சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
405   திருவருணை திருப்புகழ் ( - வாரியார் # 521 )  

உலையிலனல்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதனன தத்த தனதனன தத்த
     தனதனன தத்த ...... தனதான


உலையிலன லொத்த வுடலினனல் பற்றி
     யுடுபதியை முட்டி ...... யமுதூற
லுருகிவர விட்ட பரமசுக முற்று
     வுனதடியை நத்தி ...... நினையாமற்
சிலைநுதலி லிட்ட திலதமவிர் பொட்டு
     திகழ்முகவர் முத்து ...... நகையாலே
சிலுகுவலை யிட்ட மயல்கவலை பட்டுத்
     திருடனென வெட்கி ...... யலைவேனோ
கலைகனக வட்ட திமிலைபறை கொட்ட
     கனகமயில் விட்ட ...... கதிர்வேலா
கருதலரின் முட்டிக் கருகிவரு துட்ட
     கதவமண ருற்ற ...... குலகாலா
அலைகடலு டுத்த தலமதனில் வெற்றி
     அருணைவளர் வெற்பி ...... லுறைவோனே
அசுரர்களை வெட்டி யமரர்சிறை விட்டு
     அரசுநிலை யிட்ட ...... பெருமாளே.

உலையில் அனல் ஒத்த உடலின் அனல் பற்றி
உடு பதியை முட்டி அமுது ஊறல் உருகி வர விட்ட பரம
சுகம் உற்று
உனது அடியை நத்தி நினையாமல்
சிலை நுதலில் இட்ட திலதம் அவிர் பொட்டு திகழ்
சிலுகு வலை இட்ட மயல் கவலை பட்டுத் திருடன் என
வெட்கி அலைவேனோ
கலை கனக வட்ட திமிலை பறை கொட்ட கனக மயில் விட்ட
கதிர் வேலா
கருதலரின் முட்டிக் கருகி வரு துட்ட கத(ம்) அமணர் உற்ற
குலகாலா
அலை கடல் உடுத்த தலம் அதனில் வெற்றி அருணை வளர்
வெற்பில் உறைவோனே
அசுரர்களை வெட்டி அமரர் சிறை விட்டு அரசு நிலை இட்ட
பெருமாளே.
கொல்லனது உலைக்களத்தில் உள்ள நெருப்புப் போல் உடலில் சிவாக்கினி பற்றி மேல் எழுந்து, சந்திர மண்டலத்தை முட்டி அங்கு அமுத ஊறல் ஊறி உருகி வர விடுகின்ற பரம சுகத்தை அடைந்து, உனது திருவடியை விரும்பி நினைக்காமல், வில்லைப் போன்ற நெற்றியில் இட்ட சிறந்த பொட்டு விளங்கும் முகத்தை உடைய மாதர்களின் முத்துப் போன்ற பல் அழகாலே துன்ப வலையில் அகப்பட்டு காமப் பித்தால் கவலை அடைந்து, திருடனைப் போல் வெட்கப்பட்டு அலைவேனோ? முறைப்படி வாசிக்கப்படுவதும், பொன் போல விளங்குவதும் ஆகிய திமிலை என்ற ஒருவகைத் தோல் கருவி பறை போல முழங்க, பொன்மயிலைச் செலுத்திய, ஒளி வீசும் வேலனே, பகைவர்கள் போல எதிர்த்துத் தாக்கி, நிறம் கறுத்து வந்த, கோபம் மிக்க சமணருடைய குலத்தை (திருஞானசம்பந்தராக வந்து) அழித்தவனே, அலை வீசும் கடலை ஆடையாகத் தரித்த பூமியில், (அரி, அயன் இருவருக்கும் அரியவராய் ஒளிப் பிழம்பாக சிவபெருமான் நின்று) வெற்றி கண்ட தலமாகிய திருவண்ணாமலையில் வீற்றிருப்பவனே, அசுரர்களை வெட்டி அழித்து தேவர்களைச் சிறையினின்று விடுவித்து, பொன்னுலக ஆட்சியை நிலை பெறச் செய்த பெருமாளே.
Add (additional) Audio/Video Link
உலையில் அனல் ஒத்த உடலின் அனல் பற்றி ... கொல்லனது
உலைக்களத்தில் உள்ள நெருப்புப் போல் உடலில் சிவாக்கினி பற்றி
மேல் எழுந்து,
உடு பதியை முட்டி அமுது ஊறல் உருகி வர விட்ட பரம
சுகம் உற்று
... சந்திர மண்டலத்தை முட்டி அங்கு அமுத ஊறல்
ஊறி உருகி வர விடுகின்ற பரம சுகத்தை அடைந்து,
உனது அடியை நத்தி நினையாமல் ... உனது திருவடியை விரும்பி
நினைக்காமல்,
சிலை நுதலில் இட்ட திலதம் அவிர் பொட்டு திகழ் ... வில்லைப்
போன்ற நெற்றியில் இட்ட சிறந்த பொட்டு விளங்கும் முகத்தை உடைய
மாதர்களின் முத்துப் போன்ற பல் அழகாலே
சிலுகு வலை இட்ட மயல் கவலை பட்டுத் திருடன் என
வெட்கி அலைவேனோ
... துன்ப வலையில் அகப்பட்டு காமப் பித்தால்
கவலை அடைந்து, திருடனைப் போல் வெட்கப்பட்டு அலைவேனோ?
கலை கனக வட்ட திமிலை பறை கொட்ட கனக மயில் விட்ட
கதிர் வேலா
... முறைப்படி வாசிக்கப்படுவதும், பொன் போல
விளங்குவதும் ஆகிய திமிலை என்ற ஒருவகைத் தோல் கருவி பறை போல
முழங்க, பொன்மயிலைச் செலுத்திய, ஒளி வீசும் வேலனே,
கருதலரின் முட்டிக் கருகி வரு துட்ட கத(ம்) அமணர் உற்ற
குலகாலா
... பகைவர்கள் போல எதிர்த்துத் தாக்கி, நிறம் கறுத்து வந்த,
கோபம் மிக்க சமணருடைய குலத்தை (திருஞானசம்பந்தராக வந்து)
அழித்தவனே,
அலை கடல் உடுத்த தலம் அதனில் வெற்றி அருணை வளர்
வெற்பில் உறைவோனே
... அலை வீசும் கடலை ஆடையாகத் தரித்த
பூமியில், (அரி, அயன் இருவருக்கும் அரியவராய் ஒளிப் பிழம்பாக
சிவபெருமான் நின்று) வெற்றி கண்ட தலமாகிய திருவண்ணாமலையில்
வீற்றிருப்பவனே,
அசுரர்களை வெட்டி அமரர் சிறை விட்டு அரசு நிலை இட்ட
பெருமாளே.
... அசுரர்களை வெட்டி அழித்து தேவர்களைச்
சிறையினின்று விடுவித்து, பொன்னுலக ஆட்சியை நிலை பெறச் செய்த
பெருமாளே.
Similar songs:

405 - உலையிலனல் (திருவருணை)

தனதனன தத்த தனதனன தத்த
     தனதனன தத்த ...... தனதான

Songs from this thalam திருவருணை

6 - முத்தைத்தரு

367 - குமர குருபர குணதர

368 - அருவ மிடையென

369 - கருணை சிறிதும்

370 - துகிலு ம்ருகமத

371 - மகர மெறிகடல்

372 - முகிலை யிகல்

373 - முருகு செறிகுழல் சொரு

374 - விடமும் அமுதமும்

375 - கமரி மலர்குழல்

376 - கயல் விழித்தேன்

377 - கறுவு மிக்கு ஆவி

378 - பரியகைப் பாசம்

379 - தருண மணி

380 - முழுகிவட

381 - வடவை அனல் ஊடு

382 - ஆலவிழி நீல

383 - பேதக விரோத

384 - அமுதம் ஊறு சொல்

385 - உருகும் மாமெழுகாக

386 - கரி உரி அரவம்

387 - கனை கடல் வயிறு

388 - இரவியும் மதியும்

389 - விரகொடு வளை

390 - இடம் அடு சுறவை

391 - கெஜ நடை மடவார்

392 - அருக்கார் நலத்தை

393 - அருமா மதனை

394 - அழுதும் ஆவா

395 - ஆனை வரிக் கோடு

396 - இடருக்கு இடர்

397 - இமராஜன் நிலாவது

398 - இரத சுரதமுலை

399 - இரவுபகற் பலகாலும்

400 - இருவர் மயலோ

401 - இருவினை அஞ்ச

402 - இருவினை ஊண்

403 - இருளளகம் அவிழ

404 - இறுகு மணி முலை

405 - உலையிலனல்

406 - கடல்பரவு தரங்க

407 - கமலமுகப் பிறை

408 - கமல மொட்டை

409 - கரிமுகக் கடகளிறு

410 - கரு நிறம் சிறந்து

411 - காணாத தூர நீள்

412 - காராடக் குழல்

413 - காரும் மருவும்

414 - கீத விநோத மெச்சு

415 - குரவ நறும் அளக

416 - குழவியுமாய் மோகம்

417 - கேதகையபூ முடித்த

418 - கோடு ஆன மடவார்கள்

419 - கோடு செறி

420 - சிலைநுதல் வைத்து

421 - சிவமாதுடனே

422 - சினமுடுவல் நரிகழுகு

423 - சுக்கிலச் சுரொணித

424 - செஞ்சொற் பண்

425 - செயசெய அருணா

426 - தமரம் குரங்களும்

427 - தமிழோதிய குயிலோ

428 - தலையை மழித்து

429 - திருட்டு வாணிப

430 - தேதென வாச முற்ற

431 - தோதகப் பெரும்

432 - பாண மலரது

433 - பாலாய் நூலாய்

434 - புணர்முலை மடந்தை

435 - புலையனான

436 - போக கற்ப

437 - மானை விடத்தை

438 - முகத் துலக்கிகள்

439 - மேக மொத்தகுழலார்

440 - மொழிய நிறம்

441 - வலிவாத பித்தமொடு

442 - விடு மதவேள்

443 - விதி அதாகவே

444 - விந்துப் புளகித

445 - வீறு புழுகான பனி

1328 - ஏறுமயிலேறி

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 405