சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
178   பழநி திருப்புகழ் ( - வாரியார் # 176 )  

பெரியதோர் கரி

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதனா தனதன தந்த தானன
     தனதனா தனதன தந்த தானன
          தனதனா தனதன தந்த தானன ...... தனதான


பெரியதோர் கரியிரு கொம்பு போலவெ
     வடிவமார் புளகித கும்ப மாமுலை
          பெருகியே யொளிசெறி தங்க வாரமு ...... மணியான
பிறையதோ வெனுநுதல் துங்க மீறுவை
     அயிலதோ வெனுமிரு கண்க ளாரவெ
          பிறகெலாம் விழுகுழல் கங்கு லாரவெ ...... வருமானார்
உரியதோர் பொருள்கொடு வந்த பேர்களை
     மனையிலே வினவியெ கொண்டு போகிய
          யுளவிலே மருவிய வஞ்ச மாதர்கள் ...... மயலாலே
உருகியே யுடலற வெம்பி வாடியெ
     வினையிலே மறுகியெ நொந்த பாதக
          னுனதுதாள் தொழுதிட இன்ப ஞானம ...... தருள்வாயே
அரியதோ ரமரர்க ளண்ட மேறவெ
     கொடியதோ ரசுரர்க ளங்க மாளவெ
          அடலதோ டமர்புரி கின்ற கூரிய ...... வடிவேலா
அரகரா வெனமிக அன்பர் சூழவெ
     கடியதோர் மயில்மிசை யன்றை யேறியெ
          அவனியோர் நொடிவரு கின்ற காரண ...... முருகோனே
பரியதோர் கயிறனை கொண்டு வீசவெ
     உறியதோய் தயிர்தனை யுண்டு நாடியெ
          பசியதோ கெடவருள் கொண்ட மாயவன் ...... மருகோனே
பரமமா நதிபுடை கொண்ட ணாவவெ
     வனசமா மலரினில் வண்டு லாவவெ
          பழநிமா மலைதனி லென்று மேவிய ...... பெருமாளே.

