![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
256 - கலை மடவார்தம் (திருத்தணிகை) Songs from this thalam திருத்தணிகை 302 - வெற்றி செயவுற்ற
256 திருத்தணிகை திருப்புகழ் ( குருஜி இராகவன் # 126 - வாரியார் # 303 )
கலை மடவார்தம்
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தனதன தானம் தனதன தானம்
தனதன தானம் ...... தனதான
கலைமட வார்தஞ் சிலையத னாலுங்
கனவளை யாலுங் ...... கரைமேலே
கருகிய காளம் பெருகிய தோயங்
கருதலை யாலுஞ் ...... சிலையாலுங்
கொலைதரு காமன் பலகணை யாலுங்
கொடியிடை யாள்நின் ...... றழியாதே
குரவணி நீடும் புயமணி நீபங்
குளிர்தொடை நீதந் ...... தருள்வாயே
சிலைமகள் நாயன் கலைமகள் நாயன்
திருமகள் நாயன் ...... தொழும்வேலா
தினைவன மானுங் கநவன மானுஞ்
செறிவுடன் மேவுந் ...... திருமார்பா
தலமகள் மீதெண் புலவரு லாவுந்
தணிகையில் வாழ்செங் ...... கதிர்வேலா
தனியவர் கூருந் தனிகெட நாளுந்
தனிமயி லேறும் ...... பெருமாளே.
கலைமடவார்தம் சிலையதனாலும்
கனவளையாலும் கரைமேலே
கருகிய காளம் பெருகிய தோயம்
கருது அலையாலும் சிலையாலுங்
கொலைதரு காமன் பலகணையாலும்
கொடியிடையாள் நின்றழியாதே
குரவணி நீடும் புயம் அணி நீபங்
குளிர்தொடை நீதந்து அருள்வாயே
சிலைமகள் நாயன் கலைமகள் நாயன்
திருமகள் நாயன் தொழும்வேலா
தினைவன மானுங் கநவன மானுஞ்
செறிவுடன் மேவுந் திருமார்பா
தலமகள் மீதெண் புலவரு லாவுந்
தணிகையில் வாழ்செங் கதிர்வேலா
தனியவர் கூருந் தனிகெட நாளுந்
தனிமயி லேறும் பெருமாளே.
மேகலை முதலிய ஆபரணங்கள் அணிந்த மாதர்களின் வசைப்பேச்சின் ஒலியினாலும், பெருத்த சங்கின் பேரொலியினாலும், கரையின் மேல் இருந்து கூவுகின்ற மன்மதனுடைய எக்காளமாகிய கருங் குயிலின் ஓசையாலும், பரந்து விரிந்த கடலின் ஓசையாலும், சிந்தனை அலைகளாலும், கரும்பு வில்லால் கொலை செய்யவல்ல மன்மதன் வீசுகின்ற பல மலர் அம்புகளினாலும், கொடி போன்ற மெல்லிய இடையாளாகிய இத்தலைவி உன் பிரிவுத் துயரால் கவலைப்பட்டு நின்று அழிவுறாமல், குரா மலர்களைத் தரித்துள்ள நீண்ட புயங்களில் அணிந்துள்ள கடப்ப மலரால் தொடுக்கப்பட்ட குளிர்ந்த மாலையை நீ தலைவிக்குத் தந்து அருள்வாயாக. மலையரசன் மகள் பார்வதி நாயகன் சிவனும், கலைமகள் Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link கலைமடவார்தம் ... மேகலை முதலிய ஆபரணங்கள் அணிந்த
மாதர்களின்
சிலையதனாலும் ... வசைப்பேச்சின் ஒலியினாலும்,
கனவளையாலும் ... பெருத்த சங்கின் பேரொலியினாலும்,
கரைமேலே ... கரையின் மேல் இருந்து கூவுகின்ற
கருகிய காளம் ... மன்மதனுடைய எக்காளமாகிய கருங் குயிலின்
ஓசையாலும்,
பெருகிய தோயம் ... பரந்து விரிந்த கடலின் ஓசையாலும்,
கருது அலையாலும் ... சிந்தனை அலைகளாலும்,
சிலையாலுங் கொலைதரு காமன் ... கரும்பு வில்லால் கொலை
செய்யவல்ல மன்மதன்
பலகணையாலும் ... வீசுகின்ற பல மலர் அம்புகளினாலும்,
கொடியிடையாள் ... கொடி போன்ற மெல்லிய இடையாளாகிய
இத்தலைவி
நின்றழியாதே ... உன் பிரிவுத் துயரால் கவலைப்பட்டு நின்று
அழிவுறாமல்,
குரவணி நீடும் புயம் அணி ... குரா மலர்களைத் தரித்துள்ள
நீண்ட புயங்களில் அணிந்துள்ள
நீபங் குளிர்தொடை ... கடப்ப மலரால் தொடுக்கப்பட்ட
குளிர்ந்த மாலையை
நீதந்து அருள்வாயே ... நீ தலைவிக்குத் தந்து அருள்வாயாக.
சிலைமகள் நாயன் ... மலையரசன் மகள் பார்வதி நாயகன்
சிவனும்,
கலைமகள் நாயன் ... கலைமகள்
1
Similar songs:
தனதன தானம் தனதன தானம்
தனதன தானம் ...... தனதான
This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thiruppugazh song lang tamil sequence no 256