சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
480   சிதம்பரம் திருப்புகழ் ( - வாரியார் # 648 )  

அக்குப் பீளை

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தத்தத் தானன தானன தானன
     தத்தத் தானன தானன தானன
          தத்தத் தானன தானன தானன ...... தனதான


அக்குப் பீளைமு ளாவிளை மூளையொ
     டுப்புக் காய்பனி நீர்மயிர் தோல்குடி
          லப்புச் சீபுழு வோடடை யார்தசை ...... யுறமேவி
அத்திப் பால்பல நாடிகு ழாயள்வ
     ழுப்புச் சார்வல மேவிளை யூளைகொ
          ளச்சுத் தோல்குடி லாமதி லேபொறி ...... விரகாளர்
சுக்கத் தாழ்கட லேசுக மாமென
     புக்கிட் டாசைபெ ணாசைம ணாசைகள்
          தொக்குத் தீவினை யூழ்வினை காலமொ ...... டதனாலே
துக்கத் தேபர வாமல்ச தாசிவ
     முத்திக் கேசுக மாகப ராபர
          சொர்க்கப் பூமியி லேறிட வேபத ...... மருள்வாயே
தக்கத் தோகிட தாகிட தீகிட
     செக்கச் சேகண தாகண தோகண
          தத்தத் தானன டீகுட டாடுடு ...... வெனதாளந்
தத்திச் சூரர்கு ழாமொடு தேர்பரி
     கெட்டுக் கேவல மாய்கடல் மூழ்கிட
          சத்திக் கேயிரை யாமென வேவிடு ...... கதிர்வேலா
திக்கத் தோகண தாவென வேபொரு
     சொச்சத் தாதையர் தாமென வேதிரு
          செக்கர்ப் பாதம தேபதி யாசுதி ...... யவைபாடச்
செப்பொற் பீலியு லாமயில் மாமிசை
     பக்கத் தேகுற மாதொடு சீர்பெறு
          தெற்குக் கோபுர வாசலில் மேவிய ...... பெருமாளே.

