந்த
மணியை உள்புக்கு வழிபடும்
விருப்பினால் வணங்கித்
தணிவில் காதலில் தண்டமிழ்
மாலைகள் சாத்தி
அணிவி ளங்கிய திருநலூர்
மீண்டும்வந் தணைந்தார்.
377

மறை விளங்கும்அப் பதியினில்
மணிகண்டர் பொற்றாள்
நிறையும் அன்பொடு வணங்கியே
நிகழ்பவர் நிலவும்
பிறைய ணிந்தவர் அருள்பெறப்
பிரசமென் மலர்வண்
டறைந றும்பொழில் திருவலஞ்
சுழியில்வந் தணைந்தார்.
378

மதிபு னைந்தவர் வலஞ்சுழி
மருவுமா தவத்து
முதிரும் அன்பர்கள் முத்தமிழ்
விரகர்த முன்வந்
தெதிர்கொள் போழ்தினில் இழிந்தவர்
எதிர்செல மதியைக்
கதிர்செய் வெண்முகிற் குழாம்புடை
சூழ்ந்தெனக் கலந்தார்.
379

கலந்த அன்பர்கள் தொழுதெழக்
கவுணியர் தலைவர்
அலர்ந்த செங்கம லக்கரம்
குவித்துடன் அணைவார்
வலஞ்சு ழிப்பெரு மான்மகிழ்
கோயில்வந் தெய்திப்
பொலங்கொள் நீள்சுடர்க் கோபுரம்
இறைஞ்சியுட் புகுந்தார்.
380
Go to top

மருவலார்புரம் முனிந்தவர்
திருமுன்றில் வலங்கொண்
டுருகும் அன்புடன்உச்சிமேல்
அஞ்சலி யினராய்த்
திருவ லஞ்சுழி யுடையவர்
சேவடித் தலத்தில்
பெருகும்ஆதர வுடன்பணிந்
தெழுந்தனர் பெரியோர்.
381

ஞானபோனகர் நம்பர்முன்
தொழுதெழு விருப்பால்
ஆனகாதலில் அங்கண
ரவர்தமை வினவும்
ஊனமில்இசை யுடன்விளங்
கியதிருப் பதிகம்
பானலார்மணி கண்டரைப்
பாடினார் பரவி.
382

புலங்கொள் இன்தமிழ் போற்றினர்
புறத்தினில் அணைந்தே
இலங்கு நீர்ப்பொன்னி சூழ்திருப்
பதியினி லிருந்து
நலங்கொள் காதலின் நாதர்தாள்
நாள்தொறும் பரவி
வலஞ்சு ழிப்பெருமான் தொண்டர்தம்
முடன் மகிழ்ந்தார்.
383

மகிழ்ந்த தன்தலை வாழும்அந்
நாளிடை வானில்
திகழ்ந்த ஞாயிறு துணைப்புணர்
ஓரையுட் சேர்ந்து
நிகழ்ந்த தன்மையில் நிலவும்ஏழ்
கடல்நீர்மை குன்ற
வெகுண்டு வெங்கதிர்பரப்பலின்
முதிர்ந்தது வேனில்.
384

தண்பு னற்குறிர் கால்நறுஞ்
சந்தனத் தேய்வை
பண்பு நீடிய வாசமென்
மலர்பொதி பனிநீர்
நண்பு டைத்துணை நகைமணி
முத்தணி நாளும்
உண்ப மாதுரி யச்சுவை
உலகுளோர் விரும்ப.
385
Go to top

அறல்மலியுங் கான்யாற்றின்
நீர்நசையால் அணையுமான்
பெறலரிய புனலென்று
பேய்த்தேரின் பின்தொடரும்
உறையுணவு கொள்ளும்புள்
தேம்பஅயல் இரைதேரும்
பறவைசிறை விரித்தொடுங்கப்
பனிப்புறத்து வதியுமால்.
386

நீணிலைமா ளிகைமேலும்
நிலாமுன்றின் மருங்கினிலும்
வாணிழனற் சோலையிலும்
மலர்வாவிக் கரைமாடும்
பூணிலவு முத்தணிந்த
பூங்குழலார் முலைத்தடத்தும்
காணும்மகிழ்ச் சியின்மலர்ந்து
மாந்தர்கலந் துறைவரால்.
387

மயிலொடுங்க வண்டாட
மலர்க்கமல முகைவிரியக்
குயிலொடுங்காச் சோலையின்மெல்
தளிர்கோதிக் கூவியெழத்
துயிலொடுங்கா உயிரனைத்தும்
துயில்பயிலச் சுடர்வானில்
வெயிலொடுங்கா வெம்மைதரும்
வேனில்விரி தருநாளில்.
388

சண்பைவரும் பிள்ளையார்
சடாமகுடர் வலஞ்சுழியை
எண்பெருகத் தொழுதேத்திப்
பழையாறை எய்துதற்கு
நண்புடைய அடியார்கள்
உடன்போத நடந்தருளி
விண்பொருநீள் மதிளாறை
மேற்றளிசென் றெய்தினார்.
389

திருவாறை மேற்றளியில்
திகழ்ந்திருந்த செந்தீயின்
உருவாளன் அடிவணங்கி
உருகியஅன் பொடுபோற்றி
மருவாரும் குழல்மலையாள்
வழிபாடு செய்யஅருள்
தருவார்தந் திருச்சத்தி
முற்றத்தின் புறஞ்சார்ந்தார்.
390
Go to top

திருச்சத்தி முற்றத்தில்
சென்றெய்தித் திருமலையாள்
அருச்சித்த சேவடிகள்
ஆர்வமுறப் பணிந்தேத்திக்
கருச்சுற்றில் அடையாமல்
கைதருவார் கழல்பாடி
விருப்புற்றுத் திருப்பட்டீச்
சரம்பணிய மேவுங்கால்.
391

வெம்மைதரு வேனிலிடை
வெயில்வெப்பந் தணிப்பதற்கு
மும்மைநிலைத் தமிழ்விரகர்
முடிமீதே சிவபூதம்
தம்மைஅறி யாதபடி
தண்தரளப் பந்தரெடுத்
தெம்மைவிடுத் தருள்புரிந்தார்
பட்டீசர் என்றியம்ப.
392

அவ்வுரையும் மணிமுத்தின்
பந்தரும்ஆ காயமெழச்
செவ்விய மெய்ஞ் ஞானமுணர்
சிரபுரத்துப் பிள்ளையார்
இவ்வினைதான் ஈசர்திரு
வருளாகில் இசைவதென
மெய்விரவு புளகமுடன்
மேதினியின் மிசைத்தாழ்ந்தார்.
393

அதுபொழுதே அணிமுத்தின்
பந்தரினை அருள்சிறக்கக்
கதிரொளிய மணிக்காம்பு
பரிசனங்கள் கைக்கொண்டார்
மதுரமொழி மறைத்தலைவர்
மருங்கிமையோர் பொழிவாசப்
புதுமலரால் அப்பந்தர்
பூம்பந்த ரும்போலும்.
394

தொண்டர்குழாம் ஆர்ப்பெடுப்பச்
சுருதிகளின் பெருந்துழனி
எண்திசையும் நிறைந்தோங்க
எழுந்தருளும் பிள்ளையார்
வெண்தரளப் பந்தர் நிழல்
மீதணையத் திருமன்றில்
அண்டர்பிரான் எடுத்ததிரு
வடிநீழல் எனஅமர்ந்தார்.
395
Go to top

பாரின்மிசை அன்பருடன்
வருகின்றார் பன்னகத்தின்
ஆரம்அணிந் தவர்தந்த
அருட்கருணைத் திறம்போற்றி
ஈரமனங் களிதழைப்ப
எதிர்கொள்ள முகமலர்ந்து
சேரவரும் தொண்டருடன்
திருப்பட்டீச் சரம்அணைந்தார்.
396

சென்றணைந்து திருவாயில்
புறத்திறைஞ்சி உள்புக்கு
வென்றிவிடை யவர்கோயில்
வலங்கொண்டு வெண்கோட்டுப்
பன்றிகிளைத் தறியாத
பாததா மரைகண்டு
முன்தொழுது விழுந்தெழுந்து
மொழிமாலை போற்றிசைத்தார்.
397

அருள்வெள்ளத் திறம்பரவி
அளப்பரிய ஆனந்தப்
பெருவெள்ளத் திடைமூழ்கிப்
பேராத பெருங்காதல்
திருவுள்ளப் பரிவுடனே
செம்பொன்மலை வல்லியார்
தருவள்ளத் தமுதுண்ட
சம்பந்தர் புறத்தணைந்தார்.
398

அப்பதியில் அமர்கின்ற
ஆளுடைய பிள்ளையார்
செப்பருஞ்சீர்த் திருவாறை
வடதளியில் சென்றிறைஞ்சி
ஒப்பரிய தமிழ்பாடி
உடனமரும் தொண்டருடன்
எப்பொருளு மாய்நின்றார்
இரும்பூளை எய்தினார்.
399

தேவர்பிரா னமர்ந்ததிரு
இரும்பூளை சென்றெய்தக்
காவணநீள் தோரணங்கள்
நாட்டியுடன் களிசிறப்பப்
பூவணமா லைகள்நாற்றிப்
பூரணபொற் குடநிரைத்தங்கு
யாவர்களும் போற்றிசைப்பத்
திருத்தொண்டர் எதிர்கெண்டார்.
400
Go to top

வண்டமிழின் மொழிவிரகர்
மணிமுத்தின் சிவிகையினைத்
தொண்டர்குழாத் தெதிர்இழிந்தங்
கவர்தொழத்தா முந்தொழுதே
அண்டர்பிரான் கோயிலினை
அணைந்திறைஞ்சி முன்நின்று
பண்டரும்இன் னிசைப்பதிகம்
பரம்பொருளைப் பாடுவார்.
401

நிகரிலா மேருவரை
அணுவாக நீண்டானை
நுகர்கின்ற தொண்டர்தமக்
கமுதாகி நொய்யானைத்
தகவொன்ற அடியார்கள்
தமைவினவித் தமிழ்விரகர்
பகர்கின்ற அருமறையின்
பொருள்விரியப் பாடினார்.
402

பாடும் அரதைப்பெரும்
பாழியே முதலாகச்
சேடர்பயில் திருச்சேறை
திருநாலூர் குடவாயில்
நாடியசீர் நறையூர்தென்
திருப்புத்தூர் நயந்திறைஞ்சி
நீடுதமிழ்த் தொடைபுனைந்தந்
நெடுநகரில் இனிதமர்ந்தார்.
403

அங்கண்இனி தமருநாள்
அடல்வெள்ளே னத்துருவாய்ச்
செங்கண்நெடு மால்பணியும்
சிவபுரத்துச் சென்றடைந்து
கங்கைசடைக் கரந்தவர்தங்
கழல்வணங்கிக் காதலினால்
பொங்குமிசைத் திருப்பதிகம்
முன்நின்று போற்றிசைத்தார்.
404

போற்றிசைத்துப் புனிதரருள்
பெற்றுப்போந்து எவ்வுயிரும்
தோற்றுவித்த அயன்போற்றுந்
தோணிபுரத் தந்தணனார்
ஏற்றுமிசை ஏற்றுகந்த
இறைவர்தமை ஏத்துதற்கு
நாற்றிசையோர் பரவுதிருக்
குடமூக்கு நண்ணினார்.
405
Go to top

தேமருவு மலர்ச்சோலைத்
திருக்குடமூக் கினிற்செல்வ
மாமறையோர் பூந்தராய்
வள்ளலார் வந்தருளத்
தூமறையின் ஒலிபெருகத்
தூரியமங் கலமுழங்கக்
கோமுறைமை எதிர்கொண்டு
தம்பதியில் கொடுபுக்கார்.
406

திருஞான சம்பந்தர்
திருக்குடமூக் கினைச்சேர
வருவார்தம் பெருமானை
வண்டமிழின் திருப்பதிகம்
உருகாநின் றுளமகிழக்
குடமூக்கை உகந்திருந்த
பெருமான்எம் இறையென்று
பெருகிசையால் பரவினார்.
407

வந்தணைந்து திருக்கீழ்க்கோட்
டத்திருந்த வான்பொருளைச்
சிந்தைமகிழ் வுறவணங்கித்
திருத்தொண்ட ருடன்செல்வார்
அந்தணர்கள் புடைசூழ்ந்து
போற்றிசைப்ப அவரோடும்
கந்தமலர்ப் பொழில்சூழ்ந்த
காரோணஞ் சென்றடைந்தார்.
408

பூமருவும் கங்கைமுதல்
புனிதமாம் பெருந்தீர்த்தம்
மாமகந்தான் ஆடுதற்கு
வந்துவழி படுங்கோயில்
தூமருவு மலர்க்கையால்
தொழுதுவலங் கொண்டணைந்து
காமர்கெட நுதல்விழித்தார்
கழல்பணிந்து கண்களித்தார்.
409

கண்ணாரும் அருமணியைக்
காரோணத் தாரமுதை
நண்ணாதார் புரமெரித்த
நான்மறையின் பொருளானைப்
பண்ணார்ந்த திருப்பதிகம்
பணிந்தேத்திப் பிறபதியும்
எண்ணார்ந்த சீரடியா
ருடன்பணிவுற் றெழுந்தருளி.
410
Go to top

திருநாகேச் சரத்தமர்ந்த
செங்கனகத் தனிக்குன்றைக்
கருநாகத் துரிபுனைந்த
கண்ணுதலைச் சென்றிறைஞ்சி
அருஞானச் செந்தமிழின்
திருப்பதிகம் அருள்செய்து
பெருஞான சம்பந்தர்
பெருகார்வத் தின்புற்றார்.
411

மாநாகம் அருச்சித்த
மலர்க்கமலத் தாள்வணங்கி
நாணாளும் பரவுவார்
பிணிதீர்க்கும் நலம்போற்றிப்
பானாறும் மணிவாயர்
பரமர்திரு விடைமருதில்
பூநாறும் புனற்பொன்னித்
தடங்கரைபோய்ப் புகுகின்றார்.
412

ஓங்குதிருப் பதிகம்ஓ
டேகலன்என் றெடுத்தருளித்
தாங்கரிய பெருமகிழ்ச்சி
தலைசிறக்குந் தன்மையினால்
ஈங்கெனையா ளுடையபிரான்
இடைமரு தீதோஎன்று
பாங்குடைய இன்னிசையால்
பாடிஎழுந் தருளினார்.
413

அடியவர்கள் எதிர்கொள்ள
எழுந்தருளி அங்கணைந்து
முடிவில்பரம் பொருளானார்
முதற்கோயில் முன்னிறைஞ்சிப்
படியில்வலங் கொண்டுதிரு
முன்பெய்திப் பார்மீது
நெடிதுபணிந் தெழுந்தன்பு
நிறைகண்ணீர் நிரந்திழிய.
414

பரவுறுசெந் தமிழ்ப்பதிகம்
பாடிஅமர்ந் தப்பதியில்
விரவுவார் திருப்பதிகம்
பலபாடி வெண்மதியோ
டரவுசடைக் கணிந்தவர்தம்
தாள்போற்றி ஆர்வத்தால்
உரவுதிருத் தொண்டருடன்
பணிந்தேத்தி உறையுநாள்.
415
Go to top

மருங்குளநற் பதிகள்பல
பணிந்துமா நதிக்கரைபோய்க்
குரங்காடு துறையணைந்து
குழகனார் குரைகழல்கள்
பெருங்காத லால்பணிந்து
பேணியஇன் னிசைபெருக
அருங்கலைநூல் திருப்பதிகம்
அருள்செய்து பரவினார்.
416

அம்ம லர்த்தடம் பதிபணிந்
தகன்றுபோந் தருகு
மைம்ம லர்க்களத் திறைவர்தங்
கோயில்கள் வணங்கி
நம்ம லத்துயர் தீர்க்கவந்
தருளிய ஞானச்
செம்ம லார்திரு ஆவடு
துறையினைச் சேர்ந்தார்.
417

மூவ ருக்கறி வரும்பொரு
ளாகிய மூலத்
தேவர் தந்திரு வாவடு
துறைத்திருத் தொண்டர்
பூவ லம்புதண் பொருபுனல்
தடம்பணைப் புகலிக்
காவ லர்க்கெதிர் கொள்ளும்ஆ
தரவுடன் கலந்தார்.
418

வந்த ணைந்தவர் தொழாமுனம்
மலர்புகழ்ச் சண்பை
அந்த ணர்க்கெலாம் அருமறைப்
பொருளென வந்தார்
சந்த நித்திலச் சிவிகைநின்
றிழிந்தெதிர் தாழ்ந்தே
சிந்தை இன்புற இறைவர்தங்
கோயில்முன் சென்றார்.
419

நீடு கோபுரம் இறைஞ்சியுள்
புகுந்துநீள் நிலையான்
மாடு சூழ்திரு மாளிகை
வலங்கொண்டு வணங்கி
ஆடும் ஆதியை ஆவடு
துறையுள்ஆர் அமுதை
நாடு காதலில் பணிந்தெழுந்
தருந்தமிழ் நவின்றார்.
420
Go to top

அன்பு நீடிய அருவிகண்
பொழியும்ஆர் வத்தால்
முன்பு போற்றியே புறம்பணை
முத்தமிழ் விரகர்
துன்பு போமனத் திருத்தொண்டர்
தம்முடன் தொழுதே
இன்பம் மேவிஅப் பதியினில்
இனிதமர்ந் திருந்தார்.
421

மேவி அங்குறை நாளினில்
வேள்வி செய்வதனுக்
காவ தாகிய காலம்வந்
தணைவுற அணைந்து
தாவில் சண்பையர் தலைவர்க்குத்
தாதையார் தாமும்
போவ தற்கரும் பொருள்பெற
எதிர்நின்று புகன்றார்.
422

தந்தை யார்மொழி கேட்டலும்
புகலியார் தலைவர்
முந்தை நாளிலே மொழிந்தமை
நினைந்தருள் முன்னி
அந்த மில்பொரு ளாவன
ஆவடு துறையுள்
எந்தை யார்அடித் தலங்கள்
அன்றோஎன எழுந்தார்.
423

சென்று தேவர்தம் பிரான்மகிழ்
கோயில்முன் பெய்தி
நின்று போற்றுவார் நீள்நிதி
வேண்டினார்க் கீவ
தொன்றும் மற்றிலேன் உன்னடி
அல்லதொன் றறியேன்
என்று பேரருள் வினவிய
செந்தமிழ் எடுத்தார்.
424

எடுத்த வண்டமிழ்ப் பதிகநா
லடியின்மே லிருசீர்
தொடுத்த வைப்பொடு தொடர்ந்தஇன்
னிசையினால் துதிப்பார்
மடுத்த காதலில் வள்ளலார்
அடியிணை வழுத்தி
அடுத்த சிந்தையால் ஆதரித்
தஞ்சலி அளித்தார்.
425
Go to top

நச்சி இன்தமிழ் பாடிய
ஞானசம் பந்தர்
இச்சை யேபுரிந் தருளிய
இறைவர்இன் னருளால்
அச்சி றப்பருள் பூதமுன்
விரைந்தகல் பீடத்து
உச்சி வைத்தது பசும்பொன்ஆ
யிரக்கிழி யொன்று.
426

வைத்த பூதம்அங் கணைந்துமுன்
நின்றுநல் வாக்கால்
உய்த்த இக்கிழி பொன்னுல
வாக்கிழி உமக்கு
நித்த னாரருள் செய்ததென்
றுரைக்கநேர் தொழுதே
அத்த னார்திரு வருள்நினைந்
தவனிமேற் பணிந்தார்.
427

பணிந்தெ ழுந்துகை தொழுதுமுன்
பனிமலர்ப் பீடத்
தணைந்த ஆடகக் கிழிதலைக்
கொண்டரு மறைகள்
துணிந்த வான்பொருள் தரும்பொருள்
தூயவாய் மையினால்
தணிந்த சிந்தைஅத் தந்தையார்க்
களித்துரை செய்வார்.
428

ஆதிமாமறை விதியினால்
ஆறுசூழ் வேணி
நாத னாரைமுன் னாகவே
புரியுநல் வேள்வி
தீது நீங்கநீர் செய்யவும்
திருக்கழு மலத்து
வேத வேதியர் அனைவரும்
செய்யவும் மிகுமால்.
429

என்று கூறிஅங் கவர்தமை
விடுத்தபின் அவரும்
நன்றும் இன்புறு மனத்தொடும்
புகலிமேல் நண்ண
வென்றி ஞானசம் பந்தரும்
விருப்பொடு வணங்கி
மன்றல் ஆவடு துறையினில்
மகிழ்ந்தினி திருந்தார்.
430
Go to top

அண்ண லார்திரு வாவடு
துறையமர்ந் தாரை
உண்ணி லாவிய காதலி
னால்பணிந் துறைந்து
மண்ணெ லாம்உய வந்தவர்
போந்துவார் சடைமேல்
தெண்ணி லாஅணி வார்திருக்
கோழம்பஞ் சேர்ந்தார்.
431

கொன்றை வார்சடை முடியரைக்
கோழம்பத் திறைஞ்சி
என்றும் நீடிய இன்னிசைப்
பதிகம் முன் இயம்பி
மன்று ளார்மகிழ் வைகல்மா
டக்கோயில் மருங்கு
சென்று சார்ந்தனர் திருவளர்
சிரபுரச் செல்வர்.
432

வைகல் நீடுமா டக்கோயில்
மன்னிய மருந்தைக்
கைகள் அஞ்சலி கொண்டுதாழ்ந்
தெழுந்துகண் ணருவி
செய்ய இன்னிசைச் செந்தமிழ்
மாலைகள் மொழிந்து
நையும் உள்ளத்த ராய்த்திர
நல்லத்தில் நண்ணி.
433

நிலவு மாளிகைத் திருநல்லம்
நீடுமா மணியை
இலகு சேவடி இறைஞ்சிஇன்
தமிழ்கொடு துதித்துப்
பலவும் ஈசர்தந் திருப்பதி
பணிந்துசெல் பவர்தாம்
அலைபு னல்திரு வழுந்தூர்மா
டக்கோயில் அடைந்தார்.
434

மன்னு மாமடம் மகிழ்ந்தவான்
பொருளினை வணங்கிப்
பன்னு பாடலில் பதிகஇன்
னிசைகொடு பரவிப்
பொன்னி மாநதிக் கரையினில்
மீண்டும்போந் தணைந்து
சொன்ன வாறறி வார்தமைத்
துருத்தியில் தொழுதார்.
435
Go to top

திரைத்த டம்புனல் பொன்னிசூழ்
திருத்துருத் தியினில்
வரைத்த லைப்பசும் பொன்எனும்
வண்டமிழ்ப் பதிகம்
உரைத்து மெய்யுறப் பணிந்துபோந்
துலவும்அந் நதியின்
கரைக்கண் மூவலூர்க் கண்ணுத
லார்கழல் பணிந்தார்.
436

மூவ லூருறை முதல்வரைப்
பரவிய மொழியால்
மேவு காதலில் ஏத்தியே
விருப்பொடும் போந்து
பூவ லம்புதண் புனற்பணைப்
புகலியர் தலைவர்
வாவி சூழ்திரு மயிலாடு
துறையினில் வந்தார்.
437

மல்கு தண்டலை மயிலாடு
துறையினில் மருவும்
செல்வ வேதியர் தொண்டரோ
டெதிர்கொளச் சென்று
கொல்லை மான்மறிக் கையரைக்
கோயில்புக் கிறைஞ்சி
எல்லை இல்லதோர் இன்பம்முன்
பெருகிட எழுந்தார்.
438

உள்ளம் இன்புற உணர்வுறும்
பரிவுகொண் டுருகி
வெள்ளந் தாங்கிய சடையரை
விளங்குசொற் பதிகத்
தெள்ளும் இன்னிசைத் திளைப்பொடும்
புறத்தணைந் தருளி
வள்ள லார்மற்ற வளம்பதி
மருவுதல் மகிழ்ந்தார்.
439

அத்தி ருப்பதி யகன்றுபோய்
அணிகிளர் சூலக்
கைத்த லப்படை வீரர்செம்
பொன்பள்ளி கருதி
மெய்த்த காதலில் விளநகர்
விடையவர் பாதம்
பத்தர் தம்முடன் பணிந்திசைப்
பதிகம்முன் பகர்ந்தார்.
440
Go to top

பாடும் அப்பதி பணிந்துபோய்ப்
பறியலூர் மேவும்
தோடு லாமலர் இதழியும்
தும்பையும் அடம்பும்
காடு கொண்டசெஞ் சடைமுடிக்
கடவுளர் கருது
நீடு வீரட்டம் பணிந்தனர்
நிறைமறை வேந்தர்.
441

பரமர் தந்திருப் பறியலூர்
வீரட்டம் பரவி
விரவு காதலின் வேலையின்
கரையினை மேவி
அரவ ணிந்தவர் பதிபல
அணைந்துமுன் வணங்கிச்
சிரபு ரத்தவர் திருத்தொண்டர்
எதிர்கொளச் செல்வார்.
442

அடியவர்கள் களிசிறப்பத் திருவேட்டக்
குடிபணிந்தங் கலைவாய்ப் போகிக்
கடிகமழும் மலர்ப்பழனக் கழனிநாட்
டகன்பதிகள் கலந்து நீங்கிக்
கொடிமதில்சூழ் தருமபுரம் குறுகினார்
குண்டர்சாக் கியர்தங் கொள்கை
படியறியப் பழுதென்றே மொழிந்துய்யும்
நெறிகாட்டும் பவள வாயர்.
443

தருமபுரம் பெரும்பாணர் திருத்தாயர்
பிறப்பிடமாம் அதனாற் சார
வருமவர்தஞ் சுற்றத்தார் வந்தெதிர்கொண்
டடிவணங்கி வாழ்த்தக் கண்டு
பெருமையுடைப் பெரும்பாணர் அவர்க்குரைப்பார்
பிள்ளையா ரருளிச் செய்த
அருமையுடைப் பதிகந்தாம் யாழினால்
பயிற்றும்பே றருளிச் செய்தார்.
444

கிளைஞரும்மற் றதுகேட்டுக் கெழுவுதிருப்
பதிகத்திற் கிளர்ந்த ஓசை
அளவுபெறக் கருவியில்நீர் அமைத்தியற்றும்
அதனாலே அகில மெல்லாம்
வளரஇசை நிகழ்வதென விளம்புதலும்
வளம்புகலி மன்னர் பாதம்
உளம் நடுங்கிப் பணிந்துதிரு நீலகண்டப்
பெரும்பாணர் உணர்த்து கின்றார்.
445
Go to top

அலகில்திருப் பதிகஇசை அளவுபடா
வகைஇவர்கள் அன்றி யேயும்
உலகிலுளோ ருந்தெரிந்தங் குண்மையினை
அறிந்துய்ய உணர்த்தும் பண்பால்
பலர்புகழுந் திருப்பதிகம் பாடியரு
ளப்பெற்றால் பண்பு நீடி
இலகுமிசை யாழின்கண் அடங்காமை
யான்காட்டப் பெறுவ னென்றார்.
446

வேதநெறி வளர்ப்பவரும் விடையவர்முன்
தொழுதுதிருப் பதிகத் துண்மை
பூதலத்தோர் கண்டத்துங் கலத்தினிலும்
நிலத்தநூல் புகன்ற வேத
நாதவிசை முயற்சிகளால் அடங்காத
வகைகாட்ட நாட்டு கின்றார்
மாதர்மடப் பிடிபாடி வணங்கினார்
வானவரும் வணங்கி ஏத்த.
447

வண்புகலி வேதியனார் மாதர்மடப்
பிடியெடுத்து வனப்பிற் பாடிப்
பண்பயிலுந் திருக்கடைக்காப் புச்சாத்த
அணைந்துபெரும் பாண னார்தாம்
நண்புடையாழ்க் கருவியினில் முன்புபோல்
கைக்கொண்டு நடத்தப் புக்கார்க்
கெண்பெருகும் அப்பதிகத் திசைநரம்பில்
இடஅடங்கிற் றில்லை யன்றே.
448

அப்பொழுது திருநீல கண்டஇசைப்
பெரும்பாணர் அதனை விட்டு
மெய்ப்பயமும் பரிவுமுறப் பிள்ளையார்
கழலிணைவீழ்ந் தெழுந்து நோக்கி
இப்பெரியோர் அருள்செய்த திருப்பதிகத்
திசையாழி லேற்பன் என்னச்
செப்பியதிக் கருவியைநான் தொடுதலின்அன்
றோஎன்று தெளிந்து செய்வார்.
449

வீக்குநரம் புடையாழி னால்விளைந்த
திதுவென்றங் கதனைப் போக்க
ஓக்குதலும் தடுத்தருளி ஐயரே
உற்றஇசை யளவி னால்நீர்
ஆக்கியஇக் கருவியினைத் தாருமென
வாங்கிக்கொண் டவனி செய்த
பாக்கியத்தின் மெய்வடிவாம் பாலறா
வாயர்பணித் தருளு கின்றார்.
450
Go to top

ஐயர்நீர் யாழ்இதனை முரிக்கும தென்
ஆளுடையா ளுடனே கூடச்
செய்யசடை யார்அளித்த திருவருளின்
பெருமையெலாம் தெரிய நம்பால்
எய்தியஇக் கருவியினில் அளவுபடு
மோநந்தம் இயல்புக் கேற்ப
வையகத்தோர் அறிவுறஇக் கருவிஅள
வையின்இயற்றல் வழக்கே என்றார்.
451

சிந்தையால் அளவுபடா இசைப்பெருமை
செயலளவில் எய்து மோநீர்
இந்தயா ழினைக்கொண்டே இறைவர்திருப்
பதிகஇசை இதனில் எய்த
வந்தவா றேபாடி வாசிப்பீர்
எனக்கொடுப்பப் புகலி மன்னர்
தந்தயா ழினைத்தொழுது கைக்கொண்டு
பெரும்பாணர் தலைமேற் கொண்டார்.
452

அணைவுறும்அக் கிளைஞருடன் பெரும்பாணர்
ஆளுடைய பிள்ளை யார்தம்
துணைமலர்ச்சே வடிபணிந்து துதித்தருளத்
தோணிபுரத் தோன்ற லாரும்
இணையில் பெருஞ் சிறப்பருளித் தொண்டருடன்
அப்பதியில் இனிது மேவிப்
பணைநெடுங்கை மதயானை உரித்தவர்தம்
பதிபிறவும் பணியச் செல்வார்.
453

பங்கயப்பா சடைத்தடஞ்சூழ் பழனநாட்
டகன்பதிகள் பலவும் நண்ணி
மங்கையொரு பாகத்தார் மகிழ்கோயில்
எனைப்பலவும் வணங்கிப் போற்றித்
தங்கிசையாழ்ப் பெரும்பாண ருடன்மறையோர்
தலைவனார் சென்று சார்ந்தார்
செங்கைமான் மழுவேந்துஞ் சினவிடையார்
அமர்ந்தருளுந் திருநள் ளாறு.
454

நள்ளாற்றில் எழுந்தருள நம்பர்திருத்
தொண்டர்குழாம் நயந்து சென்று
கொள்ளாற்றி லெதிர்கொண்டு குலவியுடன்
சூழ்ந்தணையக் குறுகிக் கங்கைத்
தெள்ளாற்று வேணியர்தந் திருவளர்கோ
புரமிறைஞ்சிச் செல்வக் கோயில்
உள்ளாற்ற வலங்கொண்டு திருமுன்பு
தாழ்ந்தெழுந்தார் உணர்வின் மிக்கார்.
455
Go to top

உருகியஅன் புறுகாதல் உள்ளுருகி
நனைஈரம் பெற்றாற் போல
மருவுதிரு மேனியெலாம் முகிழ்த்தெழுந்த
மயிர்ப்புளகம் வளர்க்கு நீராய்
அருவிசொரி திருநயனத் தானந்த
வெள்ளம்இழிந் தலைய நின்று
பொருவில்பதி கம்போக மார்த்தபூண்
முலையாள்என் றெடுத்துப் போற்றி.
456

யாணரம்பில் ஆரஇயல் இசைகூடப்
பாடியே எண்ணில் கற்பச்
சேண்அளவு படவோங்குந் திருக்கடைக்காப்
புச்சாத்திச் செங்கண்நாகப்
பூண்அகலத் தவர்பாதம் போற்றிசைத்துப்
புறத்தணைந்து புவன மேத்தும்
பாணனார் யாழிலிடப் பாலறா
வாயர்அருள் பணித்த போது.
457

பிள்ளையார் திருத்தாளங் கொடுபாடப்
பின்புபெரும் பாண னார்தாம்
தெள்ளமுத இன்னிசையின் தேம்பொழிதந்
திரியாழைச் சிறக்க வீக்கிக்
கொள்ளஇடும் பொழுதின்கண் குவலயத்தோர்
களிகூரக் குலவு சண்பை
வள்ளலார் திருவுள்ளம் மகிழ்ந்துதிருத்
தொண்டருடன் மருவுங் காலை.
458

மன்னுதிரு நள்ளாற்று மருந்தைவணங்
கிப்போந்து வாச நன்னீர்ப்
பொன்னிவளந் தருநாட்டுப் புறம்பணைசூழ்
திருப்பதிகள் பலவும் போற்றிச்
செந்நெல்வயற் செங்கமல முகமலருந்
திருச்சாத்த மங்கை மூதூர்
தன்னிலெழுந் தருளினார் சைவசிகா
மணியார்மெய்த் தவத்தோர் சூழ.
459

நிறைசெல்வத் திருச்சாத்த மங்கையினில்
நீலநக்கர் தாமுஞ் சைவ
மறையவனார் எழுந்தருளும் படிகேட்டு
வாழ்ந்துவழி விளக்கி யெங்குந்
துறைமலிதோ ரணங்கதலி கமுகுநிறை
குடந்தூப தீப மாக்கி
முறைமையில்வந் தெதிர்கொள்ள உடன்அணைந்து
முதல்வனார் கோயில் சார்ந்தார்.
460
Go to top

அயவந்தி அமர்ந்தருளும் அங்கணர்தங்
கோயில்மருங் கணைந்து வானோர்
உயவந்தித் தெழுமுன்றில் புடைவலங்கொண்
டுட்புக்கா றொழுகுஞ் செக்கர்
மயவந்தி மதிச்சடையார் முன்தாழ்ந்து
மாதவம் இவ்வைய மெல்லாம்
செயவந்த அந்தணனார் செங்கைமேல்
குவித்தெழுந்து திருமுன் னின்றார்.
461

போற்றிசைக்கும் பாடலினால் பொங்கியெழும்
ஆதரவு பொழிந்து விம்ம
ஏற்றின் மிசை இருப்பவர்தம் எதிர்நின்று
துதித்துப்போந் தெல்லை இல்லா
நீற்றுநெறி மறையவனார் நீலநக்கர்
மனையிலெழுந் தருளி அன்பால்
ஆற்றும்விருந் தவர்அமைப்ப அன்பருடன்
இன்புற்றங் கமுது செய்தார்.
462

நீடுதிருநீலநக்கர் நெடுமனையில்
விருந்தமுது செய்து நீர்மைப்
பாடும்யாழ்ப் பெரும்பாண ருந்தங்க
அங்கிரவு பள்ளி மேவி
ஆடுமவர் அயவந்தி பணிவதனுக்கு
அன்பருடன் அணைந்து சென்று
நாடியநண் புடைநீல நக்கடிக
ளுடன்நாதர் கழலில்தாழ்ந்து.
463

கோதிலா ஆரமுதைக் கோமளக்கொம்
புடன்கூடக் கும்பிட் டேத்தி
ஆதியாம் மறைப்பொருளால் அருந்தமிழின்
திருப்பதிகம் அருளிச் செய்வார்
நீதியால் நிகழ்கின்ற நீலநக்கர்
தம்பெருஞ்சீர் நிகழ வைத்துப்
பூதிசா தனர்பரவும் புனிதஇயல்
இசைப்பதிகம் போற்றி செய்தார்.
464

பரவியகா தலிற்பணிந்து பாலறா
வாயர்புறத் தணைந்து பண்பு
விரவியநண் புடையடிகள் விருப்புறுகா
தலில்தங்கி மேவும் நாளில்
அரவணிந்தார் பதிபிறவும் பணியஎழும்
ஆதரவா லணைந்து செல்வார்
உரவுமனக் கருத்தொன்றாம் உள்ளம்உடை
யவர்க்குவிடை உவந்து நல்கி.
465
Go to top

மற்றவர்தம் பெருங்கேண்மை மகிழ்ந்து கொண்டு
மாலயனுக் கரியபிரான் மருவு தானம்
பற்பலவும் சென்றுபணிந் தேத்திப் பாடிப்
பரமர்திருத் தொண்டர்குழாம் பாங்கின் எய்தக்
கற்றவர்வாழ் கடல்நாகைக் காரோ ணத்துக்
கண்ணுதலைக் கைதொழுது கலந்த ஓசைச்
சொற்றமிழ்மா லைகள் பாடிச் சிலநாள் வைகித்
தொழுதகன்றார் தோணிபுரத் தோன்ற லார்தாம்.
466

கழிக்கானல் மருங்கணையுங் கடல்நாகை
யதுநீங்கிக் கங்கை யாற்றுச்
சுழிக்கானல் வேணியர்தம் பதிபலவும்
பரவிப்போய்த் தோகை மார்தம்
விழிக்காவி மலர்பழனக் கீழ்வேளூர்
விமலர்கழல் வணங்கி ஏத்தி
மொழிக்காதல் தமிழ்மாலை புனைந்தருளி
அங்ககன்றார் மூதூர் நின்றும்.
467

அருகணையுந் திருப்பதிகள் ஆனவெலாம்
அங்கணரைப் பணிந்து போற்றிப்
பெருகியஞா னம்பெற்ற பிள்ளையார்
எழுந்தருளும் பெருமை கேட்டுத்
திருமருவு செங்காட்டங் குடிநின்றும்
சிறுத்தொண்டர் ஓடிச் சென்றங்
குருகுமனங் களிசிறப்ப எதிர்கொண்டு
தம்பதியுட் கொண்டு புக்கார்.
468

சிறுத்தொண்ட ருடன் கூடச் செங்காட்டங்
குடியிலெழுந் தருளிச் சீர்த்தி
நிறுத்தெண்திக் கிலும்நிலவுந் தொண்டரவர்
நண்பமர்ந்து நீல கண்டம்
பொறுத்தண்டர் உயக்கொண்டார் கணபதீச்
சரத்தின்கட் போக மெல்லாம்
வெறுத்துண்டிப் பிச்சைநுகர் மெய்த்தொண்ட
ருடன்அணைந்தார் வேதகீதர்.
469

அங்கணைந்து கோயில்வலங் கொண்டருளி
அரவணிந்தார் அடிக்கீழ் வீழ்ந்து
செங்கண்அரு விகள்பொழியத் திருமுன்பு
பணிந்தெழுந்து செங்கை கூப்பித்
தங்கள்பெருந் தகையாரைச் சிறுத்தொண்டர்
தொழவிருந்த தன்மை போற்றிப்
பொங்கியெழும் இசைபாடிப் போற்றிசைத்தங்
கொருபரிசு புறம்பு போந்தார்.
470
Go to top

போந்துமா மாத்திரர்தம் போரேற்றில்
திருமனையிற் புகுந்து சிந்தை
வாய்ந்தமா தவரவர்தா மகிழ்ந்தருள
அமர்ந்தருளி மதில்கள் மூன்றும்
காய்ந்தமால் விடையார்தங் கணபதீச்
சரம்பரவு காதல் கூர
ஏந்துநூ லணிமார்பர் இன்புற்றங்
கன்பருடன் இருந்த நாளில்.
471

திருமருகல் நகரின்கண் எழுந்தருளித்
திங்களுடன் செங்கட் பாம்பு
மருவுநெடுஞ் சடைமவுலி மாணிக்க
வண்ணர்கழல் வணங்கிப் போற்றி
உருகியஅன் புறுகாத லுள்ளலைப்பத்
தெள்ளுமிசை யுடனே கூடப்
பெருகுதமிழ்த் தொடைசார்த்தி அங்கிருந்தார்
பெரும்புகலிப் பிள்ளை யார்தாம்.
472

அந்நாளில் ஒருவணிகன் பதிக னாகி
அணைவானோர் கன்னியையும் உடனே கொண்டு
பொன்னார்மே ருச்சிலையார் கோயில் மாடு
புறத்திலொரு மடத்திரவு துயிலும் போது
மின்னார்வெள் ளெயிற்றரவு கவ்வுதலும் கிளர்ந்த
விடவேகங் கடிதுதலை மீக்கொண் டேறத்
தன்னாவி நீங்குமவன் தன்மை கண்டு
சாயல்இளங் கன்னிநிலை தளர்ந்து சோர்வாள்.
473

வாளரவு தீண்டவும்தான் தீண்ட கில்லாள்
மறுமாற்றம் மற்றொருவர் கொடுப்பா ரின்றி
ஆளரியே றனையானை அணுக வீழ்ந்தே
அசைந்தமலர்க் கொடிபோல்வாள் அரற்றும் போது
கோளுருமும் புள்ளரசும் அனையார் எல்லாக்
கொள்கையினா லுந்தீர்க்கக் குறையா தாக
நீள்இரவு புலர்காலை மாலை வாச
நெறிகுழலாள் நெடிதயர்ந்து புலம்பு கின்றாள்.
474

அன்னையையும் அத்தனையும் பிரிந்து நின்னை
அடைவாக உடன்போந்தேன் அரவால் வீடி
என்னையுயிர் விட்டகன்றாய் யான்என் செய்கேன்
இவ்விடுக்கண் தீர்க்கின்றார் யாரும் இல்லை
மன்னியசீர் வணிகர்குல மணியே யானும்
வாழேன்என் றென்றயர்வாள் மதியினாலே
சென்னியிளம் பிறையணிவார் கோயில் வாயில்
திசைநோக்கித் தொழுதழுதாள் செயலொன் றில்லாள்.
475
Go to top

அடியாராம் இமையவர்தங் கூட்டம் உய்ய
அலைகடல்வாய் நஞ்சுண்ட அமுதே செங்கண்
நெடியானும் நான்முகனுங் காணாக் கோல
நீலவிட அரவணிந்த நிமலாவெந்து
பொடியான காமன்உயிர் இரதி வேண்டப்
புரிந்தளித்த புண்ணியனே பொங்கர் வாசக்
கடியாரும் மலர்ச்சோலை மருங்கு சூழும்
கவின்மருகற் பெருமானே காவாய் என்றும்.
476

வந்தடைந்த சிறுமறையோன் உயிர்மேற் சீறி
வருங்காலன் பெருங்கால வலயம் போலும்
செந்தறுகண் வெள்ளெயிற்றுக் கரிய கோலம்
சிதைந்துருள வுதைத்தருளுஞ் செய்ய தாளா
இந்தவிடக் கொடுவேகம் நீங்கு மாறும்
477

இத்தன்மை சிவனருளே சிந்தித் தேங்கும்
இளங்கொடிபோல் நுடங்கும்இடை ஏழை ஏத்தும்
அத்தன்மை ஓசையெழுந் தெங்கள் சண்பை
ஆண்டகையார் கும்பிடவந் தணைகின்றார்தம்
மெய்த்தன்மை விளங்குதிருச் செவியிற் சார
மேவுதலும் திருவுள்ளக் கருணை மேன்மேல்
வைத்தன்ன மெனஅயர்வாள் மாடுநீடு
மாதவத்தோர் சூழஎழுந் தருளி வந்தார்.
478

சிரபுரத்து மறையவனார் சென்று நின்று
சிவபெருமான்அருள்போற்றிச் சிந்தை நைந்து
பரவுறுவாள் தனைநோக்கிப் பயப்ப டேல்நீ
பருவுரலும் நும்பரிசும்பகர்வாய் என்னக்
கரமலர்க ளுச்சியின்மேற் குவித்துக் கொண்டு
கண்ணருவி சொரிந்திழியக் காழி வேதப்
புரவலனார் சேவடிக்கீழ் வீழ்ந்து தாங்கள்
போந்ததுவும் புகுந்ததுவும் புகல லுற்றாள்.
479

வளம்பொழில்சூழ் வைப்பூர்க்கோன் தாமன் எந்தை
மருமகன்மற் றிவன்அவற்கு மகளிர்நல்ல
இளம்பிடியார் ஓரெழுவர் இவரில் மூத்தாள்
இவனுக்கென் றுரைசெய்தே ஏதி லானுக்
குளம்பெருகத் தனம்பெற்றுக் கொடுத்த பின்னும்
ஓரொருவ ராகஎனை யொழிய ஈந்தான்
தளர்ந்தழியும் இவனுக்காத் தகவு செய்தங்
கவரைமறைத்து இவன் தனையே சார்ந்து போந்தேன்.
480
Go to top

மற்றிவனும் வாளரவு தீண்ட மாண்டான்
மறிகடலில் கலங்கவிழ்த்தார் போல நின்றேன்
சுற்றத்தா ரெனவந்து தோன்றி யென்பால்
துயரமெலாம் நீங்கஅருள் செய்தீர் என்னக்
கற்றவர்கள் தொழுதேத்துங் காழி வேந்தர்
கருணையினாற் காரிகையாள் தனக்கு நல்கப்
பற்றியவாள் அரவுவிடம் தீரு மாறு
பணைமருகற் பெருமானைப் பாட லுற்றார்.
481

சடையானை எவ்வுயிர்க்குந் தாயா னானைச்
சங்கரனைச் சசிகண்ட மவுலி யானை
விடையானை வேதியனை வெண்ணீற் றானை
விரவாதார் புரமூன்றும் எரியச் செற்ற
படையானைப் பங்கயத்து மேவி னானும்
பாம்பணையில் துயின்றானும் பரவுங் கோலம்
உடையானை உடையானே தகுமோ இந்த
ஒள்ளிழையாள் உண்மெலிவுஎன் றெடுத்துப் பாட.
482

பொங்குவிடந் தீர்ந்தெழுந்து நின்றான் சூழ்ந்த
பொருவில்திருத் தொண்டர்குழாம் பொலிய ஆர்ப்ப
அங்கையினை யுச்சியின்மேற் குவித்துக் கொண்டங்
கருட்காழிப் பிள்ளையார் அடியில் வீழ்ந்த
நங்கையவள் தனைநயந்த நம்பி யோடு
நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம்
மங்குல்தவழ் சோலைமலிபுகலி வேந்தர்
மணம்புணரும் பெருவாழ்வு வகுத்து விட்டார்.
483

