சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
394   திருவருணை திருப்புகழ் ( குருஜி இராகவன் # 447 - வாரியார் # 588 )  

அழுதும் ஆவா

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதனா தானனத் தனதனா தானனத்
     தனதனா தானனத் ...... தனதான


அழுதுமா வாவெனத் தொழுதமூ டூடுநெக்
     கவசமா யாதரக் ...... கடலூடுற்
றமைவில்கோ லாகலச் சமயமா பாதகர்க்
     கறியொணா மோனமுத் ...... திரைநாடிப்
பிழைபடா ஞானமெய்ப் பொருள்பெறா தேவினைப்
     பெரியஆ தேசபுற் ...... புதமாய
பிறவிவா ராகரச் சுழியிலே போய்விழப்
     பெறுவதோ நானினிப் ...... புகல்வாயே
பழையபா கீரதிப் படுகைமேல் வாழ்வெனப்
     படியுமா றாயினத் ...... தனசாரம்
பருகுமா றானனச் சிறுவசோ ணாசலப்
     பரமமா யூரவித் ...... தகவேளே
பொழுதுசூழ் போதுவெற் பிடிபடா பார்முதற்
     பொடிபடா வோடமுத் ...... தெறிமீனப்
புணரிகோ கோவெனச் சுருதிகோ கோவெனப்
     பொருதவே லாயுதப் ...... பெருமாளே.

அழுதும் ஆவா எனத் தொழுதும் ஊடூடு நெக்கு
அவசமாய் ஆதரக் கடல் ஊடுற்று
அமைவில் கோலாகலச் சமய மா பாதகர்க்கு அறி ஒணா
மோன முத்திரை நாடி
பிழை படா ஞான மெய்ப் பொருள் பெறாதே
வினைப் பெரிய ஆதேச புற்பதம் ஆய பிறவி வாராகரம்
சுழியிலே
போய் விழப் பெறுவதோ நான் இனிப் புகல்வாயே
பழைய பாகீரதிப் படுகை மேல் வாழ்வு எனப் படியும்
ஆறு ஆயினத் தன சாரம் பருகுமாறு ஆனனச் சிறுவ
சோணாசலப் பரம மாயூர வித்தக வேளே
பொழுது சூழ் போது வெற்பு இடிபடா பார் முதல் பொடி
படா ஓட
முத்து எறி மீனப் புணரி கோ கோ என சுருதி கோ கோ
என
பொருத வேலாயுதப் பெருமாளே.
அழுதும், ஆ ஆ என இரங்கித் தொழுதும், அவ்வப்போது பக்தியால் நெகிழ்ந்தும், தன் வசமற்று, ஆதாரம் என்ற அன்புக் கடலில் திளைத்தும், அமைதியற்ற ஆடம்பரமான சமய வாதப் பாதகர்களுக்கு அறிவதற்கு முடியாத மெளனக்குறியைத் தேடியும், தவறுதல் இல்லாத ஞான மெய்ப் பொருளை நான் அடையாமல், வினைக்கு ஈடான பெரிய மாறுபட்ட வடிவங்களை அடையும் நீர்க்குமிழி போன்ற நிலையற்ற பிறவி என்ற கடல் நீர்ச்சுழியிலே, நான் இனி மேல் போய் விழக் கடவேனோ? சொல்லி அருளுக. பழைய கங்கை என்னும் நீர் நிலையின் சரவணப் படுகையின்மேல் செல்வக் குமரர்களாய்த் தோன்றி, கார்த்திகைப் பெண்களாகிய ஆறு தாய்மார்களின் முலைப்பாலை உண்ட ஆறு திரு முகங்களை உடைய குழந்தையே, திருவண்ணாமலைப் பரமனே, மயில் வாகனனே, ஞான மூர்த்தியே, பொழுது சாயும் மாலை வேளையில் கிரெளஞ்சமலை பொடிபட, பூமி முதலியவை பொடிபட்டுத் தெறிக்க, முத்துக்களை வீசுவதும், மீன்களைக் கொண்டதுமான கடல் கோ கோ என்று கதற, வேதங்கள் கோ கோ என்று கதற போர் செய்த வேலாயுதத்தை ஏந்தும் பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
அழுதும் ஆவா எனத் தொழுதும் ஊடூடு நெக்கு ... அழுதும், ஆ
ஆ என இரங்கித் தொழுதும், அவ்வப்போது பக்தியால் நெகிழ்ந்தும்,
அவசமாய் ஆதரக் கடல் ஊடுற்று ... தன் வசமற்று, ஆதாரம்
என்ற அன்புக் கடலில் திளைத்தும்,
அமைவில் கோலாகலச் சமய மா பாதகர்க்கு அறி ஒணா
மோன முத்திரை நாடி
... அமைதியற்ற ஆடம்பரமான சமய வாதப்
பாதகர்களுக்கு அறிவதற்கு முடியாத மெளனக்குறியைத் தேடியும்,
பிழை படா ஞான மெய்ப் பொருள் பெறாதே ... தவறுதல்
இல்லாத ஞான மெய்ப் பொருளை நான் அடையாமல்,
வினைப் பெரிய ஆதேச புற்பதம் ஆய பிறவி வாராகரம்
சுழியிலே
... வினைக்கு ஈடான பெரிய மாறுபட்ட வடிவங்களை
அடையும் நீர்க்குமிழி போன்ற நிலையற்ற பிறவி என்ற கடல் நீர்ச்சுழியிலே,
போய் விழப் பெறுவதோ நான் இனிப் புகல்வாயே ... நான்
இனி மேல் போய் விழக் கடவேனோ? சொல்லி அருளுக.
பழைய பாகீரதிப் படுகை மேல் வாழ்வு எனப் படியும் ...
பழைய கங்கை என்னும் நீர் நிலையின் சரவணப் படுகையின்மேல் செல்வக்
குமரர்களாய்த் தோன்றி,
ஆறு ஆயினத் தன சாரம் பருகுமாறு ஆனனச் சிறுவ ...
கார்த்திகைப் பெண்களாகிய ஆறு தாய்மார்களின் முலைப்பாலை உண்ட
ஆறு திரு முகங்களை உடைய குழந்தையே,
சோணாசலப் பரம மாயூர வித்தக வேளே ...
திருவண்ணாமலைப் பரமனே, மயில் வாகனனே, ஞான மூர்த்தியே,
பொழுது சூழ் போது வெற்பு இடிபடா பார் முதல் பொடி
படா ஓட
... பொழுது சாயும் மாலை வேளையில் கிரெளஞ்சமலை
பொடிபட, பூமி முதலியவை பொடிபட்டுத் தெறிக்க,
முத்து எறி மீனப் புணரி கோ கோ என சுருதி கோ கோ
என
... முத்துக்களை வீசுவதும், மீன்களைக் கொண்டதுமான கடல் கோ
கோ என்று கதற, வேதங்கள் கோ கோ என்று கதற
பொருத வேலாயுதப் பெருமாளே. ... போர் செய்த
வேலாயுதத்தை ஏந்தும் பெருமாளே.
Similar songs:

394 - அழுதும் ஆவா (திருவருணை)

தனதனா தானனத் தனதனா தானனத்
     தனதனா தானனத் ...... தனதான

Songs from this thalam திருவருணை

6 - முத்தைத்தரு

367 - குமர குருபர குணதர

368 - அருவ மிடையென

369 - கருணை சிறிதும்

370 - துகிலு ம்ருகமத

371 - மகர மெறிகடல்

372 - முகிலை யிகல்

373 - முருகு செறிகுழல் சொரு

374 - விடமும் அமுதமும்

375 - கமரி மலர்குழல்

376 - கயல் விழித்தேன்

377 - கறுவு மிக்கு ஆவி

378 - பரியகைப் பாசம்

379 - தருண மணி

380 - முழுகிவட

381 - வடவை அனல் ஊடு

382 - ஆலவிழி நீல

383 - பேதக விரோத

384 - அமுதம் ஊறு சொல்

385 - உருகும் மாமெழுகாக

386 - கரி உரி அரவம்

387 - கனை கடல் வயிறு

388 - இரவியும் மதியும்

389 - விரகொடு வளை

390 - இடம் அடு சுறவை

391 - கெஜ நடை மடவார்

392 - அருக்கார் நலத்தை

393 - அருமா மதனை

394 - அழுதும் ஆவா

395 - ஆனை வரிக் கோடு

396 - இடருக்கு இடர்

397 - இமராஜன் நிலாவது

398 - இரத சுரதமுலை

399 - இரவுபகற் பலகாலும்

400 - இருவர் மயலோ

401 - இருவினை அஞ்ச

402 - இருவினை ஊண்

403 - இருளளகம் அவிழ

404 - இறுகு மணி முலை

405 - உலையிலனல்

406 - கடல்பரவு தரங்க

407 - கமலமுகப் பிறை

408 - கமல மொட்டை

409 - கரிமுகக் கடகளிறு

410 - கரு நிறம் சிறந்து

411 - காணாத தூர நீள்

412 - காராடக் குழல்

413 - காரும் மருவும்

414 - கீத விநோத மெச்சு

415 - குரவ நறும் அளக

416 - குழவியுமாய் மோகம்

417 - கேதகையபூ முடித்த

418 - கோடு ஆன மடவார்கள்

419 - கோடு செறி

420 - சிலைநுதல் வைத்து

421 - சிவமாதுடனே

422 - சினமுடுவல் நரிகழுகு

423 - சுக்கிலச் சுரொணித

424 - செஞ்சொற் பண்

425 - செயசெய அருணா

426 - தமரம் குரங்களும்

427 - தமிழோதிய குயிலோ

428 - தலையை மழித்து

429 - திருட்டு வாணிப

430 - தேதென வாச முற்ற

431 - தோதகப் பெரும்

432 - பாண மலரது

433 - பாலாய் நூலாய்

434 - புணர்முலை மடந்தை

435 - புலையனான

436 - போக கற்ப

437 - மானை விடத்தை

438 - முகத் துலக்கிகள்

439 - மேக மொத்தகுழலார்

440 - மொழிய நிறம்

441 - வலிவாத பித்தமொடு

442 - விடு மதவேள்

443 - விதி அதாகவே

444 - விந்துப் புளகித

445 - வீறு புழுகான பனி

1328 - ஏறுமயிலேறி

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 394