சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
2.024   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொன் ஏர்தரு மேனியனே! புரியும் மின்
பண் - இந்தளம்   (திருநாகேச்சுரம் செண்பகாரணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=DFxah8nE4aY
2.119   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தழை கொள் சந்தும்(ம்), அகிலும்,
பண் - செவ்வழி   (திருநாகேச்சுரம் செண்பகாரணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Jnc6OmuPIhc

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.024   பொன் ஏர்தரு மேனியனே! புரியும் மின்  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருநாகேச்சுரம் ; (திருத்தலம் அருள்தரு குன்றமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு செண்பகாரணியேசுவரர் திருவடிகள் போற்றி )
பொன் ஏர்தரு மேனியனே! புரியும்
மின் நேர் சடையாய்! விரை காவிரியின்
நன்நீர் வயல் நாகேச்சுரநகரின்
மன்னே! என, வல்வினை மாய்ந்து அறுமே.

[1]
சிறவார் புரம்மூன்று எரியச் சிலையில்
உற வார்கணை உய்த்தவனே! உயரும்
நறவு ஆர் பொழில் நாகேச்சுரநகருள்
அறவா! என, வல்வினை ஆசு அறுமே.

[2]
கல்லால்நிழல் மேயவனே! கரும்பின்
வில்லான் எழில் வேவ, விழித்தவனே!
நல்லார் தொழும் நாகேச்சுரநகரில்
செல்வா! என, வல்வினை தேய்ந்து அறுமே.

[3]
நகு வான்மதியோடு அரவும் புனலும்
தகு வார்சடையின் முடியாய்! தளவம்
நகு வார் பொழில் நாகேச்சுரநகருள்
பகவா! என, வல்வினை பற்றுஅறுமே.

[4]
கலைமான்மறியும் கனலும் மழுவும்
நிலைஆகிய கையினனே நிகழும்
நலம் ஆகிய நாகேச்சுரநகருள்
தலைவா! என, வல்வினைதான் அறுமே.

[5]
குரை ஆர் கழல் ஆட நடம் குலவி,
வரையான்மகள் காண, மகிழ்ந்தவனே!
நரை ஆர் விடை ஏறும் நாகேச்சுரத்து எம்
அரைசே! என, நீங்கும், அருந்துயரே.

[6]
முடை ஆர்தரு வெண்தலை கொண்டு, உலகில்
கடை ஆர் பலி கொண்டு உழல் காரணனே!
நடை ஆர்தரு நாகேச்சுரநகருள்
சடையா! என, வல்வினைதான் அறுமே.

[7]
ஓயாத அரக்கன் ஒடிந்து அலற,
நீர் ஆர் அருள் செய்து நிகழ்ந்தவனே!
வாய் ஆர வழுத்துவர் நாகேச்சுரத்
தாயே! என, வல்வினைதான் அறுமே.

[8]
நெடியானொடு நான்முகன் நேடல் உற,
சுடு மால் எரிஆய் நிமிர் சோதியனே!
நடு மா வயல் நாகேச்சுரநகரே
இடமா உறைவாய்! என, இன்புஉறுமே.

[9]
மலம் பாவிய கையொடு மண்டைஅது உண்
கலம்பாவியர் கட்டுரை விட்டு, உலகில்
நலம் பாவிய நாகேச்சுரநகருள்
சிலம்பா! என, தீவினை தேய்ந்து அறுமே.

[10]
கலம் ஆர் கடல் சூழ்தரு காழியர்கோன்
தலம் ஆர்தரு செந்தமிழின் விரகன்
நலம் ஆர்தரு நாகேச்சுரத்து அரனைச்
சொலல் மாலைகள் சொல்ல, நிலா, வினையே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.119   தழை கொள் சந்தும்(ம்), அகிலும்,  
பண் - செவ்வழி   (திருத்தலம் திருநாகேச்சுரம் ; (திருத்தலம் அருள்தரு குன்றமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு செண்பகாரணியேசுவரர் திருவடிகள் போற்றி )
தழை கொள் சந்தும்(ம்), அகிலும், மயில்பீலியும், சாதியின்
பழமும், உந்திப் புனல் பாய் பழங்காவிரித் தென்கரை,
நழுவு இல் வானோர் தொழ, நல்கு சீர் மல்கு நாகேச்சுரத்து
அழகர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே.

