💾 Save Offline
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன ...... தனதான
சரவண பவநிதி யறுமுக குருபர சரவண பவநிதி யறுமுக குருபர சரவண பவநிதி யறுமுக குருபர ...... எனவோதித் தமிழினி லுருகிய வடியவ ரிடமுறு சனனம ரணமதை யொழிவுற சிவமுற தருபிணி துளவர மெமதுயிர் சுகமுற ...... வருள்வாயே கருணைய விழிபொழி யொருதனி முதலென வருகரி திருமுகர் துணைகொளு மிளையவ கவிதைய முதமொழி தருபவ ருயிர்பெற ...... வருள்நேயா கடலுல கினில்வரு முயிர்படு மவதிகள் கலகமி னையதுள கழியவும் நிலைபெற கதியுமு னதுதிரு வடிநிழல் தருவது ...... மொருநாளே திரிபுர மெரிசெயு மிறையவ ரருளிய குமரச மரபுரி தணிகையு மிகுமுயர் சிவகிரி யிலும்வட மலையிலு முலவிய ...... வடிவேலா தினமுமு னதுதுதி பரவிய அடியவர் மனதுகு டியுமிரு பொருளிலு மிலகுவ திமிரம லமொழிய தினகர னெனவரு ...... பெருவாழ்வே அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர் மருகனெ னவெவரு மதிசய முடையவ அமலிவி மலிபரை உமையவ ளருளிய ...... முருகோனே அதலவி தலமுதல் கிடுகிடு கிடுவென வருமயி லினிதொளிர் ஷடுமையில் நடுவுற அழகினு டனமரு மரகர சிவசிவ ...... பெருமாளே.
சரவணபவ நிதி அறுமுக குருபர சரவணபவ நிதி அறுமுக குருபர சரவணபவ நிதி அறுமுக குருபர.....எனவோதித் தமிழினி லுருகிய அடியவரிடமுறு சனனமரணமதை யொழிவுற சிவமுற தருபிணி து(ள்)ள வரம் எமதுயிர் சுகமுற.....அருள்வாயே கருணைய விழிபொழி ஒருதனி முதலென வருகரி திருமுகர் துணைகொளு மிளையவ கவிதை யமுதமொழி தருபவர் உயிர்பெற.....அருள்நேயா கடலுலகினில்வரும் உயிர்படும் அவதிகள் கலகம் இனையதுள கழியவும் நிலைபெற கதியும் உனதுதிருவடிநிழல் தருவது.....ஒருநாளே திரிபுரம் எரிசெயும் இறையவர் அருளிய குமர சமரபுரி தணிகையு மிகுமுயர் சிவகிரியிலும்வட மலையிலும் உலவிய.....வடிவேலா தினமும் உனது துதி பரவிய அடியவர் மனது குடியும் இரு பொருளிலும் இலகுவ திமிர மலமொழிய தினகரன் எனவரு.....பெருவாழ்வே அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர் மருகனெனவெ வரும் அதிசயமுடையவ அமலி விமலி பரை உமையவள் அருளிய.....முருகோனே அதல விதலமுதல் கிடுகிடு கிடுவென வருமயிலினிதொளிர் ஷடுமையில் நடுவுற அழகினுடன்அமரும் அரகர சிவசிவ.....பெருமாளே.
