சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
45   திருச்செந்தூர் திருப்புகழ் ( - வாரியார் # 35 )  

கன்றிலுறு மானை

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தந்ததன தான தந்ததன தான
     தந்ததன தான ...... தனதான


கன்றிலுறு மானை வென்றவிழி யாலே
     கஞ்சமுகை மேவு ...... முலையாலே
கங்குல்செறி கேச மங்குல்குலை யாமை
     கந்தமலர் சூடு ...... மதனாலே
நன்றுபொருள் தீர வென்றுவிலை பேசி
     நம்பவிடு மாத ...... ருடனாடி
நஞ்சுபுசி தேரை யங்கமது வாக
     நைந்துவிடு வேனை ...... யருள்பாராய்
குன்றிமணி போல்வ செங்கண்வரி போகி
     கொண்டபடம் வீசு ...... மணிகூர்வாய்
கொண்டமயி லேறி அன்றசுரர் சேனை
     கொன்றகும ரேச ...... குருநாதா
மன்றல்கமழ் பூக தெங்குதிரள் சோலை
     வண்டுபடு வாவி ...... புடைசூழ
மந்திநட மாடு செந்தினகர் மேவு
     மைந்தஅம ரேசர் ...... பெருமாளே.

கன்றில் உறு மானை வென்ற விழியாலே கஞ்ச முகை மேவும்
முலையாலே
கங்குல் செறி கேச மங்குல் குலையாமை கந்த மலர் சூடும்
அதனாலே
நன்று பொருள் தீர வென்று விலை பேசி நம்பவிடு மாதருடன்
ஆடி நஞ்சு புசி தேரை அங்கம் அதுவாக நைந்து விடுவேனை
அருள் பாராய்
குன்றி மணி போல்வ செங்கண் வரி போகி கொண்ட படம்
வீசு மணி கூர்வாய் கொண்ட மயிலேறி அன்று அசுரர் சேனை
கொன்ற குமரேச குருநாதா
மன்றல் கமழ் பூக(ம்) தெங்கு திரள் சோலை வண்டு படு
வாவி புடை சூழ மந்தி நடமாடு(ம்) செந்தி நகர் மேவு மைந்த
அமரேசர் பெருமாளே.
மான் கன்றை வெல்லும் கண்களாலும், தாமரை மொட்டுப் போன்ற மார்பகங்களாலும், கரு நிறம் அடர்ந்த மேகம் போன்ற கூந்தல் கலையாத வண்ணம் மணமுள்ள மலர் சூடும் அந்த வகையினாலும், நல்லபடியே கைப் பொருள் முழுதும் வரும்படி வெற்றியுடன் விலை கூறி (தம்மை) நம்பும்படி செய்கின்ற வேசியர்களோடு விளையாடி, விஷத்தை உடைய பாம்பு உண்ணும் தேரை (என்னும்படி) உடல் அத்தன்மையதாகி நைந்து போகின்ற என்னை அருட்கண் பார்த்தருள்க. குண்டு மணி போல சிவந்த கண்களையும் கோடுகளையும் உடைய பாம்பு படத்தை வீசும்படி, (தனது) அழகிய கூர்மையான வாயில் (அந்தப் பாம்பைக் கொத்திக்) கொண்ட மயிலின் மீது ஏறி, அசுரர் சேனையைக் கொன்ற குமரேசனே, குரு நாதனே, மணம் வீசும் கமுகு, தென்னை நெருங்கு சோலைகளும், வண்டுகள் ஒலிக்கும் குளங்களும் பக்கங்களில் சூழ, குரங்குகள் நடனம் செய்யும் திருச்செந்தூரில் வீற்றிருக்கும் வீரனே, தேவர்கள் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
கன்றில் உறு மானை வென்ற விழியாலே கஞ்ச முகை மேவும்
முலையாலே
... மான் கன்றை வெல்லும் கண்களாலும், தாமரை
மொட்டுப் போன்ற மார்பகங்களாலும்,
கங்குல் செறி கேச மங்குல் குலையாமை கந்த மலர் சூடும்
அதனாலே
... கரு நிறம் அடர்ந்த மேகம் போன்ற கூந்தல் கலையாத
வண்ணம் மணமுள்ள மலர் சூடும் அந்த வகையினாலும்,
நன்று பொருள் தீர வென்று விலை பேசி நம்பவிடு மாதருடன்
ஆடி நஞ்சு புசி தேரை அங்கம் அதுவாக நைந்து விடுவேனை
அருள் பாராய்
... நல்லபடியே கைப் பொருள் முழுதும் வரும்படி
வெற்றியுடன் விலை கூறி (தம்மை) நம்பும்படி செய்கின்ற
வேசியர்களோடு விளையாடி, விஷத்தை உடைய பாம்பு உண்ணும்
தேரை (என்னும்படி) உடல் அத்தன்மையதாகி நைந்து போகின்ற
என்னை அருட்கண் பார்த்தருள்க.
குன்றி மணி போல்வ செங்கண் வரி போகி கொண்ட படம்
வீசு மணி கூர்வாய் கொண்ட மயிலேறி அன்று அசுரர் சேனை
கொன்ற குமரேச குருநாதா
... குண்டு மணி போல சிவந்த
கண்களையும் கோடுகளையும் உடைய பாம்பு படத்தை வீசும்படி,
(தனது) அழகிய கூர்மையான வாயில் (அந்தப் பாம்பைக் கொத்திக்)
கொண்ட மயிலின் மீது ஏறி, அசுரர் சேனையைக் கொன்ற குமரேசனே,
குரு நாதனே,
மன்றல் கமழ் பூக(ம்) தெங்கு திரள் சோலை வண்டு படு
வாவி புடை சூழ மந்தி நடமாடு(ம்) செந்தி நகர் மேவு மைந்த
அமரேசர் பெருமாளே.
... மணம் வீசும் கமுகு, தென்னை நெருங்கு
சோலைகளும், வண்டுகள் ஒலிக்கும் குளங்களும் பக்கங்களில் சூழ,
குரங்குகள் நடனம் செய்யும் திருச்செந்தூரில் வீற்றிருக்கும் வீரனே,
தேவர்கள் பெருமாளே.
Similar songs:

45 - கன்றிலுறு மானை (திருச்செந்தூர்)

தந்ததன தான தந்ததன தான
     தந்ததன தான ...... தனதான

754 - அஞ்சுவித பூதமும் (நிம்பபுரம்)

தந்ததன தான தந்ததன தான
     தந்ததன தான ...... தனதான

938 - சந்திதொறும் நாணம் (சிங்கை)

தந்ததன தான தந்ததன தான
     தந்ததன தான ...... தனதான

1334 - கன்றிவரு நீல (திருச்செந்தூர்)

தந்ததன தான தந்ததன தான
     தந்ததன தான ...... தனதான

Songs from this thalam திருச்செந்தூர்

21 - அங்கை மென்குழல்

22 - அந்தகன் வருந்தினம்

23 - அமுத உததி விடம்

24 - அம்பொத்த விழி

25 - அருணமணி மேவு

26 - அவனி பெறுந்தோடு

27 - அளக பாரமலைந்து

28 - அறிவழிய மயல்பெருக

29 - அனிச்சம் கார்முகம்

30 - அனைவரும் மருண்டு

31 - இயலிசையில் உசித

32 - இருகுழை யெறிந்த

33 - இருள்விரி குழலை

34 - உததியறல் மொண்டு

35 - உருக்கம் பேசிய

36 - ஏவினை நேர்விழி

37 - ஓராது ஒன்றை

38 - கட்டழகு விட்டு

39 - கண்டுமொழி

40 - கமல மாதுடன்

41 - கரிக்கொம்பம்

42 - கருப்பம் தங்கு

43 - களபம் ஒழுகிய

44 - கனங்கள் கொண்ட

45 - கன்றிலுறு மானை

46 - காலனார் வெங்கொடும்

47 - குகர மேவுமெய்

48 - குடர்நிண மென்பு

49 - குழைக்கும் சந்தன

50 - கொங்கைகள்

51 - கொங்கைப் பணை

52 - கொடியனைய இடை

53 - கொம்பனையார்

54 - கொலை மதகரி

55 - சங்குபோல் மென்

56 - சங்கை தான் ஒன்று

57 - சத்தம் மிகு ஏழு

58 - சந்தன சவ்வாது

59 - சேமக் கோமள

60 - தகரநறை

61 - தண் தேனுண்டே

62 - தண்டை அணி

63 - தந்த பசிதனை

64 - தரிக்குங்கலை

65 - துன்பங்கொண்டு அங்கம்

66 - தெருப்புறத்து

67 - தொடரியமன்

68 - தொந்தி சரிய

69 - தோலொடு மூடிய

70 - நாலும் ஐந்து வாசல்

71 - நிதிக்குப் பிங்கலன்

72 - நிலையாப் பொருளை

73 - நிறுக்குஞ் சூதன

74 - பங்கம் மேவும் பிறப்பு

75 - பஞ்ச பாதகம்

76 - படர்புவியின் மீது

77 - பதும இருசரண்

78 - பரிமள களப

79 - பருத்தந்த

80 - பாத நூபுரம்

81 - புகரப் புங்க

82 - பூரண வார கும்ப

83 - பெருக்கச் சஞ்சலித்து

84 - மங்கை சிறுவர்

85 - மஞ்செனுங் குழல்

86 - மனத்தின் பங்கு

87 - மனைகனக மைந்தர்

88 - மாய வாடை

89 - மான்போல் கண்

90 - முகிலாமெனும்

91 - முந்துதமிழ் மாலை

92 - முலை முகம்

93 - மூப்புற்றுச் செவி

94 - மூளும்வினை சேர

95 - வஞ்சங்கொண்டும்

96 - வஞ்சத்துடன் ஒரு

97 - வந்து வந்து முன்

98 - வரியார் கருங்கண்

99 - விதி போலும் உந்து

100 - விந்ததில் ஊறி

101 - விறல்மாரன் ஐந்து

102 - வெங்காளம் பாணம்

103 - வெம் சரோருகமோ

1334 - கன்றிவரு நீல

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 45