மற்றவர்க்கு விடைகொடுத்தங் கமரு நாளில்
மருகல்நக ரினில்வந்து வலிய பாசம்
செற்றபுகழ்ச் சிறுத்தொண்டர் வேண்ட மீண்டும்
செங்காட்டங் குடியிலெழுந் தருள வேண்டிப்
பற்றியெழுங் காதல்மிக மேன்மேற் சென்று
பரமனார் திறத்துன்னிப் பாங்க ரெங்கும்
சுற்றும் அருந் தவரோடும் கோயி லெய்திச்
சுடர்மழுஆண் டவர்பாதந் தொழுவான் புக்கார்.
484

புக்கிறைஞ்சி எதிர்நின்று போற்று கின்றார்
பொங்குதிரை நதிப்புனலும் பிறையுஞ் சேர்ந்த
செக்கர்முடிச் சடைமவுலி வெண்ணீற் றார்தம்
திருமேனி ஒருபாகம் பசுமை யாக
மைக்குலவு கண்டத்தார் மருகற் கோயில்
மன்னுநிலை மனங்கொண்டு வணங்கு வார்முன்
கைக்கனலார் கணபதீச் சரத்தின் மேவும்
காட்சிகொடுத் தருளுவான் காட்டக் கண்டார்.
485
Go to top

மருகல் அமர்ந்து நிறைந்த கோலர்
மல்குசெங் காட்டங் குடியின் மன்னிப்
பெருகு கணபதி ஈச்ச ரத்தார்
பீடுடைக் கோலமே யாகித் தோன்ற
உருகிய காதலும் மீது பொங்க
உலகர்முன் கொள்ளும் உணர்வு நீட
அருவிகண் வார்வுறப் பாட லுற்றார்
அங்கமும் வேதமும் என்றெ டுத்து.
486

கண்டெதிர் போற்றி வினவிப் பாடிக்
கணபதி ஈச்சரங் காத லித்த
அண்டர் பிரானை வணங்கி வைகும்
அப்பதி யிற்சில நாள்கள் போற்றித்
தொண்ட ருடனருள் பெற்று மற்றத்
தொல்லைத் திருப்பதி யெல்லை நீங்கிப்
புண்டரி கத்தடஞ் சூழ் பழனப்
பூம்புக லூர்தொழப் போது கின்றார்.
487

சீரின் மலிந்த சிறப்பின் மேவும்
சிறுத்தொண்டர் நண்புடன் செல்ல நல்ல
வேரி நறுந்தொங் கல்மற் றவரும்
விடையரு ளப்பெற்று மீண்ட பின்பு
நீரின் மலிந்த சடையர் மேவி
நிகழும் பதிகள் பலப ணிந்து
பாரின் மலிந்து நிறைந்த செல்வம்
பயில்புக லூர்நகர்ப் பாங்க ணைந்தார்.
488

திருப்புக லூர்த்திருத் தொண்ட ரோடும்
செம்மை முருகனார் மெய்ம்ம கிழ்ந்த
விருப்பொடு சென்றெதிர் கொள்ள வந்து
வேத முதல்வர்தங் கோயி லெய்திப்
பொருப்புறழ் கோபுரத் துட்பு குந்து
பூமலி முன்றில் புடைவ லம்கொண்
டொருப்படு சிந்தையொ டுள்ள ணைந்தார்
ஓதாது ஞானமெ லாமு ணர்ந்தார்.
489

புக்கெதிர் தாழ்ந்து விழுந்தெ ழுந்து
பூம்புக லூர்மன்னு புண்ணி யரை
நெக்குரு குஞ்சிந்தை அன்பு பொங்க
நிறைமலர்க் கண்ணீ ரருவி செய்ய
மிக்க தமிழ்த்தொடை மாலை சாத்தி
மேவிய ஏழிசை பாடிப் போந்து
திக்கு நிறைசீர் முருகர் முன்பு
செல்ல அவர்மடஞ் சென்று புக்கார்.
490
Go to top

ஆங்கவர் போற்றுஞ் சிறப்பின் மேவி
அப்பதி தன்னில்அமரு நாளில்
வாங்கு மலைச்சிலை யார்ம கிழ்ந்த
வர்த்தமா னீச்சரந் தான்வ ணங்கி
ஓங்கிய அன்பின் முருக னார்தம்
உயர்திருத் தொண்டு சிறப்பித் தோங்கும்
பாங்குடை வண்டமிழ் பாடி நாளும்
பரமர்தம் பாதம் பணிந்தி ருந்தார்.
491

மற்றத் திருப்பதி வைகு நாளில்
வாக்கின் பெருவிறல் மன்ன னார்தாம்
புற்றிடங் கொண்டாரை வந்தி றைஞ்சிப்
பொன்மதில் ஆரூர் புகழ்ந்து போற்றிச்
சிற்றிடைப் பொற்றொடிப் பங்கர் தங்கும்
திருப்புக லூர்தொழச் சிந்தை செய்து
கொற்றவ னாரருள் பெற்ற தொண்டர்
குழாத்துடன் அவ்வூர் குறுக வந்தார்.
492

நாவுக் கரசர் எழுந்த ருளும்
நல்லதிரு வார்த்தை கேட்ட போதே
சேவில் திகழ்ந்தவர் மைந்த ரான
திருஞான சம்பந்தர் சிந்தை அன்பு
மேவுற்ற காதல் மிகப் பெருக
விரைந்தெதிர் கொள்ளமெய் யன்ப ரோடும்
பூவிற் பொலிபொய்கை சூழ்புக லூர்ப்
புறம்பணை எல்லை கடந்து போந்தார்.
493

அங்கணர் ஆரூர் வணங்கிப் போந்த
அரசும் எதிர்வந் தணைய வாசப்
பொங்கு புனல்தண் புகலி வந்த
பூசுரர் சிங்கமும் பொற்பி னெய்தித்
தங்களின் அன்பின் முறைமை யாலே
தாழ்ந்து வணங்கித் தனித்த னியே
மங்கல மாகிய நல்வ ரவின்
வாய்மை வினவி மகிழும் போது.
494

மெய்த்திரு ஞானசம் பந்தர் வாக்கின்
வேந்தரை நோக்கி விருப்பினாலே
அப்பரை இங்கணை யப்பெ றும்பே
ரருளுடை யோம்யாம் அந்தணாரூர்
எப்பரி சால்தொழு துய்ந்த தென்று
வினவிட ஈறில் பெருந்த வத்தோர்
செப்பிய வண்டமிழ் மாலை யாலே
திருவா திரைநிகழ் செல்வஞ் சொன்னார்.
495
Go to top

அரசரு ளிச்செய்த வாய்மை கேட்ட
அப்பொழு தேஅருள் ஞான முண்ட
சிரபுர வேந்தருஞ் சிந்தை யின்கண்
தென்திரு வாரூர் வணங்கு தற்கு
விரவிய காதலிற் சென்று போற்றி
மீண்டும்வந் தும்முடன் மேவு வன்என்
றுரவு கடற்கல் மிதப்பின் வந்தார்க்
குரைத்துடன் பாடுகொண் டொல்லை போந்தார்.
496

சொற்பெரு வேந்தருந் தோணி மூதூர்த்
தோன்றல்பின் காதல் தொடரத் தாமும்
பொற்புக லூர்தொழச் சென்ற ணைந்தார்
புகலிப் பிரானும் புரிந்த சிந்தை
விற்குடி வீரட்டஞ் சென்று மேவி
விடையவர் பாதம் பணிந்து போற்றிப்
பற்பல ஆயிரந் தொண்ட ரோடும்
பாடல னான்மறை பாடிப் போந்தார்.
497

துணரிணர்ச் சோலையுஞ் சாலி வேலித்
துறைநீர்ப் பழனமுஞ் சூழ்க ரும்பின்
மணமலி கானமும் ஞானம் உண்டார்
மருங்குற நோக்கி மகிழ்ந் தருளி
அணைபவர் அள்ளற் கழனி ஆரூர்
அடைவோம் எனமொழிந் தன்பு பொங்கப்
புணரிசைச் செந்தமிழ் கொண்டு போற்றிப்
பொன்மதி லாரூர்ப் புறத்த ணைந்தார்.
498

வானுயர் செங்கதிர் மண்டலத்து
மருங்கணை யுங்கொடி மன்னும்ஆரூர்
தானொரு பொன்னுல கென்னத் தோன்றும்
தயங்கொளி முன்கண்டு சண்பை வந்த
பானிற நீற்றர் பருக்கை யானைப்
பதிகத் தமிழிசை பாடி ஆடித்
தேனொடு வண்டு முரலுஞ் சோலைத்
திருப்பதி மற்றதன் எல்லை சேர்ந்தார்.
499

பொங்கிய சிந்தை விருப்பின் வெள்ளம்
பொழிந்து புவிமேற் பொலிவ தென்ன
எங்குங் குளிரொளி வீசு முத்தின்
இலங்கு சிவிகை இழிந்த ருளிச்
செங்கை நிறைமலர் கொண்டு தூவித்
திருவிருக் குக்குறள் பாடி ஏத்தித்
தங்கள் பிரான்அர சாளும் ஆரூர்
தனைப்பணி வுற்றார் தமிழ் விரகர்.
500
Go to top

படியில் ஞானமுண் டருளிய
பிள்ளையைப் பணிதற்
கடியர் சென்றெதிர் கொளஎழுந்
தருளும்அஞ் ஞான்று
வடிகொள் சூலத்தர் மன்னிய
பொன்மதில் ஆரூர்க்
கடிகொள் பேரணிப் பொலிவையார்முடிவுறக் காண்பார்.
501

நான மான்மத நளிர்பெருஞ்
சேற்றிடை நறும்பொன் தூந றுந்துகள் சொரிதலிற்
சுடரொளிப் படலை
ஆன வீதிகள் அடிவலித்
தவைகரைந் தலைய
வான மாரியிற் பொழிந்தது
மலர்மது மாரி.
502

ஆடல் நீடுவ துகிற்கொடி
கொடிகள் அணிகுழற்
தோடு சூழ்வன சுரும்பொடு
தமனியத் தசும்பு
காடு கொண்டன கதலிதோ
ரணநிரைக் கமுகு
மாட மாளிகை மண்டபங்
களின்மருங் கெல்லாம்.
503

மாலை சூழ்புறங் கடைகளின்
மணிநிரை விளக்கின்
கோல நீள்சுடர் ஒளியுடன்
கோத்திடை தூக்கும்
நீல மாமணி நிழல்பொர
நிறம்புகர் படுக்கும்
பால வாயின பவளவே
திகைமலர்ப் பந்தர்.
504

தழைம லர்த்தடஞ் சாலைகள்
தெற்றிகள் சதுக்கம்
குழைமு கத்தவர் ஆடரங்
கிமையவர் குழாமும்
விழைசி றப்பின வியலிடம்
யாவையு மிடைந்து
மழைமு ழக்கென இயம்பின
மங்கல இயங்கள்.
505
Go to top

விரவு பேரணி வேறுவே
றின்னன விளங்கும்
பிரச மென்மலர்ச் சோலைசூழ்
பெருந்திரு வாரூர்
அரச ளிப்பவர் அருளினால்
அடியவர் குழுவும்
புரிச னங்களும் புறத்தணைந்
தெதிர்கொளும் பொழுது.
506

வந்தி றைஞ்சு மெய்த் தொண்டர்தங்
குழாத்தெதிர் வணங்கிச்
சந்த முத்தமிழ் விரகராம்
சண்பையர் தலைவர்
அந்த மாயுல காதியாம்
பதிகமங் கெடுத்தே
எந்தை தானெனை ஏன்றுகொ
ளுங்கொல்என் றிசைத்தார்.
507

ஆன அத்திருப் பதிகம்முன்
பாடிவந் தணையும்
508

மன்னு தோரண வாயில்முன்
வணங்கியுள் புகுவார்
தன்னுள் எவ்வகைப் பெருமையும்
தாங்கிய தகைத்தாம்
பன்னெ டுஞ்சுடர்ப் படலையின்
பரப்பினைப் பார்த்துச்
சென்னி தாழ்ந்துதே வாசிரி
யன்தொழு தெழுந்தார்.
509

மாடு சூழ்திரு மாளிகை
வலங்கொண்டு வணங்கிக்
கூடு காதலிற் கோபுரம்
பணிந்துகை குவித்துத்
தேடு மாலயற் கரியராய்ச்
செழுமணிப் புற்றில்
நீடு வார்முன்பு நிலமுறப்
பலமுறை பணிந்தார்.
510
Go to top

பணிந்து வீழ்ந்தனர் பதைத்தனர்
பரவிய புளகம்
அணிந்த மேனியோ டாடினர்
பாடினர் அறிவில்
துணிந்த மெய்ப்பொரு ளானவர்
தமைக்கண்டு துதிப்பார்
தணிந்த சிந்தையின் விரைந்தெழு
வேட்கையில் தாழ்ந்தார்.
511

செஞ்சொல் வண்தமிழ்த் திருப்பதி
கத்திசை யெடுத்து
நஞ்சு போனகம் ஆக்கிய
நம்பர்முன் பாடி
மஞ்சு சூழ்திரு மாளிகை
வாயிலின் புறம்போந்
தஞ்செ ழுத்தின்மெய் யுணர்ந்தவர்
திருமடத் தணைந்தார்.
512

அங்க ணைந்தமர்ந் தருளுவார்
அரனெறி அமர்ந்த
செங்க ணேற்றவர் சேவடி
513

புற்றி டங்கொளும் புனிதரைப்
போற்றிசை பெருகப்
பற்றும் அன்பொடு பணிந்திசைப்
பதிகங்கள் பாடி
நற்ற வத்திருத் தொண்டர்க
ளொடுநலஞ் சிறப்ப
மற்ற வண்பதி தன்னிடை
வைகுமந் நாளில்.
514

மல்லல் நீடிய வலிவலங்
கோளிலி முதலாத்
தொல்லை நான்மறை முதல்வர்தம்
பதிபல தொழுதே
எல்லை யில்திருப் பதிகங்க
ளாற்பணிந் தேத்தி
அல்லல் தீர்ப்பவர் மீண்டும்
ஆரூர்தொழ அணைந்தார்.
515
Go to top

ஊறு காதலில் ஒளிவளர்
புற்றிடங் கொண்ட
ஆறு லாவிய சடைமுடி
ஐயரைப் பணிந்து
நீறு வாழ்வென நிகழ்திருத்
தொண்டர்க ளோடும்
ஈறி லாத்திரு ஞானசம்
பந்தர்அங் கிருந்தார்.
516

அங்கு நன்மையில் வைகும்அந்
நாள்சில அகல
நங்கள் தந்திரு நாவினுக்
கரசரை நயந்து
பொங்கு சீர்ப்புக லூர்தொழ
அருளினாற் போவார்
தங்கும் அப்பதிப் புறம்பணை
சார்ந்தருள் செய்வார்.
517

புவனவா ரூரினிற் புறம்புபோந்
ததனையே நோக்கிநின்றே
அவமிலா நெஞ்சமே அஞ்சல்நீ
உய்யுமா றறிதிஅன்றே
சிவனதா ரூர்தொழாய் நீமற
வாதென்று செங்கைகூப்பிப்
பவனமாய்ச் சோடையாய் எனுந்திருப்
பதிகமுன் பாடினாரே.
518

காழியார் வாழவந் தருள்செயும்
கவுணியப் பிள்ளை யார்தாம்
ஆழியான் அறியொணா அண்ணல்
ஆரூர்பணிந் தரிது செல்வார்
பாழிமால் யானையின் உரிபுனைந்
தார்பனை யூர்ப ணிந்து
வாழிமா மறையிசைப் பதிகமும்
பாடிஅப் பதியில் வைகி.
519

அங்குநின் றரிதெழுந் தருளுவார்
அகிலகா ரணரும் ஆனார்
தங்குநற் பதிகளும் பிறபணிந்
தருளிவண் தமிழ்பு னைந்தே
எங்குமெய்த் தவர்குழா மெதிர்கொளத்
தொழுதெழுந் தருளி வந்தார்
பொங்குதண் பாசடைப் பங்கயப்
புனல்வயற் புகலூர் சார.
520
Go to top

நாவினுக் கரசரும் நம்பிசீர்
முருகரும் மற்று நாமச்
சேவுகைத் தவர்திருத் தொண்டரா
னவர்கள்முன் சென்று சீதப்
பூவினிற் பொலிபுனற் புகலியார்
போதகத் தெதிர்ப ணிந்தே
மேவமற் றவருடன் கூடவே
விமலர்கோ யிலைஅ டைந்தார்.
521

தேவர்தந் தலைவனார் கோயில்புக் கனைவரும்
சீர்நிலத் துறவ ணங்கிப்
பாவருந் தமிழிசைப் பதிகமும் பாடிமுன்
பரவுவார் புறம்ப ணைந்தே
தாவில்சீர் முருகனார் திருமனைக் கெய்திஅத்
தனிமுதல் தொண்டர் தாமே
யாவையுங் குறைவறுத் திடஅமர்ந் தருளுவார்
இனிதின்அங் குறையு நாளில்.
522

நீலநக் கடிகளும் நிகழ்சிறுத் தொண்டரும்
உடன்அணைந் தெய்து நீர்மைச்
சீலமெய்த் தவர்களுங் கூடவே கும்பிடுங்
செய்கைநேர் நின்று வாய்மைச்
சாலமிக் குயர்திருத் தொண்டின்உண் மைத்திறந்
தன்னையே தெளிய நாடிக்
காலமுய்த் தவர்களோ டளவளா விக்கலந்
தருளினார் காழி நாடர்.
523

கும்பிடுங் கொள்கையிற் குறிகலந் திசையெனும்
பதிகமுன் னான பாடல்
தம்பெருந் தலைமையால் நிலைமைசால் பதியதன்
பெருமைசால் புறவி ளம்பி
உம்பரும் பரவுதற் குரியசொற் பிள்ளையார்
உள்ளமெய்க் காதல் கூர
நம்பர்தம் பதிகளா யினஎனைப் பலவும்முன்
நண்ணியே தொழந யந்தார்.
524

புள்ள லம்புதண் புனற்புக
லூருறை புனிதனார் அருள்பெற்றுப்
பிள்ளை யாருடன் நாவினுக்
கரசரும் பிறபதி தொழச்செல்வார்
வள்ள லார்சிறுத் தொண்டரும்
நீலநக் கரும்வளம் பதிக்கேக
உள்ளம் அன்புறு முருகர்அங்கு
ஒழியவும் உடன்பட இசைவித்தார்.
525
Go to top

கண்ண கன்புக லூரினைத்
தொழுதுபோம் பொழுதினிற் கடற்காழி
அண்ண லார்திரு நாவினுக்
கரசர்தம் அருகுவிட் டகலாதே
வண்ண நித்திலச் சிவிகையும்
பின்வர வழிக்கொள உறுங்காலை
எண்ணில் சீர்த்திரு நாவினுக்
கரசரும் மற்றவர்க் கிசைக்கின்றார்.
526

நாயனார்உமக் களித்தருள்
செய்தஇந் நலங்கிளர் ஒளிமுத்தின்
தூய யானத்தின் மிசை யெழுந்
தருளுவீர் என்றலும் சுடர்த்திங்கள்
மேய வேணியார் அருளும்இவ்
வாறெனில் விரும்புதொண் டர்களோடும்
போய தெங்குநீர் அங்குயான்
பின்வரப் போவதென் றருள்செய்தார்.
527

என்று பிள்ளையார் மொழிந்தருள்
செய்திட இருந்தவத் திறையோரும்
நன்று நீரருள் செய்ததே
செய்வன்என் றருள்செய்து நயப்புற்ற
அன்றை நாள்முத லுடன்செலு
நாளெலாம் அவ்வியல் பினிற்செல்வார்
சென்று முன்னுறத் திருஅம்பர்
அணைந்தனர் செய்தவக் குழாத்தோடும்.
528

சண்பை மன்னருந் தம்பிரான்
அருள்வழி நிற்பது தலைச்செல்வார்
பண்பு மேம்படு பனிக்கதிர்
நித்திலச் சிவிகையிற் பணிந்தேறி
வண்பெ ரும்புக லூரினைக்
கடந்துபோய் வரும்பரி சனத்தோடும்
திண்பெ ருந்தவர் அணைந்ததெங்
கென்றுபோய்த் திருஅம்பர் நகர்புக்கார்.
529

அம்பர் மாநகர் அணைந்துமா
காளத்தில் அண்ணலார் அமர்கின்ற
செம்பொன் மாமதிற் கோயிலை
வலங்கொண்டு திருமுன்பு பணிந்தேத்தி
வம்பு லாம்மலர் தூவிமுன்
பரவியே வண்டமிழ் இசைமாலை
உம்பர் வாழநஞ் சுண்டவர்
தமைப்பணிந் துருகும்அன் பொடுதாழ்ந்தார்.
530
Go to top

தாழ்ந்து நாவினுக் கரசுடன்
தம்பிரான் கோயில்முன் புறமெய்திச்
சூழ்ந்த தொண்டரோ டப்பதி
அமர்பவர் சுரநதி முடிமீது
வீழ்ந்த வேணியர் தமைப்பெறுங்
காலங்கள் விருப்பினாற் கும்பிட்டு
வாழ்ந்தி ருந்தனர் காழியார்
வாழவந் தருளிய மறைவேந்தர்.
531

பொருவி லாதசொற் புல்குபொன்
னிறமுதற் பதிகங்க ளாற்போற்றித்
திருவினார்ந்தகோச் செங்கணான்
அந்நகர்ச் செய்தகோ யிலைச் சேர்ந்து
மருவு வாய்மைவண் டமிழ்மலர்
மாலைஅவ் வளவனைச் சிறப்பித்துப்
பெருகு காதலிற் பணிந்துமுன்
பரவினார் பேணிய உணர்வோடும்.
532

இன்ன வாறுசொல் மாலைக
ளால்துதித் திறைஞ்சிஅங் கமர்நாளில்
கன்னி மாமதில் திருக்கட வூர்தொழக்
காதல்செய் தருளிப் போய்
மன்னு கோயில்கள் பிறபதி
வணங்கியே வாக்கின்மன் னவரோடும்
அந்நெ டும்பதி அணைவுறக்
கலயரோ டடியவர் எதிர்கொண்டார்.
533

மற்றவ் வண்பதி அணைந்துவீ
ரட்டத்து மழவிடை யார்கோயில்
சுற்று மாளிகை வலங்கொண்டு
காலனை உதைத்துருட் டியசெய்ய
பொற்சி லம்பணி தாமரை வணங்கிமுன்
போற்றிஉய்ந் தெதிர்நின்று
பற்ற றுப்பவர் சடையுடை
யானெனும் பதிகஇன் னிசைபாடி.
534

பரவி ஏத்திஅங் கரிதினிற்
போந்துபார் பரவுசீர் அரசோடு
விரவு நண்புடைக் குங்குலி
யப்பெருங் கலயர் தம் மனைமேவிக்
கரையில் காதல்மற் றவர்அமைத்
தருளிய விருந்தினி தமர்ந்தங்குச்
சிரபு ரத்தவர் திருமயா
னமும்பணிந் திருந்தனர் சிறப்பெய்தி.
535
Go to top

சிறப்பு டைத்திருப் பதியத
னிடைச்சில நாளமர்ந் தருளோடும்
விறற்பெ ருங்கரி யுரித்தவர்
கோயில்கள் விருப்பொடுந் தொழச் செல்வார்
மறைப்பெ ருந்திருக் கலயரும்
உடன்பட வணங்கிய மகிழ்வோடும்
அறப்பெ ரும்பயன் அனையஅத்
தொண்டரோ டணைந்தனர் திருவாக்கூர்.
536

தக்க அந்தணர் மேவும்அப்
பதியினிற் தான்தோன்றி மாடத்துச்
செக்கர் வார்சடை அண்ணலைப்
பணிந்திசைச் செந்தமிழ்த் தொடைபாடி
மிக்க கோயில்கள் பிறவுடன்
தொழுதுபோய் மீயச்சூர் பணிந்தேத்திப்
பக்கம் பாரிடம் பரவநின்
றாடுவார் பாம்புர நகர்சேர்ந்தார்.
537

பாம்பு ரத்துறை பரமரைப்
பணிந்துநற் பதிகஇன் னிசைபாடி
வாம்பு னற்சடை முடியினார்
மகிழ்விடம் மற்றும்உள் ளனபோற்றிக்
காம்பி னில்திகழ் கரும்பொடு
செந்நெலின் கழனியம் பணைநீங்கித்
தேம்பொ ழில்திரு வீழிநன்
மிழலையின் மருங்குறச் செல்கின்றார்.
538

அப்பொழுதின் ஆண்ட
அரசை எதிர்கொண்ட
மெய்ப்பெருமை அந்தணர்கள்
வெங்குருவாழ் வேந்தனார்
பிற்படவந் தெய்தும்
பெரும்பேறு கேட்டுவப்பார்
எப்பரிசி னால்வந்
தணைந்தங் கெதிர்கொண்டார்.
539

நிறைகுடந்தூ பந்தீபம்
நீடநிரைத் தேந்தி
நறைமலர்ப்பொற் சுண்ணம்
நறும்பொரியுந் தூவி
மறையொலிபோய் வானளப்ப
மாமுரசம் ஆர்ப்ப
இறைவர்திரு மைந்தர்தமை
எதிர்கொள்வர வேற்றார்.
540
Go to top

வந்துதிரு வீழி
மிழலை மறைவல்ல
அந்தணர்கள் போற்றிசைப்பத்
தாமும் மணிமுத்தின்
சந்தமணிச் சிவிகைநின்
றிழிந்து தாழ்ந்தருளி
உய்ந்த மறையோ
ருடன்அணைந்தங் குள்புகுவார்.
541

அப்போ தரையார்
விரிகோ வணவாடை
ஒப்போ தரும்பதிகத்
தோங்கும் இசைபாடி
மெய்ப்போதப் போதமர்ந்தார்
தங்கோயில் மேவினார்
கைப்போது சென்னியின்மேற்
கொண்டு கவுணியனார்.
542

நாவின் தனிமன்னர்
தாமும் உடன்நண்ண
மேவிய விண்ணிழிந்த
கோயில் வலங்கொள்வார்
பூவியலும் உந்தியான்
போற்றப் புவிக்கிழிந்த
தேவியலு மெய்கண்டு
சிந்தைவியப் பெய்தினார்.
543

வலங்கொண்டு புக்கெதிரே
வந்து வரநதியின்
சலங்கொண்ட வேணித்
தனிமுதலைத் தாழ்ந்து
நிலங்கொண்ட மேனியராய்
நீடுபெருங் காதல்
புலங்கொண்ட சிந்தையினால்
பொங்கியிசை மீப்பொழிந்தார்.
544

போற்றிச் சடையார்
புனலுடையான் என்றெடுத்துச்
சாற்றிப் பதிகத்
தமிழ்மாலைச் சந்தவிசை
ஆற்ற மிகப்பாடி
ஆனந்த வெள்ளத்தில்
நீற்றழகர் சேவடிக்கீழ்
நின்றலைந்து நீடினார்.
545
Go to top

நீடியபே ரன்புருகி
உள்ளலைப்ப நேர்நின்று
பாடியெதி ராடிப்
பரவிப் பணிந்தெழுந்தே
ஆடிய சேவடிகள்
ஆர்வமுற உட்கொண்டு
மாடுயர் கோயில்
புறத்தரிது வந்தணைந்தார்.
546

வந்தணைந்து வாழ்ந்து
மதிற்புறத்தோர் மாமடத்துச்
செந்தமிழ்சொல் வேந்தரும்
செய்தவரும் சேர்ந்தருளச்
சந்தமணிக் கோபுரத்துச்
சார்ந்தவட பாற்சண்பை
அந்தணர்சூ ளாமணியார்
அங்கோர் மடத்தமர்ந்தார்.
547

அங்கண் அமர்வார்
அரனார் அடியிணைக்கீழ்த்
தங்கிய காதலினாற்
காலங்கள் தப்பாமே
பொங்குபுகழ் வாகீச
ருங்கூடப் போற்றிசைத்தே
எங்கும் இடர்தீர்ப்பார்
இன்புற் றுறைகின்றார்.
548

ஓங்குபுனற் பேணு
பெருந்துறையும் உள்ளிட்ட
பாங்கார் திலதைப்
பதிமுற்ற மும்பணிந்து
வீங்கொலிநீர்வீழி மிழலையினில்
மீண்டும் அணைந்
தாங்கினிது கும்பிட்
டமர்ந்துறையும் அந்நாளில்.
549

சேணுயர் மாடப் புகலி யுள்ளார்
திருஞான சம்பந்தப் பிள்ளை யாரைக்
காணும் விருப்பிற் பெருகு மாசை
கைம்மிகு காதல் கரை யிகப்பப்
பூணும் மனத்தொடு தோணி மேவும்
பொருவிடை யார்மலர்ப் பாதம் போற்றி
வேணு புரத்தை யகன்று போந்து
வீழி மிழலையில் வந்த ணைந்தார்.
550
Go to top

ஊழி முடிவில் உயர்ந்த வெள்ளத்
தோங்கிய காழி உயர் பதியில்
வாழி மறையவர் தாங்க ளெல்லாம்
வந்து மருங்கணைந் தார்கள் என்ன
வீழி மிழலையின் வேதி யர்கள்
கேட்டுமெய்ஞ் ஞானமுண் டாரை முன்னா
ஏழிசை சூழ்மறை எய்த வோதி
எதிர்கொள் முறைமையிற் கொண்டு புக்கார்.
551

சண்பைத் திருமறை யோர்கள் எல்லாம்
தம்பிரா னாரைப் பணிந்து போந்து
நண்பிற் பெருகிய காதல் கூர்ந்து
ஞானசம் பந்தர் மடத்தில் எய்திப்
பண்பிற் பெருகுங் கழும லத்தார்
பிள்ளையார் பாதம் பணிந்து பூண்டே
எண்பெற்ற தோணி புரத்தில் எம்மோ
டெழுந்தரு ளப்பெற வேண்டும் என்றார்.
552

என்றவர் விண்ணப்பஞ் செய்த போதில்
ஈறில் சிவஞானப் பிள்ளை யாரும்
நன்றிது சாலவுந் தோணி மேவும்
நாதர் கழலிணை நாம் இறைஞ்ச
இன்று கழித்து மிழலை மேவும்
இறைவர் அருள்பெற்றுப் போவ தென்றே
அன்று புகலி அரும றையோர்க்
கருள்செய் தவர்க்கு முகமளித்தார்.
553

மேற்பட்ட அந்தணர் சண்பை மேவும்
வேதியர்க் காய விருந்த ளிப்பப்
பாற்பட்ட சிந்தைய ராய்ம கிழ்ந்து
பரம்பொரு ளானார் தமைப் பரவும்
சீர்ப்பட்ட எ ல்லை யினிது செல்லத்
திருத்தோணி மேவிய செல்வர் தாமே
கார்ப்பட்ட வண்கைக் கவுணி யர்க்குக்
கனவிடை முன்னின் றருள்செய் கின்றார்.
554

தோணியில் நாம்அங் கிருந்த வண்ணம்
தூமறை வீழிமிழலை தன்னுள்
சேணுயர் விண்ணின் றிழிந்த இந்தச்
சீர்கொள் விமானத்துக் காட்டு கின்றோம்
பேணும் படியால் அறிதி என்று
பெயர்ந்தருள் செய்யப் பெருந்த வங்கள்
வேணு புரத்தவர் செய்ய வந்தார்
விரவும் புளகத் தொடும் உணர்ந்தார்.
555
Go to top

அறிவுற்ற சிந்தைய ராய்எ ழுந்தே
அதிசயித் துச்சிமேல் அங்கை கூப்பி
வெறியுற்ற கொன்றையி னார்ம கிழ்ந்த
விண்ணிழி கோயிலிற் சென்று புக்கு
மறியுற்ற கையரைத் தோணி மேல்முன்
வணங்கும் படியங்குக் கண்டு வாழ்ந்து
குறியிற் பெருகுந் திருப்ப திகம்
குலவிய கொள்கையிற் பாடு கின்றார்.
556

மைம்மரு பூங்குழல் என்றெ டுத்து
மாறில் பெருந் திருத்தோணி தன்மேற்
கொம்மை முலையினாள் கூட நீடு
கோலங் குலாவும் மிழலை தன்னில்
செம்மை தருவிண் ணிழிந்த கோயில்
திகழ்ந்த படிஇது என்கொல் என்று
மெய்ம்மை விளங்குந் திருப்ப திகம்
பாடி மகிழ்ந்தனர் வேத வாயர்.
557

செஞ்சொல் மலர்ந்த திருப்ப திகம்
பாடித் திருக்கடைக் காப்புச் சாத்தி
அஞ்சலி கூப்பி விழுந்தெ ழுவார்
ஆனந்த வெள்ளம் அலைப்பப் போந்து
மஞ்சிவர் சோலைப்புகலி மேவும்
மாமறை யோர்தமை நோக்கி வாய்மை
நெஞ்சில் நிறைந்த குறிப்பில் வந்த
நீர்மைத் திறத்தை அருள்செய் கின்றார்.
558

பிரம புரத்தி லமர்ந்த முக்கட்
பெரிய பிரான்பெரு மாட்டி யோடும்
விரவிய தானங்கள் எங்குஞ் சென்று
விரும்பிய கோயில் பணிந்து போற்றி
வருவது மேற்கொண்ட காதல் கண்டங்
கமர்ந்த வகையிங் களித்த தென்று
தெரிய வுரைத்தருள் செய்து நீங்கள்
சிரபுர மாநகர் செல்லும் என்றார்.
559

என்று கவுணியப் பிள்ளை யார்தாம்
இயம்பப் பணிந்தருள் ஏற்றுக் கொண்டே
ஒன்றிய காதலின் உள்ளம் அங்கண்
ஒழிய ஒருவா றகன்று போந்து
மன்றுள் நடம்புரிந் தார்ம கிழ்ந்த
தானம் பலவும் வணங்கிச் சென்று
நின்ற புகழ்த்தோணி நீடு வாரைப்
பணியும் நியதிய ராய் உறைந்தார்.
560
Go to top

சிரபுரத் தந்தணர் சென்ற பின்னைத்
திருவீழி மேவிய செல்வர் பாதம்
பரவுதல் செய்து பணிந்து நாளும்
பண்பின் வழாத்திருத் தொண்டர் சூழ
உரவுத் தமிழ்த்தொடை மாலை சாத்தி
ஓங்கிய நாவுக் கரச ரோடும்
விரவிப் பெருகிய நண்பு கூர
மேவி இனிதங் குறையும் நாளில்.
561

மண்ணின் மிசை வான்பொய்த்து நதிகள் தப்பி
மன்னுயிர்கள் கண்சாம்பி உணவு மாறி
விண்ணவர்க்குஞ் சிறப்பில்வரும் பூசை யாற்றா
மிக்கபெரும் பசியுலகில் விரவக் கண்டு
பண்ணமரும் மொழியுமையாள் முலையின் ஞானப்
பாலறா வாயருடன் அரசும் பார்மேல்
கண்ணுதலான் திருநீற்றுச் சார்வி னோர்க்கும்
கவலைவரு மோஎன்று கருத்திற் கொண்டார்.
562

வானாகி நிலனாகி அனலு மாகி
மாருதமாய் இருசுடராய் நீரு மாகி
ஊனாகி உயிராகி உணர்வு மாகி
உலகங்கள் அனைத்துமாய் உலகுக் கப்பால்
ஆனாத வடிவாகி நின்றார் செய்ய
அடிபரவி அன்றிரவு துயிலும் போது
கானாடு கங்காளர் மிழலை மூதூர்
காதலித்தார் கனவில்அணைந் தருளிச் செய்வார்.
563

உலகியல்பு நிகழ்ச்சியால் அணைந்த தீய
உறுபசிநோய் உமையடையா தெனினும் உம்பால்
நிலவுசிவ நெறிசார்ந்தோர் தம்மை வாட்டம்
நீங்குதற்கு நித்தம் ஒரோர் காசு நீடும்
இலகுமணிப் பீடத்துக் குணக்கும் மேற்கும்
யாமளித்தோம் உமக்கிந்தக் காலந் தீர்ந்தால்
அலகில்புக ழீர்தவிர்வ தாகும் என்றே
அருள்புரிந்தார் திருவீழி மிழலை ஐயர்.
564

தம்பிரான் அருள் புரிந்து கனவின் நீங்கச்
சண்பையார் இளவேறு தாமு ணர்ந்து
நம்பிரான் அருள்இந்த வண்ணம் என்றே
நாவினிசை யரசரொடுங் கூட நண்ணி
வம்புலா மலரிதழி வீழி நாதர்
மணிக்கோயில் வலஞ்செய்யப் புகுந்த வேலை
அம்பிகா பதியருளால் பிள்ளை யார்தாம்
அபிமுகத்துப் பீடிகைமேற் காசு கண்டார்.
565
Go to top

காதலொடுந் தொழுதெடுத்துக் கொண்டு நின்று
கைகுவித்துப் பெருமகிழ்ச்சி கலந்து பொங்க
நாதர்விரும் படியார்கள் நாளும் நாளும்
நல்விருந்தா யுண்பதற்கு வருக வென்று
தீதில்பறை நிகழ்வித்துச் சென்ற தொண்டர்
திருவமுது கறிநெய்பால் தயிரென் றின்ன
ஏதமுறா தினி துண்ண ஊட்டி அங்கண்
இருதிறத்துப் பெருந்தவரும் இருந்த நாளில்.
566

நாவினுக்கு வேந்தர்திரு மடத்திற் தொண்டர்
நாட்கூறு திருவமுது செய்யக் கண்டு
சேவுகைத்தார் அருள்பெற்ற பிள்ளை யார்தந்
திருமடத்தில் அமு தாக்கு வாரை நோக்கித்
தீவினைக்கு நீர்என்றும் அடைவி லாதீர்
திருவமுது காலத்தால் ஆக்கி இங்கு
மேவுமிக்க அடியவருக் களியா வண்ணம்
விளைந்தவா றென்கொலோ விளம்பும் என்றார்.
567

திருமறையோர் தலைவர்தாம் அருளிச் செய்யத்
திருமடத்தில் அமுதமைப்போர் செப்பு வார்கள்
ஒருபரிசும் அறிந்திலோம் இதனை உம்மை
உடையவர்பாற் பெறும்படிக்கா சொன்றுங் கொண்டு
கருதியஎல் லாங்கொள்ள வேண்டிச் சென்றால்
காசுதனை வாசிபட வேண்டும் என்பார்
பெருமுனிவர் வாகீசர் பெற்ற காசு
பேணியே கொள்வரிது பிற்பா டென்றார்..
568

திருஞான சம்பந்தர் அதனைக் கேட்டுச்
சிந்திப்பார் சிவபெருமான் நமக்குத் தந்த
ஒருகாசு வாசிபட மற்றக் காசு
நன்றாகி வாசிபடா தொழிவான் அந்தப்
பெருவாய்மைத் திருநாவுக் கரசர் தொண்டால்
பெறுங்காசாம் ஆதலினாற் பெரியோன் தன்னை
வருநாள்கள் தருங்காசு வாசி தீரப்
பாடுவன்என் றெண்ணிஅது மனத்துட் கொண்டார்.
569

மற்றைநாள் தம்பிரான் கோயில் புக்கு
வாசிதீர்த் தருளும்எனப் பதிகம் பாடிப்
பெற்றபடி நற்காசு கொண்டு மாந்தர்
பெயர்ந்துபோய் ஆவணவீ தியினிற் காட்ட
நற்றவத்தீர் இக்காசு சால நன்று
வேண்டுவன நாந்தருவோம் என்று நல்க
அற்றைநாள் தொடங்கிநாட் கூறு தன்னில்
அடியவரை அமுதுசெய்வித் தார்வ மிக்கார்.
570
Go to top

அருவிலையிற் பெறுங்காசும் அவையே யாகி
அமுதுசெய்யத் தொண்டர்அள விறந்து பொங்கி
வருமவர்கள் எல்லார்க்கும் வந்தா ருக்கும்
மகிழ்ந்துண்ண இன்னடிசில் மாளா தாகத்
திருமுடிமேல் திங்களொடு கங்கை சூடும்
சிவபெருமான் அருள்செய்யச் சிறப்பின் மிக்க
பெருமைதரு சண்பைநகர் வேந்தர் நாவுக்
கரசர்இவர் பெருஞ்சோற்றுப் பிறங்கல் ஈந்தார்.
571

அவனிமிசை மழைபொழிய உணவு மல்கி
அனைத்துயிருந் துயர்நீங்கி அருளி னாலே
புவனமெலாம் பொலிவெய்துங் காலம் எய்தப்
புரிசடையார் கழல்பலநாள் போற்றி வைகித்
தவமுனிவர் சொல்வேந்த ரோடுங் கூடத்
தம்பிரான் அருள்பெற்றுத் தலத்தின் மீது
சிவன்மகிழுந் தானங்கள் வணங்கப் போவார்
தென்திருவாஞ் சியமூதூர் சென்று சேர்ந்தார்.
572

நீடுதிரு வாஞ்சியத்தில் அமர்ந்த முக்கண்
நீலமிடற் றருமணியை வணங்கிப் போற்றிப்
பாடொலிநீர்த் தலையாலங் காடு மாடு
பரமர்பெரு வேளூரும் பணிந்து பாடி
நாடுபுகழ்த் தனிச்சாத்தங் குடியில் நண்ணி
நம்பர்திருக் கரவீரம் நயந்து பாடித்
தேடுமறைக் கரியார்தம் விளமர் போற்றித்
திருவாரூர் தொழநினைந்து சென்று புக்கார்.
573

நம்பர்மகிழ் திருவாரூர் வணங்கிப் போந்து
நலங்கொள்திருக் காறாயில் நண்ணி யேத்தி
பைம்புனல்மென் பணைத்தேவூர் அணைந்து போற்றி
பரமர்திரு நெல்லிக்காப் பணிந்து பாடி
உம்பர்பிரான் கைச்சினமும் பரவித் தெங்கூர்
ஓங்குபுகழ்த் திருக்கொள்ளிக் காடும் போற்றிச்
செம்பொன்மதில் கோட்டூரும் வணங்கி யேத்தித்
திருமலிவெண் டுறைதொழுவான் சென்று சேர்ந்தார்.
574

மற்றவ்வூர் தொழுதேத்தி மகிழ்ந்து பாடி
மாலயனுக் கரியபிரான் மருவுந் தானம்
பற்பலவும் சென்று பணிந் தேத்திப் பாடிப்
பரவுதிருத் தொண்டர்குழாம் பாங்கின் எய்தக்
கற்றவர்வாழ் தண்டலைநீள் நெறியுள் ளிட்ட
கனகமதில் திருக்களருங் கருதார் வேள்வி
செற்றவர்சேர் பதிபிறவும் சென்று போற்றித்
திருமறைக்காட்டதன் மருங்கு சேர்ந்தா ரன்றே.
575
Go to top

கார்அமண்வெஞ் சுரமருளாற் கடந்தார் தாமும்
கடற்காழிக் கவுணியர்தந் தலைவர் தாமும்
சேரஎழுந் தருளியஅப் பேறு கேட்டுத்
திருமறைக்காட் டகன்பதியோர் சிறப்பிற் பொங்கி
ஊரடைய அலங்கரித்து விழவு கொள்ள
உயர்கமுகு கதலிநிறை குடந்தீ பங்கள்
வார்முரச மங்கலநா தங்கள் மல்க
எதிர்கொள்ள அடியருடன் மகிழ்ந்து வந்தார்.
576

முன்னணைந்த திருநாவுக் கரசர் தம்மை
முறைமையால் எதிர்கொண்டு களிப்பின் மூழ்கிப்
பின்னணைய எழுந்தருளும் பிள்ளை யார்தம்
பெருகியபொற் காளத்தின் ஓசை கேட்டுச்
சென்னிமிசைக் கரங்குவித்து முன்பு சென்று
சேணிலத்து வணங்குதலுந் திருந்து சண்பை
மன்னவரும் மணிமுத்தின் சிவிகை நின்று
வந்திழிந்து வணங்கியுடன் மகிழ்ந்து போந்தார்.
577

சொல்லரச ருடன்கூடப் பிள்ளை யாரும்
தூமணிநீர் மறைக்காட்டுத் தொல்லை மூதூர்
மல்குதிரு மறுகின்கட் புகுந்த போது
மாதவர்கள் மறையவர்கள் மற்று முள்ளோர்
எல்லையில்லா வகைஅரஎன் றெடுத்த ஓசை
இருவிசும்பும் திசையெட்டும் நிறைந்து பொங்கி
ஒல்லொலிநீர் வேலையொலி அடக்கி விண்மேல்
உம்பர்நாட் டப்புறத்தும் உற்ற தன்றே.
578

அடியவரும் பதியவரும் மருங்கு போற்ற
அணிமறுகின் ஊடெய்தி அருகு சூழ்ந்த
கொடிநுடங்கு செழுந்திருமா ளிகையின் முன்னர்க்
கோபுரத்தைத் தாழ்ந்திறைஞ்சிக் குறுகிப் புக்கு
முடிவிலிமை யவர்முனிவர் நெருங்குந் தெய்வ
முன்றில்வலம் கொண்டுநேர் சென்று முன்னாள்
படியின்மறை அருச்சித்துக் காப்புச் செய்த
பைம்பொன்மணித் திருவாயிற் பாங்கு வந்தார்
579

அருமறைகள் திருக்காப்புச் செய்து வைத்த
அக்கதவந் திறந்திடஅம் மறைகளோதும்
பெருகியஅன் புடைஅடியார் அணைந்து நீக்கப்
பெறாமையினால் அன்றுமுத லாகப் பின்னை
ஒருபுடைஓர் வாயில்அமைத் தொழுகுந் தன்மை
உள்ளபடி கேட்டருளி உயர்ந்த சண்பைத்
திருமறையோர் தலைவர்வியப் பெய்தி நின்று
திருநாவுக் கரசருக்குச் செப்பு கின்றார்.
580
Go to top

அப்பரே வேதவனத் தையர் தம்மை
அபிமுகத் திருவாயில் திறந்து புக்கே
எப்பரிசும் நாம்இறைஞ்ச வேண்டும் நீரே
இவ்வாயில் திருக்காப்பு நீங்குமாறு
மெய்ப் பொருள்வண் டமிழ்பாடி அருளும் என்ன
விளங்குமொழி வேந்தரது மேற்கொண் டென்னை
இப்பரிசு நீரருளிச் செய்தீ ராகில்
இதுசெய்வேன் எனப்பதிகம் எடுத்துப் பாட.
581

