சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
1305   பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( )  

குருபர சரவண

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதன தனதன தனன தனதன
   தனதன தனதன தனன தனதன
      தந்தத் தனந்ததன தந்தத் தனந்ததன
தனதன தனதன தனன தனதன
   தனதன தனதன தனன தனதன
      தந்தத் தனந்ததன தந்தத் தனந்ததன ...... தனதான


குருபர சரவண பவசண் முககுக
   ஒருபர வயமியல் எயினர் மகள்சுக
      மண்டத் தனங்கள்புணர் சண்டத் திரண்டபுஜ
உழுவைகள் கரடிகள் கிடிகள் பகடுகள்
   இளைகளை நெறுநெறு நெறென உலவுவி
      லங்கற்குறிஞ்சியுறைதொங்கற்கடம்ப ...... அருள் தருவாயே
... அடிபடு முரசு தவில்பட
   கந்தக்கை துந்துமித டந்தப்பு டன் சலிகை
      ... கரடிகை யறைபறை திமிலை .. அபிநவ
சங்கொற்றை கொம்புகுழல் வங்கக் கருங்கடல் கொள்
   பிரளய மிதுவென அதிர உலகர்கள்
      அரகர சிவசிவ அபய மபயமெ
         னுஞ்சத்த மெங்குமெழ வெஞ்சத்தி கொண்டுபடை ...... புகவானோர்
... வனச மலர்நிகர், செம்பொற் சதங்கையடி யன்பர்க்கு வந்துதவு ...... பெருமாளே.

