தழை கொள் சந்தும்(ம்), அகிலும், மயில்பீலியும், சாதியின்
பழமும், உந்திப் புனல் பாய் பழங்காவிரித் தென்கரை,
நழுவு இல் வானோர் தொழ, நல்கு சீர் மல்கு நாகேச்சுரத்து
அழகர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே.
|
1
|
பெண் ஒர்பாகம்(ம்) அடைய, சடையில் புனல் பேணிய
வண்ணம் ஆன பெருமான் மருவும்(ம்) இடம் மண் உளார்
நண்ணி நாளும் தொழுது ஏத்தி நன்கு எய்தும் நாகேச்சுரம்,
கண்ணினால் காண வல்லார் அவர் கண் உடையார்களே
|
2
|
குறவர் கொல்லைப்புனம் கொள்ளைகொண்டும், மணி
குலவு நீர்,
பறவை ஆல, பரக்கும் பழங்காவிரித் தென்கரை
நறவம் நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாகேச்சுரத்து
இறைவர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு இடர்
இல்லையே.
|
3
|
கூசம் நோக்காது முன் சொன்ன பொய், கொடுவினை,
குற்றமும்,
நாசம் ஆக்கும் மனத்தார்கள் வந்து ஆடும் நாகேச்சுரம்,
தேசம் ஆக்கும் திருக்கோயிலாக் கொண்ட செல்வன் கழல்
நேசம் ஆக்கும் திறத்தார் அறத்தார்; நெறிப்பாலரே.
|
4
|
வம்பு நாறும் மலரும் மலைப் பண்டமும் கொண்டு, நீர்
பைம் பொன் வாரிக் கொழிக்கும் பழங்காவிரித் தென்கரை
நம்பன் நாளும் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார்
உம்பர்வானோர் தொழச் சென்று, உடன் ஆவதும்
உண்மையே.
|
5
|
Go to top |
காளமேகம் நிறக் காலனோடு, அந்தகன், கருடனும்,
நீளம் ஆய் நின்று எய்த காமனும், பட்டன நினைவு உறின்,
நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார்
கோளும் நாளும் தீயவேனும், நன்கு ஆம்;
குறிக்கொண்மினே!
|
6
|
வேய் உதிர் முத்தொடு மத்தயானை மருப்பும் விராய்,
பாய் புனல் வந்து அலைக்கும் பழங்காவிரித் தென்கரை
நாயிறும் திங்களும் கூடி வந்து ஆடும் நாகேச்சுரம்
மேயவன்தன் அடி போற்றி! என்பார் வினை வீடுமே.
|
7
|
இலங்கை வேந்தன் சிரம்பத்து, இரட்டி எழில் தோள்களும்,
மலங்கி வீழ(ம்) மலையால் அடர்த்தான் இடம் மல்கிய
நலம் கொள் சிந்தையவர் நாள்தொறும் நண்ணும்
நாகேச்சுரம்,
வலம்கொள் சிந்தை உடையார் இடர் ஆயின மாயுமே.
|
8
|
கரிய மாலும், அயனும், அடியும் முடி காண்பு ஒணா
எரிஅது ஆகி(ந்) நிமிர்ந்தான் அமரும் இடம் ஈண்டு கா
விரியின் நீர் வந்து அலைக்கும் கரை மேவும் நாகேச்சுரம்
பிரிவிலாத(வ்) அடியார்கள் வானில் பிரியார்களே
|
9
|
தட்டு இடுக்கி உறி தூக்கிய கையினர், சாக்கியர்,
கட்டுரைக்கும் மொழி கொள்ளேலும்! வெள்ளில் அம்காட்டு
இடை
நட்டிருள்கண் நடம் ஆடிய நாதன் நாகேச்சுரம்,
மட்டு இருக்கும் மலர் இட்டு, அடி வீழ்வது வாய்மையே.
|
10
|
Go to top |
கந்தம் நாறும் புனல் காவிரித் தென்கரை, கண்ணுதல்
நந்தி சேரும் திரு நாகேச்சுரத்தின் மேல், ஞானசம்
பந்தன் நாவில் பனுவல்(ல்) இவைபத்தும் வல்லார்கள்,
போய்,
எந்தை ஈசன் இருக்கும்(ம்) உலகு எய்த வல்லார்களே
|
11
|