சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
4.067
திருநாவுக்கரசர்
தேவாரம்
வரைகிலேன், புலன்கள் ஐந்தும்; வரைகிலாப் பண் - திருநேரிசை (திருக்கொண்டீச்சரம் பசுபதீசுவரர் சாந்தநாயகியம்மை) |
5.070
திருநாவுக்கரசர்
தேவாரம்
கண்ட பேச்சினில் காளையர் தங்கள் பண் - திருக்குறுந்தொகை (திருக்கொண்டீச்சரம் பசுபதீசுவரர் சாந்தநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=Fs6i7rvUFuw |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.067  
வரைகிலேன், புலன்கள் ஐந்தும்; வரைகிலாப்
பண் - திருநேரிசை (திருத்தலம் திருக்கொண்டீச்சரம் ; (திருத்தலம் அருள்தரு சாந்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு பசுபதீசுவரர் திருவடிகள் போற்றி )
வரைகிலேன், புலன்கள் ஐந்தும்; வரைகிலாப் பிறவி மாயப் புரையுளே அடங்கி நின்று புறப்படும் வழியும் காணேன்; அரையிலே மிளிரும் நாகத்து அண்ணலே! அஞ்சல்! என்னாய் திரை உலாம் பழன வேலித் திருக்கொண்டீச்சுரத்து உளானே! | [1] |
தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினைக் குழியில் வீழ்ந்து பிண்டமே சுமந்து நைந்து பேர்வது ஓர் வழியும் காணேன்; அண்டனே! அண்டவாணா! அறிவனே! அஞ்சல்! என்னாய் தெண் திரைப் பழனம் சூழ்ந்த திருக்கொண்டீச்சுரத்து உளானே! | [2] |
கால் கொடுத்து, எலும்பு மூட்டி, கதிர் நரம்பு ஆக்கை ஆர்த்து தோல் உடுத்து, உதிரம் அட்டி, தொகு மயிர் மேய்ந்த கூரை ஓல் எடுத்து உழைஞர் கூடி ஒளிப்பதற்கு அஞ்சுகின்றேன்- சேல் உடைப் பழனம் சூழ்ந்த திருக்கொண்டீச்சுரத்து உளானே! | [3] |
கூட்டம் ஆய் ஐவர் வந்து கொடுந் தொழில் குணத்தர் ஆகி ஆட்டுவார்க்கு ஆற்றகில்லேன் ஆடு அரவு அசைத்த கோவே! காட்டு இடை அரங்கம் ஆக ஆடிய கடவுளேயோ! சேட்டு இரும் பழன வேலித் திருக்கொண்டீச்சுரத்து உளானே! | [4] |
பொக்கம் ஆய் நின்ற பொல்லாப் புழு மிடை முடை கொள் ஆக்கை தொக்கு நின்று ஐவர் தொண்ணூற்று அறுவரும் துயக்கம் எய்த, மிக்கு நின்று இவர்கள் செய்யும் வேதனைக்கு அலந்து போனேன் செக்கரே திகழும் மேனித் திருக்கொண்டீச்சுரத்து உளானே! | [5] |
ஊன் உலாம் முடை கொள் ஆக்கை உடைகலம் ஆவது, என்றும்; மான் உலாம் மழைக்கணார் தம் வாழ்க்கையை மெய் என்று எண்ணி, நான் எலாம் இனைய காலம் நண்ணிலேன்; எண்ணம் இல்லேன் தேன் உலாம் பொழில்கள் சூழ்ந்த திருக்கொண்டீச்சுரத்து உளானே! | [6] |
சாண் இரு மருங்கு நீண்ட சழக்கு உடைப் பதிக்கு நாதர் வாணிகர் ஐவர் தொண்ணூற்று அறுவரும் மயக்கம் செய்து, பேணிய பதியின் நின்று பெயரும் போது அறிய மாட்டேனெ சேண் உயர் மாடம் நீடு திருக்கொண்டீச்சுரத்து உளானே! | [7] |