பாடியஅப் பதிகப்பாட் டான பத்தும்
பாடல்நிரம் பியபின்னும் பைம்பொன் வாயிற்
சேடுயர்பொற் கதவுதிருக் காப்பு நீங்காச்
செய்கையினால் வாகீசர் சிந்தை நொந்து
நீடுதிருக் கடைக்காப்பில் அரிது வேண்டி
நின்றெடுக்கத் திருக்காப்பு நீக்கங் காட்ட
ஆடியசே வடியார்தம் அடியார் விண்ணோர்
ஆர்ப்பெழுந்த தகிலாண்டம் அனைத்தும் மூழ்க.
582

மற்றது கண்ட போதே வாக்கின்மன்
னவரை நோக்கிப்
பொற்புறு புகலி மன்னர் போற்றிட
அவரும் போற்றி
அற்புத நிலையி னார்கள் அணிதிரு
மறைக்கா டாளுங்
கொற்றவர் கோயில் வாயில் நேர்வழி
குறுகிப் புக்கார்.
583

கோயிலுட் புகுவார் உச்சி
குவித்தசெங் கைக ளோடும்
தாயினும் இனிய தங்கள்
தம்பிரா னாரைக் கண்டார்
பாயுநீர் அருவி கண்கள்
தூங்கிடப் படியின் மீது
மேயின மெய்ய ராகி
விதிர்ப்புற்று விரைவின் வீழ்ந்தார்.
584

அன்பினுக் களவு காணார்
ஆனந்த வெள்ளம் மூழ்கி
என்புநெக் குருக நோக்கி
இறைஞ்சிநேர் விழுந்த நம்பர்
முன்புநிற் பதுவும் ஆற்றார்
மொழிதடு மாற ஏத்தி
மின்புரை சடையார் தம்மைப்
பதிகங்கள் விளம்பிப் போந்தார்.
585
Go to top

புறம்புவந் தணைந்த போது
புகலிகா வலரை நோக்கி
நிறங்கிளர் மணிக்க பாடம்
நீக்கமும் அடைப்பும் நிற்கத்
திறந்தவா றடைக்கப் பாடி
யருளும்நீர் என்றார் தீய
மறம்புரி அமணர் செய்த
வஞ்சனை கடக்க வல்லார்.
586

அன்றர சருளிச் செய்ய
அருமறைப் பிள்ளை யாரும்
வென்றிவெள் விடையார் தம்மை
விருப்பினாற் சதுரம் என்னும்
இன்றமிழ்ப் பதிகப் பாடல்
இசைத்திட இரண்டு பாலும்
நின்றஅக் கதவு காப்பு
நிரம்பிட அடைத்த தன்றே.
587

அடைத்திடக் கண்டு சண்பை
ஆண்டகை யாரும் அஞ்சொல்
தொடைத்தமி ழாளி யாருந்
தொழுதெழத் தொண்டர் ஆர்த்தார்
புடைப்பொழிந் திழிந்த தெங்கும்
பூமழை புகலி வேந்தர்
நடைத்தமிழ்ப் பதிக மாலை
நிரம்பிட நவின்று போற்றி.
588

அத்திரு வாயில் தன்னில்
அற்றைநாள் தொடங்கி நேரே
மெய்த்திரு மறைகள் போல
மேதினி புக்குப் போற்ற
வைத்தெதிர் வழக்கஞ் செய்த
வரம்பிலாப் பெருமை யோரைக்
கைத்தலங் குவித்துத் தாழ்ந்து
வாழ்ந்தது கடல்சூழ் வையம்.
589

அருமறை யான வெல்லாம்
அகலிரு விசும்பில் ஆர்த்துப்
பெருமையின் முழங்கப் பஞ்ச
நாதமும் பிறங்கி ஓங்க
இருபெருந் தகையோர் தாமும்
எதிரெதிர் இறைஞ்சிப் போந்து
திருமடங் களின்முன் புக்கார்
செழும்பதி விழவு கொள்ள.
590
Go to top

வேதங்கள் எண்ணில் கோடி
மிடைந்துசெய் பணியை மிக்க
ஏதங்கள் நம்பால் நீப்பார்
இருவருஞ் செய்து வைத்தார்
நாதங்கொள் வடிவாய் நின்ற
நதிபொதி சடையார் செய்ய
பாதங்கள் போற்றும் மேலோர்
பெருமையார் பகரும் நீரார்.
591

திருமறை நம்பர் தாமுன்
பருள்செய்த அதனைச் செப்பும்
ஒருமையில் நின்ற தொண்டர்
தம்பிரா னார்பால் ஒக்க
வரும்அருட் செய்கை தாமே
வகுத்திட வல்லோ ரென்றால்
பெருமறை யுடன்மெய்த் தொண்டர்க்
கிடையீடு பெரிதா மன்றே.
592

இவ்வகை திரும றைக்காட்
டிறையவர் அருளை யுன்னி
மெய்வகை தெரிந்த வாக்கின்
வேந்தர்தாம் துயிலும் போதில்
மைவளர் கண்டர் சைவ
வேடத்தால் வந்து வாய்மூர்
அவ்விடை யிருத்தும் அங்கே
வாஎன அருளிப் போக.
593

கண்டஅப் போதே கைகள்
குவித்துடன் கடிது செல்வார்
மண்டிய காத லோடு
மருவுவார் போன்றுங் காணார்
எண்டிசை நோக்கு வாருக்
கெய்துவார் போல எய்தா
அண்டர்தம் பிரானார் தம்பின்
போயினார் ஆர்வத் தோடும்.
594

அங்கவர் ஏகச் சண்பை
ஆண்டகை யாரும் அப்பர்
எங்குற்றார் என்று கேட்ப
எய்தினார் திருவாய் மூரில்
பொங்கிய காத லால்என்று
உரைத்திடப் போன தன்மை
சங்கையுற் றென்கொல் என்று
தாமும்அங் கணையப் போந்தார்.
595
Go to top

அந்நிலை அணைந்த போதில்
அம்பிகை யுடனே கூட
மன்னிய ஆடல் காட்டத்
தளரிள வளரும் பாடிச்
சென்னியால் வணங்கி வாய்மூர்
அரசொடுஞ் சென்று புக்கங்
கின்னியல் புறமுன் கூடி
இருவரும் போற்றி செய்தார்.
596

நீடுசீர்த் திருவாய் மூரில்
நிலவிய சிவனார் தம்மைப்
பாடுசொற் பதிகந் தன்னால்
பரவியப் பதியில் வைகிக்
கூடுமெய் அன்பு பொங்க
இருவருங் கூடி மீண்டு
தேடுமா மறைகள் கண்டார்
திருமறைக் காடு சேர்ந்தார்.
597

சண்பைநா டுடைய பிள்ளை
தமிழ்மொழித் தலைவ ரோடு
மண்பயில் கீர்த்திச் செல்வ
மாமறைக் காட்டு வைகிக்
கண்பயில் நெற்றி யார்தங்
கழலிணை பணிந்து போற்றிப்
பண்பயில் பதிகம் பாடிப்
பரவிஅங் கிருந்தா ரன்றே.
598

இவ்வகை இவர்கள் அங்கண்
இருந்தனராக இப்பால்
செய்வகை இடையே தப்பும்
தென்னவன் பாண்டி நாட்டு
மெய்வகை நெறியில் நில்லா
வினைஅமண் சமய மிக்குக்
கைவகை முறைமைத் தன்மை
கழியமுன் கலங்குங் காலை.
599

தென்னவன் தானும் முன்செய்
தீவினைப் பயத்தி னாலே
அந்நெறிச் சார்வு தன்னை
அறமென நினைந்து நிற்ப
மன்னிய சைவ வாய்மை
வைதிக வழக்க மாகும்
நன்னெறி திரிந்து மாறி
நவைநெறி நடந்த தன்றே.
600
Go to top

பூழியர் தமிழ்நாட் டுள்ள
பொருவில்சீர்ப் பதிக ளெல்லாம்
பாழியும் அருகர் மேவும்
பள்ளிகள் பலவு மாகிச்
சூழிருட் குழுக்கள் போலத்
தொடைமயிற் பீலி யோடு
மூழிநீர் கையிற் பற்றி
அமணரே யாகி மொய்ப்ப.
601

பறிமயிர்த் தலையும் பாயும்
பீலியும் தடுக்கும் மேனிச்
செறியுமுக் குடையு மாகித்
திரிபவ ரெங்கு மாகி
அறியும்அச் சமய நூலின்
அளவினில் அடங்கிச் சைவ
நெறியினிற் சித்தஞ் செல்லா
நிலைமையில் நிகழுங் காலை.
602

வரிசிலைத் தென்ன வன்தான்
உய்தற்கு வளவர் கோமான்
திருவுயிர்த் தருளுஞ் செல்வப்
பாண்டிமா தேவி யாரும்
குரைகழல் அமைச்ச னாராங்
குலச்சிறை யாரும் என்னும்
இருவர்தம் பாங்கு மன்றிச்
சைவம்அங் கெய்தா தாக.
603

ஆங்கவர் தாங்கள் அங்கண்
அரும்பெறல் தமிழ்நா டுற்ற
தீங்கினுக் களவு தேற்றாச்
சிந்தையிற் பரிவு கொண்டே
ஓங்கிய சைவ வாய்மை
ஒழுக்கத்தில் நின்ற தன்மை
பூங்கழற் செழியன் முன்பு
புலப்படா வகைகொண் டுய்த்தார்.
604

இந்நெறி யொழுகு கின்றார்
ஏழுல குய்ய வந்த
மன்னிய புகலி வேந்தர்
வைதிக வாய்மைச் சைவச்
செந்நெறி விளக்கு கின்றார்
திருமறைக் காடு சேர்ந்த
நன்னிலை கன்னி நாட்டு
நல்வினைப் பயத்தாற் கேட்டார்.
605
Go to top

கேட்டஅப் பொழுதே சிந்தை
கிளர்ந்தெழு மகிழ்ச்சி பொங்க
நாட்பொழு தலர்ந்த செந்தா
மரைநகை முகத்த ராகி
வாட்படை அமைச்ச னாரும்
மங்கையர்க் கரசி யாரும்
சேட்படு புலத்தா ரேனுஞ்
சென்றடி பணிந்தார் ஒத்தார்.
606

காதலால் மிக்கோர் தாங்கள்
கைதொழு கருத்தி னாலே
போதவிழ் சோலை வேலிப்
புகலிகா வலனார் செய்ய
பாதங்கள் பணிமின் என்று
பரிசன மாக்கள் தம்மை
மாதவஞ் சுருதி செய்த
மாமறைக் காட்டில் விட்டார்.
607

ஆங்கவர் விடமுன் போந்த
அறிவுடை மாந்தர் அங்கண்
நீங்கிவண் தமிழ்நாட் டெல்லை
பிற்பட நெறியின் ஏகி
ஞாங்கர்நீர் நாடும் காடும்
நதிகளும் கடந்து வந்து
தேங்கமழ் கைதை நெய்தல்
திருமறைக் காடு சேர்ந்தார்.
608

திருமறைக் காடு நண்ணிச்
சிரபுர நகரில் வந்த
அருமறைப் பிள்ளையார் தாம்
அமர்ந்தினி தருளுஞ் செல்வப்
பெருமடத் தணைய வந்து
பெருகிய விருப்பில் தாங்கள்
வருமுறைத் தன்மை எல்லாம்
வாயில்கா வலர்க்குச் சொன்னார்.
609

மற்றவர் சென்று புக்கு
வளவர்கோன் மகளார் தென்னர்
கொற்றவன் தேவி யாரும்
குலச்சிறை யாரும் ஏவப்
பொற்கழல் பணிய வந்தோம்
எனச்சிலர் புறத்து வந்து
சொற்றனர் என்று போற்றித்
தொழுதுவிண் ணப்பஞ் செய்தார்.
610
Go to top

புகலிகா வலர்தாங் கேட்டுப்
பொருவிலா அருள்முன் கூர
அகமலர்ந் தவர்கள் தம்மை
அழையும்என் றருளிச் செய்ய
நகைமுகச் செவ்வி நோக்கி
நற்றவ மாந்தர் கூவத்
தகவுடை மாந்தர் புக்குத்
தலையினால் வணங்கி நின்றார்.
611

நின்றவர் தம்மை நோக்கி
நிகரில்சீர்ச் சண்பை மன்னர்
மன்றலங் குழலி யாராம்
மானியார் தமக்கும் மானக்
குன்றென நின்ற மெய்ம்மைக்
குலச்சிறை யார்த மக்கும்
நன்றுதான் வினவக் கூறி
நற்பதம் போற்று வார்கள்.
612

கன்னிநா டமணர் தம்மாற்
கட்டழிந் திழிந்து தங்கள்
மன்னனும் அவர்கள் மாயத்
தழுந்தமா தேவி யாரும்
கொன்னவில் அயில்வேல் வென்றிக்
குலச்சிறை யாரும் கூடி
இந்நிலை புகலி வேந்தர்க்
கியம்புமென் றிறைஞ்சி விட்டார்.
613

என்றவர்கள் விண்ணப்பஞ் செய்த பின்னை
ஏறுயர்த்த சிவபெருமான் தொண்ட ரெல்லாம்
நன்றுநமை ஆளுடைய நாதன் பாதம்
நண்ணாத எண்ணில் அமண் குண்டர் தம்மை
வென்றருளி வேதநூல் நெறியே யாக்கி
வெண்ணீறு வேந்தனையும் இடுவித் தங்கு
நின்றசெயல் சிவனடியார் செயலே யாக
நினைந்தருள வேண்டும்என நின்று போற்ற.
614

மற்றவர்கட் கருள்புரிந்து பிள்ளை யாரும்
வாகீச முனிவருடன் கூடச் சென்று
பெற்றமுயர்த் தவர்பாதம் பணிந்து போந்து
பெரியதிருக் கோபுரத்துள் இருந்து தென்னா
டுற்றசெயல் பாண்டிமா தேவி யாரும்
உரிமைஅமைச் சரும்உரைத்து விட்ட வார்த்தை
சொற்றனிமன் னவருக்குப் புகலி மன்னர்
சொல்லியெழுந் தருளுதற்குத் துணிந்த போது.
615
Go to top

அரசருளிச் செய்கின்றார் பிள்ளாய் அந்த
அமண்கையர் வஞ்சனைக்கோர் அவதி யில்லை
உரைசெய்வ துளதுறுகோள் தானுந் தீய
எழுந்தருள உடன்படுவ தொண்ணா தென்னப்
பரசுவது நம்பெருமான் கழல்கள் என்றால்
பழுதணையா தெனப்பகர்ந்து பரமர் செய்ய
விரைசெய்மலர்த் தாள்போற்றிப் புகலி வேந்தார்
வேயுறுதோ ளியை எடுத்து விளம்பினாரே.
616

சிரபுரத்துப் பிள்ளையார் அருளிச் செய்த
திருப்பதிகங் கேட்டதற்பின் திருந்து நாவுக்
கரசும்அதற் குடன்பாடு செய்து தாமும்
அவர்முன்னே எழுந்தருள அமைந்த போது
புரமெரித்தார் திருமகனார் அப்பர் இந்தப்
புனல்நாட்டில் எழுந்தருளி இருப்பீர் என்று
கரகமலங் குவித்திறைஞ்சித் தவிர்ப்ப வாக்கின்
காவலருந் தொழுதரிதாங் கருத்தில் நேர்ந்தார்.
617

வேதம்வளர்க் கவுஞ்சைவம் விளக்கு தற்கும்
வேதவனத் தருமணியை மீண்டும் புக்குப்
பாதமுறப் பணிந்தெழுந்து பாடிப் போற்றிப்
பரசியருள் பெற்றுவிடை கொண்டு போந்து
மாதவத்து வாகீசர் மறாத வண்ணம்
வணங்கியருள் செய்துவிடை கொடுத்து மன்னுங்
காதலினால் அருமையுறக் கலந்து நீங்கிக்
கதிர்ச்சிவிகை மருங்கணைந்தார் காழி நாதர்.
618

திருநாவுக் கரசரும் அங்கிருந்தார் இப்பால்
திருஞான சம்பந்தர் செழுநீர் முத்தின்
பெருநாமச் சிவிகையின்மீ தேறிப் பெற்றம்
உயர்த்தவர்தாள் சென்னியின்மேற் பேணும் உள்ளத்
தொருநாமத் தஞ்செழுத்தும் ஓதி வெண்ணீற்
றொளிவிளங்குந் திருமேனி தொழுதார் நெஞ்சில்
வருநாமத் தன்புருகுங் கடலாம் என்ன
மாதவரார்ப் பொலிவையம் நிறைந்த தன்றே.
619

பொங்கியெழுந் திருத்தொண்டர்
போற்றிசைப்ப நாற்றிசையும்
மங்கலதூ ரியந்தழங்க
மறைமுழங்க மழைமுழங்கும்
சங்கபட கம்பேரி
தாரைகா ளந்தாளம்
எங்குமெழுந் தெதிரியம்ப
இருவிசும்பு கொடிதூர்ப்ப.
620
Go to top

மலர்மாரி பொழிந்திழிய
மங்கலவாழ்த் தினிதிசைப்ப
அலர்வாசப் புனற்குடங்கள்
அணிவிளக்குத் தூபமுடன்
நிலைநீடு தோரணங்கள்
நிரைத்தடியார் எதிர்கொள்ளக்
கலைமாலை மதிச்சடையார்
இடம்பலவுங் கைதொழுவார்.
621

தெண்டிரைசூழ் கடற்கானல்
திருவகத்தி யான்பள்ளி
அண்டர்பிரான் கழல்வணங்கி
அருந்தமிழ்மா மறைபாடிக்
கொண்டல்பயில் மணற்கோடு
சூழ்கோடிக் குழகர்தமைத்
தொண்டருடன் தொழுதணைந்தார்
தோணிபுரத் தோன்றலார்.
622

கண்ணார்ந்த திருநுதலார்
மகிழ்ந்தகடிக் குளம்இறைஞ்சி
எண்ணார்ந்த திருவிடும்பா
வனமேத்தி எழுந்தருளி
மண்ணார்ந்த பதிபிறவும்
மகிழ்தரும்அன் பால்வணங்கிப்
பண்ணார்ந்த தமிழ்பாடிப்
பரவியே செல்கின்றார்.
623

திருவுசாத் தானத்துத்
தேவர்பிரான் கழல்பணிந்து
மருவியசெந் தமிழ்ப்பதிகம்
மால்போற்றும் படிபாடி
இருவினையும் பற்றறுப்பார்
எண்ணிறந்த தொண்டருடன்
பெருகுவிருப் பினராகிப்
பிறபதியும் பணிந்தணைவார்.
624

கருங்கழிவே லைப்பாலைக்
கழிநெய்தல் கடந்தருளித்
திருந்தியசீர்ப் புனல்நாட்டுத்
தென்மேல்பால் திசைநோக்கி
மருங்குமிடை தடஞ்சாலி
மாடுசெறி குலைத்தெங்கு
நெருங்கிவளர் கமுகுடுத்த
நிறைமருத வழிச்சென்றார்.
625
Go to top

சங்கங்கள் வயலெங்கும்
சாலிகழைக் கரும்பெங்கும்
கொங்கெங்கும் நிறைகமலக்
குளிர்வாசத் தடமெங்கும்
அங்கங்கே உழவர்குழாம்
ஆர்க்கின்ற ஒலியெங்கும்
எங்கெங்கும் மலர்ப்படுகர்
இவைகழிய எழுந்தருளி.
626

தடமெங்கும் புனல்குடையும்
தையலார் தொய்யில்நிறம்
இடமெங்கும் அந்தணர்கள்
ஓதுகிடை யாகநிலை
மடமெங்கும் தொண்டர்குழாம்
மனையெங்கும் புனைவதுவை
நடமெங்கும் ஒலியோவா
நற்பதிகள் அவைகடந்து.
627

நீர்நாடு கடந்தருளி
நெடும்புறவிற் குறும்புதல்கள்
கார்நாடு முகைமுல்லைக்
கடிநாறு நிலங்கடந்து
போர்நாடுஞ் சிலைமறவர்
புன்புலவைப் பிடைபோகிச்
சீர்நாடு தென்பாண்டி
நன்னாடு சென்றணைவார்.
628

மன்றல்மலர்ப் பிறங்கல்மருங்
கெறிந்துவரு நதிகள்பல
சென்றணைந்து கடந்தேறித்
திரிமருப்பின் கலைபுணர்மான்
கன்றுதெறித் தெனவுகைக்கும்
கானஅதர் கடந்தணைந்தார்
கொன்றைநறுஞ் சடைமுடியார்
மகிழ்ந்ததிருக் கொடுங்குன்றம்.
629

கொடுங்குன்றத் தினிதமர்ந்த
கொழும்பவளச் செழுங்குன்றை
அடுங்குன்றம் உரித்தானை
வணங்கிஅருந் தமிழ்பாடி
நெடுங்குன்றம் படர்கானும்
நிறைநாடுங் கடந்துமதி
தொடுங்குன்ற மதில்மதுரைத்
தொன்னகர்வந் தணைகின்றார்.
630
Go to top

இந்நிலை இவர்வந் தெய்த
எண்பெருங் குன்றம் மேவும்
அந்நிலை அமணர் தங்கட்
கழிவுமுன் சாற்ற லுற்றுப்
பன்முறை வெருக்கொண் டுள்ளம்
பதைப்பத்தீக் கனாக்க ளோடும்
துன்னிமித் தங்கள் அங்கு
நிகழ்ந்தன சொல்ல லுற்றாம்.
631

பள்ளிகள் மேலும் மாடு
பயில்அமண் பாழி மேலும்
ஒள்ளிதழ் அசோகின் மேலும்
உணவுசெய் கவளங் கையில்
கொள்ளும்மண் டபங்கள் மேலும்
கூகையோ டாந்தை தீய
புள்ளின மான தம்மில்
பூசலிட் டழிவு சாற்றும்.
632

பீலியும் தடுக்கும் பாயும்
பிடித்தகை வழுவி வீழக்
கால்களுந் தடுமா றாடிக்
கண்களும் இடமே யாடி
மேல்வரும் அழிவுக் காக
வேறுகா ரணமுங் காணார்
மாலுழந் தறிவு கெட்டு
மயங்கினர் அமண ரெல்லாம்.
633

கந்தியர் தம்மில் தாமே
கனன்றெழு கலாங்கள் கொள்ள
வந்தவா றமணர் தம்மில்
மாறுகொண் டூறு செய்ய
முந்தைய உரையிற் கொண்ட
பொறைமுதல் வைப்பும் விட்டுச்
சிந்தையிற் செற்ற முன்னாந்
தீக்குணந் தலைநின் றார்கள்.
634

இப்படி அமணர் வைகும்
எப்பெயர்ப் பதியும் எய்தும்
ஒப்பில்உற் பாத மெல்லாம்
ஒருவரின் ஒருவர் கூறி
மெய்ப்படு தீக்க னாவும்
வேறுவே றாகக் கண்டு
செப்புவான் புறத்து ளோரும்
தென்னவன் மதுரை சேர்ந்தார்.
635
Go to top

அந்நகர் தன்னில் வாழ்வார்
புறம்புநின் றணைவார் கூடி
மன்னவன் தனக்குங் கூறி
மருண்டவுள் ளத்த ராகித்
துன்னிய அழுக்கு மெய்யில்
தூசிலார் பலரும் ஈண்டி
இன்னன கனவு கண்டோம்
எனஎடுத் தியம்ப லுற்றார்.
636

சீர்மலி அசோகு தன்கீழ்
இருந்தநந் தேவர் மேலே
வேரொடு சாய்ந்து வீழக்
கண்டனம் அதன்பின் னாக
ஏர்கொள்முக் குடையுந் தாமும்
எழுந்துகை நாற்றிப் போக
ஊருளோர் ஓடிக் காணக்
கண்டனம் என்று ரைப்பார்.
637

குண்டிகை தகர்த்துப் பாயும்
பீறியோர் குரத்தி யோடப்
பண்டிதர் பாழி நின்றுங்
கழுதைமேற் படர்வார் தம்பின்
ஒண்டொடி இயக்கி யாரும்
உளையிட்டுப் புலம்பி யோடக்
கண்டனம் என்று சொன்னார்
கையறு கவலை யுற்றார்.
638

கானிடை நட்ட மாடும்
கண்ணுதல் தொண்ட ரெல்லாம்
மீனவன் மதுரை தன்னில்
639

மழவிடை இளங்கன் றொன்று
வந்துநங் கழகந் தன்னை
உழறிடச் சிதறி யோடி
ஒருவருந் தடுக்க அஞ்சி
விழவொரு புகலு மின்றி
மேதினி தன்னை விட்டு
நிழலிலா மரங்கள் ஏறி
நின்றிடக் கண்டோம் என்பார்.
640
Go to top

ஆவதென் பாவி காள்இக்
கனாத்திறம் அடிகள் மார்க்கு
மேவிய தீங்கு தன்னை
விளைப்பது திடமே என்று
நோவுறு மனத்த ராகி
நுகர்பெரும் பதமும் கொள்ளார்
யாவது செயலென் றெண்ணி
இடர்உழன் றழுங்கி னார்கள்.
641

அவ்வகை அவர்க ளெல்லாம்
அந்நிலை மையர்க ளாகச்
சைவநன் மரபில் வந்த
தடமயில் மடமென் சாயல்
பைவளர் அரவுஏர் அல்குல்
பாண்டிமா தேவி யார்க்கும்
மெய்வகை அமைச்ச னார்க்கும்
விளங்குநன் னிமித்தம் மேன்மேல்.
642

அளவிலா மகிழ்ச்சி காட்டும்
அரும்பெரு நிமித்தம் எய்த
உளமகிழ் வுணருங் காலை
உலகெலாம் உய்ய வந்த
வளரொளி ஞானம் உண்டார்
வந்தணைந் தருளும் வார்த்தை
கிளர்வுறும் ஓகை கூறி
வந்தவர் மொழியக் கேட்டார்.
643

அம்மொழி விளம்பி னோர்க்கு
வேண்டுவ அடைய நல்கி
மெய்ம்மையில் விளங்கு காதல்
விருப்புறு வெள்ளம் ஓங்கத்
தம்மையும் அறியா வண்ணம்
கைமிக்குத் தழைத்துப் பொங்கி
விம்மிய மகிழ்ச்சி கூர
மேவிய சிறப்பின் மிக்கார்.
644

மங்கையர்க் கரசி யார்பால்
வந்தடி வணங்கி நின்ற
கொங்கலர் தெரிய லாராம்
குலச்சிறை யாரை நோக்கி
நங்கள்தம் பிரானா ராய
ஞானபோ னகர்முன் பெய்தி
இங்கெழுந் தருள உய்ந்தோம்
எனஎதிர் கொள்ளும் என்றார்.
645
Go to top

மன்றலங் குழலி னாரை
வணங்கிப் போந் தமைச்சனாரும்
வென்றிவே லரச னுக்கும்
உறுதியே எனநி னைந்து
பொன்திகழ் மாட வீதி
மதுரையின் புறத்துப் போகி
இன்தமிழ் மறைதந் தாரை
எதிர்கொள எய்துங் காலை.
646

அம்புய மலராள் போல்வாள்
ஆலவாய் அமர்ந்தார் தம்மைக்
கும்பிட வேண்டு மென்று
கொற்றவன் தனக்கும் கூறித்
தம்பரி சனங்கள் சூழத்
தனித்தடை யோடும் சென்று
நம்பரை வணங்கித் தாமும்
நல்வர வேற்று நின்றார்.
647

திருநிலவு மணிமுத்தின்
சிவிகையின்மேல் சேவித்து
வருநிலவு தருமதிபோல்
வளரொளிவெண் குடைநிழற்றப்
பெருகொளிய திருநீற்றுத்
தொண்டர்குழாம் பெருகிவர
அருள்பெருக வருஞானத்
தமுதுண்டார் அணைகின்றார்.
648

துந்துபிகள் முதலாய
தூரியங்கள் கிளராமே
அந்தணராம் மாதவர்கள்
ஆயிரமா மறையெடுப்ப
வந்தெழும்மங் கலநாதம்
மாதிரம்உட் படமுழங்கச்
செந்தமிழ்மா ருதம்எதிர்கொண்
டெம்மருங்குஞ் சேவிப்ப.
649

பண்ணியவஞ் சனைத்தவத்தால்
பஞ்சவன்நாட் டிடைப்பரந்த
எண்ணில்அமண் எனும்பாவ
இருஞ்சேனை இரிந்தோட
மண்ணுலக மேயன்றி
வானுலகம் செய்தபெரும்
புண்ணியத்தின் படையெழுச்சி
போலெய்தும் பொலிவெய்த.
650
Go to top

துன்னும்முழு வுடல்துகளால்
சூழும்உணர் வினில்துகளால்
அன்னெறியிற் செறிந்தடைந்த
அமண்மாசு கழுவுதற்கு
மன்னியொளிர் வெண்மையினால்
தூய்மையினால் வழுதியர்தம்
கன்னிநாட் டிடைக்கங்கை
அணைந்ததெனுங் கவின்காட்ட.
651

பானல்வயல் தமிழ்நாடு
பழிநாடும் படிபரந்த
மானமிலா அமண்என்னும்
வல்லிருள்போய் மாய்வதனுக்
கானபெரு கொளிப்பரப்பால்
அண்டமெலாம் கொண்டதொரு
ஞானமணி விளக்கெழுந்து
வருவதென நலம்படைப்ப.
652

புரசைவயக் கடகளிற்றுப்
பூழியர்வண் டமிழ்நாட்டுத்
தரைசெய்தவப் பயன்விளங்கச்
சைவநெறி தழைத்தோங்க
உரைசெய்திருப் பேர்பலவும்
ஊதுமணிச் சின்னமெலாம்
பரசமய கோளரிவந்
தான்என்றுபணிமாற.
653

இப்பரி சணையும் சண்பையர் பெருமான்
எழுந்தரு ளும்பொழு திசைக்கும்
ஒப்பில்நித் திலப்பொன் தனிப்பெருங் காளம்
உலகுய்ய ஒலித்தெழும் ஓசை
செப்பரும் பெருமைக் குலச்சிறை யார்தம்
செவிநிறை அமுதெனத் தேக்க
அப்பொழு தறிந்து தலத்தின்மேற் பணிந்தே
அளப்பருங் களிப்பின ரானார்.
654

அஞ்சலி குவித்த கரங்களும் தலைமேல்
அணைந்திடக் கடிதுசென் றணைவார்
நஞ்சணி கண்டர் தந்திரு மகனா
ருடன்வரு நற்றவக் கடலை
நெஞ்சினில் நிறைந்த ஆர்வமுன் செல்லக்
கண்டு நீள் நிலத்திடைத் தாழ்ந்து
பஞ்சவர் பெருமான் மந்திரித் தலைவர்
பாங்குற அணைந்துமுன் பணிந்தார்.
655
Go to top

நிலமிசைப் பணிந்த குலச்சிறை யாரை
நீடிய பெருந்தவத் தொண்டர்
பலரும்முன் னணைந்து வணங்கிமற் றவர்தாம்
படியின்நின் றெழாவகை கண்டு
மலர்மிசைப் புத்தேள் வழிபடும் புகலி
வைதிகச் சேகரர் பாதம்
குலவிஅங் கணைந்தார் தென்னவ னமைச்சர்
குலச்சிறை யார்எனக் கூற.
656

சிரபுரச் செல்வர் அவருரை கேட்டுத்
திருமுகத் தாமரை மலர்ந்து
விரவொளி முத்தின் சிவிகைநின் றிழிந்து
விரைந்துசென் றவர்தமை அணைந்து
கரகம லங்கள் பற்றியே எடுப்பக்
கைதொழு தவரும்முன் நிற்ப
வரமிகு தவத்தால் அவரையே நோக்கி
வள்ளலார் மதுரவாக் களிப்பார்.
657

செம்பியர் பெருமான் குலமக ளார்க்குந்
திருந்திய சிந்தையீர் உமக்கும்
நம்பெரு மான்தன் திருவருள் பெருகும்
நன்மைதான் வாலிதே என்ன
வம்பலர் அலங்கல் மந்திரி யாரும்
மண்மிசைத் தாழ்ந்தடி வணங்கித்
தம்பெருந் தவத்தின் பயனனை யார்க்குத்
தன்மையாம் நிலையுரைக் கின்றார்.
658

சென்றகா லத்தின் பழுதிலாத் திறமும்
இனிஎதிர் காலத்தின் சிறப்பும்
இன்றெழுந் தருளப் பெற்றபே றிதனால்
எற்றைக்குந் திருவருள் உடையேம்
நன்றியில் நெறியில் அழுந்திய நாடும்
நற்றமிழ் வேந்தனும் உய்ந்து
வென்றிகொள் திருநீற் றொளியினில் விளங்கும்
மேன்மையும் படைத்தனம் என்பார்.
659

இங்கெழுந் தருளும் பெருமைகேட் டருளி
எய்துதற் கரியபே றெய்தி
மங்கையர்க் கரசி யாரும்நம் முடைய
வாழ்வெழுந் தருளிய தென்றே
அங்குநீர் எதிர்சென் றடிபணி வீர்என்
றருள்செய்தார் எனத்தொழு தார்வம்
பொங்கிய களிப்பால் மீளவும் பணிந்து
போற்றினார் புரவலன் அமைச்சர்.
660
Go to top

ஆங்ஙனம் போற்றி அடிபணிந் தவர்மேல்
அளவிலா அருள்புரி கருணை
தாங்கிய மொழியால் தகுவன விளம்பித்
தலையளித் தருளும்அப் பொழுதில்
ஓங்கெயில் புடைசூழ் மதுரைதோன் றுதலும்
உயர்தவத் தொண்டரை நோக்கி
ஈங்குநம் பெருமான் திருவால வாய்மற்
றெம்மருங் கினதென வினவ.
661

அன்பராய் அவர்முன் பணிந்தசீ ரடியார்
அண்ணலார் அடியிணை வணங்கி
முன்புநின் றெடுத்த கைகளாற் காட்டி
முருகலர் சோலைகள் சூழ்ந்து
மின்பொலி விசும்பை அளக்குநீள் கொடிசூழ்
வியனெடுங் கோபுரந் தோன்றும்
என்பணி அணிவார் இனிதமர்ந் தருளுந்
திருவால வாய்இது வென்றார்.
662

தொண்டர்தாம் போற்றிக் காட்டிடக் கண்டு
துணைமலர்க் கரங்குவித் தருளி
மண்டுபே ரன்பால் மண்மிசைப் பணிந்து
மங்கையர்க் கரசிஎன் றெடுத்தே
எண்டிசை பரவும் ஆலவாய் ஆவ
திதுவேஎன் றிருவர்தம் பணியும்
கொண்டமை சிறப்பித் தருளிநற் பதிகம்
பாடினார் குவலயம் போற்ற.
663

பாடிய பதிகம் பரவியே வந்து
பண்புடை யடியவ ரோடுந்
தேடுமால் அயனுக் கரியவர் மகிழ்ந்த
திருவால வாய்மருங் கணைந்து
நீடுயர் செல்வக் கோபுரம் இறைஞ்சி
நிறைபெரு விருப்புடன் புக்கு
மாடுசூழ் வலங்கொண் டுடையவர் கோயில்
மந்திரி யாருடன் புகுந்தார்.
664

ஆளும் அங்கணர் ஆலவாய்
அமர்ந்தினி திருந்த
காள கண்டரைக் கண்களின்
பயன்பெறக் கண்டு
நீள வந்தெழும் அன்பினால்
பணிந்தெழ நிறையார்
மீள வும்பல முறைநில
முறவிழுந் தெழுவார்.
665
Go to top

அங்கம் எட்டினும் ஐந்தினும்
அளவின்றி வணங்கிப்
பொங்கு காதலின் மெய்ம்மயிர்ப்
புளகமும் பொழியும்
செங்கண் நீர்தரும் அருவியுந்
திகழ்திரு மேனி
எங்கு மாகிநின் றேத்தினார்
புகலியர் இறைவர்.
666

நீல மாமிடற் றாலவா
யான்என நிலவும்
மூல மாகிய திருவிருக்
குக்குறள் மொழிந்து
சீல மாதவத் திருத்தொண்டர்
தம்மொடும் திளைத்தார்
சாலு மேன்மையில் தலைச்சங்கப்
புலவனார் தம்முன்.
667

சேர்த்தும் இன்னிசைப் பதிகமுந்
திருக்கடைக் காப்புச்
சார்த்தி நல்லிசைத் தண்தமிழ்ச்
சொல்மலர் மாலை
பேர்த்தும் இன்புறப் பாடிவெண்
பிறையணி சென்னி
மூர்த்தி யார்கழல் பரவியே
திருமுன்றில் அணைய.
668

பிள்ளையார் எழுந் தருளிமுன்
புகுதும்அப் பொழுது
வெள்ள நீர்பொதி வேணியார்
தமைத்தொழும் விருப்பால்
உள்ள ணைந்திட எதிர்செலா
தொருமருங் கொதுங்கும்
தெள்ளு நீர்விழித் தெரிவையார்
சென்றுமுன் பெய்த.
669

மருங்கின் மந்திரி யார்பிள்ளை
யார்கழல் வணங்கிக்
கருங்கு ழற்கற்றை மேற்குவி
கைத்தளிர் உடையார்
பருங்கை யானைவாழ் வளவர்கோன்
பாவையார் என்னப்
பெருங்க ளிப்புடன் விரைந்தெதிர்
பிள்ளையார் அணைந்தார்.
670
Go to top

தென்ன வன்பெருந் தேவியார்
சிவக்கன்றின் செய்ய
பொன்ன டிக்கம லங்களிற்
பொருந்தமுன் வீழ்ந்தார்
மன்னு சண்பையர் வள்ளலார்
மகிழ்சிறந் தளிக்கும்
இன்ன ருட்பெருஞ் சிறப்பொடுந்
திருக்கையால் எடுத்தார்.
671

ஞான போனகர் எதிர்தொழு
தெழுந்தநற் றவத்து
மானி யார்மனக் கருத்துமுற்
றியதென மதித்தே
பான லங்கண்கள் நீர்மல்கப்
பவளவாய் குழறி
யானும் என்பதி யுஞ்செய்த
தவமென்கொல் என்றார்.
672

யாழின் மென்மொழி யார்மொழிந்
தெதிர்கழல் வணங்கக்
காழி வாழவந் தருளிய
கவுணியர் பிரானும்
சூழு மாகிய பரசம
யத்திடைத் தொண்டு
வாழு நீர்மையீர் உமைக்காண
வந்தனம் என்றார்.
673

இன்ன வாறருள் செய்திடத்
தொழுதடி வீழ்ந்தார்
மன்னு மந்திரி யார்வரு
திறமெலாம் மொழிய
அன்ன மென்னடை யார்தமக்
கருள்செய்து போக்கித்
துன்னு மெய்த்தொண்டர் சூழவந்
தருளும்அப் பொழுது.
674

செல்வம் மல்கியதிரு வால
வாயினிற் பணிசெய்
தல்கு தொண்டர்கள் பிள்ளையார்
மருங்கணைந் திறைஞ்சி
மல்கு கார்அமண் இருள்கெட
ஈங்குவந் தருள
எல்லை யில்தவஞ் செய்தனம்
எனஎடுத் திசைத்தார்.
675
Go to top

அத்தி ருத்தொண்டர் தங்களுக்
கருள்முகம் அளித்து
மெய்த்த காதலின் அவரொடும்
புறத்தினில் மேவிச்
சித்தம் இன்புறும் அமைச்சனார்
திருமடம் காட்டப்
பத்தர் போற்றிடப் பரிசனத்
தொடும்இனி தமர்ந்தார்.
676

பரவு காதலில் பாண்டிமா
தேவியார் அருளால்
விரவு நண்பொடு குலச்சிறை
யார்விருந் தளிப்பச்
சிரபு ரத்துவந் தருளிய
செல்வர்அங் கிருந்தார்
இரவி மேற்கடல் அணைந்தனன்
எல்லிவந் தணைய.
677

வழுதி மாநகர் அதனிடை
மாமறைத் தலைவர்
பழுதில் சீரடி யாருடன்
பகல்வரக் கண்ட
கழுது போல்வருங் காரமண்
குண்டர்கள் கலங்கி
இழுது மையிருட் கிருளென
ஈண்டினர் ஒருபால்.
678

அங்கண் மேவிய சமணர்கள்
பிள்ளையார் அமர்ந்த
துங்க மாமடந் தன்னிடைத்
தொண்டர்தங் குழாங்கள்
எங்கும் ஓதிய திருப்பதி
கத்திசை எடுத்த
பொங்கு பேரொலி செவிப்புலம்
புக்கிடப் பொறாராய்.
679

மற்றிவ் வான்பழி மன்னவன்
மாறனை எய்திச்
சொற்றும் என்றுதம் சூழ்ச்சியும்
ஒருபடி துணிவார்
கொற்ற வன்கடை காவலர்
முன்சென்று குறுகி
வெற்றி வேலவற்கு எங்களை
விளம்புவீர் என்றார்.
680
Go to top

வாயில் காவலர் மன்னவன்
தனைஎதிர் வணங்கி
ஆய மாகிவந் தடிகள்மார்
அணைந்தனர் என்ன
ஏயி னான்அணை வாரென
அவருஞ்சென் றிசைத்தார்
பாயி னால்உடல் மூடுவார்
பதைப்புடன் புக்கார்.
681

புக்க போதவர் அழிவுறு
மனத்திடைப் புலர்ச்சி
மிக்க தன்மையை வேந்தனும்
கண்டெதிர் வினவி
ஒக்க நீர்திரண் டணைவதற்
குற்றதென் என்னத்
தக்க தல்லதீங் கடுத்தது
சாற்றுதற் கென்றார்.
682

ஆவ தேல்நுமக் கடுத்தது
கூறுவீர் என்று
காவ லன்பரிந் துரைத்தலும்
கார்அமண் கையர்
மாவ லாய்உன்றன் மதுரையிற்
சைவவே தியர்தாம்
மேவ லால்இன்று கண்டுமுட்
டியாமென்று விளம்ப.
683

என்று கூறலும் கேட்டுமுட்
டியானும்என் றியம்பி
நன்று நல்லறம் புரிந்தவா
நானென்று நகுவான்
கன்றும் உள்ளத்த னாகிஅக்
கண்ணுதல் அடியார்
இன்றுஇம் மாநகர் அணைந்ததென்
அவர்கள்யார் என்றான்.
684

மாலை வெண்குடை வளவர்சோ
ணாட்டுவண் புகலிச்
சூல பாணிபால் ஞானம்பெற்
றானென்று சுருதிப்
பாலன் அன்பர்தங் குழாத்தொடும்
பனிமுத்தின் சிவிகை
மேல ணைந்தனன் எங்களை
வாதினில் வெல்ல.
685
Go to top

என்று கூறுவார் இத்திற
முன்புதா மறிந்த
தொன்றும் அங்கொழி யாவகை
உரைத்தலும் தென்னன்
மன்ற லம்பொழிற் சண்பையார்
வள்ளலார் நாமம்
சென்று தன்செவி நிறைத்தலும்
செயிர்த்துமுன் சொல்வான்.
686

மற்ற மாமறை மைந்தன்இம்
மருங்கணைந் தானேல்
உற்ற செய்தொழில் யாதுசெய்
கோம்என உரைப்பச்
செற்ற மீக்கொண்ட சிந்தையும்
செய்கையும் உடையோர்
கொற்ற மன்னவன் மொழிக்கெதிர்
குறித்துரை செய்வார்.
687

வந்த அந்தணன் தன்னைநாம்
வலிசெய்து போக்கும்
சிந்தை யன்றிஅச் சிறுமறை
யோனுறை மடத்தில்
வெந்த ழற்பட விஞ்சைமந்
திரத்தொழில் விளைத்தால்
இந்த மாநகர் இடத்திரான்
ஏகும்என் றிசைத்தார்.
688

ஆவதொன் றிதுவே யாகில்
அதனையே விரைந்து செய்யப்
போவதென் றவரைப் போக்கிப்
பொய்ப்பொரு ளாகக்கொண்டான்
யாவது உரையா டாதே
எண்ணத்திற் கவலை யோடும்
பூவணை அமளி புக்கான்
பொங்கெழில் தேவி சேர்ந்தாள்.
689

மன்னவன் உரைப்ப தின்றி
இருக்கமா தேவி யார்தாம்
என்னுயிர்க் குயிராய் உள்ள
இறைவநீ உற்ற தென்னோ
முன்னுள மகிழ்ச்சி இன்றி
முகம்புலர்ந் திருந்தாய் இன்று
பன்னிய உள்ளத் தெய்தும்
பருவரல் அருள்செய் என்றார்.
690
Go to top

தேவியார் தம்மை நோக்கித்
தென்னவன் கூறு கின்றான்
காவிநீள் கண்ணி னாய்கேள்
காவிரி நாட்டின் மன்னும்
தாவில்சீர்க் கழும லத்தான்
சங்கர னருள்பெற் றிங்கு
மேவினான் அடிகள் மாரை
வாதினில் வெல்ல என்று.
691

வெண்பொடி பூசுந் தொண்டர்
விரவினார் அவரை யெல்லாம்
கண்டுமுட் டடிகள் மார்கள்
கேட்டுமுட் டியானுங் காதல்
வண்டுணத் துதைந்த கோதை
மானியே இங்கு வந்த
பண்புமற் றிதுவே யாகும்
பரிசுவே றில்லை என்றான்.
692

மன்னவன் உரைப்பக் கேட்டு
மங்கையர்க் கரசி யார்தாம்
நின்னிலை யிதுவே யாகில்
நீடிய தெய்வத் தன்மை
அன்னவர் வாது செய்தால்
வென்றவர் பக்கஞ் சேர்ந்து
துன்னுவ துறுதி யாகும்
சுழிவுறேல் மன்ன என்றார்.
693

சிந்தையிற் களிப்பு மிக்குத்
திருக்கழு மலத்தார் வேந்தன்
வந்தவா றெம்மை யாள
எனவரு மகிழ்ச்சி யோடும்
கொந்தலர் குழலார் போதக்
குலச்சிறை யார்அங் கெய்த
இந்தநன் மாற்றம் எல்லாம்
அவர்க்குரைத் திருந்த பின்னர்.
694

