சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
4.067   திருநாவுக்கரசர்   தேவாரம்   வரைகிலேன், புலன்கள் ஐந்தும்; வரைகிலாப்
பண் - திருநேரிசை   (திருக்கொண்டீச்சரம் பசுபதீசுவரர் சாந்தநாயகியம்மை)
5.070   திருநாவுக்கரசர்   தேவாரம்   கண்ட பேச்சினில் காளையர் தங்கள்
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கொண்டீச்சரம் பசுபதீசுவரர் சாந்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Fs6i7rvUFuw

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.067   வரைகிலேன், புலன்கள் ஐந்தும்; வரைகிலாப்  
பண் - திருநேரிசை   (திருத்தலம் திருக்கொண்டீச்சரம் ; (திருத்தலம் அருள்தரு சாந்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு பசுபதீசுவரர் திருவடிகள் போற்றி )
வரைகிலேன், புலன்கள் ஐந்தும்; வரைகிலாப் பிறவி மாயப்
புரையுளே அடங்கி நின்று புறப்படும் வழியும் காணேன்;
அரையிலே மிளிரும் நாகத்து அண்ணலே! அஞ்சல்! என்னாய்
திரை உலாம் பழன வேலித் திருக்கொண்டீச்சுரத்து உளானே!

[1]
தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நைந்து பேர்வது ஓர் வழியும் காணேன்;
அண்டனே! அண்டவாணா! அறிவனே! அஞ்சல்! என்னாய்
தெண் திரைப் பழனம் சூழ்ந்த திருக்கொண்டீச்சுரத்து உளானே!

[2]
கால் கொடுத்து, எலும்பு மூட்டி, கதிர் நரம்பு ஆக்கை ஆர்த்து
தோல் உடுத்து, உதிரம் அட்டி, தொகு மயிர் மேய்ந்த கூரை
ஓல் எடுத்து உழைஞர் கூடி ஒளிப்பதற்கு அஞ்சுகின்றேன்-
சேல் உடைப் பழனம் சூழ்ந்த திருக்கொண்டீச்சுரத்து உளானே!

[3]
கூட்டம் ஆய் ஐவர் வந்து கொடுந் தொழில் குணத்தர் ஆகி
ஆட்டுவார்க்கு ஆற்றகில்லேன் ஆடு அரவு அசைத்த கோவே!
காட்டு இடை அரங்கம் ஆக ஆடிய கடவுளேயோ!
சேட்டு இரும் பழன வேலித் திருக்கொண்டீச்சுரத்து உளானே!

[4]
பொக்கம் ஆய் நின்ற பொல்லாப் புழு மிடை முடை கொள் ஆக்கை
தொக்கு நின்று ஐவர் தொண்ணூற்று அறுவரும் துயக்கம் எய்த,
மிக்கு நின்று இவர்கள் செய்யும் வேதனைக்கு அலந்து போனேன்
செக்கரே திகழும் மேனித் திருக்கொண்டீச்சுரத்து உளானே!

[5]
ஊன் உலாம் முடை கொள் ஆக்கை உடைகலம் ஆவது, என்றும்;
மான் உலாம் மழைக்கணார் தம் வாழ்க்கையை மெய் என்று எண்ணி,
நான் எலாம் இனைய காலம் நண்ணிலேன்; எண்ணம் இல்லேன்
தேன் உலாம் பொழில்கள் சூழ்ந்த திருக்கொண்டீச்சுரத்து உளானே!

[6]
சாண் இரு மருங்கு நீண்ட சழக்கு உடைப் பதிக்கு நாதர்
வாணிகர் ஐவர் தொண்ணூற்று அறுவரும் மயக்கம் செய்து,
பேணிய பதியின் நின்று பெயரும் போது அறிய மாட்டேனெ
சேண் உயர் மாடம் நீடு திருக்கொண்டீச்சுரத்து உளானே!

[7]
பொய்ம் மறித்து இயற்றி வைத்து, புலால் கமழ் பண்டம் பெய்து
பைம் மறித்து இயற்றியன்ன பாங்கு இலாக் குரம்பை நின்று
கைம் மறித்தனைய ஆவி கழியும் போது அறிய மாட்டேன்;
செந்நெறிச் செலவு காணேன்திருக்கொண்டீச்சுரத்து உளானே!

