சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.050   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருப்புனவாயில் - பழம்பஞ்சுரம் யாகப்பிரியா சங்கராபரணம் கலஹம்சா ராகத்தில் திருமுறை அருள்தரு பரங்கருணைநாயகியம்மை உடனுறை அருள்மிகு பழம்பதிநாயகர் திருவடிகள் போற்றி
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=MyUtjA-_VqI  https://www.youtube.com/watch?v=TzdBCOhKDC4   Add audio link Add Audio

சித்தம்! நீ நினை! என்னொடு சூள் அறு, வைகலும்!
மத்தயானையின் ஈர் உரி போர்த்த மணாளன் ஊர்
பத்தர் தாம் பலர் பாடி நின்று ஆடும் பழம் பதி,
பொத்தில் ஆந்தைகள் பாட்டு அறா புனவாயிலே.

1

கருது நீ, மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்!
எருது மேற்கொளும் எம்பெருமாற்கு இடம் ஆவது
மருத வானவர் வைகும் இடம், மற வேடுவர்
பொருது, சாத்தொடு, பூசல் அறா புனவாயிலே.

2

தொக்கு ஆய மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்!
நக்கான், நமை ஆள் உடையான், நவிலும்(ம்) இடம்
அக்கோடு அரவு ஆர்த்த பிரான் அடிக்கு அன்பராய்ப்
புக்கார் அவர் போற்று ஒழியா புனவாயிலே.

3

வற்கென்று இருத்தி கண்டாய், மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்!
பொன் குன்றம் சேர்ந்தது ஓர் காக்கை பொன் ஆம்; அதுவே புகல்
கல்குன்றும், தூறும், கடு வெளியும், கடல் கானல் வாய்ப்
புற்கென்று தோன்றிடும் எம் பெருமான் புனவாயிலே.

4

நில்லாய், மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்!
நல்லான் நமை ஆள் உடையான் நவிலும்(ம்) இடம்
வில் வாய்க் கணை வேட்டுவர் ஆட்ட, வெகுண்டு போய்ப்
புல் வாய்க் கணம் புக்கு ஒளிக்கும் புனவாயிலே.

5
Go to top

மறவல் நீ, மனம்! என்னொடு சூள் அறு, வைகலும்!
உறவும் ஊழியும் ஆய பெம்மாற்கு இடம் ஆவது
பிறவு கள்ளியின் நீள் கவட்டு ஏறித் தன் பேடையைப்
புறவம் கூப்பிடப் பொன் புனம் சூழ் புனவாயிலே.

6

ஏசு அற்று நீ நினை, என்னொடு சூள் அறு, வைகலும்!
பாசு அற்றவர் பாடி நின்று ஆடும் பழம் பதி
தேசத்து அடியவர் வந்து இருபோதும் வணங்கிடப்
பூசல்-துடி பூசல் அறா புனவாயிலே.

7

கொள்ளி வாயின கூர் எயிற்று ஏனம் கிழிக்கவே
தெள்ளி மா மணி தீவிழிக்கும்(ம்) இடம் செந் தறை
கள்ளி வற்றி, புல் தீந்து, வெங் கானம் கழிக்கவே,
புள்ளி மான் இனம் புக்கு ஒளிக்கும் புனவாயிலே.

8

எற்றே, நினை! என்னொடும் சூள் அறு, வைகலும்!
மற்று ஏதும் வேண்டா, வல்வினை ஆயின மாய்ந்து அற;
கல்-தூறு கார்க் காட்டு இடை மேய்ந்த கார்க்கோழி போயப்
புற்று ஏறி, கூ கூ என அழைக்கும் புனவாயிலே.

9

பொடி ஆடு மேனியன் பொன் புனம் சூழ் புனவாயிலை
அடியார் அடியன்-நாவல் ஊரன்-உரைத்தன
மடியாது கற்று இவை ஏத்த வல்லார், வினை மாய்ந்து போய்க்
குடி ஆக, பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை, குற்றமே.

10
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்புனவாயில்
3.011   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மின் இயல் செஞ்சடை வெண்பிறையன்,
Tune - காந்தாரபஞ்சமம்   (திருப்புனவாயில் புனவாயிலீசுவரர் கருணையீசுவரியம்மை)
7.050   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   சித்தம்! நீ நினை! என்னொடு
Tune - பழம்பஞ்சுரம்   (திருப்புனவாயில் பழம்பதிநாயகர் பரங்கருணைநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000