சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
171   பழநி திருப்புகழ் ( - வாரியார் # 173 )  

நிகமம் எனில்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதனன தந்த தத்த தானன
     தனதனன தந்த தத்த தானன
          தனதனன தந்த தத்த தானன ...... தனதான


நிகமமெனி லொன்று மற்று நாடொறு
     நெருடுகவி கொண்டு வித்தை பேசிய
          நிழலர்சிறு புன்சொல் கற்று வீறுள ...... பெயர்கூறா
நெளியமுது தண்டு சத்ர சாமர
     நிபிடமிட வந்து கைக்கு மோதிர
          நெடுகியதி குண்ட லப்ர தாபமு ...... முடையோராய்
முகமுமொரு சம்பு மிக்க நூல்களு
     முதுமொழியும் வந்தி ருக்கு மோவெனில்
          முடிவிலவை யொன்று மற்று வேறொரு ...... நிறமாகி
முறியுமவர் தங்கள் வித்தை தானிது
     முடியவுனை நின்று பத்தி யால்மிக
          மொழியும்வளர் செஞ்சொல் வர்க்க மேவர ...... அருள்வாயே
திகுதிகென மண்ட விட்ட தீயொரு
     செழியனுடல் சென்று பற்றி யாருகர்
          திகையினமண் வந்து விட்ட போதினு ...... மமையாது
சிறியகர பங்க யத்து நீறொரு
     தினையளவு சென்று பட்ட போதினில்
          தெளியஇனி வென்றி விட்ட மோழைகள் ...... கழுவேற
மகிதலம ணைந்த அத்த யோனியை
     வரைவறம ணந்து நித்த நீடருள்
          வகைதனைய கன்றி ருக்கு மூடனை ...... மலரூபம்
வரவரம னந்தி கைத்த பாவியை
     வழியடிமை கொண்டு மிக்க மாதவர்
          வளர்பழநி வந்த கொற்ற வேலவ ...... பெருமாளே.

