சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
103   திருச்செந்தூர் திருப்புகழ் ( - வாரியார் # 72 )  

வெம் சரோருகமோ

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தந்த தானன தானன தந்த தானன தானன
     தந்த தானன தானன ...... தனதான


வெஞ்ச ரோருக மோகடு நஞ்ச மோகய லோநெடு
     வின்ப சாகர மோவடு ...... வகிரோமுன்
வெந்து போனபு ராதன சம்ப ராரிபு ராரியை
     வென்ற சாயக மோகரு ...... விளையோகண்
தஞ்ச மோயம தூதுவர் நெஞ்ச மோவெனு மாமத
     சங்க மாதர்ப யோதர ...... மதில்மூழ்கு
சங்கை யோவிரு கூதள கந்த மாலிகை தோய்தரு
     தண்டை சேர்கழ லீவது ...... மொருநாளே
பஞ்ச பாதக தாருக தண்ட னீறெழ வானவர்
     பண்டு போலம ராவதி ...... குடியேறப்
பங்க யாசனர் கேசவ ரஞ்ச லேயென மால்வரை
     பங்க நீறெழ வேல்விடு ...... மிளையோனே
செஞ்ச டாடவி மீமிசை கங்கை மாதவி தாதகி
     திங்கள் சூடிய நாயகர் ...... பெருவாழ்வே
செண்ப காடவி நீடிய துங்க மாமதிள் சுழ்தரு
     செந்தில் மாநகர் மேவிய ...... பெருமாளே.

