சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
502   சிதம்பரம் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 485 - வாரியார் # 605 )  

சுடரனைய திருமேனி

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதனன தனதான தனதனன தனதான
     தனதனன தனதான ...... தனதான


சுடரனைய திருமேனி யுடையழகு முதுஞான
     சொருபகிரி யிடமேவு ...... முகமாறும்
சுரர்தெரிய லளிபாட மழலைகதி நறைபாய
     துகிரிதழின் மொழிவேத ...... மணம்வீச
அடர்பவள வொளிபாய அரியபரி புரமாட
     அயில்கரமொ டெழில்தோகை ...... மயிலேறி
அடியனிரு வினைநீறு படஅமர ரிதுபூரை
     அதிசயமெ னருள்பாட ...... வரவேணும்
விடைபரவி அயன்மாலொ டமரர்முநி கணமோட
     மிடறடைய விடம்வாரி ...... யருள்நாதன்
மினலனைய இடைமாது இடமருவு குருநாதன்
     மிகமகிழ அநுபூதி ...... யருள்வோனே
இடர்கலிகள் பிணியோட எனையுமருள் குறமாதி
     னிணையிளநிர் முலைமார்பி ...... னணைமார்பா
இனியமுது புலிபாத னுடனரவு சதகோடி
     யிருடியர்கள் புகழ்ஞான ...... பெருமாளே.

