சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
271   திருத்தணிகை திருப்புகழ் ( - வாரியார் # 268 )  

சொரியும் முகிலை

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனன தனனத் தனன தனனத்
     தனன தனனத் ...... தனதான


சொரியு முகிலைப் பதும நிதியைச்
     சுரபி தருவைச் ...... சமமாகச்
சொலியு மனமெட் டனையு நெகிழ்விற்
     சுமட ரருகுற் ...... றியல்வாணர்
தெரியு மருமைப் பழைய மொழியைத்
     திருடி நெருடிக் ...... கவிபாடித்
திரியு மருள்விட் டுனது குவளைச்
     சிகரி பகரப் ...... பெறுவேனோ
கரிய புருவச் சிலையும் வளையக்
     கடையில் விடமெத் ...... தியநீலக்
கடிய கணைபட் டுருவ வெருவிக்
     கலைகள் பலபட் ...... டனகானிற்
குரிய குமரிக் கபய மெனநெக்
     குபய சரணத் ...... தினில்வீழா
உழையின் மகளைத் தழுவ மயலுற்
     றுருகு முருகப் ...... பெருமாளே.

சொரியும் முகிலைப் பதும நிதியைச் சுரபி தருவைச் சமமாகச்
சொ(ல்)லியும்
மனம் எள் (அத்)தனையும் நெகிழ்வு இல் சுமடர் அருகு
உற்று
இயல் வாணர் தெரியும் அருமைப் பழைய மொழியைத் திருடி
நெருடிக் கவி பாடி
திரியு மருள் விட்டு உனது குவளைச் சிகரி பகரப்
பெறுவேனோ
கரிய புருவச் சிலையும் வளைய
கடையில் விடம் மெத்திய நீலக் கடிய கணை பட்டு
உருவ
வெருவிக் கலைகள் பல பட்டன கானிற்கு உரிய குமரிக்கு
அபயம் என நெக்கு
உபய சரணத்தினில் வீழா உழையின் மகளைத் தழுவ மயல்
உற்று உருகு(ம்) முருகப் பெருமாளே.
மழை பொழிகின்ற மேகத்தையும், பதும நிதியையும், காமதேனுவையும், கற்பக மரத்தையும் (கொடையில்) நீ ஒப்பாய் என்று சொல்லிப் புகழ்ந்தாலும், மனம் ஓர் எள் அளவும் இளகி இரங்குதல் இல்லாத கீழ் மக்களின் அருகில் சென்று, இலக்கியத் தமிழ்ப் புலவர்கள் தெரிந்து பாடிய அருமையான பழைய பாடல்களைத் திருடியும், திரித்து நுழைத்தும் பாடல்களைப் பாடி, திரிகின்ற மயக்க அறிவை விட்டு, குவளை மலர் தினமும் மலர்கின்ற, உன்னுடைய, திருத்தணிகை மலையின் பெருமையைக் கூறும்படியான பாக்கியத்தை நான் பெறுவேனோ? (வள்ளியின்) கரிய புருவம் என்னும் வில் (காம வேதனையால்) வளைந்து சுருங்க, (காமனது ஐந்தாவது) கடைசிப் பாணமானதும், விஷம் நிறைந்ததும் ஆகிய நீலோற்பலம் என்னும் கொடுமை வாய்ந்த அம்பு உன் மேல் பட்டு, நீ அதனால் விரக வேதனை மிகுந்து, மிகுந்த அச்சத்துடன், மான்கள் பல உள்ள வள்ளி மலைக் காட்டுக்குச் சென்று, அவ்விடத்துக்கு உரிய குமரியாகிய வள்ளிக்கு அபயம் என்று உரைத்து, அவளது இரண்டு பாதங்களிலும் விழுந்து, பின்பு, மான் பெற்ற மகளாகிய வள்ளியைத் தழுவ மோகம் கொண்டு உருகி நின்ற முருகப் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
சொரியும் முகிலைப் பதும நிதியைச் சுரபி தருவைச் சமமாகச்
சொ(ல்)லியும்
... மழை பொழிகின்ற மேகத்தையும், பதும நிதியையும்,
காமதேனுவையும், கற்பக மரத்தையும் (கொடையில்) நீ ஒப்பாய் என்று
சொல்லிப் புகழ்ந்தாலும்,
மனம் எள் (அத்)தனையும் நெகிழ்வு இல் சுமடர் அருகு
உற்று
... மனம் ஓர் எள் அளவும் இளகி இரங்குதல் இல்லாத கீழ்
மக்களின் அருகில் சென்று,
இயல் வாணர் தெரியும் அருமைப் பழைய மொழியைத் திருடி
நெருடிக் கவி பாடி
... இலக்கியத் தமிழ்ப் புலவர்கள் தெரிந்து பாடிய
அருமையான பழைய பாடல்களைத் திருடியும், திரித்து நுழைத்தும்
பாடல்களைப் பாடி,
திரியு மருள் விட்டு உனது குவளைச் சிகரி பகரப்
பெறுவேனோ
... திரிகின்ற மயக்க அறிவை விட்டு, குவளை மலர்
தினமும் மலர்கின்ற, உன்னுடைய, திருத்தணிகை மலையின்
பெருமையைக் கூறும்படியான பாக்கியத்தை நான் பெறுவேனோ?
கரிய புருவச் சிலையும் வளைய ... (வள்ளியின்) கரிய புருவம்
என்னும் வில் (காம வேதனையால்) வளைந்து சுருங்க,
கடையில் விடம் மெத்திய நீலக் கடிய கணை பட்டு
உருவ
... (காமனது ஐந்தாவது) கடைசிப் பாணமானதும், விஷம்
நிறைந்ததும் ஆகிய நீலோற்பலம் என்னும் கொடுமை வாய்ந்த அம்பு
உன் மேல் பட்டு, நீ அதனால் விரக வேதனை மிகுந்து,
வெருவிக் கலைகள் பல பட்டன கானிற்கு உரிய குமரிக்கு
அபயம் என நெக்கு
... மிகுந்த அச்சத்துடன், மான்கள் பல உள்ள
வள்ளி மலைக் காட்டுக்குச் சென்று, அவ்விடத்துக்கு உரிய குமரியாகிய
வள்ளிக்கு அபயம் என்று உரைத்து,
உபய சரணத்தினில் வீழா உழையின் மகளைத் தழுவ மயல்
உற்று உருகு(ம்) முருகப் பெருமாளே.
... அவளது இரண்டு
பாதங்களிலும் விழுந்து, பின்பு, மான் பெற்ற மகளாகிய வள்ளியைத்
தழுவ மோகம் கொண்டு உருகி நின்ற முருகப் பெருமாளே.
Similar songs:

271 - சொரியும் முகிலை (திருத்தணிகை)

தனன தனனத் தனன தனனத்
     தனன தனனத் ...... தனதான

Songs from this thalam திருத்தணிகை

239 - அமைவுற்று அடைய

240 - அரகர சிவன் அரி

241 - அருக்கி மெத்தென

242 - இருப்பவல் திருப்புகழ்

243 - இருமலு ரோக

244 - உடலி னூடு

245 - உடையவர்கள் ஏவர்

246 - உய்யஞானத்து நெறி

247 - எத்தனை கலாதி

248 - எலுப்பு நாடிகள்

249 - எனக்கென யாவும்

250 - எனை அடைந்த

251 - ஏது புத்தி

252 - ஓலை இட்ட

253 - கச்சணி இளமுலை

254 - கடற்செகத் தடக்கி

255 - கரிக்குழல் விரித்தும்

256 - கலை மடவார்தம்

257 - கவடுற்ற சித்தர்

258 - கனத்த அற

259 - கனைத்து அதிர்க்கும்

260 - கிரி உலாவிய

261 - கிறி மொழி

262 - குயில் ஒன்று

263 - குருவி என

264 - குலைத்து மயிர்

265 - குவளைக் கணை

266 - கூந்தல் அவிழ்த்து

267 - கூர்வேல் பழித்த

268 - கொந்துவார் குரவடி

269 - சினத்தவர் முடிக்கும்

270 - சினத் திலத் தினை

271 - சொரியும் முகிலை

272 - தாக்கு அமருக்கு

273 - திருட்டு நாரிகள்

274 - துப் பார் அப்பு

275 - தொக்கறாக் குடில்

276 - தொடத்துளக்கிகள்

277 - நிலையாத சமுத்திர

278 - நினைத்தது எத்தனை

279 - பகல் இராவினும்

280 - பருத்தபற் சிரத்தினை

281 - பழமை செப்பிய

282 - புருவ நெறித்து

283 - பூசலிட்டு

284 - பெருக்க உபாயம்

285 - பொரியப் பொரிய

286 - பொருவிக் கந்தொடு

287 - பொற்குடம் ஒத்த

288 - பொற் பதத்தினை

289 - மருக்குல மேவும்

290 - மலை முலைச்சியர்

291 - முகத்தை மினுக்கி

292 - முகிலும் இரவியும்

293 - முடித்த குழலினர்

294 - முத்துத் தெறிக்க

295 - முலைபுளகம் எழ

296 - மொகுமொகு என

297 - வங்கம் பெறு

298 - வட்ட வாள் தன

299 - வரிக் கலையின்

300 - வார் உற்று எழும்

301 - வினைக்கு இனமாகும்

302 - வெற்றி செயவுற்ற

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 271