நிகமம் எனில் ஒன்றும் அற்று நாள்தொறு(ம்) நெருடு கவி
கொண்டு வித்தை பேசிய
நிழலர் சிறு புன் சொல் கற்று வீறு உள பெயர் கூறா
நெளிய முது தண்டு சத்ர(ம்) சாமர(ம்) நிபிடம் இட வந்து
கைக்கு மோதிர நெடுகி அதி குண்டல ப்ரதாபமும்
உடையோராய்
முகம் ஒரு சம்பு மிக்க நூல்களும் முது மொழியும் வந்து
இருக்குமோ எனில்
முடிவில் அவை ஒன்றும் அற்று வேறொரு நிறமாகி முறியும்
அவர் தங்கள் வித்தை தான் இது
முடியவு(ம்) உனை நின்று பத்தியால் மிக மொழியும் வளர்
செம் சொல் வர்க்கமே வர அருள்வாயே
திகுதிகு என மண்ட விட்ட தீ ஒரு செழியன் உடல் சென்று
பற்றி
ஆருகர் திகையின் அமண் வந்து விட்ட போதினும்
அமையாது
சிறிய கர பங்கயத்து நீறு ஒரு தினை அளவு சென்று பட்ட
போதினில் தெளிய
இனி வென்றி விட்ட மோழைகள் கழு ஏற மகிதலம்
அணைந்த அத்த
யோனியை வரைவு அற மணந்து நித்த நீடு அருள் வகை
தனை அகன்றி இருக்கும் மூடனை
மல ரூபம் வர வர மனம் திகைத்த பாவியை வழி அடிமை
கொண்டு
மிக்க மாதவர் வளர் பழநி வந்த கொற்ற வேலவ பெருமாளே.
வேதப் பொருள் என்றால் ஒரு சிறிதும் தெரியாமல், தினமும் (அங்குமிங்கும் கற்ற) மொழிகளைத் திரித்து இயற்றிய போலிக் கவிகள் சில அற்பச் சொற்களைக் கற்று, ஆடம்பரமான பட்டப் பெயர்களை வைத்துக்கொண்டு, (தூக்குவோர்களுடைய முதுகு) நெளியத் தக்கக் கனத்த பல்லக்கு, குடை, சாமரம் (இவைகள் பரிசாகப் பெற்று) நெருங்கும்படியாக (உலவிக் கொண்டு) வந்து, கையில் மோதிரமும், (காதில்) நீண்டு தொங்கும் ஒளி மிக்க குண்டலங்களைத் தாங்கிய சிறப்பும் உடையவர்களாய், அவர்களது முகமானது, ஒரு செய்யுளும் வசனமும் கலந்த நூல்களும், திருக்குறள் போன்ற பழைய நூல்களும் விளக்கக் கூடுமோ என்று கேட்டால், அவை ஒன்றும் தெரியாததால் வெட்கத்தால் (முகம்) வெளுத்து, இறுதியில் மனம் குலைந்து போனவர்களுடைய வித்தைதான் இக்கல்வி எல்லாம். (இத்தகைய கல்வி போதும்,) இது முடிவதாக (இனியேனும்) உன்னை மனம் ஒரு வழியில் நின்ற பக்தியுடன் நிரம்பத் துதிப்பதற்கு, மேலும் மேலும் எழுகின்ற செவ்விய சொற்களின் பெருக்கே எனக்கு வரும்படி அருள்வாயாக. திகுதிகு என்று கொழுந்து விட்டு எரியும் நெருப்பு அந்த நெடுஞ்செழியப் பாண்டியனுடைய உடலைச் சென்று (சுரப் பிணியாகப்) பற்றிட, பல திசைகளிலிருந்தும் சமணக் குருக்கள் வந்து முயன்ற போதிலும் சுரம் தணியாமல், (திருஞான சம்பந்தராக வந்த) உனது சிறிய தாமரைக் கரத்தினின்று, திருநீறு ஒரு தினை அளவு (பாண்டியன் மேல்) பட்டவுடனே சுரம் தணிய, பின்பு (வாதப் போரில்) வெற்றியை இழந்த அந்த அறிவிலிகள் கழுவில் ஏற, இச்சாதனைகளுக்காக இந்தப் பூமியில் அவதரித்த குருவே, பெண்களின் சிற்றின்பத்திலேயே கணக்கற்ற முறை ஈடுபட்டு, நாள்தோறும் (உனது) பேரருளின் திறங்களை உணராமல் விலகி நிற்கும் மூடனாகிய என்னை, ஆணவ மலம் நாளுக்கு நாள் மனத்தைக் கலக்கும் பாவியாகிய என்னை, வழி அடிமையாக ஆட்கொண்டு, சிறந்த மகா தவசிகள் வாழும் பழனியில் வந்து அமர்ந்த வெற்றி வேலவப் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