சுடரனைய திருமேனி யுடையழகு
முதுஞான சொருபகிரி யிடமேவு முகமாறும்
சுரர் தெரியல் அளிபாட
மழலைகதி நறைபாய
துகிர் இதழின் மொழிவேத மணம்வீச
அடர்பவள வொளிபாய அரிய பரிபுரம் ஆட
அயில்கரமொடு எழில் தோகை மயிலேறி
அடியனிரு வினைநீறு பட
அமரர் இது பூரை அதிசயமென
அருள்பாட வரவேணும்
விடைபரவி அயன்மாலொடு அமரர் முநி கணமோட
மிடறடைய விடம்வாரி யருள்நாதன்
மினலனைய இடைமாது இடமருவு குருநாதன்
மிகமகிழ அநுபூதி யருள்வோனே
இடர்கலிகள் பிணியோட எனையுமருள்
குறமாதின் இணையிளநிர் முலைமார்பின் அணைமார்பா
இனிய முது புலிபாதனுடன்
அரவு சதகோடி யிருடியர்கள்
புகழ்ஞான பெருமாளே.
கதிர் போன்ற திருமேனியின் வடிவழகும், முற்றின ஞான ஸ்வரூபமும், கிரீடம் சூடிய முகங்கள் ஆறும், தேவர்கள் சூட்டிய மாலைகளில் இருக்கும் வண்டுகள் முரல, அம்மாலைகளிலிருந்து மெதுவான வேகத்தில் துளித்துளியாக தேன் சொட்ட, பவள வாய் இதழிலிருந்து சொல்லப்படும் வேத மொழிகளின் நறுமணம் வீச, அடர்ந்த பவளம் போன்ற ஒளி பாய, அருமையான சிலம்பு ஒலிக்க, வேல் ஏந்திய திருக்கரத்துடன் அழகிய கலாப மயில்மீது ஏறி, அடியேனுடைய நல்வினை, தீவினை ஆகிய இரண்டும் பொடிபட்டு அழிய, தேவர்கள் யாவரும் ஒன்றுக்கும் உதவாத எனக்கு நீஅருள் செய்வது எவ்வளவு ஆச்சரியம் என்று உன்னருளைப் போற்றிப் பாடும்படியாக, நீ எழுந்தருளி வரவேண்டும். நந்தி தேவனைப் போற்றி வணங்கி, (அவர் அனுமதியுடன்) பிரமன், திருமால், மற்ற தேவர்கள், முநிவர் கூட்டங்களுடன் ஓடிவந்து சரணடைய, தமது கண்டத்திலேயே தங்கி நிற்கும்படியாக விஷத்தை வாரி உண்டு சரணடைந்தவர்களுக்கு அருள் செய்த தலைவனும், மின்னலை ஒத்த இடையை உடைய பார்வதி தேவியை தமது இடப்பாகத்தில் பொருந்தி வைத்துள்ள தக்ஷிணாமூர்த்தியாகிய சிவபிரான் மிகவும் மகிழ்ச்சி அடைய அவருக்கு ஞானோபதேசப் பிரசாதம் தந்தவனே, துன்பங்களும், கிரகக் கோளாறுகளும், நோய்களும் விலக, என்னையும் ஒரு பொருளாகக் கருதி அருள்வாயாக. குறப்பெண் வள்ளியின் இளநீர் போன்ற மார்பில் அணையும் மார்பனே, இன்ப நிலையில் உள்ள முதிய முநி வியாக்ரபாதருடன், பாம்பின் உருவில் உள்ள பதஞ்சலி முநிவரும், நூறு கோடி ரிஷிகளும் புகழ்கின்ற ஞான மூர்த்தியாம் பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
சுடரனைய திருமேனி யுடையழகு ... கதிர் போன்ற திருமேனியின்
வடிவழகும்,
முதுஞான சொருபகிரி யிடமேவு முகமாறும் ... முற்றின ஞான
ஸ்வரூபமும், கிரீடம் சூடிய முகங்கள் ஆறும்,
சுரர் தெரியல் அளிபாட ... தேவர்கள் சூட்டிய மாலைகளில் இருக்கும்
வண்டுகள் முரல,
மழலைகதி நறைபாய ... அம்மாலைகளிலிருந்து மெதுவான வேகத்தில்
துளித்துளியாக தேன் சொட்ட,
துகிர் இதழின் மொழிவேத மணம்வீச ... பவள வாய் இதழிலிருந்து
சொல்லப்படும் வேத மொழிகளின் நறுமணம் வீச,
அடர்பவள வொளிபாய அரிய பரிபுரம் ஆட ... அடர்ந்த பவளம்
போன்ற ஒளி பாய, அருமையான சிலம்பு ஒலிக்க,
அயில்கரமொடு எழில் தோகை மயிலேறி ... வேல் ஏந்திய
திருக்கரத்துடன் அழகிய கலாப மயில்மீது ஏறி,
அடியனிரு வினைநீறு பட ... அடியேனுடைய நல்வினை, தீவினை
ஆகிய இரண்டும் பொடிபட்டு அழிய,
அமரர் இது பூரை அதிசயமென ... தேவர்கள் யாவரும் ஒன்றுக்கும்
உதவாத எனக்கு நீஅருள் செய்வது எவ்வளவு ஆச்சரியம் என்று
அருள்பாட வரவேணும் ... உன்னருளைப் போற்றிப் பாடும்படியாக,
நீ எழுந்தருளி வரவேண்டும்.
விடைபரவி அயன்மாலொடு அமரர் முநி கணமோட ... நந்தி
தேவனைப் போற்றி வணங்கி, (அவர் அனுமதியுடன்) பிரமன், திருமால்,
மற்ற தேவர்கள், முநிவர் கூட்டங்களுடன் ஓடிவந்து சரணடைய,
மிடறடைய விடம்வாரி யருள்நாதன் ... தமது கண்டத்திலேயே
தங்கி நிற்கும்படியாக விஷத்தை வாரி உண்டு சரணடைந்தவர்களுக்கு
அருள் செய்த தலைவனும்,
மினலனைய இடைமாது இடமருவு குருநாதன் ... மின்னலை
ஒத்த இடையை உடைய பார்வதி தேவியை தமது இடப்பாகத்தில்
பொருந்தி வைத்துள்ள தக்ஷிணாமூர்த்தியாகிய சிவபிரான்
மிகமகிழ அநுபூதி யருள்வோனே ... மிகவும் மகிழ்ச்சி அடைய
அவருக்கு ஞானோபதேசப் பிரசாதம் தந்தவனே,
இடர்கலிகள் பிணியோட எனையுமருள் ... துன்பங்களும், கிரகக்
கோளாறுகளும், நோய்களும் விலக, என்னையும் ஒரு பொருளாகக்
கருதி அருள்வாயாக.
குறமாதின் இணையிளநிர் முலைமார்பின் அணைமார்பா ...
குறப்பெண் வள்ளியின் இளநீர் போன்ற மார்பில் அணையும் மார்பனே,
இனிய முது புலிபாதனுடன் ... இன்ப நிலையில் உள்ள முதிய முநி
வியாக்ரபாதருடன்,
அரவு சதகோடி யிருடியர்கள் ... பாம்பின் உருவில் உள்ள பதஞ்சலி
முநிவரும், நூறு கோடி ரிஷிகளும்
புகழ்ஞான பெருமாளே. ... புகழ்கின்ற ஞான மூர்த்தியாம் பெருமாளே.
Similar songs:

