சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.024
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொன் ஏர்தரு மேனியனே! புரியும் மின் பண் - இந்தளம் (திருநாகேச்சுரம் செண்பகாரணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=DFxah8nE4aY |
2.119
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தழை கொள் சந்தும்(ம்), அகிலும், பண் - செவ்வழி (திருநாகேச்சுரம் செண்பகாரணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=Jnc6OmuPIhc |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.024  
பொன் ஏர்தரு மேனியனே! புரியும் மின்
பண் - இந்தளம் (திருத்தலம் திருநாகேச்சுரம் ; (திருத்தலம் அருள்தரு குன்றமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு செண்பகாரணியேசுவரர் திருவடிகள் போற்றி )
பொன் ஏர்தரு மேனியனே! புரியும் மின் நேர் சடையாய்! விரை காவிரியின் நன்நீர் வயல் நாகேச்சுரநகரின் மன்னே! என, வல்வினை மாய்ந்து அறுமே. | [1] |
சிறவார் புரம்மூன்று எரியச் சிலையில் உற வார்கணை உய்த்தவனே! உயரும் நறவு ஆர் பொழில் நாகேச்சுரநகருள் அறவா! என, வல்வினை ஆசு அறுமே. | [2] |
கல்லால்நிழல் மேயவனே! கரும்பின் வில்லான் எழில் வேவ, விழித்தவனே! நல்லார் தொழும் நாகேச்சுரநகரில் செல்வா! என, வல்வினை தேய்ந்து அறுமே. | [3] |
நகு வான்மதியோடு அரவும் புனலும் தகு வார்சடையின் முடியாய்! தளவம் நகு வார் பொழில் நாகேச்சுரநகருள் பகவா! என, வல்வினை பற்றுஅறுமே. | [4] |
கலைமான்மறியும் கனலும் மழுவும் நிலைஆகிய கையினனே நிகழும் நலம் ஆகிய நாகேச்சுரநகருள் தலைவா! என, வல்வினைதான் அறுமே. | [5] |
குரை ஆர் கழல் ஆட நடம் குலவி, வரையான்மகள் காண, மகிழ்ந்தவனே! நரை ஆர் விடை ஏறும் நாகேச்சுரத்து எம் அரைசே! என, நீங்கும், அருந்துயரே. | [6] |
முடை ஆர்தரு வெண்தலை கொண்டு, உலகில் கடை ஆர் பலி கொண்டு உழல் காரணனே! நடை ஆர்தரு நாகேச்சுரநகருள் சடையா! என, வல்வினைதான் அறுமே. | [7] |
ஓயாத அரக்கன் ஒடிந்து அலற, நீர் ஆர் அருள் செய்து நிகழ்ந்தவனே! வாய் ஆர வழுத்துவர் நாகேச்சுரத் தாயே! என, வல்வினைதான் அறுமே. | [8] |
நெடியானொடு நான்முகன் நேடல் உற, சுடு மால் எரிஆய் நிமிர் சோதியனே! நடு மா வயல் நாகேச்சுரநகரே இடமா உறைவாய்! என, இன்புஉறுமே. | [9] |
மலம் பாவிய கையொடு மண்டைஅது உண் கலம்பாவியர் கட்டுரை விட்டு, உலகில் நலம் பாவிய நாகேச்சுரநகருள் சிலம்பா! என, தீவினை தேய்ந்து அறுமே. | [10] |
கலம் ஆர் கடல் சூழ்தரு காழியர்கோன் தலம் ஆர்தரு செந்தமிழின் விரகன் நலம் ஆர்தரு நாகேச்சுரத்து அரனைச் சொலல் மாலைகள் சொல்ல, நிலா, வினையே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.119  
தழை கொள் சந்தும்(ம்), அகிலும்,
பண் - செவ்வழி (திருத்தலம் திருநாகேச்சுரம் ; (திருத்தலம் அருள்தரு குன்றமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு செண்பகாரணியேசுவரர் திருவடிகள் போற்றி )