நிகமம் எனில் ஒன்றும் அற்று நாள்தொறு(ம்) நெருடு கவி
கொண்டு வித்தை பேசிய
... வேதப் பொருள் என்றால் ஒரு சிறிதும்
தெரியாமல், தினமும் (அங்குமிங்கும் கற்ற) மொழிகளைத் திரித்து இயற்றிய
நிழலர் சிறு புன் சொல் கற்று வீறு உள பெயர் கூறா ... போலிக்
கவிகள் சில அற்பச் சொற்களைக் கற்று, ஆடம்பரமான பட்டப் பெயர்களை
வைத்துக்கொண்டு,
நெளிய முது தண்டு சத்ர(ம்) சாமர(ம்) நிபிடம் இட வந்து ...
(தூக்குவோர்களுடைய முதுகு) நெளியத் தக்கக் கனத்த பல்லக்கு, குடை,
சாமரம் (இவைகள் பரிசாகப் பெற்று) நெருங்கும்படியாக (உலவிக்
கொண்டு) வந்து,
கைக்கு மோதிர நெடுகி அதி குண்டல ப்ரதாபமும்
உடையோராய்
... கையில் மோதிரமும், (காதில்) நீண்டு தொங்கும் ஒளி
மிக்க குண்டலங்களைத் தாங்கிய சிறப்பும் உடையவர்களாய்,
முகம் ஒரு சம்பு மிக்க நூல்களும் முது மொழியும் வந்து
இருக்குமோ எனில்
... அவர்களது முகமானது, ஒரு செய்யுளும்
வசனமும் கலந்த நூல்களும், திருக்குறள் போன்ற பழைய நூல்களும்
விளக்கக் கூடுமோ என்று கேட்டால்,
முடிவில் அவை ஒன்றும் அற்று வேறொரு நிறமாகி முறியும்
அவர் தங்கள் வித்தை தான் இது
... அவை ஒன்றும் தெரியாததால்
வெட்கத்தால் (முகம்) வெளுத்து, இறுதியில் மனம் குலைந்து
போனவர்களுடைய வித்தைதான் இக்கல்வி எல்லாம்.
முடியவு(ம்) உனை நின்று பத்தியால் மிக மொழியும் வளர்
செம் சொல் வர்க்கமே வர அருள்வாயே
... (இத்தகைய கல்வி
போதும்,) இது முடிவதாக (இனியேனும்) உன்னை மனம் ஒரு வழியில்
நின்ற பக்தியுடன் நிரம்பத் துதிப்பதற்கு, மேலும் மேலும் எழுகின்ற
செவ்விய சொற்களின் பெருக்கே எனக்கு வரும்படி அருள்வாயாக.
திகுதிகு என மண்ட விட்ட தீ ஒரு செழியன் உடல் சென்று
பற்றி
... திகுதிகு என்று கொழுந்து விட்டு எரியும் நெருப்பு அந்த
நெடுஞ்செழியப் பாண்டியனுடைய உடலைச் சென்று (சுரப்
பிணியாகப்) பற்றிட,
ஆருகர் திகையின் அமண் வந்து விட்ட போதினும்
அமையாது
... பல திசைகளிலிருந்தும் சமணக் குருக்கள் வந்து
முயன்ற போதிலும் சுரம் தணியாமல்,
சிறிய கர பங்கயத்து நீறு ஒரு தினை அளவு சென்று பட்ட
போதினில் தெளிய
... (திருஞான சம்பந்தராக வந்த) உனது
சிறிய தாமரைக் கரத்தினின்று, திருநீறு ஒரு தினை அளவு
(பாண்டியன் மேல்) பட்டவுடனே சுரம் தணிய,
இனி வென்றி விட்ட மோழைகள் கழு ஏற மகிதலம்
அணைந்த அத்த
... பின்பு (வாதப் போரில்) வெற்றியை இழந்த
அந்த அறிவிலிகள் கழுவில் ஏற, இச்சாதனைகளுக்காக இந்தப்
பூமியில் அவதரித்த குருவே,
யோனியை வரைவு அற மணந்து நித்த நீடு அருள் வகை
தனை அகன்றி இருக்கும் மூடனை
... பெண்களின்
சிற்றின்பத்திலேயே கணக்கற்ற முறை ஈடுபட்டு, நாள்தோறும் (உனது)
பேரருளின் திறங்களை உணராமல் விலகி நிற்கும் மூடனாகிய என்னை,
மல ரூபம் வர வர மனம் திகைத்த பாவியை வழி அடிமை
கொண்டு
... ஆணவ மலம் நாளுக்கு நாள் மனத்தைக் கலக்கும்
பாவியாகிய என்னை, வழி அடிமையாக ஆட்கொண்டு,
மிக்க மாதவர் வளர் பழநி வந்த கொற்ற வேலவ பெருமாளே. ...
சிறந்த மகா தவசிகள் வாழும் பழனியில் வந்து அமர்ந்த வெற்றி
வேலவப் பெருமாளே.
Similar songs:

171 - நிகமம் எனில் (பழநி)

தனதனன தந்த தத்த தானன
     தனதனன தந்த தத்த தானன
          தனதனன தந்த தத்த தானன ...... தனதான

Songs from this thalam பழநி

104 - அகல்வினை

105 - அணிபட்டு அணுகி

106 - அதல விதல

107 - அபகார நிந்தை

108 - அரிசன வாடை

109 - அருத்தி வாழ்வொடு

110 - அவனிதனிலே

111 - அறமிலா நிலை

112 - ஆதாளிகள் புரி

113 - ஆலகாலம் என

114 - ஆறுமுகம் ஆறுமுகம்

115 - இத் தாரணிக்குள்

116 - இரவி என

117 - இருகனக மாமேரு

118 - இரு செப்பென

119 - இலகிய களப

120 - இலகுகனி மிஞ்சு

121 - உயிர்க் கூடு

122 - உலகபசு பாச

123 - ஒருபொழுதும் இருசரண

124 - ஒருவரை ஒருவர்

125 - ஓடி ஓடி

126 - கடலைச் சிறை

127 - கடலை பொரியவரை

128 - கதியை விலக்கு

129 - கரிய பெரிய

130 - கரிய மேகமதோ

131 - கரியிணை கோடென

132 - கருகி அகன்று

133 - கருப்புவிலில்

134 - கருவின் உருவாகி

135 - கலக வாள்விழி

136 - கலகக் கயல்விழி

137 - கலவியி லிச்சி

138 - கலை கொடு

139 - களப முலையை

140 - கறுத்த குழலணி

141 - கனக கும்பம்

142 - கனத்திறுகி

143 - கனமாய் எழுந்து

144 - கார் அணிந்த

145 - குரம்பை மலசலம்

146 - குருதி மலசலம்

147 - குழல் அடவி

148 - குழல்கள் சரிய

149 - குறித்தமணி

150 - குன்றுங் குன்றும்

151 - கொந்துத் தரு

152 - கோல குங்கும

153 - கோல மதிவதனம்

154 - சகடத்திற் குழை

155 - சிந்துர கூரம

156 - சிவனார் மனங்குளிர

157 - சிறு பறையும்

158 - சீ உதிரம் எங்கும்

159 - சீறல் அசடன்

160 - சுருதி முடி மோனம்

161 - சுருளளக பார

162 - ஞானங்கொள்

163 - தகர நறுமலர்

164 - தகைமைத் தனியில்

165 - தமரும் அமரும்

166 - தலைவலி மருத்தீடு

167 - திடமிலி சற்குணமிலி

168 - திமிர உததி

169 - தோகைமயிலே கமல

170 - நாத விந்து

171 - நிகமம் எனில்

172 - நெற்றி வெயர்த்துளி

173 - பகர்தற்கு அரிதான

174 - பஞ்ச பாதகன்

175 - பாரியான கொடை

176 - புடவிக்கு அணி

177 - புடைசெப் பென

178 - பெரியதோர் கரி

179 - போதகம் தரு

180 - மந்தரமதெனவே

181 - மருமலரினன்

182 - மனக்கவலை ஏதும்

183 - மலரணி கொண்டை

184 - முகிலளகத்தில்

185 - முகை முளரி

186 - முதிரவுழையை

187 - முத்துக்கு

188 - மூலம் கிளர் ஓர்

189 - மூல மந்திரம்

190 - முருகுசெறி குழலவிழ

191 - முருகு செறிகுழல் முகில்

192 - வசனமிக ஏற்றி

193 - வஞ்சனை மிஞ்சி

194 - வரதா மணி நீ

195 - வனிதை உடல்

196 - வாதம் பித்தம்

197 - வாரணந் தனை

198 - விதம் இசைந்து

199 - விரை மருவு

200 - வேய் இசைந்து

1338 - சிவணிதா வியமனது

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 171