கொற்றவன் அமைச்ச னாரும்
கைதலை குவித்து நின்று
பெற்றனம் பிள்ளை யாரிங்
கணைந்திடப் பெறும்பே றென்பார்
இற்றைநாள் ஈசன் அன்பர்
தம்மைநாம் இறைஞ்சப் பெற்றோம்
மற்றினிச் சமணர் செய்யும்
வஞ்சனை அறியோம் என்றார்.
695
Go to top

மானியார் தாமும் அஞ்சி
வஞ்சகப் புலையர் தாங்கள்
ஈனமே புரிய வல்லார்
செய்வதென் நாம்என் றெண்ணி
ஞானசம் பந்தர் தம்பால்
நன்மையல் லாத செய்ய
ஊனம்வந் தடையில் யாமும்
உயிர்துறந் தொழிவ தென்றார்.
696

இவர்நிலை இதுவே யாக
இலங்குவேல் தென்ன னான
அவன்நிலை யதுவாம் அந்நாள்
அருகர்தம் நிலையா தென்னில்
தவமறைந் தல்ல செய்வார்
தங்கள்மந் திரத்தால் செந்தீ
சிவநெறி வளர்க்க வந்தார்
திருமடஞ் சேரச் செய்தார்.
697

ஆதி மந்திரம் அஞ்செழுத்
தோதுவார் நோக்கும்
மாதி ரத்தினும் மற்றைமந்
திரவிதி வருமே
பூதி சாதனர் மடத்தில்தாம்
புனைந்தசா தனைகள்
சாதி யாவகை கண்டமண்
குண்டர்கள் தளர்ந்தார்.
698

தளர்ந்து மற்றவர் தாஞ்செய்த
தீத்தொழில் சரியக்
கிளர்ந்த அச்சம்முன் கெழுமிய
கீழ்மையோர் கூடி
விளங்கு நீள்முடி வேந்தன்
ஈதறியின்நம் மேன்மை
உளங்கொ ளான்நமர் விருத்தியும்
ஒழிக்குமென் றுணர்வார்.
699

மந்தி ரச்செயல் வாய்த்தில
மற்றினிச் செய்யும்
புந்தி யாவதிங் கிதுஎனப்
பொதிதழல் கொடுபுக்
கந்தண் மாதவர் திருமடப்
புறத்தயல் இருள்போல்
வந்து தந்தொழில் புரிந்தனர்
வஞ்சனை மனத்தோர்.
700
Go to top

திரும டப்புறச் சுற்றினில்
தீயபா தகத்தோர்
மருவு வித்தஅத் தொழில்வெளிப்
படுதலும் மறுகிப்
பரிச னத்தவர் பதைப்பொடும்
சிதைத்தது நீக்கி
அருகர் இத்திறம் புரிந்தமை
தெளிந்துசென் றணைவார்.
701

கழும லப்பதிக் கவுணியர்
கற்பகக் கன்றைத்
தொழுது நின்றமண் குண்டர்செய்
தீங்கினைச் சொன்ன
பொழுது மாதவர் துயிலும்இத்
திருமடப் புறம்பு
பழுது செய்வதோ பாவிகாள்
எனப்பரிந் தருளி.
702

என்பொ ருட்டவர் செய்ததீங்
காயினும் இறையோன்
அன்ப ருக்கெய்து மோஎன்று
பின்னையும் அச்சம்
முன்பு றப்பின்பு முனிவுற
முத்தமிழ் விரகர்
மன்பு ரக்குமெய்ம் முறைவழு
எனமனங் கொண்டார்.
703

வெய்ய தீங்கிது வேந்தன்மேற்
றெனும்விதி முறையால்
செய்ய னேதிரு வாலவாய்
எனுந்திருப் பதிகம்
சைவர் வாழ்மடத் தமணர்கள்
இட்டதீத் தழல்போய்ப்
பைய வேசென்று பாண்டியற்
காகெனப் பணித்தார்.
704

பாண்டிமா தேவியார் தமது பொற்பிற்
பயிலுநெடு மங்கலநாண் பாது காத்தும்
ஆண்தகையார் குலச்சிறையார் அன்பி னாலும்
அரசன்பால் அபராதம் உறுத லாலும்
மீண்டுசிவ நெறியடையும் விதியினாலும்
வெண்ணீறு வெப்பகலப் புகலி வேந்தர்
தீண்டியிடப் பேறுடைய னாத லாலும்
தீப்பிணியைப் பையவே செல்க என்றார்.
705
Go to top

திருந்தி சைப்பதி கத்தொடை
திருவால வாயில்
மருந்தி னைச்சண்பை மன்னவர்
புனைந்திட அருளால்
விரிந்த வெந்தழல் வெம்மைபோய்த்
தென்னனை மேவிப்
பெருந்த ழற்பொதி வெதுப்பெனப்
பெயர்பெற்ற தன்றே.
706

செய்ய மேனியர் திருமக
னார்உறை மடத்தில்
நையும் உள்ளத்த ராய்அமண்
கையர்தாம் நணுகிக்
கையி னால்எரி இடவுடன்
படும்எல்லி கரப்ப
வெய்ய வன்குண கடலிடை
எழுந்தனன் மீது.
707

இரவு பாதகர் செய்ததீங்
கிரவிதன் மரபில்
குரவ ஓதியார் குலச்சிறை
யாருடன் கேட்டுச்
சிரபு ரப்பிள்ளை யாரைஇத்
தீயவர் நாட்டு
வரவ ழைத்தநாம் மாய்வதே
எனமனம் மயங்கி.
708

பெருகும் அச்சமோ டாருயிர்
பதைப்பவர் பின்பு
திரும டப்புற மருங்குதீ
தின்மையில் தெளிந்து
கருமு ருட்டமண் கையர்செய்
தீங்கிது கடைக்கால்
வருவ தெப்படி யாமென
மனங்கொளும் பொழுது.
709

அரச னுக்குவெப் படுத்ததென்
றருகுகஞ் சுகிகள்
உரைசெ யப்பதைத் தொருதனித்
தேவியார் புகுத
விரைவும் அச்சமும் மேற்கொளக்
குலச்சிறை யாரும்
வரைசெய் பொற்புய மன்னவன்
மருங்குவந் தணைந்தார்.
710
Go to top

வேந்த னுக்குமெய் விதிர்ப்புற
வெதுப்புறு வெம்மை
காந்து வெந்தழற் கதுமென
மெய்யெலாங் கவர்ந்து
போந்து மாளிகைப் புறத்துநின்
றார்களும் புலர்ந்து
தீந்து போம்படி எழுந்தது
விழுந்துடல் திரங்க.
711

உணர்வும் ஆவியும் ஒழிவதற்
கொருபுடை ஒதுங்க
அணையல் உற்றவர் அருகுதூ
ரத்திடை அகலப்
புணர்இ ளங்கத லிக்குருத்
தொடுதளிர் புடையே
கொணரி னுஞ்சுருக் கொண்டவை
நுண்துக ளாக.
712

மருத்து நூலவர் தங்கள்பல்
கலைகளில் வகுத்த
திருத்த குந்தொழில் யாவையும்
செய்யவும் மேன்மேல்
உருத்தெ ழுந்தவெப் புயிரையும்
உருக்குவ தாகக்
கருத்தொ ழிந்துரை மறந்தனன்
கௌரியர் தலைவன்.
713

ஆன வன்பிணி நிகழ்வுழி
அமணர்க ளெல்லாம்
மீன வன்செயல் கேட்டலும்
வெய்துயிர்த் தழிந்து
போன கங்குலிற் புகுந்ததின்
விளைவுகொல் என்பார்
மானம் முன்தெரி யாவகை
மன்னன்மாட் டணைந்தார்.
714

மால்பெருக்குஞ் சமண்கையர் மருங்கு சூழ்ந்து
வழுதிநிலை கண்டழிந்து வந்த நோயின்
மூலநெறி அறியாதே தங்கள் தெய்வ
மொழிநவில்மந் திரங்கொண்டு முன்னும் பின்னும்
பீலிகொடு தைவருதற் கெடுத்த போது
பிடித்தபீ லிகள்பிரம்பி னோடுந் தீந்து
மேலெரியும் பொறிசிதறி வீழக் கண்டு
வெப்பினதி சயம்நோக்கி வெருவின் மிக்கார்.
715
Go to top

கருகியமா சுடையாக்கைத் தீயோர் தங்கள்
கைத்தூங்கு குண்டிகைநீர் தெளித்துக் காவாய்
அருகனே அருகனே என்றென் றோதி
அடல்வழுதி மேல்தெளிக்க அந்நீர் பொங்கிப்
பெருகும்எரி தழற்சொரிந்த நெய்போ லாகிப்
பேர்த்துமொரு தழல்அதன்மேற் பெய்தாற் போல
ஒருவரும்இங் கிருமருங்கும் இராது போமென்
றமணரைப்பார்த் துரைத்தரசன் உணர்வு சோர்ந்தான்.
716

பாண்டிமா தேவி யாரும்
பயமெய்தி அமைச்சர் பாரம்
பூண்டவர் தம்மை நோக்கிப்
புகலியில் வந்து நம்மை
ஆண்டுகொண் டவர்பாற் கங்குல்
அமணர்தாம் செய்த தீங்கு
மூண்டவா றினைய தாகி
முடிந்ததோ என்று கூற.
717

கொற்றவன் அமைச்ச னாராம்
குலச்சிறை யாருந் தாழ்ந்து
மற்றிதன் கொடுமை இந்த
வஞ்சகர் மதில்கள் மூன்றும்
செற்றவர் அன்பர் தம்பாற்
செய்ததீங் கரசன் பாங்கு
முற்றிய திவர்கள் தீர்க்கின்
முதிர்வதே யாவ தென்பார்.
718

இருதிறத் தவரும் மன்னன்
எதிர்பணிந்து இந்த வெப்பு
வருதிறம் புகலி வந்த
வள்ளலார் மதுரை நண்ண
அருகர்கள் செய்த தீய
அநுசித மதனால் வந்து
பெருகிய திதற்குத் தீர்வு
பிள்ளையார் அருளே என்று.
719

காயமும் மனமும் மாசு
கழுவுதல் செய்யார் செய்யும்
மாயமும் இந்த நோயை
வளர்ப்பதே வளர்வெண் திங்கள்
மேயவே ணியர்பால் ஞானம்
பெற்றவர் விரும்பி நோக்கில்
தீயஇப் பிணியே அன்றிப்
பிறவியுந் தீரு மென்றார்.
720
Go to top

மீனவன் செவியி னூடு
மெய்யுணர் வளிப்போர் கூற
ஞானசம் பந்த ரென்னும்
நாமமந் திரமுஞ் செல்ல
ஆனபோ தயர்வு தன்னை
அகன்றிட அமண ராகும்
மானமில் லவரைப் பார்த்து
மாற்றமொன் றுரைக்க லுற்றான்.
721

மன்னவன் அவரை நோக்கி
மற்றிவர் செய்கை எல்லாம்
இன்னவா றெய்தும் நோய்க்கே
ஏதுவா யினஎன் றெண்ணி
மன்னிய சைவ நீதி
மாமறைச் சிறுவர் வந்தால்
அன்னவர் அருளால் இந்நோய்
அகலுமேல் அறிவேன் என்றான்.
722

என்றுமுன் கூறிப் பின்னும்
யானுற்ற பிணியைத் தீர்த்து
வென்றவர் பக்கம் சேர்வன்
விரகுண்டேல் அழையும் என்ன
அன்றவர் உவகை பொங்கி
ஆர்வத்தால் அணையை நூக்கிச்
சென்றநீர் வெள்ளம் போலுங்
காதல்வெள் ளத்தில் செல்வார்
723

பாயுடைப் பாத கத்தோர்
திருமடப் பாங்கு செய்த
தீவினைத் தொழிலை நோக்கி
உள்ளழி திருவுள் ளத்தால்
மேயஅத் துயரம் நீங்க
விருப்புறு விரைவி னோடு
நாயகப் பிள்ளை யார்தம்
நற்பதம் பணிவா ராகி.
724

மன்னவன் இடும்பை தீர
மற்றவன் பணிமேற் கொண்டே
அன்னமென் டையி னாரும்
அணிமணிச் சிவிகை யேறி
மின்னிடை மடவார் சூழ
வேற்படை அமைச்ச னாரும்
முன்னணைந் தேகச் சண்பை
முதல்வனார் மடத்தைச் சார்ந்தார்.
725
Go to top

திருமடஞ் சாரச் சென்று
சேயரிக் கண்ணி னார்முன்
வருபரி இழிந்து நின்ற
அமைச்சனார் வந்த பான்மை
சிரபுரப் பிள்ளை யார்க்கு
விண்ணப்பஞ் செய்வீர் என்னப்
பரிசனத் தவரும் புக்குப்
பதமறிந் துணர்த்து கின்றார்.
726

பாண்டிமா தேவி யாரும்
பரிவுடை அமைச்ச னாரும்
ஈண்டுவந் தணைந்தா ரென்று
விண்ணப்பஞ் செய்யச் சண்பை
ஆண்டகை யாரும் ஈண்ட
அழையுமென் றருளிச் செய்ய
மீண்டுபோந் தழைக்கப் புக்கார்
விரைவுறு விருப்பின் மிக்கார்.
727

ஞானத்தின் திருவுருவை
நான்மறையின் தனித்துணையை
வானத்தின் மிசையன்றி
மண்ணில்வளர் மதிக்கொழுந்தைத்
தேனக்கமலர்க் கொன்றைச்
செஞ்சடையார் சீர்தொடுக்கும்
கானத்தின் எழுபிறப்பைக்
கண்களிப்பக் கண்டார்கள்.
728

கண்டபொழு தமண்கொடியோர்
செய்தகடுந் தொழில்நினைந்தே
மண்டியகண் ணருவிநீர்
பாயமலர்க் கைகுவித்துப்
புண்டரிகச் சேவடிக்கீழ்ப்
பொருந்தநில முறவிழுந்தார்
கொண்டகுறிப் போடுநெடி
துயிர்த்தழிந்த கொள்கையராய்.
729

உரைகுழறி மெய்ந்நடுங்கி
ஒன்றும்அறிந் திலராகித்
தரையின்மிசைப் புரண்டயர்ந்து
சரணகம லம்பற்றிக்
கரையில்கவ லைக்கடற்கோர்
கரைபற்றி னார்போன்று
விரைவுறுமெய் அன்பினால்
விடாதொழிவார் தமைக்கண்டு.
730
Go to top

அருமறைவாழ் பூம்புகலி
அண்ணலார் அடிபூண்ட
இருவரையுந் திருக்கையால்
எடுத்தருளித் தேற்றிடவும்
தெருமந்து தெளியாதார்
தமைநோக்கிச் சிறப்பருளித்
திருவுடையீர் உங்கள்பால்
தீங்குளதோ எனவினவ.
731

வெஞ்சமணர் முன்செய்த
வஞ்சனைக்கு மிகஅழிந்தே
அஞ்சினோம் திருமேனிக்
கடாதென்றே அதுதீர்ந்தோம்
வஞ்சகர்மற் றவர்செய்த
தீத்தொழில்போய் மன்னவன்பால்
எஞ்சலிலாக் கொடுவெதுப்பாய்
எழாநின்ற தெனத்தொழுது.
732

வெய்யதொழில் அமண்குண்டர்
விளைக்கவரும் வெதுப்பவர்தாஞ்
செய்யுமதி மாயைகளால்
தீராமைத் தீப்பிணியால்
மையலுறு மன்னவன்முன்
மற்றவரை வென்றருளில்
உய்யும்எம துயிரும் அவன்
உயிருமென உரைத்தார்கள்.
733

என்றவர் உரைத்த போதில்
எழில்கொள்பூம் புகலி வேந்தர்
ஒன்றும்நீர் அஞ்ச வேண்டா
உணர்விலா அமணர் தம்மை
இன்றுநீர் உவகை எய்த
யாவருங் காண வாதில்
வென்றுமீ னவனை வெண்ணீ
றணிவிப்பன் விதியால் என்றார்.
734

மொழிந்தருள அதுகேட்டு
முன்னிறைஞ்சி முகமலர்வார்
அழுந்தும்இடர்க் கடலிடைநின்
றடியோமை எடுத்தருளச்
செழுந்தரளச் சிவிகையின்மேல்
தென்னாடு செய்தவத்தால்
எழுந்தருளப் பேறுடையோம்
என்பெறோம் எனத்தொழலும்.
735
Go to top

ஆவதும் அழிவும் எல்லாம்
அவர்செயல் அமண ராகும்
பாவகா ரிகளை நோக்கும்
பழுதுடன் நீங்க வெல்லச்
சேவுயர் கொடியி னார்தந்
திருவுள்ளம் அறிவே னென்று
பூவலர் பொழில்சூழ் சண்பைப்
புரவலர் போது கின்றார்.
736

வையகம் உய்ய வந்த
வள்ளலார் மடத்தி னின்று
மெய்யணி நீற்றுத் தொண்டர்
வெள்ளமும் தாமும் போந்து
கையிணை தலையின் மீது
குவியக்கண் மலர்ச்சி காட்டச்
செய்யவார் சடையார் மன்னும்
திருவால வாயுள் புக்கார்.
737

நோக்கிட விதியி லாரை
நோக்கியான் வாது செய்யத்
தீக்கனல் மேனி யானே
திருவுள மேஎன் றெண்ணில்
பாக்கியப் பயனாய் உள்ள
பாலறா வாயர் மெய்ம்மை
நோக்கிவண் டமிழ்செய் மாலைப்
பதிகந்தான் நுவல லுற்றார்.
738

கானிடை ஆடு வாரைக்
காட்டுமா வுரிமுன் பாடித்
தேனலர் கொன்றை யார்தம்
திருவுளம் நோக்கிப் பின்னும்
ஊனமில் வேத வேள்வி
என்றெடுத் துரையின் மாலை
மானமில் அமணர் தம்மை
வாதில்வென் றழிக்கப் பாடி.
739

ஆலமே அமுத மாக
உண்டுவா னவர்க்க ளித்துக்
காலனை மார்க்கண் டர்க்காக்
காய்ந்தனை அடியேற் கின்று
ஞாலம்நின் புகழே யாக
வேண்டும்நான் மறைக ளேத்துஞ்
சீலமே ஆல வாயில்
சிவபெரு மானே என்றார்.
740
Go to top

நாதர்தம் அருள்முன் பெற்று
நாடிய மகிழ்ச்சி பொங்கப்
போதுவார் பணிந்து போற்றி
விடைகொண்டு புனித நீற்று
மேதகு கோலத் தோடும்
விருப்புறு தொண்டர் சூழ
மூதெயில் கபாடம் நீடு
முதல்திரு வாயில் சார்ந்தார்.
741

அம்மலர்க் குழலி னார்க்கும்
அமைச்சர்க்கும் அருள வேண்டிச்
செம்மணிப் பலகை முத்தின்
சிவிகைமேற் கொண்ட போதில்
எம்மருங் கினிலும் தொண்டர்
எடுத்தஆர்ப் பெல்லை இன்றி
மும்மைநீ டுலக மெல்லாம்
முழுதுடன் நிறைந்த தன்றே.
742

பல்லிய நாதம் பொங்கப்
படர்திரு நீற்றின் சோதி
நல்லொளி வட்ட மாகி
நண்ணிமேல் வருவ தென்ன
வில்வளர் தரளக் கோவை
வெண்குடை நிழற்றி வெவ்வே
றெல்லையில் முத்தின் காளம்
தாரைசங் கெங்கும் ஊத.
743

கண்ணினுக் கணியாய் உள்ளார்
எழுச்சியிற் காட்சி பெற்றார்
நண்ணிய சமயம் வேறு
நம்பினர் எனினும் முன்பு
பண்ணிய தவங்கள் என்கொல்
பஞ்சவன் தஞ்சம் மேவிப்
புண்ணிய மூர்த்தி வந்து
மதுரையில் புகுத என்றார்.
744

தென்னவன் தேவி யாரும்
திருமணிச் சிவிகை மீது
பின்வர அமைச்சர் முன்பு
பெருந்தொண்டர் குழாத்துச் செல்லப்
பொன்னணி மாட வீதி
யூடெழுந் தருளிப் புக்கார்
கன்னிநா டுடையான் கோயில்
காழிநா டுடைய பிள்ளை.
745
Go to top

கொற்றவன் தன்பால் முன்பு
குலச்சிறை யார்வந் தெய்திப்
பொற்றட மதில்சூழ் சண்பைப்
புரவலர் வரவு கூற
முற்றுயர் சிறிது நீங்கி
முழுமணி அணிப்பொற் பீடம்
மற்றவன் முடியின் பக்கத்
திடுகென வல்ல னானான்.
746

மந்திரி யாரைப் பின்னும்
எதிர்செல மன்னன் ஏவச்
சிந்தையுள் மகிழ்ந்து போந்தார்
செயலையான் சமயத் துள்ளோர்
பைந்துணர் அலங்கல் மன்னன்
பரிசுகண் டிதுவோ பண்பால்
நந்தனிச் சமயந் தன்னை
நாட்டுமா றென்று பின்னும்.
747

நின்அற நெறியை நீயே
காத்தருள் செய்தி யாகில்
அன்னவர் தம்மை இங்கே
அழைத்தனை அவரும் யாமும்
முன்னுற ஒக்கத் தீர்க்க
மொழிந்துமற் றவரால் தீர்ந்த
தென்னினும் யாமும் தீர்த்தோ
மாகவும் இசைவா யென்றார்.
748

பொய்தவ மாகக் கொண்ட
புன்தலைச் சமணர் கூறச்
செய்தவப் பயன்வந் தெய்தும்
செவ்விமுன் னுறுத லாலே
எய்திய தெய்வச் சார்வால்
இருதிறத் தீருந் தீரும்
கைதவம் பேச மாட்டேன்
என்றுகை தவனுஞ் சொன்னான்.
749

என்றவன் உரைப்பக் குண்டர்
எண்ணங்கெட் டிருந்த எல்லைத்
தென்தமிழ் நாடு செய்த
செய்தவக் கொழுந்து போல்வார்
வன்தனிப் பவனம் முன்னர்
வாயிலுள் அணைந்து மாடு
பொன்திகழ் தரளப் பத்திச்
சிவிகைநின் றிழிந்து புக்கார்.
750
Go to top

குலச்சிறை யார்முன் பெய்தக்
கொற்றவன் தேவி யாரும்
தலத்திடை இழிந்து சென்றார்
தண்டமிழ் நாட்டு மன்னன்
நிலத்திடை வானி னின்று
நீளிருள் நீங்க வந்த
கலைச்செழுந் திங்கள் போலும்
கவுணியர் தம்மைக் கண்டான்.
751

கண்டஅப் பொழுதே வேந்தன்
கையெடுத் தெய்த நோக்கித்
தண்துணர் முடியின் பாங்கர்த்
தமனியப் பீடங் காட்ட
வண்டமிழ் விரகர் மேவி
அதன்மிசை இருந்தார் மாயை
கொண்டவல் லமணர் எல்லாம்
குறிப்பினுள் அச்சங் கொண்டார்.
752

செழியனும் பிள்ளை யார்தம்
திருமேனி காணப் பெற்று
விழியுற நோக்க லாலே
வெம்மைநோய் சிறிது நீங்கி
அழிவுறும் மனம் நேர்நிற்க
அந்தணர் வாழ்வை நோக்கிக்
கெழுவுறு பதியா தென்று
விருப்புடன் கேட்ட போது.
753

பொன்னிவளந் தருநாட்டுப்
புனற்பழனப் புறம்பணைசூழ்
கன்னிமதிற் கழுமலம்நாம்
கருதுமூர் எனச்சிறந்த
பன்னிரண்டு பெயர்பற்றும்
பரவியசொல் திருப்பதிகம்
தென்னவன்முன் பருள்செய்தார்
திருஞான சம்பந்தர்.
754

பிள்ளையார் செம்பொன்மணிப்
பீடத்தில் இருந்தபொழு
துள்ளநிறை பொறாமையினால்
உழையிருந்த காரமணர்
கொள்ளுமனத் திடையச்சம்
மறைத்துமுகங் கோபத்தீத்
துள்ளியெழும் அனற்கண்கள்
சிவந்துபல சொல்லுவார்.
755
Go to top

காலையெழுங் கதிரவனைப்
புடைசூழுங் கருமுகில்போல்
பீலிசேர் சமண்கையர்
பிள்ளையார் தமைச்சூழ்வார்
ஏலவே வாதினால்
வெல்வதனுக் கெண்ணித்தாம்
கோலுநூ லெடுத்தோதித்
தலைதிமிர்ப்பக் குரைத்தார்கள்.
756

பிள்ளையார் அதுகேளாப்
பேசுகநும் பொருளெல்லை
உள்ளவா றென்றருள
ஊத்தைவாய்ப் பறிதலையர்
துள்ளிஎழுந் தநேகராய்ச்
சூழ்ந்துபத றிக்கதற
ஒள்ளிழையார் அதுகண்டு
பொறாராகி உள்நடுங்கி.
757

தென்னவன் தன்னை நோக்கித்
திருமேனி எளியர் போலும்
இன்னருட் பிள்ளை யார்மற்
றிவர் எண்ணி லார்கள்
மன்னநின் மயக்க மெங்கள்
வள்ளலார் தீர நல்கும்
பின்னையிவ் வமணர் மூள்வார்
வல்லரேல் பேச என்றார்.
758

மாறனும் அவரை நோக்கி
வருந்தல்நீ என்று மற்று
வேறுவா தென்கொல் என்மேல்
வெப்பொழித் தருகர் நீரும்
ஆறணி சடையி னாருக்
கன்பராம் இவரும் நீங்கள்
தேறிய தெய்வத் தன்மை
என்னிடைத் தெரிப்பீர் என்றான்.
759

ஞானஆ ரமுத முண்டார்
நற்றவத் திருவை நோக்கி
மானினேர் விழியி னாய்கேள்
மற்றெனைப் பால னென்று
நீநனி அஞ்சவேண்டா
நிலையிலா அமணர்க் கென்றும்
யான்எளி யேன லேன்என்
றெழுந்திருப் பதிகம் பாடி.
760
Go to top

பெற்றியால் அருளிச் செய்த
பிள்ளையார் தமக்கும் முன்னம்
சுற்றுநின் றழைத்தல் ஓவா
அருகர்க்கும் தென்னர் கோமான்
இற்றைநாள் என்னை உற்ற
பிணியைநீர் இகலித் தீரும்
தெற்றெனத் தீர்த்தார் வாதில்
வென்றனர் என்று செப்ப.
761

மன்னவன் மாற்றங் கேட்டு
வடிவுபோல் மனத்து மாசு
துன்னிய அமணர் தென்னர்
தோன்றலை நோக்கி நாங்கள்
உன்னுடம்பு அதனில் வெப்பை
ஒருபுடை வாம பாகம்
முன்னம்மந் திரித்துத் தெய்வ
முயற்சியால் தீர்த்து மென்றார்.
762

யாதும்ஒன் றறிவி லாதார்
இருளென அணையச் சென்று
வாதினில் மன்ன வன்தன்
வாமபா கத்தைத் தீர்ப்பார்
மீதுதம் பீலி கொண்டு
தடவிட மேன்மேல் வெப்புத்
தீதுறப் பொறாது மன்னன்
சிரபுரத் தவரைப் பார்த்தான்.
763

தென்னவன் நோக்கங் கண்டு
திருக்கழு மலத்தார் செல்வர்
அன்னவன் வலப்பால் வெப்பை
ஆலவாய் அண்ணல் நீறே
மன்னும்மந் திரமு மாகி
மருந்துமாய்த் தீர்ப்ப தென்று
பன்னிய மறைக ளேத்திப்
பகர்திருப் பதிகம் பாடி.
764

திருவளர் நீறு கொண்டு
திருக்கையால் தடவத் தென்னன்
பொருவரு வெப்பு நீங்கிப்
பொய்கையிற் குளிர்ந்த தப்பால்
மருவிய இடப்பால் மிக்க
அழலெழ மண்டு தீப்போல்
இருபுடை வெப்புங் கூடி
இடங்கொளா தென்னப் பொங்க.
765
Go to top

உறியுடைக் கையர் பாயின்
உடுக்கையர் நடுக்க மெய்திச்
செறிமயிற் பீலி தீயத்
தென்னன்வெப் புறுதீத் தம்மை
எறியமா சுடலுங் கன்றி
அருகுவிட் டேற நிற்பார்
அறிவுடை யாரை ஒத்தார்
அறிவிலா நெறியில் நின்றார்.
766

பலர்தொழும் புகலி மன்னர்
ஒருபுடை வெப்பைப் பாற்ற
மலர்தலை யுலகின் மிக்கார்
வந்ததி சயித்துச் சூழ
இலகுவேல் தென்னன் மேனி
வலமிடம் எய்தி நீடும்
உலகினில் தண்மை வெம்மை
ஒதுங்கினால் ஒத்த தன்றே.
767

மன்னவன் மொழிவான் என்னே
மதித்தஇக் காலம் ஒன்றில்
வெந்நர கொருபா லாகும்
வீட்டின்பம் ஒருபா லாகும்
துன்னுநஞ் சொருபா லாகும்
சுவையமு தொருபா லாகும்
என்வடி வொன்றி லுற்றேன்
இருதிறத் தியல்பும் என்பான்.
768

வெந்தொழில் அருகர் தோற்றீர்
என்னைவிட் டகல நீங்கும்
வந்தெனை உய்யக் கொண்ட
மறைக்குல வள்ள லாரே
இந்தவெப்பு அடைய நீங்க
எனக்கருள் புரிவீ ரென்று
சிந்தையால் தொழுது சொன்னான்
செல்கதிக் கணிய னானான்.
769

திருமுகங் கருணை காட்டத்
திருக்கையால் நீறு காட்டிப்
பெருமறை துதிக்கு மாற்றால்
பிள்ளையார் போற்றிப் பின்னும்
ஒருமுறை தடவ அங்கண்
ஒழிந்துவெப் பகன்று பாகம்
மருவுதீப் பிணியும் நீங்கி வழுதியும்
முழுதும் உய்ந்தான்.
770
Go to top

கொற்றவன் தேவி யாரும்
குலச்சிறை யாரும் தீங்கு
செற்றவர் செய்ய பாதத்
தாமரை சென்னி சேர்த்துப்
பெற்றனம் பெருமை யின்று
பிறந்தனம் பிறவா மேன்மை
உற்றனன் மன்னன் என்றே
உளங்களித் துவகை மிக்கார்.
771

மீனவன் தன்மேல் உள்ள
வெப்பெலாம் உடனே மாற
ஆனபே ரின்ப மெய்தி
உச்சிமே லங்கை கூப்பி
மானமொன் றில்லார் முன்பு
வன்பிணி நீக்க வந்த
ஞானசம் பந்தர் பாதம்
நண்ணிநான் உய்ந்தேன் என்றான்.
772

கந்துசீறு மாலியானை
மீனவன் கருத்துநேர்
வந்துவாய்மை கூறமற்று
மாசுமேனி நீசர்தாம்
முந்தைமந் திரத்துவிஞ்சை
முற்றம்எஞ்ச அஞ்சியே
சிந்தைசெய்து கைவருந்
திறந்தெரிந்து தேடுவார்.
773

சைவமைந்தர் சொல்லின்வென்றி
சந்தஇன்சொல் மாலையால்
கைதவன்தன் வெப்பொழித்த
தன்மைகண் டறிந்தனம்
மெய்தெரிந்த தர்க்கவாதம்
வெல்லல்ஆவ தன்றுவே
றெய்துதீயின் நீரில்வெல்வ
தென்றுதம்மில் எண்ணினார்.
774

பிள்ளையாரும் உங்கள்வாய்மை
பேசுமின்கள் என்றலும்
தள்ளுநீர்மை யார்கள்வேறு
தர்க்கவாதி னுத்தரம்
கொள்ளும் வென்றிஅன்றியே
குறித்தகொள்கை உண்மைதான்
உள்ளவாறு கட்புலத்தில்
உய்ப்பதென்ன ஒட்டினார்.
775
Go to top

என்றுவாது கூறலும்
இருந்ததென்னர் மன்னனும்
கன்றிஎன் உடம்பொடுங்க
வெப்புநோய் கவர்ந்தபோ
தொன்றும்அங் கொழித்திலீர்கள்
என்னவா துமக்குஎனச்
சென்றுபின்னும் முன்னும்நின்று
சில்லிவாயர் சொல்லுவார்.
776

என்னவாது செய்வதென்
றுரைத்ததே வினாவெனாச்
சொன்னவா சகந்தொடங்கி
ஏடுகொண்டு சூழ்ச்சியால்
மன்னுதம் பொருட்கருத்தின்
வாய்மைதீட்டி மாட்டினால்
வெந்நெருப்பின் வேவுறாமை
வெற்றியாவ தென்றனர்.
777

என்றபோது மன்னன்ஒன்
றியம்புமுன்பு பிள்ளையார்
நன்றுநீ ருரைத்தவாறு
நாடுதீயி லேடுதான்
வென்றிடிற் பொருட்கருத்து
மெய்ம்மையாவ தென்றிரேல்
வன்றனிக்கை யானைமன்னன்
முன்புவம்மின் என்றனர்.
778

அப்ப டிக்கெதிர் அமணரும்
அணைந்துறும் அளவில்
ஒப்பில் வண்புகழ்ச் சண்பையர்
காவலர் உரையால்
செப்ப ருந்திறல் மன்னனும்
திருந்தவை முன்னர்
வெப்பு றுந்தழல் அமைக்கென
வினைஞரை விடுத்தான்.
779

ஏய மாந்தரும் இந்தனங்
குறைத்துடன் அடுக்கித்
தீய மைத்தலும் சிகைவிடு
புகைஒழிந்து எழுந்து
காயும் வெவ்வழற் கடவுளும்
படரொளி காட்ட
ஆயும் முத்தமிழ் விரகரும்
அணையவந் தருளி.
780
Go to top

செங்கண் ஏற்றவ ரேபொருள்
என்றுதாம் தெரித்த
பொங்கி சைத்திருப் பதிகநன்
முறையினைப் போற்றி
எங்கள் நாதனே பரம்பொருள்
எனத்தொழு தெடுத்தே
அங்கை யால்முடி மிசைக்கொண்டு
காப்புநாண் அவிழ்த்தார்.
781

சாற்று மெய்ப்பொருள் தருந்திரு
முறையினைத் தாமே
நீற்று வண்கையால் மறித்தலும்
வந்துநேர்ந் துளதால்
நாற்ற டம்புயத் தண்ணலார்
மருவுநள் ளாறு
போற்றும் அப்பதிகம் போக
மார்த்தபூண் முலையாள்.
782

அத்தி ருப்பதி கத்தினை
அமர்ந்துகொண் டருளி
மைத்த வெங்கடு மிடற்றுநள்
ளாறரை வணங்கி
மெய்த்த நற்றிரு ஏட்டினைக்
கழற்றிமெய்ம் மகிழ்ந்து
கைத்த லத்திடைக் கொண்டனர்
கவுணியர் தலைவர்.
783

நன்மை உய்க்கும்மெய்ப் பதிகத்தின்
நாதனென் றெடுத்தும்
என்னை ஆளுடை ஈசன்தன்
நாமமே என்றும்
மன்னும் மெய்ப்பொரு ளாமெனக்
காட்டிட வன்னி
தன்னி லாகெனத் தளிரிள
வளரொளி பாடி.
784

செய்ய தாமரை அகவித
ழினும்மிகச் சிவந்த
கையி லேட்டினைக் கைதவன்
பேரவை காண
வெய்ய தீயினில் வெற்றரை
யவர்சிந்தை வேவ
வையம் உய்ந்திட வந்தவர்
மகிழ்ந்துமுன் னிட்டார்.
785
Go to top

இட்ட ஏட்டினில் எழுதிய
செந்தமிழ்ப் பதிகம்
மட்டு லாங்குழல் வனமுலை
மலைமகள் பாகத்
தட்டமூர்த்தியைப் பொருளென
உடைமையால் அமர்ந்து
பட்ட தீயிடைப் பச்சையாய்
விளங்கிய தன்றே.
786

மையல் நெஞ்சுடை அமணரும்
தம்பொருள் வரைந்த
கையில் ஏட்டினைக் கதுவுசெந்
தீயினில் இடுவார்
உய்யு மோஇது வெனஉறும்
கவலையாம் உணர்வால்
நையும் நெஞ்சின ராகியே
நடுங்கிநின் றிட்டார்.
787

அஞ்சும் உள்ளத்த ராகியும்
அறிவிலா அமணர்
வெஞ்சு டர்ப்பெருந் தீயினில்
விழுத்திய ஏடு
பஞ்சு தீயிடைப் பட்டது
படக்கண்டு பயத்தால்
நெஞ்சு சோரவும் பீலிகை
சோர்ந்திலர் நின்றார்.
788

மான மன்னவன் அவையின்முன்
வளர்த்தசெந் தீயின்
ஞானம் உண்டவர் இட்டஏ
டிசைத்தநா ழிகையில்
ஈனம் இன்மைகண் டியாவரும்
வியப்புற எடுத்தார்
பான்மை முன்னையிற் பசுமையும்
புதுமையும் பயப்ப.
789

எடுத்த ஏட்டினை அவையின்
முன் காட்டிஅம் முறையில்
அடுத்த வண்ணமே கோத்தலும்
அதிசயித் தரசன்
தொடுத்த பீலிமுன் தூக்கிய
கையரை நோக்கிக்
கடுத்து நீரிட்ட ஏட்டினைக்
காட்டுமின் என்றான்.
790
Go to top

அருகர்தாம் இட்ட ஏடு
வாங்கச்சென் றணையும் போதில்
பெருகுதீக் கதுவ வெந்து
போந்தமை கண்ட மன்னன்
தருபுனல் கொண்டு செந்தீத்
தணிப்பித்தான் சமணர் அங்குக்
கருகிய சாம்ப ரோடும்
கரியலால் மற்றென் காண்பார்.
791

செய்வதொன் றறிகி லாதார்
திகைப்பினால் திரண்ட சாம்பல்
கையினாற் பிசைந்து தூற்றிப்
பார்ப்பது கண்ட மன்னன்
எய்திய நகையி னோடும்
ஏடின்னம் அரித்துக் காணும்
பொய்யினால் மெய்யை யாக்கப்
புகுந்தநீர் போமின் என்றான்.
792

வெப்பெனுந் தீயில் யான்முன்
வீடுபெற் றுய்ய நீங்கள்
அப்பொழுது அழிந்து தோற்றீர்
ஆதலால் அதுஆ றாக
இப்பொழு தெரியில் இட்ட
ஏடுய்ந்த தில்லை என்றால்
துப்புர வுடையீர் நீங்கள்
தோற்றிலீர் போலு மென்றான்.
793

தென்னவன் நகையுட் கொண்டு
செப்பிய மாற்றந் தேரார்
சொன்னது பயனாக் கொண்டு
சொல்லுவார் தொடர்ந்த வாது
முன்னுற இருகாற் செய்தோம்
முக்காலில் ஒருகால் வெற்றி
என்னினும் உடையோம் மெய்ம்மை
இனியொன்று காண்ப தென்றார்.
794

தோற்கவும் ஆசை நீங்காத்
துணிவிலார் சொல்லக் கேட்டிம்
மாற்றமென் னாவ தென்று
மன்னவன் மறுத்த பின்னும்
நீற்றணி விளங்கு மேனி
நிறைபுகழ்ச் சண்பை மன்னர்
வேற்றுவா தினியென் செய்வ
தென்றலும் மேற்கோள் ஏற்பார்.
795
Go to top

நீடுமெய்ப் பொருளின் உண்மை
நிலைபெறுந் தன்மை எல்லாம்
ஏடுற எழுதி மற்றவ்
வேட்டினை யாமும் நீரும்
ஓடுநீர் ஆற்றில் இட்டால்
ஒழுகுதல் செய்யா தங்கு
நாடிமுன் தங்கும் ஏடு
நற்பொருள் பரிப்ப தென்றார்.
796

என்றமண் கையர் கூற
ஏறுசீர்ப் புகலி வேந்தர்
நன்றது செய்வோம் என்றங்
கருள்செய நணுக வந்து
வென்றிவேல் அமைச்ச னார்தாம்
வேறினிச் செய்யும் இவ்வா
தொன்றினுந்தோற்றார் செய்வ
தொட்டியே செய்வ தென்றார்.
797

அங்கது கேட்டு நின்ற
அமணரும் அவர்மேற் சென்று
பொங்கிய வெகுளி கூரப்
பொறாமைகா ரணமே யாகத்
தங்கள்வாய் சோர்ந்து தாமே
தனிவாதில் அழிந்தோ மாகில்
வெங்கழு ஏற்று வான்இவ்
வேந்தனே யென்று சொன்னார்.
798

மற்றவர் சொன்ன வார்த்தை
கேட்டலும் மலய மன்னன்
செற்றத்தால் உரைத்தீர் உங்கள்
செய்கையும் மறந்தீ ரென்று
பற்றிய பொருளின் ஏடு
படர்புனல் வைகை யாற்றில்
பொற்புற விடுவ தற்குப்
போதுக என்று கூற.
799

பிள்ளையார் முன்னம் பைம்பொற்
பீடத்தின் இழிந்து போந்து
தெள்ளுநீர்த் தரளப் பத்திச்
சிவிகைமே லேறிச் சென்றார்
வள்ளலார் அவர்தம் பின்பு
மன்னன்மா ஏறிச் சென்றான்
உள்ளவாறு உணர்கி லாதார்
உணர்வுமால் ஏறிச் சென்றார்.
800
Go to top

தென்னவன் வெப்புத் தீர்ந்து
செழுமணிக் கோயில் நீங்கிப்
பின்னுற அணைந்த போது
பிள்ளையார் பெருகுஞ் செல்வம்
மன்னிய மதுரை மூதூர்
மறுகில்வந் தருளக் கண்டு
துன்னிய மாதர் மைந்தர்
தொழுதுவே றினைய சொன்னார்.
801

மீனவன் கொண்ட வெப்பை
நீக்கிநம் விழுமந் தீர்த்த
ஞானசம் பந்தர் இந்த
நாயனார் காணும் என்பார்
பானறுங் குதலைச் செய்ய
பவளவாய்ப் பிள்ளை யார்தாம்
மானசீர்த் தென்னன் நாடு
வாழவந் தணைந்தார் என்பார்.
802

எரியிடை வாதில் தோற்ற
திவர்க்குநம் அருகர் என்பார்
புரிசடை அண்ணல் நீறே
பொருளெனக் கண்டோம் என்பார்
பெருகொளி முத்தின் பைம்பொற்
803

ஏதமே விளைந்த திந்த
அடிகள்மார் இயல்பா லென்பார்
நாதனும் ஆல வாயில்
நம்பனே காணு மென்பார்
போதமா வதுவும் முக்கட்
புராணனை அறிவ தென்பார்
வேதமும் நீறு மாகி
விரவிடும் எங்கும் என்பார்.
804

அடிகள்மார் முகங்கள் எல்லாம்
அழிந்தன பாரீர் என்பார்
கொடியவஞ் சனைகள் எல்லாம்
குலைந்தன போலும் என்பார்
வடிகொள்வேல் மாறன் காதல்
மாறின வண்ணம் என்பார்
விடிவதாய் முடிந்த திந்த
வெஞ்சமண் இருளும் என்பார்.
805
Go to top

நெருப்பினில் தோற்றார் தாங்கள்
நீரில்வெல் வர்களோ என்பார்
இருப்புநெஞ் சுடைய ரேனும்
பிள்ளையார்க் கெதிரோ என்பார்
பருப்பொரு ளுணர்ந்தார் தாங்கள்
படுவன பாரீர் என்பார்
மருப்புடைக் கழுக்கோல் செய்தார்
மந்திரி யார்தா மென்பார்.
806

ஏடுகள் வைகை தன்னில்
இடுவதற் கணைந்தார் என்பார்
ஓடுநீ ருடன்செ லாது
நிற்குமோ ஓலை என்பார்
நீடிய ஞானம் பெற்றார்
நிறுத்தவும் வல்லர் என்பார்
நாடெலாங் காண இங்கு
நண்ணுவர் காணீர் என்பார்.
807

தோற்றவர் கழுவி லேறத்
துணிவதே அருகர் என்பார்
ஆற்றிய அருளின் மேன்மைப்
பிள்ளையார்க்கு அழகி தென்பார்
நீற்றினால் தென்னன் தீங்கு
நீங்கிய வண்ணங் கண்டார்
போற்றுவா ரெல்லாஞ் சைவ
நெறியினைப் போற்று மென்பார்.
808

இன்னன இரண்டு பாலும்
ஈண்டினர் எடுத்துச் சொல்ல
மின்னொளி மணிப்பொற் காம்பின்
வெண்குடை மீது போதப்
பன்மணிச் சிவிகை தன்மேற்
பஞ்சவ னாட்டு ளோர்க்கு
நன்னெறி காட்ட வந்தார்
நான்மறை வாழ வந்தார்.
809

தென்றமிழ் விளங்க வந்த
திருக்கழு மலத்தான் வந்தான்
மன்றுளார் அளித்த ஞான
வட்டில்வண் கையன் வந்தான்
வென்றுல குய்ய மீள
வைகையில் வெல்வான் வந்தான்
என்றுபன் மணிச்சின் னங்கள்
எண்டிசை நெருங்கி ஓங்க.
810
Go to top

பன்மணி முரசம் சூழ்ந்த
பல்லியம் இயம்பப் பின்னே
தென்னனும் தேவி யாரும்
உடன்செலத் திரண்டு செல்லும்
புன்னெறி அமணர் வேறோர்
புடைவரப் புகலி வேந்தர்
மன்னிய வைகை யாற்றின்
கரைமிசை மருவ வந்தார்.
811

கார்கெழு பருவம் வாய்ப்பக்
காமுறு மகளிர் உள்ளம்
சீர்கெழு கணவன் தன்பால்
விரைவுறச் செல்லு மாபோல்
நீர்கெழு பௌவம் நோக்கி
நிரைதிரை இரைத்துச் செல்லும்
பார்கெழு புகழின் மிக்க
பண்புடை வைகை யாறு.
812

ஆற்றில்நீர் கடுக வோடும்
மருங்குற அரசன் நோக்கி
நீற்றணி திகழ்ந்த மேனி
நிறைமதிப் பிள்ளை யாரும்
வேற்றுரு அருகர் நீரும்
விதித்தஏ டிடுக என்றான்
தோற்றவர் தோலா ரென்று
முன்னுறத் துணிந்திட் டார்கள்.
813

