சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
204   சுவாமிமலை திருப்புகழ் ( - வாரியார் # 231 )  

இராவினிருள் போலும்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனாதனன தானம் தனாதனன தானம்
     தனாதனன தானம் ...... தனதான


இராவினிருள் போலும் பராவுகுழ லாலும்
     இராமசர மாகும் ...... விழியாலும்
இராகமொழி யாலும் பொறாதமுலை யாலும்
     இராதஇடை யாலும் ...... இளைஞோர்நெஞ்
சராவியிரு போதும் பராவிவிழ வேவந்
     தடாதவிலை கூறும் ...... மடவாரன்
படாமலடி யேனுஞ் சுவாமியடி தேடும்
     அநாதிமொழி ஞானந் ...... தருவாயே
குராவினிழல் மேவுங் குமாரனென நாளுங்
     குலாவியினி தோதன் ...... பினர்வாழ்வே
குணாலமிடு சூரன் பணாமுடிக டோறுங்
     குடாவியிட வேலங் ...... கெறிவோனே
துராலுமிகு தீமுன் பிராதவகை போலுந்
     தொடாமல்வினை யோடும் ...... படிநூறுஞ்
சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ்
     சுவாமிமலை வாழும் ...... பெருமாளே.

இராவினிருள் போலும் பராவுகுழலாலும்
இராமசர மாகும் விழியாலும்
இராகமொழியாலும்
பொறாதமுலையாலும்
இராதஇடையாலும்
இளைஞோர்நெஞ்சராவி
இரு போதும் பராவிவிழ வேவந்து
அடாதவிலை கூறும் மடவார்
அன்பு அடாமல் அடியேனுஞ் சுவாமியடி தேடும்
அநாதிமொழி ஞானந் தருவாயே
குராவின் நிழல் மேவுங் குமாரனென
நாளுங் குலாவியினிது ஓது அன்பினர்வாழ்வே
குணாலமிடு சூரன் பணாமுடிகள் தோறும்
குடாவியிட வேல் அங்கு எறிவோனே
துராலும் மிகு தீமுன்பு இராதவகை போலும்
தொடாமல்வினை யோடும் படிநூறும்
சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேரும்
சுவாமிமலை வாழும் பெருமாளே.
இரவின் இருட்டைப் போல் பரவி கருத்த கூந்தலினாலும், ராமனுடைய அம்பைப் போன்ற கூர்மையான கண்களாலும், இசை நிரம்பிய வார்த்தைகளாலும், பாரமான மார்பகங்களாலும், இடுப்பு இருக்கிறதோ இல்லையோ என்னும்படியான மெல்லிய இடையாலும், இளம் ஆண்களின் இதயத்தை ரம்பம் போல் அறுத்து, காலையும் மாலையும் அவர்கள் தங்களைத் துதிசெய்து வீழ்த்துமாறு வந்து, தகாதபடி அதிகமாக விலையைக் கூறி பேரம்செய்யும் விலைமகளிரின் ஆசையின் பிடியில் அகப்படாமல், அடியேனும் கடவுளாகிய உனது திருவடிகளைத் தேடும் ஆதியே இல்லாத ஞானமொழியை நீ எனக்குத் தந்தருள்வாயாக. (திருவிடைக்கழியிலுள்ள) குராமரத்தின் நிழலின்கீழ் அமர்ந்துள்ள குமாரக்கடவுளே என்று தினந்தோறும் அன்புற்று அன்போடு துதிக்கும் அடியார்களின் நிதியே, வீராவேசக் கூக்குரலிடும் சூரனின் பருத்த முடிகள் யாவும் குடைந்தெடுத்து வளைத்த வேலை அவ்விடத்தில் செலுத்தியவனே, காய்ந்த செத்தையும் மிகுத்து எரியும் நெருப்பின் முன்பு ஒன்றுமே இல்லாது வெந்து போகும் வகைபோல, தம்மை அணுகாது விலகிப்போகும்படி வினைகளைப் பொடிபடச் செய்யும் நல்வழிகளையே உட்கொள்ளும் ஞானத் தவசீலர்கள் சேர்ந்துள்ள சுவாமிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
இராவினிருள் போலும் பராவுகுழலாலும் ... இரவின் இருட்டைப்
போல் பரவி கருத்த கூந்தலினாலும்,
இராமசர மாகும் விழியாலும் ... ராமனுடைய அம்பைப் போன்ற
கூர்மையான கண்களாலும்,
இராகமொழியாலும் ... இசை நிரம்பிய வார்த்தைகளாலும்,
பொறாதமுலையாலும் ... பாரமான மார்பகங்களாலும்,
இராதஇடையாலும் ... இடுப்பு இருக்கிறதோ இல்லையோ
என்னும்படியான மெல்லிய இடையாலும்,
இளைஞோர்நெஞ்சராவி ... இளம் ஆண்களின் இதயத்தை ரம்பம்
போல் அறுத்து,
இரு போதும் பராவிவிழ வேவந்து ... காலையும் மாலையும்
அவர்கள் தங்களைத் துதிசெய்து வீழ்த்துமாறு வந்து,
அடாதவிலை கூறும் மடவார் ... தகாதபடி அதிகமாக விலையைக்
கூறி பேரம்செய்யும் விலைமகளிரின்
அன்பு அடாமல் அடியேனுஞ் சுவாமியடி தேடும் ... ஆசையின்
பிடியில் அகப்படாமல், அடியேனும் கடவுளாகிய உனது திருவடிகளைத்
தேடும்
அநாதிமொழி ஞானந் தருவாயே ... ஆதியே இல்லாத
ஞானமொழியை நீ எனக்குத் தந்தருள்வாயாக.
குராவின் நிழல் மேவுங் குமாரனென ... (திருவிடைக்கழியிலுள்ள)
குராமரத்தின் நிழலின்கீழ் அமர்ந்துள்ள குமாரக்கடவுளே என்று
நாளுங் குலாவியினிது ஓது அன்பினர்வாழ்வே ... தினந்தோறும்
அன்புற்று அன்போடு துதிக்கும் அடியார்களின் நிதியே,
குணாலமிடு சூரன் பணாமுடிகள் தோறும் ... வீராவேசக்
கூக்குரலிடும் சூரனின் பருத்த முடிகள் யாவும்
குடாவியிட வேல் அங்கு எறிவோனே ... குடைந்தெடுத்து
வளைத்த வேலை அவ்விடத்தில் செலுத்தியவனே,
துராலும் மிகு தீமுன்பு இராதவகை போலும் ... காய்ந்த
செத்தையும் மிகுத்து எரியும் நெருப்பின் முன்பு ஒன்றுமே இல்லாது
வெந்து போகும் வகைபோல,
தொடாமல்வினை யோடும் படிநூறும் ... தம்மை அணுகாது
விலகிப்போகும்படி வினைகளைப் பொடிபடச் செய்யும்
சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேரும் ... நல்வழிகளையே
உட்கொள்ளும் ஞானத் தவசீலர்கள் சேர்ந்துள்ள
சுவாமிமலை வாழும் பெருமாளே. ... சுவாமிமலையில்
வீற்றிருக்கும் பெருமாளே.
Similar songs:

204 - இராவினிருள் போலும் (சுவாமிமலை)

தனாதனன தானம் தனாதனன தானம்
     தனாதனன தானம் ...... தனதான

208 - கடாவினிடை (சுவாமிமலை)

தனாதனன தானம் தனாதனன தானம்
     தனாதனன தானம் ...... தனதான

Songs from this thalam சுவாமிமலை

201 - அவாமருவு

202 - ஆனனம் உகந்து

203 - ஆனாத பிருதி

204 - இராவினிருள் போலும்

205 - இருவினை புனைந்து

206 - எந்தத் திகையினும்

207 - ஒருவரையும் ஒருவர்

208 - கடாவினிடை

209 - கடிமா மலர்க்குள்

210 - கதிரவனெ ழுந்து

211 - கறை படும் உடம்பு

212 - காமியத் தழுந்தி

213 - குமரகுருபர முருக குகனே

214 - குமர குருபர முருக சரவண

215 - கோமள வெற்பினை

216 - சரண கமலாலயத்தில்

217 - சுத்திய நரப்புடன்

218 - செகமாயை உற்று

219 - சேலும் அயிலும்

220 - தருவர் இவர்

221 - தெருவினில் நடவா

222 - நாசர்தங் கடை

223 - நாவேறு பா மணத்த

224 - நிலவினிலே

225 - நிறைமதி முகமெனும்

226 - பரவரிதாகி

227 - பலகாதல் பெற்றிட

228 - பாதி மதிநதி

229 - மகர கேதனத்தன்

230 - மருவே செறித்த

231 - முறுகு காள

232 - வாதமொடு சூலை

233 - வாரம் உற்ற

234 - வார்குழலை

235 - வார்குழல் விரித்து

236 - விடமும் வடிவேலும்

237 - விரித்த பைங்குழல்

238 - விழியால் மருட்டி

1336 - வறுமைப் பாழ்பிணி

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 204