வெம் சரோருகமோ கடு நஞ்சமோ கயலோ நெடு இன்ப
சாகரமோ வடு வகிரோ
முன் வெந்து போன புராதன சம்பராரி புராரியை வென்ற
சாயகமோ கரு விளையோ கண்
தஞ்சமோ யம தூதுவர் நெஞ்சமோ எனும் மா மத சங்க மாதர்
பயோதரம் அதில் மூழ்கு சங்கை ஓவ
இரு கூதள கந்த மாலிகை தோய் தரு தண்டை சேர் கழல்
ஈவதும் ஒரு நாளே
பஞ்ச பாதக தாருக தண்டன் நீறு எழ
வானவர் பண்டு போல் அமராவதி குடி ஏற
பங்கயாசனர் கேசவர் அஞ்சலே என மால் வரை பங்க நீறு
எழ வேல் விடும் இளையோனே
செம் சடை அடவி மீமிசை கங்கை மாதவி தாதகி திங்கள்
சூடிய நாயகர் பெரு வாழ்வே
செண்பக அடவி நீடிய துங்க மா மதிள் சூழ் தரு
செந்தில் மா நகர் மேவிய பெருமாளே.
விரும்பத் தக்க தாமரை மலரோ, கொடிய விஷமோ, கயல் மீனோ, பெரிய இன்பக் கடலோ, மாவடுவின் பிளவோ, முன்பு வெந்து போன பழைய மன்மதன் சிவபெருமான் மீது செலுத்தி வென்ற அம்போ, கரு விளை மலரோ அந்தக் கண்கள்? யாவரும் அடைக்கலம் புகும் இடமோ, யம தூதர்களுடைய மனமோ என்று சொல்லக் கூடிய, மோக வெறி பிடித்த சேர்க்கையையே நாடும் விலைமாதர்களுடைய மார்பகங்களில் மூழ்குகின்ற எண்ணம் அழிய, உனது இரண்டு, கூதள மலர்களின் நறு மணமுள்ள மாலை தோய்ந்துள்ள, தண்டைகள் விளங்கும் திருவடிகளை நீ அளிப்பதாகிய ஒரு நாள் எனக்குக் கிடைக்குமோ? ஐந்து பெரிய பாதகங்களையும் செய்யும் தாருகன் என்னும் யமனை ஒத்த அசுரன் பொடியாகும்படியும், தேவர்கள் முன்பு இருந்தபடியே பொன்னுலகத்தில் குடி ஏறவும், தாமரையில் வீற்றிருக்கும் பிரமனையும், திருமாலையும் பயப்படாதீர்கள் என்று கூறி, மாயையில் வல்ல (கிரவுஞ்ச) மலை கேடு அடைந்து பொடியாகவும் வேலைச் செலுத்திய இளையவனே. சிவந்த சடைக்காட்டின் மேலே, கங்கை, குருக்கத்தி, ஆத்தி, சந்திரன் இவைகளைச் சூடிய தலைவராகிய சிவ பெருமான் அளித்த பெரிய செல்வமே, செண்பக வனங்கள் நிறைந்துள்ளதும், உயர்ந்ததும், பெரிய மதில்கள் சூழ்ந்ததுமான திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
வெம் சரோருகமோ கடு நஞ்சமோ கயலோ நெடு இன்ப
சாகரமோ வடு வகிரோ
... விரும்பத் தக்க தாமரை மலரோ, கொடிய
விஷமோ, கயல் மீனோ, பெரிய இன்பக் கடலோ, மாவடுவின் பிளவோ,
முன் வெந்து போன புராதன சம்பராரி புராரியை வென்ற
சாயகமோ கரு விளையோ கண்
... முன்பு வெந்து போன பழைய
மன்மதன் சிவபெருமான் மீது செலுத்தி வென்ற அம்போ, கரு விளை
மலரோ அந்தக் கண்கள்?
தஞ்சமோ யம தூதுவர் நெஞ்சமோ எனும் மா மத சங்க மாதர்
பயோதரம் அதில் மூழ்கு சங்கை ஓவ
... யாவரும் அடைக்கலம்
புகும் இடமோ, யம தூதர்களுடைய மனமோ என்று சொல்லக் கூடிய,
மோக வெறி பிடித்த சேர்க்கையையே நாடும் விலைமாதர்களுடைய
மார்பகங்களில் மூழ்குகின்ற எண்ணம் அழிய,
இரு கூதள கந்த மாலிகை தோய் தரு தண்டை சேர் கழல்
ஈவதும் ஒரு நாளே
... உனது இரண்டு, கூதள மலர்களின் நறு
மணமுள்ள மாலை தோய்ந்துள்ள, தண்டைகள் விளங்கும்
திருவடிகளை நீ அளிப்பதாகிய ஒரு நாள் எனக்குக் கிடைக்குமோ?
பஞ்ச பாதக தாருக தண்டன் நீறு எழ ... ஐந்து பெரிய
பாதகங்களையும் செய்யும் தாருகன் என்னும் யமனை ஒத்த
அசுரன் பொடியாகும்படியும்,
வானவர் பண்டு போல் அமராவதி குடி ஏற ... தேவர்கள் முன்பு
இருந்தபடியே பொன்னுலகத்தில் குடி ஏறவும்,
பங்கயாசனர் கேசவர் அஞ்சலே என மால் வரை பங்க நீறு
எழ வேல் விடும் இளையோனே
... தாமரையில் வீற்றிருக்கும்
பிரமனையும், திருமாலையும் பயப்படாதீர்கள் என்று கூறி,
மாயையில் வல்ல (கிரவுஞ்ச) மலை கேடு அடைந்து பொடியாகவும்
வேலைச் செலுத்திய இளையவனே.
செம் சடை அடவி மீமிசை கங்கை மாதவி தாதகி திங்கள்
சூடிய நாயகர் பெரு வாழ்வே
... சிவந்த சடைக்காட்டின் மேலே,
கங்கை, குருக்கத்தி, ஆத்தி, சந்திரன் இவைகளைச் சூடிய
தலைவராகிய சிவ பெருமான் அளித்த பெரிய செல்வமே,
செண்பக அடவி நீடிய துங்க மா மதிள் சூழ் தரு ... செண்பக
வனங்கள் நிறைந்துள்ளதும், உயர்ந்ததும், பெரிய மதில்கள் சூழ்ந்ததுமான
செந்தில் மா நகர் மேவிய பெருமாளே. ... திருச்செந்தூரில்
வீற்றிருக்கும் பெருமாளே.
Similar songs:

103 - வெம் சரோருகமோ (திருச்செந்தூர்)

தந்த தானன தானன தந்த தானன தானன
     தந்த தானன தானன ...... தனதான

Songs from this thalam திருச்செந்தூர்

21 - அங்கை மென்குழல்

22 - அந்தகன் வருந்தினம்

23 - அமுத உததி விடம்

24 - அம்பொத்த விழி

25 - அருணமணி மேவு

26 - அவனி பெறுந்தோடு

27 - அளக பாரமலைந்து

28 - அறிவழிய மயல்பெருக

29 - அனிச்சம் கார்முகம்

30 - அனைவரும் மருண்டு

31 - இயலிசையில் உசித

32 - இருகுழை யெறிந்த

33 - இருள்விரி குழலை

34 - உததியறல் மொண்டு

35 - உருக்கம் பேசிய

36 - ஏவினை நேர்விழி

37 - ஓராது ஒன்றை

38 - கட்டழகு விட்டு

39 - கண்டுமொழி

40 - கமல மாதுடன்

41 - கரிக்கொம்பம்

42 - கருப்பம் தங்கு

43 - களபம் ஒழுகிய

44 - கனங்கள் கொண்ட

45 - கன்றிலுறு மானை

46 - காலனார் வெங்கொடும்

47 - குகர மேவுமெய்

48 - குடர்நிண மென்பு

49 - குழைக்கும் சந்தன

50 - கொங்கைகள்

51 - கொங்கைப் பணை

52 - கொடியனைய இடை

53 - கொம்பனையார்

54 - கொலை மதகரி

55 - சங்குபோல் மென்

56 - சங்கை தான் ஒன்று

57 - சத்தம் மிகு ஏழு

58 - சந்தன சவ்வாது

59 - சேமக் கோமள

60 - தகரநறை

61 - தண் தேனுண்டே

62 - தண்டை அணி

63 - தந்த பசிதனை

64 - தரிக்குங்கலை

65 - துன்பங்கொண்டு அங்கம்

66 - தெருப்புறத்து

67 - தொடரியமன்

68 - தொந்தி சரிய

69 - தோலொடு மூடிய

70 - நாலும் ஐந்து வாசல்

71 - நிதிக்குப் பிங்கலன்

72 - நிலையாப் பொருளை

73 - நிறுக்குஞ் சூதன

74 - பங்கம் மேவும் பிறப்பு

75 - பஞ்ச பாதகம்

76 - படர்புவியின் மீது

77 - பதும இருசரண்

78 - பரிமள களப

79 - பருத்தந்த

80 - பாத நூபுரம்

81 - புகரப் புங்க

82 - பூரண வார கும்ப

83 - பெருக்கச் சஞ்சலித்து

84 - மங்கை சிறுவர்

85 - மஞ்செனுங் குழல்

86 - மனத்தின் பங்கு

87 - மனைகனக மைந்தர்

88 - மாய வாடை

89 - மான்போல் கண்

90 - முகிலாமெனும்

91 - முந்துதமிழ் மாலை

92 - முலை முகம்

93 - மூப்புற்றுச் செவி

94 - மூளும்வினை சேர

95 - வஞ்சங்கொண்டும்

96 - வஞ்சத்துடன் ஒரு

97 - வந்து வந்து முன்

98 - வரியார் கருங்கண்

99 - விதி போலும் உந்து

100 - விந்ததில் ஊறி

101 - விறல்மாரன் ஐந்து

102 - வெங்காளம் பாணம்

103 - வெம் சரோருகமோ

1334 - கன்றிவரு நீல

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 103