படுபொரு ளின்றி நெல்லிற்
பதடிபோல் உள்ளி லார்மெய்
அடுபவர் பொருளை அத்தி
நாத்திஎன் றெழுதி ஆற்றில்
கடுகிய புனலைக் கண்டும்
அவாவினாற் கையிலேடு
விடுதலும் விரைந்து கொண்டு
வேலைமேற் படர்ந்த தன்றே.
814

ஆறுகொண் டோடும் ஏட்டைத்
தொடர்ந்தெதி ரணைப்பார் போலத்
தேறுமெய் யுணர்வி லாதார்
கரைமிசை ஓடிச் சென்றார்
பாறுமப் பொருள்மேற் கொண்ட
பட்டிகை எட்டா தங்கு
நூறுவிற் கிடைக்கு முன்னே
போனது நோக்கிக் காணார்.
815
Go to top

காணவும் எய்தா வண்ணம்
கடலின்மேற் செல்லும் ஏடு
நாணிலா அமணர் தம்மை
நட்டாற்றில் விட்டுப் போகச்
சேணிடைச் சென்று நின்றார்
சிதறினார் திகைத்தார் மன்னன்
ஆணையில் வழுவ மாட்டாது
அஞ்சுவார் அணைய மீண்டார்.
816

வேறொரு செயலி லாதார்
வெருவுற்று நடுங்கித் தம்பால்
ஈறுவந் தெய்திற் றென்றே
மன்னவன் எதிர்வந் தெய்தி
ஊறுடை நெஞ்சில் அச்சம்
வெளிப்பட வொளிப்பார் போன்று
மாறுகொண்ட வரும் இட்டால்
வந்தது காண்டும் என்றார்.
817

மாசுசேர் அமணர் எல்லாம்
மதியினில் மயங்கிக் கூற
ஆசிலா நெறியிற் சேர்ந்த
அரசனும் அவரை விட்டுத்
தேசுடைப் பிள்ளை யார்தந்
திருக்குறிப் பதனை நோக்கப்
பாசுரம் பாட லுற்றார்
பரசம யங்கள் பாற.
818

தென்னவன் மாறன் தானுஞ்
சிவபுரத் தலைவர் தீண்டிப்
பொன்னவில் கொன்றை யார்தந்
திருநீறு பூசப் பெற்று
முன்னைவல் வினையும் நீங்கி
முதல்வனை யறியுந் தன்மை
துன்னினான் வினைக ளொத்துத்
துலையென நிற்ற லாலே.
819

உலகியல் வேதநூல் ஒழுக்கம் என்பதும்
நிலவுமெய்ந் நெறிசிவ நெறிய தென்பதும்
கலதிவாய் அமணர்காண் கிலார்க ளாயினும்
பலர்புகழ் தென்னவன் அறியும் பான்மையால்.
820
Go to top

அந்தணர் தேவர்ஆ னினங்கள் வாழ்கஎன்
றிந்தமெய்ம் மொழிப்பயன் உலகம் இன்புறச்
சந்தவேள் விகள்முதல் சங்க ரர்க்குமுன்
வந்தஅர்ச் சனைவழி பாடு மன்னவாம்.
821

வேள்வி நற்பயன் வீழ்புன லாவது
நாளு மர்ச்சனை நல்லுறுப் பாதலால்
ஆளும் மன்னனை வாழ்த்திய தர்ச்சனை
மூளும் மற்றிவை காக்கு முறைமையால்.
822

ஆழ்க தீயதென் றோதிற் றயல்நெறி
வீழ்க என்றது வேறெல்லாம் அரன்பெயர்
சூழ்க என்றது தொல்லுயிர் யாவையும்
வாழி அஞ்செழுத் தோதி வளர்கவே.
823

சொன்ன வையக முந்துயர் தீர்கவே
என்னும் நீர்மை இகபரத் தில்துயர்
மன்னி வாழுல கத்தவர் மாற்றிட
முன்னர் ஞானசம் பந்தர் மொழிந்தனர்.
824

அரிய காட்சியர் என்பதவ் வாதியைத்
தெரிய லாநிலை யால்தெரி யாரென
உரிய அன்பினிற் காண்பவர்க் குண்மையாம்
பெரிய நல்லடை யாளங்கள் பேசினார்.
825
Go to top

ஆயி னும்பெரி யாரவர் என்பது
மேய இவ்வியல் பேயன்றி விண்முதற்
பாய பூதங்கள் பல்லுயிர் அண்டங்கள்
ஏயும் யாவும் இவர்வடி வென்றதாம்.
826

பின்பும் ஆரறி வாரவர் பெற்றியே
என்ப தியாருணர் வானும்சென் றெட்டொணா
மன்பெ ருந்தன்மை யாரென வாழ்த்தினார்
அன்பு சூழ்சண்பை ஆண்டகை யாரவர்.
827

வெந்த சாம்பல் விரையென் பதுதம
தந்த மில்லொளி யல்லா வொளியெலாம்
வந்து வெந்தற மற்றப் பொடியணி
சந்த மாக்கொண்ட வண்ணமும் சாற்றினார்.
828

தமக்குத் தந்தையர் தாயிலர் என்பதும்
அமைத்திங் கியாவையும் ஆங்கவை வீந்தபோ
திமைத்த சோதி அடக்கிப்பின் ஈதலால்
எமக்கு நாதர் பிறப்பிலர் என்றதாம்.
829

தம்மையே சிந்தி யாவெனுந் தன்மைதான்
மெய்ம்மை யாகி விளங்கொளி தாமென
இம்மை யேநினை வார்தம் இருவினைப்
பொய்ம்மை வல்லிருள் போக்குவர் என்றதாம்.
830
Go to top

எந்தை யாரவர் எவ்வகை யார்கொலென்
றிந்த வாய்மைமற் றெப்பொருட் கூற்றினும்
முந்தை யோரைஎக் கூற்றின் மொழிவதென்
றந்தண் பூந்தராய் வேந்த ரருளினார்.
831

ஆதி ஆட்பா லவர்க்கரு ளுந்திறம்
நாதன் மாட்சிமை கேட்க நவிலுங்கால்
ஓது மெல்லை உலப்பில வாதலின்
யாதும் ஆராய்ச்சி இல்லையாம் என்றதாம்.
832

அன்ன ஆதலில் ஆதியார் தாளடைந்
தின்ன கேட்கவே ஏற்றகோட் பாலவும்
833

மன்னும் ஏதுக்க ளாலெனும் வாய்மைதான்
தன்ன தொப்புவே றின்மையில் சங்கரன்
இன்ன தன்மையை ஏது எடுத்துக்காட்
டன்ன வாற்றால் அளப்பில னென்றதாம்.
834

தோன்று காட்சி சுடர்விட் டுளன்என்ப
தான்ற அங்கிப் புறத்தொளி யாய்அன்பில்
ஊன்ற உள்ளெழும் சோதியாய் நின்றனன்
ஏன்று காண்பார்க் கிதுபொரு ளென்றதாம்.
835
Go to top

மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றும் என்ப
தாதிச் சுடர்ச்சோ தியைஅன்பி னகத்துள் ளாக்கிப்
போதித்த நோக்குற் றொழியாமற் பொருந்தி வாழ்ந்து
பேதித்த பந்தப் பிறப்பின் நெறி பேர்மின் என்றாம்.
836

ஈண்டுச் சாதுக்கள் என்றெடுத் தோதிற்று
வேண்டும் வேட்கைய வெல்லாம் விமலர்தாள்
பூண்ட அன்பினிற் போற்றுவீர் சார்மின்என்
றாண்ட சண்பை அரச ரருளினார்.
837

ஆடும் எனவருந் திருப்பாட்டில்
838

கருதுங் கடிசேர்ந்த எனுந்திருப் பாட்டில் ஈசர்
மருவும் பெரும்பூசை மறுத்தவர்க் கோறல் முத்தி
தருதன் மையதாதல் சண்டீசர் தஞ்செய்கை தக்கோர்
பெரிதுஞ் சொலக்கேட் டனம்என்றனர் பிள்ளை யார்தாம்.
839

வேத முதல்வன் எனும் மெய்த் திருப்பாட்டினில்நேர்
ஆதி உலகோர் இடர்நீங்கிட ஏத்த ஆடும்
பாத முதலாம் பதினெண் புராணங்கள் என்றே
ஓதென் றுரைசெய் தனர்யாவும் ஓதா துணர்ந்தார்.
840
Go to top

பாவுற்ற பாராழி வட்டத் திருப்பாட்டி னுண்மை
காவல் தொழிலான் எனும் கண்ணனும் காவல்பெற்ற
தியாவர்க்கு மேலாய ஈசன் அருள்ஆழி பெற்று
மேவுற்ற சீருற் றதுவென்றனர் வேத வாயர்.
841

மாலா யவன்என்ன வருந்திருப் பாட்டில் மாலுந்
தோலா மறைநான் முகனுந் தொடர்வாம் அமரர்
ஏலா வகைசுட்ட நஞ்சுண் டிறவாமை காத்த
மேலாங் கருணைத்திறம் வெங்குரு வேந்தர் வைத்தார்.
842

ஆனஅற் றன்றி என்ற அத்திருப் பாட்டில் கூடல்
மாநக ரத்துச் சங்கம் வைத்தவன் தேறத் தேறா
ஈனர்க ளெல்லைக் கிட்ட ஏடுநீர் எதிர்ந்து செல்லில்
ஞானம்ஈ சன்பால் அன்பே என்றனர் ஞானம் உண்டார்.
843

வெறியார் பொழிற்சண் பையர்வேந்தர்
மெய்ப்பா சுரத்தைக்
குறியே றியஎல்லை அறிந்துகும்
பிட்டேன் அல்லேன்
சிறியேன் அறிவுக்கவர் தந்திருப்
பாதந் தந்த
நெறியே சிறிதியான் அறிநீர்மைகும்
பிட்டேன் அன்பால்.
844

அலரும் விரைசூழ் பொழிற்காழியுள் ஆதி ஞானம்
மலருந் திருவாக் குடைவள்ளலார் உள்ள வண்ணம்
பலரும் உணர்ந் துய்யப்பகர்ந்து வரைந்தி யாற்றில்
நிலவுந் திருவேடு திருக்கையால் நீட்டி யிட்டார்.
845
Go to top

திருவுடைப் பிள்ளை யார்தந்
திருக்கையால் இட்ட ஏடு
மருவிய பிறவி யாற்றில்
மாதவர் மனஞ்சென் றாற்போல்
பொருபுனல் வைகை யாற்றில்
எதிர்ந்துநீர் கிழித்துப் போகும்
இருநிலத் தோர்கட் கெல்லாம்
இதுபொரு ளென்று காட்டி.
846

எம்பிரான் சிவனே எல்லாப்
பொருளும்என் றெழுதும் ஏட்டில்
தம்பிரா னருளால் வேந்தன்
தன்னைமுன் ஓங்கப் பாட
அம்புய மலராள் மார்பன்
அநபாயன் என்னுஞ் சீர்த்திச்
செம்பியன் செங்கோ லென்னத்
தென்னன்கூன்நிமிர்ந்த தன்றே.
847

ஏடுநீ ரெதிர்ந்து செல்லும்
பொழுதிமை யோர்கள் எல்லாம்
நீடிய வாழ்த்திற் போற்றி
நிறைந்தபூ மாரி தூர்த்தார்
ஆடியல் யானை மன்னன்
அற்புத மெய்தி நின்றான்
பாடுசேர் அமண ரஞ்சிப்
பதைப்புடன் பணிந்து நின்றார்.
848

ஆற்றின்மேற் செல்லும்ஏடு
தொடர்ந்தெடுப் பதற்கு வேண்டிக்
காற்றென விசையிற் செல்லும்
கடும்பரி ஏறிக் கொண்டு
கோற்றொழில் திருத்த வல்ல
குலச்சிறை யார்பின் சென்றார்
ஏற்றுயர் கொடியி னாரைப்
பாடினார் ஏடு தங்க.
849

ஏடகம் பிள்ளை யார்தாம்
வன்னிஎன் றெடுத்துப் பாடக்
கூடிய நீரில் ஏடு
குலச்சிறை யாருங் கூடிக்
காடிட மாக ஆடும்
கண்ணுதல் கோயில் மாடு
நீடுநீர் நடுவுட் புக்கு
நின்றஏ டெடுத்துக் கொண்டார்.
850
Go to top

தலைமிசை வைத்துக் கொண்டு
தாங்கரும் மகிழ்ச்சி பொங்க
அலைபுனற் கரையில் ஏறி
அங்கினி தமர்ந்த மேருச்
சிலையுடை யவர்தாள் போற்றி
மீண்டுசென் றணைவார் தெய்வ
மலைமகள் குழைத்த ஞானம்
உண்டவர் தம்பால் வந்தார்.
851

மற்றவர் பிள்ளை யார்தம்
மலரடி வணங்கிப் போற்றிக்
கொற்றவன் முதலா யுள்ளோர்
காணமுன் கொணர்ந்த ஏடு
பற்றிய கையி லேந்திப்
பண்பினால் யார்க்குங் காட்ட
அற்றருள் பெற்ற தொண்டர்
அரவொலி எழுந்த தன்றே.
852

மன்னவன் மாறன் கண்டு
மந்திரி யாரை நோக்கித்
துன்னிய வாதில் ஒட்டித்
தோற்றஇச் சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளை யார்பால்
அநுசிதம் முற்றச் செய்தார்
கொன்னுனைக் கழுவில் ஏற
முறைசெய்க என்று கூற.
853

புகலியில் வந்த ஞானப்
புங்கவர் அதனைக் கேட்டும்
இகலிலர் எனினும் சைவர்
இருந்துவாழ் மடத்தில் தீங்கு
தகவிலாச் சமணர் செய்த
தன்மையாற் சாலு மென்றே
மிகையிலா வேந்தன் செய்கை
விலக்கிடா திருந்தவேலை.
854

பண்புடை அமைச்ச னாரும்
பாருளோர் அறியு மாற்றால்
கண்புடை பட்டு நீண்ட
கழுத்தறி நிரையி லேற்ற
நண்புடை ஞானம் உண்டார்
மடத்துத்தீ நாடி யிட்ட
எண்பெருங் குன்றத் தெண்ணா
யிரவரும் ஏறி னார்கள்.
855
Go to top

தோற்றவர் கழுவில் ஏறித்
தோற்றிடத் தோற்றுந் தம்பம்
ஆற்றிடை அமணர் ஓலை
அழிவினால் ஆர்ந்த தம்பம்
வேற்றொரு தெய்வம் இன்மை
விளக்கிய பதாகைத் தம்பம்
போற்றுசீர்ப் பிள்ளை யார்தம்
புகழ்ச்சயத் தம்ப மாகும்.
856

தென்னவன் தனக்கு நீறு
சிரபுரச் செல்வர் ஈந்தார்
முன்னவன் பணிந்து வாங்கி
முழுவதும் அணிந்து நின்றான்
மன்னன்நீ றணிந்தான் என்று
மற்றவண் மதுரை வாழ்வார்
துன்னிநின் றார்கள் எல்லாம்
தூயநீ றணிந்து கொண்டார்.
857

பூதிமெய்க் கணிந்து வேந்தன்
புனிதனாய் உய்ந்த போது
நீதியும் வேத நீதி
யாகியே நிகழ்ந்த தெங்கும்
மேதினி புனித மாக
வெண்ணீற்றின் விரிந்த சோதி
மாதிரந் தூய்மை செய்ய
அமணிருள் மாய்ந்த தன்றே.
858

மீனவற் குயிரை நல்கி
மெய்ந்நெறி காட்டி மிக்க
ஊனமாஞ் சமணை நீக்கி
உலகெலாம் உய்யக் கொண்ட
ஞானசம் பந்தர் வாய்மை
ஞாலத்திற் பெருகி ஓங்கத்
தேனலர் கொன்றை யார்தந்
திருநெறி நடந்த தன்றே.
859

மறையவர் வேள்வி செய்ய
வானவர் மாரி நல்க
இறைவன் நன்னெறியின் ஓங்க
இகத்தினில் அவனி இன்பம்
குறைவில தெனினும் கூற்றை
உதைத்தவர் நாமம் கூறி
நிறைகடற் பிறவித் துன்பம்
நீங்கிடப் பெற்ற தன்றே.
860
Go to top

அங்கயற் கண்ணி தன்னோ
டாலவாய் அமர்ந்த அண்ணல்
பங்கயச் செய்ய பாதம்
பணிவன்என் றெழுந்து சென்று
பொங்கொளிச் சிவிகை ஏறிப்
புகலியர் வேந்தர் போந்தார்
மங்கையர்க் கரசி யாரும்
மன்னனும் போற்றி வந்தார்.
861

எண்ணரும் பெருமைத் தொண்டர்
யாவரும் மகிழ்ச்சி எய்திப்
புண்ணியப் பிள்ளை யாரைப்
புகழ்ந்துடன் போற்றிப் போத
மண்ணெலாம் உய்ய வந்த
வள்ளலார் தம்மைக் கண்டு
கண்ணினாற் பயன்கொண் டார்கள்
கன்னிநாட் டவர்க ளெல்லாம்.
862

ஆலவாய் அண்ணல் கோயில்
அங்கண்முன் தோன்றக் கண்டு
பாலறா வாயர் மிக்க
பண்பினால் தொழுது சென்று
மாலுநான் முகனும் போற்ற
மன்னினார் கோயில் வாயில்
சீலமா தவத்தோர் முன்பு
சிவிகைநின் றிழிந்து புக்கார்.
863

தென்னவன் தானும் எங்கள்
செம்பியன் மகளார் தாமும்
நன்னெறி அமைச்ச னாரும்
ஞானசம் பந்தர் செய்ய
பொன்னடிக் கமலம் போற்றி
உடன் புகப் புனிதர்கோயில்
தன்னைமுன் வலங்கொண் டுள்ளால்
சண்பையர் தலைவர் புக்கார்.
864

கைகளுந் தலைமீ தேறக்
கண்ணில்ஆ னந்த வெள்ளம்
மெய்யெலாம் பொழிய வேத
முதல்வரைப் பணிந்து போற்றி
ஐயனே அடிய னேனை
அஞ்சலென் றருள வல்ல
மெய்யனே என்று வீட
லாலவாய் விளம்ப லுற்றார்.
865
Go to top

ஒன்றுவே றுணர்வு மில்லேன்
ஒழிவற நிறைந்த கோலம்
மன்றிலான் மறைக ளேத்த
மானுடர் உய்ய வேண்டி
நின்றுநீ ஆடல் செய்கை
நினைப்பதே நியம மாகும்
என்றுபூம் புகலி மன்னர்
இன்தமிழ்ப் பதிகம் பாட.
866

தென்னவன் பணிந்து நின்று
திருவால வாயில் மேவும்
மன்னனே அமணர் தங்கள்
மாயையால் மயங்கி யாதும்
உன்னையான் அறிந்தி லேனை
உறுபிணி தீர்த்தாட் கொள்ள
இன்னருட் பிள்ளை யாரைத்
தந்தனை இறைவ என்றான்.
867

சீருடைப் பிள்ளை யாரும்
சிறப்புடை அடியா ரோடும்
காரினிற் பொலிந்த கண்டத்
திறைவர்தாள் வணங்கிக் காதல்
ஆரருள் பெற்றுப் போற்றி
அங்குநின் றரிது நீங்கி
ஏரியல் மடத்தின் உள்ளால்
இனிதெழுந் தருளிப் புக்கார்.
868

நீடுசீர்த் தென்னர் கோனும்
நேரியன் பாவை யாரும்
மாடுசென் றிறைஞ்சிநோக்கி
மாளிகை தன்னிற் போகக்
கூடிய மகிழ்ச்சி பொங்கக்
கும்பிடும் விருப்பி னாலே
நாடியங் கிருந்து தங்கள்
நாதரைப் பாட லுற்றார்.
869

திருஇய மகத்தி னுள்ளும்
திருநீல கண்டப் பாணர்க்
கருளிய திறமும் போற்றி
அவரொடும் அளவ ளாவித்
தெருளுடைத் தொண்டர் சூழத்
திருத்தொண்டின் உண்மை நோக்கி
இருள்கெட மண்ணில் வந்தார்
இனிதமர்ந் திருந்தா ரன்றே.
870
Go to top

பூழியன் மதுரை யுள்ளார்
புறத்துளார் அமணர் சேரும்
பாழியும் அருகர் மேவும்
பள்ளியு மான எல்லாம்
871

மீனவன் தேவி யாரும்
குலச்சிறை யாரும் மிக்க
ஞானசம் பந்தர் பாதம்
நாள்தொறும் பணிந்து போற்ற
ஆனசண் பையர்கோ னாரும்
ஆலவாய் அமர்ந்தார் பாதம்
ஊனமர்ந் துருக ஏத்தி
உளங்களித் துறையும் நாளில்.
872

செய்தவத்தாற் சிவபாத
இருதயர்தாம் பெற்றெடுத்த
வைதிகசூ ளாமணியை
மாதவத்தோர் பெருவாழ்வை
மைதிகழுந் திருமிடற்றார்
அருள்பெற்ற வான்பொருளை
எய்தியபூம் புகலியிலே
இருந்தநாள் மிகநினைந்தார்.
873

ஆனபுகழ்த் திருநாவுக்
கரசர்பால் அவஞ்செய்த
மானமிலா அமணருடன்
வாதுசெய்து வெல்வதற்கும்
மீனவன்தன் நாடுய்ய
வெண்ணீறு பெருக்குதற்கும்
போனவர்பாற் புகுந்தபடி
அறிவனெனப் புறப்படுவார்.
874

துடியிடையாள் தன்னோடும்
தோணியில் வீற்றிருந்தபிரான்
அடிவணங்கி அலர்சண்பை
அதனின்றும்வழிக்கொண்டு
படியின்மிசை மிக்குளவாம்
பரன்கோயில் பணிந்தேத்தி
வடிநெடுவேல் மீனவன்தன்
வளநாடு வந்தணைந்தார்.
875
Go to top

மாமறை யோர் வளம்பதிகள்
இடைத்தங்கி வழிச்செல்வார்
தேமருவு நறும்பைந்தார்த்
தென்னவன்தன் திருமதுரை
தாமணைந்து திருவால
வாயமர்ந்த தனிநாதன்
பூமருவுஞ் சேவடிக்கீழ்ப்
புக்கார்வத் தொடுபணிந்தார்.
876

அங்கணரைப் பணிந்துபோந்
தருகணைந்தார் தமைவினவ
இங்கெம்மைக் கண்விடுத்த
காழியார் இளவேறு
தங்குமிடம் திருநீற்றுத்
தொண்டர்குழாஞ் சாருமிடம்
செங்கமலத் திருமடம்மற்
றிதுவென்றே தெரிந்துரைத்தார்.
877

செப்புதலும் அதுகேட்டுத்
திருமடத்தைச் சென்றெய்த
அப்பர்எழுந் தருளினார்
எனக்கண்டோர் அடிவணங்கி
ஒப்பில்புகழ்ப் பிள்ளையார்
தமக்கோகை உரைசெய்ய
எப்பொழுது வந்தருளிற்
றென்றெதிரே எழுந்தருள.
878

சிவபாத இருதயர்தாம்
முன்தொழுது சென்றணையத்
தவமான நெறியணையுந்
தாதையார் எதிர்தொழுவார்
அவர் சார்வு கண்டருளித்
திருத்தோணி அமர்ந்தருளிப்
பவபாசம் அறுத்தவர்தம்
பாதங்கள் நினைவுற்றார்.
879

இருந்தவத்தோர் அவர்முன்னே
இணைமலர்க்கை குவித்தருளி
அருந்தவத்தீர் எனையறியாப்
பருவத்தே எடுத்தாண்ட
பெருந்தகையெம் பெருமாட்டி
உடனிருந்த தேயென்று
பொருந்துபுகழ்ப் புகலியின்மேல்
திருப்பதிகம் போற்றிசைத்தார்.
880
Go to top

மண்ணில்நல்ல என்றெடுத்து
மனத்தெழுந்த பெருமகிழ்ச்சி
உண்ணிறைந்த காதலினால்
கண்ணருவி பாய்ந்தொழுக
அண்ணலார் தமைவினவித்
திருப்பதிகம் அருள்செய்தார்
தண்ணறும்பூஞ் செங்கமலத்
தாரணிந்த தமிழ்விரகர்.
881

திருப்பதிகந் திருக்கடைக்காப்
புச்சாத்திச் சிறப்பின்மிகு
விருப்பினால் அவர்தமக்கு
அருப்புறுமெய்க் காதல்புரி
அடியவர்கள் தம்மோடும்
பொருப்புறுகைச் சிலையார்சேர்
பதிபிறவும் தொழப்போவார்.
882

ஆலின்கீழ் நால்வர்க்கன்
றறமுரைத்த அங்கணனை
நூலின்கட் பொருள்பாடி
நூலறிவார்க் கீந்தானைக்
காலம்பெற் றினிதிறைஞ்சிக்
கைதொழுது புறம்போந்தார்
சீலங்கொள் தென்னவனும்
தேவியரும் உடன்போத.
883

தேன்நிலவு பொழில் மதுரைப் புறத்துப் போந்த
தென்னவனார் தேவியார் அமைச்சர் சிந்தை
ஊன்நெகிழும் படியழிந்தங் கொழுகு கண்ணீர்
பாய்ந்திழிய உணர்வின்றி வீழக் கண்டே
யான்உம்மைப் பிரியாத வண்ணம் இந்நாட்
டிறைவர்பதி யெனைப்பலவும் பணிவீ ரென்று
ஞானமுணர் வார்அருள அவரும் போத
நம்பர்திருப் பரங்குன்றை நண்ணி னாரே.
884

ஆறணிந்தார் தமைவணங்கி அங்குப் போற்றி
அணிஆப்ப னூரணைந்து பணிந்து பாடி
நீறணிந்த செல்வர்பதி பிறவுஞ் சேர்ந்து
நிலவுதிருப் பதிகங்கள் நிகழப் பாடிச்
சேறணிந்த வயற்பழனக் கழனி சூழ்ந்த
சிரபுரத்து வந்தருளுஞ் செல்வர் செங்கண்
ஏறணிந்த வெல்கொடியார் திருப்புத் தூரை
எய்திஇறைஞ் சிச்சிலநாள்அங் கிருந்தா ரன்றே.
885
Go to top

பற்றார்தம் புறங்கள்மலைச் சிலையால் செற்ற
பரமனார் திருப்புத்தூர் பணிந்து போந்து
புற்றாரும் பணிபூண்ட புனித னார்தம்
பூவணத்தைப் புக்கிறைஞ்சிப் புகழ்ந்து பாடிக்
கற்றார்கள் தொழுதேத்துங் கானப் பேரும்
கைதொழுது தமிழ்பாடிச் சுழியல் போற்றிக்
குற்றாலங் குறும்பலாக் கும்பிட் டேத்திக்
கூற்றுதைத்தார் நெல்வேலி குறுகினாரே.
886

புண்ணியனார் நெல்வேலி பணிந்து போற்றிப்
புரிசடையார் திருப்பதிகள் பிறவும் சென்று
நண்ணியினி தமர்ந்தங்கு நயந்துபாடி
நற்றொண்ட ருடன்நாளும் போற்றிச் செல்வார்
விண்ணவரைச் செற்றுகந்தான் இலங்கை செற்ற
மிக்கபெரும் பாதகத்தை நீக்க வேண்டித்
திண்ணியபொற் சிலைத்தடக்கை இராமன் செய்த
திருவிரா மேச்சரத்தைச் சென்று சேர்ந்தார்.
887

செங்கண்மால் வழிபட்ட கோயில் நண்ணித்
திருமுன்பு தாழ்ந்தெழுந்து தென்ன னோடும்
மங்கையர்க்கு நாயகியார் தாமும் மெய்ம்மை
மந்திரியா ரும்சூழ மணிநீள் வாயில்
பொங்கியெழும் விருப்பினால் உடனே புக்குப்
புடைவலங்கொண் டுள்ளணைவார் போற்றி செய்து
பங்கயச் செங் கைகுவித்துப் பணிந்து நின்று
பாடினார் மன்னவனும் பரவி யேத்த.
888

சேதுவின்கண் செங்கண்மால் பூசை செய்த
சிவபெருமான் தனைப்பாடிப் பணிந்து போந்து
காதலுடன் அந்நகரில் இனிது மேவிக்
கண்ணுதலான் திருத்தொண்டர் ஆனார்க் கெல்லாம்
கோதில்புகழ்ப் பாண்டிமா தேவி யார்மெய்க்
குலச்சிறையார் குறைவறுத்துப் போற்றிச் செல்ல
நாதர்தமை நாள்தோறும் வணங்கி ஏத்தி
நளிர்வேலைக் கரையில்நயந் திருந்தா ரன்றே.
889

அந்நகரில் அமர்ந்தங்கண் இனிது மேவி
ஆழிபுடை சூழ்ந்தொலிக்கும் ஈழந் தன்னில்
மன்னுதிருக் கோணமலை மகிழ்ந்த செங்கண்
மழவிடையார் தமைப்போற்றி வணங்கிப் பாடிச்
சென்னிமதி புனைமாட மாதோட்டத்தில்
திருக்கேதீச் சரத்தண்ணல் செய்ய பாதம்
உன்னிமிகப் பணிந்தேத்தி அன்பரோடும்
உலவாத கிழிபெற்றார் உவகை யுற்றார்.
890
Go to top

அப்பதியைத் தொழுதுவட திசைமேற் செல்வார்
அங்கையனல் தரித்தபிரான் அமருங் கோயில்
புக்கிறைஞ்சிப் பலபதியும் தொழுது போற்றிப்
புணரிபொரு தலைகரைவாய் ஒழியப் போந்தே
செப்பரிய புகழ்த்திருவா டானை சேர்ந்து
செந்தமிழ்மா லைகள்சாத்திச் சிவனார் மன்னும்
ஒப்பரிய புனவாயில் போற்றி செய்து
வணங்கினார் உலகுய்ய ஞானம் உண்டார்.
891

பதிநிலவு பாண்டிநா டதனில் முக்கட்
பரமனார் மகிழ்விடங்கள் பலவும் போற்றி
விதிநிலவு வேதநூல் நெறியே ஆக்கி
வெண்ணீற்றின் சார்வினால் மிக்குயர்ந்த
கதியருளிக் காழிநகர் வாழவந்தார் கண்ணுதலான்
திருத்தொண்டர் பலருஞ் சூழ
மதிநிலவு குலவேந்தன் போற்றிச் செல்ல
மந்திரியார் பதிமணமேற் குடியில் வந்தார்.
892

அந்நகரில் இனிதமர்வார் அருகு சூழ்ந்த
பதிகளில்நீ டங்கணர்தங் கோயில் தாழ்ந்து
மன்னுதிருத் தொண்டருடன் மீண்டு சேர்ந்து
மன்னவனும் மங்கையருக் கரசி யாரும்
கொன்னவில்வேற் குலச்சிறையார் தாமுங் கூடிக்
குறைகழல்கள் பணிந்துகுறை கொண்டு போற்றச்
சென்னிவளர் மதியணிந்தார் பாதம் போற்றிச்
சிரபுரத்துச் செல்வர்இனி திருந்த நாளில்.
893

பொங்குபுனற் காவிரிநா டதனின் மீண்டு
போதுதற்குத் திருவுள்ள மாகப் பெற்று
மங்கையருக் கரசியார் தாமும் தென்னர்
மன்னவனும் மந்திரியார் தாமுங் கூட
அங்கவர்தந் திருப்பாதம் பிரிய லாற்றா
துடன்போக ஒருப்படும்அவ் வளவுநோக்கி
இங்குநான் மொழிந்ததனுக் கிசைந்தீ ராகில்
ஈசர்சிவ நெறிபோற்றி இருப்பீ ரென்று.
894

சாலமிகத் தளர்வாரைத் தளரா வண்ணம்
தகுவனமற் றவர்க்கருளிச் செய்த பின்பு
மேலவர்தம் பணிமறுக்க அவரும்அஞ்சி
மீள்வதனுக் கிசைந்துதிரு வடியில் வீழ்ந்து
ஞாலமுய்ய வந்தருளும் பிள்ளை யாரைப்
பிரியாத நண்பினொடும் தொழுது நின்றார்
ஆலவிட முண்டவரை அடிகள் போற்றி
அந்நாட்டை அகன்றுமீண் டணையச் செல்வார்.
895
Go to top

பொன்னிவளந் தருநாடு புகுந்து மிக்க
பொருவில்சீர்த் திருத்தொண்டர் குழாத்தி னோடும்
பன்னகப்பூ ணணிந்தவர்தங் கோயில் தோறும்
பத்தருடன் பதியுள்ளோர் போற்றச் சென்று
கன்னிமதில் திருக்களரும் போற்றிக் கண்டங்
கறையணிந்தார் பாதாளீச் சுரமும் பாடி
முன்னணைந்த பதிபிறவும் பணிந்து போற்றி
முள்ளிவாய்க் கரையணைந்தார் முந்நூல் மார்பர்.
896

மலைவளர்சந் தனம்அகிலும் தேக்கு முந்தி
மலர்ப்பிறங்கல் வண்டிரைப்பச் சுமந்து பொங்கி
அலைபெருகி ஆள்இயங்கா வண்ணம் ஆறு
பெருகுதலால் அத்துறையில் அணையும் ஓடம்
நிலைபுரியும் ஓடக்கோல் நிலையி லாமை
நீர்வாழ்நர் கரையின் கண் நிறுத்திப் போகக்
கலைபயிலுங் கவுணியர்கோன் அதனைக் கண்டக்
கரையின்கண் எழுந்தருளி நின்ற காலை.
897

தேவர்பிரான் அமர்ந்ததிருக் கொள்ளம் பூதூர்
எதிர்தோன்றத் திருவுள்ளம் பணியச் சென்று
மேவுதலால் ஓடங்கள் விடுவா ரின்றி
ஒழிந்திடவும் மிக்கதோர் விரைவால் சண்பைக்
காவலனார் ஓடத்தின் கட்ட விழ்த்துக்
கண்ணுதலான் திருத்தொண்டர் தம்மை ஏற்றி
நாவலமே கோலாக அதன்மே னின்று
நம்பர் தமைக் கொட்டமென நவின்று பாட.
898

உம்பருய்ய நஞ்சுண்டார் அருளால் ஓடம்
செலச்செல்ல உந்துதலால் ஊடு சென்று
செம்பொனேர் சடையார்தங் கொள்ளம் பூதூர்
தனைச்சேர அக்கரையிற் சேர்ந்த பின்பு
நம்பரவர் தமைவணங்க ஞான முண்ட
பிள்ளையார் நற்றொண்ட ருடனி ழிந்து
வம்பலரும் நறுங்கொன்றை நயந்தார் கோயில்
வாயிலின் முன் மகிழ்ச்சியொடு வந்து சார்ந்தார்.
899

நீள்நிலைக்கோ புரமதனை இறைஞ்சிப் புக்கு
நிகரிலாத் தொண்டருடன் நெருங்கச் சென்று
வாள்நிலவு கோயிலினை வலங்கொண் டெய்தி
மதிச்சடையார் திருமுன்பு வணங்கி நின்று
தாணுவே ஆற்றின்கண் ஓடம் உய்க்குந்
தன்மையால் அருள்தந்த தலைவா நாகப்
பூணினாய் களிற்றுரிவை போர்த்த முக்கட்
புனிதனே எனப்பணிந்து போற்றி செய்தார்.
900
Go to top

போற்றிசைத்துப் புறம்போந்தங் குறையும் நாளில்
பூழியன்முன் புன்சமயத் தமணர் தம்மோ
டேற்றபெரு வாதின்கண் எரியின் வேவாப்
பதிகமுடை இறையவரை இறைஞ்ச வேண்டி
ஆற்றவும்அங் கருள்பெற்றுப் போந்து முன்னம்
அணைந்தபதி களும்இறைஞ்சி அன்பர் சூழ
நாற்றிசையும் பரவுதிரு நள்ளா றெய்தி
நாடுடைநா யகர்கோயில் நண்ணினாரே.
901

நீடுதிருத் தொண்டர்புடை சூழ அங்கண்
நித்திலயா னத்திடைநின் றிழிந்து சென்று
பீடுடைய திருவாயில் பணிந்து புக்குப்
பிறையணிந்த சென்னியார் மன்னுங் கோயில்
மாடுவலங் கொண்டுள்ளால் மகிழ்ந்து புக்கு
மலர்க்கரங்கள் குவித்திறைஞ்சி வள்ள லாரைப்
பாடகமெல் லடியெடுத்துப் பாடி நின்று
பரவினார்கண்ணருவி பரந்து பாய.
902

தென்னவர்கோன் முன்அமணர் செய்த வாதில்
தீயின்கண் இடுமேடு பச்சை யாக்கி
என்னுள்ளத் துணையாகி ஆல வாயில்
அமர்ந்திருந்த வாறென்கொல் எந்தாய் என்று
பன்னுதமிழ்த் தொடைசாத்திப் பரவிப் போந்து
பண்பினிய தொண்டருடன் அங்கு வைகி
மன்னுபுகழ்ப் பதிபிறவும் வணங்கச் சண்பை
வள்ளலார் நள்ளாறு வணங்கிச் செல்வார்.
903

சீர்நிலவு திருத்தெளிச்சே ரியினைச் சேர்ந்து
சிவபெருமான் தனைப்பரவிச் செல்லும் போது
சார்வறியாச் சாக்கியர்தம் போதி மங்கை
சார்தலும்மற் றதுஅறிந்த சைவ ரெல்லாம்
ஆர்கலியின் கிளர்ச்சியெனச் சங்கு தாரை
அளவிறந்த பல்லியங்கள் முழக்கி ஆர்த்துப்
பார்குலவு தனிக்காளஞ் சின்ன மெல்லாம்
பரசமய கோளரிவந் தான்என் றூத.
904

புல்லறிவிற் சாக்கியர்கள் அறிந்தார் கூடிப்
புகலியர்தம் புரவலனார் புகுந்து தங்கள்
எல்லையினில் எழுந்தருளும் பொழுது தொண்டர்
எடுத்தஆர்ப் பொலியாலும் எதிர்முன் சென்று
மல்கியெழுந் திருச்சின்ன ஒலிக ளாலும்
மனங்கொண்ட பொறாமையினால் மருண்டு தங்கள்
கல்வியினில் மேம்பட்ட புத்த நந்தி
முதலான தேரர்க்குங் கனன்று சொன்னார்.
905
Go to top

மற்றவர்கள் வெவ்வுரையும் பிள்ளை யார்முன்
வருசின்னப் பெருகொலியும் மன்னுந் தொண்டர்
பொற்புடைய ஆர்ப்பொலியுஞ் செவியினூடு
புடைத்தநா ராசமெனப் புக்க போது
செற்றமிகு முள்ளத்துப் புத்த நந்தி
செயிர்த் தெழுந்து தேரர்குழாஞ் சூழச்சென்று
வெற்றிபுனை சின்னங்கள் வாதி லெம்மை
வென்றன்றோ பிடிப்பதென வெகுண்டு சொன்னான்.
906

புத்தரினம் புடைசூழப் புத்த நந்தி
பொருவில்ஞா னப்புனிதர் திருமுன் பூதும்
மெய்த்தவிறற் சின்னங்கள் விலக்குங் காலை
வெகுண்டெழுந்த திருத்தொண்டர் வெறுத்து நோக்கி
இத்தகைய செயற்கிவரைத் தடிதல் செய்யா
திதுபொறுக்கில் தங்கணிலை ஏற்ப ரென்று
முத்துநிரைச் சிவிகையின் மேல் மணியை வந்து
முறைபணிந்து புகுந்தபடி மொழிந்து நின்றார்.
907

வருமிடத்தில் அழகிதாம் நமக்கு வாதில்
மற்றிவர்தம் பொருள்நிலைமை மறாத வண்ணம்
பொருமிடத்தில் அறிகின்றோம் புத்த நந்தி
பொய்ம்மேற்கோள் எனப்புகலி வேந்தர் கூற
அருமுறைசொல் திருப்பதிகம் எழுது மன்பர்
ஆளுடைய பிள்ளையார் திருவாக் காலே
உருமிடித்து விழப்புத்தன் உத்த மாங்கம்
உருண்டுவீழ் கெனப்பொறா உரைமுன் விட்டார்.
908

ஏறுயர்த்தார் சைவநெறி ஆணை உய்க்க
எதிர்விலக்கும் இடையூற்றை எறிந்து நீக்கும்
மாறில்வலி மந்திரமாம் அசனி போல
வாய்மைஉரைத் திருத்தொண்டர் வாக்கி னாலே
வேறுமொழிப் போர் ஏற்பான் வந்த புத்தன்
மேனியையும் தலையினையும் வெவ்வே றாகக்
கூறுபட நூறியிடப் புத்தர் கூட்டம்
குலைந்தோடி விழுந்துவெருக் கொண்ட தன்றே.
909

மற்றவர்கள் நிலைமையையும் புத்த நந்தி
வாக்கின்போர் ஏற்றவன்தன் தலையும் மெய்யும்
அற்றுவிழ அத்திரவாக் கதனால் அன்பர்
அறுத்ததுவுங் கண்டஅர னடியார் எல்லாம்
வெற்றிதரும் பிள்ளையார் தமக்குச் சென்று
விண்ணப்பஞ் செயவெதிர்ந்த விலக்கு நீங்க
உற்றவிதி அதுவேயாம் அரஎன் றெல்லாம்
ஓதுகென அவ்வொலிவான் உற்ற தன்றே.
910
Go to top

அஞ்சிஅகன் றோடியஅப் புத்த ரெல்லாம்
அதிசயித்து மீண்டுமுடன் அணைந்து கூடி
வஞ்சனையோ இதுதான்மற் றவர்தஞ்சைவ
வாய்மையோ எனமருண்டு மனத்திற் கொள்வார்
எஞ்சலின்மந் திரவாத மன்றி எம்மோ
டெதிர்ந்து பொருள் பேசுவதற் கிசைவ தென்று
தஞ்செயலின் மிக்குள்ள சாரிபுத்தன்
தன்னையே முன்கொண்டு பின்னுஞ் சார்ந்தார்.
911

அத்தன்மை கேட்டருளிச் சண்பை வந்த
அடலேறு திருவுள்ளத் தழகி தென்று
மெத்தமகிழ்ச் சியினோடும் விரைந்து சென்று
வெண்தரளச் சிவிகையினின் றிழிந்து வேறோர்
சத்திரமண் டபத்தின் மிசை ஏறி நீடு
சைவருடன் எழுந்தருளி இருந்து சாரும்
புத்தர்களை அழைக்கவெனத் திருமுன் நின்றார்
புகலிகா வலர்ஏவல் போற்றிச் சென்றார்.
912

சென்றவர்கள் தேரர்குழாம் அணைந்து நீங்கள்
செப்பிவரும் பொருள் நிலைமை தெரிக்க எங்கள்
வென்றிமழ இளங்களிறு சண்பை யாளி
வேதபா லகன்மும்மைத் தமிழின் வேந்தன்
நன்றுமகிழ்ந் தழைக்கின்றான் ஈண்ட நீரும்
நண்ணுமெனக் கூறுதலும் நன்மை சாராத்
தன்தகைமைப் புத்தருடன் சாரி புத்தன்
சத்திரமண் டபமுன்பு சார வந்தான்.
913

அங்கணைந்து மண்டபத்துப் புத்த ரோடும்
பிள்ளையார் அருகணைய நின்ற போதில்
எங்குநிகழ் திருச்சின்னந் தடுத்த புத்தன்
இருஞ்சிரத்தைப் பொடியாக்கும் எதிரில் அன்பர்
பொங்குபுகழ்ப் புகலிகா வலர்தம் பாதம்
போற்றிஅரு ளாற்சாரி புத்தன் தன்னை
உங்கள்தலை வனும்பொருளும் உரைக்க என்ன
உற்றவா தினைமேற்கொண் டுரைசெய் கின்றான்.
914

கற்பங்கள் அனைத்தினிலும் பிறந்து வீந்து
கதிமாறுங் கணபங்க இயல்பு தன்னில்
பொற்புடைய தானமே தவமே நன்மை
புரிந்தநிலை யோகமே பொருந்தச் செய்ய
உற்பவிக்கும் ஒழிவின்றி உரைத்த ஞானத்
தொழியாத பேரின்ப முத்தி பெற்றான்
பற்பலரும் பிழைத்துய்ய அறமுன் சொன்ன
பான்மையான் யாங்கள்தொழும் பரமன் என்றான்.
915
Go to top

என்றுரைத்த சாரிபுத்தன் எதிர்வந் தேற்ற
இருந்தவத்துப் பெருந்தன்மை அன்பர் தாமும்
நன்றுமது தலைவன்தான் பெற்றா னென்று
நாட்டுகின்ற முத்திதான் யாவ தென்றார்
நின்றவுரு வேதனையே குறிப்புச் செய்கை
நேர்நின்ற ஞானமென நிகழ்ந்து ஐந்தும்
ஒன்றியகந் தத்தழிவே முத்தி யென்ன
உரைசெய்தான் பிடகத்தின் உணர்வு மிக்கான்.
916

ஆங்கவன்தான் உரைத்தமொழி கேட்ட அன்பர்
அதனைஅனு வாதஞ்செய் தவனை நோக்கித்
தாங்கியஞா னத்துடனாம் கந்தம் ஐந்தும்
தாம்வீந்து கெட்டனவேல் தலைவன் தானும்
ஈங்குளன் என் றவனுக்கு விடயமாக
யாவையுமுன் இயற்றுதற்கு விகார மேசெய்
தோங்குவடி வமைத்துவிழ வெடுக்கும் பூசை
கொள்வார்ஆர் உரைக்கவென உரைக்க லுற்றான்.
917

கந்தமாம் வினையுடம்பு நீங்கி எங்கோன்
கலந்துளன்முத் தியில்என்றான் என்னக் காணும்
இந்திரியங் கண்முதலாம் கரணந் தானும்
இல்லையேல் அவனுணர்ச்சி யில்லை யென்றார்
முந்தையறி விலனாகி உறங்கி னானை
நிந்தித்து மொழிந் துடல்மீ தாடினார்க்கு
வந்தவினைப் பயன்போல வழிபட் டார்க்கும்
வருமன்றோ நன்மையென மறுத்துச் சொன்னான்.
918