பெரியது ஓர் கரி இரு கொம்பு போலவெ வடிவம் ஆர் புளகித
கும்ப மா முலை பெருகியே ஒளி செறி தங்க ஆரமும்
அணியான பிறையதோ எ(ன்)னு(ம்) நுதல் துங்க மீறு வை
அயில் அதோ எ(ன்)னும் இரு கண்கள் ஆரவெ பிறகு எலாம்
விழு குழல் கங்குல் ஆரவெ வரும் மானார்
உரியது ஓர் பொருள் கொடு வந்த பேர்களை மனையிலே
வினவியெ கொண்டு போகிய உளவிலே மருவிய வஞ்ச
மாதர்கள் மயலாலே
உருகியே உடல் அற வெம்பி வாடியெ வினையிலே மறுகியெ
நொந்த பாதகன் உனது தாள் தொழுதிட இன்ப ஞானம்
அது அருள்வாயே
அரியது ஓர் அமரர்கள் அண்டம் ஏறவெ கொடியதோர்
அசுரர்கள் அங்கம் மாளவெ அடல் அதோடு அமர் புரிகின்ற
கூரிய வடி வேலா
அரகரா என மிக அன்பர் சூழவெ கடியது ஓர் மயில் மிசை
அன்றை ஏறியெ அவனி ஓர் நொடி வருகின்ற காரண
முருகோனே
பரியது ஓர் கயிறு அ(ன்)னை கொண்டு வீசவெ உறி அது
தோய் தயிர் தனை உண்டு நாடியெ பசியதோ கெட அருள்
கொண்ட மாயவன் மருகோனே
பரம மா நதி புடை கொண்டு அணாவவெ வனச மா
மலரினில் வண்டு உலாவவெ பழநி மா மலை தனில்
என்று(ம்) மேவிய பெருமாளே.
பெரிய ஒரு யானையின் இரண்டு தந்தங்கள் போலவே வடிவம் கொண்டதாய், புளகம் பூண்டதாய், குடம் போன்ற பெருத்த மார்பகங்களின் மேல் நிறைந்து தோன்றும் ஒளி மிக்க பொன் மாலையும், அழகான பிறைச் சந்திரனோ எனத் தோன்றும் நெற்றியும், உயர்ச்சி மிக்க கூரிய வேலோ என்னும் படியாக இரண்டு கண்களும் நிறைந்து, முதுகு எல்லாம் விழுகின்ற கூந்தல் இரவு போல் இருள் போல் கருமை மிக்கதாய் தோற்றத்துடன் வருகின்ற விலைமாதர்கள், தமக்குச் சேருதற்கு உரிய பொருளைப் பெற்றுக் கொண்டு, (தம்மிடம்) வந்த ஆடவர்களை ஆய்ந்து பேசி விசாரித்து வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் ரகசிய உபாய எண்ணம் பொருந்திய வஞ்சகம் உள்ள பொது மகளிர் மீதுள்ள மோக மயக்கத்தால், மனம் உருகி உடல் எல்லாம் மெத்தக் கொதித்து வாடி, வினைக்குள் கலங்கி நொந்த பாதகனாகிய எனக்கு உன் திருவடிகளைத் தொழும்படியான ஞான இன்பத்தை அருள் புரிவாயாக. அருமை வாய்ந்த தேவர்கள் பொன் உலகத்துக்குக் குடி ஏறவும், கொடுமை வாய்ந்த அசுரர்களின் உடல்கள் அழியவும், வெற்றியுடன் போர் புரிந்த கூரிய வேலாயுதனே, அரஹரா என்னும் பேரொலியுடன் அன்பர்கள் சூழ, வலிமை வாயந்த மயிலின் மீது ஏறி அன்று (நீ) பூமியை ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்த காரணனே, முருகனே, பருத்த கயிறு கொண்டு தாயாகிய யசோதை வீசிக் கட்ட, உறியில் தோய்ந்திருந்த தயிரை உண்டு விரும்பி பசி நீங்கி அருள் பூத்த மாயக் கண்ணனின் மருகனே, மேலோனே, சிறந்த ஷண்முக நதி பக்கத்தில் சூழ்ந்து நெருங்க, தாமரையின் அழகிய மலர்களில் வண்டுகள் உலாவ, பழனியாகிய சிறந்த மலையில் எப்போதும் வீற்றிருக்கும் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
பெரியது ஓர் கரி இரு கொம்பு போலவெ வடிவம் ஆர் புளகித
கும்ப மா முலை பெருகியே ஒளி செறி தங்க ஆரமும்
... பெரிய
ஒரு யானையின் இரண்டு தந்தங்கள் போலவே வடிவம் கொண்டதாய்,
புளகம் பூண்டதாய், குடம் போன்ற பெருத்த மார்பகங்களின் மேல்
நிறைந்து தோன்றும் ஒளி மிக்க பொன் மாலையும்,
அணியான பிறையதோ எ(ன்)னு(ம்) நுதல் துங்க மீறு வை
அயில் அதோ எ(ன்)னும் இரு கண்கள் ஆரவெ பிறகு எலாம்
விழு குழல் கங்குல் ஆரவெ வரும் மானார்
... அழகான பிறைச்
சந்திரனோ எனத் தோன்றும் நெற்றியும், உயர்ச்சி மிக்க கூரிய வேலோ
என்னும் படியாக இரண்டு கண்களும் நிறைந்து, முதுகு எல்லாம்
விழுகின்ற கூந்தல் இரவு போல் இருள் போல் கருமை மிக்கதாய்
தோற்றத்துடன் வருகின்ற விலைமாதர்கள்,
உரியது ஓர் பொருள் கொடு வந்த பேர்களை மனையிலே
வினவியெ கொண்டு போகிய உளவிலே மருவிய வஞ்ச
மாதர்கள் மயலாலே
... தமக்குச் சேருதற்கு உரிய பொருளைப்
பெற்றுக் கொண்டு, (தம்மிடம்) வந்த ஆடவர்களை ஆய்ந்து பேசி
விசாரித்து வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் ரகசிய
உபாய எண்ணம் பொருந்திய வஞ்சகம் உள்ள பொது மகளிர்
மீதுள்ள மோக மயக்கத்தால்,
உருகியே உடல் அற வெம்பி வாடியெ வினையிலே மறுகியெ
நொந்த பாதகன் உனது தாள் தொழுதிட இன்ப ஞானம்
அது அருள்வாயே
... மனம் உருகி உடல் எல்லாம் மெத்தக் கொதித்து
வாடி, வினைக்குள் கலங்கி நொந்த பாதகனாகிய எனக்கு உன்
திருவடிகளைத் தொழும்படியான ஞான இன்பத்தை அருள் புரிவாயாக.
அரியது ஓர் அமரர்கள் அண்டம் ஏறவெ கொடியதோர்
அசுரர்கள் அங்கம் மாளவெ அடல் அதோடு அமர் புரிகின்ற
கூரிய வடி வேலா
... அருமை வாய்ந்த தேவர்கள் பொன்
உலகத்துக்குக் குடி ஏறவும், கொடுமை வாய்ந்த அசுரர்களின் உடல்கள்
அழியவும், வெற்றியுடன் போர் புரிந்த கூரிய வேலாயுதனே,
அரகரா என மிக அன்பர் சூழவெ கடியது ஓர் மயில் மிசை
அன்றை ஏறியெ அவனி ஓர் நொடி வருகின்ற காரண
முருகோனே
... அரஹரா என்னும் பேரொலியுடன் அன்பர்கள் சூழ,
வலிமை வாயந்த மயிலின் மீது ஏறி அன்று (நீ) பூமியை ஒரு நொடிப்
பொழுதில் வலம் வந்த காரணனே, முருகனே,
பரியது ஓர் கயிறு அ(ன்)னை கொண்டு வீசவெ உறி அது
தோய் தயிர் தனை உண்டு நாடியெ பசியதோ கெட அருள்
கொண்ட மாயவன் மருகோனே
... பருத்த கயிறு கொண்டு தாயாகிய
யசோதை வீசிக் கட்ட, உறியில் தோய்ந்திருந்த தயிரை உண்டு விரும்பி
பசி நீங்கி அருள் பூத்த மாயக் கண்ணனின் மருகனே,
பரம மா நதி புடை கொண்டு அணாவவெ வனச மா
மலரினில் வண்டு உலாவவெ பழநி மா மலை தனில்
என்று(ம்) மேவிய பெருமாளே.
... மேலோனே, சிறந்த ஷண்முக
நதி பக்கத்தில் சூழ்ந்து நெருங்க, தாமரையின் அழகிய மலர்களில்
வண்டுகள் உலாவ, பழனியாகிய சிறந்த மலையில் எப்போதும்
வீற்றிருக்கும் பெருமாளே.
Similar songs:

