சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
277   திருத்தணிகை திருப்புகழ் ( குருஜி இராகவன் # 136 - வாரியார் # 271 )  

நிலையாத சமுத்திர

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதான தனத்தன தான தனதான தனத்தன தான
     தனதான தனத்தன தான ...... தனதான


நிலையாத சமுத்திர மான சமுசார துறைக்கணின் மூழ்கி
     நிசமான தெனப்பல பேசி ...... யதனூடே
நெடுநாளு முழைப்புள தாகி பெரியோர்க ளிடைக்கர வாகி
     நினைவால்நி னடித்தொழில் பேணி ...... துதியாமல்
தலையான வுடற்பிணி யூறி பவநோயி னலைப்பல வேகி
     சலமான பயித்திய மாகி ...... தடுமாறித்
தவியாமல் பிறப்பையு நாடி யதுவேரை யறுத்துனை யோதி
     தலைமீதில் பிழைத்திட வேநி ...... னருள்தாராய்
கலியாண சுபுத்திர னாக குறமாது தனக்குவி நோத
     கவினாரு புயத்திலு லாவி ...... விளையாடிக்
களிகூரு முனைத்துணை தேடு மடியேனை சுகப்பட வேவை
     கடனாகு மிதுக்கன மாகு ...... முருகோனே
பலகாலு முனைத்தொழு வோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி
     படிமீது துதித்துடன் வாழ ...... அருள்வேளே
பதியான திருத்தணி மேவு சிவலோக மெனப்பரி வேறு
     பவரோக வயித்திய நாத ...... பெருமாளே.