சொன்னவுரை கேட்டருளி அன்பர் தாமும்
தொடர்ந்தவழி பாடுபல கொள்கின் றானுக்
கன்னவற்றி னுடன்பாடும் எதிர்வு மில்லை
ஆனபோ தவன்பெறுதல் இல்லை யென்றார்
முன்னவற்றி னுடன்பாடும் எதிர்வுமின்றி
முறுகுதுயில் உற்றானை முனிந்து கொன்றால்
இன்னுயிர்போய்க் கொலையாகி முடிந்த தன்றோ
இப்படியால் எம்மிறைவற் கெய்தும் என்றார்.
919

இப்படியால் எய்துமென இசைத்துநீ இங்கு
எடுத்துக்காட் டியதுயிலும்இயல்பி னான்போல்
மெய்ப்படிய கரணங்கள் உயிர்தா மிங்கு
வேண்டுதியா னும்மிறைவற் கான போது
செப்பியஅக் கந்தத்தின் விளைவின் றாகித்
திரிவில்லா முத்தியிற்சென் றிலனும் ஆனான்
அப்படியக் கந்தத்துள் அறிவுங் கெட்டால்
அம்முத்தி யுடன்இன்ப மணையா தென்றார்.
920
Go to top

அவ்வுரைகேட் டெதிர்மாற்றம் அறைவ தின்றி
அணைந்துளன் அம் முத்தியெனும் அதுவும் பாழாம்
கவ்வையில்நின் றவனையெதிர் நோக்கி ஞானக்
கடலமுதம் அனையவர்தங் காத லன்பர்
பொய்வகையே முத்தியினிற் போனான் முன்பே
பொருளெல்லாம் உணர்ந்துரைத்துப் போனான் என்றாய்
எவ்வகையால் அவனெல்லாம் உணர்ந்த தீதும்
இல்லதுரைப் பாய்எனினும் ஏற்போ மென்றார்.
921

உணர்வுபொதுச் சிறப்பென்ன இரண்டின் முன்ன
துளவான மரப்பொதுமை உணர்தல் ஏனைப்
புணர்சிறப்பு மரங்களில்வைத் தின்ன தென்றல்
இப்படியால் வரம்பில்லாப் பொருள்கள் எல்லாம்
கொணரும்விற கினைக்குவைசெய் திடினும் வேறு
குறைத்தவற்றைத் தனித்ததனியே இடினும் வெந்தீத்
துணர்கதுவிச் சுடவல்ல வாறு போலத்
தொகுத்தும்விரித் துந்தெரிக்குந் தொல்லோன் என்றான்.
922

எடுத்துரைத்த புத்தனெதிர் இயம்பு மன்பர்
எரியுணர்வுக் கெடுத்துக்காட் டாகச் சொன்னாய்
அடுத்தவுணர் உருவுடைய தன்று சொன்ன
அனல்வடிவிற் றாம் அதுவும் அறிதி நுங்கோன்
தொடுத்தநிகழ் காலமே யன்றி ஏனைத்
தொடர்ந்தஇரு காலமுந்தொக் கறியுமாகில்
கடுத்தஎரி நிகழ்காலத் திட்ட தல்லால்
காணாத காலத்துக் கதுவா தென்றார்.
923

ஆதலினால் உன்னிறைவன் பொருள்கள் எல்லாம்
அறிந்ததுநும் முத்திபோல் ஆயிற் றன்றே
ஏதமாம் இவ்வறிவால் உரைத்த நூலும்
என்றவனுக் கேற்குமா றருளிச் செய்ய
வாதமா றொன்றின்றித் தோற்றான் புத்தன்
மற்றவனை வென்றருளிப் புகலி மன்னர்
பாததா மரைபணிந்தார் அன்பர் தங்கள்
பான்மையழி புத்தர்களும் பணிந்து வீழ்ந்தார்.
924

புந்தியினால் அவருரைத்த பொருளின் தன்மை
பொருளன்றாம் படியன்பர் பொருந்தக் கூற
மந்தவுணர் வுடையவரை நோக்கிச் சைவம்
அல்லாது மற்றொன்றும் இல்லை யென்றே
அந்தமில்சீர் மறைகள்ஆ கமங்கள் ஏனை
அகிலகலைப் பொருளுணர்ந்தார் அருளிச் செய்யச்
சிந்தையினில் அதுதெளிந்து புத்தர் சண்பைத்
திருமறையோர் சேவடிக்கீழ்ச் சென்று தாழ்ந்தார்.
925
Go to top

அன்றவர்க்குக் கவுணியர்கோன் கருணை நோக்கம்
அணை தலினால் அறிவின்மை அகன்று நீங்கி
முன்தொழுது விழுந்தெழுந்து சைவ ரானார்
முகைமலர்மா ரியின்வெள்ளம் பொழிந்த தெங்கும்
926

அந்நகரில் அடியார்கள்
எதிர்கொள்ள புக்கருளிக்
கொன்னவிலுங் கூற்றுதைத்தார்
குரைகழல்கள் பணிந்தேத்தி
மன்னியமர்ந் துறையுநாள்
வாகீச மாமுனிவர்
எந்நகரில் எழுந்தருளிற்
றென்றடியார் தமைவினவ.
927

அங்கவரும் அடிபோற்றி
ஆண்டஅர செழுந்தருளிப்
பொங்குபுனற் பூந்துருத்தி
நகரின்கண் போற்றிசைத்துத்
தங்குதிருத் தொண்டுசெயும்
மகிழ்ச்சியினாற் சார்ந்தருளி
எங்குநிகழ்ந் திடஇருந்த
படியெல்லாம் இயம்பினார்.
928

அப்பரிசங் கவர்மொழிய
ஆண்டஅர சினைக்காணும்
ஒப்பரிய பெருவிருப்பு
மிக்கோங்க ஒளிபெருகும்
மைப்பொருவு கறைக்கண்டர்
கழல்வணங்கி அருள்பெற்றுச்
செப்பரிய புகழ்ப்புகலிப்
பிள்ளையார் செல்கின்றார்.
929

பூவிரியுந் தடஞ்சோலை
புடைபரப்பப் புனல்பரக்கும்
காவிரியின் தென்கரைபோய்க்
கண்ணுதலார் மகிழ்ந்தஇடம்
மேவிஇனி தமர்ந்திறைஞ்சி
விருப்புறுமெய்த் தொண்டரொடு
நாவரசர் உழைச்சண்பை
நகரரசர் நண்ணுவார்.
930
Go to top

அந்தணர்சூ ளாமணியார்
பூந்துருத்திக் கணித்தாக
வந்தருளும் பெருவார்த்தை
வாகீசர் கேட்டருளி
நந்தமையா ளுடையவரை
நாம்எதிர்சென் றிறைஞ்சுவது
முந்தைவினைப் பயனென்று
முகமலர அகமலர்வார்
931

எதிர்சென்று பணிவனென
எழுகின்ற பெருவிருப்பால்
நதிதங்கு சடைமுடியார்
நற்பதங்கள் தொழுதந்தப்
பதிநின்றும் புறப்பட்டுப்
பரசமயஞ் சிதைத்தவர்பால்
முதிர்கின்ற பெருந்தவத்தோர்
முன்னெய்த வந்தணைந்தார்.
932

திருச்சின்னம் பணிமாறக்
கேட்டநாற் றிசையுள்ளோர்
பெருக்கின்ற ஆர்வத்தால்
பிள்ளையார் தமைச்சூழ்ந்த
நெருக்கினிடை யவர்காணா
வகைநிலத்துப் பணிந்துள்ளம்
உருக்கியெழு மனம்பொங்கத்
தொண்டர்குழாத் துடன்அணைந்தார்.
933

வந்தணைந்த வாகீசர்
வண்புகலி வாழ்வேந்தர்
சந்தமணித் திருமுத்தின்
சிவிகையினைத் தாங்கியே
சிந்தைகளிப் புறவருவார்
திருஞான சம்பந்தர்
புந்தியினில் வேறொன்று
நிகழ்ந்திடமுன் புகல்கின்றார்.
934

அப்பர்தாம் எங்குற்றார்
இப்பொழுதென் றருள்செய்யச்
செப்பரிய புகழ்த்திருநா
வுக்கரசர் செப்புவார்
ஒப்பரிய தவஞ்செய்தேன்
ஆதலினால் உம்மடிகள்
இப்பொழுது தாங்கிவரப்
பெற்றுய்ந்தேன் யான்என்றார்.
935
Go to top

அவ்வார்த்தை கேட்டஞ்சி
அவனியின்மேல் இழிந்தருளி
இவ்வாறு செய்தருளிற்
றென்னாம்என் றிறைஞ்சுதலும்
செவ்வாறு மொழிநாவர்
திருஞான சம்பந்தர்க்
கெவ்வாறு செயத்தகுவ
தென்றெதிரே இறைஞ்சினார்.
936

சூழ்ந்துமிடைந் தருகணையுந்
தொண்டரெல்லாம் அதுகண்டு
தாழ்ந்துநில முறவணங்கி
எழுந்துஅங்கை தலைகுவித்து
வாழ்ந்துமனக் களிப்பினராய்
மற்றிவரை வணங்கப்பெற்
றாழ்ந்தபிறப் புய்ந்தோம்என்
றண்டமெலாம் உறஆர்த்தார்.
937

திருஞான சம்பந்தர்
திருநாவுக் கரசர்தமைப்
பெருகார்வத் தொடும்அணைந்து
தழீஇக்கொள்ளப் பிள்ளையார்
மருவாரும் மலரடிகள்
வணங்கியுடன் வந்தணைந்தார்
பொருவாரும் புனற்சடையார்
மகிழ்ந்ததிருப் பூந்துருத்தி.
938

அன்பர்குழாத் தொடும்செல்வார்
ஆனேற்றார் மகிழ்கோயில்
முன்பணித்தா கச்சென்று
கோபுரத்தை முன்னிறைஞ்சித்
துன்பமிலாத் திருத்தொண்ட
ருடன்தொழுது புக்கருளி
என்புருக வலங்கொண்டு
பணிந்தேத்தி இறைஞ்சினார்.
939

பொய்யிலியா ரைப்பணிந்து
போற்றியே புறத்தணைவார்
செய்யசடை யார்கோயில்
திருவாயில் முன்னாக
மையறுசீர்த் தொண்டர்குழாம்
வந்துபுடை சூழஉல
குய்யவரு வார்தங்க
ளுடன்மகிழ்ந்தங் கினிதிருந்தார்.
940
Go to top

வாக்கின் தனிமன்னர்
வண்புகலி வேந்தர்தமைப்
போக்கும் வரவும்
வினவப் புகுந்ததெல்லாம்
தூக்கின் தமிழ்விரகர்
சொல்லிறந்த ஞானமறை
தேக்குந் திருவாயால்
செப்பி யருள்செய்தார்.
941

காழியினில் வந்த
கவுணியர்தம் போரேற்றை
ஆழிமிசைக் கல்மிதப்பில்
வந்தார் அடிவணங்கி
வாழிதிருத் தொண்டென்னும்
வான்பயிர்தான் ஓங்குதற்குச்
சூழும் பெருவேலி
யானீர்எனத் தொழுதார்.
942

பிள்ளையார் தாமும்அவர்
முன்தொழுது பேரன்பின்
வெள்ள மனையபுகழ்
மானியார் மேன்மையையும்
கொள்ளும் பெருமைக்
குலச்சிறையார் தொண்டினையும்
உள்ள பரிசெல்லாம்
மொழிந்தங் குவந்திருந்தார்.
943

தென்னற் குயிரோடு
நீறளித்துச் செங்கமலத்
தன்னம் அனையார்க்கும்
அமைச்சர்க்கும் அன்பருளித்
துன்னுநெறி வைதிகத்தின்
தூநெறியே ஆக்குதலான்
மன்னுபுகழ் வாகீசர்
கேட்டு மனமகிழ்ந்தார்.
944

சொல்லின் பெருவேந்தர்
தொண்டைவள நாடெய்தி
945
Go to top

அங்கணரைப் போற்றியெழுந்
தாண்ட அரசமர்ந்த
பொங்கு திருமடத்திற்
புக்கங் கினிதமர்ந்து
திங்கட் பகவணியும்
சென்னியார் சேவடிக்கீழ்த்
தங்கு மனத்தோடு
தாம்பரவிச் செல்லுநாள்.
946

வாகீச மாமுனிவர்
மன்னுதிரு வாலவாய்
நாகம் அரைக்கசைத்த
நம்பர் கழல் வணங்கப்
போகும் பெருவிருப்புப்
பொங்கப் புகலியின்மேல்
ஏகும் பெருங்காதல்
பிள்ளையார் ஏற்றெழுவார்.
947

பூந்துருத்தி மேவும்
புனிதர்தமைப் புக்கிறைஞ்சிப்
போந்து திருவாயில்
புறத்தணைந்து நாவினுக்கு
வேந்தர் திருவுள்ளம்
மேவவிடை கொண்டருளி
ஏந்தலார் எண்ணிறந்த
தொண்டருடன் ஏகினார்.
948

மாடுபுனற் பொன்னி
இழிந்து வடகரையில்
நீடுதிரு நெய்த்தானம்
ஐயாறு நேர்ந்திறைஞ்சிப்
பாடுதமிழ் மாலைகளும்
சாத்திப் பரவிப்போய்
ஆடல் புரிந்தார்திருப்
பழனம் சென்றணைந்தார்.
949

செங்கண் விடையார்
திருப்பழனஞ் சேர்ந்திறைஞ்சிப்
பொங்கிய காதலின்முன்
போற்றும் பதிபிறவும்
தங்கிப்போய்ச் சண்பைநகர்
சார்ந்தார் தனிப்பொருப்பின்
மங்கை திருமுலைப்பால்
உண்டருளும் வள்ளலார்.
950
Go to top

தென்னாட் டமண்மா
சறுத்துத் திருநீறே
அந்நாடு போற்றுவித்தார்
வந்தணையும் வார்த்தைகேட்
டெந்நாள் பணிவதென
ஏற்றெழுந்த மாமறையோர்
முன்னாக வேதம்
முழங்க எதிர்கொண்டார்.
951

போத நீடுமா மறையவர்
எதிர்கொளப் புகலிகா வலருந்தம்
சீத முத்தணிச் சிவிகைநின்
றிழிந்தெதிர் செல்பவர் திருத்தோணி
நாதர் கோயில்முன் தோன்றிட
நகைமலர்க் கரங்குவித் திறைஞ்சிப்போய்
ஓத நீரின்மேல் ஓங்குகோ
யிலின்மணிக் கோபுரஞ் சென்றுற்றார்.
952

அங்கம் மாநிலத் தெட்டுற
வணங்கிப்புக் கஞ்சலி முடியேறப்
பொங்கு காதலிற் புடைவலங்
கொண்டுமுன் பணிந்துபோற் றெடுத்தோதித்
துங்க நீள்பெருந் தோணியாம்
கோயிலை அருளினால் தொழுதேறி
மங்கை யோடுடன் வீற்றிருந்
தருளினார் மலர்க்கழல் பணிவுற்றார்.
953

முற்றும் மெய்யெலாம் புளகங்கள்
முகிழ்த்தெழ முகந்துகண் களிகூரப்
பற்றும் உள்ளம்உள் ளலைத்தெழும்
ஆனந்தம் பொழிதரப் பணிந்தேத்தி
உற்றுமை சேர்வ தெனுந்திரு
வியமகம் உவகையால் எடுத்துஏத்தி
வெற்றி யாகமீ னவன்அவை
எதிர்நதி மிசைவரு கரனென்பார்.
954

சீரின் மல்கிய திருப்பதி
கத்தினில் திருக்கடைக் காப்பேற்றி
வாரின் மல்கிய வனமுலை
யாளுடன் மன்னினார் தமைப்போற்றி
ஆரும் இன்னருள் பெற்றுமீண்
டணைபவர் அங்கையால் தொழுதேத்தி
ஏரின் மல்கிய கோயில்முன்
பணிந்துபோந் திறைஞ்சினர் மணிவாயில்.
955
Go to top

தாதை யாரும்அங் குடன்பணிந்து
அணைந்திடச் சண்பையார் தனியேறு
மூதெ யில்திரு வாயிலைத்
தொழுதுபோய் முகைமலர்க் குழலார்கள்
ஆதரித்துவாழ்த் துரையிரு
மருங்கெழ அணிமறு கிடைச்சென்று
காத லித்தவர்க் கருள்செய்து
தந்திரு மாளிகைக் கடைசார்ந்தார்.
956

நறவம் ஆர்பொழிற் புகலியில்
நண்ணிய திருஞான சம்பந்தர்
விறலி யாருடன் நீலகண்
டப்பெரும் பாணர்க்கு மிகநல்கி
உறையு ளாம்அவர் மாளிகை
செலவிடுத் துள்ளணை தரும்போதில்
அறலி னேர்குழ லார்மணி
விளக்கெடுத் தெதிர்கொள அணைவுற்றார்.
957

அங்க ணைந்தரு மறைக்குலத்
தாயர்வந் தடிவணங் கிடத்தாமும்
துங்க நீள்பெருந் தோணியில்
தாயர்தாள் மனங்கொளத் தொழுவாராய்த்
தங்கு காதலின் அங்கமர்ந்
தருளுநாள் தம்பிரான் கழல்போற்றிப்
பொங்கும் இன்னிசைத் திருப்பதி
கம்பல பாடினார் புகழ்ந்தேத்தி.
958

நீல மாவிடந் திருமிடற்
றடக்கிய நிமலரை நேரெய்தும்
கால மானவை அனைத்தினும்
பணிந்துடன் கலந்தஅன் பர்களோடும்
சால நாள்கள்அங் குறைபவர்
தையலாள் தழுவிடக் குழைகம்பர்
கோல மார்தரக் கும்பிடும்
ஆசைகொண் டெழுங்குறிப் பினர்ஆனார்.
959

தண்ட கத்திரு நாட்டினைச்
சார்ந்துவந்து எம்பிரான் மகிழ்கோயில்
கண்டு போற்றிநாம் பணிவதென்
றன்பருக் கருள்செய்வார் காலம்பெற்
றண்ட ருக்கறி வரும்பெருந்
தோணியில் இருந்தவர் அருள்பெற்றுத்
தொண்டர் சூழ்ந்துடன் புறப்படத்
தொடர்ந்தெழுந் தாதையார்க் குரைசெய்வார்.
960
Go to top

அப்பர் நீர்இனி இங்கொழிந்
தருமறை அங்கிவேட் டன்போடுந்
துப்பு நேர்சடை யார்தமைப்
பரவியே தொழுதிரு மெனச்சொல்லி
மெய்ப்பெருந் தொண்டர் மீள்பவர்
தமக்கெலாம் விடைகொடுத் தருளிப்போய்
ஒப்பி லாதவர் தமைவழி
யிடைப்பணிந் துருகுமன் பொடுசெல்வார்.
961

செல்வம் மல்கிய தில்லைமூ
தூரினில் திருநடம் பணிந்தேத்திப்
பல்பெ ருந்தொண்ட ரெதிர்கொளப்
பரமர்தந் திருத்தினை நகர்பாடி
அல்கு தொண்டர்கள் தம்முடன்
திருமாணி குழியினை அணைந்தேத்தி
மல்கு வார்சடை யார்திருப்
பாதிரிப் புலியூரை வந்துற்றார்.
962

கன்னி மாவனங் காப்பென
இருந்தவர் கழலிணை பணிந்தங்கு
முன்ன மாமுடக் கால்முயற்
கருள்செய்த வண்ணமும் மொழிந்தேத்தி
மன்னு வார்பொழில் திருவடு
கூரினை வந்தெய்தி வணங்கிப்போய்ப்
பின்னு வார்சடை யார்திரு
வக்கரை பிள்ளையார் அணைவுற்றார்.
963

வக்க ரைப்பெரு மான்தனை
வணங்கிஅங் கமருநாள் அருளாலே
செக்கர் வேணியார் இரும்பைமா
காளமும் சென்றுதாழ்ந் துடன்மீண்டு
மிக்க சீர்வளர் அதிகைவீ
ரட்டமும் மேவுவார் தம்முன்பு
தொக்க மெய்த்திருத் தொண்டர்வந்
தெதிர்கொளத் தொழுதெழுந் தணைவுற்றார்.
964

ஆதி தேவர்அங் கமர்ந்தவீ
ரட்டானஞ் சென்றணை பவர்முன்னே
பூதம் பாடநின் றாடுவார்
திருநடம் புலப்படும் படிகாட்ட
வேத பாரகர் பணிந்துமெய்
உணர்வுடன் உருகிய விருப்போடும்
கோதி லாஇசை குலவுகுண்
டைக்குறட் பூதம்என் றெடுத்துஏத்தி.
965
Go to top

பரவி ஏத்திய திருப்பதி
கத்திசை பாடினார் பணிந்தங்கு
விரவும் அன்பொடு மகிழ்ந்தினி
துறைபவர் விமலரை வணங்கிப்போய்
அரவ நீர்ச்சடை அங்கணர்
தாம்மகிழ்ந் துறைதிரு வாமாத்தூர்
சிரபு ரத்துவந் தருளிய
திருமறைச் சிறுவர்சென் றணைவுற்றார்.
966

சென்ற ணைந்துசிந் தையின்மகிழ்
விருப்பொடு திகழ்திரு வாமாத்தூர்ப்
பொன்ற யங்குபூங் கொன்றையும்
வன்னியும் புனைந்தவர் அடிபோற்றிக்
குன்ற வார்சிலை யெனுந்திருப்
பதிகமெய் குலவிய இசைபாடி
நன்று மின்புறப் பணிந்துசெல்
வார்திருக் கோவலூர் நகர்சேர்ந்தார்.
967

கோவல் நீடிய வீரட்டம்
அமர்ந்தவர் குரைகழல் பணிந்தேத்தி
ஆவின் ஐந்துகந் தாடுவார்
அறையணி நல்லூரை அணைந்தேத்திப்
மேவு மன்புறு மேன்மையாம்
தன்மையை விளங்கிட அருள்செய்தார்.
968

சீரின் மன்னிய பதிகம்முன்
பாடிஅத் திருவறை யணிநல்லூர்
வாரின் மல்கிய கொங்கையாள்
பங்கர்தம் மலைமிசை வலங்கொள்வார்
பாரின் மல்கிய தொண்டர்கள்
இமையவர் நாடொறும் பணிந்தேத்துங்
காரின் மல்கிய சோலைஅண்
ணாமலை அன்பர்காட் டிடக்கண்டார்.
969

அண்ணா மலைஅங் கமரர்பிரான்
வடிவு போன்று தோன்றுதலும்
கண்ணால் பருகிக் கைதொழுது
கலந்து போற்றுங் காதலினால்
உண்ணா முலையாள் எனும்பதிகம்
பாடித் தொண்ட ருடன்போந்து
தெண்ணீர் முடியார் திருவண்ணா
மலையைச் சென்று சேர்வுற்றார்.
970
Go to top

அங்கண் அணைவார் பணிந்தெழுந்து
போற்றி செய்தம் மலைமீது
தங்கு விருப்பில் வீற்றிருந்தார்
தாள்தா மரைகள் தம்முடிமேல்
பொங்கும் ஆர்வத் தொடும்புனைந்து
புளகம் மலர்ந்த திருமேனி
எங்கு மாகிக் கண்பொழியும்
இன்ப அருவி பெருக்கினார்.
971

ஆதி மூர்த்தி கழல்வணங்கி
அங்கண் இனிதின் அமருநாள்
பூத நாத ரவர் தம்மைப்
பூவார் மலராற் போற்றிசைத்துக்
காத லால்அத் திருமலையிற்
சிலநாள் வைகிக் கமழ்கொன்றை
வேத கீதர் திருப்பதிகள்
பிறவும் பணியும் விருப்புறுவார்.
972

மங்கை பாகர் திருவருளால்
வணங்கிப் போந்து வடதிசையில்
செங்கண் விடையார் பதிபலவும்
பணிந்து புகலிச் செம்மலார்
துங்க வரைகள் கான்பலவும்
கடந்து தொண்டைத் திருநாட்டில்
திங்கள் முடியார் இனிதமரும்
திருவோத் தூரைச் சேர்வுற்றார்.
973

தேவர் முனிவர்க்கு ஓத்தளித்த
திருவோத் தூரில் திருத்தொண்டர்
தாவில் சண்பைத் தமிழ்விரகர்
தாம்அங் கணையக் களிசிறந்து
மேவுங் கதலி தோரணங்கள்
விளக்கு நிரைத்து நிறைகுடமும்
பூவும் பொரியுஞ் சுண்ணமும்முன்
கொண்டு போற்றி எதிர்கொண்டார்.
974

சண்பை வேந்தர் தண்தரளச்
சிவிகை நின்றும் இழிந்தருளி
நண்பின் மிக்க சீரடியார்
சூழ நம்பர் கோபுரஞ்சூழ்
விண்பின் னாகமுன் னோங்கும்
வியன்பொற் புரிசை வலங்கொண்டு
பண்பு நீடிப் பணிந்தெழுந்து
பரமர் கோயில் உள்ளடைந்தார்.
975
Go to top

வார ணத்தின் உரிபோர்த்த
மைந்தர் உமையாள் மணவாளர்
ஆர ணத்தின் உட்பொருளாய்
நின்றார் தம்முன் அணைந்திறைஞ்சி
நார ணற்கும் பிரமற்கும்
நண்ணற் கரிய கழல்போற்றும்
கார ணத்தின் வரும்இன்பக்
கண்ணீர் பொழியக் கைதொழுதார்.
976

தொழுது விழுந்து பணிந்தெழுந்து
சொல்மா லைகளால் துதிசெய்து
முழுது மானார் அருள்பெற்றுப்
போந்து வைகி முதல்வர்தமைப்
பொழுது தோறும் புக்கிறைஞ்சிப்
போற்றி செய்தங் கமர்வார்முன்
அழுது வணங்கி ஒரு தொண்டர்
அமணர் திறத்தொன் றறிவிப்பார்.
977

அங்கை அனலேற் றவர்க்கடியேன்
ஆக்கும் பனைக ளானவெலாம்
மங்கு லுறநீண் டாண்பனையாய்க்
காயா வாகக் கண்டமணர்
இங்கு நீரிட் டாக்குவன
காய்த்தற் கடைவுண் டோவென்று
பொங்கு நகைசெய் திழித்துரைத்தார்
அருள வேண்டு மெனப்புகல.
978

பரம னார்தந் திருத்தொண்டர்
பண்பு நோக்கிப் பரிவெய்தி
விரவு காத லொடும்விரைந்து
விமலர் கோயில் புக்கருளி
அரவும் மதியும் பகைதீர
அணிந்தார் தம்மை அடிவணங்கி
இரவு போற்றித் திருப்பதிகம்
இசையிற் பெருக எடுத்தருளி.
979

விரும்பு மேன்மைத் திருக்கடைக்காப்
பதனில் விமல ரருளாலே
குரும்பை ஆண் பனைஈனும்
என்னும் வாய்மை குலவுதலால்
நெருங்கும் ஏற்றுப் பனையெல்லாம்
நிறைந்த குலைக ளாய்க்குரும்பை
யரும்பு பெண்ணை யாகியிடக்
கண்டா ரெல்லாம் அதிசயித்தார்.

980
Go to top

சீரின் மன்னும் திருக்கடைக்காப்
பேற்றிச் சிவனா ரருள்பெற்றுப்
பாரில் நீடும் ஆண்பனைமுன்
காய்த்துப் பழுக்கும் பண்பினால்
நேரும் அன்பர் தங்கருத்து
நேரே முடித்துக் கொடுத்தருளி
ஆரும் உவகைத் திருத்தொண்டர்
போற்ற அங்கண் இனிதமர்ந்தார்.
981

தென்னாட் டமண்மா சறுத்தார்தம்
செய்கை கண்டு திகைத்தமணர்
அந்நாட் டதனை விட்டகல்வார்
சிலர்தங் கையிற் குண்டிகைகள்
என்னா வனமற் றிவையென்று
தகர்ப்பார் இறைவன் ஏறுயர்த்த
பொன்னார் மேனிப் புரிசடையான்
அன்றே என்று போற்றினார்.
982

பிள்ளை யார்தந் திருவாக்கில்
பிறத்தலால்அத் தாலம்முன்
புள்ள பாசம் விட்டகல
ஒழியாப் பிறவி தனையொழித்துக்
கொள்ளு நீர்மைக் காலங்கள்
கழித்துச் சிவமே கூடினவால்
வள்ள லார்மற் றவரருளின்
வாய்மை கூறின் வரம்பென்னாம்.
983

அங்கண் அமரர் பெருமானைப்
பணிந்து போந்தா டரவினுடன்
பொங்கு கங்கை முடிக்கணிந்தார்
மகிழும் பதிகள் பலபோற்றி
மங்கை பாகர் அமர்ந்தருளும்
வயல்மா கறலை வழுத்திப்போய்க்
கொங்கு மலர்நீர்க் குரங்கணில்முட்
டத்தைச் சென்று குறுகினார்.
984

ஆதி முதல்வர் குரங்கணில்முட்
டத்தை அணைந்து பணிந்தேத்தி
நீதி வழுவாத் திருத்தொண்டர்
போற்ற நிகரில் சண்பையினில்
வேத மோடு சைவநெறி
விளங்க வந்த கவுணியனார்
மாதொர் பாகர் தாம்மன்னும்
மதில்சூழ் காஞ்சி மருங்கணைந்தார்.
985
Go to top

நீடுகாஞ்சி வாழ்நரும்
நிலாவுமெய்ம்மை அன்பரும்
மாடுசண்பை வள்ளலார்
வந்தணைந்த ஓகையால்
கூடுகின்ற இன்பநேர்
குலவுவீதி கோலினார்
காடுகொண்ட பூகம்வாழை
காமர்தோ ரணங்களால்.
986

கொடிநிரைத்த வீதியில்
கோலவே திகைப்புறங்
கடி கொள்மாலை மொய்த்தபந்தர்
கந்தநீர்த் தசும்புடன்
மடிவில்பொன் விளக்கெடுத்து
மாதர்மைந்தர் மல்குவார்
படிவிளக்கும் அன்பரும்பரந்த
பண்பில் ஈண்டுவார்.
987

கோதைமாதர் ஆடலுங்
குலாவுதொண்டர் பாடலும்
வேதகீத நாதமும்
மிக்கெழுந்து விம்மவே
காதல்நீடு காஞ்சிவாழ்நர்
கம்பலைத் தெழுந்துபோய்
மூதெயிற் புறம்புசென்
றணைந்துமுன் வணங்கினார்.
988

சண்பையாளும் மன்னர்முன்பு
தொண்டர்வந்து சார்தலும்
பண்புநீடி யானமுன்
பிழிந்திறைஞ்சு பான்மைகண்
டெண்பெருக்கு மிக்கதொண்டர்
அஞ்சலித்து எடுத்தசொல்
மண்பரக்க வீழ்ந்தெழுந்து
வானம்முட்ட ஆர்த்தனர்.
989

சேணுயர்ந்த வாயில்நீடு
சீர்சொள்சண்பை மன்னனார்
வாண்நிலாவு நீற்றணி
விளங்கிட மனத்தினில்
பூணுமன்பர் தம்முடன்
புகுந்திடப் புறத்துளோர்
காணும்ஆசை யிற்குவித்த
கைந்நிரை யெடுத்தனர்.
990
Go to top

வியல்நெடுந் தெருவினூடு
மிக்கதொண்டர் ஆர்ப்பெழக்
கயல்நெடுங்கண் மாதரும்
காதல்நீடு மாந்தரும்
புயல்பொழிந்த தாமெனப்
பூவினொடு பொற்சுணம்
இயலுமாறு வாழ்த்தெடுத்
திருமருங்கும் வீசினார்.
991

இன்னவண்ணம் யாவரும்
இன்பமெய்த எய்துவார்
பின்னுவார் சடைமுடிப்
பிரான்மகிழ்ந்த கோயில்கள்
முன்னுறப் பணிந்துபோய்
மொய்வரைத் திருமகள்
மன்னுபூ சனைமகிழ்ந்த
மன்னர்கோயில் முன்னினார்.
992

கம்பவாணர் கோயில்வாயில்
கண்டுகை குவித்தெடுத்
தும்பர்ஓங்கு கோபுரத்தின்
முன்னிறைஞ்சி உள்ளணைந்
தம்பொன்மா ளிகைப்புறத்தில்
அன்பரோடு சூழவந்
திம்பர்ஞாலம் உய்யவந்த
பிள்ளையார் இறைஞ்சுவார்.
993

செம்பொன்மலைக் கொடிதழுவக்
குழைந்தருளுந் திருமேனிக்
கம்பரைவந் தெதிர்வணங்கும்
கவுணியர்தங் காவலனார்
பம்புதுளிக் கண்ணருவி
பாய்ந்துமயிர்ப் புளகம்வரத்
தம்பெருகு மனக்காதல்
தள்ளநில மிசைத்தாழ்ந்தார்.
994

பலமுறையும் பணிந்தெழுந்து
பங்கயச்செங் கைமுகிழ்ப்ப
மலருமுக மளித்ததிரு
மணிவாயால் மறையான்என்
றுலகுய்ய எடுத்தருளி
உருகியஅன் பென்புருக்க
நிலவுமிசை முதற்றாளம்
நிரம்பியநீர் மையில்நிகழ.
995
Go to top

பாடினார் பணிவுற்றார்
பரிவுறுஆ னந்தக்கூத்
தாடினார் அகங்குழைந்தார்
அஞ்சலிதஞ் சென்னியின்மேல்
சூடினார் மெய்ம்முகிழ்த்தார்
சூகரமும் அன்னமுமாய்த்
தேடினார் இருவர்க்கும்
தெரிவரியார் திருமகனார்.
996

மருவியஏ ழிசைபொழிய
மனம்பொழியும் பேரன்பால்
பெருகியகண் மழைபொழியப்
பெரும்புகலிப் பெருந்தகையார்
உருகியஅன் புள்ளலைப்ப
உமைதழுவக் குழைந்தவரைப்
பருகியமெய் உணர்வினொடும்
பரவியே புறத்தணைந்தார்.
997

புறத்தணைந்த தொண்டருடன்
போந்தமைந்த திருமடத்தில்
பெறற்கரும்பே றுலகுய்யப்
பெற்றருளும் பிள்ளையார்
மறப்பரிய காதலுடன்
வந்தெய்தி மகிழ்ந்துறைவார்
அறப்பெருஞ்செல் வக்காமக்
கோட்டம்அணைந் திறைஞ்சினார்.
998

திருவேகம் பத்தமர்ந்த
செழுஞ்சுடரைச் சேவடியில்
ஒருபோதும் தப்பாதே
உள்ளுருகிப் பணிகின்றார்
மருவுதிரு இயமகமும்
வளர்இருக்குக் குறள்மற்றும்
பெருகும்இசைத் திருப்பதிகத்
தொடைபுனைந்தார் பிள்ளையார்.
999

நீடுதிருப் பொழில்காஞ்சி
நெறிக்காரைக் காடிறைஞ்சிச்
சூடுமதிக் கண்ணியார்
துணைமலர்ச்சே வடிபாடி
ஆடுமவர் இனிதமரும்
அனேகதங்கா வதம்பரவி
மாடுதிருத் தானங்கள்
பணிந்தேத்தி வைகுநாள்.
1000
Go to top

எண்திசையும் போற்றிசைக்கும்
திருப்பதிமற் றதன்புறத்துத்
தொண்டருடன் இனிதேகித்
தொல்லைவிடம் உண்டிருண்ட
கண்டர்மகிழ் மேற்றளியும்
முதலான கலந்தேத்தி
மண்டுபெருங் காதலினால்
வணங்கிமீண் டினிதிருந்தார்.
1001

அப்பதியில் விருப்பினொடும்
அங்கணரைப் பணிந்தமர்வார்
செப்பரிய புகழ்ப்பாலித்
திருநதியின் தென்கரைபோய்
மைப்பொலியுங் கண்டர்திரு
மாற்பேறு மகிழ்ந்திறைஞ்சி
முப்புரஞ்செற் றவர்தம்மை
மொழிமாலை சாத்தினார்.
1002

திருமாற்பே றுடையவர்தம்
திருவருள்பெற் றெழுந்தருளிக்
கருமாலுங் கருமாவாய்க்
காண்பரிய கழல்தாங்கி
வரும்ஆற்றல் மழவிடையார்
திருவல்லம் வணங்கித்தம்
பெருமாற்குத் திருப்பதிகப்
பெரும்பிணையல் அணிவித்தார்.
1003

அங்குள்ள பிறபதியில்
அரிக்கரியார் கழல்வணங்கிப்
பொங்குபுனற் பாலியாற்றின்
புடையில்வட பாலிறைவர்
எங்கும்உறை பதிபணிவார்
இலம்பையங்கோட் டூரிறைஞ்சிச்
செங்கண்விடை உகைத்தவரைத்
திருப்பதிகம் பாடினார்.
1004

திருத்தொண்டர் பலர்சூழத்
திருவிற்கோ லமும்பணிந்து
பொருட்பதிகத் தொடைமாலை
புரமெரித்த படிபாடி
அருட்புகலி யாண்டகையார்
தக்கோலம் அணைந்தருளி
விருப்பினொடுந் திருவூறல்
மேவினார் தமைப்பணிந்தார்.
1005
Go to top

தொழுதுபல முறைபோற்றிச்
சுரர்குருவுக் கிளையமுனி
வழுவில்தவம் புரிந்தேத்த
மன்னினார் தமைமலர்ந்த
பழுதில்செழுந் தமிழ்மாலைப்
பதிகஇசை புனைந்தருளி
முழுதும்அளித் தவர்அருளால்
போந்தனர்முத் தமிழ்விரகர்.
1006

குன்றநெடுஞ் சிலையாளர்
குலவியபல் பதிபிறவும்
நின்றவிருப் புடனிறைஞ்சி
நீடுதிருத் தொண்டருடன்
பொன்தயங்கு மணிமாடப்
பூந்தராய்ப் புரவலனார்
சென்றணைந்தார் பழையனூர்த்
திருவாலங் காட்டருகு.
1007

இம்மையிலே புவியுள்ளோர் யாருங் காண
ஏழுலகும் போற்றிசைப்ப எம்மை யாளும்
அம்மைதிருத் தலையாலே நடந்து போற்றும்
அம்மையப்பர் திருவாலங் காடாம் என்று
தம்மையுடை யவர்மூதூர் மிதிக்க அஞ்சிச்
சண்பைவருஞ் சிகாமணியார் சாரச் சென்று
செம்மைநெறி வழுவாத பதியின் மாடோர்
செழும்பதியில் அன்றிரவு பள்ளி சேர்ந்தார்.
1008

மாலையிடை யாமத்துப் பள்ளி கொள்ளும்
மறையவனார் தம்முன்பு கனவி லேவந்
தாலவனத் தமர்ந்தருளும் அப்பர் நம்மை
அயர்த்தனையோ பாடுதற்கென் றருளிச் செய்ய
ஞாலமிருள் நீங்கவரும் புகலி வேந்தர்
நடுஇடையா மத்தினிடைத் தொழுது ணர்ந்து
வேலைவிட முண்டவர்தங் கருணை போற்றி
மெய்யுருகித் திருப்பதிகம் விளம்ப லுற்றார்.
1009

துஞ்சவரு வார்என்றே எடுத்த வோசைச்
சுருதிமுறை வழுவாமல் தொடுத்த பாடல்
எஞ்சலிலா வகைமுறையே பழைய னூரார்
இயம்புமொழி காத்தகதை சிறப்பித் தேத்தி
அஞ்சனமா கரியுரித்தார் அருளா மென்றே
அருளும்வகை திருக்கடைக்காப் பமையச் சாற்றி
பஞ்சுரமாம் பழைய திறங் கிழமை கொள்ளப்
பாடினார் பாரெலாம் உய்ய வந்தார்.
1010
Go to top

நீடுமிசைத் திருப்பதிகம் பாடிப் போற்றி
நெடுங்கங்கு லிருணீங்கி நிகழ்ந்த காலை
மாடுதிருத் தொண்டர்குழா மணைந்தபோது
மாலையினில் திருவால வனத்து மன்னி
ஆடுமவ ரருள்செய்த படியை யெல்லாம்
அருளிச்செய் தகமலரப் பாடி யேத்திச்
சேடர்பயில் திருப்பதியைத் தொழுது போந்து
திருப்பாசூர் அதன்மருங்கு செல்ல லுற்றார்.
1011

திருப்பாசூர் அணைந்தருளி யங்கு மற்றச்
செழும்பதியோ ரெதிர்கொள்ளச் சென்று புக்குப்
பொருப்பரையன் மடப்பாவை இடப்பா கத்துப்
புராதனர்வே யிடங்கொண்ட புனிதர் கோயில்
விருப்பினுடன் வலங்கொண்டு புக்குத் தாழ்ந்து
வீழ்ந்தெழுந்து மேனியெலா முகிழ்ப்ப நின்றே
அருட்கருணைத் திருவாளன் நாமஞ் சிந்தை
யிடையாரென் றிசைப்பதிகம் அருளிச் செய்தார்.
1012

மன்னுதிருப் பதிகஇசை பாடிப் போற்றி
வணங்கிப்போந் தப்பதியில் வைகி மாடு
பிஞ்ஞகர்தம் வெண்பாக்கம் முதலா யுள்ள
பிறபதிகள் பணிந்தணைவார் பெருகு மன்பால்
முன்னிறைந்த திருவாய்மஞ் சனநீ ராட்டு
முதல்வேடர் கண்ணப்ப நாய னாரை
உன்னியொளிர் காளத்தி மலை வணங்க
வுற்றபெரு வேட்கையுட னுவந்து சென்றார்.
1013

மிக்கபெருங் காதலுடன் தொண்டர் சூழ
மென்புனல்நாட் டினையகன்று வெற்பும் கானும்
தொக்கபெரு வன்புலக்கா னடைந்து போகிச்
சூலகபா லக்கரத்துச் சுடரு மேனி
முக்கண்முதல் தலைவனிட மாகி யுள்ள
முகில்நெருங்கு காரிகரை முன்னர்ச் சென்று
புக்கிறைஞ்சிப் போற்றிசைத்தப் பதியில் வைகிப்
பூதியரோ டுடன்மகிழ்ந்தார் புகலி வேந்தர்.
1014

இறைவர்திருக் காரிகரை யிறைஞ்சி அப்பால்
எண்ணில்பெரு வரைகளிரு மருங்கு மெங்கும்
நிறையருவி நிரைபலவாய் மணியும் பொன்னும்
நிறைதுவலை புடைசிதறி நிகழ்ப வாகி
அறைகழல்வா னவர்க்கிறைவன் குலிச வேற்றால்
அற்றசிறை பெற்றவன்மே லெழுவ தற்குச்
சிறகடித்துப் பறக்கமுயன் றுயர்ந்த போலும்
சிலைநிலத்தி லெழுந்தருளிச் செல்லா நின்றார்.
1015
Go to top

மாதவர்கள் நெருங்குகுழாம் பரந்து செல்ல
மணிமுத்தின் பரிச்சின்னம் வரம்பின் றாகப்
பூதிநிறை கடல்அணைவ தென்னச் சண்பைப்
புரவலனார் எழுந்தருளும் பொழுது சின்னத்
தீதிலொலி பலமுறையும் பொங்கி யெங்குந்
திருஞான சம்பந்தன் வந்தான் என்னும்
நாதம்நிறை செவியினவாய் மாக்க ளெல்லாம்
நலமருவு நினைவொன்றாய் மருங்கு நண்ண.
1016

கானவர்தங் குலம்உலகு போற்ற வந்த
கண்ணப்பர் திருப்பாதச் செருப்புத் தோய
மானவரிச் சிலைவேட்டை ஆடும் கானும்
வானமறை நிலைபெரிய மரமும் தூறும்
ஏனையிமை யோர்தாமும் இறைஞ்சி யேத்தி
எய்தவரும் பெருமையவாம் எண்ணி லாத
தானமும்மற் றவைகடந்து திருக்கா ளத்தி
சாரஎழுந் தருளினார் சண்பை வேந்தர்.
1017

அம்பொன்மலைக் கொடிமுலைப்பால் குழைத்த ஞானத்
தமுதுண்ட பிள்ளையார் அணைந்தார் என்று
செம்பொன்மலை வில்லியார் திருக்கா ளத்தி
சேர்ந்ததிருத் தொண்டர் குழாம்அடைய ஈண்டிப்
பம்புசடைத் திருமுனிவர் கபாலக் கையர்
பலவேடச் சைவர்குல வேடர் மற்றும்
உம்பர்தவம் புரிவார்அப் பதியி லுள்ளோர்
உடன்விரும்பி யெதிர்கொள்ள வுழைச்சென் றுற்றார்.
1018

திசையனைத்தும் நீற்றினொளி தழைப்ப மண்மேற்
சிவலோக மணைந்ததெனச் சென்ற போது
மிசைவிளங்கும் மணிமுத்தின் சிவிகை நின்றும்
வேதபா ரகர்இழிந்து வணங்கி மிக்க
அசைவில்பெருந் தொண்டர்குழாம் தொழுது போற்றி
அரவெனுமோ சையில்அண்டம் நிறைப்ப அன்பால்
இசைவிளங்குந் தமிழ்விரகர் திருக்கா ளத்தித்
திருமலையிம் மலைகளில்யா தென்று கேட்டார்.
1019

வந்தணைந்த மாதவத்தோர் வணங்கித் தாழ்ந்து
மறைவாழ்வே சைவசிகா மணியே தோன்றும்
இந்தமலை காளனோ டத்தி தம்மில்
இகலிவழி பாடுசெய இறைவர்மேவும்
அந்தமில்சீர்க் காளத்தி மலையாம் என்ன
அவனிமேற் பணிந்தெழுந்தஞ் சலிமேற் கொண்டு
சிந்தைகளி மகிழ்ச்சிவரத் திருவி ராகம்
வானவர்கள் தானவர்என் றெடுத்துச் செல்வார்.
1020
Go to top

திருந்தியஇன் னிசைவகுப்பத் திருக்கண் ணப்பர்
திருத்தொண்டு சிறப்பித்துத் திகழப் பாடிப்
பொருந்துபெருந் தவர்கூட்டம் போற்ற வந்து
பொன்முகலிக் கரையணைந்து தொழுது போகி
அருந்தவர்கள் எம்மருங்கும் மிடைந்து செல்ல
ஆளுடைய பிள்ளையார் அயன்மால்தேடும்
மருந்துவெளி யேயிருந்த திருக்கா ளத்தி
மலையடிவா ரஞ்சார வந்து தாழ்ந்தார்.
1021

