சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
484   சிதம்பரம் திருப்புகழ் ( - வாரியார் # 652 )  

தாது மாமலர்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தான தானன தனனா தானன
     தான தானன தனனா தானன
          தான தானன தனனா தானன ...... தனதான


தாது மாமலர் முடியா லேபத
     றாத நூபுர அடியா லேகர
          தாள மாகிய நொடியா லேமடி ...... பிடியாலே
சாடை பேசிய வகையா லேமிகு
     வாடை பூசிய நகையா லேபல
          தாறு மாறுசொல் மிகையா லேயன ...... நடையாலே
மோதி மீறிய முலையா லேமுலை
     மீதி லேறிய கலையா லேவெகு
          மோடி நாணய விலையா லேமயல் ...... தருமானார்
மோக வாரிதி தனிலே நாடொறு
     மூழ்கு வேனுன தடியா ராகிய
          மோன ஞானிக ளுடனே சேரவு ...... மருள்வாயே
காத லாயருள் புரிவாய் நான்மறை
     மூல மேயென வுடனே மாகரி
          காண நேர்வரு திருமால் நாரணன் ...... மருகோனே
காதல் மாதவர் வலமே சூழ்சபை
     நாத னார்தம திடமே வாழ்சிவ
          காம நாயகி தருபா லாபுலி ...... சையில்வாழ்வே
வேத நூன்முறை வழுவா மேதினம்
     வேள்வி யாலெழில் புனைமூ வாயிர
          மேன்மை வேதியர் மிகவே பூசனை ...... புரிகோவே
வீறு சேர்வரை யரசாய் மேவிய
     மேரு மால்வரை யெனநீள் கோபுர
          மேலை வாயிலின் மயில்மீ தேறிய ...... பெருமாளே.

