சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.067   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருக்கொண்டீச்சரம் - திருநேரிசை அருள்தரு சாந்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு பசுபதீசுவரர் திருவடிகள் போற்றி
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=tFKw3jGkwP8   Add audio link Add Audio

வரைகிலேன், புலன்கள் ஐந்தும்; வரைகிலாப் பிறவி மாயப்
புரையுளே அடங்கி நின்று புறப்படும் வழியும் காணேன்;
அரையிலே மிளிரும் நாகத்து அண்ணலே! அஞ்சல்! என்னாய்
திரை உலாம் பழன வேலித் திருக்கொண்டீச்சுரத்து உளானே!

1

தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நைந்து பேர்வது ஓர் வழியும் காணேன்;
அண்டனே! அண்டவாணா! அறிவனே! அஞ்சல்! என்னாய்
தெண் திரைப் பழனம் சூழ்ந்த திருக்கொண்டீச்சுரத்து உளானே!

2

கால் கொடுத்து, எலும்பு மூட்டி, கதிர் நரம்பு ஆக்கை ஆர்த்து
தோல் உடுத்து, உதிரம் அட்டி, தொகு மயிர் மேய்ந்த கூரை
ஓல் எடுத்து உழைஞர் கூடி ஒளிப்பதற்கு அஞ்சுகின்றேன்-
சேல் உடைப் பழனம் சூழ்ந்த திருக்கொண்டீச்சுரத்து உளானே!

3

கூட்டம் ஆய் ஐவர் வந்து கொடுந் தொழில் குணத்தர் ஆகி
ஆட்டுவார்க்கு ஆற்றகில்லேன் ஆடு அரவு அசைத்த கோவே!
காட்டு இடை அரங்கம் ஆக ஆடிய கடவுளேயோ!
சேட்டு இரும் பழன வேலித் திருக்கொண்டீச்சுரத்து உளானே!

4

பொக்கம் ஆய் நின்ற பொல்லாப் புழு மிடை முடை கொள் ஆக்கை
தொக்கு நின்று ஐவர் தொண்ணூற்று அறுவரும் துயக்கம் எய்த,
மிக்கு நின்று இவர்கள் செய்யும் வேதனைக்கு அலந்து போனேன்
செக்கரே திகழும் மேனித் திருக்கொண்டீச்சுரத்து உளானே!

5
Go to top

ஊன் உலாம் முடை கொள் ஆக்கை உடைகலம் ஆவது, என்றும்;
மான் உலாம் மழைக்கணார் தம் வாழ்க்கையை மெய் என்று எண்ணி,
நான் எலாம் இனைய காலம் நண்ணிலேன்; எண்ணம் இல்லேன்
தேன் உலாம் பொழில்கள் சூழ்ந்த திருக்கொண்டீச்சுரத்து உளானே!

6

சாண் இரு மருங்கு நீண்ட சழக்கு உடைப் பதிக்கு நாதர்
வாணிகர் ஐவர் தொண்ணூற்று அறுவரும் மயக்கம் செய்து,
பேணிய பதியின் நின்று பெயரும் போது அறிய மாட்டேனெ
சேண் உயர் மாடம் நீடு திருக்கொண்டீச்சுரத்து உளானே!

7

பொய்ம் மறித்து இயற்றி வைத்து, புலால் கமழ் பண்டம் பெய்து
பைம் மறித்து இயற்றியன்ன பாங்கு இலாக் குரம்பை நின்று
கைம் மறித்தனைய ஆவி கழியும் போது அறிய மாட்டேன்;
செந்நெறிச் செலவு காணேன்திருக்கொண்டீச்சுரத்து உளானே!

8

பாலனாய்க் கழிந்த நாளும், பனிமலர்க் கோதை மார் தம்
மேலனாய்க் கழிந்த நாளும், மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளும், குறிக்கோள் இலாது கெட்டேன்-
சேல் உலாம் பழன வேலித் திருக்கொண்டீச்சுரத்து உளானே!

9

விரை தரு கருமென் கூந்தல் விளங்கு இழை வேல் ஒண் கண்ணாள
வெருவர, இலங்கைக் கோமான் விலங்கலை எடுத்த ஞான்று,
பருவரை அனைய தோளும் முடிகளும் பாரி வீழத்
திருவிரல் ஊன்றினானே திருக்கொண்டீச்சுரத்து உளானே!

10
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கொண்டீச்சரம்
4.067   திருநாவுக்கரசர்   தேவாரம்   வரைகிலேன், புலன்கள் ஐந்தும்; வரைகிலாப்
Tune - திருநேரிசை   (திருக்கொண்டீச்சரம் பசுபதீசுவரர் சாந்தநாயகியம்மை)
5.070   திருநாவுக்கரசர்   தேவாரம்   கண்ட பேச்சினில் காளையர் தங்கள்
Tune - திருக்குறுந்தொகை   (திருக்கொண்டீச்சரம் பசுபதீசுவரர் சாந்தநாயகியம்மை)

          send corrections and suggestions to admin-at-sivaya.org or in the WhatsApp

This page was last modified on Fri, 26 Dec 2025 05:25:45 +0000