[8]
பாலனாய்க் கழிந்த நாளும், பனிமலர்க் கோதை மார் தம்
மேலனாய்க் கழிந்த நாளும், மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளும், குறிக்கோள் இலாது கெட்டேன்-
சேல் உலாம் பழன வேலித் திருக்கொண்டீச்சுரத்து உளானே!

[9]
விரை தரு கருமென் கூந்தல் விளங்கு இழை வேல் ஒண் கண்ணாள
வெருவர, இலங்கைக் கோமான் விலங்கலை எடுத்த ஞான்று,
பருவரை அனைய தோளும் முடிகளும் பாரி வீழத்
திருவிரல் ஊன்றினானே திருக்கொண்டீச்சுரத்து உளானே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.070   கண்ட பேச்சினில் காளையர் தங்கள்  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருக்கொண்டீச்சரம் ; (திருத்தலம் அருள்தரு சாந்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு பசுபதீசுவரர் திருவடிகள் போற்றி )
கண்ட பேச்சினில் காளையர் தங்கள் பால்
மண்டி ஏச்சுணும் மாதரைச் சேராதே,
சண்டியீச்சுரவர்க்கு அருள்செய்த அக்
கொண்டியீச்சுரவன் கழல் கூறுமே!

[1]
சுற்றமும், துணை நல் மடவாளொடு,
பெற்ற மக்களும், பேணல் ஒழிந்தனர்;
குற்றம் இல் புகழ்க் கொண்டீச்சுரவனார்
பற்று அலால், ஒரு பற்று மற்று இல்லையே.

[2]
மாடு தான் அது இல் எனின், மானுடர்
பாடுதான் செல்வார் இல்லை; பல்மாலையால்
கூட நீர் சென்று, கொண்டீச்சுரவனைப்
பாடுமின்! பரலோகத்து இருத்துமே.

[3]
தந்தை, தாயொடு, தாரம், எனும் தளை-
பந்தம் ஆங்கு அறுத்து, பயில்வு எய்திய
கொந்து அவிழ் பொழில் கொண்டீச்சுரவனைச்
சிந்தை செய்ம்மின்கள், சேவடி சேரவே!

[4]
கேளுமின்(ன்): இளமை அது கேடு வந்து
ஈளையோடு இருமல்(ல்) அது எய்தல் முன்,
கோள் அரா அணி கொண்டீச்சுரவனை
நாளும் ஏத்தித் தொழுமின்! நன்கு ஆகுமே.

[5]
வெம்பு நோயும் இடரும் வெறுமையும்
துன்பமும் துயரும்(ம்) எனும் சூழ்வினை,
கொம்பனார் பயில் கொண்டீச்சுரவனை,
எம்பிரான்! என வல்லவர்க்கு இல்லையே.

[6]
அல்லலோடு அருநோயில் அழுந்தி, நீர்,
செல்லுமா நினையாதே, கனை குரல்
கொல்லை ஏறு உடைக் கொண்டீச்சுரவனை
வல்ல ஆறு தொழ, வினை மாயுமே.

[7]
நாறு சாந்து அணி நல்முலை, மென்மொழி,
மாறு இலா மலைமங்கை ஓர்பாகமாக்
கூறனார் உறை கொண்டீச்சுரம் நினைந்து
ஊறுவார் தமக்கு ஊனம் ஒன்று இல்லையே.

[8]
அயில் ஆர் அம்பு எரி, மேரு வில், ஆகவே
எயிலாரும் பொடி ஆய் விழ எய்தவன்,
குயில் ஆரும் பொழில் கொண்டீச்சுரவனைப்
பயில்வாரும் பெருமை பெறும் பாலரே.

[9]
நிலையின் ஆர் வரை நின்று எடுத்தான் தனை
மலையினால் அடர்த்து(வ்) விறல் வாட்டினான்,
குலையின் ஆர் பொழில் கொண்டீச்சுரவனைத்
தலையினால் வணங்க, தவம் ஆகுமே.

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list