தாது மா மலர் முடியாலே பதறாத நூபுர அடியாலே கர
தாளமாகிய நொடியாலே மடி பிடியாலே
சாடை பேசிய வகையாலே மிகு வாடை பூசிய நகையாலே
பல தாறுமாறு சொல் மிகையாலே அ(ன்)ன நடையாலே
மோதி மீறிய முலையாலே முலை மீதில் ஏறிய கலையாலே
வெகு மோடி நாணய(ம்) விலையாலே மயல் தரு(ம்) மானார்
மோக வாரிதி தனிலே நாள் தொறு(ம்) மூழ்குவேன் உனது
அடியார் ஆகிய மோன ஞானிகளுடனே சேரவும்
அருள்வாயே
காதலாய் அருள் புரிவாய் நான் மறை மூலமே என உடனே
மா கரி காண நேர் வரு திருமால் நாரணன் மருகோனே
காதல் மாதவர் வலமே சூழ் சபை நாதனார் தமது இடமே வாழ்
சிவகாம நாயகி தரு பாலா புலிசையில் வாழ்வே
வேத நூன் முறை வழுவாமே தினம் வேள்வியால் எழில் புனை
மூவாயிர(ம்) மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே
வீறு சேர் வரை அரசாய் மேவிய மேரு மால் வரை என நீள்
கோபுர மேலை வாயிலின் மயில் மீது ஏறிய பெருமாளே.
மகரந்தப் பொடிகள் தங்கும் பூக்கள் உள்ள கூந்தலாலும், பதறாமல் நடக்கும் சிலம்புகள் அணிந்த பாதத்தாலும், கைக்கொண்டு இடுகின்ற தாள ஒலியாலும், (வருபவர்களின்) மடியைப் பிடித்துத் தம் வசப்படுத்துவதாலும், ஜாடையாகப் பேசும் வழக்க வகையாலும், மிக்க வாசனைகளைப் பூசிக் கொண்டு சிரிக்கும் சிரிப்பாலும், பல விதமான தாறுமாறான பேச்சுக்களைப் பேசும் செறுக்காலும், அன்னம் போன்ற நடையாலும், முன்னே தாக்கி மேலெழுந்த மார்பாலும், அந்த மார்பின் மீது அணிந்த ஆடையாலும், பல விதமான மயக்கும் சக்திகளை காசுக்காக வெளிக் காட்டும் கர்வத்தாலும் (வந்தவருக்கு) காம மயக்கத்தைத் தருகின்ற விலைமாதர்களின் காமக் கடலில் தினமும் முழுகுகின்ற நான் உன்னுடைய அடியவர்களாகிய மெளன ஞானிகளுடன் சேர்ந்து பழகுவதற்கு அருள் புரிவாயாக. நான்கு வேதங்களுக்கும் மூலப் பொருளே, அன்பு வைத்து அருள் புரிவாயாக என்று பெரிய யானை (ஆகிய கஜேந்திரன்) கூவி அழைக்க, அந்த யானை காணும் வண்ணம் அதன் முன்னே நேரே வந்து உதவிய திருமால் நாராயணனுடைய மருகனே, பக்தியும் பெரும் தவமும் உடைய பெரியோர்கள் வலம் வந்து வணங்கிச் சூழும் கனக சபையில் சிவபெருமானுடைய இடதுபாகத்தில் வாழ்கின்ற சிவகாமி நாயகி பெற்ற குழந்தையே, புலிசை என்னும் சிதம்பரத்தில் வாழும் செல்வமே, வேத நூலில் கூறப்பட்ட முறைப்படியே, தவறாமல் நாள் தோறும் யாகங்கள் செய்யும் அழகைக் கொண்ட சிறப்பான தில்லை மூவாயிரம் வேதியர்கள் மிக நன்றாகப் பூஜை செய்யும் தலைவனே, பொலிவு பொருந்திய மலை அரசாக விளங்கும் மேரு மலை போல உயர்ந்துள்ள கோபுரத்தின் மேற்கு வாயில் புரத்தில் மயிலின் மேல் விளங்கும் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
தாது மா மலர் முடியாலே பதறாத நூபுர அடியாலே கர
தாளமாகிய நொடியாலே மடி பிடியாலே
... மகரந்தப் பொடிகள்
தங்கும் பூக்கள் உள்ள கூந்தலாலும், பதறாமல் நடக்கும் சிலம்புகள்
அணிந்த பாதத்தாலும், கைக்கொண்டு இடுகின்ற தாள ஒலியாலும்,
(வருபவர்களின்) மடியைப் பிடித்துத் தம் வசப்படுத்துவதாலும்,
சாடை பேசிய வகையாலே மிகு வாடை பூசிய நகையாலே
பல தாறுமாறு சொல் மிகையாலே அ(ன்)ன நடையாலே
...
ஜாடையாகப் பேசும் வழக்க வகையாலும், மிக்க வாசனைகளைப் பூசிக்
கொண்டு சிரிக்கும் சிரிப்பாலும், பல விதமான தாறுமாறான
பேச்சுக்களைப் பேசும் செறுக்காலும், அன்னம் போன்ற நடையாலும்,
மோதி மீறிய முலையாலே முலை மீதில் ஏறிய கலையாலே
வெகு மோடி நாணய(ம்) விலையாலே மயல் தரு(ம்) மானார்
...
முன்னே தாக்கி மேலெழுந்த மார்பாலும், அந்த மார்பின் மீது அணிந்த
ஆடையாலும், பல விதமான மயக்கும் சக்திகளை காசுக்காக வெளிக்
காட்டும் கர்வத்தாலும் (வந்தவருக்கு) காம மயக்கத்தைத் தருகின்ற
விலைமாதர்களின்
மோக வாரிதி தனிலே நாள் தொறு(ம்) மூழ்குவேன் உனது
அடியார் ஆகிய மோன ஞானிகளுடனே சேரவும்
அருள்வாயே
... காமக் கடலில் தினமும் முழுகுகின்ற நான்
உன்னுடைய அடியவர்களாகிய மெளன ஞானிகளுடன் சேர்ந்து
பழகுவதற்கு அருள் புரிவாயாக.
காதலாய் அருள் புரிவாய் நான் மறை மூலமே என உடனே
மா கரி காண நேர் வரு திருமால் நாரணன் மருகோனே
...
"நான்கு வேதங்களுக்கும் மூலப் பொருளே, அன்பு வைத்து அருள்
புரிவாயாக" என்று பெரிய யானை (ஆகிய கஜேந்திரன்) கூவி அழைக்க,
அந்த யானை காணும் வண்ணம் அதன் முன்னே நேரே வந்து உதவிய
திருமால் நாராயணனுடைய மருகனே,
காதல் மாதவர் வலமே சூழ் சபை நாதனார் தமது இடமே வாழ்
சிவகாம நாயகி தரு பாலா புலிசையில் வாழ்வே
... பக்தியும்
பெரும் தவமும் உடைய பெரியோர்கள் வலம் வந்து வணங்கிச் சூழும் கனக
சபையில் சிவபெருமானுடைய இடதுபாகத்தில் வாழ்கின்ற சிவகாமி நாயகி
பெற்ற குழந்தையே, புலிசை என்னும் சிதம்பரத்தில் வாழும் செல்வமே,
வேத நூன் முறை வழுவாமே தினம் வேள்வியால் எழில் புனை
மூவாயிர(ம்) மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே
...
வேத நூலில் கூறப்பட்ட முறைப்படியே, தவறாமல் நாள் தோறும்
யாகங்கள் செய்யும் அழகைக் கொண்ட சிறப்பான தில்லை மூவாயிரம்
வேதியர்கள் மிக நன்றாகப் பூஜை செய்யும் தலைவனே,
வீறு சேர் வரை அரசாய் மேவிய மேரு மால் வரை என நீள்
கோபுர மேலை வாயிலின் மயில் மீது ஏறிய பெருமாளே.
...
பொலிவு பொருந்திய மலை அரசாக விளங்கும் மேரு மலை போல
உயர்ந்துள்ள கோபுரத்தின் மேற்கு வாயில் புரத்தில் மயிலின் மேல்
விளங்கும் பெருமாளே.
Similar songs:

484 - தாது மாமலர் (சிதம்பரம்)

தான தானன தனனா தானன
     தான தானன தனனா தானன
          தான தானன தனனா தானன ...... தனதான

Songs from this thalam சிதம்பரம்

449 - கனகசபை மேவும்

450 - கைத்தருண சோதி

451 - இருவினையின் மதி

452 - குகனே குருபரனே

453 - வண்டையொத்து

454 - கங்குலின் குழல்

455 - கொந்தளம் புழு

456 - மந்தரமென் குவடார்

457 - வந்து வந்துவித்தூறி

458 - கதித்துப் பொங்கலு

459 - சிரித்துச் சங்கொளி

460 - தத்தையென்று

461 - தனத்தில் குங்குமத்தை

462 - திருடிகள் இணக்கி

463 - கொந்தரம் குழல்

464 - தியங்கும் சஞ்சலம்

465 - பருவம் பணை

466 - மதவெம் கரி

467 - முகசந்திர புருவம்

468 - சந்திர வோலை

469 - காய மாய வீடு

470 - அவகுண விரகனை

471 - கட்டி முண்டக

472 - நஞ்சினைப் போலுமன

473 - செம் கலச

474 - கரிய மேகமெனும்

475 - கூந்தலாழ விரிந்து

476 - அத்தன் அன்னை

477 - இருள் காட்டு

478 - முல்லைமலர் போலும்

479 - அடப்பக்கம் பிடித்து

480 - அக்குப் பீளை

481 - ஆரத்தோடு அணி

482 - காதைக் காதி

483 - கொள்ளை ஆசை

484 - தாது மாமலர்

485 - எலுப்புத் தோல்

486 - நீல மாமுகில்

487 - வாத பித்தமொடு

488 - சுரும்பு உற்ற

489 - இணங்கித் தட்பொடு

490 - விடுங்கைக்கு ஒத்த

491 - கொந்தள வோலைகள் ஆட

492 - நகையா லெத்திகள்

493 - எழுகடல் மணலை

494 - தறுகணன் மறலி

495 - இரசபா கொத்தமொழி

496 - இருளும் ஓர்கதிரணு

497 - காவி உடுத்தும்

498 - கோதிக் கோதி

499 - சகசம்பக் குடைசூழ்

500 - சகுட முந்தும்

501 - சாந்துடனே புழுகு

502 - சுடரனைய திருமேனி

503 - தத்தை மயில்

504 - துத்தி பொற்றன

505 - நாடா பிறப்பு

506 - நாலு சதுரத்த பஞ்ச

507 - நீலக் குழலார்

508 - பனி போலத் துளி

509 - மகரமொடுறு குழை

510 - மச்ச மெச்சு

511 - மதிய மண்குண

512 - மருவு கடல்முகில்

513 - மனமே உனக்குறுதி

514 - முத்த மோகன

515 - பரமகுரு நாத

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 484