சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
400   திருவருணை திருப்புகழ் ( குருஜி இராகவன் # 451 - வாரியார் # 516 )  

இருவர் மயலோ

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனன தனனா தனன தனனா
     தனன தனனா ...... தனதான


இருவர் மயலோ அமளி விதமோ
     எனென செயலோ ...... அணுகாத
இருடி அயன்மா லமர ரடியா
     ரிசையு மொலிதா ...... னிவைகேளா
தொருவ னடியே னலறு மொழிதா
     னொருவர் பரிவாய் ...... மொழிவாரோ
உனது பததூள் புவன கிரிதா
     னுனது கிருபா ...... கரமேதோ
பரம குருவா யணுவி லசைவாய்
     பவன முதலா ...... கியபூதப்
படையு முடையாய் சகல வடிவாய்
     பழைய வடிவா ...... கியவேலா
அரியு மயனோ டபய மெனவே
     அயிலை யிருள்மேல் ...... விடுவோனே
அடிமை கொடுநோய் பொடிகள் படவே
     அருண கிரிவாழ் ...... பெருமாளே.

இருவர் மயலோ அமளி விதமோ
     எனென செயலோ அணுகாத
இருடி அயன்மால் அமரர் அடியார்
     இசையும் ஒலிதான் இவைகேளாது
ஒருவன் அடியேன் அலறு மொழிதான்
     ஒருவர் பரிவாய் மொழிவாரோ
உனது பததூள் புவன கிரிதான்
     உனது கிருபாகரம் ஏதோ
பரம குருவாய் அணுவில் அசைவாய்
     பவன முதலாகிய பூதப்
படையும் உடையாய் சகல வடிவாய்
     பழைய வடிவாகியவேலா
அரியும் அயனோடு அபயம் எனவே
     அயிலை யிருள்மேல் விடுவோனே
அடிமை கொடுநோய் பொடிகள் படவே
     அருண கிரிவாழ் பெருமாளே.
வள்ளி, தேவயானை ஆகிய இரு தேவியர் மீது நீ கொண்ட ஆசையோ? அல்லது உன் திருக்கோயில்களில் விதவிதமாக நடக்கும் ஆரவாரங்களோ? வேறு என்னென்ன நிகழ்ச்சிகளோ? (எனக்குத் தெரியாது) உன்னை அணுகமுடியாத முநிவர், பிரமன், மால், தேவர், அடியார் இத்தனை பேரும் முறையிடும் ஒலிகள் என் செவியில் விழாதபோது, யான் ஒருவன் மட்டும் தனியாக இங்கே அலறும் மொழிகளைப் பற்றி யாரேனும் ஒருவர் அன்போடு வந்து உன்னிடம் தெரிவிப்பார்களோ? உன் பாதத்தில் உள்ள தூசானது பூமியிலுள்ள மலைகளுக்குச் சமம். அப்படியென்றால் உன் திருவருள் எவ்வளவு பெரியதோ? (யான் அறியேன்). மேலான குருமூர்த்தியாய், அணுவிலும் அசைவு ஏற்படுத்துபவனாய், காற்று முதலிய ஐம்பெரும் பூதங்களை ஆயுதமாக உடையவனே, எல்லா உருவமாயும், பழமையான உருவத்திலும் அமைந்த வேலனே, திருமாலும், பிரம்மனும் உன்னிடம் அடைக்கலம் புக, உன் வேலாயுதத்தை இருள் வடிவம் எடுத்த சூரன்மேல் செலுத்தியவனே, இவ்வடியேனுக்கு ஏற்பட்ட தொழுநோயைத் தூளாக்கிய திருவண்ணாமலையில் வாழ்கின்ற பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
இருவர் மயலோ ... வள்ளி, தேவயானை ஆகிய இரு தேவியர் மீது
நீ கொண்ட ஆசையோ?
அமளி விதமோ ... அல்லது உன் திருக்கோயில்களில் விதவிதமாக
நடக்கும் ஆரவாரங்களோ?
எனென செயலோ ... வேறு என்னென்ன நிகழ்ச்சிகளோ? (எனக்குத்
தெரியாது)
அணுகாத இருடி அயன்மால் அமரர் அடியார் ... உன்னை
அணுகமுடியாத முநிவர், பிரமன், மால், தேவர், அடியார்
இசையும் ஒலிதான் இவைகேளாது ... இத்தனை பேரும் முறையிடும்
ஒலிகள் என் செவியில் விழாதபோது,
ஒருவன் அடியேன் அலறு மொழிதான் ... யான் ஒருவன் மட்டும்
தனியாக இங்கே அலறும் மொழிகளைப் பற்றி
ஒருவர் பரிவாய் மொழிவாரோ ... யாரேனும் ஒருவர் அன்போடு
வந்து உன்னிடம் தெரிவிப்பார்களோ?
உனது பததூள் புவன கிரிதான் ... உன் பாதத்தில் உள்ள தூசானது
பூமியிலுள்ள மலைகளுக்குச் சமம்.
உனது கிருபாகரம் ஏதோ ... அப்படியென்றால் உன் திருவருள்
எவ்வளவு பெரியதோ? (யான் அறியேன்).
பரம குருவாய் அணுவில் அசைவாய் ... மேலான குருமூர்த்தியாய்,
அணுவிலும் அசைவு ஏற்படுத்துபவனாய்,
பவன முதலாகிய பூதப் படையும் உடையாய் ... காற்று முதலிய
ஐம்பெரும் பூதங்களை ஆயுதமாக உடையவனே,
சகல வடிவாய் பழைய வடிவாகியவேலா ... எல்லா உருவமாயும்,
பழமையான உருவத்திலும் அமைந்த வேலனே,
அரியும் அயனோடு அபயம் எனவே ... திருமாலும், பிரம்மனும்
உன்னிடம் அடைக்கலம் புக,
அயிலை யிருள்மேல் விடுவோனே ... உன் வேலாயுதத்தை இருள்
வடிவம் எடுத்த சூரன்மேல் செலுத்தியவனே,
அடிமை கொடுநோய் பொடிகள் படவே ... இவ்வடியேனுக்கு ஏற்பட்ட
தொழுநோயைத் தூளாக்கிய
அருண கிரிவாழ் பெருமாளே. ... திருவண்ணாமலையில் வாழ்கின்ற
பெருமாளே.
Similar songs:

400 - இருவர் மயலோ (திருவருணை)

தனன தனனா தனன தனனா
     தனன தனனா ...... தனதான

Songs from this thalam திருவருணை

6 - முத்தைத்தரு

367 - குமர குருபர குணதர

368 - அருவ மிடையென

369 - கருணை சிறிதும்

370 - துகிலு ம்ருகமத

371 - மகர மெறிகடல்

372 - முகிலை யிகல்

373 - முருகு செறிகுழல் சொரு

374 - விடமும் அமுதமும்

375 - கமரி மலர்குழல்

376 - கயல் விழித்தேன்

377 - கறுவு மிக்கு ஆவி

378 - பரியகைப் பாசம்

379 - தருண மணி

380 - முழுகிவட

381 - வடவை அனல் ஊடு

382 - ஆலவிழி நீல

383 - பேதக விரோத

384 - அமுதம் ஊறு சொல்

385 - உருகும் மாமெழுகாக

386 - கரி உரி அரவம்

387 - கனை கடல் வயிறு

388 - இரவியும் மதியும்

389 - விரகொடு வளை

390 - இடம் அடு சுறவை

391 - கெஜ நடை மடவார்

392 - அருக்கார் நலத்தை

393 - அருமா மதனை

394 - அழுதும் ஆவா

395 - ஆனை வரிக் கோடு

396 - இடருக்கு இடர்

397 - இமராஜன் நிலாவது

398 - இரத சுரதமுலை

399 - இரவுபகற் பலகாலும்

400 - இருவர் மயலோ

401 - இருவினை அஞ்ச

402 - இருவினை ஊண்

403 - இருளளகம் அவிழ

404 - இறுகு மணி முலை

405 - உலையிலனல்

406 - கடல்பரவு தரங்க

407 - கமலமுகப் பிறை

408 - கமல மொட்டை

409 - கரிமுகக் கடகளிறு

410 - கரு நிறம் சிறந்து

411 - காணாத தூர நீள்

412 - காராடக் குழல்

413 - காரும் மருவும்

414 - கீத விநோத மெச்சு

415 - குரவ நறும் அளக

416 - குழவியுமாய் மோகம்

417 - கேதகையபூ முடித்த

418 - கோடு ஆன மடவார்கள்

419 - கோடு செறி

420 - சிலைநுதல் வைத்து

421 - சிவமாதுடனே

422 - சினமுடுவல் நரிகழுகு

423 - சுக்கிலச் சுரொணித

424 - செஞ்சொற் பண்

425 - செயசெய அருணா

426 - தமரம் குரங்களும்

427 - தமிழோதிய குயிலோ

428 - தலையை மழித்து

429 - திருட்டு வாணிப

430 - தேதென வாச முற்ற

431 - தோதகப் பெரும்

432 - பாண மலரது

433 - பாலாய் நூலாய்

434 - புணர்முலை மடந்தை

435 - புலையனான

436 - போக கற்ப

437 - மானை விடத்தை

438 - முகத் துலக்கிகள்

439 - மேக மொத்தகுழலார்

440 - மொழிய நிறம்

441 - வலிவாத பித்தமொடு

442 - விடு மதவேள்

443 - விதி அதாகவே

444 - விந்துப் புளகித

445 - வீறு புழுகான பனி

1328 - ஏறுமயிலேறி

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 400