நிலையாத சமுத்திரமான
சமுசார துறைக்கணின் மூழ்கி
நிசமானதெனப் பல பேசி
அதனூடே நெடுநாளும் உழைப்புளதாகி
பெரியோர்களிடைக் கரவாகி
நினைவால்நி னடித்தொழில் பேணி துதியாமல்
தலையான வுடற்பிணி யூறி
பவநோயின் அலைப்பல வேகி
சலமான பயித்திய மாகி தடுமாறித் தவியாமல்
பிறப்பையு நாடி யதுவேரை யறுத்து
உனையோதி தலைமீதில் பிழைத்திடவே
நினருள்தாராய்
கலியாண சுபுத்திரனாக
குறமாது தனக்கு விநோத
கவினாரு புயத்தில் உலாவி விளையாடி
களிகூரும் உனைத்துணை தேடும் அடியேனை
சுகப்பட வேவை கடனாகும்
இதுக்கன மாகு முருகோனே
பலகாலும் உனைத்தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ்
கூறி
படிமீது துதித்து உடன் வாழ அருள்வேளே
சிவலோக மெனப்பரி வேறு
பதியான திருத்தணி மேவு
பவரோக வயித்திய நாத பெருமாளே.
அகலம், ஆழம் இவ்வளவு என்று காணமுடியாத பெரும் சமுத்திரம் போன்ற சம்சாரம் ஆகிய நீர்த்துறையிலே மூழ்கி, மெய் போன்ற பல பொய்களைப் பேசி, அந்த சம்சாரக் கடலிலே, நீண்ட காலமாக உழைப்புள்ளவன் ஆகி, பெரியோர்களின் கூட்டத்தில் சேராமல் ஒளிந்து மறைந்து ஒதுங்கி, நல்ல நினைவோடு நின்னடிக்கான தொண்டுகளை விரும்பிப் போற்றாமல், உடலில் முதன்மையான நோய்கள் வந்து தாக்கவும், இந்த சம்சார சாகரத்தில் பிறவி நோய் என்னும் பல அலைகள் வீசவும், கோபம் கொண்ட பைத்தியக்காரனாக மாறி, யான் தடுமாறித் தவிக்காமல், பிறவியின் மூல காரணத்தை ஆராய்ந்து, அதன் ஆணிவேராகிய ஆசையை அறுத்து, உன் புகழ் ஓதி இவ்வுலகில் உய்யுமாறு உன் திருவருள் புரிந்து ஆட்கொள்வாயாக. மேன்மை தங்கிய கல்யாண மாப்பிள்ளையாகவே குறக் குல வள்ளி தேவியிடத்தில் என்றும் விளங்கி உல்லாசமாக, அழகு நிறைந்த அவளது திருப் புயத்தில் தழுவி உலாவி லீலைகள் புரிந்து மகிழும் உன்னை உற்றதுணையெனத் தேடுகின்ற என்னை இன்பம் அடையும்படியாகவே வைத்தருள்க. இது உனக்குக் கடமையாகும். அவ்வாறு என்னை அருளினால் அது உனக்குப் பெருமையும் ஆகும், முருகனே. பன்முறையும் உன்னை வணங்குபவர்கள், மறக்காமல் உன் திருப்புகழைப் பாடி இவ்வுலகிலே உன்னைத் துதிசெய்து உன்னுடனேயே எப்போதும் இருந்து வாழும்படியாக அருளும் செவ்வேளே, இதுவே பூலோகத்தில் உள்ள சிவலோகம் என்ற அன்பை உண்டாக்கத்தக்க திருத்தலமாகிய திருத்தணிகையில் வாழ்கின்ற, பிறவிப் பெரு நோயைத் தீர்க்கவல்ல, வைத்தியநாதப் பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
நிலையாத சமுத்திரமான ... அகலம், ஆழம் இவ்வளவு என்று
காணமுடியாத பெரும் சமுத்திரம் போன்ற
சமுசார துறைக்கணின் மூழ்கி ... சம்சாரம் ஆகிய நீர்த்துறையிலே
மூழ்கி,
நிசமானதெனப் பல பேசி ... மெய் போன்ற பல பொய்களைப் பேசி,
அதனூடே நெடுநாளும் உழைப்புளதாகி ... அந்த சம்சாரக்
கடலிலே, நீண்ட காலமாக உழைப்புள்ளவன் ஆகி,
பெரியோர்களிடைக் கரவாகி ... பெரியோர்களின் கூட்டத்தில்
சேராமல் ஒளிந்து மறைந்து ஒதுங்கி,
நினைவால்நி னடித்தொழில் பேணி துதியாமல் ... நல்ல
நினைவோடு நின்னடிக்கான தொண்டுகளை விரும்பிப் போற்றாமல்,
தலையான வுடற்பிணி யூறி ... உடலில் முதன்மையான நோய்கள்
வந்து தாக்கவும்,
பவநோயின் அலைப்பல வேகி ... இந்த சம்சார சாகரத்தில் பிறவி
நோய் என்னும் பல அலைகள் வீசவும்,
சலமான பயித்திய மாகி தடுமாறித் தவியாமல் ... கோபம்
கொண்ட பைத்தியக்காரனாக மாறி, யான் தடுமாறித் தவிக்காமல்,
பிறப்பையு நாடி யதுவேரை யறுத்து ... பிறவியின் மூல காரணத்தை
ஆராய்ந்து, அதன் ஆணிவேராகிய ஆசையை அறுத்து,
உனையோதி தலைமீதில் பிழைத்திடவே ... உன் புகழ் ஓதி
இவ்வுலகில் உய்யுமாறு
நினருள்தாராய் ... உன் திருவருள் புரிந்து ஆட்கொள்வாயாக.
கலியாண சுபுத்திரனாக ... மேன்மை தங்கிய கல்யாண
மாப்பிள்ளையாகவே
குறமாது தனக்கு விநோத ... குறக் குல வள்ளி தேவியிடத்தில்
என்றும் விளங்கி உல்லாசமாக,
கவினாரு புயத்தில் உலாவி விளையாடி ... அழகு நிறைந்த
அவளது திருப் புயத்தில் தழுவி உலாவி லீலைகள் புரிந்து
களிகூரும் உனைத்துணை தேடும் அடியேனை ... மகிழும்
உன்னை உற்றதுணையெனத் தேடுகின்ற என்னை
சுகப்பட வேவை கடனாகும் ... இன்பம் அடையும்படியாகவே
வைத்தருள்க. இது உனக்குக் கடமையாகும்.
இதுக்கன மாகு முருகோனே ... அவ்வாறு என்னை அருளினால்
அது உனக்குப் பெருமையும் ஆகும், முருகனே.
பலகாலும் உனைத்தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ்
கூறி
... பன்முறையும் உன்னை வணங்குபவர்கள், மறக்காமல் உன்
திருப்புகழைப் பாடி
படிமீது துதித்து உடன் வாழ அருள்வேளே ... இவ்வுலகிலே
உன்னைத் துதிசெய்து உன்னுடனேயே எப்போதும் இருந்து
வாழும்படியாக அருளும் செவ்வேளே,
சிவலோக மெனப்பரி வேறு ... இதுவே பூலோகத்தில் உள்ள
சிவலோகம் என்ற அன்பை உண்டாக்கத்தக்க
பதியான திருத்தணி மேவு ... திருத்தலமாகிய
திருத்தணிகையில் வாழ்கின்ற,
பவரோக வயித்திய நாத பெருமாளே. ... பிறவிப் பெரு
நோயைத் தீர்க்கவல்ல, வைத்தியநாதப் பெருமாளே.
Similar songs:

277 - நிலையாத சமுத்திர (திருத்தணிகை)

தனதான தனத்தன தான தனதான தனத்தன தான
     தனதான தனத்தன தான ...... தனதான

Songs from this thalam திருத்தணிகை

239 - அமைவுற்று அடைய

240 - அரகர சிவன் அரி

241 - அருக்கி மெத்தென

242 - இருப்பவல் திருப்புகழ்

243 - இருமலு ரோக

244 - உடலி னூடு

245 - உடையவர்கள் ஏவர்

246 - உய்யஞானத்து நெறி

247 - எத்தனை கலாதி

248 - எலுப்பு நாடிகள்

249 - எனக்கென யாவும்

250 - எனை அடைந்த

251 - ஏது புத்தி

252 - ஓலை இட்ட

253 - கச்சணி இளமுலை

254 - கடற்செகத் தடக்கி

255 - கரிக்குழல் விரித்தும்

256 - கலை மடவார்தம்

257 - கவடுற்ற சித்தர்

258 - கனத்த அற

259 - கனைத்து அதிர்க்கும்

260 - கிரி உலாவிய

261 - கிறி மொழி

262 - குயில் ஒன்று

263 - குருவி என

264 - குலைத்து மயிர்

265 - குவளைக் கணை

266 - கூந்தல் அவிழ்த்து

267 - கூர்வேல் பழித்த

268 - கொந்துவார் குரவடி

269 - சினத்தவர் முடிக்கும்

270 - சினத் திலத் தினை

271 - சொரியும் முகிலை

272 - தாக்கு அமருக்கு

273 - திருட்டு நாரிகள்

274 - துப் பார் அப்பு

275 - தொக்கறாக் குடில்

276 - தொடத்துளக்கிகள்

277 - நிலையாத சமுத்திர

278 - நினைத்தது எத்தனை

279 - பகல் இராவினும்

280 - பருத்தபற் சிரத்தினை

281 - பழமை செப்பிய

282 - புருவ நெறித்து

283 - பூசலிட்டு

284 - பெருக்க உபாயம்

285 - பொரியப் பொரிய

286 - பொருவிக் கந்தொடு

287 - பொற்குடம் ஒத்த

288 - பொற் பதத்தினை

289 - மருக்குல மேவும்

290 - மலை முலைச்சியர்

291 - முகத்தை மினுக்கி

292 - முகிலும் இரவியும்

293 - முடித்த குழலினர்

294 - முத்துத் தெறிக்க

295 - முலைபுளகம் எழ

296 - மொகுமொகு என

297 - வங்கம் பெறு

298 - வட்ட வாள் தன

299 - வரிக் கலையின்

300 - வார் உற்று எழும்

301 - வினைக்கு இனமாகும்

302 - வெற்றி செயவுற்ற

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 277