சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
411   திருவருணை திருப்புகழ் ( குருஜி இராகவன் # 460 - வாரியார் # 527 )  

காணாத தூர நீள்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தானான தான தானான தான
     தானான தான ...... தந்ததான


காணாத தூர நீணாத வாரி
     காதார வாரம ...... தன்பினாலே
காலாளும் வேளும் ஆலால நாதர்
     காலால் நிலாவுமு ...... னிந்துபூமேல்
நாணான தோகை நூலாடை சோர
     நாடோர்க ளேசஅ ...... ழிந்துதானே
நானாப வாத மேலாக ஆக
     நாடோறும் வாடிம ...... யங்கலாமோ
சோணாச லேச பூணார நீடு
     தோளாறு மாறும்வி ...... ளங்குநாதா
தோலாத வீர வேலால டாத
     சூராளன் மாளவெ ...... குண்டகோவே
சேணாடர் லோகம் வாழ்மாதி யானை
     தீராத காதல்சி ...... றந்தமார்பா
தேவாதி கூடு மூவாதி மூவர்
     தேவாதி தேவர்கள் ...... தம்பிரானே.

காணாத தூர நீள் நாத வாரி
காதாரவாரம் அதன்பினாலே
கால் ஆளும் வேளும்
ஆலால நாதர் காலால் நிலாவும்
முனிந்து பூமேல்
நாணான தோகை நூலாடை சோர
நாடோர்கள் ஏச அழிந்து தானே
நானாபவாத மேலாக
நாடோறும் வாடி மயங்கலாமோ
சோணாசல ஈச
பூணார நீடு தோள் ஆறும் ஆறும் விளங்குநாதா
தோலாத வீர
வேலால் அடாத சூராளன் மாள
வெகுண்ட கோவே
சேணாடர் லோகம் வாழ்மாதி யானை
தீராத காதல்சிறந்த மார்பா
தேவாதி கூடு மூவாதி மூவர்
தேவாதி தேவர்கள் தம்பிரானே.
கண்ணுக்கெட்டாத தூரம் பரந்து ஓயாத அலையோசை உள்ள கடலின் வதைக்கின்ற ஆரவாரமும், அதன் பின்பாக, தென்றற் காற்றை தேர்போல் கொண்ட மன்மதனும், கடலில் பிறந்த விஷத்தை உண்ட சிவன்காலால் தேய்த்த நிலவும், இவளைக் கோபிக்க, இந்தப் புவி மீது நாணம் கொண்ட மயில் போன்ற இப்பெண் நூல் புடைவை நெகிழ, நாட்டில் உள்ளோர் பழித்துரைக்க, அதனால் உள்ளம் அழிந்து அவளே பலவித அவதூறுகள் மேலெழுந்து வெளிப்பட, நாள்தோறும் வாட்டமடைந்து மயங்கலாமோ? சோணாசலம் என்ற திருவண்ணாமலை ஈசனே, அணிந்துள்ள கடம்பமாலை பன்னிரண்டு தோளிலும் விளங்குகின்ற நாதனே, தோல்வியே அறியாத வீரனே, உனது வேலைக் கொண்டு, தகாத செயல் செய்த சூரன் என்ற ஆண்மையாளன் மாளும்படியாக கோபித்துச் செலுத்திய தலைவனே, விண்ணுலகில் வாழ்ந்த மாது தேவயானையின் நீங்காத காதல் நிறைந்த மார்பை உடையவனே, தேவர்கள் முதலியோர் மூன்று எனக் கூடிய ஆதி மும்மூர்த்தியர், மற்றும் தேவர்களுக்கு அதிதேவர்களாய் உள்ள இந்திரர்களுக்குத் தலைவனே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
காணாத தூர நீள் நாத வாரி ... கண்ணுக்கெட்டாத தூரம் பரந்து
ஓயாத அலையோசை உள்ள கடலின்
காதாரவாரம் அதன்பினாலே ... வதைக்கின்ற ஆரவாரமும், அதன்
பின்பாக,
கால் ஆளும் வேளும் ... தென்றற் காற்றை தேர்போல் கொண்ட
மன்மதனும்,
ஆலால நாதர் காலால் நிலாவும் ... கடலில் பிறந்த விஷத்தை
உண்ட சிவன்காலால் தேய்த்த நிலவும்,
முனிந்து பூமேல் ... இவளைக் கோபிக்க, இந்தப் புவி மீது
நாணான தோகை நூலாடை சோர ... நாணம் கொண்ட மயில்
போன்ற இப்பெண் நூல் புடைவை நெகிழ,
நாடோர்கள் ஏச அழிந்து தானே ... நாட்டில் உள்ளோர்
பழித்துரைக்க, அதனால் உள்ளம் அழிந்து அவளே
நானாபவாத மேலாக ... பலவித அவதூறுகள் மேலெழுந்து வெளிப்பட,
நாடோறும் வாடி மயங்கலாமோ ... நாள்தோறும் வாட்டமடைந்து
மயங்கலாமோ?
சோணாசல ஈச ... சோணாசலம் என்ற திருவண்ணாமலை ஈசனே,
பூணார நீடு தோள் ஆறும் ஆறும் விளங்குநாதா ...
அணிந்துள்ள கடம்பமாலை பன்னிரண்டு தோளிலும் விளங்குகின்ற
நாதனே,
தோலாத வீர ... தோல்வியே அறியாத வீரனே,
வேலால் அடாத சூராளன் மாள ... உனது வேலைக் கொண்டு,
தகாத செயல் செய்த சூரன் என்ற ஆண்மையாளன் மாளும்படியாக
வெகுண்ட கோவே ... கோபித்துச் செலுத்திய தலைவனே,
சேணாடர் லோகம் வாழ்மாதி யானை ... விண்ணுலகில் வாழ்ந்த
மாது தேவயானையின்
தீராத காதல்சிறந்த மார்பா ... நீங்காத காதல் நிறைந்த மார்பை
உடையவனே,
தேவாதி கூடு மூவாதி மூவர் ... தேவர்கள் முதலியோர் மூன்று எனக்
கூடிய ஆதி மும்மூர்த்தியர், மற்றும்
தேவாதி தேவர்கள் தம்பிரானே. ... தேவர்களுக்கு அதிதேவர்களாய்
உள்ள இந்திரர்களுக்குத் தலைவனே.
Similar songs:

