சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
395   திருவருணை திருப்புகழ் ( - வாரியார் # 589 )  

ஆனை வரிக் கோடு

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தானதனத் தானதனத் தானதனத் தானதனத்
     தானதனத் தானதனத் ...... தனதானா


ஆனைவரிக் கோடிளநிர்ப் பாரமுலைச் சாரசைபட்
     டாடைமறைத் தாடுமலர்க் ...... குழலார்கள்
ஆரவடத் தோடலையப் பேசிநகைத் தாசைபொருட்
     டாரையுமெத் தாகமயக் ...... கிடுமோகர்
சோனைமழைப் பாரவிழித் தோகைமயிற் சாதியர்கைத்
     தூதுவிடுத் தேபொருளைப் ...... பறிமாதர்
தோதகமுற் றேழ்நரகிற் சேருமழற் காயனையுட்
     சோதியொளிப் பாதமளித் ...... தருள்வாயே
தானதனத் தீதிமிலைப் பேரிகைகொட் டாசமலைச்
     சாயகடற் சூரைவதைத் ...... திடுவோனே
தாளவியற் சோதிநிறக் காலினெழக் கோலியெடுத்
     தாபரம்வைத் தாடுபவர்க் ...... கொருசேயே
தேனிரசக் கோவையிதழ்ப் பூவைகுறப் பாவைதனத்
     தேயுருகிச் சேருமணிக் ...... கதிர்வேலா
சீரருணைக் கோபுரமுற் றானபுனத் தோகையுமெய்த்
     தேவமகட் கோர்கருணைப் ...... பெருமாளே.