தாழ்ந்தெழுந்து திருமலையைத் தொழுது கொண்டே
தடஞ்சிலா தலசோபா னத்தா லேறி
வாழ்ந்திமையோர் குழாம்நெருங்கு மணிநீள் வாயில்
மருங்கிறைஞ்சி உட்புகுந்து வளர்பொற் கோயில்
சூழ்ந்துவலங் கொண்டிறைவர் திருமுன் பெய்தித்
தொழுதுதலை மேற்கொண்ட செங்கை போற்றி
வீழ்ந்தெழுவார் கும்பிட்ட பயன்காண் பார்போல்
மெய்வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்.
1022

உள்ளத்தில் தெளிகின்ற அன்பின் மெய்ம்மை
யுருவினையும் அவ்வன்பி னுள்ளே மன்னும்
வெள்ளச்செஞ் சடைக்கற்றை நெற்றிச் செங்கண்
விமலரையும் உடன்கண்ட விருப்பும் பொங்கிப்
பள்ளத்தில் இழிபுனல்போல் பரந்து செல்லப்
பைம்பொன்மலை வல்லிபரிந் தளித்த செம்பொன்
வள்ளத்தில் ஞானஆ ரமுத முண்டார்
மகிழ்ந்தெழுந்து பலமுறையும் வணங்கு கின்றார்.
1023

பங்கயக்கண் ணருவிநீர் பாய நின்று
பரவும்இசைத் திருப்பதிகம் பாடி யாடித்
தங்குபெருங் களிகாதல் தகைந்து தட்பத்
தம்பெருமான் கழல்போற்றுந் தன்மைநீட
அங்கரிதிற் புறம்போந்தங் கயன்மால் போற்ற
அரியார்தந் திருமலைக்கீ ழணைந்தி றைஞ்சிப்
பொங்குதிருத் தொண்டர்மடங் காட்ட அங்குப்
புக்கருளி இனிதமர்ந்தார் புகலி வேந்தர்.
1024

யாவர்களும் அறிவரிய இறைவன் றன்னை
ஏழுலகும் உடையானை யெண்ணி லாத
தேவர்கள்தம் பெருமானைத் திருக்கா ளத்தி
மலையின்மிசை வீற்றிருந்த செய்ய தேனைப்
பூவலரும் பொழில்புடைசூழ் சண்பை யாளும்
புரவலனார் காலங்கள் தோறும் புக்குப்
பாவலர்கொண் டடிபோற்றிப் பருகி யார்ந்து
பண்பினிய திருப்பதியிற் பயிலும் நாளில்.
1025
Go to top

அங்கண்வட திசைமேலுங் குடக்கின் மேலும்
அருந்தமிழின் வழக்கங்கு நிகழா தாகத்
திங்கள்புனை முடியார்தந் தானந் தோறுஞ்
சென்றுதமிழ் இசைபாடுஞ் செய்கை போல
மங்கையுடன் வானவர்கள் போற்றி சைப்ப
வீற்றிருந்தார் வடகயிலை வணங்கிப் பாடிச்
செங்கமல மலர்வாவித் திருக்கே தாரம்
தொழுதுதிருப் பதிகஇசை திருந்தப் பாடி.
1026

கூற்றுதைத்தார் மகிழ்ந்தகோ கரணம் பாடிக்
குலவுதிருப் பருப்பதத்தின் கொள்கை பாடி
ஏற்றிமிசை வருவார்இந் திரன்றன் நீல
பருப்பதமும் பாடிமகிழ்ந்து இறைவர் தானம்
போற்றியசொன் மலர்மாலை பிறவும் பாடிப்
புகலியர்தம் பெருந்தகையார் புனித மாகும்
நீற்றின்அணி கோலத்துத் தொண்டர் சூழ
நெடிதுமகிழ்ந் தப்பதியில் நிலவு கின்றார்.
1027

தென்திசையில் கயிலையெனும்திருக்காளத்தி
போற்றிஇனி தமர்கின்றார் திரைசூழ் வேலை
ஒன்றுதிரு வொற்றியூர் உறைவார் தம்மை
இறைஞ்சுவது திருவுள்ளத் துன்னி அங்கண்
இன்தமிழின் விரகரருள் பெற்று மீள்வார்
எந்தையா ரிணையடியென் மனத்த வென்று
பொன்தரளங் கொழித்திழி பொன் முகலிகூடப்
புனைந்ததிருப் பதிகஇசை போற்றிப் போந்தார்.
1028

மன்னுபுகழ்த் திருத்தொண்டர் குழாத்தி னோடும்
மறைவாழ வந்தவர்தாம் மலையுங் கானும்
முன்னணைந்த பதிபிறவும் கடந்து போந்து
முதல்வனார் உறைபதிகள் பலவும் போற்றிப்
பன்மணிகள் பொன்வரன்றி அகிலுஞ் சாந்தும்
பொருதலைக்கும் பாலிவட கரையில் நீடு
சென்னிமதி யணிவார்தந் திருவேற் காடு
சென்றணைந்தார் திருஞான முண்ட செல்வர்.
1029

திருவேற்கா டமர்ந்தசெழுஞ் சுடர்பொற் கோயில்
சென்றணைந்து பணிந்துதிருப் பதிகம்பாடி
வருவேற்று மனத்தவுணர் புரங்கள் செற்றார்
வலிதாயம் வந்தெய் திவணங்கிப் போற்றி
உருவேற்றார் அமர்ந்துறையும் ஓத வேலை
ஒற்றியூர் கைதொழச்சென் றுற்றபோது
பொருவேட்கை தருவாழ்வு பெற்ற தொண்டர்
பெரும்பதியோர் எதிர்கொள்ளப் பேணி வந்தார்.
1030
Go to top

மிக்கதிருத் தொண்டர்தொழு தணையத் தாமும்
தொழுதிழிந்து விடையவனென் றெடுத்துப் பாடி
மைக்குலவு கண்டத்தார் மகிழுங் கோயில்
மன்னுதிருக் கோபுரத்து வந்து தாழ்ந்து
தக்கதிருக் கடைக்காப்புச் சாற்றித் தேவர்
தம்பெருமான் திருவாயி லூடு சென்று
புக்கருளி வலங்கொண்டு புனிதர் முன்பு
போற்றெடுத்துப் படியின்மேற் பொருந்த வீழ்ந்தார்.
1031

பொற்றிரள்கள் போற்புரிந்த சடையார் தம்பால்
பொங்கியெழுங் காதல்மிகப் பொழிந்து விம்மிப்
பற்றியெழும் மயிர்ப்புளகம் எங்கு மாகிப்
பரந்திழியுங் கண்ணருவி பாய நின்று
சொல்திகழுந் திருப்பதிகம் பாடி ஏத்தித்
தொழுதுபுறத் தணைந்தருளித் தொண்ட ரொடும்
ஒற்றிநகர் காதலித்தங் கினிது றைந்தார்
உலகுய்ய வுலவாத ஞானம் உண்டார்.
1032

இன்ன தன்மையிற் பிள்ளையார்
இருந்தனர் இப்பால்
பன்னு தொல்புகழ்த் திருமயி
லாபுரிப் பதியில்
மன்னு சீர்ப்பெரு வணிகர்தந்
தோன்றலார் திறத்து
முன்னம் எய்திய தொன்றினை
நிகழ்ந்தவா மொழிவாம்.
1033

அருநி தித்திறம் பெருக்குதற்
கருங்கலம் பலவும்
பொருக டற்செலப் போக்கியப்
பொருட்குவை நிரம்ப
வரும ரக்கல மனைப்படப்
பணைக்கரை நிரைக்கும்
இருநி திப்பெருஞ் செல்வத்தின்
எல்லையில் வளத்தார்.
1034

தம்மை யுள்ளவா றறிந்தபின்
சங்கரற் கடிமை
மெய்ம்மை யேசெயும் விருப்புடன்
மிக்கதோ ரன்பால்
பொய்மை நீக்கியமெய்ப் பொருளிது
எனக்கொளு முள்ளச்
செம்மை யேபுரி மனத்தினார்
சிவநேசர் என்பார்.
1035
Go to top

கற்றை வார்சடை முடியினார்
அடியவர் கலப்பில்
உற்ற செய்கையில் ஒழிவின்றி
உருகிய மனமும்
பற்றி லாநெறிப் பரசம
யங்களைப் பாற்றுஞ்
செற்ற மேவிய சீலமும்
உடையராய்த் திகழ்வார்.
1036

ஆன நாள்செல அருமறைக்
கவுணியர் பெருமான்
ஞான போனகம் நுகர்ந்ததும்
நானிலம் உய்ய
ஏனை வெஞ்சமண் சாக்கியம்
இழித்தழித் ததுவும்
ஊன மில்புகழ் அடியர்பால்
கேட்டுவந் துளராய்.
1037

செல்வ மல்கிய சிரபுரத்
தலைவர்சே வடிக்கீழ்
எல்லை யில்லதோர் காதலின்
இடையறா வுணர்வால்
அல்லும் நண்பக லும்புரிந்
தவர்அருட் டிறமே
சொல்ல வுஞ்செயல் கேட்கவும்
தொழிலின ரானார்.
1038

நிகழும் மாங்கவர் நிதிப்பெருங்
கிழவனின் மேலாய்த்
திகழும் நீடிய திருவினிற்
சிறந்துள ராகிப்
புகழும் மேன்மையில் உலகினில்
பொலிந்துளா ரெனினும்
மகவி லாமையின்ம கிழ்மனை
வாழ்க்கையின் மருண்டு.
1039

அரிய நீர்மையில் அருந்தவம்
புரிந்தரன் அடியார்க்கு
உரிய அர்ச்சனை யுலப்பில
செய்தஅந் நலத்தால்
கரிய வாங்குழன் மனைவியார்
வயிறெனுங் கமலத்
துரிய பூமக ளெனவொரு
பெண்கொடி யுதித்தாள்.
1040
Go to top

நல்ல நாள்பெற ஓரையில்
நலம்மிக வுதிப்பப்
பல்பெ ருங்கிளை யுடன்பெரு
வணிகர்பார் முழுதும்
எல்லை யில்தன முகந்துகொண்
டியாவரும் உவப்ப
மல்ல லாவண மறுகிடைப்
பொழிந்துளம் மகிழ்ந்தார்.
1041

ஆறு சூடிய முடியினார்
அடியவர்க் கன்பால்
ஈறி லாதபூ சனைகள்யா
வையுமிகச் செய்து
மாறி லாமறை யவர்க்குவேண்
டினவெலாம் அளித்துப்
பேறு மற்றிதுவே எனும்படி
பெருங்களி சிறந்தார்.
1042

சூத நல்வினை மங்கலத்
தொழில்முறை தொடங்கி
வேத நீதியின் விதியுளி
வழாவகை விரித்த
சாத கத்தொடு சடங்குகள்
தசதினம் செல்லக்
காதல் மேவிய சிறப்பினில்
கடிவிழா அயர்ந்தார்.
1043

யாவ ரும்பெரு மகிழ்ச்சியால்
இன்புறப் பயந்த
பாவை நல்லுறுப் பணிகிளர்
பண்பெலாம் நோக்கிப்
பூவி னாள்என வருதலின்
பூம்பாவை யென்றே
மேவு நாமமும் விளம்பினர்
புவியின்மேல் விளங்க.
1044

திங்கள் தோறுமுன் செய்யும்அத்
திருவளர் சிறப்பின்
மங்க லம்புரி நல்வினை
மாட்சியிற் பெருக
அங்கண் மாநகர் அமைத்திட
ஆண்டெதி ரணைந்து
தங்கு பேரொளிச் சீறடி
தளர்நடை பயில.
1045
Go to top

தளரும் மின்னின்அங் குரமெனத்
தமனியக் கொடியின்
வளரி ளந்தளிர்க் கிளையென
மணிகிள ரொளியின்
அளவி லஞ்சுடர்க் கொழுந்தென
அணைவுறும் பருவத்
திளவ னப்பிணை யனையவர்க்
ஏழுயாண் டெய்த.
1046

அழகின் முன்னிளம் பதமென
அணிவிளக் கென்ன
விழவு கொண்டெழும் பேதைய
ருடன்விளை யாட்டில்
கழலொடு அம்மனை கந்துகம்
என்றுமற் றினைய
மழலை மென்கிளிக் குலமென
மனையிடை ஆடி.
1047

பொற்றொ டிச்சிறு மகளிர்
ஆயத்தொடும் புணர்ந்து
சிற்றில் முற்றவும் இழைத்துட
னடுந்தொழிற் சிறுசோ
றுற்ற உண்டிகள் பயின்றொளி
மணியூசல் ஆடி
மற்றும்இன்புறு வண்டலாட்
டயர்வுடன் வளர.
1048

தந்தை யாரும்அத் தளிரிளம்
கொம்பனாள் தகைமை
இந்த வையகத் தின்மையால்
இன்புறு களிப்பு
வந்த சிந்தையின் மகிழ்ந்துமற்
றிவள்மணம் பெறுவான்
அந்த மில்லென தருநிதிக்
குரியனென்று அறைந்தார்.
1049

ஆய நாள்களில் அமண்பயில்
பாண்டிநா டதனைத்
தூய ஞானமுண் டருளிய
தோன்றலார் அணைந்து
மாய வல்லமண் கையரை
வாதில்வென் றதுவும்
மேய வெப்பிடர் மீனவன்
மேலொழித் ததுவும்.
1050
Go to top

நெருப்பில் அஞ்சினார் தங்களை
நீரில் ஒட்டியபின்
மருப்பு நீள்கழுக் கோலின்மற்
றவர்கள் ஏறியதும்
விருப்பி னால்திரு நீறுமீ
னவற்களித் தருளிப்
பொருப்பு வில்லியார் சாதனம்
போற்றுவித் ததுவும்.
1051

இன்ன வாறெலாம் அறிந்துளார்
எய்தியங் கிசைப்பச்
சொன்ன வர்க்கெலாம் இருநிதி
தூசுடன் அளித்து
மன்னு பூந்தராய் வள்ளலார்
தமைத்திசை நோக்கிச்
சென்னி மேற்கரங் குவித்துவீழ்ந்
தெழுந்துசெந் நின்று.
1052

சுற்றம் நீடிய கிளையெலாம்
சூழ்ந்துடன் கேட்பக்
கற்ற மாந்தர்வாழ் காழிநா
டுடையவர்க் கடியேன்
பெற்றெ டுத்தபூம் பாவையும்
பிறங்கிய நிதியும்
முற்றும் என்னையும் கொடுத்தனன்
யானென்று மொழிந்தார்.
1053

எல்லை யில்பெருங் களிப்பினால்
இப்பரி சியம்பி
முல்லை வெண்ணகை முகிழ்முலை
யாருடன் முடியா
மல்கு செல்வத்தின் வளமையும்
மறைவளர் புகலிச்
செல்வ ரேயுடை யாரெனும்
சிந்தையால் மகிழ்ந்தார்.
1054

ஆற்று நாள்களில் அணங்கனார்
கன்னிமா டத்தின்
பால்த டம்பொழில் மருங்கினிற்
பனிமலர் கொய்வான்
போற்று வார்குழற் சேடிய
ருடன்புறம் போந்து
கோற்றொடித் தளிர்க் கையினால்
முகைமலர் கொய்ய.
1055
Go to top

அன்பர் இன்புறும் ஆர்வத்தின்
அளித்தபாங் கல்லால்
பொன்பி றங்குநீர்ப் புகலிகா
வலர்க்கிது புணரா
தென்ப துட்கொண்ட பான்மைஓர்
எயிற்றிளம் பணியாய்
முன்ப ணைந்தது போலவோர்
முள்ளெயிற்று அரவம்.
1056

மௌவல் மாதவிப் பந்தரில்
மறைந்துவந் தெய்திச்
செவ்வி நாண்முகை கவர்பொழு
தினில்மலர்ச் செங்கை
நவ்வி வாள்விழி நறுநுதற்
செறிநெறி கூந்தல்
கொவ்வை வாயவள் முகிழ்விரல்
கவர்ந்தது குறித்து.
1057

நாலு தந்தமும் என்புறக்
கவர்ந்துநஞ் சுகுத்து
மேலெ ழும்பணம் விரித்துநின்
றாடிவே றடங்க
நீல வல்விடந் தொடர்ந்தெழ
நேரிழை மென்பூ
மாலை தீயிடைப் பட்டது
போன்றுள மயங்கி.
1058

தரையில் வீழ்தரச் சேடியர்
வெருக்கொண்டு தாங்கி
வரைசெய் மாடத்தின் உட்கொடு
புகுந்திட வணிகர்
உரையும் உள்ளமும் நிலையழிந்
துறுதுயர் பெருகக்
கரையில் சுற்றமுந் தாமும்முன்
கலங்கினார் கலுழ்ந்தார்.
1059

விடந்தொ லைத்திடும் விஞ்சையில்
பெரியராம் மேலோர்
அடர்ந்த தீவிடம் அகற்றுதற்
கணைந்துளார் அனேகர்
திடங்கொள் மந்திரந் தியானபா
வகநிலை முட்டி
தொடர்ந்த செய்வினைத் தொழிலராய்த்
தனித்தனிச் சூழ்வார்.
1060
Go to top

மருந்தும் எண்ணில் மாறில
செய்யவும் வலிந்து
பொருந்து வல்விடம் ஏழுவே
கமும்முறை பொங்கிப்
பெருந்த டங்கண்மென் கொடியனாள்
தலைமிசைப் பிறங்கித்
திருந்து செய்வினை யாவையும்
கடந்துதீர்ந் திலதால்.
1061

ஆவி தங்குபல் குறிகளும்
அடைவில வாக
மேவு காருட விஞ்சைவித்
தகர்இது விதியென்
றோவும் வேளையில் உறுபெரும்
சுற்றமும் அலறிப்
பாவை மேல்விழுந் தழுதனர்
படரொலிக் கடல்போல்.
1062

சிந்தை வெந்துயர் உறுசிவ
நேசருந் தெளிந்து
வந்த செய்வினை இன்மையில்
வையகத் துள்ளோர்
இந்த வெவ்விடம் ஒழிப்பவர்க்கு
ஈகுவன்என் னுடைய
அந்த மில்நிதிக் குவையெனப்
பறையறை வித்தார்.
1063

முரசி யம்பிய மூன்றுநாள்
அகவயின் முற்ற
அரசர் பாங்குளோர் உட்பட
அவனிமே லுள்ள
கரையில் கல்வியோர் யாவரும்
அணைந்துதங் காட்சிப்
புரையில் செய்கையில் தீர்ந்திடா
தொழிந்திடப் போனார்.
1064

சீரின் மன்னிய சிவநேசர்
கண்டுளம் மயங்கிக்
காரின் மல்கிய சோலைசூழ்
கழுமலத் தலைவர்
சாரும் அவ்வள வும்முடல்
தழலிடை யடக்கிச்
சேர என்பொடு சாம்பல்சே
மிப்பது தெளிவார்.
1065
Go to top

உடைய பிள்ளையார்க் கெனஇவள்
அடைவு துன்புறு வதற்கிலை
யாம்நமக் கென்றே
இடரொ ழிந்தபின் அடக்கிய
என்பொடு சாம்பல்
புடைபெ ருத்தகும் பத்தினிற்
புகப்பெய்து வைப்பார்.
1066

கன்னி மாடத்தின் முன்புபோல்
பொன்னு முத்துமே லணிகலன்
பூந்துகில் சூழ்ந்து
பன்னு தூவியின் பஞ்சணை
விரைப்பள்ளி அதன்மேல்
மன்னு பொன்னரி மாலைகள்
அணிந்துவைத் தனரால்.
1067

மாலை சாந்தொடு மஞ்சனம்
நாடொறும் வழாமைப்
பாலி னேர்தரும் போனகம்
பகல்விளக்கு இனைய
சாலு நன்மையில் தகுவன
நாள்தொறுஞ் சமைத்தே
ஏலு மாசெய யாவரும்
வியப்பெய்து நாளில்.
1068

சண்பை மன்னவர் திருவொற்றி
யூர்நகர் சார்ந்து
பண்பு பெற்றநற் றொண்டர்க
ளுடன்பணிந் திருந்த
நண்பு மிக்கநல் வார்த்தைஅந்
நற்பதி யுள்ளோர்
வண்பு கழ்ப்பெரு வணிகர்க்கு
வந்துரை செய்தார்.
1069

சொன்ன வர்க்கெலாந் தூசொடு
காசுபொன் னளித்தே
இன்ன தன்மையர் எனவொணா
மகிழ்சிறந் தெய்தச்
சென்னி வாழ்மதி யார்திரு
வொற்றியூ ரளவும்
துன்னு நீள்நடைக் காவணந்
துகில்விதா னித்து.
1070
Go to top

மகர தோரணம் வண்குலைக்
கமுகொடு கதலி
நிகரில் பல்கொடித் தாமங்கள்
அணிபெற நிரைத்து
நகர நீள்மறுகு யாவையும்
நலம்புனை அணியால்
புகரில் பொன்னுல கிழிந்ததாம்
எனப்பொலி வித்தார்.
1071

இன்ன வாறணி செய்துபல்
குறைவறுப் பேவி
முன்னம் ஒற்றியூர் நகரிடை
முத்தமிழ் விரகர்
பொன்ன டித்தலம் தலைமிசைப்
புனைவனென் றெழுவார்
அந்ந கர்ப்பெருந் தொண்டரும்
உடன்செல வணைந்தார்.
1072

ஆய வேலையில் அருமறைப்
புகலியர் பிரானும்
மேய ஒற்றியூர் பணிபவர்
வியனகர் அகன்று
காயல் சூழ்கரைக் கடல்மயி
லாபுரி நோக்கித்
தூய தொண்டர்தம் குழாத்தொடும்
எதிர்வந்து தோன்ற.
1073

மாறில் வண்பெரு வணிகரும்
தொண்டரும் மலர்ந்த
நீறு சேர்தவக் குழாத்தினை
நீளிடைக் கண்டே
ஆறு சூடினார் திருமக
னார்அணைந் தாரென்
ஈறி லாததோர் மகிழ்ச்சியி
னால்விழுந் திறைஞ்ச.
1074

காழி நாடரும் கதிர்மணிச்
சிவிகைநின் றிழிந்து
சூழி ரும்பெருந் தொண்டர்முன்
தொழுதெழுந் தருளி
வாழி மாதவர் வணிகர்செய்
திறஞ்சொலக் கேட்டே
ஆழி சூழ்மயி லாபுரித்
திருநகர் அணைந்தார்.
1075
Go to top

அத்தி றத்துமுன் நிகழ்ந்தது
திருவுள்ளத்து அமைத்துச்
சித்தம் இன்புறு சிவநேசர்
தம்செயல் வாய்ப்பப்
பொய்த்த வச்சமண் சாக்கியர்
புறத்துறை அழிய
வைத்த வப்பெருங் கருணைநோக்
கால்மகிழ்ந் தருளி.
1076

கங்கை வார்சடை யார்கபா
லீச்சரத் தணைந்து
துங்க நீள்சுடர்க் கோபுரம்
தொழுதுபுக் கருளி
மங்கை பாகர்தம் கோயிலை
வலங்கொண்டு வணங்கிச்
செங்கை சென்னிமேல் குவிந்திடத்
திருமுன்பு சேர்ந்தார்.
1077

தேவ தேவனைத் திருக்கபா
லீச்சரத் தமுதைப்
பாவை பாகனைப் பரிவுறு
பண்பினால் பரவி
மேவு காதலின் விரும்பிய
விரைவினால் விழுந்து
நாவின் வாய்மையால் போற்றினார்
ஞானசம் பந்தர்.
1078

போற்றி மெய்யருள் திறம்பெறு
பரிவுடன் வணங்கி
நீற்றின் மேனியில் நிறைமயிர்ப்
புளகங்கள் நெருங்கக்
கூற்ற டர்த்தவர் கோயிலின்
புறம்புபோந் தருளி
ஆற்றும் இன்னருள் வணிகர்மேற்
செலவருள் செய்வார்.
1079

ஒருமை உய்த்தநல் லுணர்வி
னீர்உல கவர்அறிய
அருமை யால்பெறும் மகள்என்பு
நிறைத்தஅக் குடத்தைப்
பெரும யானத்து நடம்புரி
வார்பெருங் கோயில்
திரும திற்புற வாய்தலில்
கொணர்கென்று செப்ப.
1080
Go to top

அந்த மில்பெரு மகிழ்ச்சியால்
அவனிமேல் பணிந்து
வந்து தந்திரு மனையினில்
மேவிஅம் மருங்கு
கந்த வார்பொழில் கன்னிமா
டத்தினில் புக்கு
வெந்த சாம்பலோ டென்புசேர்
குடத்தைவே றெடுத்து.
1081

மூடு பன்மணிச் சிவிகையுள்
பெய்துமுன் போத
மாடு சேடியர் இனம்புடை
சூழ்ந்துவந் தணைய
ஆடல் மேவினார் திருக்கபா
லீச்சரம் அணைந்து
நீடு கோபுரத் தெதிர்மணிச்
சிவிகையை நீக்கி.
1082

அங்க ணாளர்தம் அபிமுகத்
தினில்அடி யுறைப்பால்
மங்கை என்புசேர் குடத்தினை
வைத்துமுன் வணங்கப்
பொங்கு நீள்புனற் புகலிகா
வலர்புவ னத்துத்
தங்கி வாழ்பவர்க் குறுதியாம்
நிலைமைசா திப்பார்.
1083

மாடம் ஓங்கிய மயிலைமா
நகருளார் மற்றும்
நாடு வாழ்பவர் நன்றியில்
சமயத்தி னுள்ளோர்
மாடு சூழ்ந்துகாண் பதற்குவந்
தெய்தியே மலிய
நீடு தேவர்கள் ஏனையோர்
விசும்பிடை நெருங்க.
1084

தொண்டர் தம்பெரும் குழாம்புடை
சூழ்தரத் தொல்லை
அண்டர் நாயகர் கோபுர
வாயில்நேர் அணைந்து
வண்டு வார்குழ லாள்என்பு
நிறைந்தமண் குடத்தைக்
கண்டு தம்பிரான் கருணையின்
பெருமையே கருதி.
1085
Go to top

இந்த மாநிலத் திறந்துளோர்
என்பினைப் பின்னும்
நந்து நன்னெறிப் படுத்திட
நன்மையாந் தன்மை
அந்த என்பொடு தொடர்ச்சியாம்
எனவருள் நோக்கால்
சிந்தும் அங்கம்அங் குடையபூம்
பாவைபேர் செப்பி.
1086

மண்ணி னில்பிறந் தார்பெறும்
பயன்மதி சூடும்
அண்ண லார்அடி யார்தமை
அமுதுசெய் வித்தல்
கண்ணி னால்அவர் நல்விழாப்
பொலிவுகண்டு ஆர்தல்
உண்மை யாம்எனில் உலகர்முன்
வருகஎன வுரைப்பார்.
1087

மன்னு வார்சடை யாரைமுன்
தொழுதுமட் டிட்ட
என்னும் நற்பதி கத்தினில்
போதியோ என்னும்
அன்ன மெய்த்திரு வாக்கெனும்
அமுதமவ் வங்கம்
துன்ன வந்துவந் துருவமாய்த்
தொக்கதக் குடத்துள்.
1088

ஆன தன்மையில் அத்திருப்
பாட்டினில் அடைவே
போன வாயுவும் வடிவமும்
பொலிவொடு நிரம்பி
ஏனை அக்குடத் தடங்கிமுன்
னிருந்தெழு வதன்முன்
ஞான போனகர் பின்சமண்
பாட்டினை நவில்வார்.
1089

தேற்ற மில்சமண் சாக்கியத்
திண்ணர்இச் செய்கை
ஏற்ற தன்றென எடுத்துரைப்
பார்என்ற போது
கோற்றொ டிச்செங்கை தோற்றிடக்
குடமுடைந் தெழுவாள்
போற்று தாமரைப் போதவிழ்ந்
தெழுந்தனள் போன்றாள்.
1090
Go to top

எடுத்த பாட்டினில்வடிவுபெற்
றிருநான்கு திருப்பாட்
டடுத்த அம்முறைப் பன்னிரண்
டாண்டள வணைந்து
தொடுத்த வெஞ்சமண் பாட்டினில்
தோன்றிடக் கண்டு
விடுத்த வேட்கையர் திருக்கடைக்
காப்புமேல் விரித்தார்.
1091

ஆங்கனம் எழுந்து நின்ற
அணங்கினை நோக்கு வார்கள்
ஈங்கிது காணீர் என்னா
அற்புத மெய்தும் வேலைப்
பாங்குசூழ் தொண்ட ரானோர்
அரகர என்னப் பார்மேல்
ஓங்கிய வோசை யும்பர்
நாட்டினை உற்ற தன்றே.
1092

தேவரும் முனிவர் தாமும்
திருவருட் சிறப்பு நோக்கிப்
பூவரு விரைகொள் மாரி
பொழிந்தனர் ஒழிந்த மண்ணோர்
யாவரும் இருந்த வண்ணம்
எம்பிரான் கருணை என்றே
மேவிய கைகள் உச்சி
மேற்குவித் திறைஞ்சி வீழ்ந்தார்.
1093

அங்கவள் உருவங் காண்பார்
அதிசயம் மிகவும் எய்திப்
பங்கமுற் றாரே போன்றார்
பரசம யத்தி னுள்ளோர்
எங்குள செய்கை தான்மற்
றென்செய்த வாறி தென்று
சங்கையாம் உணர்வு கொள்ளும்
சமணர்தள் ளாடி வீழ்ந்தார்.
1094

கன்னிதன் வனப்புத் தன்னைக்
கண்களால் முடியக் காணார்
முன்னுறக் கண்டார்க் கெல்லாம்
மொய்கருங் குழலின் பாரம்
மன்னிய வதன செந்தா
மரையின்மேல் கரிய வண்டு
துன்னிய ஒழுங்கு துற்ற
சூழல்போ லிருண்டு தோன்ற.
1095
Go to top

பாங்கணி சுரும்பு மொய்த்த
பனிமலர் அளகப் பந்தி
தேங்கமழ் ஆரம் சேரும்
திருநுதல் விளக்கம் நோக்கில்
பூங்கொடிக் கழகின் மாரி
பொழிந்திடப் புயற்கீ ழிட்ட
வாங்கிய வான வில்லின்
வளரொளி வனப்பு வாய்ப்ப.
1096

புருவமென் கொடிகள் பண்டு
புரமெரித் தவர்தம் நெற்றி
ஒருவிழி எரியில் நீறா
யருள்பெற உளனாம் காமன்
செருவெழும் தனுவ தொன்றும்
சேமவில் லொன்றும் ஆக
இருபெருஞ் சிலைகள் முன்கொண்
டெழுந்தன போல ஏற்ப.
1097

மண்ணிய மணியின் செய்ய
வளரொளி மேனி யாள்தன்
கண்ணிணை வனப்புக் காணில்
காமரு வதனத் திங்கள்
தண்ணளி விரிந்த சோதி
வெள்ளத்தில் தகைவின் நீள
ஒண்ணிறக் கரிய செய்ய
கயலிரண் டொத்து லாவ.
1098

பணிவளர் அல்குல் பாவை
நாசியும் பவள வாயும்
நணியபே ரொளியில் தோன்றும்
நலத்தினை நாடு வார்க்கு
மணிநிறக் கோபங் கண்டு
மற்றது வவ்வத் தாழும்
அணிநிறக் காம ரூபி
அனையதாம் அழகு காட்ட.
1099

இளமயில் அனைய சாயல்
ஏந்திழை குழைகொள் காது
வளமிகு வனப்பி னாலும்
வடிந்ததா ளுடைமை யாலும்
கிளரொளி மகர ஏறு
கெழுமிய தன்மை யாலும்
1100
Go to top

விற்பொலி தரளக் கோவை
விளங்கிய கழுத்து மீது
பொற்பமை வதன மாகும்
பதுமநன் னிதியம் பூத்த
நற்பெரும் பணிலம் என்னும்
நன்னிதி போன்று தோன்றி
அற்பொலி கண்டர் தந்த
அருட்கடை யாளங் காட்ட.
1101

எரியவிழ் காந்தள் மென்பூத்
தலைதொடுத் திசைய வைத்துத்
திரள்பெறச் சுருக்குஞ் செச்சை
மாலையோ தெரியின் வேறு
கருநெடுங் கயற்கண் மங்கை
கைகளால் காந்தி வெள்ளம்
அருகிழிந் தனவோ என்னும்
அதிசயம் வடிவில் தோன்ற.
1102

ஏர்கெழு மார்பிற் பொங்கும்
ஏந்திளங் கொங்கை நாகக்
கார்கெழு விடத்தை நீக்குங்
கவுணியர் தலைவர் நோக்கால்
ஆர்திரு வருளிற் பூரித்
தடங்கிய அமுத கும்பச்
சீர்கெழு முகிழைக் காட்டுஞ்
செவ்வியில் திகழ்ந்து தோன்ற.
1103

காமவேள் என்னும் வேடன்
உந்தியிற் கரந்து கொங்கை
நேமியம் புட்கள் தம்மை
யகப்பட நேரி தாய
தாமநீள் கண்ணி சேர்த்த
சலாகைதூக் கியதே போலும்
வாமமே கலைசூழ் வல்லி
மருங்கின்மேல் உரோம வல்லி.
1104

பிணியவிழ் மலர்மென் கூந்தல்
பெண்ணமு தனையாள் செம்பொன்
அணிவளர் அல்குல் தங்கள்
அரவுசெய் பிழையால் அஞ்சி
மணிகிளர் காஞ்சி சூழ்ந்து
வனப்புடை அல்கு லாகிப்
பணியுல காளும் சேடன்
பணம்விரித் தடைதல் காட்ட.
1105
Go to top

வரிமயில் அனைய சாயல்
மங்கைபொற் குறங்கின் மாமை
கரியிளம் பிடிக்கை வென்று
கதலிமென் தண்டு காட்டத்
தெரிவுறு மவர்க்கு மென்மைச்
செழுமுழந் தாளின் செவ்வி
புரிவுறு பொற்பந் தென்னப்
பொலிந்தொளி விளங்கிப் பொங்க.
1106

பூவலர் நறுமென் கூந்தல்
பொற்கொடி கணைக்கால் காமன்
ஆவநா ழிகையே போலும்
அழகினின் மேன்மை எய்த
மேவிய செம்பொன் தட்டின்
வனப்பினை மீதிட் டென்றும்
ஓவியர்க் கெழுத ஒண்ணாப்
பரட்டொளி ஒளிர்வுற் றோங்க.
1107

கற்பகம் ஈன்ற செவ்விக்
காமரு பவளச் சோதிப்
பொற்றிரள் வயிரப் பத்திப்
பூந்துணர் மலர்ந்த போலும்
நற்பதம் பொலிவு காட்ட
ஞாலமும் விசும்பும் எல்லாம்
அற்புதம் எய்தத் தோன்றி
அழகினுக் கணியாய் நின்றாள்.
1108

எண்ணில்ஆண் டெய்தும் வேதாப்
படைத்தவள் எழிலின் வெள்ளம்
நண்ணுநான் முகத்தால் கண்டான்
அவளினும் நல்லாள் தன்பால்
புண்ணியப் பதினா றாண்டு
பேர்பெறும் புகலி வேந்தர்
கண்ணுதல் கருணை வெள்ளம்
ஆயிர முகத்தாற் கண்டார்.
1109

இன்னணம் விளங்கிய ஏர்கொள் சாயலாள்
தன்னைமுன் கண்ணுறக் கண்ட தாதையார்
பொன்னணி மாளிகைப் புகலி வேந்தர்தாள்
சென்னியிற் பொருந்தமுன் சென்று வீழ்ந்தனர்.
1110
Go to top

அணங்கினும் மேம்படும் அன்னம் அன்னவள்
பணம்புரி யரவரைப் பரமர் முன்பணிந்
திணங்கிய முகில்மதில் சண்பை யேந்தலை
வணங்கியே நின்றனள் மண்ணு ளோர்தொழ.
1111

சீர்கெழு சிவநேசர் தம்மை முன்னமே
கார்கெழு சோலைசூழ் காழி மன்னவர்
ஏர்கெழு சிறப்பில்நும் மகளைக் கொண்டினிப்
பார்கெழு மனையினிற் படர்மின் என்றலும்.
1112

பெருகிய அருள்பெறும் வணிகர் பிள்ளையார்
மருவுதா மரையடி வணங்கிப் போற்றிநின்
றருமையால் அடியனேன் பெற்ற பாவையைத்
திருமணம் புணர்ந்தருள் செய்யும் என்றலும்.
1113

மற்றவர் தமக்குவண் புகலி வாணர்நீர்
பெற்றபெண் விடத்தினால் வீந்த பின்னையான்
கற்றைவார் சடையவர் கருணை காண்வர
உற்பவிப் பித்தலால் உரைத காதென.
1114

வணிகருஞ் சுற்றமும் மயங்கிப் பிள்ளையார்
அணிமல ரடியில்வீழ்ந் தரற்ற ஆங்கவர்
தணிவில்நீள் பெருந்துயர் தணிய வேதநூல்
துணிவினை யருள்செய்தார் தூய வாய்மையார்.
1115
Go to top

தெள்ளுநீ தியின்முறை கேட்ட சீர்கிளை
வெள்ளமும் வணிகரும் வேட்கை நீத்திடப்
பள்ளநீர்ச் செலவெனப் பரமர் கோயிலின்
உள்ளெழுந் தருளினார் உடைய பிள்ளையார்.
1116

பான்மையால் வணிகரும் பாவை தன்மணம்
ஏனையோர்க் கிசைகிலேன் என்று கொண்டுபோய்
வானுயர் கன்னிமா டத்து வைத்தனர்
தேனமர் கோதையும் சிவத்தை மேவினாள்.
1117

தேவர்பிரான் அமர்ந்தருளும்
திருக்கபா லீச்சரத்து
மேவியஞா னத்தலைவர்
விரிஞ்சன்முதல் எவ்வுயிர்க்கும்
காவலனார் பெருங்கருணை
கைதந்த படிபோற்றிப்
பாவலர்செந் தமிழ்பாடிப்
பன்முறையும் பணிந்தெழுவார்.
1118

தொழுதுபுறம் போந்தருளித்
தொண்டர்குழாம் புடைசூழப்
பழுதில்புகழ்த் திருமயிலைப்
பதியில்அமர்ந் தருளுநாள்
முழுதுலகுந் தருமிறைவர்
முதல்தானம் பலஇறைஞ்ச
அழுதுலகை வாழ்வித்தார்
அப்பதியின் மருங்ககல்வார்.
1119

திருத்தொண்டர் அங்குள்ளார்
விடைகொள்ளச் சிவநேசர்
வருத்தம்அகன் றிடமதுர
மொழியருளி விடைகொடுத்து
நிருத்தர்உறை பிறபதிகள்
வணங்கிப்போய் நிறைகாதல்
அருத்தியொடும் திருவான்மி
யூர்பணிய அணைவுற்றார்.
1120
Go to top

திருவான்மி யூர்மன்னும்
திருத்தொண்டர் சிறப்பெதிர
வருவார்மங் கலஅணிகள்
மறுகுநிரைத் தெதிர்கொள்ள
அருகாக இழிந்தருளி
அவர்வணங்கத் தொழுதன்பு
தருவார்தங் கோயில்மணித்
தடநெடுங்கோ புரம்சார்ந்தார்.
1121

மிக்குயர்ந்த கோபுரத்தை
வணங்கிவியன் திருமுன்றில்
புக்கருளிக் கோயிலினைப்
புடைவலங்கொண் டுள்ளணைந்து
கொக்கிறகு மதிக்கொழுந்தும்
குளிர்புனலும் ஒளிர்கின்ற
செக்கர்நிகர் சடைமுடியார்
சேவடியின் கீழ்த்தாழ்ந்தார்.
1122

தாழ்ந்துபல முறைபணிந்து
தம்பிரான் முன்னின்று
வாழ்ந்துகளி வரப்பிறவி
மருந்தான பெருந்தகையைச்
சூழ்ந்தஇசைத் திருப்பதிகச்
சொன்மாலை வினாவுரையால்
வீழ்ந்தபெருங் காதலுடன்
சாத்திமிக இன்புற்றார்.
1123

பரவிவரும் ஆனந்தம்
நிறைந்ததுளி கண்பனிப்ப
விரவுமயிர்ப் புளகங்கள்
மிசைவிளங்கப் புறத்தணைவுற்
றரவநெடுந் திரைவேலை
அணிவான்மி யூர்அதனுள்
சிரபுரத்துப் புரவலனார்
சிலநாள்அங் கினிதமர்ந்தார்.
1124

அங்கண்அமர் வார்உலகா
ளுடையாரை அருந்தமிழின்
பொங்கும்இசைப் பதிகங்கள்
பலபோற்றிப் போந்தருளிக்
கங்கையணி மணிமுடியார்
பதிபலவும் கலந்திறைஞ்சிச்
செங்கண்விடைக் கொடியார்தம்
இடைச்சுரத்தைச் சேர்வுற்றார்.
1125
Go to top

சென்னியிள மதியணிந்தார்
மருவுதிரு இடைச்சுரத்து
மன்னுதிருத் தொண்டர்குழாம்
எதிர்கொள்ள வந்தருளி
நன்நெடுங்கோ புரம்இறைஞ்சி
உட்புகுந்து நற்கோயில்
தன்னைவலங் கொண்டணைந்தார்
தம்பிரான் திருமுன்பு.
1126

கண்டபொழு தேகலந்த
காதலால் கைதலைமேல்
கொண்டுதலம் உறவிழுந்து
குலவுபெரு மகிழ்ச்சியுடன்
மண்டியபே ரன்புருகி
மயிர்முகிழ்ப்ப வணங்கிஎழுந்
தண்டர்பிரான் திருமேனி
வண்ணங்கண்டு அதிசயித்தார்.
1127

இருந்தஇடைச் சுரம்மேவும்
இவர்வண்ணம் என்னேயென்
றருந்தமிழின் திருப்பதிகத்
தலர்மாலை கொடுபரவித்
திருந்துமனங் கரைந்துருகத்
திருக்கடைக்காப் புச்சாத்திப்
பெருந்தனிவாழ் வினைப்பெற்றார்
பேருலகின் பேறானார்.
1128

நிறைந்தாரா வேட்கையினால்
நின்றிறைஞ்சிப் புறம்போந்தங்
குறைந்தருளிப் பணிகின்றார்
உமைபாகர் அருள்பெற்றுச்
சிறந்ததிருத் தொண்டருடன்
எழுந்தருளிச் செந்துருத்தி
அறந்தளிகள் பயில்சாரல்
திருக்கழுக்குன் றினைஅணைந்தார்.
1129

சென்றணையும் பொழுதின்கண்
திருத்தொண்டர் எதிர்கொள்ளப்
பொன்திகழும் மணிச்சிவிகை
இழிந்தருளி உடன்போந்து
மன்றல்விரி நறுஞ்சோலைத்
திருமலையை வலங்கொண்டு
மின்தயங்கும் சடையாரை
விருப்பினுடன் பணிகின்றார்.
1130
Go to top

திருக்கழுக்குன் றத்தமர்ந்த
செங்கனகத் தனிக்குன்றைப்
பெருக்கவளர் காதலினால்
பணிந்தெழுந்து பேராத
கருத்தினுடன் காதல்செயுங்
கோயில்கழுக் குன்றென்று
திருப்பதிகம் புனைந்தருளிச்
சிந்தைநிறை மகிழ்வுற்றார்.
1131

இன்புற்றங் கமர்ந்தருளி
ஈறில்பெருந் தொண்டருடன்
மின்பெற்ற வேணியினார்
அருள்பெற்றுப் போந்தருளி
என்புற்ற மணிமார்பர்
எல்லையிலா ஆட்சிபுரிந்
தன்புற்று மகிழ்ந்ததிரு
அச்சிறுபாக் கத்தணைந்தார்.
1132

ஆதிமுதல் வரைவணங்கி
ஆட்சிகொண்டார் எனமொழியும்
கோதில்திருப் பதிகஇசை
குலவியபா டலில்போற்றி
மாதவத்து முனிவருடன்
வணங்கிமகிழ்ந் தின்புற்றுத்
தீதகற்றுஞ் செய்கையினார்
சின்னாள்அங் கமர்ந்தருளி.
1133

ஏறணிந்த வெல்கொடியார்
இனிதமர்ந்த பதிபிறவும்
நீறணிந்த திருத்தொண்டர்
எதிர்கொள்ள நேர்ந்திறைஞ்சி
வேறுபல நதிகானம்
கடந்தருளி விரிசடையில்
ஆறணிந்தார் மகிழ்ந்ததிரு
அரசிலியை வந்தடைந்தார்.
1134

அரசிலியில் அமர்ந்தருளும்
அங்கண்அர சைப்பணிந்து
பரசியெழு திருப்புறவார்
பனங்காட்டூர் முதலாய
விரைசெய்மலர்க் கொன்றையினார்
மேவுபதி பலவணங்கித்
திரைசெய்நெடுங் கடலுடுத்த
திருத்தில்லை நகரணைந்தார்.
1135
Go to top

எல்லையில்ஞா னத்தலைவர்
எழுந்தருள எதிர்கொள்வார்
தில்லையில்வா ழந்தணர்மெய்த்
திருத்தொண்டர் சிறப்பினொடு
மல்கியெதிர் பணிந்திறைஞ்ச
மணிமுத்தின் சிவிகையிழிந்
தல்கு பெருங் காதலுடன்
அஞ்சலிகொண் டணைகின்றார்.
1136

திருவெல்லை யினைப்பணிந்து
சென்றணைவார் சேண்விசும்பை
மருவிவிளங் கொளிதழைக்கும்
வடதிசைவா யிலைவணங்கி
உருகுபெருங் காதலுடன்
உட்புகுந்து மறையினொலி
பெருகிவளர் மணிமாடப்
பெருந்திருவீ தியைஅணைந்தார்.
1137

நலம்மலியும் திருவீதி
பணிந்தெழுந்து நற்றவர்தம்
குலம்நிறைந்த திருவாயில்
குவித்தமலர்ச் செங்கையொடு
தலம்உறமுன் தாழ்ந்தெய்தித்
தமனியமா ளிகைமருங்கு
வலம் உறவந் தோங்கியபே
ரம்பலத்தை வணங்கினார்.
1138

