சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
262   திருத்தணிகை திருப்புகழ் ( - வாரியார் # 262 )  

குயில் ஒன்று

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனனந் தனனத் தனனந் தனனத்
     தனனந் தனனத் ...... தனதான


குயிலொன் றுமொழிக் குயினின் றலையக்
     கொலையின் பமலர்க் ...... கணையாலே
குளிருந் தவளக் குலசந்த் ரவொளிக்
     கொடிகொங் கையின்முத் ...... தனலாலே
புயல்வந் தெறியக் கடனின் றலறப்
     பொருமங் கையருக் ...... கலராலே
புயமொன் றமிகத் தளர்கின் றதனிப்
     புயம்வந் தணையக் ...... கிடையாதோ
சயிலங் குலையத் தடமுந் தகரச்
     சமனின் றலையப் ...... பொரும்வீரா
தருமங் கைவனக் குறமங் கையர்மெய்த்
     தனமொன் றுமணித் ...... திருமார்பா
பயிலுங் ககனப் பிறைதண் பொழிலிற்
     பணியுந் தணிகைப் ...... பதிவாழ்வே
பரமன் பணியப் பொருளன் றருளிற்
     பகர்செங் கழநிப் ...... பெருமாளே.

குயில் ஒன்று மொழிக் குயில் நின்று அலையக்
     கொலை இன்ப மலர்க் கணையாலே
குளிரும் தவளக் குல சந்த்ர ஒளிக்
     கொடி கொங்கையின் முத்து அனலாலே
புயல் வந்து எறி அக்கடல் நின்று அலற
     பொரும் மங்கையர் உக்க அலராலே
புயம் ஒன்ற மிகத் தளர்கின்ற தனிப்
     புயம் வந்து அணையக் கிடையாதோ
சயிலம் குலையத் தடமும் தகரச்
     சமன் நின்று அலைய பொரும் வீரா
தரு மங்கை வனக் குற மங்கையர் மெய்த்
     தனம் ஒன்றும் அணித் திரு மார்பா
பயிலும் ககனப் பிறை தண் பொழிலில்
     பணியும் தணிகைப் பதி வாழ்வே
பரமன் பணியப் பொருள் அன்று அருளி
     பகர் செம் கழநிப் பெருமாளே.
குயில் போன்ற பேச்சுக்களை உடையவளாகிய இவள் குயிலின் சோக கீதத்தால் செய்வது அறியாமல் நின்று வேதனையுற்று அலைவதாலும், கொலையே புரியவல்ல இன்ப நீலோத்பல மலராகிய (மன்மதனது ஐந்தாவது) பாணத்தாலும், குளிர்ந்துள்ள, வெண்ணிறமான சிறந்த நிலாவின் ஒளிக் கொடி போன்ற இவளுடைய மார்பின் மீதுள்ள முத்து மாலை (பொரிபடுமாறு வீசும்) நெருப்பாலும், புயல் காற்று வந்து வீசும் அந்தக் கடல் விடாது நின்று செய்யும் பேரொலியாலும், கூடி நின்ற பெண்கள் தூற்றுகின்ற வசை மொழியாலும், உனது புயத்தைக் கூட (விரும்பி) மிகவும் தளர்கின்ற, தனிமையில் இருக்கும் (இவளுக்கு) உன் தோள் வந்து அணைப்பதற்குக் கிட்டாதோ? கிரெளஞ்ச மலை அழிய, மற்ற ஏழு கிரிகளும் உடைபட்டு அழிய, யமன் நின்று (அங்குமிங்கும்) அலையும்படி சண்டை செய்த வீரனே, (கேட்டதை அளிக்கும்) கற்பக மரங்கள் உள்ள விண்ணுலகத்தில் வளர்ந்த தேவயானை, வள்ளிமலைக் காட்டிலே வளர்ந்த குறப் பெண்ணாகிய வள்ளி (ஆகிய இருவரின்) சிறந்த மார்பகங்கள் பொருந்தும் அழகிய மார்பை உடையவனே, ஆகாயத்தில் பொருந்தும் நிலவானது குளிர்ந்த சோலைகளின் உயர்ந்த மரங்களுக்குக் கீழாக விளங்கும் திருத்தணியில் வாழ்கின்ற செல்வமே, சிவபெருமான் வணங்க அன்று அருளுடன் (பிரணவப் பொருளை) போதித்தவனும், செங்கழுநீர்ப் பூ தினமும் மலரும் தணிகை மலையில் வீற்றிருப்பவனுமான பெருமாளே.
Add (additional) Audio/Video Link
குயில் ஒன்று மொழிக் குயில் நின்று அலைய ... குயில் போன்ற
பேச்சுக்களை உடையவளாகிய இவள் குயிலின் சோக கீதத்தால் செய்வது
அறியாமல் நின்று வேதனையுற்று அலைவதாலும்,
கொலை இன்ப மலர்க் கணையாலே ... கொலையே புரியவல்ல
இன்ப நீலோத்பல மலராகிய (மன்மதனது ஐந்தாவது) பாணத்தாலும்,
குளிரும் தவளக் குல சந்த்ர ஒளிக் கொடி கொங்கையின்
முத்து அனலாலே
... குளிர்ந்துள்ள, வெண்ணிறமான சிறந்த நிலாவின்
ஒளிக் கொடி போன்ற இவளுடைய மார்பின் மீதுள்ள முத்து மாலை
(பொரிபடுமாறு வீசும்) நெருப்பாலும்,
புயல் வந்து எறி அக்கடல் நின்று அலற ... புயல் காற்று வந்து
வீசும் அந்தக் கடல் விடாது நின்று செய்யும் பேரொலியாலும்,
பொரும் மங்கையர் உக்க அலராலே ... கூடி நின்ற பெண்கள்
தூற்றுகின்ற வசை மொழியாலும்,
புயம் ஒன்ற மிகத் தளர்கின்ற தனிப் புயம் வந்து அணையக்
கிடையாதோ
... உனது புயத்தைக் கூட (விரும்பி) மிகவும் தளர்கின்ற,
தனிமையில் இருக்கும் (இவளுக்கு) உன் தோள் வந்து அணைப்பதற்குக்
கிட்டாதோ?
சயிலம் குலையத் தடமும் தகரச் சமன் நின்று அலைய பொரும்
வீரா
... கிரெளஞ்ச மலை அழிய, மற்ற ஏழு கிரிகளும் உடைபட்டு அழிய,
யமன் நின்று (அங்குமிங்கும்) அலையும்படி சண்டை செய்த வீரனே,
தரு மங்கை வனக் குற மங்கையர் மெய்த் தனம் ஒன்றும்
அணித் திரு மார்பா
... (கேட்டதை அளிக்கும்) கற்பக மரங்கள் உள்ள
விண்ணுலகத்தில் வளர்ந்த தேவயானை, வள்ளிமலைக் காட்டிலே வளர்ந்த
குறப் பெண்ணாகிய வள்ளி (ஆகிய இருவரின்) சிறந்த மார்பகங்கள்
பொருந்தும் அழகிய மார்பை உடையவனே,
பயிலும் ககனப் பிறை தண் பொழிலில் பணியும் தணிகைப்
பதி வாழ்வே
... ஆகாயத்தில் பொருந்தும் நிலவானது குளிர்ந்த
சோலைகளின் உயர்ந்த மரங்களுக்குக் கீழாக விளங்கும் திருத்தணியில்
வாழ்கின்ற செல்வமே,
பரமன் பணியப் பொருள் அன்று அருளி பகர் செம் கழநிப்
பெருமாளே.
... சிவபெருமான் வணங்க அன்று அருளுடன் (பிரணவப்
பொருளை) போதித்தவனும், செங்கழுநீர்ப் பூ தினமும் மலரும் தணிகை
மலையில் வீற்றிருப்பவனுமான பெருமாளே.
Similar songs:

262 - குயில் ஒன்று (திருத்தணிகை)

தனனந் தனனத் தனனந் தனனத்
     தனனந் தனனத் ...... தனதான

Songs from this thalam திருத்தணிகை

239 - அமைவுற்று அடைய

240 - அரகர சிவன் அரி

241 - அருக்கி மெத்தென

242 - இருப்பவல் திருப்புகழ்

243 - இருமலு ரோக

244 - உடலி னூடு

245 - உடையவர்கள் ஏவர்

246 - உய்யஞானத்து நெறி

247 - எத்தனை கலாதி

248 - எலுப்பு நாடிகள்

249 - எனக்கென யாவும்

250 - எனை அடைந்த

251 - ஏது புத்தி

252 - ஓலை இட்ட

253 - கச்சணி இளமுலை

254 - கடற்செகத் தடக்கி

255 - கரிக்குழல் விரித்தும்

256 - கலை மடவார்தம்

257 - கவடுற்ற சித்தர்

258 - கனத்த அற

259 - கனைத்து அதிர்க்கும்

260 - கிரி உலாவிய

261 - கிறி மொழி

262 - குயில் ஒன்று

263 - குருவி என

264 - குலைத்து மயிர்

265 - குவளைக் கணை

266 - கூந்தல் அவிழ்த்து

267 - கூர்வேல் பழித்த

268 - கொந்துவார் குரவடி

269 - சினத்தவர் முடிக்கும்

270 - சினத் திலத் தினை

271 - சொரியும் முகிலை

272 - தாக்கு அமருக்கு

273 - திருட்டு நாரிகள்

274 - துப் பார் அப்பு

275 - தொக்கறாக் குடில்

276 - தொடத்துளக்கிகள்

277 - நிலையாத சமுத்திர

278 - நினைத்தது எத்தனை

279 - பகல் இராவினும்

280 - பருத்தபற் சிரத்தினை

281 - பழமை செப்பிய

282 - புருவ நெறித்து

283 - பூசலிட்டு

284 - பெருக்க உபாயம்

285 - பொரியப் பொரிய

286 - பொருவிக் கந்தொடு

287 - பொற்குடம் ஒத்த

288 - பொற் பதத்தினை

289 - மருக்குல மேவும்

290 - மலை முலைச்சியர்

291 - முகத்தை மினுக்கி

292 - முகிலும் இரவியும்

293 - முடித்த குழலினர்

294 - முத்துத் தெறிக்க

295 - முலைபுளகம் எழ

296 - மொகுமொகு என

297 - வங்கம் பெறு

298 - வட்ட வாள் தன

299 - வரிக் கலையின்

300 - வார் உற்று எழும்

301 - வினைக்கு இனமாகும்

302 - வெற்றி செயவுற்ற

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 262