தழை கொள் சந்தும்(ம்), அகிலும், மயில்பீலியும், சாதியின் பழமும், உந்திப் புனல் பாய் பழங்காவிரித் தென்கரை, நழுவு இல் வானோர் தொழ, நல்கு சீர் மல்கு நாகேச்சுரத்து அழகர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே. | [1] |
பெண் ஒர்பாகம்(ம்) அடைய, சடையில் புனல் பேணிய வண்ணம் ஆன பெருமான் மருவும்(ம்) இடம் மண் உளார் நண்ணி நாளும் தொழுது ஏத்தி நன்கு எய்தும் நாகேச்சுரம், கண்ணினால் காண வல்லார் அவர் கண் உடையார்களே | [2] |
குறவர் கொல்லைப்புனம் கொள்ளைகொண்டும், மணி குலவு நீர், பறவை ஆல, பரக்கும் பழங்காவிரித் தென்கரை நறவம் நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாகேச்சுரத்து இறைவர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு இடர் இல்லையே. | [3] |
கூசம் நோக்காது முன் சொன்ன பொய், கொடுவினை, குற்றமும், நாசம் ஆக்கும் மனத்தார்கள் வந்து ஆடும் நாகேச்சுரம், தேசம் ஆக்கும் திருக்கோயிலாக் கொண்ட செல்வன் கழல் நேசம் ஆக்கும் திறத்தார் அறத்தார்; நெறிப்பாலரே. | [4] |
வம்பு நாறும் மலரும் மலைப் பண்டமும் கொண்டு, நீர் பைம் பொன் வாரிக் கொழிக்கும் பழங்காவிரித் தென்கரை நம்பன் நாளும் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார் உம்பர்வானோர் தொழச் சென்று, உடன் ஆவதும் உண்மையே. | [5] |
காளமேகம் நிறக் காலனோடு, அந்தகன், கருடனும், நீளம் ஆய் நின்று எய்த காமனும், பட்டன நினைவு உறின், நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார் கோளும் நாளும் தீயவேனும், நன்கு ஆம்; குறிக்கொண்மினே! | [6] |
வேய் உதிர் முத்தொடு மத்தயானை மருப்பும் விராய், பாய் புனல் வந்து அலைக்கும் பழங்காவிரித் தென்கரை நாயிறும் திங்களும் கூடி வந்து ஆடும் நாகேச்சுரம் மேயவன்தன் அடி போற்றி! என்பார் வினை வீடுமே. | [7] |
இலங்கை வேந்தன் சிரம்பத்து, இரட்டி எழில் தோள்களும், மலங்கி வீழ(ம்) மலையால் அடர்த்தான் இடம் மல்கிய நலம் கொள் சிந்தையவர் நாள்தொறும் நண்ணும் நாகேச்சுரம், வலம்கொள் சிந்தை உடையார் இடர் ஆயின மாயுமே. | [8] |
கரிய மாலும், அயனும், அடியும் முடி காண்பு ஒணா எரிஅது ஆகி(ந்) நிமிர்ந்தான் அமரும் இடம் ஈண்டு கா விரியின் நீர் வந்து அலைக்கும் கரை மேவும் நாகேச்சுரம் பிரிவிலாத(வ்) அடியார்கள் வானில் பிரியார்களே | [9] |
தட்டு இடுக்கி உறி தூக்கிய கையினர், சாக்கியர், கட்டுரைக்கும் மொழி கொள்ளேலும்! வெள்ளில் அம்காட்டு இடை நட்டிருள்கண் நடம் ஆடிய நாதன் நாகேச்சுரம், மட்டு இருக்கும் மலர் இட்டு, அடி வீழ்வது வாய்மையே. | [10] |
கந்தம் நாறும் புனல் காவிரித் தென்கரை, கண்ணுதல் நந்தி சேரும் திரு நாகேச்சுரத்தின் மேல், ஞானசம் பந்தன் நாவில் பனுவல்(ல்) இவைபத்தும் வல்லார்கள், போய், எந்தை ஈசன் இருக்கும்(ம்) உலகு எய்த வல்லார்களே | [11] |