சரவணபவனே, நிதியே, ஆறுமுகக் கடவுளே, குமரகுருபரனே, சரவணபவனே, நிதியே, ஆறுமுகக் கடவுளே, குமரகுருபரனே, சரவணபவனே, நிதியே, ஆறுமுகக் கடவுளே, குமரகுருபரனே, என்று பல முறை தமிழினில் ஓதிப் புகழ்ந்து உள்ளம் உருகுகின்ற உன் அடியார்களுக்கு உற்ற பிறப்பு, இறப்பு என்பவை நீங்கவும், சிவப்பேறு அடையவும், வினைகள் தருகின்ற நோய்கள் துள்ளி ஓடவும், வரத்தினை நீ எங்கள் உயிர் இன்பம் அடையுமாறு தந்தருள்வாயாக. கண்களினின்றும் பொழிகின்ற கருணையை உடையவனே, ஒப்பற்ற தனிப் பெரும் தலைவனென வந்த யானைமுகக் கணபதியை துணையாகக் கொண்ட இளையவனே, கவிதைகளாகிய அமுத மொழிகளை வழங்குபவருடைய உயிர் நற்கதியைப் பெறுமாறு அருள் புரியும் நேசம் உடையவனே, கடல் சூழ்ந்த இவ்வுலகில் உயிர்கள் படுகின்ற துன்பங்களும், கலக்கங்களும், இன்னும் இத்தகையதாக உள்ள வேதனைகள் நீங்கும்படியும், நிலைத்திருக்குமாறு நற்கதி பெறுதலையும், உனது திருவடி நிழல் அருளக்கூடிய ஒருநாள் எனக்கும் உண்டோ? திரிபுரங்களை எரித்த சிவபெருமான் பெற்றருளிய குமாரனே, திருப்போரூரிலும், திருத்தணிகையிலும், மிகவும் உயர்ந்த சிவகிரியிலும், திருவேங்கடத்திலும் உலவும் வடிவேலனே, நாள்தோறும் உன் புகழைக் கூறும் அடியார்களின் உள்ளக் கோவிலில் குடிகொண்டவனே, அருட்செல்வம், பொருட்செல்வம் ஆகிய இரண்டிலும் விளங்குபவனே, இருண்ட ஆணவ மலம் ஒழியுமாறு ஞானசூரியனாக வருகின்ற பெரும் செல்வமே, பாம்பணையில் துயில்பவரும், நரசிம்மருமாகிய நெடிய திருமாலின் மருகோனாக வரும் அதிசய மூர்த்தியே, மலத்தை நீக்குபவளும், மலம் அற்றவளும், பெரியவளும் ஆகிய உமாதேவி தந்தருளிய முருகக் கடவுளே, அதலம் விதலம் முதலிய ஏழு உலகங்களும் கிடுகிடுவென நடுநடுங்க வருகின்ற மயிலின் மீது இனிதாக ஒளி வீசுபவனே, ஆறுகோணச் சக்கரத்தின் மையத்தில் அழகுடன் அமர்கின்ற ஹர ஹர சிவ சிவ, பெருமாளே.
Audio/Video Link(s)
சரவணபவ நிதி அறுமுக குருபர ... சரவணபவனே, நிதியே, ஆறுமுகக் கடவுளே, குமரகுருபரனே,சரவணபவ நிதி அறுமுக குருபர ... சரவணபவனே, நிதியே, ஆறுமுகக் கடவுளே, குமரகுருபரனே,சரவணபவ நிதி அறுமுக குருபர ... சரவணபவனே, நிதியே, ஆறுமுகக் கடவுளே, குமரகுருபரனே,எனவோதித் தமிழினி லுருகிய ... என்று பல முறை தமிழினில் ஓதிப் புகழ்ந்து உள்ளம் உருகுகின்றஅடியவரிடமுறு ... உன் அடியார்களுக்கு உற்றசனனமரணமதை யொழிவுற சிவமுற ... பிறப்பு, இறப்பு என்பவை நீங்கவும், சிவப்பேறு அடையவும்,தருபிணி து(ள்)ள ... வினைகள் தருகின்ற நோய்கள் துள்ளி ஓடவும்,வரம் எமதுயிர் சுகமுற அருள்வாயே ... வரத்தினை நீ எங்கள் உயிர் இன்பம் அடையுமாறு தந்தருள்வாயாக.