[1]
பெண் ஒர்பாகம்(ம்) அடைய, சடையில் புனல் பேணிய
வண்ணம் ஆன பெருமான் மருவும்(ம்) இடம் மண் உளார்
நண்ணி நாளும் தொழுது ஏத்தி நன்கு எய்தும் நாகேச்சுரம்,
கண்ணினால் காண வல்லார் அவர் கண் உடையார்களே

[2]
குறவர் கொல்லைப்புனம் கொள்ளைகொண்டும், மணி
குலவு நீர்,
பறவை ஆல, பரக்கும் பழங்காவிரித் தென்கரை
நறவம் நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாகேச்சுரத்து
இறைவர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு இடர்
இல்லையே.

[3]
கூசம் நோக்காது முன் சொன்ன பொய், கொடுவினை,
குற்றமும்,
நாசம் ஆக்கும் மனத்தார்கள் வந்து ஆடும் நாகேச்சுரம்,
தேசம் ஆக்கும் திருக்கோயிலாக் கொண்ட செல்வன் கழல்
நேசம் ஆக்கும் திறத்தார் அறத்தார்; நெறிப்பாலரே.

[4]
வம்பு நாறும் மலரும் மலைப் பண்டமும் கொண்டு, நீர்
பைம் பொன் வாரிக் கொழிக்கும் பழங்காவிரித் தென்கரை
நம்பன் நாளும் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார்
உம்பர்வானோர் தொழச் சென்று, உடன் ஆவதும்
உண்மையே.

[5]
காளமேகம் நிறக் காலனோடு, அந்தகன், கருடனும்,
நீளம் ஆய் நின்று எய்த காமனும், பட்டன நினைவு உறின்,
நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார்
கோளும் நாளும் தீயவேனும், நன்கு ஆம்;
குறிக்கொண்மினே!

[6]
வேய் உதிர் முத்தொடு மத்தயானை மருப்பும் விராய்,
பாய் புனல் வந்து அலைக்கும் பழங்காவிரித் தென்கரை
நாயிறும் திங்களும் கூடி வந்து ஆடும் நாகேச்சுரம்
மேயவன்தன் அடி போற்றி! என்பார் வினை வீடுமே.

[7]
இலங்கை வேந்தன் சிரம்பத்து, இரட்டி எழில் தோள்களும்,
மலங்கி வீழ(ம்) மலையால் அடர்த்தான் இடம் மல்கிய
நலம் கொள் சிந்தையவர் நாள்தொறும் நண்ணும்
நாகேச்சுரம்,
வலம்கொள் சிந்தை உடையார் இடர் ஆயின மாயுமே.

[8]
கரிய மாலும், அயனும், அடியும் முடி காண்பு ஒணா
எரிஅது ஆகி(ந்) நிமிர்ந்தான் அமரும் இடம் ஈண்டு கா
விரியின் நீர் வந்து அலைக்கும் கரை மேவும் நாகேச்சுரம்
பிரிவிலாத(வ்) அடியார்கள் வானில் பிரியார்களே

[9]
தட்டு இடுக்கி உறி தூக்கிய கையினர், சாக்கியர்,
கட்டுரைக்கும் மொழி கொள்ளேலும்! வெள்ளில் அம்காட்டு
இடை
நட்டிருள்கண் நடம் ஆடிய நாதன் நாகேச்சுரம்,
மட்டு இருக்கும் மலர் இட்டு, அடி வீழ்வது வாய்மையே.

[10]
கந்தம் நாறும் புனல் காவிரித் தென்கரை, கண்ணுதல்
நந்தி சேரும் திரு நாகேச்சுரத்தின் மேல், ஞானசம்
பந்தன் நாவில் பனுவல்(ல்) இவைபத்தும் வல்லார்கள்,
போய்,
எந்தை ஈசன் இருக்கும்(ம்) உலகு எய்த வல்லார்களே

[11]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list