185 - முகை முளரி (பழநி)

தனதனன தனதான தனதனன தனதான
     தனதனன தனதான ...... தனதான

502 - சுடரனைய திருமேனி (சிதம்பரம்)

தனதனன தனதான தனதனன தனதான
     தனதனன தனதான ...... தனதான

Songs from this thalam சிதம்பரம்

449 - கனகசபை மேவும்

450 - கைத்தருண சோதி

451 - இருவினையின் மதி

452 - குகனே குருபரனே

453 - வண்டையொத்து

454 - கங்குலின் குழல்

455 - கொந்தளம் புழு

456 - மந்தரமென் குவடார்

457 - வந்து வந்துவித்தூறி

458 - கதித்துப் பொங்கலு

459 - சிரித்துச் சங்கொளி

460 - தத்தையென்று

461 - தனத்தில் குங்குமத்தை

462 - திருடிகள் இணக்கி

463 - கொந்தரம் குழல்

464 - தியங்கும் சஞ்சலம்

465 - பருவம் பணை

466 - மதவெம் கரி

467 - முகசந்திர புருவம்

468 - சந்திர வோலை

469 - காய மாய வீடு

470 - அவகுண விரகனை

471 - கட்டி முண்டக

472 - நஞ்சினைப் போலுமன

473 - செம் கலச

474 - கரிய மேகமெனும்

475 - கூந்தலாழ விரிந்து

476 - அத்தன் அன்னை

477 - இருள் காட்டு

478 - முல்லைமலர் போலும்

479 - அடப்பக்கம் பிடித்து

480 - அக்குப் பீளை

481 - ஆரத்தோடு அணி

482 - காதைக் காதி

483 - கொள்ளை ஆசை

484 - தாது மாமலர்

485 - எலுப்புத் தோல்

486 - நீல மாமுகில்

487 - வாத பித்தமொடு

488 - சுரும்பு உற்ற

489 - இணங்கித் தட்பொடு

490 - விடுங்கைக்கு ஒத்த

491 - கொந்தள வோலைகள் ஆட

492 - நகையா லெத்திகள்

493 - எழுகடல் மணலை

494 - தறுகணன் மறலி

495 - இரசபா கொத்தமொழி

496 - இருளும் ஓர்கதிரணு

497 - காவி உடுத்தும்

498 - கோதிக் கோதி

499 - சகசம்பக் குடைசூழ்

500 - சகுட முந்தும்

501 - சாந்துடனே புழுகு

502 - சுடரனைய திருமேனி

503 - தத்தை மயில்

504 - துத்தி பொற்றன

505 - நாடா பிறப்பு

506 - நாலு சதுரத்த பஞ்ச

507 - நீலக் குழலார்

508 - பனி போலத் துளி

509 - மகரமொடுறு குழை

510 - மச்ச மெச்சு

511 - மதிய மண்குண

512 - மருவு கடல்முகில்

513 - மனமே உனக்குறுதி

514 - முத்த மோகன

515 - பரமகுரு நாத

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 502