411 - காணாத தூர நீள் (திருவருணை)

தானான தான தானான தான
     தானான தான ...... தந்ததான

Songs from this thalam திருவருணை

6 - முத்தைத்தரு

367 - குமர குருபர குணதர

368 - அருவ மிடையென

369 - கருணை சிறிதும்

370 - துகிலு ம்ருகமத

371 - மகர மெறிகடல்

372 - முகிலை யிகல்

373 - முருகு செறிகுழல் சொரு

374 - விடமும் அமுதமும்

375 - கமரி மலர்குழல்

376 - கயல் விழித்தேன்

377 - கறுவு மிக்கு ஆவி

378 - பரியகைப் பாசம்

379 - தருண மணி

380 - முழுகிவட

381 - வடவை அனல் ஊடு

382 - ஆலவிழி நீல

383 - பேதக விரோத

384 - அமுதம் ஊறு சொல்

385 - உருகும் மாமெழுகாக

386 - கரி உரி அரவம்

387 - கனை கடல் வயிறு

388 - இரவியும் மதியும்

389 - விரகொடு வளை

390 - இடம் அடு சுறவை

391 - கெஜ நடை மடவார்

392 - அருக்கார் நலத்தை

393 - அருமா மதனை

394 - அழுதும் ஆவா

395 - ஆனை வரிக் கோடு

396 - இடருக்கு இடர்

397 - இமராஜன் நிலாவது

398 - இரத சுரதமுலை

399 - இரவுபகற் பலகாலும்

400 - இருவர் மயலோ

401 - இருவினை அஞ்ச

402 - இருவினை ஊண்

403 - இருளளகம் அவிழ

404 - இறுகு மணி முலை

405 - உலையிலனல்

406 - கடல்பரவு தரங்க

407 - கமலமுகப் பிறை

408 - கமல மொட்டை

409 - கரிமுகக் கடகளிறு

410 - கரு நிறம் சிறந்து

411 - காணாத தூர நீள்

412 - காராடக் குழல்

413 - காரும் மருவும்

414 - கீத விநோத மெச்சு

415 - குரவ நறும் அளக

416 - குழவியுமாய் மோகம்

417 - கேதகையபூ முடித்த

418 - கோடு ஆன மடவார்கள்

419 - கோடு செறி

420 - சிலைநுதல் வைத்து

421 - சிவமாதுடனே

422 - சினமுடுவல் நரிகழுகு

423 - சுக்கிலச் சுரொணித

424 - செஞ்சொற் பண்

425 - செயசெய அருணா

426 - தமரம் குரங்களும்

427 - தமிழோதிய குயிலோ

428 - தலையை மழித்து

429 - திருட்டு வாணிப

430 - தேதென வாச முற்ற

431 - தோதகப் பெரும்

432 - பாண மலரது

433 - பாலாய் நூலாய்

434 - புணர்முலை மடந்தை

435 - புலையனான

436 - போக கற்ப

437 - மானை விடத்தை

438 - முகத் துலக்கிகள்

439 - மேக மொத்தகுழலார்

440 - மொழிய நிறம்

441 - வலிவாத பித்தமொடு

442 - விடு மதவேள்

443 - விதி அதாகவே

444 - விந்துப் புளகித

445 - வீறு புழுகான பனி

1328 - ஏறுமயிலேறி

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 411