பொய்ம் மறித்து இயற்றி வைத்து, புலால் கமழ் பண்டம் பெய்து பைம் மறித்து இயற்றியன்ன பாங்கு இலாக் குரம்பை நின்று கைம் மறித்தனைய ஆவி கழியும் போது அறிய மாட்டேன்; செந்நெறிச் செலவு காணேன்திருக்கொண்டீச்சுரத்து உளானே! | [8] |
பாலனாய்க் கழிந்த நாளும், பனிமலர்க் கோதை மார் தம் மேலனாய்க் கழிந்த நாளும், மெலிவொடு மூப்பு வந்து கோலனாய்க் கழிந்த நாளும், குறிக்கோள் இலாது கெட்டேன்- சேல் உலாம் பழன வேலித் திருக்கொண்டீச்சுரத்து உளானே! | [9] |
விரை தரு கருமென் கூந்தல் விளங்கு இழை வேல் ஒண் கண்ணாள வெருவர, இலங்கைக் கோமான் விலங்கலை எடுத்த ஞான்று, பருவரை அனைய தோளும் முடிகளும் பாரி வீழத் திருவிரல் ஊன்றினானே திருக்கொண்டீச்சுரத்து உளானே! | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.070  
கண்ட பேச்சினில் காளையர் தங்கள்
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருக்கொண்டீச்சரம் ; (திருத்தலம் அருள்தரு சாந்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு பசுபதீசுவரர் திருவடிகள் போற்றி )
கண்ட பேச்சினில் காளையர் தங்கள் பால் மண்டி ஏச்சுணும் மாதரைச் சேராதே, சண்டியீச்சுரவர்க்கு அருள்செய்த அக் கொண்டியீச்சுரவன் கழல் கூறுமே! | [1] |
சுற்றமும், துணை நல் மடவாளொடு, பெற்ற மக்களும், பேணல் ஒழிந்தனர்; குற்றம் இல் புகழ்க் கொண்டீச்சுரவனார் பற்று அலால், ஒரு பற்று மற்று இல்லையே. | [2] |
மாடு தான் அது இல் எனின், மானுடர் பாடுதான் செல்வார் இல்லை; பல்மாலையால் கூட நீர் சென்று, கொண்டீச்சுரவனைப் பாடுமின்! பரலோகத்து இருத்துமே. | [3] |
தந்தை, தாயொடு, தாரம், எனும் தளை- பந்தம் ஆங்கு அறுத்து, பயில்வு எய்திய கொந்து அவிழ் பொழில் கொண்டீச்சுரவனைச் சிந்தை செய்ம்மின்கள், சேவடி சேரவே! | [4] |
கேளுமின்(ன்): இளமை அது கேடு வந்து ஈளையோடு இருமல்(ல்) அது எய்தல் முன், கோள் அரா அணி கொண்டீச்சுரவனை நாளும் ஏத்தித் தொழுமின்! நன்கு ஆகுமே. | [5] |
வெம்பு நோயும் இடரும் வெறுமையும் துன்பமும் துயரும்(ம்) எனும் சூழ்வினை, கொம்பனார் பயில் கொண்டீச்சுரவனை, எம்பிரான்! என வல்லவர்க்கு இல்லையே. | [6] |
அல்லலோடு அருநோயில் அழுந்தி, நீர், செல்லுமா நினையாதே, கனை குரல் கொல்லை ஏறு உடைக் கொண்டீச்சுரவனை வல்ல ஆறு தொழ, வினை மாயுமே. | [7] |
நாறு சாந்து அணி நல்முலை, மென்மொழி, மாறு இலா மலைமங்கை ஓர்பாகமாக் கூறனார் உறை கொண்டீச்சுரம் நினைந்து ஊறுவார் தமக்கு ஊனம் ஒன்று இல்லையே. | [8] |
அயில் ஆர் அம்பு எரி, மேரு வில், ஆகவே எயிலாரும் பொடி ஆய் விழ எய்தவன், குயில் ஆரும் பொழில் கொண்டீச்சுரவனைப் பயில்வாரும் பெருமை பெறும் பாலரே. | [9] |
நிலையின் ஆர் வரை நின்று எடுத்தான் தனை மலையினால் அடர்த்து(வ்) விறல் வாட்டினான், குலையின் ஆர் பொழில் கொண்டீச்சுரவனைத் தலையினால் வணங்க, தவம் ஆகுமே. | [10] |