அக்குப் பீளை மூளா இளை மூளையொடுப் புக்(குக்) காய்
பனி நீர் மயிர் தோல் குடிலப் பூச்சி புழுவோடு அடை ஆர்
தசை உற மேவி
அத்திப் பால் பல நாடி குழாய் அள் வழுப்புச் சார் வலமே
விளை ஊளை கொள் அச்சுத் தோல் குடிலாம் அதிலே
பொறி விரகாளர் சுக்கத்து ஆழ் கடலே சுகமாம் என புக்கிட்டு
ஆசை பெ(ண்)ணாசை ம(ண்)ணாசைகள் தொக்குத் தீ வினை
ஊழ் வினை காலமொடு அதனாலே
துக்கத்தே பரவாமல் சதாசிவ முத்திக்கே சுகமாக பராபர
சொர்க்கப் பூமியில் ஏறிடவே பதம் அருள்வாயே
தக்கத் தோகிட தாகிட தீகிட செக்கச் சேகண தாகண
தோகண தத்தத் தானன டீகுட டாடுடு என தாளம் தத்தி
சூரர் குழாமொடு தேர் பரி கெட்டுக் கேவலமாய் கடல்
மூழ்கிட சத்திக்கே இரையாம் எனவே விடு கதிர் வேலா
திக்கத் தோகண தாவெனவே பொரு சொச்சத் தாதையர்
தாம் எனவே திரு செக்கர்ப் பாதம் அதே பதியா சு(ரு)தி
அவை பாட
செம் பொன் பீலி உலா மயில் மாமிசை பக்கத்தே குற
மாதொடு சீர் பெறு தெற்குக் கோபுர வாசலில் மேவிய
பெருமாளே.
கண்ணில் பீளை, மேலெழும் கோழை, மூளையில் தோன்றி வீங்குகின்ற புரைப் புண், அச்சம் தருகின்ற துர் நீர்கள், மயிர், தோல், வளைவான நாக்குப் பூச்சி, புழு இவற்றுடன் அடைந்து நிறைந்த ஊன் இவை பொருந்தப் பெற்ற இவ்வுடலில், எலும்பின் பக்கத்தில் பல நாடிக் குழாய்கள், அசிங்கமான காதுக் குறும்பி இவை சேர்ந்து பலமாக விளைகின்ற பத்தைகளான கசுமாலங்களைக் கொண்ட அடையாளங்கள் வாய்ந்த தோலோடு அமைந்த குடிசையாகிய இவ்வுடலில், ஐம்புலன்களாகிய தந்திரக்காரர்கள் களவுடன் ஒதுங்கியுள்ளதும், ஆழ்ந்த கடல் போன்றதும் ஆகிய வாழ்க்கையே சுகம் என நினைத்து அதில் ஈடுபட்டு, பொன்னாசை, பெண்ணாசை, மண் ஆசைகள் ஒன்று சேர்ந்து, தீ வினை ஊழ் வினை இவைகளின் காலக் கொடுமை காரணமாக, துக்கம் பெருகி வேதனைப்படாமல், எப்பொழுதும் மங்களகரமாயுள்ள முக்தி நிலையில் சுகமாக எவற்றிலும் மேம்பட்ட சொர்க்க நாட்டில் நான் கரை ஏறும்படி உன் திருவடியைத் தந்து அருளுக. தக்கத் தோகிட தாகிட தீகிட செக்கச் சேகண தாகண தோகண தத்தத் தானன டீகுட டாடுடு என்ற பல விதமான தாளங்களின் ஒலியை எழுப்பி, அசுரர்களின் கூட்டத்துடன் தேர்களும் குதிரைகளும் அழிபட்டு கீழ் நிலை அடைந்து கடலில் முழுகும்படி சக்தி வேலுக்கே உணவு ஆயின என்னும்படியாகச் செலுத்திய ஒளி வீசும் வேலனே, திக்கத் தோகண தாவென்று நடனம் செய்கின்ற நிர்மல மூர்த்தியான தந்தையாகிய நடராஜப் பெருமானே நீ என்று சொல்லும்படி, அழகிய சிவந்த திருவடிகளே பதித்து, இசை ஒலிகள் பாட, செம் பொன் நிறத் தோகை விளங்கும் மயில் மீது, பக்கத்தில் குறப் பெண்ணாகிய வள்ளியோடு சிறப்புற்று சிதம்பரத்தின் தெற்குக் கோபுர வாசலில் வீற்றிருக்கும் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
அக்குப் பீளை மூளா இளை மூளையொடுப் புக்(குக்) காய்
பனி நீர் மயிர் தோல் குடிலப் பூச்சி புழுவோடு அடை ஆர்
தசை உற மேவி
... கண்ணில் பீளை, மேலெழும் கோழை, மூளையில்
தோன்றி வீங்குகின்ற புரைப் புண், அச்சம் தருகின்ற துர் நீர்கள், மயிர்,
தோல், வளைவான நாக்குப் பூச்சி, புழு இவற்றுடன் அடைந்து நிறைந்த
ஊன் இவை பொருந்தப் பெற்ற இவ்வுடலில்,
அத்திப் பால் பல நாடி குழாய் அள் வழுப்புச் சார் வலமே
விளை ஊளை கொள் அச்சுத் தோல் குடிலாம் அதிலே
...
எலும்பின் பக்கத்தில் பல நாடிக் குழாய்கள், அசிங்கமான காதுக்
குறும்பி இவை சேர்ந்து பலமாக விளைகின்ற பத்தைகளான
கசுமாலங்களைக் கொண்ட அடையாளங்கள் வாய்ந்த தோலோடு
அமைந்த குடிசையாகிய இவ்வுடலில்,
பொறி விரகாளர் சுக்கத்து ஆழ் கடலே சுகமாம் என புக்கிட்டு
ஆசை பெ(ண்)ணாசை ம(ண்)ணாசைகள் தொக்குத் தீ வினை
ஊழ் வினை காலமொடு அதனாலே
... ஐம்புலன்களாகிய
தந்திரக்காரர்கள் களவுடன் ஒதுங்கியுள்ளதும், ஆழ்ந்த கடல் போன்றதும்
ஆகிய வாழ்க்கையே சுகம் என நினைத்து அதில் ஈடுபட்டு, பொன்னாசை,
பெண்ணாசை, மண் ஆசைகள் ஒன்று சேர்ந்து, தீ வினை ஊழ் வினை
இவைகளின் காலக் கொடுமை காரணமாக,
துக்கத்தே பரவாமல் சதாசிவ முத்திக்கே சுகமாக பராபர
சொர்க்கப் பூமியில் ஏறிடவே பதம் அருள்வாயே
... துக்கம்
பெருகி வேதனைப்படாமல், எப்பொழுதும் மங்களகரமாயுள்ள முக்தி
நிலையில் சுகமாக எவற்றிலும் மேம்பட்ட சொர்க்க நாட்டில் நான் கரை
ஏறும்படி உன் திருவடியைத் தந்து அருளுக.
தக்கத் தோகிட தாகிட தீகிட செக்கச் சேகண தாகண
தோகண தத்தத் தானன டீகுட டாடுடு என தாளம் தத்தி
...
தக்கத் தோகிட தாகிட தீகிட செக்கச் சேகண தாகண தோகண
தத்தத் தானன டீகுட டாடுடு என்ற பல விதமான தாளங்களின்
ஒலியை எழுப்பி,
சூரர் குழாமொடு தேர் பரி கெட்டுக் கேவலமாய் கடல்
மூழ்கிட சத்திக்கே இரையாம் எனவே விடு கதிர் வேலா
...
அசுரர்களின் கூட்டத்துடன் தேர்களும் குதிரைகளும் அழிபட்டு
கீழ் நிலை அடைந்து கடலில் முழுகும்படி சக்தி வேலுக்கே உணவு
ஆயின என்னும்படியாகச் செலுத்திய ஒளி வீசும் வேலனே,
திக்கத் தோகண தாவெனவே பொரு சொச்சத் தாதையர்
தாம் எனவே திரு செக்கர்ப் பாதம் அதே பதியா சு(ரு)தி
அவை பாட
... திக்கத் தோகண தாவென்று நடனம் செய்கின்ற நிர்மல
மூர்த்தியான தந்தையாகிய நடராஜப் பெருமானே நீ என்று சொல்லும்படி,
அழகிய சிவந்த திருவடிகளே பதித்து, இசை ஒலிகள் பாட,
செம் பொன் பீலி உலா மயில் மாமிசை பக்கத்தே குற
மாதொடு சீர் பெறு தெற்குக் கோபுர வாசலில் மேவிய
பெருமாளே.
... செம் பொன் நிறத் தோகை விளங்கும் மயில் மீது,
பக்கத்தில் குறப் பெண்ணாகிய வள்ளியோடு சிறப்புற்று சிதம்பரத்தின்
தெற்குக் கோபுர வாசலில் வீற்றிருக்கும் பெருமாளே.
Similar songs:

480 - அக்குப் பீளை (சிதம்பரம்)

தத்தத் தானன தானன தானன
     தத்தத் தானன தானன தானன
          தத்தத் தானன தானன தானன ...... தனதான

Songs from this thalam சிதம்பரம்

449 - கனகசபை மேவும்

450 - கைத்தருண சோதி

451 - இருவினையின் மதி

452 - குகனே குருபரனே

453 - வண்டையொத்து

454 - கங்குலின் குழல்

455 - கொந்தளம் புழு

456 - மந்தரமென் குவடார்

457 - வந்து வந்துவித்தூறி

458 - கதித்துப் பொங்கலு

459 - சிரித்துச் சங்கொளி

460 - தத்தையென்று

461 - தனத்தில் குங்குமத்தை

462 - திருடிகள் இணக்கி

463 - கொந்தரம் குழல்

464 - தியங்கும் சஞ்சலம்

465 - பருவம் பணை

466 - மதவெம் கரி

467 - முகசந்திர புருவம்

468 - சந்திர வோலை

469 - காய மாய வீடு

470 - அவகுண விரகனை

471 - கட்டி முண்டக

472 - நஞ்சினைப் போலுமன

473 - செம் கலச

474 - கரிய மேகமெனும்

475 - கூந்தலாழ விரிந்து

476 - அத்தன் அன்னை

477 - இருள் காட்டு

478 - முல்லைமலர் போலும்

479 - அடப்பக்கம் பிடித்து

480 - அக்குப் பீளை

481 - ஆரத்தோடு அணி

482 - காதைக் காதி

483 - கொள்ளை ஆசை

484 - தாது மாமலர்

485 - எலுப்புத் தோல்

486 - நீல மாமுகில்

487 - வாத பித்தமொடு

488 - சுரும்பு உற்ற

489 - இணங்கித் தட்பொடு

490 - விடுங்கைக்கு ஒத்த

491 - கொந்தள வோலைகள் ஆட

492 - நகையா லெத்திகள்

493 - எழுகடல் மணலை

494 - தறுகணன் மறலி

495 - இரசபா கொத்தமொழி

496 - இருளும் ஓர்கதிரணு

497 - காவி உடுத்தும்

498 - கோதிக் கோதி

499 - சகசம்பக் குடைசூழ்

500 - சகுட முந்தும்

501 - சாந்துடனே புழுகு

502 - சுடரனைய திருமேனி

503 - தத்தை மயில்

504 - துத்தி பொற்றன

505 - நாடா பிறப்பு

506 - நாலு சதுரத்த பஞ்ச

507 - நீலக் குழலார்

508 - பனி போலத் துளி

509 - மகரமொடுறு குழை

510 - மச்ச மெச்சு

511 - மதிய மண்குண

512 - மருவு கடல்முகில்

513 - மனமே உனக்குறுதி

514 - முத்த மோகன

515 - பரமகுரு நாத

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 480