சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
341   காஞ்சீபுரம் திருப்புகழ் ( - வாரியார் # 489 )  

கொத்தார் பற் கால்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தத்தா தத்தா தத்தா தத்தா
     தத்தா தத்தா ...... தனதான


கொத்தார் பற்கா லற்றே கப்பாழ்
     குப்பா யத்திற் ...... செயல்மாறிக்
கொக்கா கிக்கூ னிக்கோல் தொட்டே
     கொட்டா விக்குப் ...... புறவாசித்
தித்தா நிற்றார் செத்தார் கெட்டேன்
     அஆ உஉ...... எனவேகேள்
செற்றே சுட்டே விட்டே றிப்போ
     மப்பே துத்துக் ...... கமறாதோ
நித்தா வித்தா ரத்தோ கைக்கே
     நிற்பாய் கச்சிக் ...... குமரேசா
நிட்டூ ரச்சூர் கெட்டோ டப்போர்
     நெட்டோ தத்திற் ...... பொருதோனே
முத்தா ரத்தோ ளிற்கோ டற்பூ
     முட்டா திட்டத் ...... தணிவோனே
முற்றா நித்தா அத்தா சுத்தா
     முத்தா முத்திப் ...... பெருமாளே.

கொத்தார் பற் கால் அற்று ஏகப் பாழ் குப்பாயத்திற்
செயல்மாறி
கொக்காகிக் கூனிக் கோல் தொட்டே
கொட்டாவிக் குப்புற வாசித் தித்தா நிற்றார் செத்தார்
கெட்டேன்
அஆ உஉ எனவேகேள் செற்றே சுட்டே விட்டு ஏறிப்போம்
அப்பேதுத் துக்கம் அறாதோ
நித்தா வித்தாரத் தோகைக்கே நிற்பாய் கச்சிக் குமரேசா
நிட்டூரச் சூர் கெட்டோடப் போர் நெட்டு ஓதத்திற்
பொருதோனே
முத்தாரத் தோளிற் கோடற்பூ முட்டாது இட்டத்து
அணிவோனே
முற்றா நித்தா அத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே.
வரிசையாக நிறைந்திருந்த பல் வேரற்று விழுந்து போக, பாழ்பட்ட சட்டையான இந்த உடலின் செயல்கள் தடுமாறி, மயிரெல்லாம் கொக்கின் நிறமாக வெளுத்து, உடல் கூன் அடைந்து, ஊன்றுகோல் பிடித்து, கொட்டாவி விட்ட தலை குனிதலை அடைந்து, இவ்வாறு நிலை வேறுபாடுகளை அனுபவித்து, நின்றார், பின்னர் இறந்தார், ஐயோ கெட்டேன் எனக் கூறிக் கதறி, அ ஆ உ உ என்னும் ஒலியுடன் உறவினர் அழ, சுடுகாட்டுக்குச் சென்று, அங்கு பிணத்தைச் சுட்டுவிட்டு, (நீரில் மூழ்கி) வெளியேறி வருகின்ற அந்தப் பேதைமை வாய்ந்த துக்கம் நீங்காதோ? என்றும் உள்ளவனே, விரிந்த தோகையை உடைய மயில் மீது விளங்கி நிற்பவனே, காஞ்சீபுரத்துக் குமரேசனே, கொடுமை வாய்ந்த சூரன் கேடு அடைந்து கடலிடையே ஓட, போரினை பெரிய கடலில் புரிந்தவனே, முத்து மாலை அணிந்த தோளில் வெண்காந்தள் மலரைத் தவறாது விருப்பத்துடன் அணிபவனே, முதுமையே வாராதவனே, என்றும் இளமையாய் இருப்பவனே, என் தந்தையே, பரிசுத்தனே, பாசங்களினின்று நீங்கியவனே, முக்தியைத் தரும் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
கொத்தார் பற் கால் அற்று ஏகப் பாழ் குப்பாயத்திற்
செயல்மாறி
... வரிசையாக நிறைந்திருந்த பல் வேரற்று
விழுந்து போக, பாழ்பட்ட சட்டையான இந்த உடலின்
செயல்கள் தடுமாறி,
கொக்காகிக் கூனிக் கோல் தொட்டே ... மயிரெல்லாம்
கொக்கின் நிறமாக வெளுத்து, உடல் கூன் அடைந்து,
ஊன்றுகோல் பிடித்து,
கொட்டாவிக் குப்புற வாசித் தித்தா நிற்றார் செத்தார்
கெட்டேன்
... கொட்டாவி விட்ட தலை குனிதலை அடைந்து,
இவ்வாறு நிலை வேறுபாடுகளை அனுபவித்து, நின்றார், பின்னர்
இறந்தார், ஐயோ கெட்டேன் எனக் கூறிக் கதறி,
அஆ உஉ எனவேகேள் செற்றே சுட்டே விட்டு ஏறிப்போம் ...
அ ஆ உ உ என்னும் ஒலியுடன் உறவினர் அழ, சுடுகாட்டுக்குச்
சென்று, அங்கு பிணத்தைச் சுட்டுவிட்டு, (நீரில் மூழ்கி) வெளியேறி
வருகின்ற
அப்பேதுத் துக்கம் அறாதோ ... அந்தப் பேதைமை வாய்ந்த
துக்கம் நீங்காதோ?
நித்தா வித்தாரத் தோகைக்கே நிற்பாய் கச்சிக் குமரேசா ...
என்றும் உள்ளவனே, விரிந்த தோகையை உடைய மயில் மீது
விளங்கி நிற்பவனே, காஞ்சீபுரத்துக் குமரேசனே,
நிட்டூரச் சூர் கெட்டோடப் போர் நெட்டு ஓதத்திற்
பொருதோனே
... கொடுமை வாய்ந்த சூரன் கேடு அடைந்து
கடலிடையே ஓட, போரினை பெரிய கடலில் புரிந்தவனே,
முத்தாரத் தோளிற் கோடற்பூ முட்டாது இட்டத்து
அணிவோனே
... முத்து மாலை அணிந்த தோளில் வெண்காந்தள்
மலரைத் தவறாது விருப்பத்துடன் அணிபவனே,
முற்றா நித்தா அத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே. ...
முதுமையே வாராதவனே, என்றும் இளமையாய் இருப்பவனே,
என் தந்தையே, பரிசுத்தனே, பாசங்களினின்று நீங்கியவனே,
முக்தியைத் தரும் பெருமாளே.
Similar songs:

341 - கொத்தார் பற் கால் (காஞ்சீபுரம்)

தத்தா தத்தா தத்தா தத்தா
     தத்தா தத்தா ...... தனதான

Songs from this thalam காஞ்சீபுரம்

309 - அதி மதம் கக்க

310 - கனக தம்பத்தை

311 - செடியுடம் பத்தி

312 - கன க்ரவுஞ்சத்தில்

313 - தெரியல் அம் செச்சை

314 - புன மடந்தைக்கு

315 - கறை இலங்கும்

316 - செறிதரும் செப்பத்து

317 - அரி அயன் புட்பி

318 - கனி தரும் கொக்கு

319 - தசைதுறுந் தொக்கு

320 - புரைபடுஞ் செற்ற

321 - சலமலம் விட்ட

322 - தலை வலையத்து

323 - இதத்துப் பற்றி

324 - எனக்குச்சற்று

325 - இறைச்சிப் பற்று

326 - கடத்தைப் பற்று

327 - கருப் பற்றிப் பருத்து

328 - கறுக்கப் பற்று

329 - அற்றைக்கு இரைதேடி

330 - முட்டுப் பட்டு

331 - அற்றைக் கற்றை

332 - சுத்தச் சித்த

333 - கொக்குக்கு ஒக்க

334 - தத்தித் தத்தி

335 - பொக்குப்பை

336 - அயில் அப்பு

337 - கச்சு இட்ட அணி

338 - கமலரு சோகம்

339 - கருமமான பிறப்பற

340 - கலகலென

341 - கொத்தார் பற் கால்

342 - கோவைச் சுத்த

343 - சீசி முப்புர

344 - நச்சு அரவம் என்று

345 - படிறொழுக்கமும்

346 - மகுடக் கொப்பாட

347 - மக்கட்குக் கூற

348 - மயல் ஓதும்

349 - முத்து ரத்ந சூத்ர

350 - வம்பறாச்சில

351 - வாய்ந்தப்பிடை

352 - அறிவிலாப் பித்தர்

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 341