குருபர சரவணபவ சண்முக குக
ஒருபர வயமியல் எயினர் மகள்சுக மண்டத் தனங்கள்புணர்
சண்டத் திரண்டபுஜ
உழுவைகள் கரடிகள் கிடிகள் பகடுகள் இளைகளை
நெறுநெறு நெறென உலவு விலங்கற் குறிஞ்சியுறை தொங்கற்
கடம்ப அருள் தருவாயே
(
) அடிபடு முரசு தவில்பட கந்தக் கைதுந்துமி
தடந்தப்புடன்சலிகை கரடிகை யறைபறை திமிலை அபிநவ
சங்கு ஒற்றை கொம்பு குழல்
வங்கக் கருங்கடல் கொள் பிரளயம் இதுவென அதிர
உலகர்கள் அரகர சிவசிவ அபயம் அபயமெனுஞ் சத்தம்
எங்கும் எழ
வெஞ் சத்தி கொண்டுபடை புக வானோர் (
)
தேவர்கள் (
) வனச மலர் நிகர், செம்பொற் சதங்கையடி
அன்பர்க்கு வந்துதவு பெருமாளே.
குருபரனே, சரவணபவனே, ஷண்முகனே, குகப் பெருமானே, ஒப்பற்ற மேலான வெற்றி பொருந்தியுள்ள வேடர்மகள் வள்ளியின் இன்பம் நிறைந்துள்ள மார்பகங்களை அணைந்துள்ள, வலிமை பொருந்தியதும், திரண்டுள்ளதுமான திருப்புயங்களை உடையவனே, புலிகள், கரடிகள், காட்டெருமைகள், காட்டானைகள் இவைகளெல்லாம் காவற்காடுகள் நெறுநெறுவென்று களைந்து அழியும்படி உலாவுகின்ற மலைகள் உள்ள குறிஞ்சி நிலத்தில் வாழ்பவனே, கடப்ப மாலையை அணிந்தவனே, அருள் புரிவாயாக. ??? .. அடிக்கப் படுகின்ற முரசு வாத்தியம், தவில் மேளம் இவை சப்திக்க, அடிக்கும் தொழிற்குரிய தக்கை என்ற பறை, பேரிகை, பெரிய தப்பு என்ற பறை, இவையுடன் சல்லிகை என்ற பெரும் பறை வகை, கரடி கத்தினாற்போல் ஓசையுள்ள பறை, ஒலிக்கப்படும் திமிலை என்ற பறை, அதிசயிக்கத்தக்க புதுவகையான சங்கு, ஒரு தொளைக் கருவி, ஊதுகொம்பு, புல்லாங்குழல் இவையெல்லாம் எழுப்பும் ஓசை, மரக்கலங்கள் உலாவும் கரிய கடலில் ஏற்படும் பிரளய கால வெள்ளமோ இது என்னும் அதிர்ச்சியை உண்டாக்க, ஹரஹர, சிவசிவ, அடைக்கலம், அடைக்கலம், என்று கூச்சலிடும் சப்தமே உலகெங்கும் உண்டாக, ??? .. இங்கு முற்றுப் பெறவில்லை கொடிய வேலாயுதம் கொண்டு, பூதப்படை உடன் வர, ??? .. தாமரைமலர் போன்றதும் சிவந்த பொன்னாலான சதங்கையை அணிந்ததுமான உன் திருவடியை அன்பர்களுக்கு எழுந்தருளி வந்து உதவுகின்ற பெருமாளே.
Add (additional) Audio/Video Link
குருபர சரவணபவ சண்முக குக ... குருபரனே, சரவணபவனே,
ஷண்முகனே, குகப் பெருமானே,
ஒருபர வயமியல் எயினர் மகள்சுக மண்டத் தனங்கள்புணர்
சண்டத் திரண்டபுஜ
... ஒப்பற்ற மேலான வெற்றி பொருந்தியுள்ள
வேடர்மகள் வள்ளியின் இன்பம் நிறைந்துள்ள மார்பகங்களை
அணைந்துள்ள, வலிமை பொருந்தியதும், திரண்டுள்ளதுமான
திருப்புயங்களை உடையவனே,
உழுவைகள் கரடிகள் கிடிகள் பகடுகள் இளைகளை
நெறுநெறு நெறென உலவு விலங்கற் குறிஞ்சியுறை தொங்கற்
கடம்ப அருள் தருவாயே
... புலிகள், கரடிகள், காட்டெருமைகள்,
காட்டானைகள் இவைகளெல்லாம் காவற்காடுகள் நெறுநெறுவென்று
களைந்து அழியும்படி உலாவுகின்ற மலைகள் உள்ள குறிஞ்சி நிலத்தில்
வாழ்பவனே, கடப்ப மாலையை அணிந்தவனே, அருள் புரிவாயாக.
(??? .. ) அடிபடு முரசு தவில்பட கந்தக் கைதுந்துமி
தடந்தப்புடன்சலிகை கரடிகை யறைபறை திமிலை அபிநவ
சங்கு ஒற்றை கொம்பு குழல்
... அடிக்கப் படுகின்ற முரசு வாத்தியம்,
தவில் மேளம் இவை சப்திக்க, அடிக்கும் தொழிற்குரிய தக்கை என்ற பறை,
பேரிகை, பெரிய தப்பு என்ற பறை, இவையுடன் சல்லிகை என்ற பெரும்
பறை வகை, கரடி கத்தினாற்போல் ஓசையுள்ள பறை, ஒலிக்கப்படும்
திமிலை என்ற பறை, அதிசயிக்கத்தக்க புதுவகையான சங்கு, ஒரு
தொளைக் கருவி, ஊதுகொம்பு, புல்லாங்குழல் இவையெல்லாம்
எழுப்பும் ஓசை,
வங்கக் கருங்கடல் கொள் பிரளயம் இதுவென அதிர
உலகர்கள் அரகர சிவசிவ அபயம் அபயமெனுஞ் சத்தம்
எங்கும் எழ
... மரக்கலங்கள் உலாவும் கரிய கடலில் ஏற்படும் பிரளய
கால வெள்ளமோ இது என்னும் அதிர்ச்சியை உண்டாக்க, ஹரஹர,
சிவசிவ, அடைக்கலம், அடைக்கலம், என்று கூச்சலிடும் சப்தமே
உலகெங்கும் உண்டாக,
வெஞ் சத்தி கொண்டுபடை புக வானோர் (??? .. இங்கு முற்றுப்
பெறவில்லை) ... கொடிய வேலாயுதம் கொண்டு, பூதப்படை உடன் வர,
தேவர்கள் (??? .. ) வனச மலர் நிகர், செம்பொற் சதங்கையடி
அன்பர்க்கு வந்துதவு பெருமாளே.
... தாமரைமலர் போன்றதும்
சிவந்த பொன்னாலான சதங்கையை அணிந்ததுமான உன் திருவடியை
அன்பர்களுக்கு எழுந்தருளி வந்து உதவுகின்ற பெருமாளே.
Similar songs:

1305 - குருபர சரவண (பொதுப்பாடல்கள்)

தனதன தனதன தனன தனதன
   தனதன தனதன தனன தனதன
      தந்தத் தனந்ததன தந்தத் தனந்ததன
தனதன தனதன தனன தனதன
   தனதன தனதன தனன தனதன
      தந்தத் தனந்ததன தந்தத் தனந்ததன ...... தனதான

Songs from this thalam பொதுப்பாடல்கள்

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 1305