ஆனை வரிக் கோடு இள நீரப் பார முலைச் சார் அசை பட்டு
ஆடை மறைத்து ஆடும் மலர்க் குழலார்கள்
ஆர வடத் தோடு அலையப் பேசி நகைத்து ஆசை பொருட்டு
யாரையும் மெத்தாக மயக்கிடும் மோகர்
சோனை மழைப் பார விழித் தோகை மயில் சாதியர் கைத்
தூது விடுத்தே பொருளைப் பறி மாதர் தோதகம் உற்று
ஏழ் நரகில் சேரும் அழற் காயனை உட் சோதி ஒளிப் பாதம்
அளித்து அருள்வாயே
தானதனத்தீ திமிலை பேரிகை கொட்ட சம் மலைச் சாய
கடல் சூரை வதைத்திடுவோனே
தாள இயல் சோதி நிறக் காலின் எழக் கோலி எடுத்(து)
தாபரம் வைத்து ஆடுபவர்க்கு ஒரு சேயே
தேனின் இரசக் கோவை இதழ்ப் பூவை குறப் பாவை தனத்தே
உருகிச் சேரும் அணிக் கதிர் வேலா
சீர் அருணைக் கோபுரம் உற்று ஆன புனத் தோகையும் மெய்
தேவ மகட்கு ஓர் கருணைப் பெருமாளே.
யானையின் கோடுகள் உள்ள தந்தத்தையும், இளநீரையும் ஒத்த கனமான மார்பகங்களைச் சார்ந்து அசைகின்ற பட்டு ஆடையால் மறைத்து ஆடுகின்ற, மலர் அணிந்த கூந்தல் உடையவர்கள், முத்து மாலையும் தோடும் மிக அசையப் பேசியும், இனிதாகச் சிரித்தும், பொன்னைப் பெற வேண்டி எவரையும் வஞ்சனையுடன் மயக்குவிக்கும் காமிகள், பெரும் மழைமேகம் போன்ற அடர்ந்த கூந்தலும், அழகிய விழியும் கொண்ட தோகை மயில் போன்ற சாதியர், தம் இடத்தே உள்ள தூதுவர்களை அனுப்பி, பொருளை அபகரிக்கும் விலைமாதர்களின் வஞ்சகத்தில் பட்டு, ஏழு நரகத்தில் சேருதற்கு உரியவனும், தீக்கு இரையாகும் உடலை எடுத்தவனும் ஆகிய என்னை, ஜோதியுள் ஜோதியாய் விளங்கும் உன் திருவடியைத் தந்து அருள் புரிக. தானதனத்தீ என்று ஒலிக்கும் பறை வகைகள் முழங்க, நன்றாகக் கிரெளஞ்ச மலை அழிய, கடலில் ஒளிந்து நின்ற சூரனை வதைத்தவனே, தாளத்தின் இலக்கண விளக்கமானது ஒளி பொருந்திய தனது திருவடியின் மூலம் உண்டாகும்படி, ஒரு பாதத்தை வளைத்து எடுத்தும், மற்றொரு திருவடியைப் பூமியில் வைத்தும் நடமிடும் சிவபெருமானுடைய ஒப்பற்ற குழந்தையே, தேனின் சாறு போல் இனிக்கும், கொவ்வைப் பழம் போலச் சிவந்தும் உள்ள வாயிதழைக் கொண்ட, நாகணவாய்ப் புள் போன்ற குறப் பெண்ணாகிய வள்ளியின் மார்புக்கு மனம் உருகி அவளிடம் சேர்ந்து, அழகிய ஒளி வீசும் வேலை உடையவனே, அழகிய திருவண்ணாமலைக் கோபுரத்தில் வீற்றிருந்து, உன் மனதுக்கு உகந்த தினப் புன மயிலாகிய வள்ளிக்கும், (உன்னிடம்) மெய்யன்பு கொண்டிருக்கும் தேவயானைக்கும் ஒப்பற்ற கருணையைக் காட்டிய பெருமாளே.
Add (additional) Audio/Video Link
ஆனை வரிக் கோடு இள நீரப் பார முலைச் சார் அசை பட்டு
ஆடை மறைத்து ஆடும் மலர்க் குழலார்கள்
... யானையின்
கோடுகள் உள்ள தந்தத்தையும், இளநீரையும் ஒத்த கனமான
மார்பகங்களைச் சார்ந்து அசைகின்ற பட்டு ஆடையால் மறைத்து
ஆடுகின்ற, மலர் அணிந்த கூந்தல் உடையவர்கள்,
ஆர வடத் தோடு அலையப் பேசி நகைத்து ஆசை பொருட்டு
யாரையும் மெத்தாக மயக்கிடும் மோகர்
... முத்து மாலையும்
தோடும் மிக அசையப் பேசியும், இனிதாகச் சிரித்தும், பொன்னைப்
பெற வேண்டி எவரையும் வஞ்சனையுடன் மயக்குவிக்கும் காமிகள்,
சோனை மழைப் பார விழித் தோகை மயில் சாதியர் கைத்
தூது விடுத்தே பொருளைப் பறி மாதர் தோதகம் உற்று
...
பெரும் மழைமேகம் போன்ற அடர்ந்த கூந்தலும், அழகிய விழியும்
கொண்ட தோகை மயில் போன்ற சாதியர், தம் இடத்தே உள்ள
தூதுவர்களை அனுப்பி, பொருளை அபகரிக்கும் விலைமாதர்களின்
வஞ்சகத்தில் பட்டு,
ஏழ் நரகில் சேரும் அழற் காயனை உட் சோதி ஒளிப் பாதம்
அளித்து அருள்வாயே
... ஏழு நரகத்தில் சேருதற்கு உரியவனும்,
தீக்கு இரையாகும் உடலை எடுத்தவனும் ஆகிய என்னை, ஜோதியுள்
ஜோதியாய்
விளங்கும் உன் திருவடியைத் தந்து அருள் புரிக.
தானதனத்தீ திமிலை பேரிகை கொட்ட சம் மலைச் சாய
கடல் சூரை வதைத்திடுவோனே
... தானதனத்தீ என்று ஒலிக்கும்
பறை வகைகள் முழங்க, நன்றாகக் கிரெளஞ்ச மலை அழிய, கடலில்
ஒளிந்து நின்ற சூரனை வதைத்தவனே,
தாள இயல் சோதி நிறக் காலின் எழக் கோலி எடுத்(து)
தாபரம் வைத்து ஆடுபவர்க்கு ஒரு சேயே
... தாளத்தின் இலக்கண
விளக்கமானது ஒளி பொருந்திய தனது திருவடியின் மூலம்
உண்டாகும்படி, ஒரு பாதத்தை வளைத்து எடுத்தும், மற்றொரு
திருவடியைப் பூமியில் வைத்தும் நடமிடும் சிவபெருமானுடைய ஒப்பற்ற
குழந்தையே,
தேனின் இரசக் கோவை இதழ்ப் பூவை குறப் பாவை தனத்தே
உருகிச் சேரும் அணிக் கதிர் வேலா
... தேனின் சாறு போல்
இனிக்கும், கொவ்வைப் பழம் போலச் சிவந்தும் உள்ள வாயிதழைக்
கொண்ட, நாகணவாய்ப் புள் போன்ற குறப் பெண்ணாகிய வள்ளியின்
மார்புக்கு மனம் உருகி அவளிடம் சேர்ந்து, அழகிய ஒளி வீசும் வேலை
உடையவனே,
சீர் அருணைக் கோபுரம் உற்று ஆன புனத் தோகையும் மெய்
தேவ மகட்கு ஓர் கருணைப் பெருமாளே.
... அழகிய
திருவண்ணாமலைக் கோபுரத்தில் வீற்றிருந்து, உன் மனதுக்கு உகந்த
தினப் புன மயிலாகிய வள்ளிக்கும், (உன்னிடம்) மெய்யன்பு
கொண்டிருக்கும் தேவயானைக்கும் ஒப்பற்ற கருணையைக் காட்டிய
பெருமாளே.
Similar songs:

395 - ஆனை வரிக் கோடு (திருவருணை)

தானதனத் தானதனத் தானதனத் தானதனத்
     தானதனத் தானதனத் ...... தனதானா

Songs from this thalam திருவருணை

6 - முத்தைத்தரு

367 - குமர குருபர குணதர

368 - அருவ மிடையென

369 - கருணை சிறிதும்

370 - துகிலு ம்ருகமத

371 - மகர மெறிகடல்

372 - முகிலை யிகல்

373 - முருகு செறிகுழல் சொரு

374 - விடமும் அமுதமும்

375 - கமரி மலர்குழல்

376 - கயல் விழித்தேன்

377 - கறுவு மிக்கு ஆவி

378 - பரியகைப் பாசம்

379 - தருண மணி

380 - முழுகிவட

381 - வடவை அனல் ஊடு

382 - ஆலவிழி நீல

383 - பேதக விரோத

384 - அமுதம் ஊறு சொல்

385 - உருகும் மாமெழுகாக

386 - கரி உரி அரவம்

387 - கனை கடல் வயிறு

388 - இரவியும் மதியும்

389 - விரகொடு வளை

390 - இடம் அடு சுறவை

391 - கெஜ நடை மடவார்

392 - அருக்கார் நலத்தை

393 - அருமா மதனை

394 - அழுதும் ஆவா

395 - ஆனை வரிக் கோடு

396 - இடருக்கு இடர்

397 - இமராஜன் நிலாவது

398 - இரத சுரதமுலை

399 - இரவுபகற் பலகாலும்

400 - இருவர் மயலோ

401 - இருவினை அஞ்ச

402 - இருவினை ஊண்

403 - இருளளகம் அவிழ

404 - இறுகு மணி முலை

405 - உலையிலனல்

406 - கடல்பரவு தரங்க

407 - கமலமுகப் பிறை

408 - கமல மொட்டை

409 - கரிமுகக் கடகளிறு

410 - கரு நிறம் சிறந்து

411 - காணாத தூர நீள்

412 - காராடக் குழல்

413 - காரும் மருவும்

414 - கீத விநோத மெச்சு

415 - குரவ நறும் அளக

416 - குழவியுமாய் மோகம்

417 - கேதகையபூ முடித்த

418 - கோடு ஆன மடவார்கள்

419 - கோடு செறி

420 - சிலைநுதல் வைத்து

421 - சிவமாதுடனே

422 - சினமுடுவல் நரிகழுகு

423 - சுக்கிலச் சுரொணித

424 - செஞ்சொற் பண்

425 - செயசெய அருணா

426 - தமரம் குரங்களும்

427 - தமிழோதிய குயிலோ

428 - தலையை மழித்து

429 - திருட்டு வாணிப

430 - தேதென வாச முற்ற

431 - தோதகப் பெரும்

432 - பாண மலரது

433 - பாலாய் நூலாய்

434 - புணர்முலை மடந்தை

435 - புலையனான

436 - போக கற்ப

437 - மானை விடத்தை

438 - முகத் துலக்கிகள்

439 - மேக மொத்தகுழலார்

440 - மொழிய நிறம்

441 - வலிவாத பித்தமொடு

442 - விடு மதவேள்

443 - விதி அதாகவே

444 - விந்துப் புளகித

445 - வீறு புழுகான பனி

1328 - ஏறுமயிலேறி

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 395