178 - பெரியதோர் கரி (பழநி)

தனதனா தனதன தந்த தானன
     தனதனா தனதன தந்த தானன
          தனதனா தனதன தந்த தானன ...... தனதான

Songs from this thalam பழநி

104 - அகல்வினை

105 - அணிபட்டு அணுகி

106 - அதல விதல

107 - அபகார நிந்தை

108 - அரிசன வாடை

109 - அருத்தி வாழ்வொடு

110 - அவனிதனிலே

111 - அறமிலா நிலை

112 - ஆதாளிகள் புரி

113 - ஆலகாலம் என

114 - ஆறுமுகம் ஆறுமுகம்

115 - இத் தாரணிக்குள்

116 - இரவி என

117 - இருகனக மாமேரு

118 - இரு செப்பென

119 - இலகிய களப

120 - இலகுகனி மிஞ்சு

121 - உயிர்க் கூடு

122 - உலகபசு பாச

123 - ஒருபொழுதும் இருசரண

124 - ஒருவரை ஒருவர்

125 - ஓடி ஓடி

126 - கடலைச் சிறை

127 - கடலை பொரியவரை

128 - கதியை விலக்கு

129 - கரிய பெரிய

130 - கரிய மேகமதோ

131 - கரியிணை கோடென

132 - கருகி அகன்று

133 - கருப்புவிலில்

134 - கருவின் உருவாகி

135 - கலக வாள்விழி

136 - கலகக் கயல்விழி

137 - கலவியி லிச்சி

138 - கலை கொடு

139 - களப முலையை

140 - கறுத்த குழலணி

141 - கனக கும்பம்

142 - கனத்திறுகி

143 - கனமாய் எழுந்து

144 - கார் அணிந்த

145 - குரம்பை மலசலம்

146 - குருதி மலசலம்

147 - குழல் அடவி

148 - குழல்கள் சரிய

149 - குறித்தமணி

150 - குன்றுங் குன்றும்

151 - கொந்துத் தரு

152 - கோல குங்கும

153 - கோல மதிவதனம்

154 - சகடத்திற் குழை

155 - சிந்துர கூரம

156 - சிவனார் மனங்குளிர

157 - சிறு பறையும்

158 - சீ உதிரம் எங்கும்

159 - சீறல் அசடன்

160 - சுருதி முடி மோனம்

161 - சுருளளக பார

162 - ஞானங்கொள்

163 - தகர நறுமலர்

164 - தகைமைத் தனியில்

165 - தமரும் அமரும்

166 - தலைவலி மருத்தீடு

167 - திடமிலி சற்குணமிலி

168 - திமிர உததி

169 - தோகைமயிலே கமல

170 - நாத விந்து

171 - நிகமம் எனில்

172 - நெற்றி வெயர்த்துளி

173 - பகர்தற்கு அரிதான

174 - பஞ்ச பாதகன்

175 - பாரியான கொடை

176 - புடவிக்கு அணி

177 - புடைசெப் பென

178 - பெரியதோர் கரி

179 - போதகம் தரு

180 - மந்தரமதெனவே

181 - மருமலரினன்

182 - மனக்கவலை ஏதும்

183 - மலரணி கொண்டை

184 - முகிலளகத்தில்

185 - முகை முளரி

186 - முதிரவுழையை

187 - முத்துக்கு

188 - மூலம் கிளர் ஓர்

189 - மூல மந்திரம்

190 - முருகுசெறி குழலவிழ

191 - முருகு செறிகுழல் முகில்

192 - வசனமிக ஏற்றி

193 - வஞ்சனை மிஞ்சி

194 - வரதா மணி நீ

195 - வனிதை உடல்

196 - வாதம் பித்தம்

197 - வாரணந் தனை

198 - விதம் இசைந்து

199 - விரை மருவு

200 - வேய் இசைந்து

1338 - சிவணிதா வியமனது
 


1
   

send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000