கருணைய விழிபொழி ... கண்களினின்றும் பொழிகின்ற கருணையை உடையவனே,ஒருதனி முதலென வருகரி திருமுகர் ... ஒப்பற்ற தனிப் பெரும் தலைவனென வந்த யானைமுகக் கணபதியைதுணைகொளு மிளையவ ... துணையாகக் கொண்ட இளையவனே,கவிதை யமுதமொழி தருபவர் ... கவிதைகளாகிய அமுத மொழிகளை வழங்குபவருடையஉயிர்பெற அருள்நேயா ... உயிர் நற்கதியைப் பெறுமாறு அருள் புரியும் நேசம் உடையவனே,கடலுலகினில்வரும் உயிர்படும் அவதிகள் ... கடல் சூழ்ந்த இவ்வுலகில் உயிர்கள் படுகின்ற துன்பங்களும்,கலகம் இனையதுள கழியவும் ... கலக்கங்களும், இன்னும் இத்தகையதாக உள்ள வேதனைகள் நீங்கும்படியும்,நிலைபெறகதியும் ... நிலைத்திருக்குமாறு நற்கதி பெறுதலையும்,உனதுதிருவடிநிழல் தருவது ஒருநாளே ... உனது திருவடி நிழல் அருளக்கூடிய ஒருநாள் எனக்கும் உண்டோ?திரிபுரம் எரிசெயும் இறையவர் அருளிய குமர ... திரிபுரங்களை எரித்த சிவபெருமான் பெற்றருளிய குமாரனே,சமரபுரி தணிகையு மிகுமுயர் ... திருப்போரூரிலும், திருத்தணிகையிலும், மிகவும் உயர்ந்தசிவகிரியிலும்வட மலையிலும் உலவிய வடிவேலா ... சிவகிரியிலும், திருவேங்கடத்திலும் உலவும் வடிவேலனே,தினமும் உனது துதி பரவிய அடியவர் ... நாள்தோறும் உன் புகழைக் கூறும் அடியார்களின்மனது குடியும் ... உள்ளக் கோவிலில் குடிகொண்டவனே,இரு பொருளிலும் இலகுவ ... அருட்செல்வம், பொருட்செல்வம் ஆகிய இரண்டிலும் விளங்குபவனே,திமிர மலமொழிய ... இருண்ட ஆணவ மலம் ஒழியுமாறுதினகரன் எனவரு பெருவாழ்வே ... ஞானசூரியனாக வருகின்ற பெரும் செல்வமே,அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர் ... பாம்பணையில் துயில்பவரும், நரசிம்மருமாகிய நெடிய திருமாலின்மருகனெனவெ வரும் அதிசயமுடையவ ... மருகோனாக வரும் அதிசய மூர்த்தியே,அமலி விமலி பரை ... மலத்தை நீக்குபவளும், மலம் அற்றவளும், பெரியவளும் ஆகியஉமையவள் அருளிய முருகோனே ... உமாதேவி தந்தருளிய முருகக் கடவுளே,அதல விதலமுதல் கிடுகிடு கிடுவென ... அதலம் விதலம் முதலிய ஏழு உலகங்களும் கிடுகிடுவென நடுநடுங்கவருமயிலினிதொளிர் ... வருகின்ற மயிலின் மீது இனிதாக ஒளி வீசுபவனே,ஷடுமையில் நடுவுற அழகினுடன்அமரும் ... ஆறுகோணச் சக்கரத்தின் மையத்தில் அழகுடன் அமர்கின்றஅரகர சிவசிவ பெருமாளே. ... ஹர ஹர சிவ சிவ, பெருமாளே.
Similar songs: 525 - சரவண பவநிதி (திருவேங்கடம்)
தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன ...... தனதான
Songs from this thalam திருவேங்கடம்
524 - கறுத்ததலை வெளிறு
525 - சரவண பவநிதி
526 - நெச்சுப் பிச்சி
527 - கோங்கிள நீரிளக
528 - சாந்தமில் மோகவெரி
529 - வரிசேர்ந்திடு
This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:48 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org