வணங்கிமிக மனம்மகிழ்ந்து
மாலயனும் தொழும்பூத
கணங்கள்மிடை திருவாயில்
பணிந்தெழுந்து கண்களிப்ப
அணங்குதனிக் கண்டருள
அம்பலத்தே ஆடுகின்ற
குணங்கடந்த தனிக்கூத்தர்
பெருங்கூத்துக் கும்பிடுவார்.
1139

தொண்டர்மனம் பிரியாத
திருப்படியைத் தொழுதிறைஞ்சி
மண்டுபெருங் காதலினால்
நோக்கிமுகம் மலர்ந்தெழுவார்
அண்டமெலாம் நிறைந்தெழுந்த
ஆனந்தத் துள்ளலைந்து
கண்டபே ரின்பத்தின்
கரையில்லா நிலையணைந்தார்.
1140
Go to top

அந்நிலைமை யடைந்துதிளைத்
தாங்கெய்தாக் காலத்தின்
மன்னுதிரு அம்பலத்தை
வலங்கொண்டு போந்தருளிப்
பொன்னணிமா ளிகைவீதிப்
புறத்தணைந்து போதுதொறும்
இன்னிசைவண் தமிழ்பாடிக்
கும்பிட்டங் கினிதமர்ந்தார்.
1141

திருந்தியசீர்த் தாதையார்
சிவபாத இருதயரும்
பொருந்துதிரு வளர்புகலிப்
பூசுரரும் மாதவரும்
பெருந்திருமால் அயன்போற்றும்
பெரும்பற்றப் புலியூரில்
இருந்தமிழா கரர்அணைந்தார்
எனக்கேட்டு வந்தணைந்தார்.
1142

ஆங்கவரைக் கண்டுசிறப்
பளித்தருளி அவரோடும்
தாங்கரிய காதலினால்
தம்பெருமான் கழல்வணங்க
ஓங்குதிருத் தில்லைவாழ்
அந்தணரும் உடனாகத்
தேங்கமழ்கொன் றைச்சடையார்
திருச்சிற்றம் பலம்பணிந்தார்.
1143

தென்புகலி அந்தணரும்
தில்லைவா ழந்தணரும்
அன்புநெறி பெருக்குவித்த
ஆண்தகையார் அடிபோற்றிப்
பொன்புரிசெஞ் சடைக்கூத்தர்
அருள்பெற்றுப் போந்தருளி
இன்புறுதோ ணியில்அமர்ந்தார்
தமைவணங்க எழுந்தருள.
1144

நற்றவர்தங் குழாத்தோடும்
நம்பர்திரு நடம்செய்யும்
பொற்பதியின் திருவெல்லை
பணிந்தருளிப் புறம்போந்து
பெற்றம்உயர்த் தவர்அமர்ந்த
பிறபதியும் புக்கிறைஞ்சிக்
கற்றவர்கள் பரவுதிருக்
கழுமலமே சென்றடைவார்.
1145
Go to top

பல்பதிகள் கடந்தருளிப்
பன்னிரண்டு பெயர்படைத்த
தொல்லைவளப் பூந்தராய்
தூரத்தே தோன்றுதலும்
மல்குதிரு மணிமுத்தின்
சிவிகையிழிந் தெதிர்வணங்கிச்
செல்வமிகு பதியதன்மேல்
திருப்பதிகம் அருள் செய்வார்.
1146

மன்னுமிசை மொழிவண்டார்
குழலரிவை என்றெடுத்து
மின்னுசுடர் மாளிகைவிண்
தாங்குவபோல் வேணுபுரம்
என்னும்இசைச் சொன்மாலை
எடுத்தியம்பி எழுந்தருளிப்
புன்னைமணங் கமழ்புறவப்
புறம்பணையில் வந்தணைந்தார்.
1147

வாழிவளர் புறம்பணையின்
மருங்கணைந்து வரிவண்டு
சூழுமலர் நறுந்தீப
தூபங்க ளுடன்தொழுது
காழிநகர் சேர்மின்எனக்
கடைமுடிந்த திருப்பதிகம்
ஏழிசையி னுடன்பாடி
எயில்மூதூர் உட்புகுந்தார்.
1148

சேணுயர்ந்த திருத்தோணி
வீற்றிருந்த சிவபெருமான்
தாள்நினைந்த ஆதரவின்
தலைப்பாடு தனையுன்னி
நீள்நிலைக்கோ புரம்அணைந்து
நேரிறைஞ்சிப் புக்கருளி
வாள்நிலவு பெருங்கோயில்
வலங்கொண்டு முன்பணிந்தார்.
1149

முன்னிறைஞ்சித் திருவருளின்
முழுநோக்கம் பெற்றேறிப்
பொன்னிமயப் பாவையுடன்
புணர்ந்திருந்த புராதனரைச்
சென்னிமிசைக் குவித்தகரம்
கொடுவிழுந்து திளைத்தெழுந்து
மன்னுபெரு வாழ்வெய்தி
மனங்களிப்ப வணங்குவார்.
1150
Go to top

பரவுதிருப் பதிகங்கள்
பலவும்இசை யினிற்பாடி
விரவியகண் ணருவிநீர்
வெள்ளத்திற் குளித்தருளி
அரவணிந்தார் அருள்பெருகப்
புறம்பெய்தி அன்பருடன்
சிரபுரத்துப் பெருந்தகையார்
தந்திருமா ளிகைசேர்ந்தார்.
1151

மாளிகையின் உள்ளணைந்து
மறையவர்கட் கருள்புரிந்து
தாள்பணியும் பெருங்கிளைக்குத்
தகுதியினால் தலையளிசெய்
தாளுடைய தம்பெருமான்
அடியவர்க ளுடன்அமர்ந்து
நீளவரும் பேரின்பம்
மிகப்பெருக நிகழுநாள்.
1152

காழிநா டுடையபிரான்
கழல்வணங்கி மகிழ்வெய்த
ஆழியினும் மிகப்பெருகும்
ஆசையுடன் திருமுருகர்
வாழிதிரு நீலநக்கர்முதல்
தொண்டர் மற்றெனையோர்
சூழுநெடுஞ் சுற்றமுடன்
றோணிபுரந் தொழுதணைந்தார்.
1153

வந்தவரை எதிர்கொண்டு
மனமகிழ்ந்து சண்பையர்கோன்
அந்தமில்சீர் அடியார்க
ளவரோடு மினிதமர்ந்து
சுந்தரவா ரணங்கினுடன்
றோணியில்வீற் றிருந்தாரைச்
செந்தமிழின் பந்தத்தால்
திருப்பதிகம் பலபாடி.
1154

பெருமகிழ்ச்சி யுடன்செல்லப்
பெருந்தவத்தால் பெற்றவரும்
மருவுபெருங் கிளையான
மறையவரும் உடன்கூடித்
திருவளர்ஞா னத்தலைவர்
திருமணம்செய் தருளுதற்குப்
பருவம்இது என்றெண்ணி
அறிவிக்கப் பாங்கணைந்தார்.
1155
Go to top

நாட்டுமறை முறையொழுக்கம்
ஞானபோ னகருக்கும்
கூட்டுவது மனங்கொள்வார்
கோதில்மறை நெறிச்சடங்கு
காட்டவரும் வேள்விபல
புரிவதற்கோர் கன்னிதனை
வேட்டருள வேண்டுமென
விண்ணப்பம் செய்தார்கள்.
1156

மற்றவர்தம் மொழிகேட்டு
மாதவத்தின் கொழுந்தனையார்
சுற்றமுறு பெரும்பாசத்
தொடர்ச்சிவிடு நிலைமையராய்ப்
பெற்றம்உயர்த் தவரருள்முன்
பெற்றதனால் இசையாது
முற்றியதா யினுங்கூடா
தென்றவர்முன் மொழிந்தருள.
1157

அருமறையோர் அவர்பின்னும்
கைதொழுதங் கறிவிப்பார்
இருநிலத்து மறைவழக்கம்
எடுத்தீர்நீர் ஆதலினால்
வருமுறையால் அறுதொழிலின்
வைதிகமா நெறியொழுகும்
திருமணம்செய் தருளுதற்குத்
திருவுள்ளம் செய்யுமென.
1158

மறைவாழ அந்தணர்தம்
வாய்மையொழுக் கம்பெருகும்
துறைவாழச் சுற்றத்தார்
தமக்கருளி உடன்படலும்
பிறைவாழுந் திருமுடியில்
பெரும்புனலோ டரவணிந்த
கறைவாழுங் கண்டத்தார்
தமைத்தொழுது மனங்களித்தார்.
1159

திருஞான சம்பந்தர்
திருவுள்ளஞ் செய்ததற்குத்
தருவாய்மை மறையவரும்
தாதையரும் தாங்கரிய
பெருவாழ்வு பெற்றாராய்ப்
பிஞ்ஞகனார் அருளென்றே
உருகாநின்று இன்பமுறும்
உளமகிழ்ச்சி எய்துவார்.
1160
Go to top

ஏதமில்சீர் மறையவரில்
ஏற்றகுலத் தோடிசைவால்
நாதர்திருப் பெருமணத்து
நம்பாண்டார் நம்பிபெறும்
காதலியைக் காழிநா
டுடையபிரான் கைப்பிடிக்கப்
போதுமவர் பெருந்தன்மை
எனப்பொருந்த எண்ணினார்.
1161

திருஞான சம்பந்தர்
சீர்பெருக மணம்புணரும்
பெருவாழ்வு திருத்தொண்டர்
மறையவர்கள் மிகப்பேண
வருவாரும் பெருஞ்சுற்றம்
மகிழ்சிறப்ப மகள்பேசத்
தருவார்தண் பணைநல்லூர்
சார்கின்றார் தாதையார்.
1162

மிக்கதிருத் தொண்டர்களும்
வேதியரும் உடன்ஏகத்
திக்குநிகழ் திருநல்லூர்ப்
பெருமணத்தைச் சென்றெய்தத்
தக்கபுகழ் நம்பாண்டார்
நம்பிதாம் அதுகேட்டுச்
செக்கர்முடிச் சடையார்தம்
திருப்பாதம் தொழுதெழுவார்.
1163

ஒப்பரிய பேருவகை
ஓங்கியெழும் உள்ளத்தால்
அப்புநிறை குடம்விளக்கு
மறுகெல்லாம் அணிபெருக்கிச்
செப்பரிய ஆர்வமிகு
பெருஞ்சுற்றத் தொடுஞ்சென்றே
எப்பொருளும் எய்தினேன்
எனத்தொழுதங் கெதிர்கொண்டார்.
1164

எதிர்கொண்டு மணிமாடத்
தினில்எய்தி இன்பமுறு
மதுரமொழி பலமொழிந்து
வரன்முறையால் சிறப்பளிப்பச்
சதுர்முகனின் மேலாய
சண்பைவரு மறையவரும்
முதிருணர்வின் மாதவரும்
அணைந்ததிறம் மொழிகின்றார்.
1165
Go to top

ஞானபோ னகருக்கு
நற்றவத்தின் ஒழுக்கத்தால்
ஊனமில்சீ லத்தும்பால்
மகட்பேச வந்ததென
ஆனபே றந்தணர்பால்
அருளுடைமை யாம்என்று
வானளவு நிறைந்தபெரு
மனமகிழ்ச்சி யொடுமொழிவார்.
1166

உம்முடைய பெருந்தவத்தால்
உலகனைத்தும் ஈன்றளித்த
அம்மைதிரு முலைப்பாலில்
குழைத்தஆ ரமுதுண்டார்க்
கெம்முடைய குலக்கொழுந்தை
யாமுய்யத் தருகின்றோம்
வம்மின்என உரைசெய்து
மனமகிழ்ந்து செலவிடுத்தார்.
1167

பேருவகை யால்இசைவு
பெற்றவர்தாம் மீண்டணைந்து
காருலவு மலர்ச்சோலைக்
கழுமலத்தை வந்தெய்திச்
சீருடைய பிள்ளையார்க்கு
அவர்நேர்ந்த படிசெப்பிப்
பார்குலவும் திருமணத்தின்
பான்மைவினை தொடங்குவார்.
1168

திருமணஞ்செய் கலியாணத்
திருநாளும் திகழ்சிறப்பின்
மருவிய ஓரையுங்கணித
மங்கலநூ லவர்வகுப்பப்
பெருகுமண நாள்ஓலை
பெருஞ்சிறப்பி னுடன் போக்கி
அருள்புரிந்து நன்னாளில்
அணிமுளைப்பா லிகைவிதைத்தார்.
1169

செல்வம்மலி திருப்புகலிச்
செழுந்திருவீ திகளெல்லாம்
மல்குநிறை குடம்விளக்கு
மகரதோ ரணம் நிரைத்தே
எல்லையிலா வொளிமுத்து
மாலைகளெங் கணும் நாற்றி
அல்கு பெருந் திருவோங்க
அணிசிறக்க அலங்கரித்தார்.
1170
Go to top

அருந்தவத்தோர் அந்தணர்கள்
அயலுள்ளோர் தாம்உய்யப்
பொருந்துதிரு நாள்ஓலை
பொருவிறந்தார் கொண்டணையத்
திருந்துபுகழ் நம்பாண்டார்
நம்பிசிறப் பெதிர்கொண்டு
வருந்தவத்தால் மகட்கொடுப்பார்
வதுவைவினை தொடங்குவார்.
1171

மன்னுபெருஞ் சுற்றத்தார்
எல்லாரும் வந்தீண்டி
நன்னிலைமைத் திருநாளுக்
கெழுநாளாம் நன்னாளில்
பன்மணிமங் கலமுரசம்
பல்லியங்கள் நிறைந்தார்ப்ப
பொன்மணிப்பா லிகைமீது
புனிதமுளை பூரித்தார்.
1172

சேணுயரும் மாடங்கள்
திருப்பெருகு மண்டபங்கள்
நீணிலைய மாளிகைகள்
நிகரில்அணி பெறவிளக்கிக்
காணவரு கைவண்ணம்
கவின்ஓங்கும் படியெழுதி
வாணிலவு மணிக்கடைக்கண்
மங்கலக்கோ லம்புனைந்து.
1173

நீடுநிலைத் தோரணங்கள்
நீள்மறுகு தொறும்நிரைத்து
மாடுயரும் கொடிமாலை
மணிமாலை இடைப்போக்கிச்
சேடுயரும் வேதிகைகள்
செழுஞ்சாந்து கொடுநீவிப்
பீடுகெழு மணிமுத்தின்
பெரும்பந்தர் பலபுனைந்தார்.
1174

மன்றல்வினைத் திருமுளைநாள்
தொடங்கிவரு நாளெல்லாம்
முன்றில்தொறும் வீதிதொறும்
முகநெடுவா யில்கள்தொறும்
நின்றொளிரும் மணிவிளக்கு
நிறைவாசப் பொற்குடங்கள்
துன்றுசுடர்த் தாமங்கள்
தூபங்கள் துதைவித்தார்.
1175
Go to top

எங்கணும்மெய்த் திருத்தொண்டர்
மறையவர்கள் ஏனையோர்
மங்கலநீள் மணவினைநாள்
கேட்டுமிக மகிழ்வெய்திப்
பொங்குதிருப் புகலிதனில்
நாள்தோறும் புகுந்துஈண்ட
அங்கண்அணைந் தவர்க்கெல்லாம்
பெருஞ்சிறப்பு மிகவளித்தார்.
1176

மங்கலதூ ரியநாதம்
மறுகுதொறும் நின்றியம்பப்
பொங்கியநான் மறையோசை
கடலோசை மிசைபொலியத்
தங்குநறுங் குறையகிலின்
தழைத்தசெழும் புகையினுடன்
செங்கனல்ஆ குதிப்புகையும்
தெய்வவிரை மணம்பெருக.
1177

எண்திசையில் உள்ளோரும்
ஈண்டுவளத் தொடுநெருங்கப்
பண்டநிறை சாலைகளும்
பலவேறு விதம்பயில
மண்டுபெரு நிதிக்குவைகள்
மலைப்பிறங்கல் எனமலிய
உண்டிவினைப் பெருந்துழனி
ஓவாத ஒலியோங்க.

1178

மாமறைநூல் விதிச்சடங்கின்
வகுத்தமுறை நெறிமரபின்
தூமணநல் லுபகரணம்
சமைப்பவர்தந் தொழில்துவன்றத்
தாமரையோன் அனையபெருந்
தவமறையோர் தாம்எடுத்த
பூமருவு பொற்கலசப்
புண்ணியநீர் பொலிவெய்த.
1179

குங்குமத்தின் செழுஞ்சேற்றின்
கூட்டமைப்போர் இனங்குழுமப்
பொங்குவிரைப் புதுக்கலவைப்
புகையெடுப்போர் தொகைவிரவத்
துங்கநறுங் கர்ப்பூரச்
சுண்ணம்இடிப் போர்நெருங்க
எங்குமலர்ப் பிணைபுனைவோர்
ஈட்டங்கள் மிகப்பெருக.
1180
Go to top

இனையபல வேறுதொழில்
எம்மருங்கும் நிரைத்தியற்று
மனைவளரு மறுகெல்லாம்
மணவணிசெய் மறைமூதூர்
நினைவரிய பெருவளங்கள்
நெருங்குதலால் நிதிக்கோமான்
தனையிறைவர் தாம்ஏவச்
சமைத்ததுபோல் அமைந்துளதால்.
1181

மாறி லாநிறை வளந்தரு
புகலியின் மணமீக்
கூறு நாளின்முன் னாளினில்
வேதியர் குழாமும்
நீறு சேர்திருத் தொண்டரும்
நிகரிலா தவருக்
காறு சூடினார் அருள்திருக்
காப்புநா ணணிவார்.
1182

வேத வாய்மையின் விதியுளி
வினையினால் விளங்க
ஓத நீர்உல கியல்முறை
ஒழுக்கமும் பெருகக்
காதல் நீள்திருத் தொண்டர்கள்
மறையவர் கவினார்
மாதர் மைந்தர்பொற் காப்புநாண்
நகர்வலம் செய்தார்.
1183

நகர்வ லஞ்செய்து புகுந்தபின்
நவமணி யணிந்த
புகரில் சித்திர விதானமண்
டபத்தினிற் பொலியப்
பகரும் வைதிக விதிச்சமா
வர்த்தனப் பான்மை
திகழ முற்றிய செம்மலார்
திருமுன்பு சேர்ந்தார்.
1184

செம்பொ னின்பரி கலத்தினில்
செந்நெல்வெண் பரப்பின்
வம்ப ணிந்தநீள் மாலைசூழ்
மருங்குற வமைத்த
அம்பொன் வாசநீர்ப் பொற்குடம்
அரசிலை தருப்பை
பம்பு நீள்சுடர் மணிவிளக்
கொளிர்தரும் பரப்பில்.
1185
Go to top

நாத மங்கல முழக்கொடு
நற்றவ முனிவர்
வேத கீதமும் விம்மிட
விரைகமழ் வாசப்
போது சாந்தணி பூந்துகில்
புனைந்தபுண் ணியம்போல்
மீது பூஞ்சய னத்திருந்
தவர்முன்பு மேவி.
1186

ஆர்வ மிக்கெழும் அன்பினால்
மலர்அயன் அனைய
சீர்ம றைத்தொழிற் சடங்குசெய்
திருந்துநூல் முனிவர்
பார்வ ழிப்பட வரும்இரு
வினைகளின் பந்தச்
சார்பொ ழிப்பவர் திருக்கையில்
காப்புநாண் சாத்த.
1187

கண்ட மாந்தர்கள் கடிமணம்
காணவந் தணைவார்
கொண்ட வல்வினை யாப்பவிழ்
கொள்கைய வான
தொண்டர் சிந்தையும் வதனமும்
மலர்ந்தன சுருதி
மண்டு மாமறைக் குலம்எழுந்
தார்த்தன மகிழ்ந்தே.
1188

நிரந்த கங்குலின் நிதிமழை
விதிமுறை யெவர்க்கும்
புரந்த ஞானசம் பந்தர்தாம்
புன்னெறிச் சமய
அரந்தை வல்லிருள் அகலமுன்
னவதரித் தாற்போல்
பரந்த பேரிருள் துரந்துவந்
தெழுந்தனன் பகலோன்.
1189

அஞ்சி றைச்சுரும் பறைபொழில்
சண்பையாண் டகையார்
தம்சி வத்திரு மணஞ்செயத்
தவஞ்செய்நாள் என்று
மஞ்ச னத்தொழில் புரிந்தென
மாசிருள் கழுவிச்
செஞ்சு டர்கதிர்ப் பேரணி
யணிந்தன திசைகள்.
1190
Go to top

பரம்பு தம்வயின் எங்கணும்
உள்ளபல் வளங்கள்
நிரம்ப முன்கொணர்ந் தெண்திசை
யவர்நெருங் குதலால்
தரங்க டந்தவர் தந்திருக்
கல்லியா ணத்தின்
வரம்பில் தன்பயன் காட்டுவ
தொத்தது வையம்.
1191

நங்கள் வாழ்வென வருந்திரு
ஞானசம் பந்தர்
மங்க லத்திரு மணவெழுச்
சியின்முழக் கென்னத்
துங்க வெண்திரைச் சுரிவளை
ஆர்ப்பொடு சூழ்ந்து
பொங்கு பேரொலி முழக்குடன்
எழுந்தது புணரி.
1192

அளக்கர் ஏழும்ஒன் றாமெனும்
பெருமையெவ் வுலகும்
விளக்கு மாமண விழாவுடன்
விரைந்துசெல் வனபோல்
துளக்கில் வேதியர் ஆகுதி
தொடங்கிடா முன்னம்
வளர்க்கும் வேதியில் வலஞ்சுழித்
தெழுந்தது வன்னி.
1193

சந்த மென்மலர்த் தாதணி
நீறுமெய் தரித்துக்
கந்தம் மேவுவண்டு ஒழுங்கெனுங்
கண்டிகை பூண்டு
சிந்தை தூயஅன் பர்களுடன்
திருமணம் போத
மந்த சாரியின் மணங்கொணர்ந்
தெழுந்தது மருத்து.
1194

எண்தி சைத்தலத் தியாவரும்
புகலிவந் தெய்தி
மண்டும் அத்திரு மணஎழுச்
சியின்அணி வாய்ப்பக்
கொண்ட வெண்ணிறக் குரூஉச்சுடர்க்
கொண்டல்கள் என்னும்
வெண்து கிற்கொடி நிரைத்தது
போன்றது விசும்பு.
1195
Go to top

ஏல இந்நலம் யாவையும்
எழுச்சிமுன் காட்டும்
காலை செய்வினை முற்றிய
கவுணியர் பெருமான்
மூல மாகிய தோணிமேல்
முதல்வரை வணங்கிச்
சீல மார்திரு வருளினால்
மணத்தின்மேற் செல்வார்.
1196

காழி மாநகர் வேதியர்
குழாத்தொடும் கலந்து
சூழும் அன்பர்கள் ஏனையோர்
துதைந்துமுன் செல்ல
வாழி மாமறை முழங்கிட
வளம்பதி வணங்கி
நீழல் வெண்சுடர் நித்திலச்
சிவிகைமேற் கொண்டார்.
1197

ஆன வாகனம் ஏறுவார்
யாரும்மேற் கொள்ளக்
கான மாகிய தொங்கல்பிச்
சங்குடை கவரி
மேனெ ருங்கிட விசும்பினும்
நிலத்தினும் எழுந்த
வான துந்துபி முழக்குடன்
மங்கல வியங்கள்.
1198

சங்கொடு தாரை சின்னம்
தனிப்பெருங் காளந் தாளம்
வங்கியம் ஏனை மற்று
மலர்துளைக் கருவி யெல்லாம்
பொங்கிய ஒலியின் ஓங்கிப்
பூசுரர் வேத கீதம்
எங்கணும் எழுந்து மல்கத்
திருமணம் எழுந்த தன்றே.
1199

கோதையர் குழல்சூழ் வண்டின்
குழாத்தொலி யொருபால் கோல
வேதியர் வேத வாய்மை
மிகும்ஒலி யொருபால் மிக்க
ஏதமில் விபஞ்சி வீணை
யாழொலி யொருபால் ஏத்தும்
நாதமங் கலங்கள் கீத
நயப்பொலி ஒருபா லாக.
1200
Go to top

விண்ணினை விழுங்க மிக்க
வெண்துகில் பதாகை வெள்ளம்
கண்வெறி படைப்ப மிக்க
கதிர்விரி கவரிக் கானம்
மண்ணிய மணிப்பூண் நீடும்
அரிசனம் மலிந்த பொற்பின்
எண்ணிலா வண்ணத் தூசின்
பொதிப்பரப் பெங்கும் நண்ண.
1201

சிகையொடு மான்தோல் தாங்கும்
கிடையும் ஆசானும் செல்வார்
புகைவிடும் வேள்விச் செந்தீ
இல்லுடன் கொண்டு போவார்
தகைவிலா விருப்பின் மிக்க
பதிகங்கள் விளம்பிச் சார்வார்
வகையறு பகையுஞ் செற்ற
மாதவ ரியல்பின் மல்க.
1202

அறுவகை விளங்குஞ் சைவத்
தளவிலா விரதஞ் சாரும்
நெறிவழி நின்ற வேடம்
நீடிய தவத்தி னுள்ளோர்
மறுவறு மனத்தி லன்பின்
வழியினால் வந்த யோகக்
குறிநிலை பெற்ற தொண்டர்
குழாங்குழாம் ஆகி ஏக.
1203

விஞ்சையர் இயக்கர் சித்தர்
கின்னரர் மிடைந்த தேவர்
அஞ்சனம் நாட்ட ஈட்டத்
தரம்பைய ருடனா யுள்ளோர்
தஞ்சுடர் விமானம் ஏறித்
தழைத்த ஆதரவி னோடும்
மஞ்சுறை விசும்பின் மீது
மணவணி காணச் சென்றார்.
1204

மற்றிவர் மிடைந்து செல்லும்
மங்கல வனப்பின் காட்சி
முற்றஇத் தலத்தி னுள்ளோர்
மொய்த்துடன் படரும் போதில்
அற்புத நிகழ்ச்சி எய்த
அணைதலால் மணமேற் செல்லும்
பொற்பமை மணத்தின் சாயை
போன்றுமுன் பொலியச் செல்ல.
1205
Go to top

தவஅர சாள உய்க்கும்
தனிக்குடை நிழற்றச் சாரும்
பவமறுத் தாள வல்லார்
பாதம்உள் ளத்துக் கொண்டு
புவனங்கள் வாழ வந்த
பூந்தராய் வேந்தர் போந்து
சிவனமர்ந் துறையு நல்லூர்த்
திருப்பெரு மணத்தைச் சேர்ந்தார்.
1206

பெருமணக் கோயி லுள்ளார்
மங்கலம் பெருகு மாற்றால்
வருமணத் திறத்தின் முன்னர்
வழியெதிர் கொள்ளச் சென்று
திருமணம் புணர எய்தும்
சிரபுரச் செம்ம லார்தாம்
இருள்மறைத்து இலங்கு கண்டத்
திறைவர்தங் கோயில் புக்கார்.
1207

நாதரைப் பணிந்து போற்றி
நற்பொருட் பதிகம் பாடிக்
காதல்மெய் யருள்முன் பெற்றுக்
கவுணியர் தலைவர் போந்து
வேதியர் வதுவைக் கோலம்
புனைந்திட வேண்டும் என்னப்
பூதநா யகர்தங் கோயில்
புறத்தொரு மடத்திற் புக்கார்.
1208

பொற்குடம் நிறைந்த வாசப்
புனிதமஞ் சனநீ ராட்டி
விற்பொலி வெண்பட் டாடை
மேதக விளங்கச் சாத்தி
நற்றிரு வுத்த ரீய
நறுந்துகில் சாத்தி நானப்
பற்பல கலவைச் சாந்தம்
பான்மையில் அணிந்த பின்னர்.
1209

திருவடி மலர்மேற் பூத்த
செழுந்தகைச் சோதி யென்ன
மருவிய தரளக் கோவை
மணிச்சரி அணையச் சாத்தி
விரிசுடர்ப் பரட்டின் மீது
விளங்குபொற் சரட்டில் கோத்த
பெருகொளி முத்தின் தாமம்
பிறங்கிய தொங்கல் சாத்தி.
1210
Go to top

தண்சுடர்ப் பரிய முத்துத்
தமனிய நாணிற் கோத்த
கண்கவர் கோவைப் பத்திக்
கதிர்க்கடி சூத்தி ரத்தை
வெண்சுடர்த் தரள மாலை
விரிசுடர்க் கொடுக்கின் மீது
வண்திரு அரையில் நீடு
வனப்பொளி வளரச் சாத்தி.
1211

ஒளிகதிர்த் தரளக் கோவை
யுதரபந் தனத்தின் மீது
தளிர்ஒளி துளும்பு முத்தின்
சன்னவீ ரத்தைச் சாத்திக்
குளிர்நில வெறிக்கு முத்தின்
பூணநூல் கோவை சாத்தி
நளிர்கதிர் முத்துமாலை
நகுசுடர் ஆரஞ் சாத்தி.
1212

வாள்விடு வயிரக் கட்டு
மணிவிரல் ஆழி சாத்தித்
தாளுறு தடக்கை முத்தின்
தண்டையும் சரியும் சாத்தி
நீளொளி முழங்கைப் பொட்டு
நிறைசுடர் வடமும் சாத்தித்
தோள்வளைத் தரளப் பைம்பூண்
சுந்தரத் தோள்மேற் சாத்தி.
1213

திருக்கழுத் தாரந் தெய்வக்
கண்டிகை மாலை சேரப்
பருத்தமுத் தொழுங்கு கோத்த
படரொளி வடமும் சாத்திப்
பெருக்கிய வனப்பின் செவ்வி
பிறங்கிய திருவார் காதில்
வருக்கவெண் தரளக் கொத்தின்
வடிக்குழை விளங்கச் சாத்தி.
1214

நீற்றொளி தழைத்துப் பொங்கி
நிறைதிரு நெற்றி மீது
மேற்பட விரிந்த சோதி
வெண்சுட ரெழுந்த தென்னப்
பாற்படு முத்தின் பாரப்
பனிச்சுடர்த் திரணை சாத்தி
ஏற்பவைத் தணிந்த முத்தின்
எழில்வளர் மகுடஞ் சேர்த்தார்.
1215
Go to top

இவ்வகை நம்மை யாளும்
ஏர்வளர் தெய்வக் கோலம்
கவ்வினை மறையோர் செய்யக்
கடிகொள்செங் கமலத் தாதின்
செவ்விநீள் தாம மார்பர்
திருவடை யாள மாலை
எவ்வுல கோரும் ஏத்தத்
தொழுதுதாம் எடுத்துப் பூண்டார்.
1216

அழகினுக் கணியாம் வெண்ணீ
றஞ்செழுத் தோதிச் சாத்திப்
பழகிய அன்பர் சூழப்
படரொளி மறுகி லெய்தி
மழவிடை மேலோர் தம்மை
மனங்கொள வணங்கி வந்து
முழுவொலி யெடுப்ப முத்தின்
சிவிகைமேல் கொண்ட போது.
1217

எழுந்தன சங்க நாதம்
இயம்பின இயங்கள் எங்கும்
பொழிந்தன விசும்பில் விண்ணோர்
கற்பகப் புதுப்பூ மாரி
தொழுந்தகை முனிவர் தொண்டர்
சுருதியின் வாழ்த்துப் பொங்கி
வழிந்தன திசைகள் மீது
மலர்ந்தன உலகம் எல்லாம்.
1218

படர்பெருந் தொங்கல் பிச்சம்
பைங்கதிர்ப் பீலிப் பந்தர்
அடர்புனை செம்பொற் பாண்டில்
அணிதுகிற் சதுக்கம் மல்கக்
கடலின்மீ தெழுந்து நிற்கும்
கதிர்நிறை மதியம் போல
வடநிரை யணிந்த முத்தின்
மணிக்குடை நிழற்ற வந்தார்.
1219

சீரணி தெருவி னூடு
திருமணம் செல்ல முத்தின்
ஏரணி காளம் சின்னம்
இலங்கொளித் தாரை யெல்லாம்
பேரொலி பெருக முன்னே
பிடித்தன மறைக ளோடு
தாரணி உய்ய ஞான
சம்பந்தர் வந்தா ரென்று.
1220
Go to top

மண்ணினுக் கிடுக்கண் தீர
வந்தவர் திருநா மங்கள்
எண்ணில பலவும் ஏத்திச்
சின்னங்க ளெழுந்த போதவ்
வண்ணலார் வதுவை செய்ய
அலங்கரித் தணையப் பெற்ற
புண்ணிய மறையோர் மாட
மங்கலம் பொழிந்து பொங்க.
1221

முற்றுமெய்ஞ்ஞானம் பெற்ற
மூர்த்தியார் செங்கை பற்ற
நற்பெருந் தவத்தின் நீர்மை
நலம்படைத் தெழுந்த தெய்வக்
கற்பகப் பூங்கொம் பன்னார்
தம்மையும் காப்புச் சேர்த்துப்
பொற்புறு சடங்கு முன்னர்ப்
பரிவுடன் செய்த வேலை.
1222

செம்பொன்செய் வாசிச் சூட்டுத்
திருமணிப் புனைபூண் செல்வப்
பைம்பொனின் மாலை வேய்ந்த
பவளமென் கொடியொப் பாரை
நம்பன்தன் அருளே வாழ்த்தி
நல்லெழில் விளங்கச் சூட்டி
அம்பொன்செய் தீப மென்ன
அழகலங் கரித்து வைத்தார்.
1223

மாமறை மைந்தர் எல்லாம்
மணத்தெதிர் சென்று மன்னும்
தூமலர்ச் செம்பொற் சுண்ணம்
தொகுநவ மணியும் வீசத்
தாமரை மலரோன் போல்வார்
அரசிலை தருப்பை தோய்ந்த
காமர்பொற் கலச நன்னீர்
இருக்குடன் கலந்து வீச.
1224

விண்ணவர் மலரின் மாரி
விசும்பொளி தழைப்ப வீச
மண்ணக நிறைந்த கந்த
மந்தமா ருதமும் வீசக்
கண்ணொளி விளக்கம் மிக்க
காமர்தோ ரணங்க ளூடு
புண்ணிய விளைவு போல்வார்
பூம்பந்தர் முன்பு சார்ந்தார்.

1225
Go to top

பொன்னணி சங்கின் வெள்ளம்
பொலிவுடன் முழங்கி ஆர்ப்ப
மன்னிய தரளப் பத்தி
வளர்மணிச் சிவிகை நின்றும்
பன்மலர் நறும்பொற் சுண்ணம்
பரந்தபா வாடைமீது
முன்னிழிந் தருளி வந்தார்
மூவுல குய்ய வந்தார்.
1226

மறைக்குல மனையின் வாழ்க்கை
மங்கல மகளி ரெல்லாம்
நிறைத்தநீர்ப் பொற்கு டங்கள்
நிறைமணி விளக்குத் தூபம்
நறைக்குல மலர்சூழ் மாலை
நகுசுடர் முளைப்பொற் பாண்டில்
உறைப்பொலி கலவை யேந்தி
உடன்எதி ரேற்று நின்றார்.
1227

ஆங்குமுன் னிட்ட செம்பொன்
அணிமணிப் பீடந் தன்னில்
ஓங்கிய ஞான வெள்ளம்
உண்ணிறைந் தெழுவ தென்னத்
தாங்கிய முத்தின் பைம்பூண்
தண்ணிலவு எறிப்ப ஏறிப்
பாங்கொளி பரப்பி நின்றார்
பரசம யங்கள் வீழ்த்தார்.
1228

எதிர்வர வேற்ற சாயல்
இளமயி லனைய மாதர்
மதுரமங் கலமுன் னான
வாழ்த்தொலி யெடுப்ப வந்து
கதிர்மணிக் கரக வாசக்
கமழ்புன லொழுக்கிக் காதல்
விதிமுறை வலங்கொண் டெய்தி
மேவுநல் வினைகள் செய்தார்.
1229

மங்கலம் பொலிய ஏந்தி
மாதரார் முன்பு செல்லக்
கங்கையின் கொழுந்து செம்பொன்
இமவரை கலந்த தென்ன
அங்கவர் செம்பொன் மாடத்
தாதிபூ மியினுட் புக்கார்
எங்களை வாழ முன்னாள்
ஏடுவை கையினுள் இட்டார்.
1230
Go to top

திருமகட் கொடுக்கப் பெற்ற
செழுமறை முனிவர் தாமும்
அருமையால் முன்செய் மெய்ம்மை
அருந்தவ மனைவி யாரும்
பெருமகிழ்ச் சியினாற் பாதம்
விளக்குவார் பிள்ளை யார்முன்
உரிமையால் வெண்பால் தூநீர்
உடனெடுத் தேந்தி வந்தார்.
1231

வந்துமுன் னெய்தித் தாம்முன்
செய்தமா தவத்தின் நன்மை
நந்துநம் பாண்டார் நம்பி
ஞானபோ னகர்பொற் பாதம்
கந்தவார் குழலி னார்பொற்
கரகநீர் எடுத்து வார்ப்பப்
புந்தியால் நினைதி யானம்
புரிசடை யான்என் றுன்னி.
1232

விருப்பினால் விளக்கி மிக்க
புனிதநீர் தலைமேற் கொண்டு
பொருப்புறு மாடத் துள்ளும்
புறத்துளுந் தெளித்த பின்னர்
உருப்பொலி உதரத் துள்ளும்
பூரித்தார் உவகை பொங்கி
அருப்புறு கிளைஞர் மேலும்
தெளித்தனர் ஆர்வத் தோடும்.
1233

பெருகொளி ஞானம் உண்ட
பிள்ளையார் மலர்க்கை தன்னில்
மருவுமங் கலநீர் வாசக்
கரகம்முன் னேந்தி வார்ப்பார்
தருமுறைக் கோத்தி ரத்தின்
தங்குலம் செப்பி என்தன்
அருநிதிப் பாவை யாரைப்
பிள்ளையார்க் களித்தேன் என்றார்.
1234

நற்றவக் கன்னி யார்கை
ஞானசம் பந்தர் செங்கை
பற்றுதற் குரிய பண்பில்
பழுதில்நற் பொழுது நண்ணப்
பெற்றவ ருடன்பி றந்தார்
பெருமணப் பிணையன் னாரைச்
சுற்றமுன் சூழ்ந்து போற்றக்
கொண்டுமுன் துன்னி னார்கள்.
1235
Go to top

ஏகமாம் சிவமெய்ஞ் ஞானம்
இசைந்தவர் வலப்பா லெய்தி
நாகமார் பணபே ரல்குல்
நற்றவக் கொழுந்தன் னாரை
மாகமார் சோதி மல்க
மன்னிவீற் றிருந்த வெள்ளை
மேகமோ டிசையும் மின்னுக்
கொடியென விளங்க வைத்தார்.
1236

புனிதமெய்க் கோல நீடு
புகலியார் வேந்தர் தம்மைக்
குனிசிலைப் புருவ மென்பூங்
கொம்பனா ருடனே கூட
நனிமிகக் கண்ட போதில்
நல்லமங் கலங்கள் கூறி
மனிதரும் தேவ ரானார்
கண்ணிமை யாது வாழ்த்தி.
1237

பத்தியிற் குயிற்றும் பைம்பொன்
பவளக்கால் பந்தர் நாப்பண்
சித்திர விதானத் தின்கீழ்ச்
செழுந்திரு நீல நக்கர்
முத்தமிழ் விரகர் முன்பு
முதன்மறை முறையி னோடு
மெய்த்தநம் பெருமான் பாதம்
மேவுமுள் ளத்தாற் செய்ய.
1238

மறையொலி பொங்கி யோங்க
மங்கல வாழ்த்து மல்க
நிறைவளைச் செங்கை பற்ற
நேரிழை யவர்முன் அந்தப்
பொறையணி முந்நூல் மார்பர்
புகரில்வெண் பொரிகை அட்டி
இறைவரை ஏத்தும் வேலை
எரிவலங் கொள்ள வேண்டி.
1239

அருப்புமென் முலையி னார்தம்
அணிமலர்க் கைப்பி டித்தங்
கொருப்படும் உடைய பிள்ளை
யார்திரு உள்ளந் தன்னில்
விருப்புறும் அங்கி யாவார் விடை
உயர்த் தவரே என்று
திருப்பெரு மணத்தை மேவும்
சிந்தையில் தெளிந்து செல்வார்.
1240
Go to top

மந்திர முறையால் உய்த்த
எரிவல மாக மாதர்
தந்திருக் கையைப் பற்றும்
தாமரைச் செங்கை யாளர்
இந்தஇல் லொழுக்கம் வந்து
சூழ்ந்ததே இவள்தன் னோடும் அந்தமில் சிவன்தாள் சேர்வன்
என்னும்ஆ தரவு பொங்க.
1241

மலர்பெருங் கிளையும் தொண்டர்
கூட்டமும் மல்கிச் சூழ
அலகில் மெய்ஞ்ஞானத் தொல்லை
அடைவுறுங் குறிப்பால் அங்கண்
உலகில்எம் மருங்கும் நீங்க
உடன்அணைந் தருள வேண்டிக்
குலமணம் புரிவித் தார்தம்
கோயிலை நோக்கி வந்தார்.
1242

சிவனமர்ந் தருளுஞ் செல்வத்
திருப்பெரு மணத்துள் எய்தித்
தவநெறி வளர்க்க வந்தார்
தலைப்படுஞ் சார்பு நோக்கிப்
பவமற என்னை முன்னாள்
ஆண்டஅப் பண்பு கூட
நவமலர்ப் பாதங் கூட்டும்
என்னும்நல் லுணர்வு நல்க.
1243

காதல்மெய்ப் பதிகம் கல்லூர்ப்
பெருமணம் எடுத்துக் கண்டோர்
தீதுற பிறவிப் பாசந்
தீர்த்தல்செம் பொருளாக் கொண்டு
நாதனே நல்லூர் மேவும்
1244

தேவர்கள் தேவர் தாமும்
திருவருள் புரிந்து நீயும்
பூவையன் னாளும் இங்குன்
புண்ணிய மணத்தின் வந்தார்
யாவரும் எம்பாற் சோதி
இதனுள்வந் தெய்தும் என்று
மூவுல கொளியால் விம்ம
முழுச்சுடர்த் தாணு வாகி.
1245
Go to top

கோயிலுட் படமேல் ஓங்குங்
கொள்கையாற் பெருகுஞ் சோதி
வாயிலை வகுத்துக் காட்ட
மன்னுசீர்ப் புகலி மன்னர்
பாயின ஒளியால் நீடு
பரஞ்சுடர்த் தொழுது போற்றி
மாயிரு ஞாலம் உய்ய
வழியினை அருளிச் செய்வார்.
1246

ஞானமெய்ந் நெறிதான் யார்க்கும்
நமச்சிவா யச்சொ லாம்என்
றானசீர் நமச்சி வாயத்
திருப்பதி கத்தை அங்கண்
வானமும் நிலனும் கேட்க
அருள்செய் திம்மணத்தில் வந்தோர்
ஈனமாம் பிறவி தீர
யாவரும் புகுக என்ன.
1247

வருமுறைப் பிறவி வெள்ளம்
வரம்புகா ணாத ழுந்தி
உருவெனுந் துயரக் கூட்டில்
உணர்வின்றி மயங்கு வார்கள்
திருமணத் துடன்சே வித்து
முன்செலுஞ் சிறப்பி னாலே
மருவிய பிறவி நீங்க
மன்னுசோ தியினுள் புக்கார்.
1248

சீர்பெருகு நீலநக்கர்
திருமுருகர் முதல்தொண்டர்
ஏர்கெழுவு சிவபாத
இருதயர்நம் பாண்டார்சீர்
ஆர்திருமெய்ப் பெரும்பாணர்
மற்றேனையோர் அணைந்துளோர்
பார்நிலவு கிளைசூழப்
பன்னிகளோ டுடன்புக்கார்.
1249

அணிமுத்தின் சிவிகைமுதல்
அணிதாங்கிச் சென்றோர்கள்
மணிமுத்த மாலைபுனை
மடவார்மங் கலம்பெருகும்
பணிமுற்றும் எடுத்தார்கள்
பரிசனங்கள் வினைப்பாசந்
துணிவித்த உணர்வினராய்த்
தொழுதுடன்புக் கொடுங்கினார்.
1250
Go to top

ஆறுவகைச் சமயத்தின்
அருந்தவரும் அடியவரும்
கூறுமறை முனிவர்களும்
கும்பிடவந் தணைந்தாரும்
வேறுதிரு வருளினால்
வீடுபெற வந்தாரும்
ஈறில்பெருஞ் சோதியினுள்
எல்லாரும் புக்கதற்பின்.
1251

காதலியைக் கைப்பற்றிக்
கொண்டுவலம் செய்தருளித்
தீதகற்ற வந்தருளும்
திருஞான சம்பந்தர்
நாதன்எழில் வளர்சோதி
நண்ணிஅதன் உட்புகுவார்
போதநிலை முடிந்தவழிப்
புக்கொன்றி உடனானார்.
1252

பிள்ளையார் எழுந்தருளிப்
புக்கதற்பின் பெருங்கூத்தர்
கொள்ளநீ டியசோதிக்
குறிநிலைஅவ் வழிகரப்ப
வள்ளலார் தம்பழய
மணக்கோயில் தோன்றுதலும்
தெள்ளுநீ ருலகத்துப்
பேறில்லார் தெருமந்தார்.
1253

கண்ணுதலார் திருமேனி
உடன்கூடக் கவுணியனார்
நண்ணியது தூரத்தே
கண்டுநணு கப்பெறா
விண்ணவரும் முனிவர்களும்
விரிஞ்சனே முதலானார்
எண்ணிலவர் ஏசறவு
தீரஎடுத் தேத்தினார்.
1254

அருந்தமிழா கரர்சரிதை
அடியேனுக் கவர்பாதம்
தரும்பரிசால் அறிந்தபடி
துதிசெய்தேன் தாரணிமேல்
பெருங்கொடையுந் திண்ணனவும்
பேருணர்வுந் திருத்தொண்டால்
வருந்தகைமைக் கலிக்காம
னார்செய்கை வழுத்துவேன்.
1255
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

          send corrections and suggestions to admin-at-sivaya.org or in the WhatsApp

This page was last modified on Fri, 26 Dec 2025 05:25:45 +0000